Monday, October 6, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 7

சற்று இடைவெளி விட்டு எழுதுவதால் மற்ற இணைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்:
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய நல்ல நண்பருக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை பிடிக்கவில்லை என்று அறிந்துக்கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை, ஒரு விதமான வெறுப்பு!. அவருடைய கோபத்தைப்பார்த்து அந்த எழுத்தாளர் அப்படி என்னத்தான் எழுதுகிறார் என்று பார்க்கும் ஆவல் வந்தது. அவருடைய வலைதளத்தை படித்துப்பார்த்ததில், அவருக்கு வயது குறைவான பெண்களின் மேல் ஆர்வம்(அதில் என்ன பெருமையோ??) அதிகம் போல இருந்தது. 17 வயதில் எல்லாம் கேர்ள் ப்ரெண்ட் வைத்திருக்கிறாராம்(18 வயதுக்கு கீழான பெண்களிடம் பெற்றோர் சம்மதமில்லாத உறவு வைத்திருப்பது தவறில்லையா?).

சரி இந்தியாவில் வயது வரம்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் அப்படித்தான். ஒரு முறை அதைப்பற்றி ஆராய்ச்சி பண்ணியதில், வயது குறைவான பெண்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இனப்பெருக்கத்தின் ஆபத்தான எல்லையில், விளிம்பில் நிற்கும் நடுத்தர வயது ஆண்களுக்கு வயது குறைவான பெண்களைப்பிடிக்கிறதாம். சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species.

நண்பருக்கு இருப்பது மாதிரி அந்த எழுத்தாளர் மீது வெறுப்பெல்லாம் வரவில்லை, ஆனால் ஒரு முக்கியமான கேள்வி மனதை பிசைந்தது. வாரிசு தேவை என்றால் பரவாயில்லை, இந்தக்காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தால் யாருக்குமே அதிகப்படியான வாரிசு தேவை இல்லாதபோது, சம வயது பெண்களை ஏன் காதலிக்க கூடாது? அவர்கள் அழகில்லையா? இப்படியே நடுத்தர வயது பெண்களும் இளவயது ஆண்களை நாடத்துவங்கினால் என்னாவது? பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அழகு என்பது எண்ணத்தில் மற்றும் செயலில் இருக்கிறது, உடலில் அல்ல.

இந்த கருத்தை எழுத ஒரு முக்கியக்காரணம், எழுத்தாளரின் சில கட்டுரைகள்(கதைகள்) என்னை மீண்டும் யூனிவர்ச்சிட்டி வகுப்பறையில் கொண்டு வந்து நிறுத்தியது. அந்தக் குறிப்பிட்ட பேராசிரியருக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும். அவர் வகுப்புக்கே போக வெறுப்பாக இருக்கும்! கம்ப்யூட்டர் லாப்பில் நடக்கும் வகுப்பு என்பதால், சந்தேகம் சொல்லிக்கொடுக்கிறேன் பேர்விழி என்று அளவுக்கு அதிகமாக உரசுவார். "நீங்க வேண்டுமானால் உட்கார்ந்து சொல்லிகொடுங்கள், நான் எழுந்து நிற்கிறேன்" என்றால் அதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டார், நான் உட்கார வேண்டும் அவர் என்னை உரசியப்படி நின்றுக்கொண்டே சொல்லித்தர வேண்டும், இல்லை என்றால் அவருக்கு உயிரே போய்விடும்!. மற்ற பெண்களிடமும் இதே மாதிரி சில்மிஷம் செய்தாலும், அவருக்கு இந்தியப்பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போல, நான் பயந்துக்கொண்டு சந்தேகமே கேட்காமல் இருந்தாலும் அவர் 15 நிமிடமாவது எனக்கு சொல்லித்தராமல்(உரசாமல்) இருந்ததில்லை.

இந்தியாவில், பஸ் கூட்டத்தில் இது போன்ற பொறுக்கிகள் தொல்லைப்படுத்திய அனுபவம் இருந்தாலும், ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியரிடம் இருந்து இத்தகைய பொறுக்கித்தனத்தை(மன்னிக்கவும், இந்த கேவலமான செயலை குறிப்பிடுவதற்கு வேறெந்த வார்த்தையும் எனக்கு தெரியவில்லை) நான் எதிர்ப்பார்க்கவில்லை, உடலெல்லாம் பற்றி எரிவது போல அருவருப்பாக இருக்கும். நீங்கள் பெண்ணாக இல்லாத பட்சத்தில் இதை அனுபவப்பூர்வமாக உணர முடியாது என்று நினைக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி, பெண்களுக்கும் காமம் பிடிக்கும் என்றாலும், அது இயல்பாக ஒரு பூ மலருவது போல மனதுக்கு பிடித்திருந்தால் தான் இனிக்கும். இப்படி வற்புறுத்தலாலும், கட்டாயத்தாலும் காமம் வரவே வராது! மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் கணவன் - மனைவி உறவாக இருந்தால் கூட பெண்கள் வெறுத்துவிடுவார்கள். இதை தான் கற்பு என்று குறிப்பிட்டார்களா என்று தெரியாது, ஆனால் எனக்கு அப்படி அழைக்க பிடிப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு preference or personal choice.

செமஸ்டர் முடிய 2 மாதங்களே இருக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆசிரியர் டெஸ்பெரேடாக துவங்கினார். உரசல்கள் எல்லை மீறல்களாக மாறத்துவங்கியது, சக மாணவர்களின் நமட்டுச்சிரிப்பு வேறு! ஒரு மாணவர் வேண்டுமென்றே தன் நண்பரிடம் என் காதில் விழுவது மாதிரி கிண்டலடிக்க துவங்கினார். "ஏதுவுமே படிக்கவில்லை என்றாலும் பாடத்தில் 'A' வாங்குவது எப்படி என்பதை இந்த வகுப்பில் இருந்து தெரிந்துக்கொண்டேன், துரதிஷ்டவசமாக நம்மிடம் சில 'உறுப்புகள்' இல்லை என்பதால் அந்த ஐடியாக்களை செயல்படுத்த முடியாது"

ரொம்ப வருத்தமாக இருந்தது, எவனோ ஏதோ உளறினான் என்பதற்காக மட்டுமில்லை, நிஜமாகவே கஷ்டப்பட்டு இரவும் பகலும் படிக்கும் என்னை ரொம்ப அவமானப்படுத்துவது போல இருந்தது. அடுத்த முறை வகுப்பில் திரும்பவும் அதே ஆசிரியர், அதே வரம்பு மீறல். இந்த முறை வழக்கம் போல அமைதியாக இருக்கவில்லை, மெதுவான ஆனால் உறுதியான குரலில் "கொஞ்சம் என் உடலில் இருந்து கையை எடுக்கறீர்களா, ப்ளீஸ்?" வகுப்பறையில் கனத்த மெளனம், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் முகம் வெளிறியது, வெள்ளைக்காரர் என்பதால் முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. தடுமாற்றத்துடன், "என்ன சொல்கிறாய் நீ?" என்றார். நான் திரும்பவும் நிதானமாக, அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து, "என் உடலில் இருந்து கையை எடுக்கிறீர்களா என்றேன்"

அன்று மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு. அதற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பேராசிரியர் என்னிடம் வம்பு பண்ணவில்லை, தூரத்தில் இருந்தே உக்கிரமாக முறைப்பார். அவர் முறைத்தலை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை, நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை. செம்ஸ்டர் முடிவில் என்னுடைய Final project-டுக்கு 'B' கொடுத்திருந்தார். அந்த வகுப்பு ஒரு Easy 'A' வகுப்பு, அதாவது சுலபமாக நல்ல மதிப்பெண்கள் வாங்கக்கூடிய வகுப்பு(அந்த பாடத்தை முக்கியமாக தேர்வு செய்த காரணமே அது தான்). ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றுபவரை கேள்வி கேட்பது கடினம், நிச்சயமாக எனக்கு குறைவான மதிப்பெண் கொடுத்ததற்கான காரணத்தை அவரால் சுலபமாக ஜோடிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை, எனக்கு புது நம்பிக்கையும், தைரியமும் பிறந்தது. "எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்னம்பிக்கை. அந்த உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!

- நினைவுகள் தொடரும்

121 comments:

மொக்கைச்சாமி said...

நல்ல பதிவு... தெளிவான எழுத்து நடை... பாராட்டுக்கள்...

ஸ்ரீதர்கண்ணன் said...

Super..

அது சரி said...

மீ த தேர்டு :0)

கயல்விழி said...

//நல்ல பதிவு... தெளிவான எழுத்து நடை... பாராட்டுக்கள்...//

நன்றி மொக்கைச்சாமி(உங்க பேர் காமெடியா இருக்கு :) :))

கயல்விழி said...

//Super..//

நன்றி ஸ்ரீதர்கண்ணன். முதன் முறையாக வருகை தந்ததற்கு நன்றி!

கயல்விழி said...

//மீ த தேர்டு :0)//

வாங்க அதுசரி, நம்பினால் நம்புங்கள் இப்போது தான் உங்களுடைய விக்ரமாதித்யன் கதையை படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அது சரி said...

//
சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய நல்ல நண்பருக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை பிடிக்கவில்லை என்று அறிந்துக்கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை, ஒரு விதமான வெறுப்பு!. அவருடைய கோபத்தைப்பார்த்து அந்த எழுத்தாளர் அப்படி என்னத்தான் எழுதுகிறார் என்று பார்க்கும் ஆவல் வந்தது. அவருடைய வலைதளத்தை படித்துப்பார்த்ததில், அவருக்கு வயது குறைவான பெண்களின் மேல் ஆர்வம்(அதில் என்ன பெருமையோ??) அதிகம் போல இருந்தது. 17 வயதில் எல்லாம் கேர்ள் ப்ரெண்ட் வைத்திருக்கிறாராம்(18 வயதுக்கு கீழான பெண்களிடம் பெற்றோர் சம்மதமில்லாத உறவு வைத்திருப்பது தவறில்லையா?).
//

நீங்கள் சொல்லும் எழுத்தாளர் யார் என்று தெரிகிறது... உண்மையில் எனக்கும் அவரை தெரியும்..(சரி சரி, ரொம்ப பேருக்கு அவரை தெரியும், ஆனா, அவருக்கும் என்னை தெரியும்)

நீங்கள் திட்டினாலும் சரி, ஆண்களுக்கு பெண்களை பிடிக்கும், அதில் நானும் சேர்த்தி. ஆனால், நீங்கள் சொல்வது போல் அதை பெருமையாக, பல வாரங்களாக எழுத வேண்டிய அவசியம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. என்னுடைய 11 வயதில், "எனக்கும் கேர்ள் ஃபிரண்ட் இருக்குடா"ன்னு நானும் பெருமையாக் சொல்லிக்கொண்டிருந்தவன் தான்.. ஆனால், இருபத்தொன்பது வயதில் சொல்ல முடியாது.. அவர் இந்த வயதில் இதை பெருமையாக வலை தளத்தில் ஃபோட்டோவுடன் போட வேண்டியதின் அவசியம் என்னவென்று எனக்கும் புரியவில்லை.

