Thursday, February 28, 2013

சீனா சூப்பர் பவராவதற்கு விலை?! புற்றுநோய்!

 இன்னைக்கு சீனா அமெரிக்காவையே மிரட்டும் அளவுக்கு ஒரு சூப்பர் பவராகிவிட்டது என்கிற ஒரு பெரிய விசயம்தான் சூப்பர் பவராகத் துடிக்கும் இந்தியாவுக்குத் தெரியும். சைனாவுடைய வெற்றிக்குக் காரணம் இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன் (Industrial revolution). எல்லாப் பொருள்களும் சைனாவில் தயாரிக்கப் படுகிறது. இதனால் பயங்கர வருவாய், வேலை வாய்ப்பு இத்யாதி இத்யாதி. ஆனால், அதற்கு ஒரு விலை இருக்கிறது. எல்லா தொழிற்சாலைகளில் வரும் வேதிக்கழிவுகளால் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பலருக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஈரல் புற்றுநோய் என்று பல ஆயிரம் மக்கள் பாதிக்கப் படுறாங்க என்பதை சைனா உணர ஆரம்பித்துவிட்டது. சூப்பர் பவராவதற்கு விலை, சுகாதாரக் கெடுதி மற்றும் புற்றுநோய்! இதுக்குத்தான் நம்மளும் ஆசைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

Something about SKIN CANCER...

 "தோல் புற்றுநோய் என்பது வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் வரும்! ஏன் என்றால் அவர்கள் தோலில் மெலனின் என்கிற பிக்மெண்ட் கெடையாது" என்பது உண்மை போல இருக்கும். ஆனால் கருப்புதோல் உள்ள கருப்பர்களுக்கும், ப்ரவுன் தோல் உள்ள நமக்கும் தோல் புற்றுநோய் வரலாம். வருகிறது என்பதுதான் உண்மை. 

புற்று நோயிலேயே மோசமான ஒண்ணு இது. தோலில் ஆரம்பிச்சு உடலில் எந்த முக்கிய உள்ளுறுப்புக்கும்க்கும் பரவலாம் (lungs and liver). மேலும் கருப்பு நிறத்தில் உள்ளவங்க நமக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராதுனு அசட்டையாக இருப்பதால்,தோல் புற்றுநோய் முற்றியபிறகுதான் அதை கவனிக்கிறார்கள். மருத்துவரை அனுகும்போது அது ஸ்டேஜ் 3 or more போல காலம் கடந்துவிடுகிறது. :-(

Friday, February 22, 2013

சண்டியர் கரனுக்கு எதிராக இன்னொரு வில்லன் சங்கர்!

கமல் ரசிகர்களிலேயே ஒரு வினோதமான ஆள்தான் நம்ம சண்டியர் கரன் என்பவர். இவர் என்ன எழவைப் பத்தி எழுதினாலும் கமல் புகழ் பாடுகிறாரோ இல்லையோ ரஜினியை மெண்டல் என்றும் ரஜினி ரசிகர்களை மடையர்கள் என்றும் சொல்லாமல் இருக்க மாட்டார். இவர் தளத்தில் நடக்கும் மட்டுறுத்தல் என்னும் கூத்து இருக்கே! அடேங்கப்பா!

இவர் பல "உண்மைகளை" பகிர்ந்து கொள்வதால் இவர் தளத்தை தவிர்ப்பது கொஞ்சம் கடினம். என்னதான் நம்ம சண்டியர் சொல்றாருனு நான் போய் பார்ப்பது வழக்கம்! ஆனால் ஒண்ணுப்பா, ரஜினிமேலேயும், ரஜினி ரசிகர்கள் மேலேயும் இவருக்கு இருக்கும் காண்டு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கமலஹாசன் என்னும் மிகப்பெரும் கலைஞனை அவனளவுக்கு திறமை இல்லாத ஒரு கன்னடத்தை சேர்ந்த மராத்திக்காரன் பாக்ஸ் ஆஃபிஸில் வெல்வதா? என்கிற ஆதங்கம் அவரிடம் இருக்கு. ஆனால்.. அதுக்காக பொய்யையும் புரட்டையும் எழுதுவது தவறுனு இவருக்கு விளங்க மாட்டேன் என்கிறது. விஸ்வரூபம் வசூல் சாதனை பற்றிச் சொல்லும்போது எதையாவது இஷ்டத்துக்கு சேர்த்து விடுவாரு இவரு. தேவையே இல்லாமல் இவர் ரஜினி ரசிகர்களை அவனாமப்படுத்துவதால் இவரை இவர் தளத்திலேயே போய் திட்ட வேண்டிய அவசியம் ஆகிறது.

சமீபத்தில், internet movie data base என்னும் தளத்தில் சுமார் 24 000 க்கும் மேற்பட்ட மக்கள் கணிப்பில் விஸ்வரூபம் 9.5/10 மதிப்பெண்கள் பெற்ற சாதனையை ஒரு பதிவில்  பகிர்ந்து கொண்டார், நம்ம சண்டியர். அது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், நம்ம சண்டியர் அதோட நின்று இருக்கலாம். அவர் நிக்காமல், எந்திரன் வசூலை விஸ்வரூபம் வீழ்த்தியதாக் ஒரு பொய் செய்தியையும் எந்தவிதமான மனசாட்சியில்லாமல், அதே பதிவில் கோர்த்துவிட்டு  எழுதுகிறார். இவர் மூளை வித்தியாசமாக வேலை செய்கிறது. உலக நடப்பு, உண்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க ஒரு பெரிய பொய்யை சாதாரணமாக உண்மை போல் எழுதுகிறார். இது என்னை மாரி உண்மை விரும்பி ஆளுக்கெல்லாம் படு எரிச்சலை கிளப்புது. சரினு இவர் தளத்தில் போய் "உண்மை  ஒருபுறம் இருக்க ஏன்யா கதை விடுற?" னு இவரைப் போலவே எதிர்வாதம் செய்தால், நம்ம காமெண்ட்ஸை எல்லாம் தூக்கிவிட்டு, நம்மை விமர்சிச்சு ஒரு பதில் வேற தருவார்.

ஆமா அது அவர் தளம்! அவர் என்ன வேணா செய்யலாம்! வாழ்க சண்டியர்!

இவர் இப்படி  ஒருபுறம் இருக்க, இவரை மிஞ்சும் அளவில் தட்ஸ் டமில் தளத்தை சேர்ந்த சங்கர் என்னும் இன்னொரு காமெடியன் கமலஹாசனையும் பலவிதமாக இறக்குகிறான்.

சண்டியர் கரனுக்கு சரியான போட்டி இந்த தட்ஸ்தமிழ் சங்கர்தான்! :)))

விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/ameerin-aadhi-bhagavan-kicked-viswaroopam-2-weeks-170280.html
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர். சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.
நம்ம சண்டியர் மாரியே  பொய்களைக் கலந்து எழுதும் சங்கர் போல்  ஆசாமிகளைப் பார்க்கும்போது, நம்ம சண்டியர் கரனுக்கு ஏற்ற சரியான வில்லன் ஒருத்தன் உருவாகிவிட்டான் னு சந்தோஷப்பட வச்சிட்டாரு நம்ம கரண்! :)))

என்னைப் பொறுத்தவரையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் இந்த விடயத்தில் நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேருமே (சண்டியர் கரன் & தட்ஸ் டமில் சங்கர்) பொய்யர்கள்தான்! :)))

Wednesday, February 20, 2013

சாதீயத்தை வளர்க்கும் தளங்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!

ஒரு சில பதிவர்கள் உலகம் அறியாதவர்களாக இருக்காங்களா இல்லை அப்படி நடிக்கிறாங்களா னு தெரியவில்லை. பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் தன் ஊரைச் சொல்லுறது, அப்புறம் தன் பதிவின் மூலமாக  ஏதாவது ஒரு உண்மைக்கதை சொல்லுவது போல தன் சாதியை பறைசாற்றி விடுகிறார்கள்.  இவர்கள் என்ன செய்கிறார்கள்னு சாதியிலேயே றி அறியாமையில் வாழும் இவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்களை நமக்குப் புரியாதா என்ன?

பதிவுலகில் வந்து தன் சாதியைச் சொல்வதை தவிர்ப்பதை விட்டுவிட்டு எதார்த்தமாக சொல்வதுபோல் தன் சாதியை வேணுமென்றே பறைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?  இவர்கள் வலைதளத்தில் இவர்கள் சாதிக்கூட்டத்தை மறைமுகமாக ஒன்று சேர்ப்பதற்காகனுகூட சொல்லாம்! சாதாரண வாசகனாக, ஒரு தமிழனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே இவர்களுக்குத் தேவைப் படுகிறது என்பது பரிதாபம்.

ஏற்கனவே  இருகிக்கிற  மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு பிரச்சினை..பதிவுலகில் ஒருவர் பெயரை வைத்து அவர் மதத்தை எளிதாக அறிந்துவிடலாம். நாத்திகரான  நீங்க இக்பால் செல்வன்னு வீம்புக்கு பெயர் வைக்காமல் இருக்கும் வரையில் அது எளிது. ஒரு பதிவரின் மதமறிவது பதிவுலகில் எளிது என்பது எல்லாருக்கும் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது?  முடியாது போலவே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சாதீயம், சாதி அடையாளங்களை சொல்லிக்கொண்டு அலையும்  சாதித்தளங்கள் வளர ஆரம்பித்து உள்ளது.

வலைபதிவர் ஒருவர், மிகக்கவனமாக தன் சாதி அடையாளங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதில் என்ன பிரச்சினை னு எனக்கு விளங்கவில்லை!

ஏற்கனவே பதிவர்களில் பலரை வெஜிடேரியன் என்கிற ஒரு விடயத்தை வைத்தே ஓரளவுக்கு இவர்கள் பார்ப்பனர்கள்னு யூகித்துவிடலாம். இதில் பலர் நாகரிகம் கருதி,  எவ்வளவுதான் கவனமாக தன் சாதியை வெளிக்காட்டக்கூடாதுனு இருந்தாலும் இவர்களை அடையாளம் கண்டு  கொள்வது எளிது. இவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், கண்டு கொள்ளாத மாதிரி விட்டுவிட்டுப் போய்விடுகிறோம்.  முடிந்தவரை இவர்களை ஒரு தமிழ்ப் பதிவராக பார்க்க முயல்கிறோம். சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை ஒரு பதிவராகப் பார்ப்பதுதான் அழகு என்று திறந்த மனதுடன் பார்க்கிறோம்.

இது பத்தாதுனு பிராமனர் அல்லாத பிறசாதியைச் சேர்ந்த தமிழ்ப்பதிவர்கள் தன் சாதி அடையாளத்தை வேண்டுமென்றே வெளிக்கொண்டு வந்து, சாதியை, சாதி அடையாளத்தை  ஒழிக்க முடியாதுனு வியாக்யாணம் வேற பேசுகிறார்கள். இப்படி செய்துகொண்டு தான் எதுவும் தவறு செய்யவில்லை, நான் எல்லா சாதியையும் மதிக்கிறேன், சாதியை என் வீட்டில்தான் வைத்திருக்கிறேன் என்று வேறு சொல்கிறார்கள். 

உன் சாதியை நீ உன் வீட்டில் அடைத்து வைத்திருந்தால் எனக்கும் இந்த  உலகுக்கும் உன் சாதி எப்படித் தெரிந்தது? நீ சொல்லாமல்? உன் சாதியை இணையதளத்தில் நீ பறை சாற்றி இருக்கிறாய். அதனால்தான் உலகுக்குத் தெரிகிறது! "உன் சாதி அடையாளத்தை உன் வீட்டில் அடைத்து வைக்காமல் பதிவுலகில் பறைசாற்றியிருக்கிறாய்" என்றுகூட உணராமல் அறியாமையில் வாழ்கிறாய்! மேலும் அதில் ஒரு தவறும் இல்லை, அது என் கருத்துரிமை என்று வேறு சொல்லுகிறாய்!

சாதாரண வாசகனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே வர வேண்டும் என்பதே இவர்கள் முயற்சி. இவர்கள் வலையுலகிற்கு பதிவெழுத வர்ரார்களா? இல்லைனா தன் மஹாஜனக் கூட்டத்தை ஒன்று சேர்க்க வர்ராங்களானு தெரியவில்லை!

