Monday, May 21, 2012

சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்!

அப்பா, அம்மா குடும்பத்தினர் முன்னாலேயே, நீங்க ரொம்ப ஹாட், உங்களோட கொஞ்சம் டாண்ஸ் ஆடிக்கிறேன் னு "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் சின்னப் பொண்ணுங்க எல்லாம் வந்து சூர்யாவுடன் அவரோட கையை கோர்த்துக்கொண்டு டாண்ஸ் ஆடுறாங்க!

இதேபோல் ஒரு நடிகை ஹோஸ்ட்டாக இருந்தால் இளம் வாலிபர்கள் அவங்களோட டாண்ஸ் ஆடக் கூப்பிட்டால் அதை எல்லாம் எளிதாக எடுத்துக்குவாங்களா? னு தெரியலை! அந்த வாலிபர்களை மட்டமாப் பார்ப்பாங்கனு நெனைக்கிறேன்.

நம்ம சமுதாயம் ஒரு பக்கம் ரொம்ப பயங்கரமா  முன்னேறிக்கொண்டுதான் போகுது. நாளைக்கு ஒரு க்ரேஸி கேர்ல் சூர்யாவை பப்ளிக்கா கிஸ் பண்ணினால்க்கூட ஆச்சர்யப் பட எதுவும் இல்லை! இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா? ம்பாங்க! அதையெல்லாம் விஜய் TV அழகா எடிட் பண்ணிடுவாங்க என்பதெல்லாம்  வேற விசயம்.

சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம். அவங்க இருவருமே நடிகர்கள். ஆனால் இங்கே என்னடானா கல்லூரியில் படிக்கும் கல்யாணம் ஆகாத டீன் ஏஜ் பொண்ணுங்க எல்லாம் காசுவலாக நீங்க ஹாட், உங்களோட கனவுலதான் டாண்ஸ் ஆடியிருக்கேன், நிஜத்தில் ஆடனும்னு சூர்யாவுடன் நடனமாடுறாங்க!!

சூர்யா நிச்சயமாக மிகவும் நாகரிகமாக நடந்துகொள்கிறார்னு சொல்லனும். ஆனால் அவரோட அப்பா சிவக்குமார் இதையெல்லாம் பார்த்து அந்தப் பொண்ணுங்களை நெனச்சு, பெண்கள்  முன்னேறிட்டாங்கனு பெருமைப் படுவாரா?  இல்லை தலையில் அடிச்சுக்குவாரா? னு எனக்குத் தெரியலை! இல்லை அவரு கொஞ்சம் முந்திய ஜெனெரேஷனை சேர்ந்தவர் இல்லையா?

என்னவோ போங்கப்பா!


14 comments:

Unknown said...

டான்சோட நிறுத்திட்டாங்களேன்னு சந்தோசப்படுங்க

Jayadev Das said...

நேத்திக்கு ஒரு கல்யாணம் ஆன பொண்ணும் அவங்கம்மாவும் சேர்ந்து ஹாட் சீட்டுக்கு வந்தாங்க. செலக்ட் ஆனதும் ஓடிபோயி அந்த பொண்ணு சூர்யாவைக் கட்டி புடிச்சிகிட்டா. இதை அவ அம்மாவும் பாத்து சிரிச்சிகிட்டே தான் இருந்தா. ஆனா அவளோட புருஷ, யாரோ பெங்காளியாம், பார்த்து என்ன நினைச்சிருப்பானோ..?? அவனுக்கும் இதெல்லாம் சகஜம்தானோ தெரியல. சூர்யா வலியப் போயி ஆடறேன்னு சொல்வதில்லை, சில சமயம் தவிர்க்கவும் முயல்கிறார், தப்பு இந்த பேய்ங்க மேலதான்.

Jayadev Das said...

