Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Sunday, January 8, 2017

நாடார் சமூகம் பற்றி மாலா வாசுதேவன் பதிவு மற்றும் விவாதம்

 நாடார் சமூகம் தங்களை அவமானப் படுத்தியதை, தங்கள் மகள், தங்கை, தாயை ஆடை அணியவிடாமல் அவமானப் படுத்திய வரலாறைப் பற்றி நாங்கள் கேட்கத் தயாராக இல்லை. அதை பாடப் புத்தகங்களில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என போராடுகிறார்கள்.

பதிவர் மாலா வாசுதேவன் சொல்கிறார், வரலாறை சொல்வதில் தவறில்லை என்று. நாடார் பெண்களை மேலாடை அணியாமல் திரிய வேண்டும் என்று சொன்னது வரலாறு, அதை எல்லாப் பாடப் புத்தகங்களிலும் எழுதலாம் என்கிறார். 

 அதாவது "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்கிறார் ஒரு அரைவேக்காட்டு சி னி மா வசனத்தை மேற்கோள்காட்டி

இவருக்கு கூஜா தூக்கும் வி பாலா என்கிற பதிவர் பார்ப்பனர்களை "பார்ப்பான்" என்றும் பாடப் புத்தகங்களில் சொல்லி இருக்கிறது என்பது போல் உளறி வைக்கிறார்.

இது சம்மந்தமான என்னுடைய பின்னூட்டங்கள் "நாகரிகம், தரம்" கருதி அப்பதிவில் அகற்றப்பட்டன. அவைகள் இங்கே பதிவுடன் பதிவிடப்படுகிறது.

I spent lot of my time writing my comments, I dont like them being destroyed by some half-baked blogger who hardly understands the seriousness in this sensitive topic.


So, here you go, folks..

 

 

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம். 
இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே மேல்முண்டு அணிய அனுமதி. இச்சட்டத்தை எதிர்த்து 1822 முதல் 1859 வரையான காலங்களில் கடுமையாகப் போராடி, மேலாடை அணிவது எங்கள் உரிமை என்று நிறுவினர் நாடார் சமூகத்தினர். இப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் மகாராணி இச்சட்டத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடுமையாகக் கண்டித்தார். வேறு வழியின்றி திருவிதாங்கூர் மன்னர் அனைத்து நாடார் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்ற உரிமை அளித்தார்.
பாடப்புத்தகத்தில் இப்பகுதியைத் தடை செய்வதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றனர் அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சில நாடார் அமைப்புகள். அந்தத் திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாமே தவிர, நீக்க வேண்டியதன் அவசியமென்ன?

நாடார் சமூகம், மேலாடை அணியக்கூட உரிமையில்லை என்று அசிங்கப்படுத்தப்பட்டும், அடக்கப்பட்டும், தடை பல தாண்டி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வீறு கொண்டெழுந்தது. தான் கால் வைத்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.  கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்கிறது. இன்றும் நம் தெருவில் சிறிய கடை வைத்திருந்த அண்ணாச்சி, அதே இடத்தில் நாளடைவில் சூப்பர் மார்க்கெட் கட்டி விரிவடைகின்றார் என்றால் அது கடின உழைப்பில்லாமல் வேறென்ன?    ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதல்லவா இது போன்ற உழைப்பு?

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததுதான் ஃபீனிக்ஸிற்கான பெருமை. தான் சாம்பலிலிருந்துதான் உயர்ந்தோம் என்று உலகிற்குத் தெரிவிப்பதில் என்ன அசிங்கம்? முன்னேறிச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவசியம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்வதும், தெரிவித்துக்கொள்வதும். என் வேர்களை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக என் முன்னோர்களைக் குறித்து நான் அளவில்லாப் பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.

முடிவாக - வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)
Annex:

“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
-C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii

8 comments:

வருண் said...
History is important only for Victors and rulers. Most of the time they only wrote their victories and not their defeats. History is "carefully" written by manipulating the "facts" too. There are lots and lots of lies and manipulation is there in History. If someone said "வரலாறு முக்கியம் அமைச்சரே" அது ஒண்ணும் பொன்மொழியல்ல!அதை ஒரு குப்பை வசனமாகவும் பார்க்கலாம். அது பார்ப்பவரைப் பொறுத்து.
வருண் said...
ஒரு பக்கம் நாடார் சமூகம் எப்படி ஒடுக்கப்பட்டு இருந்தது என்பது இருக்கட்டும். இன்னொரு பக்கம், தன் மனைவி, அம்மா, தங்கை எல்லாம் மேலாடை போட்டு இருக்கும்போது இன்னொரு இனத்தை நீ மேலாடை போடக்கூடாதுனு சட்டம் கொண்டு வந்த உயர்சாதி னு சொல்லிக்கொண்டு அலைந்த ஈனத்தமிழர்களின் "இப் பெருமை", தமிழர்களுக்கு இழுக்கில்லையா?

தமிழ், தமிழர் பண்பாடு தமிழர் நாக்ரிகம்னு சும்மா ஏமாத்திக்கொண்டு திரிந்து இருக்கிறார்கள். உண்மையான ஈன உயர்சாதி தமிழன்களையும் அவனுகளுடைய ஈனப் புத்தியையும் பறைசாற்றுவது உங்களுக்கு கேவலமாக இல்லையா?