உங்க சாதி அடையாளத்தை முன் வைப்பதில் தவறில்லை என்றுதான் ஐயா டோண்டு ராகவன் முதல்க்கொண்டு இன்று சாதி அடையாளத்தை "மறைமுகமாக" வெளியிடும் புதிய பதிவர்கள் வாதம் செய்றாங்க.  

அதை ஒருபோதும் ஏற்கலாகாது! நீங்க உங்க  சாதி அடையாளத்தை உங்க வீட்டிலேயே வைத்து விட்டு அந்த அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

தமிழ்மணத்தின் முக்கிய பொறுப்பு!

* இதுபோல், எதோ எதார்த்தமாகப் பேசுவதுபோல் தன் சாதியை வெளிக்காட்டி சாதீயத்தை வளர்க்கும் வலைபதிவுகளை வளரவிடாமல் முளையிலேயே இந்தப் பிரச்சினையை கிள்ளி எறிய வேண்டிய  முக்கியப் பொறுப்பு தமிழ்மணம் போன்ற வலைதளங்களுக்கு உண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்மணம், அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், பதிவுலகில் மதச்சண்டை இன்று நடப்பதுபோல் நாளை, சாதி அடிப்படையில் ஒன்று சேரும் கூட்டங்களும், சாதிச்சண்டைகளும் நடக்கும் அபாயம் இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுவோமாக! இதை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் புத்திசாலித்தனம்!

"சாதி வேணும்.." என்று பேசுவது என் கருத்துச் சுதந்திரம், உன் வேலையைப் பாரு! என்று எதிர் வாதம் செய்து சப்பை கட்டுவதை யாரும் எதுவும் சொல்வதற்கில்லை!

ஆனால்..

"தமிழ்மணம் போல திரட்டிகளை உமது சாதீயத்தை வளர்க்க பயன்படுத்த வேண்டாம்!"  என்று சொல்லும் கருத்துரிமை எங்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்க!

Monday, February 18, 2013

குடிகாரர்கள் பற்றி! என் தேசம் என் மக்கள்!

அமீர்கான் நடத்திய "சத்யமே ஜெயதே"  ஷோ போலவேதான் இருக்கு இந்த "என் தேசம் என் மக்கள்" என்கிற ஒளிபரப்பு நிகழ்ச்சி. ஒரிஜினல் ஷோனு சொல்லவே முடியாது! அதனைத் தழுவி எடுத்த ஒரு ஷோதான் இது!
 குடிக்க மாட்டேன், குடிக்ககூடாதுனு சொல்றது பேசுறது, அறிவுரை வழங்குறதெல்லாம் இந்தக் காலத்தில் புளிச்சுப்போன சமாச்சாரம்! ஆமாம் இந்தக்காலத்து பெண்ணியவாதிகளிடம் போயி கற்பு பத்தி பேசுற அளவுக்கு "கேலிக்கூத்தான" மேட்டராக ஆயிப்போச்சு.

டாஸ்மாக் வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போய்க்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இதுபோல் ஒரு விசயத்தை, அதன் தீமைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டி விமர்சிப்பது ரொம்ப அவசியம். நான்கூட யோசித்ததுண்டு ஏன் நம்ம ஊர்ல "குடிக்கிறது  என்பதே" ஒரு கேவலமான விசயம்னு ஆக்கிப்புட்டாங்க! வெள்ளைக்காரர்கள் எல்லாம் சாதாரணமாக குடிக்கும்போது ஏன் நம்ம ஊர்ல மட்டும் இப்படி?  ஒரு வேளை நம்ம மக்களுக்கு பொது அறிவு, பகுத்தறிவு எல்லாம் ரொம்ப கம்மியோ? என்றெல்லாம் யோசிச்சதுண்டு.

குடிக்கு அடிமையாகிவிட்டால் ஒருவன் எதைப்பத்தியுமே கவலைப் படமாட்டான். இந்த எத்தில் ஆல்கஹால் என்கிற சின்ன மூலக்கூறு ஒருவனை அடிமைப்படுத்திவிடும் என்பதை கண்கூடாக பார்த்து, அனுபவிச்சுத்தான் நம் முன்னோர்கள் "குடி"யை பயங்கர கெட்ட வார்த்தையாக, உலகிலேயே மிக மோசமான கெட்ட பழக்கமாக நினைத்துள்ளார்கள்னு இந்த ஒளிபரப்பில் காட்டப்பட்ட ஒரு சிலர் மறுபடியும் உறுதிப்படுத்தினார்கள். அப்புறம் வெள்ளைக்காரன்ல நாசமாப் போனவனுகளை பார்க்கனும்னா, நீங்க் " rehab" போய்ப் பார்க்கணும். வெள்ளைக்காரன் எல்லாம் இதுக்கு விதிவிலக்கெல்லாம் கெடையாது!

 


மாதம் ஒரு முறை குடிப்பது வாரம் ஒரு முறையாகி, தினம்தோறும் என்று ஆகும்போது ஒருவன் குடிகாரனாகிவிடுகிறான். "எத்தனை பேரு இப்படி ஆகிவிடுகிறார்கள்?"  என்பதல்ல முக்கியம், ஒருவருமே "குடிகாரன்" ஆகக்கூடாது என்பதற்காகத்தான் "குடி குடியைக் கெடுக்கும்"னு அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.

எனக்குத் தெரியவே, சாமிநாதன் னு ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தவர், பயங்கரமான திறமைசாலி. குடிக்க ஆரம்பிச்சு, மாதம் ஒருமுறை, வாரம் ஒரு முறையாகி, தினந்தோறும் குடினு ஆகி  நாசமாப் போகி குடிக்கு அடிமையாக கொஞ்ச வயதிலே பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு செத்தார்.

