Monday, March 14, 2016

அருள்! காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்!

வன்னியர் அருள்! உங்களை வன்னியன்னு சொல்லி அழைப்பதில் தவறில்லை! சாதி வெறிபிடிச்சு அலையும் உம்மைப்போல் ஆட்களை சாதி சொல்லிதான் விளிக்கணும். உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?

என்ன? என்ன? அன்புமணி அடுத்த முதல்வராகணுமா?

தமிழ்நாட்டில் வன்னியர்கள் கனிசமாக இருந்தாலும், தமிழ்நாட்டை மைனாரிட்டியான பார்ப்பனர் தொடர்ந்து ஆளமுடியுமே ஒழிய கனிசமாக இருக்கும் "உயர்சாதி" வன்னியரால் ஆள முடியாது. என்ன பிரச்சினை? சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது!  தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான்! முக்கியமாக உம்மைப்போல் வன்னியரின் சாதி வெறியால்தான் வன்னியரல்லாதோர் ஒன்றுகூடி வன்னியரை ஆளவிடாமல் தடுப்பது என்பது இன்னொரு கசப்பான உண்மை!

இப்போ எவன்  சாதியை ஒழிக்கணும்னு வந்து உம்மகிட்ட அழுகிறான்? சாதியைக் கட்டி அழும்! கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியும், ஒழியணும்னு எவன் வந்து உம்மிடம் சொன்னான்னு தெரியலை.

கலப்புத் திருமணத்தால் சாதிவெறி அதிகமாவதைத்தான் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நீரே அதுக்கு ஒரு நல்ல உதாரணம்! இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு? ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும் கலப்புத் திருமணத்தால் சாதி எல்லாம் ஒழியாது. சாதி ஒழியணும் என்பதற்காக எல்லாம் கலப்புத் திருமணம் யாரும் செய்வதில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது அவள் சாதி பார்த்தல்ல! ஆண்-பெண் உறவு  எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டது. இந்தச் சின்ன உண்மையை  உம் மரமண்டையில் ஏற்றும்!

வன்னியரின் வரலாற்றைப் பார்ப்போம்!

ஏன் வன்னியர் யாருமே வேற சாதி பொம்பளைய வச்சிரு(ந்தது)க்கது இல்லையா? அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன? அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா? அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா  என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க? அது மாதிரித்தான், காதலும், அதன்பின் கலப்புக் கல்யாணமும்.

வன்னியர் அருள்! பதிவுலகைவிட்டு நீர் ஒழிந்தால் கொஞசம் இங்கே சாதிவாடை இல்லாமல் இருக்கும். போயி எங்கேயாவது போய் வன்னியர் சாதிச்சங்கம் நடத்துறதைவிட்டுவிட்டு ஏன் இங்கே வந்து ஒளறிக்கிட்டு இருக்கிறீர்னு தெரியலை. போய் தொலைங்கப்பா!

3 comments:

Yarlpavanan said...

உள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு

G.M Balasubramaniam said...

என்ன ஒரு கோபம்...!

மகிழ்நிறை said...

ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்! ** இந்த புரிதலும், இப்படி இதை துணிவாய் கூறிவிடும் தில்லும் தான் வருண் ஸ்பெசல்:)
நலம் தானே வருண்?