Friday, November 14, 2008

காதல் கல்வெட்டு-15 (முற்றும்)

கொஞ்சம் நில்லுங்கள்!!! நிறைய ஃப்ளாஸ்பேக் லாம் போயிட்டு இப்போ வந்து சேர்ந்தாச்சு! இந்தப்பகுதி காதல் கல்வெட்டு-4 ன் தொடர்ச்சி! சரி இப்போ படிங்க!
---------------------------

கயலுக்கு அன்று தூக்கம் வரவே இல்லை. ஆனாலும் வருண்,ரொம்ப ரொம்ப மோசம் என்று நினைத்தாள், எப்படி இப்படியெல்லாம் என்னை தூங்க விடாமல் பண்றார்? ஒரு பக்கம் இவ்வளவு இண்டிமேட்டா பேசுவார். ஆனால் இன்னொரு பக்கம் ஏதோ அந்நியன் மாதிரி நடிக்கவும் செய்வார். வாயை திறந்து சொன்னால் என்ன? இவர் ரொம்ப தலைக்கனம் பிடித்தவரோ? ஒருவேளை வேறு யாரையும் விரும்புறாரா? அந்த ஜென்னி இப்போ தனியாத்தானே இருக்கிறாள்? என்ன ட்யூட்டரிங் பண்ணுறாரோ யாருக்குத் தெரியும்? வாழ்நாள் முழுவதும் ட்யூட்டரிங் பண்ணுவாரோ? மறுபடியும் ஃபோனை எடுத்து வருணை கால் பண்ணினாள்.

"என்ன கயல்! தூங்கலையா இன்னும் நீ?"

"தூக்கம் வரலை. நீங்களும் தூங்கலை போல இருக்கு? எதுவும் ட்யூட்டரிங் ப்ரிப்பரேஷனா?'

"என்ன கிண்டலா?"

"இல்லையே ஏன் இன்னும் தூங்கலை?"

"வர வர நீ ரொம்பத்தான் என்னை அதட்டுற! சரி, ஒரு பொண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன், அதனால் தூக்கம் வரலை"

"யார் அவள்? யாரும் வெள்ளைக்காரியா?"

"இல்லையே. ஏன் வெள்ளைக்காரினா பிடிக்காதா உனக்கு? வெள்ளைக்காரனோட ஏதாவது டேட் போயிருக்கியா?"

"போயிருக்கேன். ஆனா எனக்கு அவர்களை எல்லாம் பிடிக்கலை, வருண்"

"ஆனால் எனக்கு வெள்ளைக்கார பெண்கள் பிடிக்கும், கயல்"

"அப்படியா? வெள்ளையா இருப்பதால் பிடிக்குமா?"

"யாராவது வெள்ளையா இருந்தால் போதும் அலைவேன்கிறயா? இல்லை, கயல். எனக்கு அவங்க மேலே நிறைய மரியாதை உண்டு"

"யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா?"

"வெள்ளைக்காரியையா?"

"ஆமாம்!"

"இல்லையே"

"சரி சொல்லுங்க! என்ன அப்படி ஒரு பெரிய மரியாதை வெள்ளைக்காரிகள் மேலே?"

"ஒரு முறை ஜென்னியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு வயதான ஒரு ஆள், அவர் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி. 82 வயது இருக்கும். அந்த வயதில் காம உணர்வோட அலைவது பற்றி பேச்சு வந்தது. அதைப்பற்றி கொஞ்சம் அலசினோம்"

"யார் அவர்? உங்க ரிலேட்டிவ் யாருமா வருண்?"

"ரிலேடிவ் மாதிரித்தான், கயல். பொதுவா இந்த மாதிரி இந்த வயதில் காம உணர்வு இருந்தால் மற்றவர்களிடம் தவறாக நடந்தால், நம் இந்தியர்கள் எல்லாம் வெறுப்பார்கள். ஆனால் ஜென்னி அவருக்காக பரிதாப்பட்டாள்"

"எதுக்கெடுத்தாலும் ஜென்னி! ஜென்னி! ஜென்னி! சரி, ஏன் இந்தப் பரிதாபமாம், வருண்?"

"ஏன் என்றால்? அவருக்கு நடக்க முடியாது. கண் தெரியாது. எதுவுமே முடியாது. ஆனால் வேலைக்காரி போய் டீ கொடுக்கும்போது அவள் கைய்யைப்பிடிப்பாராம். அவர் அவரே இல்லை கயல், எல்லா உணர்வுகளையும் இழந்துவிட்டார். ஒரு குழந்தை மாதிரினு சொல்லலாம்"

"என்ன இருந்தாலும் இது அருவருப்பான விசயம் தானே? இதுக்கு என்ன தீர்வு, வருண்?"

