Tuesday, September 24, 2019

எது சரி? எது தவறு?

எனக்குத் தெரிய ஒரு ஃப்ரெண்ட் சொல்லுவான், சரி, தவறல்லாம் அர்த்தமற்றது. காரணம்? அவன் வாழ்க்கையே வேடிக்கையானது. ஹைக்கிளாஸ்ல பிறந்த அவன் வாழ்க்கை பயங்கர காம்ப்லெக்ஸானது. அப்பா ஒரு கல்லுரியில் (ஐ ஐ டி) பெரிய பேராசிரியர். அம்மாதான் பிரச்சினை. அவங்க அப்பா அம்மாக்குள்ள பிரச்சினை. பிரிந்துவிட்டார்கள். ஆனால் முறைப்படி விவாக்ரத்தெல்லாம் செய்தார்களானு தெரியலை.

அவனுடைய அம்மா பத்தி இஷ்டத்துக்கு என்ன என்னவெல்லாமோ சொல்லுவான். எனக்கு புதிய அனுபவம் அது.  எனக்கு அவன் சொல்றதை எல்லாம் கேட்டால் உண்மையா இல்லை சும்மா கதை விடுறானானு தோனும். எனக்கு அதுபோல் பிர்ச்சினை இல்லாததால் என்னால புரிந்துகொள்ளவே முடியாது. என்னடா சொல்ற? உன் அம்மாடா அவங்க?னு திரும்பத் திரும்பச் சொல்லுவேன்.

ஜானகிராமன் கதைகளில் வரும் ரங்கமணி, அலங்காரம், அம்மனி எல்லாம் அவன் அம்மாவை விட ரொம்ப சாதரணமான கேரக்டர்கள். அவன் அப்பாவுடந்தான் வாழ்ந்தான். அப்பாவே அம்மாவை வில்லனாக்கிட்டாரா? என்னனு விளங்கவில்லை.

பிரச்சினை என்னனா, நம்ம நார்மல் அம்மா அப்பாவுக்குப் பிறந்து, சாதாரண வாழ்க்கை வாழும்போது, இவன் சொல்லும் இதுபோல் அம்மா கேரக்டர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. கற்பனையே செய்ய முடியவில்லைனா பிரச்சினைதான். என்னுடைய இயலாமைனு கூட சொல்லலாம்

எனிவே, if someone life is fucked up like this, அவர்கள் நியாய தர்மங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதில்லை. ஊர் உலகில் உள்ள அம்மாக்களை அவன் சரியாகப் புரிந்து கொள்வானா? என்கிற சந்தேகம் எழும் எனக்கு. I have seen people, if their life is fucked up, they will theorize that the whole world is like that only. I think such theories help them feel better. திருமணம் பற்றிப் பேசும்போது நம்ம மேதை கமலஹாசன், திருமணங்கள் உடைகின்றன, திருமணம் அர்த்தமற்றதுனு சொல்வதை நீங்க கவனித்து இருக்கலாம். Because he fucked up he blames the "marriage" rather than himself. Some people like to blame someone or something whenever they fuck up. Kamalahaasan is the best example for that!

 நான் பார்த்தவரைக்கும் பலர் எதைப்பத்தியுமே யோசிப்பதில்லை. இதுபோல் வித்தியாசமான அம்மா பத்தி பேச ஆரம்பித்தால், நமக்கென்ன?  இது அவன் பிரச்சினைனு போயிடுவாங்க. பல ஆண்டுகளுக்குப் பிறகும் எனக்கு மட்டும் இன்னும் அவன் அம்மாவைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
இப்போ உள்ள அமெரிக்க கலாச்சாரத்தில் அது போல அம்மாக்களை பார்க்க முடிகிறது. ஆனால் இன்னொரு கலாச்சாரத்தில் பார்க்கும்போது அது ஒன்னும் பெருசா தோனமாட்டேன் என்கிறது.

 என் நண்பன் என்ன ஆனான்னு தெரியவில்லை. இப்போ எல்லாம் ஒரு காலத்தில் நண்பன், ஒரு காலத்தில் தோழினு தான் பலர் இருக்காங்க. காலப் போக்கில் நம் வாழக்கையில் அவர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் நமக்கும் சம்மந்தமில்லாமல்ப் போய்விடுகிறது. அவர்களிடம் உறவாடிய ஒரு சில நினைவுகள் மட்டும் நம்மிடம் தேங்கி விடுகிறது. அதை எப்போதாவது நாம் அசை போடுகிறோம்..

No comments: