Sunday, December 28, 2008

கவனம்!!! நகைச்சுவை என்பது விபரீதமானது!

எதையாவது ஏடா கூடமாக சொல்லிவிட்டு, நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சமாளிப்போம்! இதில் வெற்றியடைவது (சமாளித்து தப்பிப்பது) கடினம்.

ஒரு சிலர் நகைச்சுவை பதிவில் சில பெரிய நடிகர்களை இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ணி மாட்டிக்குவார்கள்.

இது பழையவிசய்ம்தான் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்போம்!

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி பற்றி திரு.ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தை பார்ப்போம்



////////

M G R (“தொப்பி”)

செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

சிவாஜி ('திலகம்')

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'... /////////


எந்த ஒரு எம் ஜி ஆர் அல்லது சிவாஜி ரசிகர்கள் இதை “நகைச்சுவையாக” எடுத்துக்கொள்வார்களா? அல்லது எடுத்துக்கொண்டார்களா?



எம் ஜி ஆர் ஜால்ரா சத்யராஜ் சொல்கிறார்!


/////// ஜெயமோகன் முகத்தில் காறித்துப்ப வேண்டும் என்று பேசினார் சத்யராஜ். ஆனந்த விகடன் படிக்கும் போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அன்று மட்டும்தான் அழுதேன் என்றார் அவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி கேட்காவிட்டால், இருவருக்குமே திரையுலகை சேர்ந்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சிக்கல் என்னவென்றால், விகடன் நிறுவனத்தினர் சக்தி மனசில சிவா என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயமோகன் நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இருபடங்களுக்கும் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தின் இந்த ஒத்துழையாமை எச்சரிக்கை இருவருக்குமே தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. /////



காறிதுப்ப வேணும்??? என்ன ஒரு திமிர் இந்த நடிகனுக்கு என்று ஒரு பக்கம் நமக்கு எரிச்சல் வருகிறது.

இவர் எம் சி ஆர் ரசிகர் என்பதால் எம் சி ஆர் பத்தி எழுதினால் இவர் காறி துப்புவாராம்? இவர் நடிகர்களை ரசிக்கும் ரசிகர்கள் உணர்வுகளை என்றாவது புரிந்து இருக்கிறாரா என்ன???



ஃ எழுத்துச்சுதந்திரம் என்பதை ஜெயமோகன் துஷ்பிரயோகம் செய்தாரா? அவர் இல்லைனுதான் சொல்றார்.

ஃ ஆனாலும் செயமோகன் இந்த சிவாஜி ரசிகர்களுக்கு சாதிச்சாயம் இவர் பூசுவது படுகேவலமா இருக்கு!

ஃ இல்லை பேச்சு சுதந்திரத்தை அல்லது அவர் சொல்லும் “நகைச்சுவையை” நகைச்சுவையாக எம் சி ஆர் ரசிகர் சத்யராஜால் எடுக்கமுடிந்ததா?

ஃ நகைச்சுவை என்ற போர்வையில் யாரைவேணா எதுவேணா எழுதலாமா? I really don't understand, “What difference it makes whether you claim that as “comedy” or “just for fun” or a serious issue? அதனுடைய விளைவுகள் எதுவும் மாறப்போவதில்லை.

ஃ சத்யராஜ், யாரையும் கிண்டல் அடிப்பதில்லையா? இவர் கிண்டல் அடித்தால் இவரையும் இவர் சொல்வதுபோல் செய்யலாமா?


நகைச்சுவை என்பது ஒரு விபரீதமான விசயம். அதை கையாளும் விதம் பெரிய எழுத்தாளர்களுக்கே தெரியவில்லை. எழுத்தாளன் விமர்சனம் எழுதினால் பொதுவா வம்புதான். அடிக்கடி இவர்களுக்கு கதை எழுதுகிறோமா இல்லை ஒரு சில லெஜெண்டரி கேரக்டர்களை பலர் மனமுடையும் அளவுக்கு கொஞ்சம் கீழ்தரமாக (நகைச்சுவை என்க்ற போர்வையில்) விமர்சிக்கிறமானு இவர்களுக்கு மறந்துவிடுகிறது.

சத்யராஜ் ஒரு சாதாரண hypocrite! எங்க ஊரில் ஒரு சில நண்பர்கள் பார்த்து இருக்கேன். ஊருக்கு ஒரு நியாயம், அவனுகளுக்கு ஒரு நியாயம். அவர்கள் ஊரில் உள்ளவன் தங்கையை எல்லாம் என்ன மாதிரி வேணா “காமெண்ட்ஸ்” அடிப்பானுக. அவன் தங்கையை ஒருத்தன் திரும்பிக்கூட பார்க்ககூடாது! அதுபோல்தான் இருக்கு சத்யராஜ் நியாயம்! படுகேவலமாக!

மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது!

60 comments:

Syam said...

me the first?

வருண் said...

Yes, Syam! :)

This is an old news but I see hundreds of visitors have read this post and did not say much as they may agree with me completely :) :)

shabi said...

jaya mohan eluthiya veru sila nahacchuvai yai kodukkavum

சின்னப் பையன் said...

வேற யாராவது கேக்கறதுக்கு முன்னாடி நானே கேட்டுடறேன்...

என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா????????

வருண் said...

***shabi said...
jaya mohan eluthiya veru sila nahacchuvai yai kodukkavum***

I am lost. WHY?