அதன் பிறகு ஒரு நகைக்கடை வியாபாரி ஒருத்தன், பேரு, கணேஷ்குமார், பள்ளி கல்லூரியில் படிக்கும்போது எந்தவிதமான கெட்டபழக்கமும் இல்லாதவ்னாக இருந்த இவன், கல்யாணமான பிறகு இதே போல் மாதமொருமுறை, வாரம் ஒரு முறையாகி, தினந்தோறும்னு ஆகி அண்ணன் சாமிநாதன் நிலைக்குப் போயிக்கொண்டிருந்தான். டாஸ்மாக் ல வேலை பார்க்கும் நண்பனை (இவனுக்கு சப்ளை செய்றவன்) கன்னா பின்னானு எல்லாரும் திட்டி தீர்த்தோம். அப்புறம் எப்படியோ நிறுத்திவிட்டான்னு சொன்னாங்க. நிறுத்தி மறுபடியும் ஆரம்பிச்சானா என்ன எழவுனு தெரியலை.

குடி குடியைக்கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மைதான்...ஒரு நாள் குடிக்கும், அதற்கு அடுத்த குடிக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தால், அல்கஹால் முதன்மையானதாகவும் மற்றதெல்லாம் (அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்) எல்லாருமே ரெண்டாவதுதான்னு ஆகிவிடும்!

இது குடிக்கிற எல்லா மேதாவிகளுக்கும் தெரிந்த விசயம்தான். இருந்தாலும் சமீபத்தில் இணையயுலகம் முதல்க்கொண்டு பல இடங்களில் குடியில் உள்ள அபாயம் மெத்தனப்படுத்தப் படுகிறது என்பதால் இதைப் பத்தி பேச வேண்டிய கட்டாயம்!

குடி எவ்வளவு அபாயகரமானது என்பதை ஞாபகப்படுத்தி, குடியால் நாசமாப் போனவர்களை காட்டி, அதை கண்கூடாக ஒளிபரப்பில் காட்டிய விஜய் டி வி க்கும், அன்பர் கோபிநாத் க்கும் ஒரு சபாஷ்!

Friday, February 15, 2013

காட்டுமிராண்டிகளுக்கு எதுக்கு காதலர் தினம்?

புத்தன், காந்தி எல்லாம் பிறந்த நாடு நம்ம நாடுனு பிதற்றுவது! உலகிலேயே தாயை மதிக்கிறவன், பெண்களை மதிக்கிறவன் எல்லாம் நாங்கமட்டும்தான் என்பதுபோல் அப்பப்போ பிதற்றுவதும் நம் நாட்டவர்தான்.

*வினோதினியை, தன் காதலை ஏற்காததற்காக நெனைத்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு நைட்ரிக் அமிலத்தை அவள் உடலில் வீசி எறிந்து அவளைச் சின்னாபின்னப் படுத்தி இருக்கான் ஒரு அடி முட்டாள்.

* டெல்லியில், ஒரு இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் அவள் உடனிருந்த நண்பனை அடித்து தூக்கி எறிந்துவிட்டு அவன் முன்னாலேயே வன்புணர்வு செய்து, அவளை கொன்னுயிருக்கானுக ஐந்து காட்டுமிராண்டிகள்.

இதுதான் இன்றைய  இந்தியா! இது போல அவலங்களைப் பார்த்துக்கொண்டு இந்த வருடம் காதலர் தினத்தை எல்லாம் இவர்களும் வெட்கமே இல்லாமல் கொண்டாடுவதைப் பார்த்தால் எரிச்சலும் கோவமும்தான் மிஞ்சுகிறது. காதல்னா என்னனே தெரியாத காட்டுமிராண்டி ஆண்கள் வாழும் தேசத்தில், "காதலர் தினம்" கொண்டாடுபவன் எல்லாம் வெட்கங்கெட்ட ஆண்கள்!

"நான் யாரையும் துன்புறுத்தவில்லை, காதல்னா என்னணு உணர்ந்தவன் பெண்ணை மதிக்கிறவன், வேண்டாம்னு சொன்னா விலைமாதா இருந்தாலும் தொடமாட்டேன் அது இதுனு " நம்ம ஆண் யோக்கியர்கள் புலம்புவது கேக்குது.

அண்ணா! உங்கவீட்டிலே எழவு விழுந்தா அந்த வருடம் தீவாளி, பொங்கல்லாம் கொண்டாடாமல் இருப்பீங்க இல்ல? அதே மாரி உங்க "வீட்டில்" உங்க ஆண் இனத்தால் இரண்டு பெண்கள் வாழ்க்கை சின்னா பின்னப் பட்டிருக்கும் இந்த ஆண்டில் அந்தப் பெண்கள் சிந்திய  ரத்தக் கறையை எல்லாம் கழுவுமுன்பே காதலர் தினமெல்லாம் வெட்கமே இல்லாமல் கொண்டாடுவது உங்க அறிவீனம்! உங்களுக்கெதுக்கு இந்த வருடம் இதெல்லாம்??

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் எந்திரனை வென்றதா? உண்மைகள்!

ஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும்  வெளிவந்துவிட்டது! தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்பதாக சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த எந்திரனை, வசூலில் விஸ்வரூபம் மிஞ்சிவிட்டதாக பல செய்திகள் வந்துவிட்டன!

vishwaroopam-makes-profit-joins-the-elite-group-photos-pictures-stills
உலகநாயகன் கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம்!
வசூலில் எந்திரனை மிஞ்சிவிட்டதா விஸ்வரூபம்?? இது உண்மையா? இல்லை, கட்டுக்கதையா? இல்லை ஓரளவுக்கு உண்மையா? இல்லை அப்பட்டமான பொய்யா? என்பதைப் பார்ப்போம்!  இது ரொம்ப இப்போ அவசியமாக்கும்? னு ஒரு சிலர் கேலியாகக் கேட்பதுண்டு! ஒரு சிலர் மனதுக்குள்ளே கேட்டுக்கொள்வதும் உண்டு.

நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருக்கேன். மறுபடியும் இன்னொரு முறை சொல்றேன்.. வலையுலகில் பலவிதமான பொய் செய்திகள் பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்தப் பொய்கள், விக்கிப்பீடியா போன்ற பல தளங்களில் பல விசமிகளால் பதிக்கப்படுகினறன. வருங்காலத்தில் இந்தப்பொய்கள் உண்மையாக மாற்றப்படுகிற/மாறுகிற அபாயம் உள்ளது. அதனால் சில உண்மைகளை நாம் நம் தளத்திலாவது  பதித்து வைக்க வேண்டிய கட்டாய சூழல்!

