Friday, November 16, 2012

டோண்டு ராகவர் சொன்னது சரிதான்! சாதி ஒழியாது!

நம்ம ஐயங்கார்வால் டோண்டு ராகவர், "சாதியை மெனக்கெட்டு ஒழிக்க வேண்டியதில்லை! நீங்க என்னதான் ஒழிச்சாலும் அது ஒழியாது! நம்ம சாதிதான் உயர்சாதினு நெனச்சுண்டு வாழ்ந்தா தப்பே இல்லை!"  என்கிற கருத்தை மையமாக வைத்துப் பதிவெழுதும் போதெல்லாம் எரிச்சல்தான் வரும்! ஆனால் உண்மையில் "தமிழ்நாட்டில் சாதி ஒழியுமா?" என்ற கேள்வி மனதில் தோன்றும், எங்கேயோ இடிக்கும். "ஒழியவே ஒழியாது போல" னு மனசாட்சி  சித்ரவதை செய்யும்.

சமீபத்திய பரமக்குடி குருபூஜை சம்பவம் (இந்த முறை இழப்பு முக்குலத்தோருக்கு என்பதை மனதில் கொள்ளவும்!), இப்போ தர்மபுரி சம்பவம் (இழப்பு தலித்களுக்கு) எல்லாத்தையும் பார்க்கும்போதும், அதைப் பற்றி நம் மக்கள் எதுவும் கிளறாமல் "கள்ள மெளனம்" சாதிப்பதையும் பார்த்தாலே தெரியும், பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் எல்லா "உயர்சாதி இந்துக்களும்" தன் சாதிதான் உயர்சாதி னு பெருமையில்தான் முட்டாள்களாக வாழ்ந்துகொண்டு இருக்காங்க என்று. அதிலும், இன்றும் தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் குறைவாக நினைக்கிறாங்க.  இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம்/சூழ்நிலை வரும்போது, பார்ப்பனர்களைவிட "திராவிட உயர்சாதி ஹிந்துக்கள்தான்" அதிக (முக்கியமாக முக்குலத்தோர், வன்னியர்கள்) சாதிவெறி பிடிச்சவங்க என்பது தெளிவாகத் தெரியுது.

பச்சையா உண்மையை உலக நடப்பை பேசுவோம்..

இன்றைய சூழல்களில், உண்மை நிலவரம் என்ன?  கிராமங்கள், சிறு நகரங்கள் எல்லாவற்றிலுமே பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல், வன்னியர், முக்குலத்தோர்கள், கவுண்டர், வெள்ளாளர், முதலியார், கோணார், நாடார், நாயக்கர், ரெட்டியார் அப்புறம் "விட்டுப்போனவர்கள்"  ஏன் தலித்கள்கூட சாதியை கட்டிப்பிடிச்சுக் கிட்டுத்தான் அழுதுக்கிட்டு இருக்காங்க. அதை எவனும் மறுக்க முடியாது!

தலித்கள் அல்லாத எல்லா சாதிக்காரர்களும் (இவர்கள் என்ன தொழில் செய்தாலும், சுத்தமாக இல்லாவிட்டாலும்) தன்னையும் தன் சாதியை பெருசாவும் உயர்வாகத்தான் நெனச்சுக்கிட்டு சாதித் திமிருடன் இருக்காங்க.

தங்களை, "பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர்கள்" என்றல்லாம் வகைப்படுத்தி  அரசாங்கக் காதிதங்களில் (தேவையான நேரங்களில்) எழுதிக்கிட்டாலும், உண்மையில் தன் சாதியை  உயர்சாதி என்பதுபோல்தான் உயர்வாக நெனச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு சாதிவெறியுடன்தான் உயர்சாதி திராவிட இந்துக்கள் வாழ்றாங்க. அதே நேரத்தில்  ரிசெர்வேஷனை மட்டும் வெகுகவனமாக  தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்றாங்க. இதில் இன்னொரு பரிதாபம் என்னனா ரிசெர்வேஷன் அவர்கள் உயர்வுக்கு  நிச்சயம் தேவை என்பதால், தாழ்த்தப்பட்டவர்களும் அவங்களுடைய  சாதிச்சாயத்தை விட்டு முழுவதும் வெளிவரமுடியாத ஒரு சூழலில் மாட்டிக்கிட்டாங்க. அவர்கள் தேவைக்காக  அவர்களுடைய சாதிச்சாயத்தைவிட்டு அவர்களும் வெளியே வரமுடியாது என்பது கசப்பான உண்மை!