I can give his justification and the letter he wrote to vikatan here if you need that.

வருண் said...

**ச்சின்னப் பையன் said...
வேற யாராவது கேக்கறதுக்கு முன்னாடி நானே கேட்டுடறேன்...

என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா????????**


You are supporting Sathyaraj or Jeyamohan.

First of all we all should learn what is the meaning of freedom?

We just live in some assumptions (something as freedom) I think.

ரவி said...

நானும் என்னோட பங்குக்கு ப்ளீஸ்...

என்னது, மெசபடோமியாவுல சக்கரத்தை கண்டுபிடிச்சிட்டாங்களா ???

ரவி said...

////You are supporting Sathyaraj or Jeyamohan.

First of all we all should learn what is the meaning of freedom?

We just live in some assumptions (something as freedom) I think.///

இதுக்கும் சீரியசாக பதில் சொல்லும் வருண் வாழ்க !!!

கயல்விழி said...

//என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா????????//

நிஜமாவா??? என்ன அதிசயம்! இந்த விஷயத்தை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் :(
Sorry Varun, Just kidding :) :)

வருண் said...

kayal: avar "sinnappayyan" nu vittudalaam. unnai enna seyyalaam, kayal? :) :) :)

கயல்விழி said...

//kayal: avar "sinnappayyan" nu vittudalaam. unnai enna seyyalaam, kayal? :) :) :)
//

வருண்,

என்னையும் 'சின்ன பொண்ணு' என்று நினைத்து விட்டுவிடவும்.

பிகு: அவர் சின்னப்பையனாக இருக்கும் போது நான் சின்னப்பொண்ணாக இருக்க கூடாதா?

வருண் said...

***கயல்விழி said...
//kayal: avar "sinnappayyan" nu vittudalaam. unnai enna seyyalaam, kayal? :) :) :)
//

வருண்,

என்னையும் 'சின்ன பொண்ணு' என்று நினைத்து விட்டுவிடவும்.

பிகு: அவர் சின்னப்பையனாக இருக்கும் போது நான் சின்னப்பொண்ணாக இருக்க கூடாதா?***

sari, nI enRum 16 dhaan :) :) :)

கயல்விழி said...

//sari, nI enRum 16 dhaan :) :) :)//

இப்படித்தான் சொல்லியாகனும், வேற வழி இல்லை. :)

ஆளவந்தான் said...

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்...
மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது

வருண் said...

***shabi said...
jaya mohan eluthiya veru sila nahacchuvai yai kodukkavum

29 December, 2008 9:27 AM ***


***ஆனந்தவிகடனின் அவதூறு
February 14, 2008 – 5:16 pm


ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.

இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.

இதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது

ஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோகூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால்கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்

முற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால்கூட ஒருசில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்

ஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

மதிப்பிற்குரிய ஆனந்த விகடன்ஆசிரியருக்கு

விகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.

என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை– அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது– இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிபப்டம்.

இதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதபப்ட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.

கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச்ச்செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை

அன்புடன்

ஜெயமோகன் ****


திரு ஜெயமோகன் என்ன சொன்னார்னா, ஆனந்தவிகடன் தான் அவதூறு பண்ணிவிட்டதாம்.

இவர் இணையத்தில் வாசிக்கும் வாசகர்கள் (எம் சி ஆர் சிவாசி வெறியர்கள் முதற்கொண்டு) எல்லாம் இவரை சரியா புரிந்து கொண்டார்களாம்!

எனக்கு ஏன் னு தெரியல, இவர் ஆனந்தவிகடந்தான் இவரை மாட்டிவிட்டதாக சொல்வது கொஞ்சம் சிரிப்பு வருது!

ஏன் என்றால், எந்த ஒரு எம் சி ஆர் சிவாஜி ரசிகருக்கும் இவர் எழுதிய நகைச்சுவை எரிச்சலையும் கோபத்தையும் தரும் என்று இவருக்கு விளங்கியதுபோல் தெரியலை

வருண் said...

***செந்தழல் ரவி said...
////You are supporting Sathyaraj or Jeyamohan.

First of all we all should learn what is the meaning of freedom?

We just live in some assumptions (something as freedom) I think.///

இதுக்கும் சீரியசாக பதில் சொல்லும் வருண் வாழ்க !!!

29 December, 2008 10:46 AM ***

சின்னப்பையன் எனக்கு அவ்வலவு பரிச்சயம் இல்லை. அவர் சர்க்காஸம் சரியா புரியலை. :)

ஆனா, இந்த "சுதந்திரம்" என்பது கொஞ்சம் புரியாத சப்ஜெக்ட்டுத்தான் :)

வருண் said...

***ஆளவந்தான் said...
இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்...
மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது

29 December, 2008 12:39 PM***


ஆள்!

என்ன, திரு செயமோகன் அவர்கள் இந்த மேட்டரில், நான் நகைச்சுவையாகத்தான் எழுதினேன் என்று சொல்வது சரிதான்.

இந்த நகைச்சுவை, எம் ஜி ஆர், சிவாஜி ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும்தான் தரும்.

நகைச்சுவைனா மற்ரவர்களை சிரிக்கவைக்கிறது. இதில் ஜெயமோகன் மட்டும்தான் சிரிக்கிறார் .மற்றவர்கலெல்லாம் எரிச்சலடைகிரார்கள், என்பதுதான் உண்மை. நகைச்சுவை என்பது மற்றவர்களை சிரிக்க வைப்பது னு நினைக்கிறேன்.

ஜெயமோகம் "கிச்சு கிச்சு" காட்டுகிறார்.

☀நான் ஆதவன்☀ said...

என்னது காந்திய சுட்டுட்டாங்களா????

வருண் said...

***நான் ஆதவன் said...
என்னது காந்திய சுட்டுட்டாங்களா????

29 December, 2008 7:56 PM****

நீங்க ஆதவன்!

மன்னிச்சுக்கோங்க, இது பழைய மேட்டர்தான். ஆனால் நான் சொல்ல வருவது கொஞ்சம் வேற மேட்டர்ங்கோ. :)

ஆளவந்தான் said...

யாருடைய மனதையும் புண்படுத்தாததே நல்ல நகைச்சுவை.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் செய்யும் காவாலித்தனத்தையெல்லாம்.. காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாது

வருண் said...

***ஆளவந்தான் said...
யாருடைய மனதையும் புண்படுத்தாததே நல்ல நகைச்சுவை.***


ஆள்!

அந்த மாதிரி நகைச்சுவை பண்ணுபவர்கள் ரொம்ப அரிது.

ஒருவரின் இயலாமையையும் குறைகளையும் அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் நகைச்சுவையாக பேசுவதுதான் 99% நகைச்சுவை! :(

அதான் நகைச்சுவையில் பெரிய பிரச்சினையே!

ஆளவந்தான் said...

//
ஆள்!

அந்த மாதிரி நகைச்சுவை பண்ணுபவர்கள் ரொம்ப அரிது.

ஒருவரின் இயலாமையையும் குறைகளையும் அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் நகைச்சுவையாக பேசுவதுதான் 99% நகைச்சுவை! :(

அதான் நகைச்சுவையில் பெரிய பிரச்சினையே!
//


வந்துட்டன். வந்துட்டன்..

காசு குடுக்குற கஸ்டமர் கூடவே வேலையயும் குடுத்துடுறாங்க.. என்ன பண்றது.

அவுகளா நீங்களானு நிறுத்து பாக்கும் போது, உங்களுக்கு கொஞ்சம் மென்மையான மனசுங்குறதுனால உங்க தட்டு மேலே போய்டுச்சு..

இப்டி எல்லாம் சொல்லுவேனு நினைச்சீங்களா ( டர்னிங் பாய்ண்ட் குடுக்க ட்ரை பண்றேனாக்கும்)

ஃபிகருன்னு வந்துட்டா, ஃபிரண்ட கண்டுக்கவே மாட்டான் இந்த ஆளவந்தான்..

கஸ்டமர் ஒரு ஃபிகர்ன்னு சொல்லவும் வேணுமா என்ன?

ஆளவந்தான் said...

//

அந்த மாதிரி நகைச்சுவை பண்ணுபவர்கள் ரொம்ப அரிது.

ஒருவரின் இயலாமையையும் குறைகளையும் அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் நகைச்சுவையாக பேசுவதுதான் 99% நகைச்சுவை! :(
//

இதுல முக்கியமான ஒரு விசயம். நம்ம மக்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமா இல்லை என்பது தான்.

ஸ்ஸ்ஸ்...சைலன்ஸ்.. என்னங்க சத்தம்.. உண்மை கசக்க தான் செய்யும்.

சிவாஜி, எம்.ஜி.ஆரை விடுங்க இப்போ இருக்கிற கருணாநிதி, ஜெயலலிதா வை பொது ஊடகங்கள்ல யாரவது நடவடிக்கைகளை கேலி பண்ண் முடிய்மா( அவுக பண்றது எல்லாம் காமெடியா தான் இருக்கும் என்பது வேறு விசயம்)

உதாரணத்துக்கு டாக்டர் இளைய தலைவலி விஜயின் போக்கிரி படத்த லொள்ளு சபா மக்கள் கிண்டல் பண்ணி ஒரு எபிசோட் வெளிவந்த்துச்சு.. பாருங்க மக்களே சும்மா பூந்து வெள்யாடிருப்பானுங்க.. கேலியா இருந்தாலும் உண்மையான நகைச்சுவை தான் .. எல்லா தமிழ் மக்களும் கண்டிப்பா ரசித்திருப்ப்ர்.. ஆனா விஜய்க்கு வந்ததே கோபம்.. பல திரை மறைவு வேலைகளுக்கு பிறகு அந்த நிகழ்ச்சி மறு ஒளி பரப்பு செய்ய பட வில்லை. பகிரங்க மன்னிப்பு கடிதமும் வெளியிடப்பட்டது.. அப்புரம் அந்த பையன ”குருவி” ப்டத்துல பழி எல்லாம் வாங்குனாறாம். நான் பாக்கல..

சுட்டி இங்கே

எங்கே போச்சு நகைச்சுவை தன்மை?

வருண் said...

***இப்டி எல்லாம் சொல்லுவேனு நினைச்சீங்களா ( டர்னிங் பாய்ண்ட் குடுக்க ட்ரை பண்றேனாக்கும்)

ஃபிகருன்னு வந்துட்டா, ஃபிரண்ட கண்டுக்கவே மாட்டான் இந்த ஆளவந்தான்..***

LOL!

வருண் said...

