இலங்கையில் தமிழீழப் போராட்டமும், இனப்படுகொலையும் ஒரு புறமிருக்க, ஒரு சில தமிழர்கள் இந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்ததைப் பார்த்து மனதாற சந்தோஷப்படுகிறார்கள்.
எனக்குத்தெரிய இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர் ஒருவர், இன்றைய நிலையை,
"Sri Lanka _ One Country One Nation" என்று தன் மனதுக்குள் கொண்டாடுகிறார். பொதுவாக இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் தமிழ் ஈழம் மலர ஆசைப்படவே இல்லை!
தமிழீழப்பிரச்சினை பற்றிய ஞானத்தில் கற்றுக்குட்டி நான். அறிந்துகொள்ள கேட்கிறேன்!
அது ஏன் இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும், தமிழீழத்தை வரவேற்கவில்லை?
சிங்களவரோடு அவர்களால் எப்படி சேர்ந்து வாழ முடிகிறது?
இந்த இனப்படுகொலையைப் பார்த்து அவர்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை? :(
இந்த நியாயமான தமிழீழப் "போராட்டத்தை' அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?
மதத்தால் அவர்கள் வேறுபட்டாலும் மொழியால் அவர்களும் தமிழர்கள் தானே?
எனக்கு மத நம்பிக்கை கிடையாது. தாய் மொழி தமிழ். தயவு செய்து இந்த கேள்வி இந்த நேரம் நான் எழுப்பியதால் வீண் தனிநபர் தாக்கு வேண்டாம். நன்றி!