\\சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம்.\\ ஒரு கணம் யோசிங்க வருண். அவங்க வந்தது எதற்கு? எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சிக்கு. எய்ட்ஸ்எதனால வருது? தன் பெண்டாட்டியோட நிறுத்திக்காம ஊர் மேய்வதால. அங்க வந்த இவன் என்ன செய்தான்? அந்த பெட்டையை நாய் கவ்வுரமாதிரி கட்டிப் புடிச்சான், சுத்தி யாரு இருக்காங்கன்னு கூட பார்க்கம நடு ரோட்டில் நாய் பண்ற மாதிரியே அவளை எல்லோர் முன்னாடியும் முத்தம் குடுக்க ஆரம்பிச்சுட்டான். இது பார்க்கிறவன் பாலுணர்வைத் தூண்டுவது போல இருந்துச்சு, அது மட்டுமல்ல களவு செய்தலை ஊக்குவிக்கிற மாதிரியும் இருந்துச்சு. இதற்க்கு என்ன அவசியம் எற்பட்டுசுன்னே தெரியலே. வந்தவன் எய்ட்ஸ் பத்தி ஏதாவது நாலு வார்த்தை பேசிட்டு போயிருக்கலாம். அந்த நிகழ்ச்சியில அவளை இவன் எல்லோர் முன்னிலையிலும் அவ்வாறு செய்திருக்க வேண்டியதில்லை.

Jayadev Das said...

\\சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம்.\\ யோவ்.......கதையவே மாத்திட்டியா..... அவன் தான்யா கிஸ் குடுத்தான், இவ அதை வாங்கிகிட்டு இளிச்சிகிட்டு இருந்தா. That's all.

Jayadev Das said...

http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE

வருண் said...

***யோவ்.......கதையவே மாத்திட்டியா..... அவன் தான்யா கிஸ் குடுத்தான், இவ அதை வாங்கிகிட்டு இளிச்சிகிட்டு இருந்தா. That's all.***

***http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE***

என் தவறுதான். நன்றிங்க ஜெயவேல் for the youtube link! :) It seems like Richard Gere has got carried away and shilpa just "well-behaved" and tried not to embarrass the guest! :)

வருண் said...

***இரவு வானம் said...

டான்சோட நிறுத்திட்டாங்களேன்னு சந்தோசப்படுங்க

21 May 2012 7:44 AM***

அதானே? :)

வருண் said...

***Jayadev Das said...

நேத்திக்கு ஒரு கல்யாணம் ஆன பொண்ணும் அவங்கம்மாவும் சேர்ந்து ஹாட் சீட்டுக்கு வந்தாங்க. செலக்ட் ஆனதும் ஓடிபோயி அந்த பொண்ணு சூர்யாவைக் கட்டி புடிச்சிகிட்டா. இதை அவ அம்மாவும் பாத்து சிரிச்சிகிட்டே தான் இருந்தா. ஆனா அவளோட புருஷ, யாரோ பெங்காளியாம், பார்த்து என்ன நினைச்சிருப்பானோ..?? அவனுக்கும் இதெல்லாம் சகஜம்தானோ தெரியல. ***
பெண்ணின் செய்கை, அம்மாவுக்கும் கணவருக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பிடிக்காத மாதிரி காட்டுவதும் அநாகரிகம்னு சிரிச்சு வைக்கலாம். :)

I really dont understand. Dancing with an actor or actress makes them feel SO HAPPY?!!!

வருண் said...

***வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்***

வலைஞன்: நான் பொதுவாக நெறைய திரட்டிகளில் இணைக்காமல்த்தான் இருக்கேன். ரொம்ப பாப்புளர் ஆகிடுவோனோ/வேண்டாம்னு பயமும் கூடனு சொல்லலாம்! உங்க வலையுலகம் என்னனு பார்க்கிறேன். நன்றி. :)

சிரிப்புசிங்காரம் said...

கொழுந்து வெளக்கமாறு இருக்கில்ல.. கொழுந்து வெளக்குமாறுஅத கழுவிட்டு அடிக்கணும் அவளுங்களை இல்ல அவளுங்கள பெத்து போட்ட சிறுக்கிகளையும், பயளூங்களையுந்தான்......

ராஜ நடராஜன் said...