மற்றபடி சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வு ஓரளவுக்கு ஒழிவது எங்கே என்று பார்த்தால்.. நாடுவிட்டு நாடு சென்று செட்டில் ஆனவங்ககிட்டதான்னு சொல்லலாம். அதுவும் வேறு நாட்டில் செட்டில் ஆகி  ஒரு ஜெனெரேசன் ஆன பிறகு அவர்கள் சந்ததியினர் யாரும் சாதி பார்ப்பதில்லை. அங்கே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சாதியை ஊட்டுவது மிக மிகக் கடினம் என்பதும் ஒரு முக்கியக்காரணம். சவுத் ஆஃப்ரிக்கா, ஈழம், வட அமெரிக்கா, கனடா, யு கே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்களுக்கு ரிசர்வேஷனும் கெடையாது, சாதியும் பொதுவாக யாரும் பார்ப்பதில்லை- ஒரு சில லூசுகள் தவிர்த்து.

சரி இப்போ நடக்கிற இந்த சாதி வெறி, அடி தடி சண்டை, தீ வைத்து எரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு???

* பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்கள் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தங்களையும்  தன் சாதியையும் மற்ற சாதிகளை எல்லாம்விட உயர்வாக நினைத்துக்கொள்ளனும்.பிறப்பால் எல்லாரும் சமம்தானே? அவன் உயர்வுனா நீங்களும் அதே அளவு உயர்வுதான்!

* தன்னை சாதி அடிப்படையில் மட்டம் தட்டும் மற்ற சாதிக்காரர்களை இவர்கள் மட்டமாக  நினைத்துக் கொண்டு, தேவையென்றால் சுத்தமாக அந்த மூடர்களிடம் இருந்து நாகரிகமா, சட்ட உதவியுடன் ஒதுங்கிப் போயிடனும். இது கோழைத்தனம் இல்லை! முட்டாள்களைப் பார்த்து ஒதுங்கிப்போவது புத்திசாலித்தனம்.

*  மற்ற கீழ்ப்புத்தி உள்ள உயர்சாதிக்காரனோட அவர்களே விரும்பி வந்தாலும் திருமணம் சம்மந்தம் செய்வது நமக்கு இழுக்கு என்று திடமாக எண்ண வேண்டும். அந்த கருத்தை தன் சாதி சனம், குழந்தைகள் சொந்தக்காரங்க எல்லாரிடமும் எடுத்துச் சொல்லி  அந்த நம்பிக்கையை அவங்க சமூகத்தில்  வித்திட்டு, வளர்த்து, தன்னை உயர்வாக சமுதாயத்தில் ஆக்கிக்கனும். அப்படி இவர்கள் தன்னையும் தன் சாதியையும், தன் சாதி சனங்களையும் உயர்வாக எண்ணி தன் சாதிக்காரவுங்களோடமட்டும் உறவுகள் வைத்துக்கொண்டு, இந்த உயர்சாதி முட்டாள்களிடமிருந்து ஒதுங்கி  சந்தோஷமாக வாழ்வதே இப்போதைக்கு நல்ல முடிவாத் தெரியுது. 

* முக்கியமாக கலப்பு மணத்தை இவர்களே சீரியஸாக புறக்கணிக்கனும். கலப்பு மணம்னு வரும்போதுதானே யார் உயர்ந்த சாதி என்கிற கேள்வியே வருது? அதன் விளைவால்தான் பல பிரச்சினைகள் தலைதூக்குது. இன்று திருமணம் சுமூகமாக முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சாதிப் பிரச்சினை வெடிக்கலாம். அதனால் இவங்களே அதுக்கு வாய்ப்பே கொடுக்கலைனா என்ன பிரச்சினை வரப்போது  சொல்லுங்க? 

என்னுடைய ஆலோசனை கேவலமாக, மட்டமாக இருக்கலாம்.. ஆனால் இதைத்தவிர எனக்கு எதுவும் " practical solution"ஆகத் தெரியவில்லை! 

