Tuesday, April 9, 2013

வாழ்க்கையில் நடுக்கமா, ராஜன் சார்?

"அப்பா! எப்படி இருக்கு இந்த அவுட்ஃபிட்" என்றாள் அபர்னா, தன் அரைகுறை மழலைத் தமிழில்.

"யு லுக் பியூட்டிஃபுல், டியர்" என்றார் ராஜன் சுத்தமான ஆங்கிலத்தில்.

"தேங்க் யு டாட்" என்று புன்னகைத்தாள், அபர்னா.

அபர்னாவுக்கு 16 வயதாகிறது. ஹை ஸ்கூல் போய் வருகிறாள். இப்போது அவள் போட்டிருந்தது ஒரு சின்ன மினி ஸ்கர்ட். உதட்டில் லிப்ஸ்டிக், தலைமுடியை விரித்துப்போட்டு ஏதோ மாடல் போலிருந்தாள் அவர் செல்ல மகள்! படிப்பது போக மற்ற நேரங்களில் நிலைக்கண்ணாடி முன்னால்தான் நின்றாள்,அபர்னா. கொள்ளை அழகாக இருந்தாள் அவள்.

இதுபோல் இளம் பெண்கள் மேக்-அப் போடுவது, மினிஸ்கர்ட் போடுவதை எல்லாம் பார்த்து வெறுத்தவர் ராஜன்.  பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது சேலைகட்டிய அல்லது சல்வார் அணியும் பெண்களை மட்டும்தான் நல்ல பெண்களாக மதித்தார். இதுபோல் மினிஸ்கர்ட் போட்டு, அரைகுறையாக வரும் பெண்களைப்பற்றி கேவலமாகப் பார்ப்பவர், பேசியவர் ராஜன். ஆனால் இப்போது அவர் மகள் அவர் எதை தவறு என்று பேசினாரோ வெறுத்தாரோ அதையே அதைவிட பலமடங்கு மோசமாக செய்கிறாள் என்று குற்றவுணர்வுடன் நினைத்துப் பார்த்தார்.

தன் மகள் என்பதலோ என்னவோ அப்படி அரைகுறை ட்ரெஸ் பண்ணுவது மேக்-அப் போடுவது தவிர மகளிடம் அப்படி எதுவும் தவறான எண்ணங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லை அவருக்கு. ராஜன், படிப்புவிசயத்தில் #1 ஆக இருந்தவர். ஆனால் வாழ்க்கை பாடங்களில் ஒரு மக்காகவே வளர்ந்து வந்திருந்தார். அவர் சரியாகப் படிக்காத பாடங்களை அவருக்கு சரியாக சொல்லிக் கொடுத்தது அவர் மனனவியும், மகளும்தான். அதுவும் சமீபத்தில்தான் அதை ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வருகிறார்.

அபர்னாவிடம் அவர் மனதில் தோன்றியதை, "இதுபோல் உடல் தெரியும் ஸ்கர்ட் போடாதே! ஜீன்ஸ் போடு" என்று சொன்னால், அவளுக்கு கோபம் வரும்!

"Why?" "It is really hot outside, I cant wear Jeans today" என்பாள்.

அவளிடம் வாதாடி ராஜன் வெற்றி பெறுவதென்பது நடக்கிற காரியம் இல்லை. She can defend herself so well, always!

தன் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உடுப்புகளை வைத்து அவர்களை இவர் கீழ்த்தரமாக யோசித்ததுபோல பெண்கள் அப்படியொன்றும் மோசமனவர்கள் இல்லை என்பதை மகள் சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம்தான் கற்றுக்கொண்டார், ராஜன்.

மூன்று வாரங்கள் முன்பு திடீரென ஒரு நாள்,

"Will you allow me to date American boys, dad?" என்றாள் அபர்னா.

"Why do you want to date?'என்றார் ராஜன் நிதானமாக.

"Well, how will I find my life partner then? Please dont tell me to do arranged marriage. It does not make any sense to me, dad. No offense to you or mom"

"What if I say, you should date only Indians?" என்றார் சற்றே கண்டிப்பான குரலில்

"Indians think that they are great but they are not! They lack social skills and open mind. I dont think I can live with an Indian, dad. It wont just work for me" என்றாள் அபர்னா காஸுவலாக.

