Sunday, October 30, 2011

படித்ததில் ரொம்ப ரொம்ப பிடிச்சது!

கல்லூரிப்படிப்பின் போது ஒரு அழகான பெண்ணாகத்தான் கவர்ச்சியாகத் தெரிவாள் "அறிவியல்" .. அவள் அழகில் மயங்கி அருகில் சென்று பார்த்து..இன்னும் பெரிய "மோட்டிவேஷனுடன்" அவளுடன் கலந்து ஆரம்பிக்கும்போது நல்லாத்தான் இருக்கும்.

ஆனால் நாளடைவில் நடப்பதென்ன? ஒருவன் அறியாப்பருவத்தில் கனவுகளுடன் அறிவியல் வாழ்க்கையை எப்படி ஆரம்பிக்கிறான். எப்படியெல்லாம் மிதிபட்டு/அடிபட்டு கடைசியில் இறக்கும்போதுதான் நிம்மதி அடைகிறான் என்பதைத்தான் இந்த கார்டூன்கள் சொல்கினறன.





Source: Chemical and Engineering News published by ACS!

சுதந்திரம் என்பது யாருக்குமே முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதுதான் அறிவியல் வாழ்க்கையிலிருந்து சாதாரண வாழ்க்கை வரை உண்மை. அது பிச்சைக்காரனில் இருந்து பில்கேட்ஸ்வரை உண்மைனு தெரிந்துகொண்டால் மனம்தளராமல் வாழ்வில் நீங்கள் வெல்லலாம்.

வெற்றினா என்ன அது? ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளித்து நிம்மதியாக (அல்கஹால், போதை மருந்து, டாக்டர் அதிகாரப்பூர்வமாக வழங்கியபோதை மருந்து இவைகளுடைய உதவி இல்லாமல்) உங்களால் தூங்க முடியுதா? அதுவே பெரிய வெற்றி தான். பிரச்சினைனா? மன உளைச்சல்தரும்- உடல், மனம் சம்மந்தப்பட்ட- எல்லாமே பிரச்சினைதான்.

புதுசா ஒண்ணும் இந்தக் கார்ட்டூனில் சொல்லப்படவில்லை. அந்தக் காலத்திலேயே சீர்காழி பாடியிருக்கிறார்..

Song: samarasasm ulavum - பாடல்: சமரசம் உலாவும் இடமே
Movie: Rambaiyin kaathal - திரைப்படம்: ரம்பையின் காதல்
Singers: Sirkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Marudhakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: T.R.Pappa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1956


சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

Thursday, October 27, 2011

சுருதிஹாசன் அதிர்ஷ்டக்கட்டை போல இருக்கு!

முருகதாசு இந்த ஏழாம் அறிவுப் படத்தை என்னவோ ஆஹா ஓஹோனு சொல்லிக்கிட்டுத் திரியும்போதே நெனச்சேன்.. "இது எதுல போயி முடியப்போகுதோ"னு. தேவையே இல்லாமல் ரொம்பப் பேசிட்டாருனுதான் தோணுது. திறமையுள்ள நம்ம ஆட்களால ஏன் சைனாக்காரன் மாதிரி பேசாமல் அடக்கமா இருக்க முடியலைனு தெரியலை .

ஆமாம் இந்த ஏழாம் அறிவு படத்தை நெறையப்பேரு பார்த்துட்டாங்க! விமர்சனமும் கொடுத்துட்டாங்க, கொடுத்துக்கிட்டே இருக்காங்க. என்ன ஒரு சோகம்னா இந்தளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்துக்கு இதுவரை பார்த்து விமர்சிச்சவர்களில் ஒருவர்கூட படம் நல்லா இருப்பதாகச் சொல்லி விமர்சிக்கவில்லை!

நான் சொல்லுவது பொதுமக்களின்- படம் பார்த்துட்டு வந்து சொன்னவங்களுடைய- விமர்சனங்கள்! படம் பார்த்த நம்ம ஸ்ரிதர் பிள்ளை ட்விட்டரில் கொடுத்த மார்க் 2.5/5! கஜினியில் உள்ள மேஜிக் இதில் இல்லைனு தெளிவா சொல்லிட்டாரு! வேறென்ன வேணும்?

பதிவுலகிலும், ஆன்லைன்ல யும் ஏழாம் அறிவுக்கு வருகிற விமர்சனங்கள் எதுவும் தெளிவாக இல்ல! சுருதிஹாசன் இருப்பதாலேயோ என்னவோ இன்றைய பதிவுலக மற்றும் இணையதள விமர்சகர்கள் இந்தப் படத்தை எப்படி விமர்சிக்கிறதுனு தெரியாமல் குழம்பிப்போயி நிற்பதுதான் புரியுது.

பச்சையாச் சொன்னால் சுருதிஹாசனிடம் நடிப்பும் இல்லை, தமிழ் உச்சரிப்பும் தாங்க முடியலை, அப்படி ஒண்ணும் கவர்ச்சியுடன் அழகு பொங்கி வரவில்லை! னு சொல்லத் தயக்கத்துடன் ரொம்பத்தான் பயப்படுறாங்க.
நம்ம கமலின் செல்வப் புதல்வி! அதுவும் முதல்ப்படம் அதனால எப்படி கடுமையாக விமர்சிப்பதுனு குழம்பி நிற்பதுதான் பல விமர்சனங்களில் தெரியுது.

கேபிள் சங்கர் என்ன சொல்றாருனா

***ஸ்ருதி அழகாக இருக்கிறார். ஸ்பஷ்டமாய் அழுத்தம் திருத்தமாய் டாமினண்ட் வாய்ஸில் பேசுகிறார். பாடல் காட்சிகளில் ராவிஷிங் பியூட்டியாக இருக்கிறார். சில பல காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.****
அப்புறம் நம்ம ஃபிளாசபி சொல்லுராரு..

****ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே.****

ஏன் இந்த பூசி மொழுகல்?? சுருதிக்கு நடிக்கத் தெரியலை, தமிழ் உச்சரிப்பும் சகிக்கலை னு பச்சையாச் சொல்ல வேண்டியதுதானே? இதே சுருதி யாரோ ஒரு புதுமுகமாக இருந்தால், நிச்சயம் இதுபோல் "சிரமப்பட்டுப் பாராட்டும்" பாராட்டு வந்திருக்காது. இதே சுருதி வேற யாருடைய மகளா இருந்தாலும் நாறடிச்சு இருப்பார்கள் இதே விமர்சகர்கள்!

* மற்றபடி ரா ஒன் வெற்றி பற்றி இன்னும் தெளிவாகத் தெரியலை. ஸ்ரிதர் பிள்ளையும் இதற்கு 2.5/5 மதிப்பெண்கள் கொடுத்து எந்திரன் அளவுக்கு இல்லை என்கிறார். பொதுவாகவே ரா ஒன் விமர்சனங்கள் ரொம்ப நெகட்டிவாகத்தான் வந்திருக்கு. அதனாலென்ன? அதுக்கும் பாக்ஸ் ஆஃபிஸுக்கும் சம்மந்தம் இருக்கனுமா என்ன? எப்படியோ ஷாருக் கான் போட்ட காசை எடுத்துத் தப்பிச்சா எனக்கு சந்தோஷம்தான். ஆனால் இந்தப் படத்தின் வெற்றி எப்படினு பொறுத்திருந்துதான் பார்க்கனும்!

* அப்புறம் நம்ம விஜயின் வேலாயுதம்! அரைச்ச மாவையே அரைப்பதைத்தவிர என்னால் எதுவும் பண்ண முடியாது னு தைரியமாக ஒத்துக்கொண்டு மறுபடியும் அரைச்சு இருக்காரு விசை. ஆனால் தீபாவளிக்கு வெளிவந்த இது ஒரு நல்ல மசாலாப் படம்னு சொல்றாங்க. தங்கச்சி செண்டிமெண்ட்ல பாசமலர் சிவாஜி, முள்ளும் மலரும் ரஜினி பக்கத்தில் போகமுடியாதுனாலும் ஏதோ அவரு தகுதிக்கு நல்லாவே செஞ்சிருக்காருனு சொல்றாக. இந்தப்படம் எ, பி அண்ட் சி ஏரியாவில் இது நல்லாப்போகும் னு எதிர்பாக்கப்படுகிறது. போறபோக்கைப் பார்த்தால் இந்தமுறை விஜய் சூர்யாவை ஜெயித்துவிடுவார் போல இருக்கு! அதைவிட சோகம் இந்தப் படம் வெற்றியடைந்தா இவர் அரைச்ச மாவை அரைக்கிறதை மறுபடியும் தொடர ஆரம்பிச்சுடுவாரே! :)

Monday, October 24, 2011

ஒரு ஓட்டுக்கு ஐநூறுல இருந்து ஆயிரம் வரை!

600 ஓட்டுக்கள் ஒரு வார்டில் ஆளுங்கட்சியை சேர்ந்த வேட்பாளர் 500 முதல் ஆயிரம் கொடுத்து ஓட்டுக்களை (சுமார் 300 ஓட்டுக்களுக்கு மேலே) விலைக்கு வாங்கியதாக எங்க தெருவில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சொல்லுறாங்க! ஆமா அ தி மு க காரன் எல்லாம் புத்தன் னு நெனச்சுக்கிட்டு இருக்காதீங்கப்பா! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

என்னங்க சொல்றீங்க? எம் சி எலக்ஷனுக்கா இப்படி னு கேட்டால், ஏதோ நெறைய ரோடு காண்ட்ராக்ட் அது இதுனு வருமாம். ஆளுங்கட்சி எம் சி தான் ஈஸியா சம்பாரிக்க முடியும்னு தெரிஞ்சு "இன்வெஸ்ட்" பண்ணினார்களாம். வெற்றி வாகையும் சூடியுள்ளார்களாம். ஆனால் நம்ம ஆளு காசு வாங்கிட்டா கரெக்ட்டா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாமல் ஓட்டைப் போட்டுருறானுகளாம்.

என்னத்தைச் சொல்ல? தமிழ்நாட்டில் இந்த விசயத்தில் அழகிரியை மட்டும் குற்றம் சொல்லுவது, இல்லைனா அழகிரிதான் இதை எல்லாம் ஆரம்பிச்சு வச்சாருனு சாக்கு சொல்வதெல்லாம் அர்த்தமற்றது.

நம்மாளு காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுற அளவுக்கு முட்டாளாகி நிக்கிறான். இல்லை புத்திசாலியாகிவிட்டானா?

Tuesday, October 18, 2011

தமிழ்மணமும் மதமும்!

மதச்சார்பற்று நடந்து வரும் தமிழ்மணத்தில் மதம் என்கிற வைரஸ் நுழைந்தது போனவாரம் இல்லை! இந்தச் சமீபத்திய "பெயரிலி பிரச்சினைக்கு" முன்பே தமிழ்மணத்தில் மதம் நுழைந்து தலைவிரித்தாடுகிறது.

மதப் பிரச்சாரம் செய்யும் தளங்களை தமிழ்மணம் ஆதரிக்கவில்லை என்று கோபத்தில் இருந்த பலர் வேண்டுமென்றே பெயரிலியின் பின்னூட்டத்திற்கு மதச்சாயம் பூசி, அதை பயன்படுத்தி வஞ்சம் தீர்க்க தமிழ்மணத்தின் மேல் பாய்கிறார்கள் என்பதே உண்மை!

ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சொன்னதை பெரிசுபடுத்தி, மத அடிப்படையில் ஒன்றுகூடி மதச்சார்பற்ற தமிழ்மணத்திற்கு எதிராக கொடிபிடித்து, "தமிழ்மணமே மன்னிப்புக் கேள், தமிழ்மணத்தை விட்டு வெளியேறுகிறோம்" என்றல்லாம் வாய்கிழிய தாறுமாறாக பேசி, ரோசமாக, "அதிபுத்திசாலித்தனமாக" தன் தளத்திலிருந்து தமிழ்மணப் பதிவுப்பட்டையை எடுத்து வெளியேறி, தமிழ்மணத்தை இழிவு படுத்த முயன்ற கண்மணிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். தயவு செய்து திரும்ப தமிழ்மணப் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு தமிழ்மணத்திற்குள்ளே வராதீங்க! நீங்க எடுத்த நல்ல முடிவை மாற்றிக்காதீங்க!

இப்படி நான் எழுதிவதை தமிழ்மணமே விரும்பாமல் இருக்கலாம். என்னை தண்டிக்கக்கூட செய்யலாம். இருந்தாலும் திரும்பவும் சொல்லுறேன் தயவு செய்து திரும்ப தமிழ்மணத்திற்கு உள்ளே வராதீங்க! ஆமாம் இது மிகப்பெரிய பரந்த உலகம்! தமிழ்மணமே உலகமல்ல! என்பது நீங்கள அறியாததல்லவே!