//
சரி இந்தியாவில் வயது வரம்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் அப்படித்தான். ஒரு முறை அதைப்பற்றி ஆராய்ச்சி பண்ணியதில், வயது குறைவான பெண்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இனப்பெருக்கத்தின் ஆபத்தான எல்லையில், விளிம்பில் நிற்கும் நடுத்தர வயது ஆண்களுக்கு வயது குறைவான பெண்களைப்பிடிக்கிறதாம். சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species.
//

இதெல்லாம் டுபாக்கூரு. எந்த ஆணுக்கும் (ஏன் பெண்ணுக்கும்) தனக்கு வயதாகிவிட்டது என ஒப்புக்கொள்ள தைரியமில்லை. அதை ஈடு கட்ட செய்வதே இதெல்லாம். இதற்கு ஆராய்ச்சி அது இது என்று செய்வத் எல்லாம் சப்பைக்கட்டு. என்.டி.ஆர் எழுபது வயதில் சிவ பார்வதியை மண ந்தது என்ன மனித குலத்தின் நன்மைக்காகவா??

//
நண்பருக்கு இருப்பது மாதிரி அந்த எழுத்தாளர் மீது வெறுப்பெல்லாம் வரவில்லை
//
அவ‌ரு எழுத‌ற‌தை வ‌ச்சி பார்த்தா, அவ‌ருக்கு இது போதுமே? ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுவாரே?

//
வாரிசு தேவை என்றால் பரவாயில்லை, இந்தக்காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தால் யாருக்குமே அதிகப்படியான வாரிசு தேவை இல்லாதபோது, சம வயது பெண்களை ஏன் காதலிக்க கூடாது? அவர்கள் அழகில்லையா? இப்படியே நடுத்தர வயது பெண்களும் இளவயது ஆண்களை நாடத்துவங்கினால் என்னாவது? பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அழகு என்பது எண்ணத்தில் மற்றும் செயலில் இருக்கிறது, உடலில் அல்ல.
//

அதே. ஆனா எல்லாம் டுபாக்கூரா இருக்கும்போது இப்பிடிதான்!

அந்த‌ எழுத்தாள‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லையில்லை. அது அவ‌ர் பிர‌ச்சினை, காத‌லிக்கும் பெண்ணின் பிர‌ச்சினை... அதைப்ப‌ற்றி நான் என்ன‌ சொல்ல‌ முடியும்?? த‌விர‌, த‌ன் வ‌ய‌து ஒத்த‌ பெண்ணை தான் காத‌லிக்க‌ வேண்டும் என்றும் சொல்ல‌ முடியாது.... யாருக்கு யார் மீது காத‌ல் என்று எப்ப‌டி வ‌ரைய‌றை செய்வ‌து?? எழுத்தாள‌ரின் க‌தை போன்ற‌ ஆனால் உல்டா ஆன‌ ஒரு க‌தை என‌க்கு தெரியும்...(சீக்கிர‌ம் எழுத‌ப்போறேன்!)

அதெல்லாம் விடுங்க‌... அடிக்க‌டி காணாப்போறீங்க‌..அப்புற‌ம் இப்பிடி ஒரு வெடிகுண்டோட‌ வ‌ர்றீங்க‌..அப்ப‌ப்ப‌ ப‌த்த‌ வ‌ச்சிர்றீங்க‌ளே?

கயல்விழி said...

//நீங்கள் திட்டினாலும் சரி, ஆண்களுக்கு பெண்களை பிடிக்கும், அதில் நானும் சேர்த்தி. ஆனால், நீங்கள் சொல்வது போல் அதை பெருமையாக, பல வாரங்களாக எழுத வேண்டிய அவசியம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. என்னுடைய 11 வயதில், "எனக்கும் கேர்ள் ஃபிரண்ட் இருக்குடா"ன்னு நானும் பெருமையாக் சொல்லிக்கொண்டிருந்தவன் தான்.. ஆனால், இருபத்தொன்பது வயதில் சொல்ல முடியாது.. அவர் இந்த வயதில் இதை பெருமையாக வலை தளத்தில் ஃபோட்டோவுடன் போட வேண்டியதின் அவசியம் என்னவென்று எனக்கும் புரியவில்லை.
//

அது சரி,

ஆண்களுக்கு பெண்களைப்பிடிப்பதில் எனக்கென்ன பிரச்சினை இருக்கப்போகிறது? அவர் குறிப்பிடும் பெண் வயது வரம்புக்கு கீழே இருப்பது தான் எனக்கு பிரச்சினை. இது சட்டப்படி தவறில்லையா?

கயல்விழி said...
This comment has been removed by the author.
கயல்விழி said...

//இதெல்லாம் டுபாக்கூரு. எந்த ஆணுக்கும் (ஏன் பெண்ணுக்கும்) தனக்கு வயதாகிவிட்டது என ஒப்புக்கொள்ள தைரியமில்லை. அதை ஈடு கட்ட செய்வதே இதெல்லாம். இதற்கு ஆராய்ச்சி அது இது என்று செய்வத் எல்லாம் சப்பைக்கட்டு. என்.டி.ஆர் எழுபது வயதில் சிவ பார்வதியை மண ந்தது என்ன மனித குலத்தின் நன்மைக்காகவா??
//

மனித குல நன்மைக்காக என்று இல்லை அதுசரி, மனிதர்களுக்கு தங்களுடைய வாரிசை முடிந்தவரையில் பரப்பும் ஆர்வம் செல்லுலர் அளவில் உண்டு, முக்கியமாக ஆண்களுக்கு. இதை என் சொந்தக்கருத்து இல்லை, ஒரு மனவியல் புத்தகத்தில் படித்தேன்.

கயல்விழி said...

//அவ‌ரு எழுத‌ற‌தை வ‌ச்சி பார்த்தா, அவ‌ருக்கு இது போதுமே? ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுவாரே?//

வெறுப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை. சுலபமாக ஒருவரை(எழுத்தை வைத்து மட்டும்) வெறுப்பது சரியானதாக எனக்கு தோன்றவில்லை :)

கயல்விழி said...

//த‌விர‌, த‌ன் வ‌ய‌து ஒத்த‌ பெண்ணை தான் காத‌லிக்க‌ வேண்டும் என்றும் சொல்ல‌ முடியாது//

நிஜம் தான், இயற்கையாக வயது சம்மந்தமில்லாத காதல் வருவதில் தவறில்லை. ஆனால் வேண்டுமென்றே தேடிப்போய் அதிக வயது வித்யாசத்துடன் ஒரு பெண் தேடுவது தான் தவறாக தோன்றுகிறது.

அது சரி said...

//

அது சரி,

ஆண்களுக்கு பெண்களைப்பிடிப்பதில் எனக்கென்ன பிரச்சினை இருக்கப்போகிறது? அவர் குறிப்பிடும் பெண் வயது வரம்புக்கு கீழே இருப்பது தான் எனக்கு பிரச்சினை. இது சட்டப்படி தவறில்லையா?

//

ச‌ட்ட‌ப்ப‌டி த‌வ‌று தான்.. ஆனால் ச‌ட்ட‌ப்ப‌டி தான் எல்லாம் ந‌ட‌க்கிற‌து என்று சொல்ல‌ முடியாது, குறிப்பாக‌ காத‌ல் என்ப‌து ச‌ட்ட‌ம் பார்த்து வ‌ருவ‌தில்லை, பெரும்பாலும் ச‌ட்ட‌த்தை உடைக்க‌வே சில‌ காத‌ல்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌.

நிற்க‌. நான் ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ய‌து குறைந்த‌ பெண்க‌ளுட‌ன்/ஆண்க‌ளுட‌னான‌ காத‌லை ஆத‌ரிக்க‌வில்லை. பெரும்பாலும் என்ன‌ செய்கிறோம் என்று தெளிவில்லாத‌ வ‌ய‌து அது (எங்க‌ளுக்கு எல்லாம் தெரியும் என்று நானும் சொன்ன‌வ‌ன் தான்..). அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு பிடித்திருந்தாலும் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் என‌க்கு அதில் உட‌ன்பாடில்லை.... அப்ப‌டி இருக்க‌, வெப் சைட்டில் விள‌ம்ப‌ர‌ம் செய்வ‌து எல்லாம் மிக‌ அதிக‌ப்ப‌டி என்று தான் என‌க்கும் தோன்றிய‌து.

கயல்விழி said...

அதுசரி,

நீங்கள் மேலே சொல்லி இருக்கும் காரணம் தான் என்னுடைய பிரச்சினையும். இதை ஒரு விளம்பரம்/சாதனை போல குறிப்பிடாமல் என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை.

பி.கு: 17 வயதில் இருந்த எனக்கும் இப்போது இருக்கும் எனக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம், மெச்சூரிட்டியில் தான்.

அது சரி said...

//
கயல்விழி said...

மனித குல நன்மைக்காக என்று இல்லை அதுசரி, மனிதர்களுக்கு தங்களுடைய வாரிசை முடிந்தவரையில் பரப்பும் ஆர்வம் செல்லுலர் அளவில் உண்டு, முக்கியமாக ஆண்களுக்கு. இதை என் சொந்தக்கருத்து இல்லை, ஒரு மனவியல் புத்தகத்தில் படித்தேன்.

//

அது ம‌ன‌விய‌ல் ஆய்வு என்ப‌தே என‌க்கு ச‌ந்தேக‌ம். ஜீன்க‌ள்/செல் குறித்து ஆராய்வ‌து ம‌ன‌விய‌ல் ஆய்வாக‌ இருக்க‌ முடியுமா? வேண்டுமானால் உட‌ற்கூறு ரீதியான‌ ஆய்வு என‌ சொல்ல‌லாம்...

ஆனால் வ‌ய‌தான‌ ஆண்க‌ள் இள‌ம் பெண்க‌ளையும் (and Vice-Versa) ச‌மூக‌விய‌ல், வ‌ர‌லாற்று ரீதியான‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு. அது குடும்ப‌ம் என்ற‌ அமைப்பின் அடிப்ப‌டை நோக்க‌ம், த‌ச‌ர‌த‌னுக்கு ப‌த்தாயிர‌ம் ம‌னைவிக‌ள், ஆஃப்ரிக்காவில் ஒரு நாட்டில் இன்ன‌மும் ஒரு அர‌ச‌ருக்கு 60 ம‌னைவிக‌ள்...போன்ற‌வ‌ற்றை ஆராய்வ‌தாக‌ முடியும்... என‌க்கு தெரிந்த‌வ‌ரை, ப‌ல‌ ஆண்க‌ள் வ‌ய‌து குறைந்த‌ பெண்க‌ளை காத‌லிப்ப‌த‌ற்கு த‌ங்க‌ள‌து இள‌மையை நிரூபிக்கும் உத்தி என்றே ப‌டுகிறது (மைக்கேல் டக்ளஸ் ஸீட்டா ஜோன்ஸ் போல்).. சில‌ருக்கு விள‌ம்ப‌ர‌ம்..Trophy Girlfriend...

குறிப்பிட்ட‌ எழுத்தாள‌ரை பொறுத்த‌வ‌ரை, தான் சீனி கும் அமிதாப்ப‌ச்ச‌னையும் விஞ்சி விட்ட‌தாக‌ எழுதியிருந்தார்... அதில் அமிதாப் 70‍ த‌பு 35. நானோ 60 அவ‌ளோ 17... இது அவ‌ர் எழுதிய‌து..

இத‌ன் அடிப்ப‌டை உள‌விய‌ல் என‌க்கு அவ்வ‌ள‌வாக‌ தெரிய‌வில்லை. (ம்ம்க்கும், இதுக்கு தான் சிக்ம‌ண்ட் ஃப்ராய்டை ஒழுங்கா ப‌டிக்க‌ணும்கிற‌து.. நான் பிட் அடிச்சி பாஸ் பண்ணேனா, அதனால இப்பிடி...)