"எனக்குத் தெரியலை கயல். எனக்கும் பயங்கர எரிச்சலாக வரும். ஆனால் அவள் சொன்னதுக்கப்புறம் யோசித்துப்பார்த்தால் அவரை திட்டுவதைவிட பரிதாபப்படுவது சென்ஸிபிளா தோனுது'

"செக்ஸ் ரொம்ப மோசமான விசயம்னு நினைக்கிறீங்களா, வருண்"

"செக்ஸ் ஒரு அழகான விஷயம், கயல். ஆனால்.."

"ஆனால்?"

" தகுதிப்பெற்ற இரண்டு நபர்களுக்குள் நிகழ்ந்தால் தான் அது அழகு"

"அப்படினா?"

"ஒரு 13 வயது பெண்ணை ஒரு 34 வயது ஆள் அரட்டைப்பெட்டியில் சந்தித்து அவளுடன் செக்ஸ் சாட் பண்ணுவது எல்லாம் அழகா இருக்காது'

"அந்த அபிலேஷ் பாஸ்கரனை பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்க, வருண்"

"நம்ம ஊரில் உள்ள மடையனுகளுக்கு ஃப்ரீ செக்ஸுக்கும், செக்ஸுவல் அப்யூஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அது தெரியாமல் ஏதாவது லூசுத்தனமா செய்து மாட்டிக்கொண்டு நம்ம மானத்தையும் சேர்த்து வாங்கிறானுகள்"

"சரி விடுங்க, நம்ம விசயத்துக்கு வாங்க. யார் அந்தப் பொண்ணு, உங்களை தூங்கவிடாமல் தொந்தரவு பண்ணியது?"

"அவளா? அவள் ஒரு ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட உரிமையா பழகுவாள் பேசுவாள். ரொம்ப அழகா இருப்பாள். தமிழ் பொண்ணு"

"யார் உங்க பழைய காதலி ஜெயந்தியா?"

"அவள் எல்லாம் இப்போ இடத்தை காலி பண்ணிட்டா"

"அப்போ யாரு?"

"நீ என்ன சரியான ட்யூப் லைட்டா?"

"ஆமா. யார் அந்தப் பொண்ணு?'

"கண்ணாடி எதுவும் பக்கத்தில் இருக்கா?"

"இருக்கு"

"அதில் பாரு. உன்னையே பார்ப்பாள்!"

"அவளா? நேரம் கெட்ட நேரத்தில் என்ன அவள் நினைப்பு?"

"நானா நினைச்சேன்? அவள்தான் வந்து அநியாயம் பண்ணுறா?"

"என்ன அநியாயம்?'

"இப்போ சொல்ல மாட்டேன்!"

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் வருண்"

"என்ன குரல் ஒரு மாதிரியா இருக்கு? வெட்கமா?"

"ஆமா, உங்களுக்கு நான் யாரு வருண்?"

"எனக்கு நீ யாரு? எனக்கு நீ, கயல்!"

"அதில்லை! என்ன உறவு?"

"உனக்குத் தெரியாதா?"

"சொல்லுங்க"

"பச்சையா சொல்லவா?"

"ம்ம்"

"என் உயிருக்குயிரானவள்"

மெளனம்

"ஹேய்! இருக்கியா?"

"ம்ம்"

"ஐ லவ் யு, கயல்!"

"மறுபடியும் சொல்லுங்க வருண்!"

"ஐ லவ் யு வெர்ரி மச்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-முற்றும்

22 comments:

குடுகுடுப்பை said...

யப்பாடா. வாங்க நாமெல்லாம் சட்டக்கல்லூரி போயி படிப்போம்

Indian said...

மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?

வருண் said...

நான் அந்த சட்டக்கல்லூரி செய்தியை என்னவென்றே பார்க்கவில்லை, குடுகுடுப்பை! :)

யாரையும் யாரும் திருத்தமுடியாது! அதுகளா திருந்தனும்!

வருண் said...

***Indian said...
மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?

14 November, 2008 11:00 AM***

குடுகுப்பை உங்களைவிட ஒரு சில வினாடிகள் முன்பே வந்துட்டாராம் :)

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை, மற்றும் இந்தியன் :)

Sundar சுந்தர் said...

வாவ்! ஸ்வீட்டா முடிச்சீட்டிங்க.

அடுத்து என்ன...'காதல் பூரிக்கட்டைன்னு...' கொஞ்சம் சகஜ வாழ்வு பற்றியும் ஒரு தொடர் போடுங்களேன்.
btw, ஒரு சினிமா பதிவு போட்ருக்கேன். வந்து பாருங்க!

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

வருண் said...

