Sunday, December 25, 2022

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம்! (59)

நிலையாமை னு சொல்லுவாங்க. அதாவது எல்லாமே கொஞ்ச நாளைக்குத் தான். அன்பு, காதல், நட்பு, பாசம், பணம், புகழ், ஹெல்த் எல்லாமே. ஆமா அப்பப்போ இது புரிஞ்சு தத்துவம்லாம் பேசுவானுக. 

அமெரிக்க வாழ்க்கை ஒரு மாதிரிசுய நல வாழ்க்கை. இப்போ இந்தியாவிலும் அதேபோல் ஆகி இருக்கும். அமெரிக்காவில் ஏன் எல்லோரும் சுயநலம் ஆகிடுறாங்கக? 

இந்த சிஸ்டம் அப்படி இருக்கு. வேலையில் எப்போவும் டெட் லைன் இருக்கும். அடுத்தவர்கள்க்கு உதவ நினைத்தாலும் முடியாதபடி இருக்கும். நீ உன்னை நெனச்சு அழவே நேரம் இருக்காது. இதில அடுத்தவனுக்கு எங்கே ஒப்பாரி வைக்க? இப்படி ஆக்கிவிடும் இந்த சிஸ்டம். நான் வேல பார்க்கிற இடத்தில் இப்போ நெறையா இந்தியர்கள். இதுபோல் நான் ஒரு சூழலில் இருந்ததில்லை. எனக்கு அமெரிக்காவில் வாழும் இம்மிக்ரண்ட் இந்தியர்களோட பழகிறது கொஞ்சம் கஷ்டம். ஆமா, நானும் இந்தியந்தான் இப்போ யாரு இல்லைனு சொன்னா? என்ன பிரச்சின. பொதுவா அவங்களுக்கு பேசத் தெரியாது. அமெரிக்கானா என்னனே தெரியாது. பொதுவாக இந்தியா சைனா ல இருந்து வர்ர இம்மிக்ரன்ட் எல்லாருமே நல்லா படிச்சு க்ரீமி லேயர்தான் இங்கே வர்ராங்க. மும்பை ஸ்லம்ல இருந்தோ, ஏழைகளோ வருவதில்லை. அதனால் இவங்க ஃபைனானிசியல் ஸ்டேடஸ் ஆவெரேஜ் அமெரிக்கனைவிட உயர்வா இருக்கும். மற்றபடி இவங்களுக்கு அமெரிக்கானா என்னனே தெரியாது. நம்ம ஊரில் பார்ப்பணர்கள் எப்படி எதைப் பத்தியும் கவலைப் படாமல் வாழ்வதுபோல்தான் இங்கே இம்மிக்ரேட் ஆகிற எல்லா இந்தியர்கள் வாழ்றாங்க. 

 

சாதாரணமா பேசத் தெரியாது. பர்சனல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதுனு தெரியாது. வீடு வாங்கினோம்னு சொன்னால்.. 

 

இவர்கள் கேட்கும் கேள்விகள் 

வீட்டு விலை என்ன? 

எவ்ளோ டவுன் பே மெண்ட்? 

15-இயர் மார்ட்கேஜா இல்லை 30-இயரா?

 இண்டெரெஸ்ட் ரேட் என்ன? 

மந்த்லி பேமெண்ட் என்ன? 

இதெல்லாம் எதுக்கு இவர்களுக்கு? இது உங்க பிரச்சினை. இவர்கள் பிரச்சினை இல்லை. அதாவது உங்க பணபலம் என்னனு பார்க்கிறாங்க. எதுக்காக? அவங்கள விட நீங்க மேலேயா இல்லை கீழேயா னு பார்க்க! வேற எதுக்கு? நீங்க கீழேனா அவங்க பேசும் தொணியில் கொஞ்சம் மரியாதை குறையும். கொஞ்சம் அதிகம்னா உங்க மேலே பொறாமையாகும் அதனால் உங்க குறைகளை கோடிட்டு காட்டி தன்னை உயர்வாக்கிக்குவாங்க.

  Here is my problem. They (one who wants to know all these) are NOT going to help you if you lose your job and not able to make your mortgage payment. Some people will be happy and some others will go away from you. So, IT IS YOUR LIFE and YOUR PROBLEM. They dont need to worry about it. That is the reality. If that is the case, Why the fuck these idiots care avout all these?!! I never understand. Talk about movies, sports, something which is not personal. When are you going to learn? 

 நம்ம ஊர் பெட்டர் எல்லாம் இல்லை. எனக்குத் தெரிய சென்னையில் நண்பர் ஃப்ளாட்ல வசிப்பவர் ஒருவர் ஒரு இடத்தில் ரெகுலரா பார்க் பண்ணுவாராம்- பல வருடங்களாக. கொஞ்ச நாள் கார் ரிப்பேர் ஆயிடுச்சுனு மெக்கானிக் இடத்தில் விட்டுட்டாங்கலாம். கார் ரிப்பேர் பண்ணி எடுத்து வந்தால் அதே ஃப்ளாட்டில் வாழும் இன்னொருவர ந்த இடத்தை எடுத்துக்கிட்டாராம். இப்போ இது அவர் இடமாம். என்னடா சொல்ற?னு கேட்டால், இல்லடா அப்படித்தான் இருக்காங்க இங்கே. 

யு எஸ் ல பொதுவா இதெல்லாம் நடக்காது. பார்க்கிங் ஸ்பாட் மொதல்க்கொண்டு சட்டப்படி எழுதிடுவானுக டாக்குமெண்ட்ல. உலக்மே இப்படித்தான் போயிட்டு இருக்கு. தப்பு சரி எல்லாம் என்னனே தெரியாம அசிங்கமா வாழ்றாங்க. நியாயம் அநியாயம் புரிந்து இது தப்பு சரினு மனசாட்சிக்கு பயந்து வாழ்றவங்க எல்லாம் மிகவும் குறைவாயிட்டாங்க. ஏதாவது திடீர்னு எழவு விழுந்தால் கொஞ்ச நாளைக்கு திருந்துவானுக. கொஞ்ச நாளைக்குத் தான். மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும்.

 தப்பிக்க ஒரே வழிதான். நம்ம சாகணும். இவனுக செத்தால்? இவனை மாதிரியே இன்னொருத்தன் வந்து நிப்பான். நம்ம செத்தால் தப்பிச்சுடலாம். :) 

 -தொடரும்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியும் வாழ்வு... ம்...

வருண் said...

வாங்க தனபாலன்.

இதுதான் நமக்கு வாய்த்த உலகம். வாழ்ந்துதான் ஆகுனும்.

என் கூட வேலை செய்ற எனக்கு பக்கத்திலே அமருகிற ஆந்திராக்காரர் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அவரே கொடுத்துக் கொள்ளும் சான்றிதழ் "அவர் ரொம்ப நல்லவர்"னு. அவர் எப்படினா, ஒருத்தன் நல்லவன்னாலும் கெட்டவன்னாலும் அவர்களை "ஒரே மாதிரி"தான் ட்ரீட் பண்ணுவேன்" னு சொல்வாரு. அவரு எல்லாருக்கும் நல்லவரா இருப்பாராம்.

நான் சொல்லுவேன், "I dont appreciate that quality. you should respect people based on what they are". நான் நேரிடையாவே சொல்லிருவேன் இதெல்லாம். அவரு ஏதோ வியாக்யானம் எல்லாம் பேசுவாரு. இப்போ என்ன ஆச்சுனா, ஒரு அமெரிக்கன் ஒருத்தன் இவருக்கு அருகில் அமர்ந்து வேலை செய்யப் பிடிக்கலை, என்னை வேற ஸ்பாட்க்கு ரிலொக்கேட் பண்ணுங்கனு சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணி இருக்கான். அந்த நியூஸ் பரவி என்னிடம் வந்தது. அந்த ஆந்திரா நண்பர் ரொம்ப பாதிக்கப் பட்டுவிட்டார். "நம்மைப்போல் நல்லவரை எப்படி பிடிக்காமல் இருக்கலாம்" னு புலம்பாமல் புலம்பல். I tried to explain him, some people wont understand that you are a good person, so they may dislike you, it is ok, as long as you did not do anything bad to him. அவருக்கு என்ன விளக்கினாலும் இன்னும் புரிஞ்ச மாதிரி தெரியலை. ந்மக்கு நாமே சான்றிதழ் கொடுப்பதெல்லாம் நான்சென்ஸ்னு இன்னும் புரியாமலே இருக்காரே னு நம்ம தலையில் அடிச்சுக்கறதத் தவிர என்ன செய்வது?

Mahesh said...

hi sir.
how are you.
rompa naal aachu oru puthiya pathivum kaanom.
adikkadi illaatiyum eppavachum ethaavathu onna vanthu solittu pongaleeen.

வருண் said...

வாங்க மஹேஷ். ரொம்ப பிஷியா வாழ்க்கை போகுது மஹேஷ். இந்தப் பக்கம் வருவதில்லை.

game of thrones பார்த்து இருக்கீங்களா? திடீர்னு எச் பி யோ மாக்ஸ் சப்ஸ்க்ரைப் பண்ணினோம். 8 சீசனும்... இது என்ன ஷோ, ஒரே வயலண்ஸ், ஒரே நியூடிட்டி னு கொறை சொல்லிக்கொண்டே பார்த்து முடிச்சாச்சி. இப்போ மறுபடியும் பிடிசச பகுதியை பார்க்கிறேன்.

என்ன ஷோ பார்த்தாலும் மனிதர்கள் ரொம்ப சாதரணமானவர்கள்தான் னு தோணுது. போட்டி, பொறாமை, காதல், காமம், பேராசை, பழிவாங்குதல் இதுபோல சாதாரண விசயங்கள்தான் எல்லா கதைகளிலும் நிஜத்திலும் வருது..

பெரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரே "ஃபோரிங்" ஆ இருக்கு. :)