தோண்டி தோண்டிப் பார்த்தால் தமிழர் கலாச்சாரம் கேவலமானதாகத்தான் இருந்ந்து இருக்கு. இதில் பாதிக்கப்பட்டவர்களை விட "பாதிக்கப் பட வைத்தவர்கள்"தான் அவமானப் படவேண்டிய விசயம் இது! என்பது என்னுடைய பார்வை.
Bala V said...
History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.
Bala V said...
ஆசிரியர் ஏன் நாடார்கள் எதிர்க்கக்கூடாது என்று மட்டுமே சொல்கிறார். ஏன் எதிர்க்கிறார்கள் என்று சொல்லவில்லை அவர் சொல்வது போல, சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்கள் (ஓ பி சி சர்டிபிகேட் வாங்குவதற்காக பலர் சாணார் என்றுதான் போட்டுக்கொள்கிறார்கள். நாடார்களைப்பிடிக்காதவர்கள் அப்பெயரைத்தான் பயனபடுத்திப்பேசுவர். எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல), இன்று தமிழ்ச்சமூகத்தில் ஓபிசிக்களில் மேலான நிலையை அடைந்திருக்கின்றனர். இதுவே அவர்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைப்பதற்குக் காரணம். ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளியோ, ஒரு வங்கி அல்லது எண்ணை தயாரிக்கும் நாடார் குடும்பமோ - டி எம் பி வங்கி, வி வி டி, இதயம் எண்ணை, போன்று) தங்கள் தலைமுறை, வரும் தலைமுறைகள் - தங்கள் முன்னோர் தலித்துக்களைப் போல நடத்தப்பட்டதைத் தெரிந்தால், தலித்துகளுக்கு இணையாக நாம் என்று கருதக்கூடும். மார்பை மறைக்க தடைசெய்யபப்ட்டது தலித்துகளுக்கும் கேரளா முழவதும்செய்யப்பட்டது எனவே. தலித்துகள்தான் இடைஞ்சல் அவர்களின் மரியாதையான இடத்துக்கு, இதுவே காரணம். நாடார்களை மட்டுமே இங்கு குறை சொல்ல முடியாது. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் எல்லாருமே தலித்துக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்து, அவர்களுக்கு இணையாக நாம் நினைப்பில் கூட வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை?

அதே சமயம், வரலாறு நன்கு பதியப்பட்டு விட்டது. பள்ளி பாடநூல்கள் வரலாறு எழுதாது. எழுதிய வரலாற்றிலிருந்து எடுத்துப்போடும். வரலாறு ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும். அவர்கள் பாடநூலைப்படித்து தெரியவதில்லை. ஆய்வு நூல்களையே தேர்தெடுப்பர். அவை பல்கிப்பெருகிக்கிடக்கின்றன. இந்தியா ஹவுஸ் லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய நூலகங்களிலும். இந்தியாவிலே பல நூல்கள் இருக்கின்றன. அவை தெளிவாக நாடார்கள் தீண்டத்தகாதவர்களாகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடாத்தப்பட்டனர் என்றே தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடி நாடார்கள் அந்நூல்களைத் தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இந்துத்வாவினர் வெண்டி டோனிகர் நூல்களைத்தடை செய்தத்து போல. இது நாடார்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைக்கத் துடிக்கிறார்கள் எனற உண்மையைத்தான் பறை சாற்றும். உங்களைத்தூண்டியது போல எல்லாரையும் நடந்தது என்ன என்று அறியத் தூண்டும். மறைக்க மறைக்க மேலே வருமே தவிர கீழே போகாது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது என்பது உண்மை. அதே சமயம் ரிவிசைனிஸ்ட் வர்லாறு என்பதும் உண்டு. அது கசப்பான உண்மைகளை மறைக்கவே எழுதப்படுகிறது.
வருண் said...
***History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.**

Is this your research paper on History?? Sounds like utter nonsense! Ha Ha


வருண் said...
***எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல)**

Which history book has "paappaan"??!! Can you cite me here, genius??! Otherwise keep your mouth SHUT! You sound STUPID every time you open your mouth!
மாலா வாசுதேவன் said...
You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog
வருண் said...
***மாலா வாசுதேவன் said...

You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog***

Why dont you help him showing the high school text book which says the word "பார்ப்பான்" instead of advising me how I should comment on your "ugly topic"?

Let us see this situation with an example

A girl is a Professor in a College today. She is from Nadar community who were abused not so long ago. This girl's mom grew up in southern Tamilnadu. Her mom was forced to walk "topless/half naked" by some HIGH CLASS ANIMALS because her mom was born in such and such caste which was considered a "low class" by THESE ANIMALS

Today, this girl, DO NOT EVEN want to think about HOW her mom was abused 30-40 years ago and was forced to walk half-naked.


Whatever happened to her mom was HISTORY. Someone like you (Mala) or this Balu who are obsessed with history wants to discuss about her mom's force half-naked walk story in a textbook. You strongly believe that it had happened, why can not I discuss about it? But the girl who got affected by this abuse DO NOT EVEN want to think about how her mom was abused. She says, "not to discuss" about this topic. But you and Bala are arguing that "வரலாறு முக்கியம் அமைச்சரே"?

You are talking about dignity???Are you serious, Mala?

Monday, March 14, 2016

அருள்! காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்!

வன்னியர் அருள்! உங்களை வன்னியன்னு சொல்லி அழைப்பதில் தவறில்லை! சாதி வெறிபிடிச்சு அலையும் உம்மைப்போல் ஆட்களை சாதி சொல்லிதான் விளிக்கணும். உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?

என்ன? என்ன? அன்புமணி அடுத்த முதல்வராகணுமா?

தமிழ்நாட்டில் வன்னியர்கள் கனிசமாக இருந்தாலும், தமிழ்நாட்டை மைனாரிட்டியான பார்ப்பனர் தொடர்ந்து ஆளமுடியுமே ஒழிய கனிசமாக இருக்கும் "உயர்சாதி" வன்னியரால் ஆள முடியாது. என்ன பிரச்சினை? சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது!  தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான்! முக்கியமாக உம்மைப்போல் வன்னியரின் சாதி வெறியால்தான் வன்னியரல்லாதோர் ஒன்றுகூடி வன்னியரை ஆளவிடாமல் தடுப்பது என்பது இன்னொரு கசப்பான உண்மை!