***ஆனா விஜய்க்கு வந்ததே கோபம்.. பல திரை மறைவு வேலைகளுக்கு பிறகு அந்த நிகழ்ச்சி மறு ஒளி பரப்பு செய்ய பட வில்லை. பகிரங்க மன்னிப்பு கடிதமும் வெளியிடப்பட்டது.. அப்புரம் அந்த பையன ”குருவி” ப்டத்துல பழி எல்லாம் வாங்குனாறாம். நான் பாக்கல..***

இங்கே டால்க் ஷோ (லெட்டெர்மேன், ஜே லெனோ) ல எல்லார் தலையும் உருளுமே! யாரும் பெரிய இஸ்ஸூ வா ஆக்கிறதில்லைதான் :)

வருண் said...

***சுட்டி இங்கே

எங்கே போச்சு நகைச்சுவை தன்மை?

30 December, 2008 9:32 AM***

தெரியலையே. நீங்கதான் சொல்லனும் :)

ஆளவந்தான் said...

//
இங்கே டால்க் ஷோ (லெட்டெர்மேன், ஜே லெனோ) ல எல்லார் தலையும் உருளுமே! யாரும் பெரிய இஸ்ஸூ வா ஆக்கிறதில்லைதான் :)
//

நீங்க ஏற்கனவே பார்த்திருக்கலாம்

இருந்தாலும்.. நான் ரொம்பவும் பார்த்து ரசித்த வீடியோ

ஆளவந்தான் said...

//
தெரியலையே. நீங்கதான் சொல்லனும் :)
//

கண்டிப்பா சொல்றேன்..

ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திப்போம்..

வருண் said...

aaL!

I cant go through youtube at work
:(.

I will get back to you reg this video tomorrow :)

ஆளவந்தான் said...

//கண்டிப்பா சொல்றேன்..

ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திப்போம்..
//

I'm back (Thanks: பில்லா அஜித் )

ஆளவந்தான் said...

/*

//
தெரியலையே. நீங்கதான் சொல்லனும் :)
//

கண்டிப்பா சொல்றேன்..
*/


எனக்கு தெரிஞ்ச ஒரு காரணம்; எல்லார் பின்னாடியும் ஒரு கூட்டம் திரியுறது தான். ரமணா படத்துல ஒரு டயலாக் வரும். ரெண்டு பேரு கேக்க இருக்கான்னா “தமிழ் நாட்டையே” ரெண்டா பிரிக்க சொல்லுவீங்கடே.. அப்டினு .. அது மாதிரி தான்

இன்னொரு காரணம் பொழுதுபோக்கு, மக்களுக்கு சொல்லிக்கிற மாதிரி பரவலான பொழுது போக்குகள் கிடையாது.. ஒன்னு சினிமா, இல்ல சின்னதிரை அதை விட்டா மானங்கெட்ட மட்டை.. புதிதா ஒன்னா முயற்சி பண்ண பார்க்கிறது இல்ல, .

ஒரு படம் நல்லா இல்லேனு சொன்னாலும், சொல்றத கேட்காம ஒரு த்டவ நம்மளும் பாத்துட்டு, ஆமாப்பா ”நீ சொன்னது சரி தான், நல்ல இல்ல தான்” சொல்ற அணுகுமுறை. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் மானங்கெட்ட (மானசீக) தலைவர் படத்த, அந்த படத்தோட ஒளிப்பதிவாளர விட ஒரு தடவையாவது கூட பாத்துடனும் என்ற துடிப்பு.

மொத்ததுல யோசிக்க மறந்த உணர்ச்சி வசப்பட்ட கூட்டமப்பா நம்ம் கூட்டம்.. நீ தான் எதாவது பாத்து செய்யணும்பா....

வருண் said...

***நீ தான் எதாவது பாத்து செய்யணும்பா....

30 December, 2008 12:28 PM***

LOL!

அது சரி(18185106603874041862) said...

//
ச்சின்னப் பையன் said...
வேற யாராவது கேக்கறதுக்கு முன்னாடி நானே கேட்டுடறேன்...

என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா????????
//

என்னது....இந்தியாவை அடிமைப்படுத்திட்டாங்களா????????????????????

அது சரி(18185106603874041862) said...

//
காறிதுப்ப வேணும்??? என்ன ஒரு திமிர் இந்த நடிகனுக்கு என்று ஒரு பக்கம் நமக்கு எரிச்சல் வருகிறது.
//

அண்ணன் சத்யராசு எப்பவுமே ஓவர் ஆக்டிங் என்று எல்லாருக்கும் தெரியும்...ஒரு மைக்கும் மேடையும் கெடைச்சா என்ன வேணும்னாலும் பேசுவாரு..

இவரு எல்லாரையும் நக்கலடிப்பாரு...ஆனா இவருக்கு பிடிச்சவங்கள யாரும் நக்கலடிக்க கூடாதுன்னா எப்படி?

அது சரி(18185106603874041862) said...

ஜெயமோகன் எழுதியதில் பல விஷயங்கள் உண்மை... நெல்லைக்கு(ம்!) தெற்கே சென்றால் அங்குள்ள வட்டார வழக்கங்கள் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை விட மிக வித்தியாசமாகவே இருக்கிறது...