என் பார்வையில் பெயரிலி தவறு செய்திருந்தாலும் அந்தத் தவறு ஒரு "நல்ல தவறு". ஒரு ஆண்டுக்கு முன்னால் இன்று இருப்பதுபோல் தமிழ்மணத்திலோ, தமிழ் வலைதளங்களிலோ மதம் புகுந்து தலை விரித்தாடவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் சமீபத்தில் நடந்த விடயங்களை ஒன்றுகூட்டிப் பார்த்தால் மதம் என்கிற மோசமான வைரஸ்/வியாதி தமிழ் வலைபதிவுகளில் நுழைந்துவிட்டது என்றுதான் தெளிவாகத் தெரிகிறது

மேலும், தமிழ்மணத்தின் மேல் அவதூறு சொல்லி ஒதுங்கிப்போன கண்மணிகள் இல்லாமல் தமிழ்மணம் திரட்டி என்னதான் ஆகுது (மென்மேலும் வளருதா இல்ல மதமணம் இல்லாமல் தரம்குறைகிறதா) னு பார்க்க நான் மட்டுமல்ல, அமைதியாக பொறுமையாக, எதிர்வாக்குப் போடாமல்,தேவையில்லாமல் கொதித்தெழுந்து பேசிய பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் எல்லாருமே ஆசைப்படுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

என்னுடைய கணிப்பில் தன் ஜாதி என்று ஜாதி அடிப்படையில் ஒன்று கூடுகிறவர்கள் இன்னைக்கு தமிழ்ப்பதிவுலகில் இல்லை! தன் சாதியைப் பதிவுலகில் சொல்லவே அஞ்சும் அளவுக்கு ஒரு நிலைமையை கொண்டுவந்து நாம் முன்னேறியுள்ளோம். அப்படி இருக்கும்போது மதச்சாயம் மட்டும் என்ன எழவுக்கு?

தமிழ்வலைதளங்களில் மதம் என்கிற அடிப்படையில், ஒன்று சேர்ந்து சகோதரத்துவம் பாராட்டுவது, போராடுவது எல்லாம் ஒழியனும்! மத உணர்வை தூக்கி எறிந்துவிட்டு கருத்துப் பரிமாற்றம் செய்யும் நிலை வரனும்! அதுதான் நம்மில் ஏற்படும் முன்னேற்றம்!

தன் மதத்தை இழிவுபடுத்தியதாக் குற்றம் சாட்டி, "என் மதம், என் மதம்" என்கிற முக்கியத்துவம் கொடுக்கும் அந்த மதரீதியான எண்ணம் ஒழியனும்னா, மதச்சார்பற்ற தமிழ்மணத்தைவிட தன் மதம்தான் உயர்ந்தது என்று எண்ணி பதிவுப்பட்டையை தூக்கியவர்கள் அப்படியே ஒதுங்கி இருப்பதுதான் எல்லாராலும் விரும்பப்படுகிறது.

கண்மணிகளா! எங்கேயாவது போய் நல்லா இருங்க! தயவு செய்து மறுபடியும் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு வந்திடாதீங்க! ஏன் என்றால், உங்களைப் பதிவர்கள் பார்க்கும் பார்வை மாறிவிட்டது! இல்லை நீங்களே உங்கள் மேலே மதச்சாயத்தைப்பூசிக் காட்டி எல்லோரையும் மாற்றிவிட்டீர்கள்!

Tuesday, October 11, 2011

ஓட்டுக்கள் இல்லா இன்ட்லி ஓட்டுப்பெட்டி!

தமிலிஷ்/இன்ட்லி திரட்டி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக வளர்ந்ததை நாம் அனைவருமே அறிவோம். இந்தத்திரட்டி மேல் யாரு கண்ணு பட்டுச்சோ என்ன எழவோ தெரியலை இப்போ ஒரு மாதிரியாக வேகம் குறைந்து தளர்ந்து காணப்படுகிறது.

இப்போ இன்ட்லி திரட்டியிலே என்ன நடக்குதுனு தெரியலை. என்னை விடுங்க, என் பதிவுக்கெல்லாம் எப்போவுமே அதிகமாக ஓட்டுவிழுவதில்லை! ஆனால் 20-30 ஓட்டுக்கள் பெறுகிற ஒரு சில பதிவர்களுடைய தரமான பதிவுகளுக்கு இப்போ 2-3 ஓட்டுத்தான் இன்ட்லில விழுகிறது!!! இதனால வலைதளங்களில் உள்ள இன்ட்லி ஓட்டுப் பெட்டி அர்த்தமில்லாததாக காணப்படுகிறது!

இன்னைக்கு ஒரு பதிவருடைய பதிவை பரிந்துரைக்க "க்ளிக்" பண்ணினால் இன்ட்லிக்கு என்னை எடுத்துச் சென்றது, அங்கே முறைப்படி "உள்நுழைந்தாலும்" ஓட்டுப் போடவே முடியலை?

ஒரு ஓட்டுப்போட இவ்வளவு போராட்டமா? I really get irritated to see the attitude of this intli's administration these days! Why are the making our life so complicated even for recommending a post?

இவர்கள் சமீபத்தில் இன்ட்லி திரட்டியில் ஏற்படுத்திய மாற்றத்தை மாற்றி அமைத்து பழைய நிலைக்கு கொண்டு செல்வது இன்ட்லிக்கு நல்லதுனு தோணுது. ஏதோ சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். :-)

தயவுசெய்து இன்ட்லி ஓட்டுப்பதிவு முறை பிடிக்குதா பிடிக்கலையானு உங்க வாக்கைப் பதிவு செயுங்கள்!!! ( வலதுபக்கம் மேலே பாருங்கள்!).

நன்றி! :)

Sunday, October 9, 2011

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்?- ஜானகிராமன்

ஜானகிராமன் எழுத்து பொதுவாக ஆண்களுக்குத்தான் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை. பெண்களின் மென்மையான பகுதி அவருக்கு என்றுமே விளங்கியதாக எனக்குத் தோணவில்லை... கீழே படியுங்கள்

“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”

“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கனும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு?”

“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”

மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கனும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமயாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.

ஜானகிராமனின் “தேடல்” சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!

Thursday, October 6, 2011

இவர்களுக்கும் இப்படி ஒரு சாதி வெறி உண்டா!

வினவுதளத்தில் பரமக்குடி சண்டை பற்றி எழுதிய ஒரு பதிவில் மூவேந்தர் என்பவர் கொடுத்துள்ள சில முக்கிய பின்னூட்டங்கள்! முக்குலத்தோரையும் பார்ப்பனரையும் சாதிவெறியர் என்று சொல்லும் நாம் இந்த "மூவேந்தரை " என்ன சொல்வது?? தாழ்த்தப்பட்டவர்களில் இப்படியும் ஒரு சிலர் இருக்காங்களா??

மூவேந்தர்September 24, 2011 at 12:34 am

தமிழர் நாட்டின் வரலாறு தெரியாதோருக்கு இது தலித் பிரச்சனை. தமிழர் பற்றியும் தமிழின வரலாறு பற்றியும் அறிந்த்தவர்களில், தமிழர் அல்லாதோர் சற்று நடுங்குகின்றனர்; தமிழர் மண் பற்றி அறிந்தோரோ சற்று புருவம் உயர்த்தி ஆழ்ந்து நோக்குகின்றனர். நடுங்குவோர் ஆரிய-திராவிடர்.புருவம் உயர்த்தி பார்ப்போர் இம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் இணையில்லா பற்றும் பாசமும் கொண்ட தமிழினச் சான்றோர்.
ஆம் .. இது ஆரிய-திராவிடருக்கும் தமிழினத்திற்கும் இடையே நடக்கும் மீண்டெழுதலின் முதற்போர். தமிழர் மண்ணிலே மூவேந்தர்களையும் முற்றிலும் ஒழித்து தமிழினத்தையே ஒடுக்கி தமிழர் மண்ணை சூறையிட்டு, இன்றும் தமிழர் மண்ணை ஆண்டுகொண்டிருக்கும் ஆரிய-திராவிட தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் தமிழினத்திற்கும் இடையே நடுக்கும் மண்ணுரிமைப்போரே இன்று இவ்வடிவம் கொண்டுள்ளது. அன்று முதல் இன்றுவரை தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு குற்றேவல் புரிந்த அதே கள்ளர்-மறவர்களே இன்றும் தமிழினத்தை ஒடுக்கும் கருவிகளாக ஆரிய-திராவிடரால் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த ஆரிய-திராவிடர்கள் தமிழினத்தை ஒடுக்க எவ்வாறு கள்ளர்-மறவர்களை இன்று வரை யன்படுத்தி வருகிறார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தெளிவாய் விளங்கும்.

1. மூவேந்தர்களை வீழ்த்த தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு பேராதரவாய் இருந்தோர் கள்ளர்-மறவர் மற்றும் அகமுடையார்களே. அக்காலத்திலே இம்மொவருக்கும் இடையே இன்றுள்ளதுபோல எவ்வித உறவும் கிடையாது. அதனால் தான் இவர்களால் தெளுங்கர்களுக்குப்பின் ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பாளையங்கள் விட்டுகொடுக்கப்பட்டன.(எனவே தான் அரசகுடிகளுக்கு எதிரான குடிகள் என்று இவர்கள் அழைக்கப் பட்டனர்.)

2. 1890-களில் ஆடு திருடிய மறவர்களுக்கும், பறிகொடுத்த நாடார்களுக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரில் ஆரியர்கள் கள்ளர்-மறவர்களை பின்னின்று இயக்கி தமிழினத்தை ஒடுக்கினர்.

3. 1957-இல் ஈகியர் இம்மானுவேல் தேவேந்திரர் முத்துராமலிங்கத்தின் குற்றேவல் படையினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போரிலே கள்ளர்-மறவர்களுக்கு ஆரிய-திராவிடர்கள் உறுதுணையாய் இருந்தனர்.

4. 1980-களில் மள்ளர்களுக்கும் கள்ளர்-மறவருக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரிலே இதேபோல்தான் காவல் துறையில் உள்ள கள்ளர்களைக்கொண்டே கள்ளர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்தும் , மள்ளர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியும் தமிழினம் ஒடுக்கினார்கள் தெலுங்கு வடுகர்கள்.

1995-இல் கொடியங்குளம் போரிலே காவல் துறையைச் சேர்ந்த 1000- கும் மேற்ப்பட்ட கள்ளர்களும் சென்னை அழகு செக்யூரிட்டி என்ற கள்ளரால் நடத்தப்படும் நிறுவனத்தில் பணி புரிந்த கள்ளர்-மறவர்கள் காவல் துறை சீருடை அணிந்தும் , தமிழர் மண்ணின் மைந்தர்களான மள்ளர்களின் மேல் பெரும் போர் புரிந்தனர். இங்கு தமிழினம் ஒடுக்க கள்ளர்-மறவர்களை இயக்கியது ஆரிய கூட்டம்(ஜெயலலிதா).

1998-களில் நடந்த விருதுநகர் , ராஜபாளையம் போரிலே தமிழின மல்லர்களுக்கு எதிராய் நடந்த போரிலே கள்ளர்-மறவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தெலுங்கர்களே(ராஜூக்கள்). அவர்களை இயக்கியவர்கள் தெலுங்கு திராவிடர்களே(கருணாநிதி)..

2011- பரமக்குடி போரிலே அதே கள்ளர்-மறவர்களை காவல் துறையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான மள்ளர்கள் எட்டு போரை சுட்டுக்கொன்றது ஆரிய கூட்டமே. இங்கும் தமிழினத்தை ஒடுக்க இவ்வாரிய-திராவிடர்கள் பயன்படுத்தியது கள்ளர்-மறவர்களையே.

மேலே குறிப்பிட்ட அத்தனை போரிலும்(சிவகாசி போர் தவிர்த்து) ஆரிய-திராவிட தெலுங்கு விஜயநகர கூட்டணி தமிழினம் ஒடுக்கியது கள்ளர்-மறவர் கொண்ட குற்றேவல் படை கொண்டே.

மேலே குறிப்பிட்ட அத்தனை போர்களிலும் இன்னும் சொல்லாமல் விட்டவற்றிலும் மள்ளர்கள் மட்டுமே தனித்து நின்று போர் புரிந்து உள்ளனர். பறையர்களோ அல்லது தெலுங்கு அருந்ததியர்களோ ஒருவர்கூட பங்கு கொண்டது இல்லை.பலியானதும் இல்லை. இது வரலாறு. ஏனைய சகோதர தமிழ்ச் சாதிகளுக்கும் மள்ளர்களுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் பறையர்களுக்கும் மள்ளர்களுக்கும்.
ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் உருவானபோது தோன்றிய பட்டியல் சாதிகளுக்கான(SC) பிரிவில் மள்ளர்களும் சேர்க்கப்பட்டதனால் ஏனைய தமிழ்ச் சாதிகளிடம் இருந்து மள்ளர்கள் தந்திரமாய் பிரித்தாளப் பட்டனர்.
தமிழின உறவுகளே .. தமிழினப் பகைவர்களும் துரோகிகளும் கூறுவதுபோல் இது ஒன்றும் தலித்துகளின் பிரச்சனை இல்லை. மூவேந்தர்களான மள்ளர்களுக்கும் தமிழினப் பகைவருக்கும் இடையே நடக்கும் மண்ணுரிமைப்போரே. உலகையே வெல்லும் ஆற்றல் கொண்ட தமிழினப் படை படைத் தலைவன் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆரிய-திராவிடரை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட வலிமை கொண்ட மூவேந்தர் படையை இந்த ஆரிய திராவிடர் கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகளைக்கொண்டு காலைச் சுற்றச் செய்து உள்ளார்கள். ஆரிய-திராவிடர் எனும் யானை வேட்டைக்குப் புறப்பட வேண்டிய தமிழர் படையை கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகள் சுற்றிக்கொண்டிருப்பது தமிழினத்தின் பெருங்கேடே. தமிழர் தாயகம் மீண்டால் தான் தமிழீழமென்ன உலகெங்கும் தமிழினம் தலை நிமிரும். மூவேந்தர் படை எழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது மீண்டாளத் துடிக்கும் தமிழனின் துடிப்பு.

---------

தமிழன்September 24, 2011 at 10:12 am

மூவேந்தர்//
இந்த மாதிரி எல்லாம் எழுத எப்படிதான் உங்களால் முடியுதோ.ஒடுக்கப்படும்,அடக்கம்படும் வர்க்கங்களுக்கு ஆதரவாக தம் கருத்துகளை சொல்வதை விட்டு, ஆரிய-திராவிடம்,தெழுங்கன் என்று பைத்தியகாரதனமாக சொல்லி ஒரு சில ஆதிக்க __________ முன்னேற்றுவதற்கும்,அவர்களின் கீழ் மற்றவர்களை அடியாட்கள் ஆக்குவதற்கும் சொல்லும் சொல் தான் “ஆண்டப்பரம்பரை” என்ற இழிந்த வார்த்தை. உலகத்தில் வாழ்ந்த அனைத்து அரசர்களும்,நிலப்பிரபுக்களும் பெரும்பான்மையாக இருந்த அடிமைகளை சுரண்டிகொழுத்த இரத்த உறிஞ்சி,மனித தன்மையே இல்லாத மிருகங்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.


மூவேந்தர்September 30, 2011 at 11:38 pm

நண்பரே அறியாமையில் கிடந்து உழலாதீர்கள். பெரும்பான்மை இனம் என்பதுவே ஆண்ட இனம். சிறுபான்மை ஒருக்காலும் ஆள முடியாது. உங்களின் அடிமைத் தனத்தைப் பார்த்தால் நீங்கள் பறையர் போல் தோன்றுகிறது. மூவேந்தர்கள்(மள்ளர்கள்) வீழ்வதுவரை தமிழினம் சொத்து சுகத்தோடு வளமொடுதான் வாழ்ந்தது. கோவில் ஊழியர்களாக பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்றோரே மள்ளர் அரசர்களால் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்னாளில் ஆரியர்கள் இவ்விடங்களை ஆக்கிரமிக்க , ஏனைய தமிழ் சாதிகள் கோவிலில் இருந்து படிப்படியாக வஞ்சகமாக வெளியேற்றப்பட்டனர். எமது தமிழர் மண்ணில் யாம்(மள்ளர்) இருக்கும் வரை மன்னுரிமைப்போர் நடந்துகொண்டேதான் இருக்கும். யாம் மேண்டேலும் போது மீண்டும் எமது முன்னோர்களின் நினைவிடங்களில் (கோவில்) பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்ற தமிழரையே பணியில் அமர்த்துவோம். இது நடக்கும்.நம்புங்கள் . சொல்வது எம்மண்டலமும் கொண்டருளும் பெருமாள்(பெருமை மிக்க மள்ளர்) .


இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, சிற்பாண்மை தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சிலரை இவர் விமர்சிக்கும் விதமும், தன் சாதிதான் ஆண்ட சாதி என்று பீற்றும் "ஆட்டிட்யூட்" Honestly I was shocked to see people like "mUvEndhar"!!!

அமெரிக்காவிலும் ஜோஸ்ய நம்பிக்கை!

எனக்கு ஜோஸ்யம் பிடிக்காது என்பதால் நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது! உண்மையிலேயே ஜோஸ்யம் என்பது இந்தியர்கள் மட்டுமே நம்புகிற ஒரு மூடப்பழக்க வழக்கம்னு சொல்லமுடியாது! உலக அளவில், நாட்டுக்கு நாடு பல ஜோஸ்யர்கள் இன்னைக்கும் இருக்கத்தான் செய்றாங்க! இதிலே ஒரு பெரிய பிரச்சினை என்னனா, நம்ம இந்திய ஜோஸ்யர்கள் சொல்வதை நம்புவதை உலகளவில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை ! அதேபோல் பிறநாட்டு ஜோஸ்யர்கள் சொல்வதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை! அதாவது, ஒரே "அறிவியல்" கருத்துக்க்ளை இவங்க சொன்னாலும் , இவர்களால் ஒருவர் கருத்தை இன்னொருவர் பரிமாறிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை!

அமெரிக்காவில் உள்ள ஜோஸ்யர்கள் பற்றி தெரிந்து கொள்ளனும் என்றால் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்!






நம்முள் உள்ள பிரபல ஜோதிடர்கள் யாரும் இந்த அமெரிக்க ஜோதிடர்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்க மாட்டார்கள் .

இந்தியாவில் கே என் ராவ் என்பவர் Journal of Astrology என்கிற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இந்த பத்திரிக்கையை உலக அளவில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் பரவாயில்லை! இந்திய ஜோஸ்யர்களே இவர் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! நம்ம ஜோஸ்யர்களில் எத்தனை பேர் இந்த பத்திரிக்கை வாங்கி படிக்கிறார்கள்? இல்லை தங்கள் ஜோஸ்யத்தை இங்கே பிரசுரிக்கிறாங்க??

அண்ணன் கே என் ராவும் தனக்குனு ஒரு கோஷ்டியை சேர்த்து வச்சிருக்கு. அதில் நம்ம பிரபல தமிழ் ஜோஸ்யர்கள் யாரையுமே காணோம்!

OUR PANEL OF EXPERIENCED ASTROLOGERS

Deepak Bisaria

Deepak Bisaria is a very experienced and successful astrologer with lot of predictive sense and now, deep experience of predicting about various aspects of human life. Besides, he has taken keen interest in mundane astrology also.
He is one of the sectional editors of the quarterly astrological journal of the Bharatiya Vidya Bhawan, like Sri M.S.Mehta, and in professional life is a high executive in corporate sector. He is on the teaching faculty of the Institute of Astrology of the Bharatiya Vidya Bhawan. In recent years, he has not merely given excellent prediction about marriage but has also written an excellent book and is busy writing another dealing with the problems of modern educated woman of our times.

R.C.Dadhwal

Originally from the hotel management line, Shri Dadhwal is a member of the faculty of astrology Bharatiya Vidya Bhawan, New Delhi. Apart from highly successful predictions for over ten years now, he has been using Astakvarga as a special predictive tool for his predictions. He had many published researches of his in the Journal of Astrology. His research on planets and Khastriya in which he showed the Saturn Mars connection of khastriyas was a very original one and he showed how over some decades, khastriyas lost the martian element in their temperamental make up. He has also coauthored the book on Astakvarga.