இப்போ எவன்  சாதியை ஒழிக்கணும்னு வந்து உம்மகிட்ட அழுகிறான்? சாதியைக் கட்டி அழும்! கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியும், ஒழியணும்னு எவன் வந்து உம்மிடம் சொன்னான்னு தெரியலை.

கலப்புத் திருமணத்தால் சாதிவெறி அதிகமாவதைத்தான் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நீரே அதுக்கு ஒரு நல்ல உதாரணம்! இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு? ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும் கலப்புத் திருமணத்தால் சாதி எல்லாம் ஒழியாது. சாதி ஒழியணும் என்பதற்காக எல்லாம் கலப்புத் திருமணம் யாரும் செய்வதில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது அவள் சாதி பார்த்தல்ல! ஆண்-பெண் உறவு  எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டது. இந்தச் சின்ன உண்மையை  உம் மரமண்டையில் ஏற்றும்!

வன்னியரின் வரலாற்றைப் பார்ப்போம்!

ஏன் வன்னியர் யாருமே வேற சாதி பொம்பளைய வச்சிரு(ந்தது)க்கது இல்லையா? அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன? அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா? அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா  என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க? அது மாதிரித்தான், காதலும், அதன்பின் கலப்புக் கல்யாணமும்.

வன்னியர் அருள்! பதிவுலகைவிட்டு நீர் ஒழிந்தால் கொஞசம் இங்கே சாதிவாடை இல்லாமல் இருக்கும். போயி எங்கேயாவது போய் வன்னியர் சாதிச்சங்கம் நடத்துறதைவிட்டுவிட்டு ஏன் இங்கே வந்து ஒளறிக்கிட்டு இருக்கிறீர்னு தெரியலை. போய் தொலைங்கப்பா!

Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜா மதம்மாறி மனநிம்மதி அடைகிறாரோ?

தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர் இந்துவாக இருந்து படும் இன்னல்களைப் பார்த்து  "நீ இந்து மதத்தில் இருந்து ஓடிப்போயிடு!  நீ இந்துவாக இருந்தால் உன் வாழ்நாளில் உன் சாதி அடையாளத்தை ஒழிக்க முடியாது!" என்பதை உணர்ந்து சொன்னார். அதேபோல் அம்பேத்கார் புத்தமதத்துக்கு ஓடினார். எனக்குத் தெரியவே தாழ்த்தப்பட்டவர்கள் பலர் இதுபோல் இஸ்லாம், அல்லது கிருத்தவம் என்று ஓடினார்கள். இன்றைக்கு அவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்ட சாதியடையாளத்தை. மாறிய மத அடையாளத்தை வைத்து மறைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி திராவிட நாய்கள் போல் அடிமுட்டாள்கள் உலகிலேயே இல்லை! இந்த நாய்கள் இந்து மதத்தை போற்றுறேன் புகழ்றேன்னு, இதுக கட்டி அழுவதோடு நிற்காமல், இதுபோல் சுய சிந்தனையுடன் மதம் மாறுபவர்களை புரிந்து அன்றே சொன்ன பெரியாரை இஷ்டத்துக்கு விமர்சிப்பதே இந்த நாய்களுக்கு வேலை. தந்தை பெரியார், இவர்கள் இந்துவாக இருந்து பட்ட இன்னல்களை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்பது என் கணிப்பு! இந்த உயர்சாதி இந்து நாய்களுக்கு அதெல்லாம் புரியாது!

இன்று யுவன் மதம் மாறியதற்குக் கூட அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன் சாதி அடையாத்தை அழிக்க முடியாத காரணமாகக்கூட  இருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றாமல் இல்லை! நீ இந்துவாக இருந்தால் உன் சாதி அடையாளத்தை உன் வாழ்நாளில் அழிப்பது கடினம். இஸ்லாமியராகவோ அல்லது கிருத்தவராகவோ மாறிவிட்டால், உன் சாதி அடையாளத்தை அழிப்பது ஓரளவுக்கு சாத்தியம் என்பதே இன்றைய நிலைப்பாடும்!

யுவனை முழுமனதுடன் இஸ்லாமுக்கு அனுப்பி வைப்போம். எங்கிருந்தாலும் அவர் மன நிம்மதியுடன் இருந்தால் நன்றே!

மதம் மாறுவது அவனவன் உரிமை! நீ பார்ப்பணரோ அல்லது உயர் சாதி இந்துவாகவோ இருந்தால் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.

Monday, July 8, 2013

இளவரசன் மரணம்! யார் குற்றவாளி?!

"மரணம் என்னும் தூது வந்தது! அது மங்கை என்னும் வடிவில் வந்தது!" என்று காதல் தோல்வியின்போது பெண்களை வில்லனாக்கி இப்படி பலவாறு விமர்சிப்பதே நம் கலாச்சாரம், பண்பாடு!

காதலனை காதலி  கைவிடுவதற்கு என்ன காரணம்? கவனமாக அலசி, யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் நமது சமுதாயம் மற்றும் அவளைப் பெற்றவர்கள்,   ஒரு இளம் பெண்ணை, அவள் விருப்பப்படி முடிவு எடுக்கவிடுவதில்லை! காதலியின்  முடிவை முடிவு செய்வதே அவள் பெற்றோர்கள், சாதி சனம், சொந்த பந்தம்னு சொல்லிக்கிட்டு அலைபவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் அவள் ஒரு அடிமை என்பதுதான் நிதர்சனம். இதில் அந்த மங்கை என்ன செய்வாள் பாவம்?