உ.ம்: அஸ்கா என்றால் பலருக்கு என்னவென்று தெரியாது...சர்க்கரை என்றால் எல்லா ஊரிலும் கரும்பிலிருந்து எடுத்த சுகர் தான் கொடுப்பார்கள்...ஆனால், நெல்லையில் ஒரு கடையில் சர்க்கரை என்றால் உங்களுக்கு கிடைப்பது நாட்டு சர்க்கரை... உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வெள்ளை சர்க்கரை வேண்டுமென்றால் அஸ்கா என்று தான் கேட்க வேண்டும்...

தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஜாதிப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள்...ஆனால், என்ன நாடாரே, என்ன மொதலியார்...என்ன பிள்ளைவாள்...என்ன நாயர்...இப்படி ஒருவரை சாதியுடன் விளிப்பது நெல்லையிலும் அதற்கும் தெற்கேயும் மிகவும் சகஜமானது...பிரித்து பார்க்கும் நோக்கமில்லை...ஒருவரை சாதியுடன் அழைப்பது அவருக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கத்தை காண்பிப்பதாக அங்கு ஒரு கருத்து உண்டு....


அதே போல மதிப்பிற்குரிய உறவுகளையும் மிக எளிதாக நக்கலடிப்பார்கள்...கெட்ட நோக்கமில்லை...ஆனால், மிகவும் சகஜமான பழக்கம்...மாமியாரையும், மாமனாரையும் கிண்டலடிப்பது எந்த ஊரிலும் சகஜமில்லை....ஆனால், நெல்லையில் மிகவும் சகஜம்...அதே போல் கடவுள்....தன் கடவுளையே கிண்டல் செய்வார்கள்....

இப்படி இருக்கையில், எம்ஜியாரும், சிவாஜியும் அவர்களுக்கு பெரிய விஷயமில்லை..கிண்டலடிப்பது என்பது மிகவும் சகஜமான ஒன்று...எம்ஜியாருக்கு பல பட்டப் பெயர்கள் உண்டு...சிவாஜிக்கு அதைவிட அதிகமான பட்டப் பெயர்கள் உண்டு...அதே போல் இப்பொழுது விஜய்க்கும்...

இப்படி ஒரு விஷயத்தை எழுதியதாலேயே ஜெயமோகன் கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்று சொல்ல முடியாது....அப்படியானால் நாட்டுப் புற வழக்கங்களை யாருமே எழுத முடியாது.... நானும் எம்ஜியார் ரசிகன் தான்...அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு...ஜெயமோகன் எழுதியதை படித்து எனக்கு சிரிப்பு தான் வந்ததே ஒழிய எரிச்சல் வரவில்லை...


ஆனால் கருத்து சுதந்திரம் என்றால் அழுகிப் போன கத்தரிக்காயை விட கேவலமாக மதிக்கும் கல் தோன்றி முன் தோன்றா காலத்தே முந்தி தோன்றிய மூத்த கலாச்சாரத்தில் இதையெல்லாம் புரிய வைக்க முடியாது...



பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

ஆளவந்தான் said...

//
நெல்லையில் ஒரு கடையில் சர்க்கரை என்றால் உங்களுக்கு கிடைப்பது நாட்டு சர்க்கரை
//
சக்கரைக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு தெரியும்ல..

நெல்லை பொன்னுங்க.. ”உன் சமையலறையில் நான் உப்பா சக்க்ரையா?” பாடலை பையன்கள் முன்னே பாடவே மாட்டார்கள் தெரியும் தானே.

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
***ஆளவந்தான் said...
இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்...
மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது

29 December, 2008 12:39 PM***


ஆள்!

என்ன, திரு செயமோகன் அவர்கள் இந்த மேட்டரில், நான் நகைச்சுவையாகத்தான் எழுதினேன் என்று சொல்வது சரிதான்.

இந்த நகைச்சுவை, எம் ஜி ஆர், சிவாஜி ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும்தான் தரும்.

நகைச்சுவைனா மற்ரவர்களை சிரிக்கவைக்கிறது. இதில் ஜெயமோகன் மட்டும்தான் சிரிக்கிறார் .மற்றவர்கலெல்லாம் எரிச்சலடைகிரார்கள், என்பதுதான் உண்மை. நகைச்சுவை என்பது மற்றவர்களை சிரிக்க வைப்பது னு நினைக்கிறேன்.

ஜெயமோகம் "கிச்சு கிச்சு" காட்டுகிறார்.
29 December, 2008 1:58 PM
//

ஜெய மோகனின் ஒரிஜினல் பதிவை படித்து விட்டு நானும் நன்றாக சிரித்தேன் என்பதை இங்கு ரெக்கார்ட் செய்கிறேன்....அதனால் அந்த எரிச்சலைடையும் மற்றவர்கள் லிஸ்டில் நான் இல்லை என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் :0))

இதே போல் என்னை அதிகம் சிரிக்க வைத்த மற்றொரு நிகழ்ச்சி....நான் மூத்த பதிவர்களுக்கு வக்காலாத்து வாங்குவதாக நீங்கள் எழுதிய பின்னூட்டம்...:0))

வருண் said...

அது சரி!

உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

//
ஆளவந்தான் said...
சக்கரைக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு தெரியும்ல..