சும்மா நம்ம பதிவுலகில் சாதியை ஒழிக்கனும், எல்லாரும் சமம்தான் னு கத்துறதுனால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! இந்த உயர்சாதி முண்டங்கள் ஒரு போதும் தன்னைப்போல் மற்றவர்களை மதிக்கக் கத்துக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்!

17 comments:

ப.கந்தசாமி said...

//இந்த உயர்சாதி முண்டங்கள் ஒரு போதும் தன்னைப்போல் மற்றவர்களை மதிக்கக் கத்துக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்!//

ஆனால் "பிராமணாள் கபே" யை கண்டிப்பாக எதிர்ப்போம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொல்வது உண்மைதான் வருண்.சாதிகளை பகுத்தறியும் அறிவுதான் மறுக்கிறதே தவிர உண்மையில் மனம் ஏற்பதில்லை. கலப்புமணம் செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் நாம் செய்தது தவறோ என்று நினைப்பதும் உண்டு.

ராஜ் said...

பாஸ், நீங்க தமிழ்நாட்டுல எந்த ஊர்ன்னு தெரியில ...நான் தென் மாவட்டம் ....
தென் மாவட்டதில நான் பார்த்த வரைக்கும் இன்னும் ரெண்டு-முனு தலைமுறைக்கு ஜாதி ஒழியாது .. ஏங்க 9 ஆவது படிக்கிற பையன் தலையில ரிப்பன் கட்டிக்கிட்டு குரு பூசைக்கு கிளம்பி போறான்....அவங்க கூட எல்லாம் பேசவே முடியாது.....சின்ன வயசுல இருந்தே ஜாதி வெறி ஊட்டபடுகிறது .

Amudhavan said...

இங்கே கர்நாடகத்தில் அரசியல் எல்லாம் சாதி அடிப்படையில் மிகவும் வெளிப்படையாகத்தான் நடத்தப்படுகிறது. முன்பெல்லாம் விவரம் தெரிவதற்கு முன்னால் நான்கூட ரொம்பவும் வருத்தப்படுவேன். இந்த கர்நாடகக்காரர்களெல்லாம் என்ன இப்படி சாதியைக் கட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்களே, நம்ம தமிழ்நாட்டில் சாதியை எல்லாம் இல்லாமல் ஒழிச்சிட்டு எத்தனைப் புரட்சிகர மக்களா நம் தமிழ் சமூகம் வாழ்ந்துகிட்டு இருக்குதுன்னு........ ஆனால் பிற்பாடுதான் தெரியுது உள்ளுக்குள் சாதி எந்த அளவுக்கு வேரோடிப்போய் எல்லா விஷயங்களும் இங்கே சாதி அடிப்படையில்தான் நிகழ்த்தப்படுகின்றன என்பது. மேம்போக்காக அரசியலுக்காக சாதி அடையாளங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டது போன்ற தோற்றம் நமக்கு சௌகரியமானதொன்றாக இருக்கிறது. சாதியப்போர்வை போர்த்தப்பட்ட தமிழன் மேலே பார்ப்பதற்கு நீட்டாகவும் உள்ளே மிருகத்தை மறைத்துவைத்துக்கொண்டும்தான் உலவிக்கொண்டிருக்கிறான். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போதுதான் மற்ற மாநிலங்களில் இருப்பதுபோன்ற வெளிப்படையான சாதி உணர்வுகள் எந்தப் பிரச்சினையையும் கொண்டு வராது என்றே தோன்றுகிறது. அவனவனுக்குப் பிடித்தம் இல்லையென்றால் அப்போதே விலகிப்போய்விடுகின்ற சாத்தியம் வெளிப்படையாகவே இருக்கிறது.
சர்டிபிகேட்டுகளில் என்றைக்கு சாதி கேட்கப்படுவது நீக்கப்படுகிறதோ அன்றையிலிருந்துதான் மாறுதலுக்கான வித்து இந்தியாவில் ஊன்றப்படும்.
உங்களுடைய ஆதங்கமும் யோசனைகளும் பாராட்டுக்குரியவை.

hitechramesh said...

dear friends,
once there was a golden opportunity missed by our leaders when our country got freedom.
See reservation is must but not on the basis of the caste

it must be on the asis of the income
if this would be applied from the beginning then things will be more different

Arun Ambie said...