அது சரி said...

//
கயல்விழி said...
//மீ த தேர்டு :0)//

வாங்க அதுசரி, நம்பினால் நம்புங்கள் இப்போது தான் உங்களுடைய விக்ரமாதித்யன் கதையை படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

//

வாங்க வாங்க... நம்ம கடைக்கும் யார்னா வந்தா வேணாம்னா சொல்லப்போறேன்? :0)

கயல்விழி said...

அதுசரி,

நீங்கள் அடிப்படை உளவியலில் தவறு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இதுவரை தவறென்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்(நான் கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துக்கள்).

ஆனால் சிக்மண்ட் -ப்ராயிட்டின் தியரிகள் சில தவறு என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணமாக பெண்களுக்கு இருப்பதாக சொல்லப்படும் "ஆண் பாலுறுப்பைக்குறித்த பொறாமை" தவறு. பெண்களுக்கு அப்படிப்பட்ட காம்ப்ளெக்ஸ் எல்லாம் இருப்பதில்லை.

எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஒடிபஸ் காம்ப்லெக்ஸ் போன்ற தியரிகளும் சர்ச்சைக்குரிய தியரிகள் தான்.

கயல்விழி said...

//வாங்க வாங்க... நம்ம கடைக்கும் யார்னா வந்தா வேணாம்னா சொல்லப்போறேன்?//

வந்தாச்சு, கருத்தும் எழுதியாச்சு ;)

SurveySan said...

//"எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்நம்பிக்கை. அதை உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!
//

good one.

துளசி கோபால் said...

எங்கே ரொம்பநாளாக் காணோம்?

இங்கே அண்டர் ஏஜ் பெண்குழந்தைகளை( அப்படித்தானே சொல்லணும்) உறவுக்கு அழைத்தாலே 'உள்ளே' பிடிச்சுப் போட்டுருவாங்க.

நோ பெயில்!

தமிழ் அமுதன் said...

ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ம்ம்ம்.... கேக்க நல்லாத்தான் இருக்கு ....

குடுகுடுப்பை said...

எல்லாரும் சொல்றத நானும் சொல்லிக்கறேன்.நல்லா இருக்கு.
ஆனா அது சரி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு.வயசாயிடுச்சு அவருக்கு பாவம் விட்டுருவோம்

Anonymous said...

பேருந்து பயணமென்றாலே வெறுக்கும் அளவிற்கு இதுப் போன்ற அத்துமீறிய உரசல்கள் என்னையும் பாதித்துள்ளது.... ஆனாலும் துணிச்சலாய் எதிர்க்க முடியவல்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு.

//"எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்நம்பிக்கை//

இந்த வரிகளும் தங்களின் அனுபவமும் எனக்குள்ளும் தன்னம்பிக்கையை விதைத்துள்ளது!!!

புருனோ Bruno said...

//ஆனால் சிக்மண்ட் -ப்ராயிட்டின் தியரிகள் சில தவறு என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணமாக பெண்களுக்கு இருப்பதாக சொல்லப்படும் "ஆண் பாலுறுப்பைக்குறித்த பொறாமை" தவறு. பெண்களுக்கு அப்படிப்பட்ட காம்ப்ளெக்ஸ் எல்லாம் இருப்பதில்லை.

எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஒடிபஸ் காம்ப்லெக்ஸ் போன்ற தியரிகளும் சர்ச்சைக்குரிய தியரிகள் தான்.//

சுட்டி தர முடியுமா :)

மொக்கைச்சாமி said...

//நன்றி மொக்கைச்சாமி(உங்க பேர் காமெடியா இருக்கு :) //
என் பதிவும் கொஞ்சம் காமெடியாதான் இருக்கும். ஆனா இப்போ தான் ஒரு சீரியஸ் பதிவு போட்டிருக்கேன். படிச்சிட்டு கருத்து எதாவது இருந்தா சொல்லுங்க. (தமிழ்மணத்துல இணக்க முடியல என்னன்னு தெரியல)

கயல்விழி said...

வாங்க சர்வேசன், நன்றி :)

கயல்விழி said...

வணக்கம் துளசி டீச்சர்

இப்போதெல்லாம் பணி இடத்தில் வேலை எல்லாம் செய்ய சொல்றாங்க, என்ன அநியாயம் பாருங்க! :(

கயல்விழி said...

//ம்ம்ம்.... கேக்க நல்லாத்தான் இருக்கு//

இல்லை நடைமுறைக்கு ஒத்துவரும் விஷயம் தான்.ரிச்சர்ட் கியர், மைகெல் டக்ள்ஸ் எல்லாம் பெண்களிடையே இந்த வயதிலும் பாப்புலர்.

கயல்விழி said...

//எல்லாரும் சொல்றத நானும் சொல்லிக்கறேன்.நல்லா இருக்கு.
ஆனா அது சரி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு.வயசாயிடுச்சு அவருக்கு பாவம் விட்டுருவோம்

//

நன்றி குடுகுடுப்பை, யாருக்கு வயசாயிடுச்சு?

கயல்விழி said...

//இந்த வரிகளும் தங்களின் அனுபவமும் எனக்குள்ளும் தன்னம்பிக்கையை விதைத்துள்ளது!!!
//

ரொம்ப மகிழ்ச்சி புனிதா. நான் எழுதியதின் பயன் கிடைத்துவ்விட்டது என்று நினைக்கிறேன். பாலியல் வன்முறையை ஒவ்வொரு பெண்ணும் கடுமையாக எதிர்ப்பது அவசியம்.

கயல்விழி said...

வாங்க மருத்துவர் புரூனோ. இந்த சுட்டியை சென்று பார்க்கவும்.
http://psychology.about.com/od/sigmundfreud/p/freud_women.htm

அதுக்காக சிக்மண்ட் ப்ராயிட்டின் எல்லா தியரிகளையும் ஒதுக்கி விட முடியாது. ஆனால் பெண்களைப்பற்றி மிகத்தவறான புரிதலைக்கொண்டிருந்தார் என்பது உண்மை.

கயல்விழி said...

வந்து பார்க்கிறேன் மொக்கைச்சாமி :)

ஜோசப் பால்ராஜ் said...

எல்லாம் புரியுது கயல். அவரு ஒரு நல்ல எழுத்தாளர் ஆனா இந்த ஒரு விசயம் தான் எனக்கு புரிய மாட்டேங்குது, ஏன் இப்படி பொண்ணுங்களப்பத்தி இவ்ளோ எழுதுறாருன்னு? அதுவும் அவர் கூட நெருங்கிய நண்பராக பழகும் பெண்களைப் பற்றிக்கூட அப்படி எழுதுறாரு.

எனக்கு ஒரு சந்தேகம். நீங்க அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீங்களா? சந்தோஷமா இருக்கீங்களா இல்லையான்னு ? அந்த கடிதம் நீங்க எழுதியது தானா? நான் அதப் படிச்சப்பவே நீங்களாத்தான் இருக்கும்னு நினைச்சேன். நிறைய வெளிப்படையா பின்னூட்டத்துல சொல்ல முடியல.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்லப் பதிவு எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். (உங்களுக்கு நான் பின்னூட்டம் தட்டச்சு செஞ்சுக்கிட்டு இருக்கப்ப என் பதிவுக்கு உங்க பின்னூட்டம் வந்ததுச்சு!!!)

கயல்விழி said...

வாங்க ஜோசப், நன்றி :)உங்களை மாதிரி ஆழ்ந்த அரசியல்/சமூக கட்டுரை எழுதவேண்டும் என்ற ஆவல் உண்டு, ஆனால் அத்தனை தெளிவாக சிந்திப்பது எனக்கு கடினம்.

அந்த குறிப்பிட்ட கடிதத்தை நானும் படித்து கொஞ்சம் அதிர்ந்தேன். நிச்சயமாக நான் எழுதியது கிடையாது, வேறு ஏதாவது கயலாக இருக்கலாம்.

வெண்பூ said...

நல்ல பதிவு கயல். அருமையான நடை.

எனக்கென்னவோ அந்த எழுத்தாளர் வெத்து பந்தா என்று தோன்றுகிறது. என் நண்பர்கள் சிலரும் அதேதான் நினைக்கிறார்கள். அடுத்தவர் தன்னைப் பற்றியே பேச வேண்டும், பொறாமைப்படவேண்டும் என்ற சீப்பான எண்ணத்தால் தன்னால் முடியாததை, செய்யாததை எல்லாம் செய்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அந்த ஆளைப் பொறுத்தவரை, ஆண்கள் என்றால் பணம், பெண்கள் என்றால் ****.. அவரைப் பற்றியெல்லாம் பேசி, எழுதி, விவாதித்து பெரிய ஆளாக்க வேண்டாம். அவரது எழுத்துக்கள் நன்றாக இருக்கிறதென்றால் அதை ரசிக்கலாம். அவரை அல்ல. திரையில் தோன்றும் ரஜினிக்கும் ஒரிஜினல் ரஜினிக்கும் வித்தியாசப்படுத்த முடியாததால் வந்த பிரச்சினைகளை நாம் பார்க்கவில்லையா...

கயல்விழி said...

நன்றி வெண்பூ.

இதுவரை இந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களைப்பற்றிய செய்திகளை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை. அதனால் தான் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக 'ஒரு எழுத்தாளர்' என்று குறிப்பிட்டேன் :)

மோகன் said...

நல்லா எழுதியிருக்கீங்க கயல்...
A grade வாங்கனும்னா அந்த ப்ரொபசர் A'தனமான Aக்கிரமங்களை Aனுமதிக்கனுமா...Aன்னமோ போங்க...

கயல்விழி said...

வருக மோகன், மிக்க நன்றி :)

Anonymous said...

எல்லா பகுதியையும் படித்துவிட்டேன்... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் :-)

manikandan said...

சாரு நிவேதிதா கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க நீங்க ? அவர் எழுதறத ஜாலியா படிச்சுட்டு போக வேண்டியது தான ? 18 வயசு ஆயிடுச்சுனா பெண்களுக்கு maturity வந்துடுமா ? 17 வயசு 360 நாள்ல வராத maturity அஞ்சி நாள்'ல வந்துடுமா ? இல்லாட்டி கதை எழுதற எல்லாருக்கும் சமுதாய பொறுப்புணர்வு (சமுதாயம் சொல்ற) இருந்தே ஆகணுமா ? கதை எழுதற போது 19 வயசுன்னு எழுதறதுக்கும் 17 க்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு உங்களுக்கு புரியலையா ? கதை படிச்சமா, டைம் ஸ்பென்ட் பண்ணினமா, அதோட விட்டுட்டு அடுத்த வேலைய பாக்க வேண்டியது தான ?

"பர காயப் பிரவேசம்", "ஜீவன் ப்ரவேஸ வைராக்ய பூஜை", "கூடு விட்டு கூடு பாஞ்சி பொண்ணோட புருஷன் உடம்புல புகுந்துக்கறது" இத பத்தியெல்லாம் எழுதப்படற சிறுகதைக்கும் 17 வயசு பொண்ணு பத்தி எழுதற கதைக்கும் என்ன பெரிய வித்யாசம். எல்லாம் கதை தான் அப்படின்னு புரிஞ்சிக்க கூட தெரியாத மூளை கெட்டவங்களா நாம் ?