"I am an Indian too, Aparna!"

"You are an exception, dad!" அழகான புன்னகையுடன்.

"Then why do you ask me if you dont want to listen what I say?"

"I dont know. It will make me happy if you understand and approve of it, dad"

"First concentrate in your studies! Finish your college, get a job, then you can do all these dating and stuff, Aparna"

"Are you kidding me, dad ? I cant wait that long! I would not ask your permission as I will be a major then. Anyway, I have to be going now. Love you dad" என்று வெளியே போனாள். அவள் தோழி ஒரு காரில் வந்து அவளை பிக் அப் பண்ணி சென்றாள்.

அவளுக்கு "பை" என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கோயிலுக்கு போக ரெடியானார் ராஜன். அவருக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்ததில்லை. இந்த பாழாப்போன அமெரிக்காவில், தன்னால் தன் பெண்ணை சரியான வழியில் வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையில்லை அவருக்கு இப்போது. அவள் வாழ்க்கை முழுவதும் அவள் கையில் மட்டும்தான் என்று தோன்றியது. இவரால் தலைகீழாக நின்னாலும் எதுவுமே செய்யமுடியாது! அவரால் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றுதான் அவர் மகள் வாழ்க்கை! அவளைப்பற்றி யோசிக்க வேண்டாம் என்று எண்ணிய அவர், மனைவியுடன் சேர்ந்து கோயிலுக்கு புறப்பட்டு போனார் அன்று. தன் "ஐ பாட்" ல பழைய பாடல்களை எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருந்தார். கார் புறப்பட்டு ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன், தன் ஐ பாடை ஆண் பண்ணினார், ராஜன்.

அந்த பழைய பாடல் கலக்ஷனிலிருந்து, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியது. அதில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக தோன்றியது ராஜனுக்கு.

**************************

இதுவும் ஒரு மீள்பதிவே! (தலைப்பு மற்றும் கதையை கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்)

 வாழ்க்கையில் நடுக்கமா?

 வேலையில் ஏகப்பட்ட பிஸி. அதான் இந்த மீள் பதிவுகள். You know I enjoy being busy at work! :-)

7 comments:

'பரிவை' சே.குமார் said...

மீள் பதிவாக இருந்தாலும் படிக்கத் தூண்டும் பகிர்வு... இங்கும் வேலை அதிகம்தான் அதான் நிறைய காப்பி பேஸ்ட் வேலைதான் நடக்குது...

பூ விழி said...

புதியவர்கள் படிக்காதது தானே அமெரிகாவில் மட்டுமல்ல எங்கேயும் எல்லா இடத்திலும் இந்த பிரச்னையை சந்தித்து தான் ஆகவேண்டியுள்ளது என்ன விதங்கள் மட்டும் இடத்திற்கு இடம் மாறுபடலாம் ஆனால் எதிர்ப்புகள் கால மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது

உஷா அன்பரசு said...

அதிக தன்னம்பிக்கையால மாற்றங்கள் வந்திட்டே இருக்கு...!

Anonymous said...

//தன் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உடுப்புகளை வைத்து அவர்களை இவர் கீழ்த்தரமாக யோசித்ததுபோல பெண்கள் மோசமனவர்கள் இல்லை என்பதை மகள் சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம்தான் கற்றுக்கொண்டார்//

இந்த பாடம்தான் இப்போ தமிழ்நாட்டில் நிறையபேருக்கு தேவை.

அருமை வருண்.

வருண் said...

தங்கள் கருத்துகளுக்கு நன்றி, @ சே குமார், @ பூவிழி, @ உஷா அன்பரசு மற்றும் @ ஏலியன்! :)

கவியாழி said...

இனிமேல் மாற்றம் வரும் தமிழ் ஆர்வம் வளரும் பலரும் வருவார்கள் படிப்பார்கள்

வருண் said...

வாங்க கவியாழி கண்ணதாசன்!

"வருண்! ஏன்யா இப்ப்படி ஆங்கிலத்தில் எழுதி கொல்ற" ணு நீங்க என்னைக் கடிந்துகொள்வதுபோல எனக்குத் தோணுது. :-)