இவர் பல "உண்மைகளை" பகிர்ந்து கொள்வதால் இவர் தளத்தை தவிர்ப்பது கொஞ்சம் கடினம். என்னதான் நம்ம சண்டியர் சொல்றாருனு நான் போய் பார்ப்பது வழக்கம்! ஆனால் ஒண்ணுப்பா, ரஜினிமேலேயும், ரஜினி ரசிகர்கள் மேலேயும் இவருக்கு இருக்கும் காண்டு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கமலஹாசன் என்னும் மிகப்பெரும் கலைஞனை அவனளவுக்கு திறமை இல்லாத ஒரு கன்னடத்தை சேர்ந்த மராத்திக்காரன் பாக்ஸ் ஆஃபிஸில் வெல்வதா? என்கிற ஆதங்கம் அவரிடம் இருக்கு. ஆனால்.. அதுக்காக பொய்யையும் புரட்டையும் எழுதுவது தவறுனு இவருக்கு விளங்க மாட்டேன் என்கிறது. விஸ்வரூபம் வசூல் சாதனை பற்றிச் சொல்லும்போது எதையாவது இஷ்டத்துக்கு சேர்த்து விடுவாரு இவரு. தேவையே இல்லாமல் இவர் ரஜினி ரசிகர்களை அவனாமப்படுத்துவதால் இவரை இவர் தளத்திலேயே போய் திட்ட வேண்டிய அவசியம் ஆகிறது.
சமீபத்தில், internet movie data base என்னும் தளத்தில் சுமார் 24 000 க்கும் மேற்பட்ட மக்கள் கணிப்பில் விஸ்வரூபம் 9.5/10 மதிப்பெண்கள் பெற்ற சாதனையை ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார், நம்ம சண்டியர். அது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், நம்ம சண்டியர் அதோட நின்று இருக்கலாம். அவர் நிக்காமல், எந்திரன் வசூலை விஸ்வரூபம் வீழ்த்தியதாக் ஒரு பொய் செய்தியையும் எந்தவிதமான மனசாட்சியில்லாமல், அதே பதிவில் கோர்த்துவிட்டு எழுதுகிறார். இவர் மூளை வித்தியாசமாக வேலை செய்கிறது. உலக நடப்பு, உண்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க ஒரு பெரிய பொய்யை சாதாரணமாக உண்மை போல் எழுதுகிறார். இது என்னை மாரி உண்மை விரும்பி ஆளுக்கெல்லாம் படு எரிச்சலை கிளப்புது. சரினு இவர் தளத்தில் போய் "உண்மை ஒருபுறம் இருக்க ஏன்யா கதை விடுற?" னு இவரைப் போலவே எதிர்வாதம் செய்தால், நம்ம காமெண்ட்ஸை எல்லாம் தூக்கிவிட்டு, நம்மை விமர்சிச்சு ஒரு பதில் வேற தருவார்.
ஆமா அது அவர் தளம்! அவர் என்ன வேணா செய்யலாம்! வாழ்க சண்டியர்!
இவர் இப்படி ஒருபுறம் இருக்க, இவரை மிஞ்சும் அளவில் தட்ஸ் டமில் தளத்தை சேர்ந்த சங்கர் என்னும் இன்னொரு காமெடியன் கமலஹாசனையும் பலவிதமாக இறக்குகிறான்.
சண்டியர் கரனுக்கு சரியான போட்டி இந்த தட்ஸ்தமிழ் சங்கர்தான்! :)))
விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/ameerin-aadhi-bhagavan-kicked-viswaroopam-2-weeks-170280.html
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர். சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.நம்ம சண்டியர் மாரியே பொய்களைக் கலந்து எழுதும் சங்கர் போல் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நம்ம சண்டியர் கரனுக்கு ஏற்ற சரியான வில்லன் ஒருத்தன் உருவாகிவிட்டான் னு சந்தோஷப்பட வச்சிட்டாரு நம்ம கரண்! :)))
என்னைப் பொறுத்தவரையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் இந்த விடயத்தில் நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேருமே (சண்டியர் கரன் & தட்ஸ் டமில் சங்கர்) பொய்யர்கள்தான்! :)))