சட்டப்படி "அவள் வயதில் முதிர்ந்தவள், தன் வாழ்க்கையை முடிவு செய்ய தகுதியானவள்" என்றாலும் அவள்  ஒரு சின்னப்பொண்ணுதான். உலக அனுபவம் இல்லாதவள்தான்.

உலக அனுபவம்? வயதில் முதிர்ந்த, படித்த,  வலைபதிவர்களே,  தன் சாதிக்காரன் எல்லாம் யோக்கியன், தன் சாதித் தலைவர்களெல்லாம் புத்தனும், காந்தியும் என்று  பிதற்றிக்கொண்டு வெட்கமே இல்லாமல் சாதித்தளம் ஒன்றை நடத்திக்கொண்டு திரிகிறார்கள்!

அனுபவம் மிக்க இவர்களே தான் ஒரு சாதி வெறி பிடித்து அலையும் அடிமுட்டாள் என்று தன் ஒவ்வொரு பதிவிலும் காட்டும்போது, ஒரு இளம்பெண்ணின் உலக அனுபவம் எப்படி போதுமானதாகும்?

அவளுக்கு உலக அனுபவம் இருந்து இருந்தால்.. தன் சாதி மக்கள் பற்றி நன்றே அறிந்து இருப்பாள். அவள் என்னவோ..நாளுக்கு நாள் உலகம் முன்னேறுகிறது. நம் சாதியும் முன்னேறிவிட்டது! நம் சாதி மக்களுக்கும் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது! அவர்களுக்கு சாதி வெறி தணிந்து இருக்கும் என்று நம்பிவிட்டாள்! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! 

காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது. காதலனால், அவன் அன்பால் தன் மனம் சந்தோஷம் அடைவதால்  அவள் அவனைக் காதலித்தாள்! காதலன் சாதி அவள் கண்ணுக்குத் தெரியவில்லை!  தான் விரும்பியவனை தைரியமாக கல்யாணமும் செய்துகொண்டாள்.

அவளை வாழவிடுமா அவள் சமூகம்? 

வாழவிட்டதா அவள் சாதி சனம்?  

நமது சமுதாயத்தில் ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை! ஏன் அவளுக்குத் தெரியவில்லை? திரும்பத் திரும்ப சொல்லணுமா? அவள் ஒரு சிறுமி! அவளுக்கு உலக அனுபவம் பத்தாது! யார் அவள் உணர்வுகளை மதிப்பதில்லை!  அவளைப் பெற்றெடுத்தவர்களே! அவளுடைய சொந்த பந்தம்! அவர்கள் சாதி சனம். அவர்கள் சாதித்தலைவர்கள்!  

யார் இவர்கள் எல்லாம்?  

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்ய அவளைவிடத் தனக்குத்தான் அதிக உரிமையுண்டு என்று நம்பும், சாதி வெறி பிடித்து அலையும் முட்டாள்கள்!

அறியாமையில் வாழ்ந்த அவள் தந்தை, காதல் திருமணம் செய்தது ஏதோ கொலைக்குற்றம் செய்ததுபோல்,  மகளைப் பற்றி கவலைப்படாமல், தான் இல்லையென்றால் அவள் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று கொஞ்சம்கூட யோசிக்காமல்,  முட்டாள்த்தனமாக தன்னை மாய்த்துக் கொண்டார்!

அதன் பிறகு அவள் சொந்த பந்தம், சாதி சனம், சாதித்தலைவர்கள் எல்லாம் அவள் அனுபவமற்ற இளமனதை "இந்த எழவை" பயன்படுத்தி அவளைக் குற்றவாளியாக்கி, அவள் மனதை கலைத்துவிட்டு , அவளைக் குழப்பி, அவள் நிம்மதியை பறித்து அவளை நடமாடும் பிணமாகவும், மன நோயாளியாகவும், ஆக்கிவிட்டார்கள். மேலும் அவள் தந்தை மரணத்திற்கு அவளே காரணம் என்பதுபோல் அவளை பலவாறு சாடி,  அவளை நம்பவும் வைத்து விட்டார்கள்!

அனுபவமற்ற இளம் பெண் அவள்!  என்ன செய்வாள் பாவம்? அவள் செய்யாத தவறுக்கு "நல்ல தீர்வு" என்று அவள் சாதி சனம் சொன்ன "தீர்வை" அவள் தன் முடிவாகச் சொன்னாள்! வேறு வழியில்லாமல்,  தன் காதலனை, கணவனை கைவிட்டாள்! அவளுக்குத் தெரியாது, அவள் காதலனுக்கும் இவ்வுலகில் அவளில்லாமல் வாழ முடியாது என்று! அவளுக்குத் தெரியாது! அவனும் ஒரு கோழை என்று.

பொதுவாக பெண்களுக்கு "ஆண்கள் ஏன் இப்படி பெண்களை அடிமைப் படுத்தினார்கள்?" என்பது தெரியாது. ஆண் கவிஞர்கள் எல்லாம் "ஏன் பெண்களை அரக்கியாகவும் இரக்கமில்லாதவர் களாகவும் ஆக்கி ரசிக்கிறார்கள்?" என்பதும் தெரியாது! 

ஆண்கள், பெண்களை விட மனபலம் எதுவுமில்லாத பலஹீனமானவர்கள்!  கோழைகள்! என்பதே உண்மை.

புரிந்துகொள்! கலப்புத் திருமணம், காதல் திருமணம் எல்லாம் நம் சமூகத்தில் இல்லாமல் இல்லை! இப்போவும் நடந்துகொண்டுதான் இருக்கு. அந்த  அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!   அதுவும் சாதி வெறி பிடித்தலையும் உன்  காட்டுமிராண்டி சமூகத்தில் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை!