நாகன் மல்ஹாசன்!

விஸ்வரூபம் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நம்ம கமல்ஹாசனுக்கு எப்போவுமே தன்னம்பிக்கை  மிகவும் அதிகம்.  தாந்தான் தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே சிறந்த கலைஞன் என்று முழுமையாக நம்புபவர் இவர்! மூன்று முறை தேசிய விருது வாங்கியவர் அல்லவா நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்? நெனைப்பு இருக்கத்தான் செய்யும்!  அது பாட்டுக்கு இருக்கட்டும்!

கமலஹாசனை உலக நாயகன்னு தான் அவருடைய விசிறிகள்   எல்லாரும் சொல்றாங்க! இந்த கணிணி மற்றும் இணையதள உலகில் அவருக்கு யாருக்குமே கெடைக்காத அளவுக்கு "இண்டெர்நேஷனல் ரெகக்னிஷன்" அதிகமாகிவிட்டதாக அவர் விசிறிகள்  பலரும் நம்புவதால் இந்தப் பெயர் அர்த்தமானதாக கருதுகிறார்கள். "மேலும் இந்த உலகமகா கலைஞன் ஹாலிவுட் போயி பெரிய பெரிய சாதனைகள் சாதிக்காமல் ஏன் இப்படி தமிழ்நாட்டிலிருந்து தன்னை அழித்துக்கொள்கிறார்?" என்றெல்லாம் கமல் விசிறிக்கள் பலரும் கவலைப் பட்டு நொந்து நொந்து சாகிறாங்க, பாவம்!  இப்படி எண்ணுவதற்கு தற்போதைய காரணம், பேர்ரி ஆஸ்பான் என்னும்  ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர். இவர் கமலின் விஸ்வரூபத்தை திரும்பத் திரும்ப 4 தடவை பார்த்துப்புட்டு, கமலை புகழ்ந்து தள்ளியதாகவும், கமலை வைத்து தான் படம் தயாரிக்கப் போவதாகவும் பேசிவிட்டதாகவும், கமலே பரப்பிவிட்ட ஒரு உண்மை செய்திதான் முக்கியக்காரணம். இந்த செய்தியை கமல் பரப்பிவிட்டதுக்குக் காரணமே தான் தயாரித்த விஸ்வரூபத்தை  உலகமெங்கும் பிரபலப்படுத்த என்கிறார்கள் ஒரு சிலர்.

ஹாசன் குடும்பம் என்றாலே ஒரு தனி ரகம்தான். நடிப்பிலும் சரி, வார்த்தை ஜாலங்களிலும் சரி, சாதனைகளிலும் சரி, தான் சாதித்தாக சொல்லப்படுவதிலும் சரி! சகோதரி அணுஹாசனை வேண்டுமானால் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்! சமீபத்தில் சுஹாஷினி ஹாசன் விஜய் டி வி லே எதிலோ சொன்னார், அவர் கணவர் "மண்ணாப்போன கடல்" மணிரத்னத்திற்கு ஹாலிவுட்ல இருந்து பல "ஆஃபர்கள்" வந்ததாம்.  அதை எல்லாம் மணி தட்டிக் கழிச்சுட்டார்னு அடக்கமாக பெருமையாகவும் சொன்னார் இந்த ஹாசன். பாவம் இதை மணிரத்னம் ஒருபோதும் வெளியே சொன்னதில்லை! இதையும் இன்னும் ஒரு ஹாசன் தான் தன்னக்கடத்துடன் அம்பலப்படுத்தியது! என்னமாரி ஆஃபர்கள் அவை என்பது மிகப்பெரிய கேள்வி! என்னைக்கேட்டால் ஒருவழியா கமலும் மணியும்  ஹாலிவுட்க்கு போய் தொலைஞ்சா  அவங்களும் நல்லா இருப்பாங்க. நம்மளும் நிம்மதியா இருக்கலாம்! ஏன் இப்படி இங்கேயே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்குறாங்கனு தெரியலை.

கமல் விசிறிகள்!!!

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்..

கமலஹாசனுக்கு அவர் தீவீர  விசிறிகள் அவருக்கு பெரிய பலமா இல்லை பலவீனமா? னு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.சினிமா விசிறிகளில் இவர்கள் ஒரு தனி வகை. அதென்ன?னு கேக்குறீங்களா? ஏதோ கமல்ஹாசன் என்கிற சினிமா நடிகனின் ரசிகரா இருப்பதே ஒரு பெருமை என்பதுபோல் இவர்கள் பிதற்றுவதைப் பார்த்து நம்மல மாரி ஒரு சிலர்  சிரித்தாலும்,  உலக அனுபவம் இல்லாதவங்க, கொஞ்சம் படிப்பு ஞானமில்லாதவங்க எல்லாம் இவர்கள் பிதற்றல்களைக் கேட்டு என்னவோ ஏதோனு பயந்துவிடுவார்கள். அந்தளவுக்கு தரித்திரமாப் பேசுவார்கள் இந்த அதிமேதாவியின் விசிறிகள்!

 மனித இயல்பு  எப்படினா, ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட  நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.


விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை நிலவரம்!

சரி, இவ்வளவு பப்ளிசிட்டிக்கு அப்புறம்,  டி ட்டி எச் ல அல்மோஸ்ட் சாதனை புரிந்த, ஹாலிவுட் ஜாம்பவான் பேர்ரி ஆஸ்பானால் கண்டுகொள்ளப்பட்ட, உலகமகாக் கலைஞன், மறத்தமிழன் கமலஹாசனுடைய சமீபத்திய மெஹா பட்ஜெட் விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை  நிலவரத்தை கவனிப்போம்!

********************************

அமெரிக்கா &  கனடா: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்

 VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected $ 59,953 on 32 screens, with the per screen average working out to $ 1,874. Total: $ 9,98,802 [Rs. 5.38 crores].

VISHWAROOPAM [Telugu]: In its third weekend, the film has collected $ 16,047 on 15 screens, with the per screen average working out to $ 1,070. Total: $ 1,90,441 [Rs. 1.03 crores]. 

மெரிக்க கண்டத்தில் விஸ்ரூபம் வசூல் எம்பூட்டுனு ரெண்டையும் கூட்டினால், 6.41 கோடிகள்!

சரி, இதே நாடுகளில் எந்திரன் வசூல் செய்தது எம்பூட்டுனு பார்ப்போம்!

account ‏@taran_adarsh 18 Oct 10 Endhiran [Tamil+Telugu] official figures: US 20 cr (20 கோடிகள்),  https://twitter.com/taran_adarsh/status/27720616820

அதாவது, அமெரிக்காவில்

எந்திரன், விஸ்வரூபத்தை விட, 3 மடங்குபோல் வசூல் செய்துள்ளது. இதுதான் அமெரிக்கா உண்மை நிலவரம்!

****************************************

 சரி, அமெரிக்காவை விட்டுவிட்டு, யு கேல எப்படினு பார்ப்போம்!

யு கே வில்: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்


VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected £ 30,231 on 21 screens, with the per screen average working out to £ 1,440. Total: £ 2,75,318 [Rs. 2.33 crores].

விஸ்வரூபம் வசூல்:  £ 2,75,318 (அதாவது 2.33 கோடிகள், 3 வார வசூல்)


   எந்திரன் வசூல்:  £ 625, 404  (தமிழ் ஹிந்தி)(அதாவது 5 கோடிக்கு மேலே, இரண்டுவார வசூல்)

17 11 Endhiran Ayngaran $172,555 -63.1% 34 +4 $5,075 $785,837 2

26 - Endhiran (Hindi) n/a $38,482 - 23 - $1,673 $191,357 2

 யு கேவில் மட்டும் சுமார் 2 மடங்குக்கு அதிகமாக எந்திரன் சூல் செய்துள்ளது!

எந்திரன் ஐரோப்பா முழுவதும் எம்பூட்டு வசூல் செய்ததுனு பார்த்தால். 
UK-Eur 8 cr, 8 கோடிகள் https://twitter.com/taran_adarsh/status/27720616820

*************************

மலேசியா சிங்கப்பூரில்: எந்திரன் வசூல்:  

SE Asia [incl Malaysia, Singapore] 21 cr, (21 கோடிகள்)

விஸ்வரூபம், இஸ்லாமியர்கள் பிரச்சினையால், மலேசியாவில் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. சிங்கப்பூரில் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. என்ன வசூல்னு இனிமேல் தெரியும்!

*****************************
த்திகிழக்கு (இஸ்லாமிய) நாடுளில்: எந்திரன் வசூல்: 

Gulf 7 cr, rest 5 cr.( 12 கோடிகள் சூல் கியுள்து)

த்திகிழக்கு நாடுளில் விஸ்ரூபம் ரிலீஸ் குமா என்னு தெரிலை!

***********************************

வடநாட்டில் ஹிந்தி விஸ்வரூப் எப்படி?

* முதல் வார வசூல் எந்திரனும், விஸ்வரூபமும் சுமார் 11.5 கோடிகள் (நெட்) 

* ரெண்டாவது வாரத்தில் என்ன ஆச்சுனா, விஸ்வரூபம் எந்திரனைவிட மோசமான அளவுதான் வசூல் செய்துள்ளது!

ஆக, ஹிந்தியிலும் விஸ்வரூப், ரோபாட் வசூலை முறியடிக்கவில்லை!

*************************

ஆந்திராவில் எப்படி?
 

*ரோபோ வசூலை விஸ்வரூபம் முறியடிக்கவில்லை என்பது உலகுக்கே தெரியும்!

*************************
 கேரளா எப்படி?

கேரளாக்கு எல்லாரும் றந்து போய் விஸ்ரூபம் பார்த்தென்வோ உண்மைதான். னால், டி ட்டி எச் பிரச்சினையால், நல்மாதியேட்டர்ளில் விஸ்ரூபம் ரிலீஸ் வில்லை! அனால் எந்திரன் சூலை முறிடிப்து என்து டக்கிகாரியம் இல்லை!

******************************

தமிழ் நாடு!  

சென்னையில் முதல்வாடைசி சூல்னு பார்த்தால் விஸ்ரூபம் எந்திரன் சூலை முறியடித்துவிட்து என்து உண்மைதான்..

 விஸ்ரூபம் முதல் வாசென்னை சூல்


Week : 1
Total collections in Chennai : Rs. 4,10,26,576
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 891
Average Theatre Occupancy (Weekend): 99%
Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

எந்திரன் முதல் வாசென்னை சூல்
Endhiran
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 894
Average Theatre Occupancy over this weekend: 99%
Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

Verdict: Grand Openingனால்..
 
எந்திரன் 4 வாரம் முடிந்பிகு சூல்:

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Verdict: Blockbuster

எந்திரனைப் போல்  விஸ்ரூமும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் 10 நாட்களாவது தாக்குப் பிடிச்சா, சாண்ஸ் இருக்கு..


இன்னும் ரெண்டு வாரத்தில் விஸ்வரூபம் எவ்ளோ அள்ளுதுனு பார்ப்போம்! :)







Friday, February 8, 2013

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா?" ஒரே குழப்பத்துடனும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்"

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? இன்னும் அதே இளமையாவே.. நீ முதன் முதலா அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..?"

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லை? அதை நிறை வேற்றத்தான் தேடி வந்தேன்."

"என்ன அது?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ? அதெல்லாம் காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்புறம் நான் மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை."

"இப்போ என்ன சொல்ல வர்ர? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான?"

"நான் எதுவுமே சொல்லல. நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா?"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை"

"ஆமா  நீ உண்மையானவள். நான் அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கமிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்,, காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்"

"ஏன்?'

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேர்ட்லாம் ஞாபகம் இருக்கா?'

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கு. "

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா?'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் மனதில் இருந்து வந்தவை. எனக்கு மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரிய்லை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை"

"எனக்கும்தான். எதுவுமே தப்பு இல்லை! நான் உங்க காதலி டார்லிங். உங்களுக்கு மட்டும்தான் நான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"இது என்ன மறு பிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"தெரியலையே"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"



" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart!"

"So did I"

முற்றும்



************************************************************

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதா?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல?"

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவிலையா?"

"மறு பிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

Wednesday, February 6, 2013

பதிவர் திரு டோண்டு ராகவன்!

பதிவுலகில் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் நான் எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல ஆண்டுகளாக திரு. ராகவன் அவர்களின் வயதோ, அவர் வளர்ந்த காலகட்டங்களோ எனக்குத் தெரியாது. அவர் வளர்ந்த சூழலில் தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாட்டால், அவர் பலவாறு பாதிக்கப்பட்டதோ, அதனால் அவர்  அனுபவித்த வலிகளோ, அவர் மனதில் ஏற்பட்ட வடுக்களோ, அல்லது அதனால் அவரிடம் இருந்து வரும் கருத்துக்களோ  எனக்கு சரிவர புரியவில்லை. மேலும் அவரை நேரில் சந்தித்ததில்லை, அவரிடம் பேசியதில்லை - மென் மடலில்கூட- தனிப்பட்ட முறையில் அவரை சுத்தமாக எனக்குத் தெரியாது.

பொதுவாக திரு. ராகவன் அவர்கள், பார்க்கும் கோணத்திற்கும், அவர் கருத்துக்கும், நான் பார்க்கும் கோணத்திற்கும், என் கருத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்! ஏன் என்றால் சமுதாயத்தில் அவர் சூழலில் நான் வளரவில்லை. அவர் பெற்ற கசப்பான அனுபவங்களோ, அவர் ரசித்த இனிமையான அனுபவங்களோ நான் அனுபவித்ததில்லை!  அதனால் அவர் உணர்வுகளை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவரையும் அவர் பதிவுகளையும் பலவிதமாக விமர்சித்து இருப்பவன் நான். இருப்பினும் ஒரு சில தருணங்களில் "நமக்குள் இருப்பது வெறும் கருத்து வேறுபாடுதான், திரு. ராகவன்" என்பதை அவர் தளத்தில் அவரிடம் பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். பெரிய மனிதன் என்பதால் திரு ராகவன், கருத்து சம்மந்தமான என் நிலைப்பாட்டை சரி வர புரிந்து கொண்டார் என்றே சொல்ல வேணும்.

திரு ராகவன் அவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போதும் "தொடர்ந்து, பதிவுலகில் தன் அனுபவத்தை (கஷ்டங்களைக்கூட) பலருக்கும் உதவும் வகையில் ஆக்கப்பூர்வமாக எழுதி, அதை பகிர்ந்து கொண்டிருக்கிறாரே?" என்று அதிசயமாக இருக்கும் எனக்கு. மேலும் சமீபத்தில் அவர் தளத்தில் வந்த மிகவும் உற்சாகமாகப் பதிவுகளையும், பிறதளங்களில் எழுதும் அவர் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, "திரு ராகவன் அவருக்கு வந்த நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வென்றுவிட்டார், இனிமேல் தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவார்" என்றுதான் நேற்றுக்கூட நினைத்தேன் ! திடீர் என்று அவருக்கு ஏற்பட்ட Cardiac arrest ஆல் அவர் நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார் என்கிற இன்றைய செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கண்ணீர் அஞ்சலி!
We miss you, Mr. Raghavan
I must say this, Mr Raghavan was a unique blogger! He has a special place and nobody can ever replace his place in the Tamil blog world! His sudden demise from us and the blog world is kind of looks so "incomplete" and "unacceptable" to me. I am sure, he must have had so many unfinished jobs (posts and responses to others' views to share with us) when he suddenly left from us and the blog world forever. :(  His demise is a great loss to Tamil blog world. I will miss him. I will miss his posts and responses.

My heartfelt condolences to his family and his relatives and friends who know him personally well. I want them to know Tamil bloggers (who likes and dislikes his posts and responses) are going to miss him as much as they do. I want them to know, Mr. Raghavan will be there in our thoughts as long as we live! And of course his posts will live for ever in Tamil blog world.

Monday, February 4, 2013

நல்ல கணவர் ஆனால் செக்ஸில் குறை வைக்கிறார்?!

இந்தக்காலத்து ஆண்களில், மனைவி மனம் புரிந்து மனைவிக்காக சமையல் முதல்க்கொண்டு எல்லா வீட்டு வேலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்கள் மனைவியிடம் செக்ஸில் ஆர்வம் காட்டுவதில்லையாம்!!  மனைவியை மற்றவகையில்  மனம் குளிரவைத்து அவளை திருப்திப் படுத்தும் இந்த ஆண்கள், என்ன காரணத்தாலேயோ  மனைவியிடம் செக்ஸ் விசயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை..குறைவைக்கிறார்கள் என்கிற ஒரு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளார்கள்!!!

வீட்டு வேலைகளை மனைவியே செய்யணும் என்று நம்பும் உதவாக்கரை ஆண்களே மனைவிக்கு அதிகமாக காம சுகம் அளித்து அப்பகுதியில் மனைவியை "குளிர வைத்து"  மனைவியை அதிகம் திருப்தி படுத்துகிறார்கள் என்பதுபோல் அமைகிறது இந்த புள்ளி விபரம்!