சாரு நிவேதிதாவோட குட்டி கதைகள் ஒரு முப்பது படிச்சுட்டா அதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். நான் சின்ன வயசுல வாரமலர் துணுக்கு மூட்டை கூட ஆசையா படிப்பேன். அதுனால அது எல்லாம் உண்மைன்னு நம்பர அளவுக்கு நான் பைத்தியம் இல்லை. ஆனாலும் அத படிகரதுல வர்ற ஆர்வம் தனி தான். அத எழுதின பொன்னையா மேல எனக்கு ஒரு கருமாந்திர பீலிங்க்ஸ்ம் வந்தது இல்ல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்றைய தன்னம்பிக்கை இன்று உங்கள் எழுதில் அப்படியே ப்ரதிபலிக்கிறது.

தைரியமான தெளிவான எழுத்து நடை.

தொடருங்கள் ப்ளீஸ்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்ன 0 டிகிரிக்குப் போட்டி போடும் உத்தேசம் ஏதும் இருக்கிறதா என்ன?

கிரன் பேடி வாட் வென்ட் ராங் என்ற ஒரு புத்தகம் எழுதி இருப்பார்,படித்திருக்கிறீர்களா?

என்னால் முழுதும் படிக்க இயலவில்லை.

எழுத்து மனிதனை ஆக்கப் படுத்த வேண்டும் இல்லையா?நம்மைச் சுற்றி நடக்கும் விதயங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதினாலும் அவலங்கள் சோர்வையும் சூழல் பற்றிய பயங்களை வளர்க்கும் என்று அறிகிறீர்களா?

M.Rishan Shareef said...

மிகச்சரியானதைத்தான் செய்திருக்கிறீர்கள் கயல்விழி.
இன்னுமொரு இந்தியப்பெண்ணிடம் சில்மிஷம் செய்யும்போது அப் பேராசிரியருக்கு உங்கள் நடவடிக்கை ஒரு கணம் மனதில் வந்தால் கூடப் போதுமானது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் 6 பாகம், 6ஆவது பாகம் என்னால் ஜீரனிக்கவே முடியவில்லை.

ஆனால் இதே போன்ற அனுபவம் என் பள்ளிக்கால தோழிக்கு நடந்து இருக்கிறது.

ஆனால் அந்த "ஆள்" அவளின் அப்பா இல்லை. அவளின் அப்பா வேறு. இந்த ஆள் வெறும்
இன்ஷியல் அப்பா.

ஸ்கூல் படிக்கும் போது தினம், தினம் ஏதாவது ஒரு கதை சொல்வாள். எனக்கு அந்த ஆளை விடவும் அவளின் அம்மா வின் மீதுதான் வெறுப்பு வரும்.

அவளுக்கு ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போகவே பிடிக்காது.

தினமும் 21/2 மணிக்கு ஸ்கூல் விடுவார்கள். ஆனால் அவள் என்னை ஸ்கூலில் அவளோடு இருக்க வைத்து 31/2 மணிக்குதான் கிளம்புவோம். ஒரு நாள் நான் எங்க வீட்டுல திட்டுவாங்க. வா கிளம்பலாம் என்று கொஞ்சம் முகம் மாற்றி சொல்லிவிட்டேன். அப்போது அவள் எப்படி அழுதால் என்று எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அழுதுகொன்டே காரணம் சொன்னாள். அது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போகும் நேரம் தான் அவளின் அம்மா, அப்பா (ஆல்) ஒன்றாய் இருக்கும் நேரமாம். இவள் போனால் கூட அவர்கள் கதவை திறக்கமாட்டங்களாம். வெளியே நின்றுகொன்டிருந்து எப்பொது அவர்கள் கதவை திறக்கிறார்களோ அப்பொதுதான்
உள்ளே போவாளாம்.

இது போல் இன்னும் நிறைய. " கயல் " போல் எனக்கு எழுத தைரியம் இல்லை.

முடிவாக

அவள் இப்பொது 2 குழந்தையின் தாய். ஆனால் 2-வது மனைவி. காரணம்: அம்மாவும், அந்த ஆளும். (பிசாசுகளுக்கு பேயே தேவலை என்று தானே விரும்பி தெரிந்தே கல்யாணம் செய்து கொண்டாள். அவளின் கணவர் வேறு யாரும் இல்லை. அவர்களின் "குடும்ப (!)" நண்பர். அவருக்கும் இவளுக்கும் வயது வித்யாசம் குறைந்த பட்சம் 20 இருக்கும்.

கயல் இந்த உங்களின் பதிவை தொடர்ந்து எழுதுங்கள். (எனது பள்ளிக்கால நினைவலைகளை உங்களின் இந்த பதிவுதான் எழுத தூண்டியது.)

SK said...

வாங்க கயல்.

நீங்க செஞ்சது மிகச்சரி. இனி அவரு இந்திய பொண்ணுங்க இல்லை எந்த நாட்டு பொண்ணுங்க கிட்டயும் அது போல செய்ய கூடாது. 'Professional Ethics' ரொம்ப முக்கியம் அதுவும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும்.

நம்ம நாட்டுல பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் மெச்சுரிட்டி அப்படிங்கறது கம்மியாவே இருக்கு. சில விஷயங்களை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம தவிக்கறாங்க. அதுவும் பெண்களுக்கு பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு. ஆண்களுக்கு பிரச்சனை குறைவு அப்படிங்கறதால அவுங்களுக்கு மெச்சுரிட்டி வர ரொம்ப தாமதம் ஆகுது. அதுனாலே திருமண ஆனா அப்பறம் ரொம்ப கஷ்ட படுறாங்க.



எழுத்தாளர் பத்தி நான் சொல்ல ஒன்னும் இல்லை. அவர் 'எழுத்துலக சூப்பர் ஸ்டார்'ஆம். எனக்கு என் பேரையே முழுசா சரியா எழுத தெரியாது.

முடிஞ்சா வரைக்கும் நீண்ட இடைவெளி இல்லாம எழுத முயற்சி பண்ணுங்க. நிச்சயமா உங்களுக்கு நேரம் இருக்கும் போது மட்டுமே.

வருண் said...

***அவனும் அவளும் said...
சாரு நிவேதிதா கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க நீங்க ? அவர் எழுதறத ஜாலியா படிச்சுட்டு போக வேண்டியது தான ? 18 வயசு ஆயிடுச்சுனா பெண்களுக்கு maturity வந்துடுமா ? 17 வயசு 360 நாள்ல வராத maturity அஞ்சி நாள்'ல வந்துடுமா ? இல்லாட்டி கதை எழுதற எல்லாருக்கும் சமுதாய பொறுப்புணர்வு (சமுதாயம் சொல்ற) இருந்தே ஆகணுமா ? கதை எழுதற போது 19 வயசுன்னு எழுதறதுக்கும் 17 க்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு உங்களுக்கு புரியலையா ?****

சரி, கைக்குழந்தைக்கும், 2 வயதுக்குழந்தைக்கும் வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு.

இங்கேயும் 2 வயதுதான் வித்தியாசம்!

இரண்டும் ஒண்ணுதான் என்று உங்களால் நிச்சயம் சொல்ல முடியாது.
ஒரு சில விசயங்கள் "obvious" ஆகத்தெரியாது. அவ்வளவுதான்.

அதற்காக இப்படியே லாகிக் பேசினால்,

19 வயது = 17 வயது

17 வயது= 15 வயது

15 வயது = 13 வயது

இப்படியே போனால் 9 வயது = 19 வ்யது.

உங்க லாஜிக்தான்!

துள்சி கோபால் பின்னூட்டத்தைப் பாருங்க!

நம்ம ஊரிலும் அதே சட்டம்தான்.ஆனால் எங்கோ புதைந்து மக்கிப்போய் கிடக்கு! :(

வருண் said...

***துளசி கோபால் said...
எங்கே ரொம்பநாளாக் காணோம்?

இங்கே அண்டர் ஏஜ் பெண்குழந்தைகளை( அப்படித்தானே சொல்லணும்) உறவுக்கு அழைத்தாலே 'உள்ளே' பிடிச்சுப் போட்டுருவாங்க.

நோ பெயில்!****

நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க!

Anonymous said...

கற்பு என்பது காமத்தின் பிடியில் இருந்து தன்னை மீட்டு ஒழுக்கத்தின் வழி நடப்பதே.

ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க கடைப்பிடிக்க அதுவே உள்ளத்தில் தைரியத்தையும்
எதிலும் அச்சமின்மையையும் உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்.

அதனால் தான் நம் முன்னேர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஒழுக்கத்தை ஒழுங்காக்கினால் உலகமே அழகிய பூங்காவனம் ஆகிவிடும்.

உங்கள் தைரியமும் உங்கள் ஒழுக்கத்துக்கு கிடைத்த பரிசு ஆகும்.

பாராட்டுக்கள்!

புருனோ Bruno said...

சுட்டிக்கு நன்றி

பிராய்டின் பல கொள்கைகள் / தத்துவங்கள் தமிழகத்திற்கு துளியும் ஏற்புடையதல்ல என்பது என் கருத்தும் கூட

Sundar சுந்தர் said...

//அன்று மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு. //
hats off! அது போல சூழலில் சிக்கும் பலர் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம். பொறுத்து போவதாக நினைத்து பலர் புழுங்கி, சுய தைரியம் இழந்து மேலும் vulnerable ஆகிடறாங்க. :(
//பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. // ஆண்களுக்கு மட்டுமா? இதற்க்கு பல காரணங்கள் இருக்கு. ஒன்னு...அது ஒரு statement of power - c madonna and other western celebrities. mostly its matter of hollowness inside. may be having lesser experienced partner would mean lower expectations in line with their own capability ;)

Anonymous said...

வழக்கம் போல் கலக்கலான பதிவு. நாட்டு மக்கள் இதை பார்த்து திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவிகள் மீது கை வைக்க கூடாது. மனைவி மீது மட்டும் தான் கை வைக்க வேண்டும். அதுவும் அவரவர் சொந்த மனைவி மீது தான்.

இது போன்று சாக்கடைகளை வெளி கொண்டு வரும் பதிவுகளை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

இது போன்று சிறப்பாக எழுதி மேலும் புகழ் பெற வாழ்துக்கள்

Sundar சுந்தர் said...

ரொம்ப அருமையான பதிவு!

கயல்விழி said...

அவனும் அவளும்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

17 வயதுக்கும், 18 வயதுக்கும் என்ன வித்யாசமா? நல்ல வேளை ஆசிரியர் மாணவியின் மீது கை வைத்தால் என்ன தவறு என்று கேட்காமல் இருந்தீர்களே, அது வரையிலும் மகிழ்ச்சி :) :)

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் அவர்கள் சம்மதத்துடனே உறவு வைத்திருந்தால் கூட அது சட்டவிரோதமாகும். வெறும் கற்பனையாக இருந்தாலும் தவறு தான்(அவர் தானே ப்ளாகர்களின் பொறுப்புணர்வை பற்றி எழுதியது?). சட்டம் என்பது நம் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மற்றபடி அவர் சிறந்த எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சக பெண் என்பதால் என்னுடைய எதிர்ப்பை பதிவாக எழுதினேன்.

பெண்கள் அந்த வயதில் முதலில் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும். காதல், கல்யாணம், செக்ஸ் எல்லாம் தேவையே இல்லாத வயது அது.

கயல்விழி said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :)

கயல்விழி said...