ஒரு சில படித்த பண்புள்ள அப்பாகள், அம்மாக்கள் ஊர் உலகத்தை, சாதி சனங்களை தூக்கி எறிந்துவிட்டு தன் ம்களின் அப்போதைய சந்தோஷத்தை (நாளைக்கு அவர்கள் எப்படி உணருவார்களோ? என்கிற கேள்விகள் இருந்தாலும்) மதித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். நிற்க, நாளைக்கு அதே திருமணம் மணமுறிவில் முடிந்தாலும், அதையும் ஏற்றுக் கொண்டு, அதற்கானதை செய்யும் படிப்பறிவுள்ள, பண்புள்ள அப்பா அம்மாக்கள் எல்லாம் தமிழர்களில் இருக்காங்க. அந்தளவுக்கு பக்குவம் அடைந்த, ஊர் உலக்த்தை சுச்சமாக மதிக்கும் அப்பா அம்மாக்கள் மிகவும் சொற்பமே.

இன்னொன்று புரிந்து கொள்..

உன் தந்தை ஒரு ஆண்!  மனதைரியமில்லாதவர்! தன் மகளுக்காக, இந்த சமுதாயத்தை எதிர்த்து போரிட தைரியமில்லாத ஒரு கோழை!

உன் முன்னால் காதலன், முன்னால் கணவன், அவனும் ஒரு ஆண்! ஒரு கோழைதான்!

ஆண்கள் கோழைகள் என்று தெரிந்து கொள்! கோழைகளைப் பார்த்து பரிதாபப்படுவதால் நீயும் கோழையாக வேண்டிய கட்டாய சூழல் உனக்கு! இந்த உலகை இனிமேலாவது புரிந்துகொள்! நடந்தவைகள் எதுவுமே உன் தவறல்ல! காதலிப்பது தவறல்ல! காதலித்த காதலனை மணப்பதும் தவறல்ல!  அதன் பிறகு ஏற்பட்ட உயிரிழப்புகள்? அது அவரவர் எடுத்த முடிவு! அவர்கள் தலை எழுத்து! கோழைகள் சாகட்டும் விடு! நீ வாழக்கற்றுக்கொள்! வாழ்ந்து காட்டு!

Thursday, July 4, 2013

வன்னியர் அருள்! இப்போ சந்தோஷம்தானே?

வன்னியர் சாதியச் சேர்ந்த  இளம் பெண், திவ்யா, தனிப்பட்ட தன் காதல், தன் கல்யாணப் பிரச்சினை, நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பெரிதாக ஆக, பயந்து, நடுங்கி, எதுக்கு வம்பு னு  , மணம் முடித்த தலித் கணவனை விட்டு வந்துவிட்டாள்!

மனைவியைப் பிரிந்த காரணத்தினாலோ என்னவோ "என்னடா இது உலகம்!" னு இளவரசன் ஒரேயடியா இந்த உலகத்தை விட்டுப் போயித் தொலைஞ்சுட்டான்!

இங்கே நம்ம அருள், பதிவுமேலே பதிவுபோட்டு, ஆனந்தக் கண்ணீருடன் கலந்த நீலிக்கண்ணீர் வடித்து, திவ்யாவை நினைத்து பெருமிதமும், இளவரனை நினைத்து எல்லையில்லா வருத்தமும் அடைகிறார்! பாவம், அவருக்கு யாராவது ஆறுதல் சொல்லி தேத்துங்கப்பா!

ஒரு சாதாரண காதல் பிரச்சினையை, இந்த 21ம் நூற்றாண்டில், சாதிப் பிரச்சினையாய் ஆக்கி, உலகப் பிரச்சினையாய் ஆக்கி.... இளம் காதலர்களை, கலங்க வைத்து, குழப்பி..விவாகரத்து செய்ய வைத்து..காதலனை உயிரை இழக்க வைத்து..காதலியின் இதயத்தில் வாழ்நாள் முழுவதும் ஆறாத ஒரு வடுவை உண்டாக்கி என்னப்பா சாதிச்சீங்க? கொஞ்சம்கூட மூளையே வேலை செய்யாதா, சாதி வெறிபிடித்தலையும் இந்த மூடர்களுக்கு?


Tuesday, April 30, 2013

மரக்காணத்தில் தலித்களால் அப்பாவி வன்னியர்கள் தாக்கப்பட்டனர்?!

அருள் அவர்களே! மரக்காணத்தில் 3 வன்னியர்கள் தலித்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து இருக்காங்க! பலர் தாக்கப்பட்டு இருக்காங்க! இது மட்டும் சரியா? தலித்கள்தான் கொழுப்பெடுத்து ஆடுறாங்க! அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அரசாங்கமே துணை போகிறது!

இதெல்லாம்தானே  உங்கள் குற்றச்சாட்டு?

A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou
A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou

 அரசியல்வாதிகளை விடுங்க! மேலே போடப்பட்ட மீடியாவின் புகைப்படத்தையும் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்! அதேபோல் தலித்கள் செய்த அடாவடித்தனத்துக்கு சட்டம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரையில் போராடுவோம்!

ஆனால் உங்களுக்கு என்ன புரியமாட்டேன்கிதுனா, தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான். அது தலித்தாக இருந்தால் என்ன? வன்னியர்களாக இல்லைனா முக்குலத்தோர்களாக இருந்தால் என்ன?