நெல்லை பொன்னுங்க.. ”உன் சமையலறையில் நான் உப்பா சக்க்ரையா?” பாடலை பையன்கள் முன்னே பாடவே மாட்டார்கள் தெரியும் தானே.
30 December, 2008 1:15 PM
//

இது எனக்கு தெரியாதே.....ஒரு வேளை அவங்க பாடினாலும் எனக்கு புரியாது....ஒரு தடவை அந்த பக்கம் போயிட்டு இங்க ஏன் யாரும் தமிழ் பேச மாட்டேங்கிறாங்கன்னு முழிச்சது எனக்கு தான் தெரியும் :0))

அப்பிடியே....அந்த இன்னொரு அர்த்தத்தையும் சொல்லிட்டீங்கன்னா புண்ணியமா போகும்...யாருனா பாடுனா கண்டுபிடிக்கலாம்ல?

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
அது சரி!

உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்!
30 December, 2008 1:37 PM
//

அய்...அண்ணன் கிளம்பிட்டாருங்கோ :0))

ஏய் பாஷா பாரு பாஷா பாரு
பட்டாளத்து நடைய பாரு....

ஸ்ஸ்ஸ்...ஓண்ணுமில்ல....சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டு :0)))

வருண் said...

***ஆனால் கருத்து சுதந்திரம் என்றால் அழுகிப் போன கத்தரிக்காயை விட கேவலமாக மதிக்கும் கல் தோன்றி முன் தோன்றா காலத்தே முந்தி தோன்றிய மூத்த கலாச்சாரத்தில் இதையெல்லாம் புரிய வைக்க முடியாது...***

I am not sure you understand. We can destroy Jeyamohan's wrting too by criticizing every line "just for fun". I am sure he is not going to take as a "joke"!

வருண் said...

I heard that one time ChAru made fun of Jeya!

And that Jeyamohan fans are all got hurt.

Is that not true< athu sari?

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
***ஆனால் கருத்து சுதந்திரம் என்றால் அழுகிப் போன கத்தரிக்காயை விட கேவலமாக மதிக்கும் கல் தோன்றி முன் தோன்றா காலத்தே முந்தி தோன்றிய மூத்த கலாச்சாரத்தில் இதையெல்லாம் புரிய வைக்க முடியாது...***

I am not sure you understand. We can destroy Jeyamohan's wrting too by criticizing every line "just for fun". I am sure he is not going to take as a "joke"!
//

Errrrrr.....

Nope....I dont understand.....I'm not talking about Jeyamohan as such...I am talking about the culture as a whole...

You can destroy Jeyamohan's writings?? Why not? If he is writing something then it's open for opinions and criticism....Go ahead...I dont see anything wrong....

I guess, he would take it as part of life...B'cos criticism is not something new for him...

வருண் said...

Let me tell you the problem in his criticisms!

He is writing that em jee aar used some lEgiyam and such of course as a joke.

Dont you think he gets into this issue "too personal"?

He can write about his manerisms, fine but NOT about sittukuruvi lEgiyam and such BS.

Is that a joke?

Can we write about him like that?

வருண் said...

IMHO, only some cheap blogger would write such comments. Not a writer with a good reputaion!

Is he a cheap blogger?!

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
Let me tell you the problem in his criticisms!

He is writing that em jee aar used some lEgiyam and such of course as a joke.

Dont you think he gets into this issue "too personal"?

He can write about his manerisms, fine but NOT about sittukuruvi lEgiyam and such BS.

Is that a joke?

Can we write about him like that?
//

என்ன கொடுமை சாமி இது?.....

அய்யா, எம்ஜியார் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம் சாப்பிடறார், அதனால தான் அவ்வளவு கலர் (அது ஈஸ்ட்மென் கலர், ரோஸ் பவ்டர் அப்படிங்கிறது வேற விஷயம்), அதனால தான் பெண்களுக்கு அவர் மேல அவ்வளவு க்ரேஸ் அப்படிங்கிறது தமிழ்நாட்டுல ரொம்ப பொதுவான பேச்சு....

இது புல்ஷிட் இல்ல....இது நெஜமாவே பல கிராமங்கள்ல இருந்த ஒரு பேச்சு...அதை ஜெயமோகன் எழுதிருக்கார்....அவ்வளவு தான்...

உங்களுக்கு அவர பத்தி எழுதணும்னா எழுதுங்க சாமி....நானும் படிக்கிறேன் :0)

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
IMHO, only some cheap blogger would write such comments. Not a writer with a good reputaion!

Is he a cheap blogger?!
//

ம்ம்ம்ம்ம்....என்ன சொல்றது....மொதல்ல அது ஜெயமோகன் எழுதுன கமெண்ட்டே இல்ல...அது வட்டார வழக்கில் இருக்கும் இன்னொரு பக்கத்தை அந்த மொழியில் சொல்லும் முயற்சி... இது தான் எனக்கு புரிஞ்சது!

ஜெயமோகன் சீப் ப்ளாக்கர்?? அப்படி நீங்க நெனச்சா அதுக்கு ஏது தடை? உங்கள் எண்ணங்கள்...உங்கள் எழுத்துக்கள்...

அவர் சீப் ப்ளாக்கர்னு நீங்க சொன்னா சொன்னது தான்....அப்பீல் ஏது? :0))

வருண் said...