Mrs. Shalini Dhasmana

A B.Sc in Chemistry from Bombay University. Like Dr. Rama Mishra, she is also a member of the faculty of astrology in the Bharatiya Vidya Bhawan, New Delhi. Her book on Pataki-rista Chakra has become world famous. It is a special technique. She has also written booklets on other astrological topics. She has been giving highly successful predictions for eight years at least now.

Dr. Mrs. Rama Mishra

A retired reader of economics from a college of the University of Delhi, Dr. Rama Mishra is a member of the faculty of astrology in the Bharatiya Vidya Bhawan, New Delhi. She has many successful predictions to her credit given over a period of eight years now and is also the co author of PREDICTING THROUGH DWADASHOTTARI DASHA along with Ravi Parmar and it is the only and the best book on this dasha in the market.

Mrs. Priyambada Agrawal

A post graduate in sociology, she served as a lecturer in social sciences in Industrial Training Institute. She is a very gifted predictor having given some amazing predictions when more senior and established astrologers went wrong totally. Her researches have been published in the Journal of Astrology. She is among senior most researchers in the senior most research group of the Bharatiya Vidya Bhawan where she has been producing replicable; statistical researches along with her other class

Mrs. Urmila Bhargava
That is how my journey to learn this
Paravidya began. That was February 1976. But I could avail of this wonderful opportunity only for a month or so because we had to shift to another city. There also I was fortunate enough to meet my second Guru, Pt Gauri Shankar Shastri, but again the period of learning was very brief. After that I continued my self-study of Astrology. I am M. Sc. in Zoology and I never studied so hard in my educational career as I did to learn this remarkable Vidya. But the path of my astrological journey was strewn with many hindrances and black periods.

In February 1998, I had the good luck to meet Shri K.N. Rao. Since then I am trying to gather some pearls from this vast ocean of Astrology through the unfathomable knowledge, teaching and guidance of my Guru Sir Rao sahib.


நம்ம தமிழ் ஜோதிடர் ஒருவர்..ஜோஸ்யத்தை விமர்சித்தால் அவரையே விமரிசித்ததுபோல் கோபமாக கர்ஜிக்கிறார்..

About Me

ஜோதிடம் பார்ப்பது என் தொழில்.ஜோதிடம் சொல்லும் எல்லா ரகசியங்களையும் இங்கு எழுதுவேன்..இது என் பார்வை.இது பிடித்தால் நீங்கள் படிக்கலாம்.பிடிக்காதவர்கள் வேறு எங்கோ,யாரிடமோ குலைத்தால் அது பற்றி கவலையில்லை.பெண்கள் பற்றி எழுதினால்சொம்பு தூக்கி வரும் ஆண்களுக்கு இங்கு அனுமதி இல்லை.ஜோசியம் பிடிக்கலைன்னா இந்த பக்கம் வரக்கூடாது.பிடிச்சா கம்னு படிச்சிட்டு கேள்விகள் கேட்கலாம்.நியாயமான கேல்விகளுக்கு பதில் சொல்வேன். பகுத்தறிவு கேள்வி கேட்கும் அப்பாடக்கர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

இவரு Journal of Astrology ல எதுவும் இவருடைய படைப்புகளை பிரசுரிச்சு இருக்காரா? இல்லைனா அதெல்லாம் "patentable" னு அவருக்குள்ளேயே வச்சிக்குவாரானு தெரியலை.

எல்லாருமே ஒரே சந்திரன், சூரியன் வச்சுதான் ஜோஸ்யம் சொல்லுறாங்க. ஆனால் அவங்களுக்குள்ளே ஒருவர் கருத்தை இன்னொருவர் தெரிந்து கொள்வதோ, ஏற்றுக்கொள்வதோ, விவாதிக்கவோ செய்வதில்லை என்பதே உண்மை!

இதிலேயிருந்து என்ன தெரியுது??? ஜோஸ்யம் என்பது ஆளாளுக்கு ஒரு சிஷ்ய கூட்டம் சேர்த்துக்கிட்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது னு சொல்லலாம்.

ஜோஸ்யம் என்பது நிச்சயமாக ஒரு நம்பிக்கை! மனுஷன் வாழ்றவரைக்கும் ஜோஸ்யர்களை சிலர் நம்பத்தான் போறாங்க! ஆனால் ஜோஸ்யம் ஒரு போதும் விஞ்ஞானமாக உண்மையாகவோ ஆகாது என்பதை இவர்களுக்குள்ளே ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதது மூலம் நம்ம தெரிஞ்சிக்கலாம். அம்புட்டுத்தான்

Wednesday, October 5, 2011

ஒரு பாழாப்போன கதை! இது சவால் போட்டிக்காக அல்ல!

"என்னண்ணே அமேரிக்காவிலேயிருந்து வந்து இப்படிப் பேனாவும் கையுமா இந்த ஆலமரத்தடில உக்காந்து இருக்கீங்க?"

"வாப்பா குமாரு! எப்படி இருக்க? நம்ம ஊர்ல அடிக்கிற வெயில்ல உருகிடுவேன் போல! இப்படி மரத்தடியிலே காத்தோட்டமா உக்காந்துக்கிட்டு சும்மா ஒரு கதை எழுதலாம்னு வந்தேன்."

"எதைப்பத்திண்ணே கதை?"

"எதைப்பத்தியா? ஒரு போட்டில கலந்துக்கிறேன். ஏதோ "மாடர்ன்" சூழ்நிலையக்கொடுத்து அதை கதையில் பொருத்தி கதையை எழுதனும்னு சொல்றாக. பெரிய சவாலாத்தான் இருக்கு போ!"

"ஆமாண்ணே, தெரியாமத்தான் கேக்கிறேன்..போட்டினு வந்ததும் திடீர்னு எந்த சூழ்நிலைக்கும் ஏத்தாப்புல எப்படி ஒங்களுக்கு கற்பனை பொத்துக்கிட்டு வரும்?"

"அதை ஏன் கேக்குற குமாரு..ஒண்ணும் வரமாட்டேன்கிதுப்பா.. அது நம்ம மாரி மரமண்டைக்கு இதெல்லாம் ஒத்து வராது. அதனால போட்டியை அறிவாளிகளுக்கு விட்டுக்கொடுத்துப்புட்டு சும்மா ஏதாவது நல்ல கதையா இதுவரைக்கும் யாரும் எழுதாத கரு வச்சு எழுதனும்னு யோசிக்கிறேன்."

"ஏண்ணே! நான் வேணா இதுவரைக்கு நீங்க கேக்காத ஒரு கதை சொல்லவா?"