//என்ன 0 டிகிரிக்குப் போட்டி போடும் உத்தேசம் ஏதும் இருக்கிறதா என்ன?

கிரன் பேடி வாட் வென்ட் ராங் என்ற ஒரு புத்தகம் எழுதி இருப்பார்,படித்திருக்கிறீர்களா?
//

வாங்க அறிவன்.

ஐயோ இல்லீங்க, அவர் பெரிய எழுத்தாளர் நான் நேரம் இருக்கும் போது ஏதாவது கிறுக்கும் ஒரு ப்ளாக்கர்.

இல்லை, கிரண் பேடி புத்தகத்தை படித்தது இல்லை, ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.

கயல்விழி said...

நன்றி ரிஷான் செரீஃப். முதல் வருகைக்கு நன்றி :)

கயல்விழி said...

//இது போல் இன்னும் நிறைய. " கயல் " போல் எனக்கு எழுத தைரியம் இல்லை.
//

அமிர்தவர்ஷினி அம்மா

எழுதினால் என்ன ஆகிவிடும்? தைரியமாக எழுதுங்கள், நிச்சயம் நாங்கள் படிக்கிறோம்.

கயல்விழி said...

//முடிஞ்சா வரைக்கும் நீண்ட இடைவெளி இல்லாம எழுத முயற்சி பண்ணுங்க. நிச்சயமா உங்களுக்கு நேரம் இருக்கும் போது மட்டுமே.
//

நன்றி எஸ்கே.:)

இனிமேல் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுத முயல்கிறேன்.

கயல்விழி said...

நன்றி அனானி அண்ணா

டாக்டர் புரூனோ

ப்ராயிட்டின் தத்துவங்கள் நமக்கு பொருந்தாதது மட்டுமல்ல, பெண்களின் மீதான அவரின் சில கருத்துக்கள் outrageous! பெண்களின் மேல் அவருக்கு ஒருவித பயம் இருந்ததாக தெரிகிறது, அந்த பயம் அவருடைய சில தியரிகளுக்கு காரணமாக இருக்கலாம்.

கயல்விழி said...

//hats off! அது போல சூழலில் சிக்கும் பலர் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம். பொறுத்து போவதாக நினைத்து பலர் புழுங்கி, சுய தைரியம் இழந்து மேலும் vulnerable ஆகிடறாங்க//

நன்றி சுந்தர். ஒரு முக்கியமான விஷயத்தை பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும், இது போன்ற செக்ஷுவல் ப்ரெடேட்டர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். நாம் பயப்பட பயப்பட ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு பொதுவாக தைரியமான பெண்களை பிடிப்பதில்லை. இயற்கையில் தைரியம் இல்லை என்றாலும் கூட, மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு முறை உரைக்கிற மாதிரி ஏதாவது சொல்லினால் போதும், தானாகவே திருந்தி விடுவார்கள்.

கயல்விழி said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபால் :)

Sundar சுந்தர் said...

//ஒரு முக்கியமான விஷயத்தை பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும், இது போன்ற செக்ஷுவல் ப்ரெடேட்டர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். நாம் பயப்பட பயப்பட ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பார்கள்.//
உண்மை தான். ஆனால் impacts of personal violations are, well, very personal. more victims rather get to feel guilty or somehow accuse themselves for the situation they are in. its not just male-female issues - its teh case for most CSA victims. The society and so called morality guardians dont help either. not sure u heard abt the Delhi CM's comments on a recent crime on a female journalist recently. In their pursuit of 'denial' mostly they tend to first accuse the victims. sorry for english typing. i am on the move and dont have time for transliteration.

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்குப்பிறகு...

கயல்விழி said...

சுந்தர்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ஒருவகையில் குற்றவாளிகளாக நினைத்துக்கொண்டு மனதுக்குள் புழுங்குவது உண்மையே. பாலியல் வன்முறை மட்டுமல்ல, எந்த ஒரு நிகழ்விலும் தன்னைத்தானே நொந்துக்கொள்வது பெண்களுக்கு இருக்கும் இயற்கையான குணம். வேலையில் கூட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கேட்பதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் பின் தங்குகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை காலம் காலமாக பெண்களின் மனதில் விதைக்கப்படுகிறது.

நான் சொல்லவந்தது என்னவென்றால், எந்த வீக்னெஸ் இருந்தாலும் அதை எல்லாம் புறம்தள்ளி ஒரே நிமிடம் லாஜிகலாக சிந்தித்துப்பார்த்தால் போதும், வழி கிடைத்துவிடும்.

கயல்விழி said...

நன்றி தமிழன்.

Anonymous said...

I am not a blogger .. but i like reading blogs ...
The way you present things is good.
-
KN

வீணாபோனவன் said...

காதலை வயதை வைத்து எடை போட முடியுமா?. பத்தாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு தன்கூட படிக்கும் பெண்ணின் மேல் காதல் வரும். ஆனால் இந்த பெண்ணோ அவனை உதாசீனம் செய்துவிடுவாள். ஆனால் அவனது காதல் உண்மயான காதலாகவே இருக்கும் (அந்த வயதுக் காதலுக்கு 'காமம்' என்றால் என்னவென்றே தெரியாது). பின்னாளில் அவன் வேறு யாரையாவது திருமணம் செய்ய நேரிடும் (பெற்றேர்களின் ஊந்துதல் கட்டாயமாக இருக்கும்). பிறகு, அவனது வாழ்க்கை இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடும். தினமும் தன் காதலியை நினைத்துக்கொண்டே வாழ்க்கையை இன்னொருத்தியுடன் வாழ்வான். இப்படி காதலிகளினால் உதாசீனமாக்கப்பட்டவர்கள் பல பேரை எனக்குத் தெரியும். அதில் நானும் ஒருவன். 17 வயதில் காதல் புரிவது ஒன்றும் தவறில்லை அனால் அதே நேரம் படிப்பில் கவனம் செலுத்தி சற்று பொறுத்திருத்து நல்ல வேலயைத் தேடிக்கொண்டு காதலித்தவளை மணம்முடிக்கலாம் (அனால் அதற்கு காதலிகள் காதலிக்கவேண்டுமே???). இந்த வயதில் வரும் காதல் ஒரு புனிதமான அன்பு அதை என்னைப் போல் உணர்ந்தவர்களுக்கே புரியும்.

எங்கோ படித்ததாக ஞாபகம்:

காதலித்தது ஒருத்தியை...
கைப்பிடித்தது ஒருத்தியை...
ஒருத்தி வாழ்க்கையாய்...
ஒருத்தி கீபேர்டில் பாஸ் வேர்டாய்...

-வீணாபோனவன்.

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

*****18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் அவர்கள் சம்மதத்துடனே உறவு வைத்திருந்தால் கூட அது சட்டவிரோதமாகும்.*****

சரி. இந்தியாவில் அது தான் சட்டம்.

******வெறும் கற்பனையாக இருந்தாலும் தவறு தான்(அவர் தானே ப்ளாகர்களின் பொறுப்புணர்வை பற்றி எழுதியது?).********

கற்பனை ஏன் தவறு என்கிறீர்கள் ? யாரவது இதை படித்து தவறான வழியில் சென்று விடுவார்கள் என்றா ?

******* சட்டம் என்பது நம் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.********

ஆமாம் சரி.

**********மற்றபடி அவர் சிறந்த எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சக பெண் என்பதால் என்னுடைய எதிர்ப்பை பதிவாக எழுதினேன்*******

மிகவும் எளிதான நடையில் கதை எழுதுபவர். அவ்வளவு தான். சிறந்த எழுத்தாளர் என்றால் அவருடைய நாவல் எதாவது ஒன்றை படிக்க முயலுங்கள். உங்க எதிர்ப்பை நான் குறை சொல்லவில்லை. ஆனால் எனக்கு அவருடைய எழுத்துக்கு (துணுக்குக்கு) தரும் அளவுக்கு அதிகமான மதிப்பாகவே படுகிறது.

கயல்விழி said...

நன்றி மணிகண்டன் மற்றும் வீணாப்போனவன் :)

மணிகண்டன் said...

********** நான் சொல்லவந்தது என்னவென்றால், எந்த வீக்னெஸ் இருந்தாலும் அதை எல்லாம் புறம்தள்ளி ஒரே நிமிடம் லாஜிகலாக சிந்தித்துப்பார்த்தால் போதும், வழி கிடைத்துவிடும்.************

செயல்படுத்த மிகவும் கடினமானது. ஆனால் உண்மை.

அது சரி said...

//
அதுசரி,

நீங்கள் அடிப்படை உளவியலில் தவறு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இதுவரை தவறென்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்(நான் கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துக்கள்).

ஆனால் சிக்மண்ட் -ப்ராயிட்டின் தியரிகள் சில தவறு என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணமாக பெண்களுக்கு இருப்பதாக சொல்லப்படும் "ஆண் பாலுறுப்பைக்குறித்த பொறாமை" தவறு. பெண்களுக்கு அப்படிப்பட்ட காம்ப்ளெக்ஸ் எல்லாம் இருப்பதில்லை.

எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஒடிபஸ் காம்ப்லெக்ஸ் போன்ற தியரிகளும் சர்ச்சைக்குரிய தியரிகள் தான்.

//

உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்பதால் சொல்கிறேன்..செல், ஜீன்..எக்ஸ் க்ரோமோசோம்..ஒய் க்ரோமோசோம்..என்னது ராமு சோமுன்னுட்டு..யாருப்பா அவய்ங்க... இது தான் எனக்கு தெரிந்த பயாலஜி, ஜெனிட்டிக் எஞ்சினியரிங்..

சரி..சைக்காலஜியாவது தெரியுமா என்றால்.. நான் முன்பே சொன்னபடி, ஸிக்மண்ட் ஃபிராய்ட் தியரி பற்றி பிட்டடித்து பாஸ் செய்தவன் நான்.. ஆக, அதுவும் தெரியாது..

ஆனாலும் வாதம் என்று வந்துவிட்டால் ஒரு குவாட்டரை போட்டுவிட்டாவது தப்புதப்பாக வாதிப்பது என் தொட்டில் பழக்கம் என்பதால்..

//
சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species//

இதன் அடிப்படை தியரி, எந்த செல்லும் சாக விரும்புவதில்லை. அது ஒரு செல் உயிரியான அமீபாவாக இருந்தாலும்.. அதன் விளைவே அமீபாவின் கலப்பு இல்லாத இனப்பெருக்கம்.. வைரஸின் பாதி செத்த Dormant நிலை, Mutation... நடக்க பழகிய நீர்வாழ் உயிரிகள்...Evolution... Vestigial Organs...The fittest will survive... சேவல் இல்லாமல் முட்டையிட்டு அதை அடைக்காக்கும் பெட்டைக்கோழி...

ஆனால், தன்னை விட வயதில் குறைந்த பெண்ணை காதலிப்பதற்கு ஜீன்கள், செல் காரணத்தை விட, சமூக காரணங்களே அதிகம் என்று எனக்கு தோன்றுகிறது. இதில் சப்கான்ஷியஸாக செல்கள் தங்கள் இனப்பெருக்கத்தை செய்ய விரும்புகின்றன என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பழைய காரை விட புது கார் எல்லாரையும் கவரும்... (உதாரணத்துக்கு மன்னிக்கவும்)... இதற்கும் செல்கள், சப்கான்ஷியஸ் இனப்பெருக்கம் காரணமா??