**அய்யா, எம்ஜியார் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம் சாப்பிடறார், அதனால தான் அவ்வளவு கலர் (அது ஈஸ்ட்மென் கலர், ரோஸ் பவ்டர் அப்படிங்கிறது வேற விஷயம்), அதனால தான் பெண்களுக்கு அவர் மேல அவ்வளவு க்ரேஸ் அப்படிங்கிறது தமிழ்நாட்டுல ரொம்ப பொதுவான பேச்சு...**

இன்னும் நிறைய பொதுவான பேச்சு எனக்குதெதெரியும். எங்க ஊரில் சொல்வது. அதையெல்லாம் எழுதலாமா?

எவ்வளவு கேவலமான விசயம்னாலும் எழுதலாமா?

வதந்திதான்.

கேள்விப்பட்டதுதான் என்பது வேற விஷயம்.

அதை இங்கே சொல்ல வேண்டிய அவசியம்?

ஃப்ரெண்ட்ஸோட பேசுற விசயம் வேற அதையே ப்ளாக்ல எழுதுறது வேறங்க!

கேக்கிறவன் கேனையனா இருந்தா கே ஆர் விஜயாவாக்கு ____________ எங்க ஊர்ல சொல்லுவாங்க.

இதையும் செயமோகன் எழுதுவாரா??

நல்ல பழமொழிதான். ஊர் உலகத்தில் பேசுறதுதான்.

ஊர் உலகத்தில் சொல்றதையெல்லாம் சும்மா வதந்தி ஜாலிக்குனு எழுத முடியாதுங்க!

அபப்டி எழுதினால் எழுதுபவர்கள் தரம் குறையும்!

யார்டா இவன் செயமோகன், கேவலமா எழுதுறான் னு 1000 பேர் திட்டத்தான் செய்வான்!

ஆளவந்தான் said...

//
யார்டா இவன் செயமோகன், கேவலமா எழுதுறான் னு 1000 பேர் திட்டத்தான் செய்வான்!
//
அதுவும் ஒரு விமர்சனம் தானே

வருண் said...

***உங்களுக்கு அவர பத்தி எழுதணும்னா எழுதுங்க சாமி....நானும் படிக்கிறேன் :0)***

அவரைப்பத்தி தரங்கெட்ட எழுத்தாளன் னு எழுதிக்கிட்டுதான் இருக்கேன் இல்லையா?

ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...

என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா????????
//
சுதந்திரம் கிடச்சுடுச்சு...ஆனா நாம இன்னும் அடிமை தான்..

வருண் said...

***தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஜாதிப் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள்...ஆனால், என்ன நாடாரே, என்ன மொதலியார்...என்ன பிள்ளைவாள்...என்ன நாயர்...இப்படி ஒருவரை சாதியுடன் விளிப்பது நெல்லையிலும் அதற்கும் தெற்கேயும் மிகவும் சகஜமானது...பிரித்து பார்க்கும் நோக்கமில்லை...ஒருவரை சாதியுடன் அழைப்பது அவருக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கத்தை காண்பிப்பதாக அங்கு ஒரு கருத்து உண்டு....***

Tha tis not what he said, he says only "aasaari" community likes sivaji.

That is UTTER NONSENSE!

may be he was on drugs whenhe writes such BS!

There is a limit to bring up caste. Not when you are writing about fans!

ஆளவந்தான் said...

இருதரப்பும் அருமைய பேசினாங்க..

இந்த (வடக்கால)பக்கம் வருண் வந்து ஜெயமோகன் மாதிரி ஆளுக காமெடின்ற பேர்ல பண்ற கேலி/அட்டகாசம் எல்லாம் ரொம்ப தப்பு, அப்டினு அவர் தரப்பு நியாயங்கள எடுத்து சொன்னார்.. அருமையா சொன்னாருங்க்றேன்

அந்த (தெக்கால) பக்கம் அது சரி, அவரும் தான் வருணுக்கு சளைச்சவன் இல்லேனு, வரிஞ்சு கட்டிகிட்டு ( நீங்க என்ன கேக்குறீங்க-னு புரியுது..இப்ப வேணாம்).. எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம்தான்யா என சில பல உண்மைகளயும் சொன்னார்.

ரெண்டு பக்கமும் பேசி முடிச்சாச்சு..இப்போ என்னை கூப்பிட்டிருக்காங்க( எவன்யா கூப்பிட்டது?).. தீர்ப்பு சொல்லனுமாம்.

சரி பதிவு தான் வெட்டியா போகுது, பின்னூட்டமாவது உருப்படியா போடலாம்னு பாத்தா.. அதுலேயும் மண்ணா..

கலைஞனின் கலையை விமர்சிக்கலாம் ஒழிய கலைஞனின் தனிவாழ்வை அல்ல என்று சுருக்கமாக தீர்ப்பளித்தி விடை பெறுகிறேன்.. நன்றி! வணக்கம்!!

பி.கு 1: இந்த தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்..
பி.கு 2: மேல் முறையீடு செய்ய தமிழ்குடிமகன்கள் அனைவருக்கும் முழு உரிமை உண்டு.

வருண் said...

ஆள்!

பஞ்சாயத்து தலைவர்ரகி தீர்ப்பு சொன்னதற்கு நன்றி :)

அது சரி தான் னு நினைக்கிறேன், கொஞ்ச நாள் முன்னால ஒரு ஜெயமோஹன் கதையை ஒண்ணுமே புரியலைனு தூக்கிக்கொண்டு அலைந்தார்.

இப்போ ஏதோ விமர்சனம் ஒண்ணு எழுதி இருக்கார்.