"என்ன கதை? ஏய் எதுவும் அந்தக்காலத்து அம்புலிமாமால படிச்சதா? ஆமா நம்ம ஊரைவிட்டு நீ எங்கே போயிருக்க குமாரு?"

"இல்லண்ணே இது நம்ம ஊர்க்கதைதான். ஆனா உங்களுக்கு இந்தக்கதை தெரிஞ்சிருக்க வாய்ப்பே யில்லண்ணே.."

"அப்போ சொல்லு குமாரு."

"உங்களுக்கு நம்ம வினோத்தும், மனோஜும் ரெண்டுபேரு இருப்பானுக இல்ல? அவனுகள தெரியுமில்லண்ணே?"

"எந்த வினோத்?"

"உங்களோடதான் ஹைஸ்கூல் எல்லாம் படிச்சான்ண்ணே.. உங்களுக்கு நல்லாத்தெரியும்..ரொம்ப உயரமா ஒள்ளியா இருப்பாரு.. ஃபுட்பால் எல்லாம் வெளையாடுவாரே.. வினோத்..தெக்குத்தெருல இருக்காங்கண்ணே.."

"ஓ அவனா? ரொம்ப நல்ல பையன் குமாரு.. அவங்க அப்பா மலேசியாலேயோ எங்கேயோ அயல்நாட்டிலே இருக்காருனு சொல்லுவாங்க இல்ல? அவங்க வீட்டிலே என்னவோ வேற மொழியில்லே பேசுவாங்க ?"

"அவனேதான். அவன் அப்பன் மலேசியாவிலே இருக்கானோ என்ன காடாத்தோ.. நம்ம ஊர்ல குடும்பத்தைக்கொண்டு வந்து வச்சு ரொம்பக்காலமா இங்கேதான் இருக்கான்..எப்போவாவது வருவான்..அவன்ட்ட நெறையாப் பணம் இருக்குண்ணே..ஆனால் அவன் ஒரு உலக மகா அயோக்கியன் அண்ணே!"

"வினோத் அப்பாவா? அந்த ஆள நான் பாத்ததே இல்லையே குமாரு..இந்த லட்சணத்திலே அந்தாளுக்கு சர்டிஃபிகேட் எல்லாம் எப்படி நான் கொடுக்கிறது?"

"அண்ணே அந்தத் கழிபட்டவனுக்கு ரெண்டு பெண்டாட்டிகள்..அது தெரியுமா உங்களுக்கு?"

"என்னப்பா இப்படித்திட்டுற? அப்படியா! இப்போத்தான் கேள்விப்படுறேன்"

" மனோஜ் முதல்தாரத்துக்குப் பொறந்தவன், வினோத் ரெண்டாம்தாரத்துக்குப் பொறந்தவன் ...எல்லாரும் ஒரே வீட்டிலேயேதான் இருக்கானுக.. ஒரே குடும்பமா"

"அதான் அவங்க ரெண்டுபேரும் பார்க்க ரொம்ப வித்தியாசமா சம்மந்தமே இல்லாமல் இருக்காங்களா?"

"அண்ணே அதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமா?"

"என்ன?"

"அவங்க அம்மாமார்கள் ரெண்டுபேரும் ரொம்ப நெருங்கிய சொந்தம்.."

"என்ன சொந்தம், நெருங்கிய சொந்தம்? அக்கா தங்கையா?"

"அண்ணே! சொன்னா நம்ப மாட்டீங்க..அதைவிட சொந்தம்.."

"ஏய் குமாரு!! நீ என்னப்பா சொல்ல வர்ற இப்போ?"

"இது ஊர் உலகத்துக்குத் தெரியாதுண்ணே. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது. ஒரு சில பேருக்குத்தான் இந்தப் பாழாப்போன குடும்ப ரகசியம் தெரியும். எனக்கே கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் தெரிஞ்சுச்சு..நம்மல்லாம் ஆஸ்திரேலியாவிலே நடக்குது, அமெரிக்காவில் நடக்குதுனுதான் நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு சில மேட்டர்கள்ல நம்ம ஊரு அமெரிக்காவைவிட மோசம்னு இதைத் தெரிந்த பிறகுதான் நானே தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணே"

"யாருப்பா அந்த ஆளு? வினோத்தோட அப்பா ? அவன் பூர்வீகம் என்ன? அவனை எப்படி உயிரோட அதுவும் நம்ம ஊர்ல விட்டானுக?"

"அந்த ஆளு நம்ம ஊர் இல்லண்ணே. எங்கேயிருந்தோ எப்போவோ வந்து குடிவந்தவன். யாருக்கும் அவன் என்ன சாதி ? அவன் குடும்பம் என்ன? அவன் சொந்த பந்தம் என்ன? அவங்க வீட்டிலே என்ன பாஷை பேசுறானுகனு ஒரு எழவும் தெரியாது. அவனுக்கு சொந்தபந்தம்னு நம்ம ஊர்ல யாரும் கெடையாதுண்ணே. எங்கேயோ வெளிநாட்டுல இருந்து நல்லா சம்பாரிக்கிறான். பணம் இருக்கு..அப்பப்போ வெளிநாட்ல இருந்து வருவான்னு மட்டும்தான் தெரியும். வீட்டுக்குள்ளேயே தப்பு நடந்ததும் வேற வழியில்லாமல் என்ன செய்றதுனு தெரியாமல் கட்டி வச்சுப்புட்டாங்களோ என்ன எழவோண்ணே. இதுதான் நான் கேள்விப்பட்டது."

"இதை எல்லாம் என்னை நம்பச்சொல்றியா? நீ எடத்தைக் காலி பண்ணுப்பா, குமாரு!"

"நானும் அப்படித்தான் நெனச்சேண்ணே. ஆனால் உண்மை இதுதான். ஏன்ண்ணே உண்மைக்கதை எல்லாம் எழுதமாட்டீங்களா?"

"ஆளை விடுப்பா! நான் பேசாமல் உப்புச் சப்பு இல்லாமல் ஏதாவது காதல் கதை எழுதிட்டுப்போறேன். புதுமையாக இல்லைனாலும், அறைச்ச மாவையே அறைக்கிறான்னு நெனச்சாலும், பரிசு எதுவும் கெடைக்கலைனாலும் பரவாயில்லை. இந்த பாழாப்போன கதைய நீ என்னிடம் சொல்லாமலே இருந்து இருக்கலாம்.. ஏன்ப்பா இப்படி இருக்கானுக..உன்னைத்தான் மொதல்ல அடிக்கனும் இதையெல்லாம் வந்து என்ட்ட சொல்லிக்கிட்டு இருக்க பாரு.."