"Sigmund Freud" ஐ குறிப்பிட காரணம், அவர் சொல்வதெல்லாம் சரி என்பதால் அல்ல. ஒரு வேளை அவரை ஒழுங்காக படித்திருந்தால், 17 வயது பெண்ணை காதலிக்கிறென் என்று ஒருவர் வெப்சைட்டில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதை புரிந்துக்கொள்ள முடியுமோ என்றே குறிப்பிட்டேன்..

அவரது ஓடிபல் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் பற்றி எனக்கும் ஒப்புதல் இல்லை. அவர் சொல்லும் ஆண் குறி பிரச்சினை பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. இதுவும் சமூக/பொருளாதார ரீதியான விளைவே என்று எனக்கு தோன்றுகிறது...

ஓடிபல் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் பற்றி விவாதித்தால் எனது பின்னூட்டமே (மீண்டும்) உங்கள் பதிவை விட பெரிதாகக்கூடிய அபாயம் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் அப்பீட்டு ஆயிக்கிறேன்..

அது சரி said...

//
கயல்விழி said...
நன்றி அனானி அண்ணா

டாக்டர் புரூனோ

ப்ராயிட்டின் தத்துவங்கள் நமக்கு பொருந்தாதது மட்டுமல்ல, பெண்களின் மீதான அவரின் சில கருத்துக்கள் outrageous! பெண்களின் மேல் அவருக்கு ஒருவித பயம் இருந்ததாக தெரிகிறது, அந்த பயம் அவருடைய சில தியரிகளுக்கு காரணமாக இருக்கலாம்.

//

அவரின் தத்துவங்கள் பொருந்துமா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், அவரின் பல தத்துவங்கள், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்க கூடும். அவரின் ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸின் அடிப்படை ரோம், மற்றும் க்ரீக் கால சமூக சூழல் என்று கூட எனக்கு சந்தேகம்...

ஆனால், ஒரு பிரச்சினைக்கு உளவியல் ரீதியாக வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று சிந்திக்க ஆரம்பித்தவர் அவர் தான்.. ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்களில் ஒருவன் கொலைகாரனாகவும் மற்றவன் மதபோதகராகவும் ஆக காரணம் என்ன?? ஜீன் காரணமா இல்லை சமூக உளவியல் காரணமா?

எனக்கு தெரியவில்லை. இரண்டுமே!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
எல்லாரும் சொல்றத நானும் சொல்லிக்கறேன்.நல்லா இருக்கு.
ஆனா அது சரி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு.வயசாயிடுச்சு அவருக்கு பாவம் விட்டுருவோம்
//

ஐயா குடுகுடுப்பைக்காரரே,

வம்பிழுக்கிறதுன்னா நம்ம கடைப்பக்கம் வந்து வம்பிழுங்க. இது என்ன அவங்க கடைப்பக்கம் வச்சி நம்ம மண்டைல கொட்றீங்க??

குடுகுடுப்பை said...

அது சரி , நீங்க சொன்னபடியே செஞ்சுருவோம்.

பதிவிற்கு சம்மந்தமில்லாதது:
கயல்: உங்கள் வார்த்தையை ஏற்று பதிவு நீக்கப்பட்டது.

கயல்விழி said...

//ஆனால், தன்னை விட வயதில் குறைந்த பெண்ணை காதலிப்பதற்கு ஜீன்கள், செல் காரணத்தை விட, சமூக காரணங்களே அதிகம் என்று எனக்கு தோன்றுகிறது. இதில் சப்கான்ஷியஸாக செல்கள் தங்கள் இனப்பெருக்கத்தை செய்ய விரும்புகின்றன என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பழைய காரை விட புது கார் எல்லாரையும் கவரும்... (உதாரணத்துக்கு மன்னிக்கவும்)... இதற்கும் செல்கள், சப்கான்ஷியஸ் இனப்பெருக்கம் காரணமா??
//

அதில் நான் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன். காரையும், உயிருடன் இருக்கும் பெண்களையும் ஒப்பிடுவது சரியாகாது(இளையராஜா இசை அமைத்து உலக நாயகன் டான்ஸ் ஆடிய ஆதிகாலத்து மேல் ஷாவனிஸ்ட் பாடலை எல்லாம் விடுவோம்).

பெண்களின் இனப்பெருக்க வயது 18 - 35 வரை தான்(சராசரியாக). ஆண்களைப் போல அவர்களால் 70 வயதிலும் குழந்தைப்பெற்றுக்கொள்ள முடியாது. ஆண்கள் இளமையான பெண்களைத்தேட இது முக்கியமான காரணமாகிறது.

பெண்களிடம் பிடித்ததாக ஆண்கள் தெரிவிக்கும் அனைத்துமே(உதாரணமாக: பளபளப்பான கூந்தல், செழுமையான உதடு) போன்றவை நேரடியாக fertilityயுடன் தொடர்புடையவை.

என் பதிவை விட அதிகமாக போனாலும் பரவாயில்லை, உங்கள் கருத்துக்களை தயங்காமல் எழுதுங்கள் அதுசரி. :)

கயல்விழி said...

//கயல்: உங்கள் வார்த்தையை ஏற்று பதிவு நீக்கப்பட்டது.//

ஐயோ அதெல்லாம் சும்மா கலாட்டாவுக்கு சொன்னது, சீரியசா நீக்கிட்டீங்களா? ரொம்ப சாரி குடுகுடுப்பை :(

அது சரி said...

//
கயல்விழி said...
அதில் நான் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன். காரையும், உயிருடன் இருக்கும் பெண்களையும் ஒப்பிடுவது சரியாகாது(இளையராஜா இசை அமைத்து உலக நாயகன் டான்ஸ் ஆடிய ஆதிகாலத்து மேல் ஷாவனிஸ்ட் பாடலை எல்லாம் விடுவோம்).

பெண்களின் இனப்பெருக்க வயது 18 - 35 வரை தான்(சராசரியாக). ஆண்களைப் போல அவர்களால் 70 வயதிலும் குழந்தைப்பெற்றுக்கொள்ள முடியாது. ஆண்கள் இளமையான பெண்களைத்தேட இது முக்கியமான காரணமாகிறது.

பெண்களிடம் பிடித்ததாக ஆண்கள் தெரிவிக்கும் அனைத்துமே(உதாரணமாக: பளபளப்பான கூந்தல், செழுமையான உதடு) போன்றவை நேரடியாக fertilityயுடன் தொடர்புடையவை.

என் பதிவை விட அதிகமாக போனாலும் பரவாயில்லை, உங்கள் கருத்துக்களை தயங்காமல் எழுதுங்கள் அதுசரி. :)

//

காரையும் உயிருட‌ன் இருக்கும் பெண்ணையும் ஓப்பிடுவ‌து... அட‌ச்சே... ந‌ம்ம‌ சொல்ற‌த‌ த‌லீவ‌ரு அப்ப‌வே காப்பி அடிச்சிட்டாரா? இனிமே இதுக்கு கூட‌ காப்பி ரைட் வாங்க‌ணும் போலிருக்கே..(உண்மையில் எழுதும்போது என‌க்கு இந்த‌ பாட‌ல் நினைவில் இல்லை. நான் கார் தேடிக்கொண்டிருப்ப‌தால் அப்ப‌டி எழுதி விட்டேன்.)

ம‌ற்ற‌ப‌டி, நீங்க‌ள் சொல்லும் ச‌ப்கான்ஷிய‌ஸ் விஷ‌ய‌த்தில் என‌க்கு இன்ன‌மும் உட‌ன்பாடில்லை. ஒருவ‌ன் கொலை செய்து விட்டு, எங்க‌ அப்ஸ் கொலைகார‌ன், எங்க‌ தாத்தா கொலைகார‌ன் அது என் ஜீன்ல‌ இருக்கு அத‌னால் நானும் கொலை கார‌ன், அது என் த‌ப்பில்ல‌ என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து..

நீங்க‌ள் சொல்வ‌து போல் ஆண்க‌ளுக்கு ( நீங்க‌ள் என்னை MCP என்று சொன்னாலும் ச‌ரி) இள‌ம் பெண்க‌ளின் மீது காத‌ல் வ‌ர‌ ஜீன்க‌ள் இன‌ப்பெருக்க‌த்த்தை விட‌ த‌ங்க‌ளின் பெருமை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளே முக்கிய‌ கார‌ண‌ம் என்று தோன்றுகிற‌து..

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அது சரி , நீங்க சொன்னபடியே செஞ்சுருவோம்.

பதிவிற்கு சம்மந்தமில்லாதது:
கயல்: உங்கள் வார்த்தையை ஏற்று பதிவு நீக்கப்பட்டது.

//

நானும் விளையாட்டுக்கு தான் சொன்னேன் நண்பரே. தவிர நம்ம பதிவில நாம எப்படி வேணும்னாலும் கும்மி அடிக்கலாம், அவங்க பதிவில கும்மி அடிச்சி அவங்க நம்ம மண்டைல நங்குன்னு கொட்டிட்டாங்கன்னா??

Sundar சுந்தர் said...

//நான் சொல்லவந்தது என்னவென்றால், எந்த வீக்னெஸ் இருந்தாலும் அதை எல்லாம் புறம்தள்ளி ஒரே நிமிடம் லாஜிகலாக சிந்தித்துப்பார்த்தால் போதும், வழி கிடைத்துவிடும்.//
சரி தான். சரியான கேள்வியை அறிவது அதற்கான விடையை அறிவதை விட கடினம்! உங்கள் பதிவை பார்த்து சிலருக்கு சரியான கேள்வியும் பதிலும் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். தினசரி வாழ்க்கையில் sexism, violations நிறைய இருக்கு. அதை பெரும்பாலும் பொறுத்து போவது தான் பெரிய தவறு.

ஒரு முறை எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் பெங்களூரில் அவருடைய scorpio வில் போனபோது, ஒரு குறுகலான திருப்பத்தில், இவர் முன்னேறி வந்ததை பார்த்த பிறகும், இவரை பார்த்த பிறகு, அது வரை எதிர் புறத்தில் காத்திருந்த ஒரு கார், கொஞ்சம் நுழைந்து ஒரு stand-off. சின்ன சின்னதாய் இப்படி பல தினசரியாக நடக்கிறது தான். என்ன அந்த MCP க்கு அன்றைக்கு ஒரு பின்னடைவு - என்னுடன் இருந்தவர் வண்டியை ஆப் செய்துவிட்டு ஒரு லுக் விட்டார் அவன் வண்டியை பின்னேற்றும் வரை :)

Sundar சுந்தர் said...

//பெண்களின் இனப்பெருக்க வயது 18 - 35 வரை தான்(சராசரியாக). ஆண்களைப் போல அவர்களால் 70 வயதிலும் குழந்தைப்பெற்றுக்கொள்ள முடியாது. ஆண்கள் இளமையான பெண்களைத்தேட இது முக்கியமான காரணமாகிறது. //
அதெல்லாம் டுபாக்கூரு. maternity ward is the last thing in the mind of such relationships. கொஞ்சம் கூகிள் ஆண்டவரை கேட்டிங்கன்னா விஷயம் கொஞ்சம் வேற மாதிரியா புரியும். எனக்கு திரிஞ்ச வரை research shows hormonal changes dictate early peaking of sex drives compared to women. (ref: men are from mars, women from venus - in bedroom book), so the reverse should be true on that basis. Physically ageing is precisely what it is. old men buying a race car cant be a F1 driver but can sure show it around ;)

புருனோ Bruno said...

