Thursday, October 7, 2010

வாழ்க்கை என்பது வியாபாரம்!

மனநலம சரியில்லாதவர்கள், குழந்தைகள் தவிர சாதாரண மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள்தான். வியாபாரினா? பண அடிப்படையில் மட்டும் இல்லை! எல்லா விசயங்களிலும் தனக்கு "இலாபம்" கிடைக்குமா என்று பார்ப்பதுதான் மனித இயல்பு. "இலாபம்" என்பது பணமாக இருக்கனும்னு இல்லை! எதைச் செய்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்? எதை செய்தால் நமக்கு நல்லது கிடைக்கும்? என்பதை "intuitive" ஆக உணர்ந்து நடக்கும் வியாபாரிகள்தாம் சாதாரண மனிதர்கள்.

வியாபாரி, சுயநலம் என்கிற மேட்டரெல்லாம் ரொம்ப கெட்டவார்த்தைனு நம்ம எல்லாமே நெனச்சுக்கிறோம். நம்மனு சொலவதைவிட, நான் நினைப்பதுண்டு! ஆனா இது ரெண்டும் இல்லைனா நாம் வாழ்வதே கடினம்.

எல்லா வியாபாரிகளும் மட்டமானவர்களா இருக்கனும்னு இல்லையே! ஒரு சில நல்ல வியாபாரியும் இருக்காங்க! தொழில் தர்மம் என்பதை மனதில் கொண்டு நடக்கும் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க. One can make fair deals also or not? ஆனால் இரக்கமே இல்லாத மோசமான வியாபாரியும் இருக்காங்க! The "loser" usually feels, "life is not fair" when it happens to him/her. உங்களை நல்ல வியாபாரினு நெனச்சுக்கோங்க!

இதிகாசங்களில் வரும் வியாபாரிகள்!

* இராமாயாணத்தில் இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கி கொல்வதை சொல்லலாம்! இராமருக்கு தேவை சீதை! அவரை எப்படியாவது திருப்பிப் பெறுவது. அதற்காக அவர் சுக்ரீவன் ஹனுமான் உதவி தேவை. இந்த "நட்பு" என்பதே ஒர் "வியாபார" நோக்கத்தில் தன்னுடைய சுநலத்தால் உருவாவ்துதான். It was more like a deal. இது கதைதான் என்றாலும் இன்றை உலகமும் இதேபோலதான் இயங்குது

* மஹாபாரதத்தில், கண்ணன், கர்ணனிடம் உயிரை யாசிப்பது! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேலே பயன்படுத்தக் கூடாது என்று அவன் அன்னையின் மூலம் சத்தியம் செய்ய வைப்பது! இதெல்லாம் என்ன? Different kinds of deals made to achieve what they want!

இல்லை, இது கதையல்ல! இராமரும் கண்ணனும் கடவுள் அப்படினா. அப்ப கடவுளே ஒரு வியாபாரிதான்!

In movies!

In Sabrina *ing Harrison Ford!

She (Julia Ormond) : "Did not you say, everything is Business?"

He (Ford): "Not me, but it sounds like me!"

I would say it is very very TRUE. Even in relationships it is a "deals" made between two people. People like Kamal are not good "businessman" and so they fail in their life and relationship!

Read somewhere,

"He is loyal but his loyalty changes from one person to another depending on the situation!"

Well, when his loyalty changes, he is not becoming disloyal to the former one? That is debatable. Actually he does become sort of disloyal to the former one! Now we need to define carefully what is loyal and disloyal? It is individual's opinion and changes person to person as well.

நம் சித்தரிக்கும் கற்பனைக் கதைகளில்கூட!

இது உண்மைதான். அகிலனின் பாவை விளக்கு கதையில் வரும் கதாநாயகன் தணிகாசலம் ஒரு சுயநலக்காரன் என்பதை அகிலன் பலமுறை அந்தக் கதையில் சொல்லியிருப்பார்! அதனால் "சுயநலம்" என்பது ஒரு அசிங்கமான ஒண்ணுனு நினைக்க வேண்டியதில்லை. அப்படியேயிருந்தாலும், அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது!

கடைசியா, நம்ம புத்தர்கூட

தன் மனைவியின் நிலைமையை யோசிக்காமல், தனக்கு எது முக்கியம்னுதான் போயிட்டாரு! இதில் சுயநலம் இல்லையா? நிச்சயம் அவர், அவர் செய்கையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி கவ்லைப் படலைனு சொல்லலாம்! புத்தரும் மனுஷன் தானே?

வாழக்கை என்பது வியாபாரம் தான். அதில் மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள், சுயநலக்காரர்கள் என்பது உண்மை! இதில் விதிவிலக்குனு யாருமில்லை! ஆனால் நிச்சயம் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க! மட்டமான வியாபாரிகளும் இருக்காங்க!

2 comments:

Chitra said...

ஆஹா..... தத்துவம் # 12497 சூப்பரா போகுதே....

By the way, I remember reading this business quote:

Some regard private enterprise as if it were a predatory tiger to be shot. Others look upon it as a cow that they can milk. Only a handful see it for what it really is - the strong horse that pulls the whole cart.
......Winston Churchill

வருண் said...

வாங்க, சித்ரா! Thanks for the Churchill's quote! :)