"நீங்க அமெரிக்காவிலே இருக்கீக.. இதெல்லாம் உங்களுக்கு என்ன பெரிய மேட்டாராண்ணே? அவன் என்ன சாதியோ..எந்த ஊர்ல என்ன கலாச்சாரத்திலே பொறந்து வளர்ந்தானோ தெரியலையேண்ணே"

"என்ன சாதினா என்ன? என்ன மொழி பேசினால் என்ன? அவன் என்ன மிருகமாஅவன்?"

"மனுஷன்ந்தான்.. சாமியெல்லாம் ரொம்பவே கும்பிடுவான்.."

"செஞ்ச பாவத்தை கழுவவோ என்னவோ போ! சரி நான் ஒண்ணு கேக்கவா, குமாரு?"

"சொல்லுங்கண்ணே?'

"அடிக்க வரக்கூடாது?"

"உங்களையா? அட ஏண்ணே நீங்க வேற.."

"சப்போஸ், நீயோ நானோ, இந்த வினோத் நிலைமையில் இருந்தால் எப்படி இருக்கும் நம்ம வாழ்க்கை?"

"நெனச்சுப் பார்க்கவே பயம்மா இருக்குண்ணே..போன ஜன்மத்திலே நம்ம எதுவும் பாவம் செய்யலை போலண்ணே. அதான் நமக்கெல்லாம் இப்படி ஒரு நெலை வரலைண்ணே"

"ரொம்பப் பாவம் இல்ல? பிள்ளைங்க நிலைமை? தப்பு நடந்தது தெரிந்ததும், களைச்சுப்புட்டு அவன் அப்பனை கண்டதுண்டமா வெட்டி இருக்க வேணாமா? அதோட ஒருவழியா எல்லா எழவும் முடிஞ்சி இருக்கும் இல்லை? ப்ரோலைஃப் னு சொல்லி ஒளறிக்கிட்டுத்திரிகிற லூசுப்பயலுகளா என்ன நம்ம?"

"நம்ம ஊர்க்காரன்னா அப்போவே அதுதான் நடந்து இருக்கும். ஒருவழியா இந்த எழவும் முடிஞ்சி தொலஞ்சு இருக்கும். இந்த ஆளு பூர்வீகம், இவன் வீட்டிலே என்ன நடக்குது . இந்தத்தப்பு எப்போ நடந்தது எதுவுமே நம்ம ஊர்ல இருக்கவன் யாருக்கும் தெரியாதுண்ணே.. உங்களுக்கே இப்போத்தானண்ணே தெரியும்? அதுவும் நான் சொல்லி?"

"சரி, நீ சொல்றத நான் எதுக்கு நம்பனும்? நம்ம மக்கள் இவ்ளோ கேவலமா இருப்பாங்களா என்ன?"

"நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இதுதான் உண்மைண்ணே. "

"இதையெல்லாம் உண்மையிலேயே நடந்ததா நான் என் கதையிலே எழுதினா நம்ம ஊருக்கும், நம்ம கலாச்சாரத்துக்கும், உனக்கும் எனக்கும்தான் அவமானம், கேவலம். நம்ம தலையிலே நம்ம மண் அள்ளிப் போட்டுக்கிட்டதாத்தான் ஆகும். எல்லாரும் என்னைத்தான் அசிங்கமாப் பார்ப்பானுக..பேசாமல் இதை ஒரு பொய்க்கதைனு நான் நெனச்சுக்கிறேனே?"

"என்னண்ணே நான் என்ன உங்ககிட்ட பொய்யா சொல்லுறேன்?"

"நீ பொய் சொல்றேனு நான் சொல்லல, குமாரு. உன்னிடம் எவனாவது வம்புபேசுறவன் பொய் சொல்லியிருக்கான்னு நான் நம்ப விரும்புறேன்னு சொல்றேன்.. ஒரு சில உண்மைகள் பொய்யாக்கப்படுவதாலோ, மறைக்கப் படுவதாலோ தப்பில்லை பாரு, குமாரு."

"அட என்னண்ணே நீங்க..எப்பவும் பெரிய உண்மை வியம்பி மாதிரிப் பேசுவீங்க. இப்போ நீங்களே.."

"சரி வாப்பா போகலாம். ஒரு மிக்சர், டி வாங்கி குடிச்சுப்புட்டு திரும்ப வந்து ஒரு காதல் கதை எழுதப்போறேன். இந்த மாரிப் பாழாப்போன கதையெல்லாம் நமக்கு வேணாம்!"

Tuesday, October 4, 2011

வினவுதளம் இப்போ தமிழ்மணம் திரட்டியில் இல்லையா?

கொஞ்ச நாளாவே வினவு தளம் தமிழ்மண முகப்பில் காணோமேனு இந்த "ட்யூப் லைட்" க்கும் புரிந்து எங்கடானு தேடித்தேடிப் பார்த்து கண்டுபிடிச்சுப் பார்த்தால் வினவு தளத்தில் தமிழ்மணப் பதிவுப்பட்டையையே காணோம்! பொதுவா நான் வினவுத்தளத்திற்கு தமிழ்மண வாசலிருந்துதான் சென்றடைவது வழக்கம். கட்டண சேவையிலே ஒரு வருடம் போல இருந்த இவர்கள், ரொம்பப் பிரபலமானதும் தற்போது தனியாப் போயிட்டாங்க போல! நான் டிஸ்கவர் பண்ணுறதெல்லாம் இப்படித்தாங்க ரொம்ப காலங்கடந்துதான் பண்ணுவதால் நெறைய நோபல்பரிசுகள் எனக்குக் கெடைக்காமல்ப் போயிடுச்சு. :)

நான்கூட நெனைப்பதுண்டு இவ்வளவு பிரபலமான பிறகு வினவுதளம் ஏன் இன்னும் தமிழ்மணம் திரட்டியிலே தொடர்கிறார்கள்னு..பிறகு, என்னதான் பிரபலமானாலும் தமிழ்மணக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரா இருப்பது ஒரு "honor" என்பதாலிருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதுண்டு.

என்னைப்போல பல கன்சர்வேட்டிவ் பதிவர்கள்/வாசகர்கள் பொதுவாக தமிழ்மணத்தைத்தான் தமிழ் வலைபதிவுகளின் நுழைவாயிலாக வச்சிருக்காங்க. வளர்ந்ததும், தானே விரும்பி தமிழ்மணத்தை விட்டு அந்த வலைதளம் ஒதுங்கியதும் அந்த வலைதளம் பக்கம் போவதில்லை. இந்தப் பிரச்சினைக்காகவே ஒரு சிலர் ரொம்ப பிரபலமாகாமல் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்களோ என்னவோ! :-)

In any case, it is very nice to see, vinavu.com became one of the Top most tamil blogs in a short period. வினவு சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வினவு தளத்தின் தமிழ்த்தொண்டு!