காலம் கடந்த ஞானோதயம்....
இதை முகநூலில் பகிர்கிறேன்....

Anonymous said...

நியாயமான கோபம் என்றாலும், உலக மயமாக்கல், கல்வி, கலப்பு மணம் நிச்சயம் சாதியை ஒழிக்கும்.. SC/ST -களை தவிர ஏனையோருக்கு ரிசவேர்சன் தேவை இல்லை என்பது என் கருத்து. நீங்கள் கொங்கு மண்டலம் தானே ! அங்கும் வெள்ளாளர் ஆடும் ஆட்டம் பற்றி கொஞ்சம் எழுதலாமே

Robin said...

//SC/ST -களை தவிர ஏனையோருக்கு ரிசவேர்சன் தேவை இல்லை என்பது என் கருத்து.// பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை கலப்பு திருமணம் செய்கிறவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும்.

சார்வாகன் said...

நண்பர் வருண்
கல்ப்பு மணம் தவிர்த்தல் என்பது தவிர அனைத்து கருத்துகளுக்கும் உடன்படுகிறேன்.
தலித்கள் தவிர இத இட ஒதுக்கீடு பயனாளிகளுக்கு பொருளாதார அடிப்படை கொண்டு வரலாம் .முன்னேறிய ஆதிக்க சாதியினருக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது!!.

நன்றி

ssk said...

தமிழனிடம் இருந்து எல்லாம் வேண்டும்... ஆனால் அவனை இழிவு படுத்தி வருவதை பார்ப்பான் நிறுத்துவதில்லை...அவன் கண்டு பிடித்து இன்று வரை வளர்த்து வரும் சாதி மட்டும் எப்படி அழிவு பெரும்?மூல காரணம் இன்றும் சிறப்பாக உள்ளதால், மற்ற மக்கள் அது எதோ பெரும் சிறப்பானது என்று அவர்களும் வளர்கிறார்கள். இதெற்கெல்லாம் காரணமான பார்பனியம் ஒழிந்தால், சாதியின் அடிப்படையான . அவாளின் கண்டுபிடிப்பான கடவுளின் சாதிக்கான அனுமதி ஒழியும். அதன் பின் மக்கள் அன்புடன் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு மக்களுக்கு பகுத்தறிவும் சிந்தனை திறனும் வளர வேண்டும்.

suvanappiriyan said...

இந்து மதத்தில் இருக்கும் வரை சாதி இருக்கும். தீண்டாமை இருக்கும். யாருக்கும் சிக்கலில்லாமல் கத்தியின்றி யுத்தமின்றி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் இஸ்லாத்துக்கு மாறுவதே எனக்கு தெரிந்த தீர்வு. அது ஒன்றினால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும். கசப்பாக சிலருக்கு இருந்தாலும் வேறு வழியில்லை. ஆரம்ப காலங்களில் சில சிக்கல்கள் இருந்தாலும் வருங்காலத்தில் தீண்டாமை என்ற அரக்கனிடம் இருந்து நிரந்தர விடுதலை பெறலாம். என் கருத்து சிலருக்கு தவறாகக் கூட இருக்கலாம்.

உங்ககிட்டேயும் ராவுத்தர் லெப்பை தக்னி மரைக்காயர் என்று இல்லையா என்று கேட்கலாம். எனது குடும்பத்தில் இந்த அனைத்து பிரிவுகளிலும் சொந்தங்கள் உண்டு. பெண் எடுத்து பெண் கொடுப்போம். அனைவருக்கும் ஒரே பள்ளி. ஒரே வணக்க முறை. பிரிவு வெறி இங்கு கிடையாது. வெட்டு குத்து என்று இதுவரை எங்கும் கேள்விப் பட்டதில்லை.

திருமண தகவல் பகுதியில் நீங்கள் முஸ்லிம்களை பெரும்பாலும் பார்த்தால் இனம், பிரிவு என்ற இரண்டு இடத்திலும் முஸ்லிம் என்றே வருவதைப் பார்க்கலாம். சில பேர் பிரிவு என்ற இடத்தில் 'எதுவும் ஓகே' என்று குறிப்பிட்டுள்ளதையும் பார்க்கலாம்.

Anonymous said...