அது சரி, கொஞ்சம் குழப்புறார்,

Oh! Now I get it.. but I amnot going to tell what I got :)

ஆளவந்தான் said...

வருண்,

இனிய English புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வருண் said...

நன்றி, ஆள்!

உங்களுக்கும் என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! :-)

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
ஆள்!

பஞ்சாயத்து தலைவர்ரகி தீர்ப்பு சொன்னதற்கு நன்றி :)

அது சரி தான் னு நினைக்கிறேன், கொஞ்ச நாள் முன்னால ஒரு ஜெயமோஹன் கதையை ஒண்ணுமே புரியலைனு தூக்கிக்கொண்டு அலைந்தார்.
//

தூக்கிக் கொண்டு அலைந்தார்???

மூத்த பதிவர்கள் அநாகரீகம் என்று எழுதிய உங்களின் நாகரீகமான வார்த்தை பிரயோகம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

ஜெயமோகன் எழுதிய எல்லாக் கதைகளும் எனக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை...புரியாத போது புரியவில்லை என்று சொல்வதிலும் எனக்கு தயக்கமில்லை...

ஆனால் நான் எத்தனை பேரிடம் தூக்கிக் கொண்டு அலைந்தேன்...எங்கெல்லாம் அலைந்தேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

//
இப்போ ஏதோ விமர்சனம் ஒண்ணு எழுதி இருக்கார்.

அது சரி, கொஞ்சம் குழப்புறார்,
//

இதில் குழப்பம் என்ன? அவரின் ஒரு கதை புரியவில்லை...இந்த கதை புரிந்திருக்கிறது....

எனக்கு புரியவில்லை...பிடிக்கவில்லை என்பதற்காக யாரும் அப்படி எழுதக்கூடாது என்று பதிவு போட நான் என்ன கலாச்சார காவலனா?

ஆனால் அந்த கதை (காமரூபிணி) புரியவில்லை என்று அப்போது உங்களிடம் சொன்னதிலும் ஒரு நன்மை இருக்கிறது....சிலருடைய உண்மை முகங்கள் புரிகிறதே!

//
Oh! Now I get it.. but I amnot going to tell what I got :)
//

Oh! I got it too....

நீங்கள் இந்த பதிவு போட்டதின் உண்மையான நோக்கம்.....மிகத் தாமதமாக இப்பொழுது புரிகிறது!

வருண் said...

Happy New Year Athusari!

வருண் said...

I was only joking A S. It was meant to provoke u and continue discussion AS. Take it easy :-)

வருண் said...

****அது சரி said...
//
வருண் said...

அது சரி தான் னு நினைக்கிறேன், கொஞ்ச நாள் முன்னால ஒரு ஜெயமோஹன் கதையை ஒண்ணுமே புரியலைனு தூக்கிக்கொண்டு அலைந்தார்.
//

தூக்கிக் கொண்டு அலைந்தார்???

மூத்த பதிவர்கள் அநாகரீகம் என்று எழுதிய உங்களின் நாகரீகமான வார்த்தை பிரயோகம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

ஜெயமோகன் எழுதிய எல்லாக் கதைகளும் எனக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை...புரியாத போது புரியவில்லை என்று சொல்வதிலும் எனக்கு தயக்கமில்லை...***

ஏங்க, தூக்கிக்கொண்டு அலைந்தார் என்பத் சும்மா "கமெடியா" சொன்னது. இதையே அஃபெண்ஸிவா எடுத்தீங்கனா கஷ்டம்தான் :-)

எனக்கு இவர் எழுத்து எதுவுமே புரியமாட்டேன் என்கிறது. அந்த "காமரூபினி" மட்டும் அல்ல!

***இதில் குழப்பம் என்ன? அவரின் ஒரு கதை புரியவில்லை...இந்த கதை புரிந்திருக்கிறது....

எனக்கு புரியவில்லை...பிடிக்கவில்லை என்பதற்காக யாரும் அப்படி எழுதக்கூடாது என்று பதிவு போட நான் என்ன கலாச்சார காவலனா?

ஆனால் அந்த கதை (காமரூபிணி) புரியவில்லை என்று அப்போது உங்களிடம் சொன்னதிலும் ஒரு நன்மை இருக்கிறது....சிலருடைய உண்மை முகங்கள் புரிகிறதே!***

எனக்கு இவர் எழுத்துமேல் உங்களுக்கு மதிப்பு இருக்குனு உங்க விமர்சனத்தில் இருந்து தெரியுது. ஆனால் அன்று நீங்கள் சொல்லும்போது, அவரைப்பற்றி நீங்க ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது. அதுதான் குழப்பம்!

இதுக்குபோய் இப்படி கோவிச்சுக்கிறீக்னகளே!


***Oh! Now I get it.. but I amnot going to tell what I got :)
//

Oh! I got it too....

நீங்கள் இந்த பதிவு போட்டதின் உண்மையான நோக்கம்.....மிகத் தாமதமாக இப்பொழுது புரிகிறது!***

உங்களுக்கும் இவர் எழுதியதுபோல் நடிகர்களை நக்கல் அடிப்பது பிடிக்கும் என்பதால் உங்களுக்கு இவர் விமர்சனத்தில் தவறு இருப்பதாக தோனவில்லை என்பதுதான் எனக்கு புரிந்தது. :-)

அப்பா! நான் பேசாமல் இருந்ஹ்டு இருக்கலாம்!