Thursday, July 12, 2018

தேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி!

"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார்.  இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் தூக்கி எறியணும் அது இது னு சொல்லிக்கொண்டு  அலைகிறார்" என்கிறார்கள் மக்கள்.

ரிசர்வேஷன் என்பது பார்ப்பனர்கள் வெறுக்கும் ஒரு விசயம். பார்ப்பனர்கள் சாதியைச் சொல்லாமல் இருந்தால் அவர்கள் ஃபார்வேர்ட் ஆக எடுத்துக் கொள்வார்கள். அதனால் எவ்வித மாற்றமும் இல்லை. பார்ப்பனர்கள் சாதிச் சான்றிதழில் சாதியைச் சொல்லாமல் இருப்பது எந்தவிதமான தியாகமும் இல்லை என்கிற அடிப்படையை 'தேவர் மகன்" உணரவில்லை.

சுருதி ஒரு அடல்ட். அவர் தன் சாதியைச் சொல்லிக்கொண்டு அலைந்தால் நம்ம தேவர் மகன் எப்படி பொறுப்பு? அதுக்கு இவர் என்ன செய்வார் பாவம்?

ஆனால் சான்றிதழ் சாதி, தலித்துக்கு மட்டுமல்லாமல், தேவர், கள்ளர், வன்னியர் அனைவருக்கும் இன்று அவசியம் தேவைப்படுகிறது. அதனால் சாதியை சாதிச் சான்றிதழில் ஒழிக்கணும் என்னும் அரசியல் நிலைப்பாடு தேவர் மகனை புதைகுழிக்கு அனுப்பிவிடும் என்பது புரிந்து கொள்வது அவசியம். இது ஜல்லிக்கட்டுபோல் தூண்டிவிட்டுப் பேசி ஆதாயம் அடையும் விசயம் அல்ல! இந்த விசயத்தில் தமிழன் கோயில் மாடு மாதிரி  இவர் சொல்றதுக்கு தலையை ஆட்ட மாட்டான்!

ஆமா இனிமேல் புரிந்துதான் என்ன ஆகப்போது? டாமேஜ் இஸ் டன் அல்ரெடி னு எல்லாம் எண்ண வேண்டாம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். சாதிச்சான்றிதழ் அவசியம். நான் பார்ப்பனராக பிறந்ததால் எனக்குப் புரியவில்லை என்று சொல்லிக்கூட சமாளிக்கலாம்.

No comments: