Showing posts with label அனுபவம். தமிழ் இளங்கோ. Show all posts
Showing posts with label அனுபவம். தமிழ் இளங்கோ. Show all posts

Friday, April 4, 2014

தமிழ் இளங்கோ அவர்கட்கு அடாவடி வருணின் நன்றி!

நான் ஏற்கனவே சொன்னதுபோல் என்னை விமர்சிச்சு திரு தமிழ் இளங்கோ அவர்கள் எழுதிய எதிர்வினைப் பதிவில் பின்னூட்டமிட இஷ்டமில்லை!  அது அவரு வீடு அவர் அதில் எப்படி வேணா வாழலாம்! அப்புறம் அவருக்கு நான் நன்றி எப்படி சொல்வது? என் தளம் அதுக்குத்தானே இருக்கு? 
ஒரு வீட்டின் வரவேற்பறையில் இன்ன இன்ன இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரன் வைத்து இருப்பான். அந்த வீட்டில் நுழைந்து கொண்டு அதனை அங்கு வைக்காதே ,இதனை  இங்கு வைக்காதே என்று மற்றவர்கள் அதிகாரம் செய்ய முடியுமா?. வேண்டுமானால் யோசனை சொல்லலாம். அதைப்  போலவே வலைப்பதிவும். 
இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை! ஆனால், வாழ்த்த வந்த இடத்திலே "நாத்திகன் எல்லாரும் ஆடு மாடுகள்" னு ஒரு பெரிய மனிதர் சத்தமாகப் பேசினால், அவரை "பேசாமால் இருக்கச்" சொல்லாமல் "அவர் உன்னையா சொன்னார்? நீ ஏன் கோவிச்சுக்கிற?"னு நீங்க பேசும் உங்கள் நியாயம் எனக்கு இன்னும் புரியவில்லை. சரி அதை விடுங்க!
 நீங்கள்தான் ரொம்ப அறிவாளிபோல் அடுத்தவர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறீர்கள். இது சரியா.? 
எங்களை "ஆடு மாடுகள்"னு சொல்லவிட்டு வேடிக்கை பார்த்தால், நாங்களும் ஆறறிவுள்ளவங்கதான்னு சொல்லத்தான் செய்வோம். ஆடு மாடுகளா இருந்து இருந்தால் எதுவும் பேசி இருக்க மாட்டோம்! நாங்கள் ஆடு மாடுகள் இல்லை! தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
நான் பதிலுக்கு உங்களை மெண்டல் என்றும்  லூசு என்றும் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? பதிலுக்கு பதில் எழுதி லாவணி பாட வேண்டாம். “ரிலாக்ஸ் ப்ளீஸ்”   
இப்போ நீங்க உங்க பதிவில் வருண் ஒரு மெண்டல், லூசு னு சொல்லவே இல்லைனு சொல்றீங்களா? :))) சரி விடுங்க! :)

உங்கள் பிறந்த நாள் பதிவில் "என்ன நடந்தது?" "ஏன் வருண் 'அடாவடித்தனமாக' திரு தமிழ் இளங்கோவை விமர்சித்தான்?" என்பதற்கு விளக்கங்கள் இருக்கு. அவைகளை அப்படியே கொடுத்து இருப்பதால் உங்க பதிவுக்கு நானும் ஒரு மதிப்பெண் போட்டு பலரையும் அடைய உதவப்போறேன். என்னால் முடிந்தது அவ்ளோதான்! :)