Wednesday, July 20, 2011

ஜோஸியர்களால் இந்தியாவுக்கு, தமிழனுக்கு ஆபத்து!

போனதர அண்ணன் ஆர் கே சதீஷ்குமார் ஜோஸ்யப்பதிவுனு எழவைக்கூட்டுவதை தாங்கமுடியாமல் அதை விமர்சித்தபோது, அண்ணன் பேரைச்சொல்லி ஈயோட்டும் என் தளத்திற்கு நான் கூட்டம் கூட்டியதாக அண்ணன் பெருமையடைந்து கொண்டது! நான் பொதுவா அண்ணன் ஜோஸ்யப் பதிவை வாசிக்கிறதே இல்லை! ஆனால் அந்த தலைப்பை தமிழ்மணத்தில் பார்க்கும்போது எரிச்சலாக வரும்! நமக்குத்தான் இந்த ஜோஸியக்காரனுகனாலே எப்போவுமே ஆகாது! அண்ணன் பதிவுகள் ஜோஸ்யர்களை இன்னும் வெறுக்க வழி செய்யுது! :( ஆனால் "ரொம்ப பிரபலமான அண்ணன் சதீஷ்" பேரைச்சொல்லி நான் பொழைப்பை ஓட்டுவதாக அண்னன் சொன்னதும் எனக்கு கோபம்லாம் வரலை! என்னவோ அண்ணன் இப்படியும் தனக்குத்தானேப் பெருமை சேர்ந்த்துக்கொள்ளட்டும்னு சிரிச்சுப்புட்டு விட்டாச்சு!

இன்னைக்கு "தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமானு ஜோஸ்யத்தில் கணிப்பதாக" ஒரு பதிவைப்போட்டு எழவைக்கூட்டுது அண்ணன் சதீஷ்குமார். இதுமாதிரி ஏதாவது ஓரளவுக்கு யூகிக்கிற ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து ஜோஸ்ய ஆராச்சினு சும்மா எதையாவது கதை விடவேண்டியது! எனக்கென்னவோ அண்ணன் மாதிரி ஜோஸ்யர்களால் தமிழர்கள் எல்லாம் முட்டாள்களா மாறிக்கிட்டு போகிற மாதிரி இருக்கு! சனிப்பெயர்ச்சி, ஞாயிறுப் பெயர்ச்சி, வெள்ளிப்பெயர்ச்சி, ரஜினிகாந்தின் உடல்நிலைனு எதை எதையோ எழுதி எழவைக்கூட்டியது பத்தாதுனு இப்போ அண்ணன் சதீஷ் தீவிரவாதத்தை ஜோஸ்யத்தால் கணிக்கிறாராம்! இதுபோல் கேவலமான ஜோஸ்யப்பதிவுகள் எழுதி எல்லாரையும் அரைலூஸாக்குவதுக்காக அண்ணனை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்!

ஆமா அண்ணா சதீஷ்குமாரு, சாருவுடைய தேகம் படிக்காமலே அதுக்கு ஒரு பெரிய "ரெக்கமெண்டேஷன்" கொடுத்துப்புட்டு, அதை படிச்சு கிழிச்சுப்புட்டு மறுபடியும் விமர்சிக்கிறேன்னு சொல்லுச்சே? விமர்சிருச்சா? எங்கே தொடுப்பு?