இஸ்லாமுக்கு மாறுவது பற்றி சகோ கூறுகின்றார். நாம் எந்த இஸ்லாமுக்கு மாறுவது .. சுன்னி - வகாபி - சலாபி, சியா - சுபி, அல்லவி, அல்லேவி, அமதியா, குரானிஸ்ட், நேசன் ஆப் இஸ்லாம் இப்படி நீளும் லிஸ்டில் எதில் சேருவது ..

அகமதியாவில் சேர்ந்தால் சுபி அவர்கள் குடும்பத்தில் இருந்து பெண் கொடுக்க முன் வருவாரா ?!!!

சார்வாகன் said...

@சகோ சு.பி
//உங்ககிட்டேயும் ராவுத்தர் லெப்பை தக்னி மரைக்காயர் என்று இல்லையா என்று கேட்கலாம். எனது குடும்பத்தில் இந்த அனைத்து பிரிவுகளிலும் சொந்தங்கள் உண்டு. பெண் எடுத்து பெண் கொடுப்போம். அனைவருக்கும் ஒரே பள்ளி. ஒரே வணக்க முறை. பிரிவு வெறி இங்கு கிடையாது. வெட்டு குத்து என்று இதுவரை எங்கும் கேள்விப் பட்டதில்லை.

திருமண தகவல் பகுதியில் நீங்கள் முஸ்லிம்களை பெரும்பாலும் பார்த்தால் இனம், பிரிவு என்ற இரண்டு இடத்திலும் முஸ்லிம் என்றே வருவதைப் பார்க்கலாம். சில பேர் பிரிவு என்ற இடத்தில் 'எதுவும் ஓகே' என்று குறிப்பிட்டுள்ளதையும் பார்க்கலாம்.//

இப்படி இந்திய முஸ்லிம் அல்லது தமிழக முஸ்லிம் அனைவராலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையா என்ற கேள்வி ஒருபுறம் என்றாலும் இது நடப்பதாக வைப்போம்.

உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் மூமின் பிரிவுகள் குழப்த்தினால்(ஃபித்னா) சண்டையிடுகிறார்கள்.ஆனால் காஃபிர் நாடான இந்திய(தமிழ்நாட்டில்) வாழும் மூமின்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றல் என்ன பொருள்?.

காஃபிர்களே மூமின்களை அமைதியாக் வாழ வைக்கிறார்,குழப்பம் நீக்குகிறார். ஹி ஹி.

எல்லாப் புகழும் (தமிழக) காஃபிர்களுக்கே!!!

ஆகவே ஒரு நாட்டில் மூமின்கள் பெரும்பான்மை ஆகாத வரையில் யாருக்கும் சிக்கல் இல்லை!!!. இதை வருண் மச்சான் நம்து பதிவில் ஒத்துக் கொண்டார்.

டிஸ்கி: என்னை மத மாற்றம் வேண்டாம் என்பதற்கு வருண் மச்சான் என்னை அன்போடு பண்டாரம்,பரதேசி, இந்துத்வா என திட்டலாம்.அது அவர் உரிமை. நம் கடன் அனைவருக்கும் (குறிப்பாக் மூமின்களுக்கு) பணி செய்து கிடப்பதே!!!

(அத்தாட்சிகளை) சிந்திக்க மாட்டீர்களா!!!!!

நன்றி

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//இஸ்லாமுக்கு மாறுவது பற்றி சகோ கூறுகின்றார். நாம் எந்த இஸ்லாமுக்கு மாறுவது .. சுன்னி - வகாபி - சலாபி, சியா - சுபி, அல்லவி, அல்லேவி, அமதியா, குரானிஸ்ட், நேசன் ஆப் இஸ்லாம் இப்படி நீளும் லிஸ்டில் எதில் சேருவது ..//

எத்தனை பிரிவுகள் இருந்தாலும் ஒரு குர்ஆன் தான், ஐந்து வேளை தொழுகைதான், ஹஜ், ஏழை வரி அனைத்தும் ஒன்றுதான். ஒரு சில சட்டங்களில் இவர்களுக்குள் சிறு வேறுபாடு. முக்கிய கடமைகள் அனைத்தும் அனைவருக்கும் ஒன்றே.

புதிதாக வருபவர் எந்த பிரிவிலும் சேராமல் குர்ஆனை பின் பற்றினாலே போதுமானது.