வாங்க சுந்தர், மற்றும் நசரேயன்! :)

சுந்தர்: உங்க சினிமா பதிவை பார்த்துட்டு வந்தேன். நீங்கள் சொன்னதுபோல், நீங்க ஒண்ணும் பெரிய தமிழ் சினிமா ரசிகர் இல்லைனு தோனுது :-)

ஆமாம், சுந்தர் வேற ஏதாவது தொடர் எழுதனும். இல்லைனா போர் அடிக்கும் எனக்கு. என்ன எழுதலாம்னு யோசித்துக்கொண்டு இருக்கேன்! எதுனாலும் சும்மா "காசுவலா" இருக்கும் :)

நசரேயன் said...

என்ன இனிமேல கெட்டி மேளமா?
காக்கா பிரியாணி மறக்காம போடுங்க, வந்து ஒரு கட்டு கட்டிட்டு போறேன்

வருண் said...

காக்கா பிரியாணியா?! :-)

சரி அதைப்பற்றி நான் விசாரிக்கிறேன்.

நீங்க இல்லாமலா? உங்களுக்கு அழைப்பு கட்டாயம் உண்டு, நசரேயன்! :-)

Muthu said...

காதல் வாழ்வு மணமானபின்னும் இதே உயிர்ப்போடும் தொடர உளமாற வாழ்த்துக்கள்.

(பூரிக்கட்டை, சாம்பார் கரண்டி வித்தைகள் போன்ற தற்காப்புக்கலைகள் பயில ஆரம்பித்துவிடவும்)

வருண் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!

என்ன இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க முத்துக்குமார்? :) :) :)

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

நித்தி .. said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!

என்ன இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க முத்துக்குமார்? :) :) :)

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

intha visayam kayal ku theriyuma varun????!!!!! neenga ivalavu bayandhagulliya????
anyways rombavae silirpana...kavithaiyana...alagana pathivigal ungal khadhal padikattugal... congrats...

நித்தி .. said...

பச்சையா சொல்லவா?"

"ம்ம்"

"என் உயிருக்குயிரானவள்"

very sweeetttttt....


பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

intha visayam kayal ku theriyuma varun????!!!!! neenga ivalavu bayandhagulliya????
anyways rombavae silirpana...kavithaiyana...alagana pathivigal ungal khadhal padikattugal... congrats...

வருண் said...

nithi:

அது சும்மா ஜோக் தான்.பூரிக்கட்டைசண்டையும் ஜோக்தான். ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க! :-)

குடுகுடுப்பை said...

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

கயலக்காகிட்ட கேளுங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுப்பர் க்ளைமேக்ஸ்

பழைய படத்தில் முடியும்போது
சுபம் போடுவாங்களே.

அது மாதிரி இருந்தது முற்றிய காதல் கல்வெட்டு.

BEST WISHES TO KAYAL AND VARUN.

SK said...

ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண்.

எங்கே கயல் அடிக்கடி காணாம போயிடறாங்க???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த பாட்டு எனக்கு :)

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே :((
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்

வருண் said...

குடுகுடுப்பை!

கயல் என்னைவிட ரொம்பவே லிபெரல், மேலும் ப்ராக்டிகல்! :) :)

வருண் said...

***SK said...
ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண்.

எங்கே கயல் அடிக்கடி காணாம போயிடறாங்க??? ***

நன்றி, எஸ் கே!

வேலை அதிகமாம், எஸ் கே! :)

வருண் said...

***அமிர்தவர்ஷினி அம்மா said...
சுப்பர் க்ளைமேக்ஸ்

பழைய படத்தில் முடியும்போது
சுபம் போடுவாங்களே.

அது மாதிரி இருந்தது முற்றிய காதல் கல்வெட்டு.

BEST WISHES TO KAYAL AND VARUN. ***

நன்றி! :)

Anonymous said...

kalyanathukum living together kum enna vidhyasam? Inga kalyanam na divorce podhu egapatta problems .Yaruku yaar avlo panam tharanum ellam. Adhunala they postpone marriage. HIndu marriage also has different set of divorce problem. HIndu marriage mathikaravanga live in pannuvangalanu therla. Unga kadhaila ellam sari aana kalyanam en pannikanumnu dhan puriala? May be veetla irukiravanga therinja kashta paduvanganu kooda kalyanam pannipangala irukum. Indha kalathil nadakardhu yaruku puriudhu!

வருண் said...

அனானி: கல்யாணம் என்பது பெரிய விசயம். ஏன் என்றால் சட்டம் வந்து குறுக்கிடும். நிறைய கம்மிட்மெண்ட் உள்ளது. லிவிங் டுகெதெர் என்பது சும்மா காதலிப்பது போல். சட்டம் உள்ளே வராது. ஈசியாக "ப்ரேக்" பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் :)