Wednesday, January 10, 2018

ஆன்மீக அரசியல், அகிம்சா அரசியல், பண அரசியல்!

நம்ம உலகநாயகன், ட்விட்டர் மூலமாக அரசியல்  களத்தில் இறங்கி அவர் "காந்தி வழி" தன் வழி என்று அஹிம்சை வழி போராட்டம்னு பேசினார்.  காந்தியை எனக்குப் பிடிக்கும். "உலகம்" அஹிம்சை பேசுவது நல்லாத்தான் இருக்கு என்கிற எண்ணம் தோன்றியது.

ஆனால் அஹிம்சாவாதி  என்பவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்பதுதான் இடிச்சது. இவர் மட்டுமில்லை பொதுவாக மனித இனமே அப்படித்தான்.

.உதாரணமாக "inbreeding" சொந்தத்துக்குள் திருமண உறவு என்பது தவறு, கசின் கல்யாணம் செய்வது தவறு. "inbreeding" ஆல் பிறக்கும் குழந்தை இருவருடைய recessive allele பெற்று மரபியல் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு அதிகம், ஆதலால் அதைத் தவிர்க்கணும். இதெல்லாம் மனிதனின் தர்க்கம்,
 இது ஜெனட்டிசியன் தனினம் மனிதனுக்குச் சொல்லும் அறிவுரை . இது சட்டமாகவும் ஆக்கப்பட்டது

ஆனால், ஜெனெடிக்ஸ்ல, "back crossing"னு சொல்லி விலங்குகளையும், தாவரங்களையும் மனிதர்கள் தன் இஷ்டத்துக்கு "புணர" விடுவார்கள்.

Backcrossing is a crossing of a hybrid with one of its parents or an individual genetically similar to its parent, in order to achieve offspring with a genetic identity which is closer to that of the parent. It is used in horticulture, animal breeding and in production of gene knockout organisms.

 Image result for backcross bulls

 Related image

என்னங்க இது அநியாயம்?

அதுபோல் மனிதன் சொந்தத்துக்குள்ளே திருமணம் செய்வது தப்புனு சொல்றீங்க?

விலங்குகளையும் தாவரங்களையும் மட்டும் இதுபோல் "இன்செஸ்ட்" புணர்தலை வலுக்கட்டாயமாக செய்து அதில் ஆதாயம் அடைகிறீங்க?

அப்படினு "என்னைத் தவிர" யாரும் கேள்வி கேட்பதில்லை!அதனால் அஹிம்சாவாதி கமல்ஹாசன் இவர்களோட சேர்ந்த கீழ்த்தரமான மனித இனம் என்பதால் ஜல்லிக்கட்டுனு வந்துவிட்டால் அஹிம்சை எல்லாம் பேசமாட்டார்,

மாட்டை வணங்க வேண்டும் என்பார்கள்.. இன்னொரு பக்கம் அதை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்.

மற்றபடி கமலஹாசன் தமிழ்நாட்டு அரசியலை விமர்சிச்சுக் கொண்டே இருக்கிறார்.  கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

----------------------
ரஜினியை கோழை என்றும் அவர் சான்சை நழுவவிட்டுவிட்டார் என்றும் விமர்சிக்காதவர்கள் இல்லை.

கடைசியில் வேற வழியில்லாமல் ர ஜி னி அரசியலில் நுழைந்து ஆன்மீக அரசியல் என்கிறார்.

ஆன்மீக அரசியல்??? அப்படினா?? என்ற கேள்விக்கு..

அடிதடிக்குப் போகாமல், நேர்மையான, நியாயத்துக்காகப் போராடும் ஒரு அரசியலாம்.

ஒரு சின்ன விசயம்.  ரஜினி ரசிகனான நான் ரஜினிக்கு ஓட்டுப் போடுவேனா என்கிற கேள்விக்கு பதில்  நான் இந்திய பிரஜை இல்லை! நான் ஹில்லரிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்.

ஆனால், உண்மையில் இன்றைய தமிழ்நாட்டில் பண அரசியல்தான் வென்று கொண்டிருக்கிறது.

 பணத்தின் முன்னால் அஹிம்சையோ, ஆன்மீகமோ வெல்ல முடியாது என்று பலரும் முடிவுகட்டிவிட்டனர்.

ஆகையால் அஹிம்சாவாதம் பேசும் கமல்ஹாசன் பைத்தியக்காரன், ஆன்மீக அரசியல்னு பேசும் ரஜினி இன்னொரு பைத்தியம், என்ற ஒரு சூழலில்தான் தமிழ்நாடு இருக்கிறது.

இருந்தாலும் ரஜினி அரசியல் ஒரு வேள வெற்றி பெற்று விடுமோ என்கிற ஒரு சின்ன பயம் முக்கியமாக ரஜினியை வெறுக்கும் பலருக்கு உருவாகிறது.