//அகமதியாவில் சேர்ந்தால் சுபி அவர்கள் குடும்பத்தில் இருந்து பெண் கொடுக்க முன் வருவாரா ?!!!//

முகமது நபியை கடைசி தூதராக ஏற்றுக் கொண்டால் பெண் கொடுத்து எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

சகோ சார்வாகன்!

//உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் மூமின் பிரிவுகள் குழப்த்தினால்(ஃபித்னா) சண்டையிடுகிறார்கள்.ஆனால் காஃபிர் நாடான இந்திய(தமிழ்நாட்டில்) வாழும் மூமின்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றல் என்ன பொருள்?.//

சவுதி அரேபியாவில் இன்று வரை அமைதியாக எந்த ரத்தக் களறியும் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறதே!

ஆக குறை இஸ்லாத்தில் இல்லை. அந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் உள்ள குறையால் அந்த நாடுகளில் குழப்பம் நிலவுகிறது.




சார்வாகன் said...

சகோ சு.பி

நான் சொலவதையே வலியுறுத்துகிறீர்கள்
//சவுதி அரேபியாவில் இன்று வரை அமைதியாக எந்த ரத்தக் களறியும் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறதே!//

சவுதியைக் காப்பாற்றி வருவதே அமெரிக்க காஃபிர் படைகள்தான். மெக்கா தக்குதலின் போதே மூமின்களிடம் இருந்து காபாவை காப்பற்றியதேஎ காஃபிர்கள்தான்.
சவுதியில் போராட முடியாது. தமிழகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு உள்ள‌ உரிமைகள் சவுதியில் சவுதிப் பெண்களுக்கு கூட கிடைக்காது.
எ.கா ஓட்டுரிமை, கார் ஓட்டுதல்

//ஆக குறை இஸ்லாத்தில் இல்லை. அந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் உள்ள குறையால் அந்த நாடுகளில் குழப்பம் நிலவுகிறது.//

ஆகவே இஸ்லாமால் நல்ல ஆட்சியாளர்களை உருவாக்க முடியாது.ஆனால் காஃபிர்களால் முடிகிறது.

காஃபிர்கள் நாட்டுக்கு எப்படியாவது புலம் பெயர துடிக்கும் மூமின்களின் செயலால் உறுதிப் படுத்தப்படுகிறது.

மூமின் நாடுகள் எவ்வள்வு பெரிய அப்பாடக்கர் மூமினுக்கும் குடியுரிமை வழங்காது. வழங்கினால் இனச்சிக்கல் எதிர்கால்த்தில் வரும் என்பதால் மட்டுமே!!!

ஆனால் காஃபிர் நாடுகளில் பல் இன மக்கள் இணைந்து மகிழ்வாய் வாழ்கிறார்.

ஆகவே இஸ்லாமை காப்பாற்றுவதே காஃபிர்கள்தான்!!!

அப்படி இருக்கும் போது இஸ்லாமுக்கு செல்வது எப்படி காஃபிருக்கு பாதுகாப்பு ஆகும்?

ஆகவே இஸ்லாமைக் காப்பாற்ற, அமைதி வழியில் நடத்த காஃபிர்கள்(என்னைப் போல்) பாடுபட வேண்டும்!!

நன்றி

வருண் said...

நண்பர்கள் அனைவருடைய புரிதலுக்கும், கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.

இதைப்பத்தி இதுக்கு மேலே நான் பேச ஒண்ணுமில்லை.

நான் சொல்லவேண்டியதை எல்லாம் பதிவில் சொல்லிட்டேன். பாதிக்கப்படுபவர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) அவங்களை காப்பாத்த/பாதுகாத்துக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொள்ளனும்.

நம்ம இவங்க அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்லலாம். அவங்கதான் முடிவு செய்யனும். அவங்களுக்காக நாம் வருந்துவதைத்தவிர வேறெதுவும் செய்ய இயலாது.

suvanappiriyan said...

//சவுதியைக் காப்பாற்றி வருவதே அமெரிக்க காஃபிர் படைகள்தான்.//

ஹா..ஹா...நல்ல காமெடி. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அவர்களின் ராஜ்ஜியம்தானே! அங்கு ஏன் அமைதியை கொண்டு வர முடியவில்லை?