கிள்ளி விடறதுங்கிறது இதுதானா?

முதலில் சூர்யா சமத்தா நடந்துகிட்டாலும் சிவக்குமார் என்ன நினைச்சுக்குவாரோன்னு அங்கலாய்த்தீங்க!அப்புறம் பார்த்தா ரிச்சர்ட் கீர் ஷில்பாவை கிஸ் பண்ணிட்டார்ன்னு அவங்க இரண்டு பேருமே மறந்து போனதை போட்டுக்கொடுக்கிறீங்க:)

பெஃண்டசி ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது.அதில் நடிகையாகவோ நடிகராகவோ இருந்து விட்டால் பெஃண்டசி கொஞ்சம் அதிகமாவே தோணும்.

நான் சத்ருகன் சின்ஹா மற்றும் நாசர் கலந்துகிட்ட நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்துகிட்டிருந்தேன்.நம்ம ஊர்க்காரர் ஒருவர் வந்து சார்..சார் தேவிப்பிரியா கூட என்னை ஒரு போட்டோ எடுங்க சார் என்கிறார்:)

பம்பாய் ரேஞ்சுக்கெல்லாம் நாம் இந்தளவிலாவது இருக்கிறோமேன்னு சந்தோசப் படுங்க வருண்!

வருண் said...

***சிரிப்புசிங்காரம் said...

கொழுந்து வெளக்கமாறு இருக்கில்ல.. கொழுந்து வெளக்குமாறுஅத கழுவிட்டு அடிக்கணும் அவளுங்களை இல்ல அவளுங்கள பெத்து போட்ட சிறுக்கிகளையும், பயளூங்களையுந்தான்......***

நீங்க நம்ம நடராஜன் அண்ணாச்சி பின்னூட்டத்தையும் மறக்காமல் படிங்க! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

கிள்ளி விடறதுங்கிறது இதுதானா?

முதலில் சூர்யா சமத்தா நடந்துகிட்டாலும் சிவக்குமார் என்ன நினைச்சுக்குவாரோன்னு அங்கலாய்த்தீங்க!***

நெஜம்மாவே அவருடைய கருத்தை நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். I wish he shows up here and says what he thinks! :)

***அப்புறம் பார்த்தா ரிச்சர்ட் கீர் ஷில்பாவை கிஸ் பண்ணிட்டார்ன்னு அவங்க இரண்டு பேருமே மறந்து போனதை போட்டுக்கொடுக்கிறீங்க:)***

அவக்ன்க ரெண்டு பேருமே அதை இன்னும் மறக்கலையாம்னு நான் சொல்லவா?? :))

***பெஃண்டசி ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது.அதில் நடிகையாகவோ நடிகராகவோ இருந்து விட்டால் பெஃண்டசி கொஞ்சம் அதிகமாவே தோணும்.***

ஃபேண்டஸியை வெளியே சொல்லனும்னு அவசியம் இல்லைங்க. They can certainly fantasize as they wish. When you try, make your fantasy as "real", then it complicates! It is not fantasy anymore!

May be they are not just fantasizing "dancing" with him. They may be doing much more! They cant execute such fantasies, right? You have to draw a line at some point!

***நான் சத்ருகன் சின்ஹா மற்றும் நாசர் கலந்துகிட்ட நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்துகிட்டிருந்தேன்.நம்ம ஊர்க்காரர் ஒருவர் வந்து சார்..சார் தேவிப்பிரியா கூட என்னை ஒரு போட்டோ எடுங்க சார் என்கிறார்:)***

LOL

***பம்பாய் ரேஞ்சுக்கெல்லாம் நாம் இந்தளவிலாவது இருக்கிறோமேன்னு சந்தோசப் படுங்க வருண்!

21 May 2012 12:32 PM***

நம்ம முன்னோறுகிறோம்னு சந்தொச்ஷப்படனும்னு சொல்றீங்க. சரிங்க, நல்ல கருத்து! :)

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா கிளம்பிட்டாங்களா இனி சமுதாயம் மெல்ல வாழும்...!!!