வன்னியர்கள் தவறு செய்யும்போது மட்டும்  உங்க நிலைப்பாடு வேடிக்கையா இருக்கிறது. அது ஏன்? ரெண்டு சாதிக்காரன் சண்டை போடுறான்! அதில் ரெண்டு சாதியிலுமே நல்லவனும் இருப்பான், அயோக்கியனும் இருப்பான் என்பது உங்களுக்குத் தெரியாதா? வம்புச் சண்டை இழுக்கிறவனுக ரெண்டு சாதியிலுமே இருப்பான் என்ற கருத்தை நீங்க என்றுமே புரிந்துகொண்டு, அதை முன் வைத்து விவாதித்ததாக ஒரு போதும் தோணவில்லையே? அது ஏன்? எல்லா நேரமும் வன்னியர்கள் எல்லாம் அப்பாவிகள் தவறே செய்யமாட்டாங்க என்பதுபோல் வக்காலத்து வாங்குறீங்க!

தருமபுரி சண்டையிலேயும், வன்னியர்கள் அப்பாவிகள் என்பது போலவும், வயதில் முதிர்ச்சியடையாத வன்னியச் சிறுமியை, இன்னொரு தலித் சிறுவன் ஏமாற்றிக் கல்யாணம் செய்யப் போனதுதான் அங்கே பிரச்சினை என்று நியாயப் படுத்தினீர்கள்! தருமபுரி சண்டையில் சாதி ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் பிதற்றினீர்கள்!  அது ஏன்? விபரம் சொல்லவும்!

புகைப்படம்: நன்றி ஹிந்து

Wednesday, February 20, 2013

சாதீயத்தை வளர்க்கும் தளங்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!

ஒரு சில பதிவர்கள் உலகம் அறியாதவர்களாக இருக்காங்களா இல்லை அப்படி நடிக்கிறாங்களா னு தெரியவில்லை. பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் தன் ஊரைச் சொல்லுறது, அப்புறம் தன் பதிவின் மூலமாக  ஏதாவது ஒரு உண்மைக்கதை சொல்லுவது போல தன் சாதியை பறைசாற்றி விடுகிறார்கள்.  இவர்கள் என்ன செய்கிறார்கள்னு சாதியிலேயே றி அறியாமையில் வாழும் இவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்களை நமக்குப் புரியாதா என்ன?

பதிவுலகில் வந்து தன் சாதியைச் சொல்வதை தவிர்ப்பதை விட்டுவிட்டு எதார்த்தமாக சொல்வதுபோல் தன் சாதியை வேணுமென்றே பறைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?  இவர்கள் வலைதளத்தில் இவர்கள் சாதிக்கூட்டத்தை மறைமுகமாக ஒன்று சேர்ப்பதற்காகனுகூட சொல்லாம்! சாதாரண வாசகனாக, ஒரு தமிழனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே இவர்களுக்குத் தேவைப் படுகிறது என்பது பரிதாபம்.

ஏற்கனவே  இருகிக்கிற  மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு பிரச்சினை..பதிவுலகில் ஒருவர் பெயரை வைத்து அவர் மதத்தை எளிதாக அறிந்துவிடலாம். நாத்திகரான  நீங்க இக்பால் செல்வன்னு வீம்புக்கு பெயர் வைக்காமல் இருக்கும் வரையில் அது எளிது. ஒரு பதிவரின் மதமறிவது பதிவுலகில் எளிது என்பது எல்லாருக்கும் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது?  முடியாது போலவே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சாதீயம், சாதி அடையாளங்களை சொல்லிக்கொண்டு அலையும்  சாதித்தளங்கள் வளர ஆரம்பித்து உள்ளது.

வலைபதிவர் ஒருவர், மிகக்கவனமாக தன் சாதி அடையாளங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதில் என்ன பிரச்சினை னு எனக்கு விளங்கவில்லை!

ஏற்கனவே பதிவர்களில் பலரை வெஜிடேரியன் என்கிற ஒரு விடயத்தை வைத்தே ஓரளவுக்கு இவர்கள் பார்ப்பனர்கள்னு யூகித்துவிடலாம். இதில் பலர் நாகரிகம் கருதி,  எவ்வளவுதான் கவனமாக தன் சாதியை வெளிக்காட்டக்கூடாதுனு இருந்தாலும் இவர்களை அடையாளம் கண்டு  கொள்வது எளிது. இவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், கண்டு கொள்ளாத மாதிரி விட்டுவிட்டுப் போய்விடுகிறோம்.  முடிந்தவரை இவர்களை ஒரு தமிழ்ப் பதிவராக பார்க்க முயல்கிறோம். சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை ஒரு பதிவராகப் பார்ப்பதுதான் அழகு என்று திறந்த மனதுடன் பார்க்கிறோம்.

இது பத்தாதுனு பிராமனர் அல்லாத பிறசாதியைச் சேர்ந்த தமிழ்ப்பதிவர்கள் தன் சாதி அடையாளத்தை வேண்டுமென்றே வெளிக்கொண்டு வந்து, சாதியை, சாதி அடையாளத்தை  ஒழிக்க முடியாதுனு வியாக்யாணம் வேற பேசுகிறார்கள். இப்படி செய்துகொண்டு தான் எதுவும் தவறு செய்யவில்லை, நான் எல்லா சாதியையும் மதிக்கிறேன், சாதியை என் வீட்டில்தான் வைத்திருக்கிறேன் என்று வேறு சொல்கிறார்கள். 

உன் சாதியை நீ உன் வீட்டில் அடைத்து வைத்திருந்தால் எனக்கும் இந்த  உலகுக்கும் உன் சாதி எப்படித் தெரிந்தது? நீ சொல்லாமல்? உன் சாதியை இணையதளத்தில் நீ பறை சாற்றி இருக்கிறாய். அதனால்தான் உலகுக்குத் தெரிகிறது! "உன் சாதி அடையாளத்தை உன் வீட்டில் அடைத்து வைக்காமல் பதிவுலகில் பறைசாற்றியிருக்கிறாய்" என்றுகூட உணராமல் அறியாமையில் வாழ்கிறாய்! மேலும் அதில் ஒரு தவறும் இல்லை, அது என் கருத்துரிமை என்று வேறு சொல்லுகிறாய்!

