Friday, December 23, 2016

சசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்?

நான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.

80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் "அர்ரொகண்ஸ்". படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு "அம்மா அம்மா" னு இவனுக ஒரு பக்கம். "ஈழத்தாய்"னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.

 நடிகையாக இருந்தால் என்ன? காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன? அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார்? நம்மள மாதிரியா? நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு? ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு? இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.

அவரு எப்படி அரசியல் பண்ணினாரு? பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே? இல்லையா? பொய் சொல்லாதீங்கடா நாய்களா! பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்! அம்புட்டுத்தான்.

சசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால்? ஆத்தாடீ! அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.

ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது? முக்குலத்தோரை மட்டும் வளரவிட்டு மற்ற திராவிடர்களை ஒழித்தால் சசிகலா ஆட்சி நாளு நாள்க் கூட தாக்குப் பிடிக்காது.

ஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே? அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்?

அவர் படிக்கவில்லை! ஆங்கிலம் தெரியாது? வெள்ளையாக இல்லை? சாத்சாத் எங்க்ளைப் போலவே இருககாரு?

அவரை எப்படி நாங்க ஒரு தலைவராக.. இதானே உங்க பிரச்சினை, காட்டுமிராண்டிகளா!


1 comment:

kavignar said...

http://marubadiyumpookkum.blogspot.in/2016/12/india-and-me.html