dv619049.resize
வீட்டுவேலை செய்யும் கணவன்

Why Husbands Who Share Household Chores Miss Out on Sex



In what feels like a blow to egalitarianism, new research finds that husbands and wives who assign housework along traditional gender lines have more sex than those who split the chores more equitably.
After reviewing data on how married couples in the U.S. tackle housework, as well as self-reports of how often they enjoyed intercourse, sociologists at the University of Washington (UW) say that couples who shared the burden of chores — cooking, cleaning and caring for the lawn — tend to have the least active sex lives.
The couples reported having sex about five times in the month before the survey began. But if the husband did no stereotypically female tasks (making meals, perhaps, or scrubbing floors), couples had sex 1.6 times more per month than couples in which husbands were responsible for doing all of those chores. Couples where the husband contributed to household chores, but stuck to the more stereotypically male tasks (car maintenance, bill paying, yard work) had sex .7 times more than those where the wife did all the male work.
That means that couples where husbands do no traditionally female tasks have sex the most: 4.85 times a month. Conversely, couples where men do all the female work have sex the least: 3.3 times a month.
The couples where husbands pitch in but do only the male tasks, fall somewhere in between; they’re sliding between the sheets 4.7 times a month. Meanwhile, couples where wives do all the male tasks have sex just under four times a month.
(MORE: Why Men in Female-Centric Professions Spend More Time on ‘Guy’ Chores)
Overall, couples put in a combined 34 hours a week on traditionally female tasks compared to 17 hours on manly chores. Husbands performed about a fifth of classic women’s work and more than half of men’s work.
The findings, drawn from 4,500 heterosexual married U.S. couples participating in the National Survey of Families and Households, add some context to other studies that have found that husbands get more sex when they do more housework — a kind of domestic quid pro quo. But those conclusions didn’t quite ring true for Julie Brines, a co-author of the new study published in the American Sociological Review. She and her colleagues have done work suggesting that the division of housework doesn’t align with an “exchange model” where chores are traded for a share of income, for example, or sex.
Instead, Brines surmised that the relationship between sex and housework is actually far more complex. In actuality, it’s tied to stereotypical views of what qualifies as women’s — or men’s — work. And despite progress toward gender equality, “These are residues of sexual scripts that have been in place in our culture for a long time,” she says.
(MOREWorking Moms Multitask More Than Dads — and Like It Less)
And what about the more important responsibility for couples with a family? This study did not take into account childcare as a household chore — most commonly performed by women but increasingly embraced by men — because the data used did not contain useful information about who cares for the kids. No one, notes Brines, has yet looked at whether dads who do more childcare get more sex.
It’s also worth pointing out that the national survey data was collected between 1992 and 1994, but Brines and her co-authors saythat the relationship between sex and housework has changed little since then. Research reveals only a modest evolution in the division of household labor over the past 18 years — mainly in the realm of childcare, with more dads stepping up.
Still, for the husbands who might be feeling smug about the results of her study, Brines has a bit of advice. “Don’t walk away from this research thinking, I should stay away from cooking or cleaning because I’ll benefit from it,” she cautions. “There may be costs associated with doing that.”
After all, a great sex life isn’t everything. Other research has found that neglecting to pitch in with dinner prep may create conflict in your marriage around the division of household labor. Men who shun cooking and cleaning can actually engender marital conflict which could also result in less sex. “There are trade-offs,” says Brines. And that’s putting it mildly.
 சிலர் இந்த புள்ளி விபரத்திற்கு பின்னூட்டமிட்டு இருக்காங்க!

1) It sucks but it's true in my house. I think that when women do more of a traditional role in the house hold they also are more to concent to having sex with their husband. When the husband does more of the house work in the home, it's like it empowers the women not to have to consent to having sex with her husband when he wants it.
Well it's a problem cause if I'm not getting it from her I'll have to get it from someone else :}
 
2) Women might not realize it or want to admit it, but they are not attracted to men that do household chores.  They might appreciate it, but they do not get turned on.
The kind of men that scrub floors and do laundry are the types of men that get cheated on and dominated by their spouses.  Women can yell and scream at me, but their dark inner selves like masculine men.  For a masculine man that seizes his role in the household, women will fill their role.  This includes cleaning, cooking, etc. more than the man.  (Not exclusively, just more.)
This is not based on "stereotypes."  Pull your head out of your butt.  These instincts are built into us just like in any other species.  We are animals, remember?

3) I can tell you why they get less sex, it is because they keep a tally of who does the most housework. For twenty years I did all of the housework, everything. Then I got a job traveling and my husband had to take over household chores while I was gone. From that point forward our marriage started falling apart. He complained every step. I traveled hundreds of miles every Friday and Monday to be with him but when I was home all he did was complain about any little mess I made. He complained that i was tired, duh! I'm home now and my husband continues to do housework but believe me he keeps tally. If I don't do the same amount of work as he does he pouts. I guess the twenty years I worked and did all the housework counted for nothing. Oh yea I really look forward to having sex with this jerk.

நெஜம்மாவே இது ஒரு வம்பான புள்ளி விபரம். நம் மனதே குரங்கு மாதிரி. எவனாவது ஏதாவது இப்படிச் சொன்னால் உடனே, அதுதான் சரிபோல்தான் நம் மனதுக்குத் தோன்றும்! இதுபோல் ஒரு புள்ளிவிபரத்தை பார்த்தவுடன், இனிமேல் நம்ம ஆம்பளைங்க எவனும் சமையல்க் கட்டுப் பக்கம் போகவே பயப்படுவார்கள்!

மனைவிகளை பொறுத்தவரையில் நீ பொறுப்பா வீட்டுவேலை செய்தால் போதும்! செக்ஸ்லாம் எனக்கு ரெண்டாவதுதான் என்றுதான் சொல்வார்கள்?!

இல்லையா?!

அதெல்லாம் ஒவ்வொரு மனைவியை பொறுத்ததுனு விட்டுடுவோம்! :) நம்ம எதுக்கு எதுவும் சொல்ல?

Saturday, February 2, 2013

சாருநிவேதிதாவுக்கு ஒரு சபாஷ்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர் தளத்தில் விஸ்வரூபம் பற்றி ஒரு பதிவைப் போட்டுவிட்டு அடுத்த நாளே அதை தூக்கி விட்டார்! யார் என்ன எச்சரிக்கை செய்தார்கள்ணு தெரியலை. இப்போ நம்ம சாருவின் விஸ்வரூபம் சம்மந்தமான விமர்சனத்தை பாருங்கப்பா!!!இதுவும் எத்தனை நாள் இருக்குமோ, தெரியலை!

என்ன கொடுமை இது, வருண்?! நம்ம சாரு, முழுநேர ஜெயா ஜால்ரானு தெரியாதா?னு என்னை நானே கேட்டுக்கிறேன். இருந்தாலும், சாருவின் இந்த விமர்சனம் நான் பார்க்கும் கோணத்தில் இருப்பதால் நானே சாருவை சபாஷ் போட்டுப் பாராட்டவேண்டிய நிர்பந்தம்! :)

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?  ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்  சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.  அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.  ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.  அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.  அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.  ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.
விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.   ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

இதைப்பத்தி யாராவது (சாருவை தனிநபர் தாக்குதல் செய்யாமல்) இதில் சாருவின் கருத்து  பற்றி எதுவும் சொல்லணும்னா சொல்லுங்கப்பா! நன்றி