//ஆனால், ஒரு பிரச்சினைக்கு உளவியல் ரீதியாக வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று சிந்திக்க ஆரம்பித்தவர் அவர் தான்.. ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்களில் ஒருவன் கொலைகாரனாகவும் மற்றவன் மதபோதகராகவும் ஆக காரணம் என்ன?? ஜீன் காரணமா இல்லை சமூக உளவியல் காரணமா?

எனக்கு தெரியவில்லை. இரண்டுமே!
//

எந்த ஒரு பிணிக்கும் agent, host, environment என்ற epidemiological triad தேவை

ஆளவந்தான் படம் பார்த்தீர்களா ??

மணிகண்டன் said...

************** ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்களில் ஒருவன் கொலைகாரனாகவும் மற்றவன் மதபோதகராகவும் ஆக காரணம் என்ன?? **********

ப்ருனோ சார் பதில் சொல்லி இருக்காரு. இருந்தாலும் நானும் சொல்றேன்.

கொலைகாரனுக்கு நல்ல சகவாசமும், மதபோதகருக்கு கெட்ட சகவாசமும் கிடைச்சி இருக்கும் !

RAMYA said...

அன்பு கயல்விழி

அருமையான நடைமுறை தத்துவம். எப்போதும் பெண்கள் தைரியமாக இர்ருக்கவேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் இந்த மாதிரியும் இருக்கிறார்கள். துனுவு இருந்தால் எங்கும் சமாளிக்கலாம். அர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்மை.

ரம்யா

RAMYA said...

அன்பு கயல்விழி

அருமையான நடைமுறை தத்துவம். எப்போதும் பெண்கள் தைரியமாக இர்ருக்கவேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் இந்த மாதிரியும் இருக்கிறார்கள். துனுவு இருந்தால் எங்கும் சமாளிக்கலாம். அர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்மை.

ரம்யா

RAMYA said...

அன்பு கயல்விழி

அருமையான நடைமுறை தத்துவம். எப்போதும் பெண்கள் தைரியமாக இர்ருக்கவேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் இந்த மாதிரியும் இருக்கிறார்கள். துனுவு இருந்தால் எங்கும் சமாளிக்கலாம். அர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்மை.

ரம்யா

Anonymous said...

பைத்தியக்காரனின் கையில் கிடைத்த கத்தி என்ன செய்யுமோ அதையேதான் இப்போதைய அந்த எழுத்தாளரின் கையில் இருக்கும் அந்த பெண்ணின் நிலை!!

ஜியா said...

//எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்நம்பிக்கை. அதை உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!
//

Oru vaasagam sonaaalum thiruvaasagamnu solvaaingale... athu maathiri irunthathu.. Welcome back :))

வருண் said...

அது சரி!

I want you to understand one thing, it is always easy for a 45 plus writer to sleep with innocent 17-yr girl and excite her as anything is new to her innocence.

What is hard is, satisfy his wife (you see, they all run away) in the bed properly and prove that he is a real man. I am sure his wives may be complaining that he is "too quick" and "cant last long" and "that he could not give her one all her life with him" and destroy his confidence psychologically so that he cant even get ready next time! And they may be gossipping with other women friends that the writer is worhthless in bed and he has too little one and so forth! That is the reason these "old cheap writers" go and fool around with innocent teenagers who hardly knows about sex and he pretends like a "king" to them. Actually he is LOSER.

The reality is they are worthless for anything in real life.

They can only show their skills in their "imaginary writings" or by abusing innocent girls!

They are useless for a real woman as she can beat him and make him look like a "unworthy man".

கயல்விழி said...

ஆஹா, இரவோடு இரவாக கமெண்ட் எழுதிய நண்பர்களுக்கு நன்றி :)

கயல்விழி said...

//ம‌ற்ற‌ப‌டி, நீங்க‌ள் சொல்லும் ச‌ப்கான்ஷிய‌ஸ் விஷ‌ய‌த்தில் என‌க்கு இன்ன‌மும் உட‌ன்பாடில்லை. ஒருவ‌ன் கொலை செய்து விட்டு, எங்க‌ அப்ஸ் கொலைகார‌ன், எங்க‌ தாத்தா கொலைகார‌ன் அது என் ஜீன்ல‌ இருக்கு அத‌னால் நானும் கொலை கார‌ன், அது என் த‌ப்பில்ல‌ என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து..

நீங்க‌ள் சொல்வ‌து போல் ஆண்க‌ளுக்கு ( நீங்க‌ள் என்னை MCP என்று சொன்னாலும் ச‌ரி) இள‌ம் பெண்க‌ளின் மீது காத‌ல் வ‌ர‌ ஜீன்க‌ள் இன‌ப்பெருக்க‌த்த்தை விட‌ த‌ங்க‌ளின் பெருமை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளே முக்கிய‌ கார‌ண‌ம் என்று தோன்றுகிற‌து..
//

அது சரி

கவலைப்படாதீங்க, உங்களை MCP என்றெல்லாம் சொல்லமாட்டேன்(நீங்கள் எழுதிய விக்ரமாதித்யன் கதைக்கு உங்களை அப்படி சொன்னால் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்). ஏதோ படித்ததை வைத்து ஒரு வேளை சப்கான்ஷியசாக இருக்கும் என்று நினைத்தேன், 100% நிச்சயம் கிடையாது.

கொலைக்காரர்கள் கொலை செய்தால் சிறைக்கு போக வேண்டியதிருக்குமே? இல்லை என்றால் அதையும் செய்வார்கள். இளவயது பெண்கள் விஷயம் அப்படி அல்ல.

கயல்விழி said...

//old men buying a race car cant be a F1 driver but can sure show it around ;)
//

நீங்கள், அதுசரி எல்லாம் இப்படி நிச்சயமாக சொல்வதால் எனக்கும் சந்தேகம் வருகிறது. ஒரு வேளை ஷோ ஆஃப் பண்ணுவது தான் ஒரே காரணமோ?

கயல்விழி said...

நன்றி ரம்யா மற்றும் மணிகண்டன்.

கயல்விழி said...

நன்றி இராமன்.

ஜி,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நான் எழுதியது வெறும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். Standing up for yourself is very empowering.

அது சரி said...

//
அது சரி!

I want you to understand one thing, it is always easy for a 45 plus writer to sleep with innocent 17-yr girl and excite her as anything is new to her innocence.

What is hard is, satisfy his wife (you see, they all run away) in the bed properly and prove that he is a real man. I am sure his wives may be complaining that he is "too quick" and "cant last long" and "that he could not give her one all her life with him" and destroy his confidence psychologically so that he cant even get ready next time! And they may be gossipping with other women friends that the writer is worhthless in bed and he has too little one and so forth! That is the reason these "old cheap writers" go and fool around with innocent teenagers who hardly knows about sex and he pretends like a "king" to them. Actually he is LOSER.

The reality is they are worthless for anything in real life.

They can only show their skills in their "imaginary writings" or by abusing innocent girls!

They are useless for a real woman as she can beat him and make him look like a "unworthy man".

//

ஓஓஒ, என்ன பாஸு நம்மள மட்டும் தனியாக் கூப்பிட்டு இங்கிலிபீசில வையிறீங்க?
//
I want you to understand one thing, it is always easy for a 45 plus writer to sleep with innocent 17-yr girl and excite her as anything is new to her innocence.
//

I never said that certain writer has achieved something pretty difficult. Infact, all of the article in his website regarding this particular love affair really irritates me as cheap shit. What I was trying to understand is, what makes a 47 (or even more) year old man to write about seducing a 17 year old girl (mainly because its related to my profession). He may call it post modernism or whatever the hell he wants, but for me, it sounds like pure filth and abusing somebody else's privacy.

I must say, I do agree with some of his view points and I do have (or rather did) some respect for him. But it doesn't mean I agree with all his filth, certainly not his recent posts about his love affair.

But again, its his website, he writes whatever he wants about his personal life. It's upto the law officers to do something about it. I am no authority to censor him, I didn't even pay for the site. I didn't like it, I just closed the browser. Sorted!

//
What is hard is, satisfy his wife (you see, they all run away) in the bed properly and prove that he is a real man. I am sure his wives may be complaining that he is "too quick" and "cant last long" and "that he could not give her one all her life with him" and destroy his confidence psychologically so that he cant even get ready next time! And they may be gossipping with other women friends that the writer is worhthless in bed and he has too little one and so forth! That is the reason these "old cheap writers" go and fool around with innocent teenagers who hardly knows about sex and he pretends like a "king" to them. Actually he is LOSER.
//

For the love of almighty God, do I really care about his ability in his bed or whether he satisfies his wife in his bed? Believe me, I can't care less! And I am NOT sure whether his wives are complaining or not. simply it doesn't matter to me. Neither I care about his wife's gossip nor anything else. I am interested in the Pshychological analysis of a certain character, not particularly about him, certainly not about his size.
His life, his wife, his bed, their problem...

Of course, I feel the same way that he is writing like a LOSER!

//
The reality is they are worthless for anything in real life.

They can only show their skills in their "imaginary writings" or by abusing innocent girls!

They are useless for a real woman as she can beat him and make him look like a "unworthy man".
//

Once again, I am not trying to figure out his worth in bed room. Whether he is worth of a Zillion or worthless even for a penny ....It means nothing to me..

========
Frankly, you took me by surprise. I dont think I ever said, "yeah, I appreciate his skills of seducing a 17 year old". Never. Period.

May be I am not bright and granted, I am a bordering dumb.. But I am not a complete idiot. Could be a surprise for you, but believe me, even I can understand it would be easy for a 45+ writer to seduce a 17 year old innocent and pretend to be a king of everything under the sun. But I dont know how easy it would be as I am neither 45+ nor a writer nor have a brain to figure it out!

Having said that, what my cockroach brain can't understand is, what made you to single me out and preach me?

அது சரி said...

//
கயல்விழி said...
//old men buying a race car cant be a F1 driver but can sure show it around ;)
//

நீங்கள், அதுசரி எல்லாம் இப்படி நிச்சயமாக சொல்வதால் எனக்கும் சந்தேகம் வருகிறது. ஒரு வேளை ஷோ ஆஃப் பண்ணுவது தான் ஒரே காரணமோ?

//

நிச்சயமாக சொல்ல முடியாது. சிலர் உண்மையிலேயே காதலிக்கலாம், அப்படியும் நடந்திருக்கிறது.. ஆனால் நான் பார்த்த வரை, பல வயதான ஆண்கள் இளம் பெண்களை காதலிப்பதற்கு ஷோ ஆஃப் தான் காரணமாக இருக்கிறது.. மற்ற யாருக்குமாவதோ இல்லியோ, அவர்களை விட இளமையான ஆண்களை மூக்குடைப்பது தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. Look mate, I got something you couldn't. I am much better than you.. and you are nothing comparing with me.. etc etc..

சரித்திரத்தில் பல நாடுகளின் கலாச்சாரத்தில் பின்னோக்கி பார்த்தால்..பல மனைவியரை பெற்றிருப்பது பெருமையாக நினைக்கப்பட்டதே உண்மை. அதிக மனைவியரையும், அதிக பிள்ளைகளையும் பெற்றிருப்பது ஒருவரது செல்வாக்கையும், செல்வச்சிறப்பையும் காட்டுவதாக கருதப்பட்டது.. தசரதனின் பத்தாயிரம் மனைவிகள் கதையும் இதன் அடிப்படையிலேயே வந்ததாக இருக்கலாம்.

நான் சொல்வதே சரி என்று சொல்ல முடியாது, ஆனால் ச‌ப் கான்ஷியஸ் இனப்பெருக்க தேவை என்பதை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வருண் said...

***Having said that, what my cockroach brain can't understand is, what made you to single me out and preach me?***

அது சரி!

I am not singling you out though it looks like so! :) My intention is not preaching either. I really needed to say "who is a real man with full set a of ***** intact". One who abuses teenegers are not!

வருண் said...

****SK said எழுத்தாளர் பத்தி நான் சொல்ல ஒன்னும் இல்லை. அவர் 'எழுத்துலக சூப்பர் ஸ்டார்'ஆம். எனக்கு என் பேரையே முழுசா சரியா எழுத தெரியாது. .***\

I dont know what SK is trying to say here. If he means to support this writer, then I have to say the following.

SK: I beg to disagree! :)

He is not a "super-star" writer! He is a scum-bag who writes porn-like stories and polluting the tamil society!

People call him as "super star" for their personal benefit or whatsoever.
They "overlook" some serious problem with that sick person and with his uncontrolled psycho-path writing!

SK humbly says, "I cant write few sentences but he is a great writer and so I dont have any write to comment on him"

There are cheap critics like this "super-crap" writer writing so much about actors and such with outrageous criticisms, "Do they know how to act?"

Should one to be a good actor to comment on Kamal?

I dont think so!

I dont think you need to be good writer to comment on a "low-class" writer.

If you ask me when you know how to write well, you do have a BIG responsibility as well.

One should not pollute the society with your filthy thoughts no matter how great writer one is. I dont care how one lives his life. It is your life. You have to be responsible when you are writing and should not pollute with your filthy thoughts!

That responsibility of a cheap writer can be pointed out by anybody.

துளசி கோபால் said...

பட்டம் கொடுத்தேத் தீரணும் என்ற ஒரு கட்டாயம் தமிழர்களுக்கு இருக்கோன்னு ஒரு ஐயம்.

அது நடிகரா இருந்தாலும் சரி, பதிவரா இருந்தாலும் சரி, இல்லை 'புகழ்' பெற்ற(??) யாராக இருந்தாலும் சரி.

பட்டம் கொடுத்துப் பாராட்டுனாதான் நிம்மதி:-))))

என்னமோ போங்க.

கயல்விழி said...

மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி துளசி டீச்சர்.

வலையுலக சூப்பர் ஸ்டார் என்பதை படிக்கும் போது எனக்கும் சிரிப்பு வந்தது.

நசரேயன் said...

நல்ல ஆழமான கட்டுரை, இதை படிகிரவங்க நிச்சயமாக திருந்துவாங்க

கயல்விழி said...

வாங்க நசரேயன், நன்றி.

வெண்பூ said...

//வலையுலக சூப்பர் ஸ்டார் என்பதை படிக்கும் போது எனக்கும் சிரிப்பு வந்தது. //

நீங்க வேற கயல்... இந்த பட்டம் குடுக்குறது எங்க போயி முடியுமோ.. ரஜினி எந்திரன் வந்தப்புறம் "உலக சூப்பர் ஸ்டார்"னு நிரூபிக்கப்போறாராம்.. :))

தாங்க முடியல..

SK said...

வருண் அண்ணே வணக்கம்.

நான் என்ன சொல்ல வந்தேன் சொன்னா, எனக்கு நல்ல எழுதவும் தெரியாது. அதே போல படிச்சும் பழக்கம் கெடையாது. நான் ரொம்ப பெரிய பதிவு போட்டாலே ஆரம்பம், முடிவு படிக்கற ஆளு. இதுனாலே எனக்கு அவரோட சிரோ டிகிரி கதையோ எதுவும் படிச்சது கெடையாது. இப்படி இருக்கும் பொது அவரை பத்தி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பலை சொல்ல வந்தேன்.

அம்புடுதேன். ரொம்ப சூட இருக்கீங்க ஒரு சோடா குடிக்கறீங்களா.

abc said...

கற்பு பற்றிய உங்களுடைய பதிவு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது ...... ஆண்களில் ஒரு சிலரது தவறுகள் பெரும்பான்மை ஆண்களுக்கு ஓரு வடுவாக உள்ளது.....

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

வாங்க எஸ் கே!

நீங்க அவரை பாராட்டுவதுபோலவும் டிஃபெண்ட் பண்ணுவது போலவும் எனக்கு தோணியது. அதனால்தான் ஒரு டிஸ்க்லைமெரோட ஆரம்பித்தேன்:) :)

மன்னிச்சுக்கோங்க!

தமிழ் காப்பாளர்கள மற்றும் குஷ்புவை தாக்கிய கற்பு-காப்பாளர்கள் வீராவேஷம் எல்லாம் இப்போ எங்கே போச்சுங்க?

இந்த தரங்கெட்ட எழுத்தாளனை ஏன் னு கேக்க எந்தத்தமிழ்காப்பாளனுக்கும் தைரியம் இல்லை!

இவனை இப்படியே விட்டால் தமிழ் லிட்டெரேச்சர் போர்னோக்ராஃபியாக மாறிவிடும். அல்ரெடி மாற்றிவிட்டான்!

இதில் 17-வயது பெண்களைப்பற்றி ரசித்து எழுதும் இந்த இவருக்குக்கு "சூப்பரு" பட்டம் வேற? பட்டம் கொடுக்கிறவனுக்கும் தகுதி தேவை இல்லை. அதை வாங்காமல் வாங்கிறவனுக்கும் தகுதி வேண்டிய தில்லை! :( இதுதான் இன்றைய வலை உலகம்! :(

SK said...

வருண் ரொம்ப சூட இருக்கீங்க. நான் சொன்ன போல சோடா கூட பத்தாது போல இருக்கு.

நாம எதுக்கு ஒரு எழுத்தாளர்ன்னு பல பேரால அங்கிகரிக்கப்பட்ட ஒருத்தர இவளோ சாடனும் சொல்லுங்க. ஆனா பதினேழு வயசு பொண்ணு பத்தி எல்லாம் எழுதறது தப்பு தான். அதை அவர் தான் புரிஞ்சுக்கணும். :(

வருண் said...

எஸ் கே!

பலரால் அங்கீகரிக்கப்பட்டவர்??

விகடனும் குமுதமும் மற்றும் எல்லாப் பத்திரிக்கை களாலும் தூக்கி எறியப்பட்டவரும் எழுத்தாளர்தான் இவர்!

வலைஉலகத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் சரியாக அமல்ப்படுத்தவில்லை!
அதனால் நம்மதான் விமர்சிக்கனும் குறை நிறைகளை!

இவரை ஏன் சாடனும்?!

* 17-வயது பெண்களை அப்யூஸ் பண்ணி அதை "ஜஸ்டிஃபை" பண்ணுவதற்காக!

சரி விடுங்க, எஸ் கே! :-)

Raman Kutty said...

இம்முறை, நான் வருணின் கருத்துக்கள் அனத்தையும் (ஆன்கிலம் மற்றும் தமிழில்) அப்ப்படியே வழிமொழிகிறேன், அந்த எழுத்தாளர், தந்து இயலாமை அல்லது வீர சூர பராக்கிரமத்தை, ஒரு அப்பாவி டீன் ஏஜரிட்ம் காண்பித்து அதை விளம்பரமும் படுத்துவது உண்மையோ, கற்பனையோ எதுவாயிருந்தாலும் கண்றாவிதி, இது கற்பு என்றால் என்ன‍‍‍‍‍‍‍‍ 6 பாகத்தில் டிலோரிஸின் வாழ்க்கையை ஒத்தே இருக்கிறது..அவருக்கும் அந்த வயதில் தானது தந்தை அவரை என்ன செய்ய சொல்கிறார் என்ற தெளிவோ அறிவோ இல்லை. என்ன செய்ய இவர்கள் வியாபாரம் செய்ய யார் யாரோ பலிகடா!. இதில், எழுத்துலக சூப்பர் ஸ்டார் என்று வேறு, ரஜினியை அழைத்தால் இவரும் வருவாராம்.

மேலும், அவர் ஏதோ ஒர் 13‍ வயது பெண்ணுடனும் அவர் தந்தையுடனும் வைத்துக்கொண்ட ஒரு உறவைப்பற்றி எழுதியிருக்கிறார், அதை ஒரு ப்ளாக்கர் 'தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார்' என்று.. கொடுமை..

வருண் said...

அவர் நிறைய பொய் சொல்லுகிறார். ஏதாவது foreign போர்ன் ஸ்டோரி படித்துவிட்டு, அதை கை காது மூக்கு வைத்து "பெருமாள் எக்ஸ்பீரிண்ஸ்" என்று சும்மா கதை விடுகிறான்.

I think he is living in "delusion" and he is really SICK!

இவர் எழுதுவது ஒரு விலைமாது தன் இரவுகளை எழுதுவதுபோலத்தான் இருக்கு.

யார் வேணா இதை விளாவரியா எழுத முடியாதா என்ன?

கயல்விழி said...

சரி எல்லாம் ஒரு லாரி சோடா குடித்து சமாதானம் ஆகுங்க :) :)

உண்மை என்னவென்றால், இதை விடவும் சின்ன வயதில் 5 வயதில் எல்லாம் கூட சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு இரையாகிறார்கள். இவர் வெளியே சொல்லிவிட்டார், வெளியே சொல்லாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

வருண் said...

இல்லை கயல், அந்த மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு சில பேர் "சிக்" ஆகிவிடுவாங்களாம்! தாங்களும் சின்னப்பிள்ளைகளை அப்யூஸ் பண்ணுவான்களாம்.

அதைத்தான் "நம்ம பெருமாள்" 17-வயது பெண்களிடம் அவன் செய்யும் லீலைகள் காட்டுகிறது.

இவனை விட்டால் இதேபோல் எழுதி எல்லா அரைவேக்காடுகளையும் "சிக்" ஆக்கிவிடுவான்!

He needs to be "treated" or "taken care of" before it is getting too late!

கூடுதுறை said...

நல்ல விளக்கங்கள் நன்றி


இதைப்படியுங்கள்...
http://paakeypa.blogspot.com/

Anonymous said...

//He needs to be "treated" or "taken care of" before it is getting too late! //

Varun, you are 100% correct.. repeat!!!

மோகன் said...
This comment has been removed by the author.
மோகன் said...
This comment has been removed by the author.
மோகன் said...

பதிவுமாறி கருத்துக்களைப் பதித்துவிட்டேன் ;((((

kayal said...

உங்களது தைரியமான அணுகுமுறை வரவேற்கத்தக்கது கயல்விழி ,பெண்களுக்கு முதலில் மிக அவசியமான ஒன்று தன்னம்பிக்கையுடன் கூடிய தைரியம் அது தானாக சுய பாதுகாப்பைத் தரும் ,எடுத்ததெர்க்கெல்லாம் பயந்து செத்து அப்படி என்ன தான் சாதித்து விடப் போகிறோம் ...? அநியாயங்களை குறைந்த பட்சம் நமக்கு நடக்கும் (அடுத்தவர்களை விடுங்கள் ..!) அநியாயங்களை மட்டுமாவது அடுத்தவர் தயவின்றி நாமே தட்டிக்கேட்டு சரி செய்து கொண்டே ஆகவேண்டும் .
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செருக்கு" இதெல்லாம் தான் பெண்ணுக்கு கவசம் ,இன்று தான் உங்கள் பதிவை வாசிக்கிறேன் ...தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_07.html