சாதாரண வாசகனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே வர வேண்டும் என்பதே இவர்கள் முயற்சி. இவர்கள் வலையுலகிற்கு பதிவெழுத வர்ரார்களா? இல்லைனா தன் மஹாஜனக் கூட்டத்தை ஒன்று சேர்க்க வர்ராங்களானு தெரியவில்லை!

உங்க சாதி அடையாளத்தை முன் வைப்பதில் தவறில்லை என்றுதான் ஐயா டோண்டு ராகவன் முதல்க்கொண்டு இன்று சாதி அடையாளத்தை "மறைமுகமாக" வெளியிடும் புதிய பதிவர்கள் வாதம் செய்றாங்க.  

அதை ஒருபோதும் ஏற்கலாகாது! நீங்க உங்க  சாதி அடையாளத்தை உங்க வீட்டிலேயே வைத்து விட்டு அந்த அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

தமிழ்மணத்தின் முக்கிய பொறுப்பு!

* இதுபோல், எதோ எதார்த்தமாகப் பேசுவதுபோல் தன் சாதியை வெளிக்காட்டி சாதீயத்தை வளர்க்கும் வலைபதிவுகளை வளரவிடாமல் முளையிலேயே இந்தப் பிரச்சினையை கிள்ளி எறிய வேண்டிய  முக்கியப் பொறுப்பு தமிழ்மணம் போன்ற வலைதளங்களுக்கு உண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்மணம், அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், பதிவுலகில் மதச்சண்டை இன்று நடப்பதுபோல் நாளை, சாதி அடிப்படையில் ஒன்று சேரும் கூட்டங்களும், சாதிச்சண்டைகளும் நடக்கும் அபாயம் இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுவோமாக! இதை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் புத்திசாலித்தனம்!

"சாதி வேணும்.." என்று பேசுவது என் கருத்துச் சுதந்திரம், உன் வேலையைப் பாரு! என்று எதிர் வாதம் செய்து சப்பை கட்டுவதை யாரும் எதுவும் சொல்வதற்கில்லை!

ஆனால்..

"தமிழ்மணம் போல திரட்டிகளை உமது சாதீயத்தை வளர்க்க பயன்படுத்த வேண்டாம்!"  என்று சொல்லும் கருத்துரிமை எங்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்க!

Friday, November 16, 2012

டோண்டு ராகவர் சொன்னது சரிதான்! சாதி ஒழியாது!

நம்ம ஐயங்கார்வால் டோண்டு ராகவர், "சாதியை மெனக்கெட்டு ஒழிக்க வேண்டியதில்லை! நீங்க என்னதான் ஒழிச்சாலும் அது ஒழியாது! நம்ம சாதிதான் உயர்சாதினு நெனச்சுண்டு வாழ்ந்தா தப்பே இல்லை!"  என்கிற கருத்தை மையமாக வைத்துப் பதிவெழுதும் போதெல்லாம் எரிச்சல்தான் வரும்! ஆனால் உண்மையில் "தமிழ்நாட்டில் சாதி ஒழியுமா?" என்ற கேள்வி மனதில் தோன்றும், எங்கேயோ இடிக்கும். "ஒழியவே ஒழியாது போல" னு மனசாட்சி  சித்ரவதை செய்யும்.

சமீபத்திய பரமக்குடி குருபூஜை சம்பவம் (இந்த முறை இழப்பு முக்குலத்தோருக்கு என்பதை மனதில் கொள்ளவும்!), இப்போ தர்மபுரி சம்பவம் (இழப்பு தலித்களுக்கு) எல்லாத்தையும் பார்க்கும்போதும், அதைப் பற்றி நம் மக்கள் எதுவும் கிளறாமல் "கள்ள மெளனம்" சாதிப்பதையும் பார்த்தாலே தெரியும், பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் எல்லா "உயர்சாதி இந்துக்களும்" தன் சாதிதான் உயர்சாதி னு பெருமையில்தான் முட்டாள்களாக வாழ்ந்துகொண்டு இருக்காங்க என்று. அதிலும், இன்றும் தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் குறைவாக நினைக்கிறாங்க.  இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம்/சூழ்நிலை வரும்போது, பார்ப்பனர்களைவிட "திராவிட உயர்சாதி ஹிந்துக்கள்தான்" அதிக (முக்கியமாக முக்குலத்தோர், வன்னியர்கள்) சாதிவெறி பிடிச்சவங்க என்பது தெளிவாகத் தெரியுது.

பச்சையா உண்மையை உலக நடப்பை பேசுவோம்..

இன்றைய சூழல்களில், உண்மை நிலவரம் என்ன?  கிராமங்கள், சிறு நகரங்கள் எல்லாவற்றிலுமே பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல், வன்னியர், முக்குலத்தோர்கள், கவுண்டர், வெள்ளாளர், முதலியார், கோணார், நாடார், நாயக்கர், ரெட்டியார் அப்புறம் "விட்டுப்போனவர்கள்"  ஏன் தலித்கள்கூட சாதியை கட்டிப்பிடிச்சுக் கிட்டுத்தான் அழுதுக்கிட்டு இருக்காங்க. அதை எவனும் மறுக்க முடியாது!