ரஜினிகாந்த்-கலைஞர் சந்திப்பு

Image result for ரஜினி கருணாநிதி


ரஜினிகாந்த்-மலேஷிய பிரதமர் சந்திப்பு


 


இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு வேள, ரஜினி வெற்றி பெற வாய்ப்பிருக்கோ என்கிற ஒரு உறுத்தல் ..

கமலும் சரி, ரஜினியும் சரி, காசு கொடுத்து ஓட்டு வாங்க முயலப் போவதில்லை!அந்த வகையில் நடிகர்களாக இருந்தாலும் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு நிச்சயம் இன்றைய பணம் கொடுத்து ஓட்டு சம்பாரிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ மேல்.

**********************************

இன்றைய வலையுலகில் ஏழைமக்கள் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது ஒண்ணும் பெரிய தப்பில்லை என்றெல்லாம் தமிழர்களுக்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்கிறவர்கள்கூட இருக்காங்க.

தமிழன்

பிச்சை எடுத்தால் தப்பில்லை.. வயிற்றுப் பசி, பாவம்

கொலை செய்தால் தப்பில்லை.. சந்தர்ப்ப சூழல்

திருடினால் தப்பில்லை..ஏழை

தமிழ் என்கிற மொழி பேசினால் போதும். அவன் என்ன செய்தாலும் வக்காலத்து வாங்கியே ஆகணும்.

 அதுதான் இன உணர்வு! எனக்குப் புரியாத குழப்பும் ஒரு விசயம் இது.

ஒருவன் தமிழ் பேசுறவனாயிருக்கணும் அதுதான் முக்கியம். அவன் அன்பு, பாசம், நியாயம், நீதி என்றெல்லாம் அறிந்து நடப்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழன் என்றால் அவனுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் தமிழ் வீரர்கள் இருக்காங்க. நாம் தமிழர் இல்லையா??

எனக்குப் புரியாதது சில..

சொந்தம்னு ஒண்ணு கூடுவது ஒருவருக்கொருவது இருப்பது. மாமா சித்தப்பா னு உறவு. நான் பார்த்த வரைக்கும் ஒரு பண நெருக்கடினு வரும்போது பொதுவாக சுற்றம் யாரும் உதவுவது இல்லை. நம் பிரச்சினை நம்மோடதான் போகும். அப்படியே யாராவது உதவினாலும், அதனால் ஏற்படும் பின் விளவுகள் உறவு முறிவில்தான் முடியும்.

அதேபோல் என் சாதிக்காரன் என்பது இன்னொரு அடிமுட்டாள்த்தனம். நம் சாதிக்காரன் முழு அயோக்கியனாகவும், அயல் சாதிக்காரன் நல்லவனாகவும், ம்னிதாபிமானம் உள்ளவனாகவும் அமைவதுண்டு. அப்போது நாம் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? இனம், சாதி என்றா? இல்லை உண்மை நியாயம் என்றா?

தமிழர்கள் சொல்வது இனம்தான் முக்கியம். அப்படி நாம் இன உணர்வு கொள்ளாததால்தான் நாம் இப்படி இருக்கிறோம்.

சரி இன்று தமிழ்நாட்டை ஆள்வது யார்??

 நீங்க சந்தோஷமாக இருக்கீங்களா?

தமிழ்நாட்டை தமிழன் ஆள்வது உனக்குப் பிடிக்காததால்தான் பார்ப்பனர் கமல், மராட்டியன் ரஜினி எல்லாரும் அரசியல் பேசுறாங்க?

உனக்கே இன உணர்வு இல்லைதானே?

சீமான், அமீர், திருமுருகன் காந்தி என்கிற எதிர்வினைகள் ரஜினியின் பலவீனத்தைக் காட்டுதா?

இல்லை பலத்தைக் காட்டுதா?

எனக்கென்னவோ இவர்கள் எதிர்வினை ரஜினிக்கு பலமாக அமைவது போலிருக்கிறது.




1 comment:

Avargal Unmaigal said...

ரஜினி அரசியலுக்கு வந்து தமிழகத்திற்கு ஏதும் செய்யக் கூடாதா என்று நினைத்து அவரை திட்டி கூட எழுதினேன். ஆனால் அதே ரஜினி இப்போது அரசியலுக்கு வருகிறார் என்று அறிந்தாலும் அவரை வரவேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவே நினைக்கிறேன் காரணம் அவர் ஆன்மீகம் என்ற முக்காடு போட்டு வருவதால்தான் ரஜினி முதல்வாரக வேண்டும் என்றால் அவருக்கு அதிமுக ஆதரவு இருந்தால்தான் வர முடியும் அப்படி வந்தால் அதைவிட அசிங்கம் அவருக்கு கிடையாது