தலித்கள் அல்லாத எல்லா சாதிக்காரர்களும் (இவர்கள் என்ன தொழில் செய்தாலும், சுத்தமாக இல்லாவிட்டாலும்) தன்னையும் தன் சாதியை பெருசாவும் உயர்வாகத்தான் நெனச்சுக்கிட்டு சாதித் திமிருடன் இருக்காங்க.

தங்களை, "பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர்கள்" என்றல்லாம் வகைப்படுத்தி  அரசாங்கக் காதிதங்களில் (தேவையான நேரங்களில்) எழுதிக்கிட்டாலும், உண்மையில் தன் சாதியை  உயர்சாதி என்பதுபோல்தான் உயர்வாக நெனச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு சாதிவெறியுடன்தான் உயர்சாதி திராவிட இந்துக்கள் வாழ்றாங்க. அதே நேரத்தில்  ரிசெர்வேஷனை மட்டும் வெகுகவனமாக  தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்றாங்க. இதில் இன்னொரு பரிதாபம் என்னனா ரிசெர்வேஷன் அவர்கள் உயர்வுக்கு  நிச்சயம் தேவை என்பதால், தாழ்த்தப்பட்டவர்களும் அவங்களுடைய  சாதிச்சாயத்தை விட்டு முழுவதும் வெளிவரமுடியாத ஒரு சூழலில் மாட்டிக்கிட்டாங்க. அவர்கள் தேவைக்காக  அவர்களுடைய சாதிச்சாயத்தைவிட்டு அவர்களும் வெளியே வரமுடியாது என்பது கசப்பான உண்மை!

மற்றபடி சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வு ஓரளவுக்கு ஒழிவது எங்கே என்று பார்த்தால்.. நாடுவிட்டு நாடு சென்று செட்டில் ஆனவங்ககிட்டதான்னு சொல்லலாம். அதுவும் வேறு நாட்டில் செட்டில் ஆகி  ஒரு ஜெனெரேசன் ஆன பிறகு அவர்கள் சந்ததியினர் யாரும் சாதி பார்ப்பதில்லை. அங்கே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சாதியை ஊட்டுவது மிக மிகக் கடினம் என்பதும் ஒரு முக்கியக்காரணம். சவுத் ஆஃப்ரிக்கா, ஈழம், வட அமெரிக்கா, கனடா, யு கே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்களுக்கு ரிசர்வேஷனும் கெடையாது, சாதியும் பொதுவாக யாரும் பார்ப்பதில்லை- ஒரு சில லூசுகள் தவிர்த்து.

சரி இப்போ நடக்கிற இந்த சாதி வெறி, அடி தடி சண்டை, தீ வைத்து எரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு???

* பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்கள் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தங்களையும்  தன் சாதியையும் மற்ற சாதிகளை எல்லாம்விட உயர்வாக நினைத்துக்கொள்ளனும்.பிறப்பால் எல்லாரும் சமம்தானே? அவன் உயர்வுனா நீங்களும் அதே அளவு உயர்வுதான்!

* தன்னை சாதி அடிப்படையில் மட்டம் தட்டும் மற்ற சாதிக்காரர்களை இவர்கள் மட்டமாக  நினைத்துக் கொண்டு, தேவையென்றால் சுத்தமாக அந்த மூடர்களிடம் இருந்து நாகரிகமா, சட்ட உதவியுடன் ஒதுங்கிப் போயிடனும். இது கோழைத்தனம் இல்லை! முட்டாள்களைப் பார்த்து ஒதுங்கிப்போவது புத்திசாலித்தனம்.

*  மற்ற கீழ்ப்புத்தி உள்ள உயர்சாதிக்காரனோட அவர்களே விரும்பி வந்தாலும் திருமணம் சம்மந்தம் செய்வது நமக்கு இழுக்கு என்று திடமாக எண்ண வேண்டும். அந்த கருத்தை தன் சாதி சனம், குழந்தைகள் சொந்தக்காரங்க எல்லாரிடமும் எடுத்துச் சொல்லி  அந்த நம்பிக்கையை அவங்க சமூகத்தில்  வித்திட்டு, வளர்த்து, தன்னை உயர்வாக சமுதாயத்தில் ஆக்கிக்கனும். அப்படி இவர்கள் தன்னையும் தன் சாதியையும், தன் சாதி சனங்களையும் உயர்வாக எண்ணி தன் சாதிக்காரவுங்களோடமட்டும் உறவுகள் வைத்துக்கொண்டு, இந்த உயர்சாதி முட்டாள்களிடமிருந்து ஒதுங்கி  சந்தோஷமாக வாழ்வதே இப்போதைக்கு நல்ல முடிவாத் தெரியுது. 

* முக்கியமாக கலப்பு மணத்தை இவர்களே சீரியஸாக புறக்கணிக்கனும். கலப்பு மணம்னு வரும்போதுதானே யார் உயர்ந்த சாதி என்கிற கேள்வியே வருது? அதன் விளைவால்தான் பல பிரச்சினைகள் தலைதூக்குது. இன்று திருமணம் சுமூகமாக முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சாதிப் பிரச்சினை வெடிக்கலாம். அதனால் இவங்களே அதுக்கு வாய்ப்பே கொடுக்கலைனா என்ன பிரச்சினை வரப்போது  சொல்லுங்க? 

என்னுடைய ஆலோசனை கேவலமாக, மட்டமாக இருக்கலாம்.. ஆனால் இதைத்தவிர எனக்கு எதுவும் " practical solution"ஆகத் தெரியவில்லை! 

சும்மா நம்ம பதிவுலகில் சாதியை ஒழிக்கனும், எல்லாரும் சமம்தான் னு கத்துறதுனால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! இந்த உயர்சாதி முண்டங்கள் ஒரு போதும் தன்னைப்போல் மற்றவர்களை மதிக்கக் கத்துக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்!