Monday, June 10, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-4

ஜானகிராமனின் மரப்பசு.  இந்தக் கதை பத்தி ஏகப்பட்ட தடவை எழுதியாச்சு. விமர்சித்தாகிவிட்டது. அம்பைனு ஒருவர் எழுதிய விமர்சனம் பத்தியும் பேசியாச்சு. மீள் பதிவும் போட்டாச்சு.

 மரப்பசு பற்றி அம்பையின் குதர்க்க விமர்சனம்! இல்லை குதர்க்கசனம்!


என் விமர்சனங்களை படிக்கும் பலருக்கு ஒரு ஒப்பீனியன் உண்டு. ஜானகிராமன் மிகப் பெரிய எழுத்தாளர். அதாவது எழுத்தாளர்களின் எழுத்தாளர் (சாவி சொல்வார்னு அமுதவன் சார் ). அப்படிப்பட்ட அவரை விமர்சிக்கும்போது கவனமாக இருக்கனும்.  இதுதான் பொதுவாகப் பலருடைய எண்ணம்.

இன்னும் சிலருக்கு என்ன ஆதங்கம்னா.. ஜானகிராமனை விமர்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு? நாலு வரி தமிழில் பிழை இல்லாமல் எழுதத் தெரியாது உனக்கு. நீ எப்படி எழுத்தாளரின் எழுத்தாளர் ஜானகிராமனை இஷ்டத்துக்கு விமர்சிக்கலாம்? என்பதுதான் பலருடைய கருத்து. அவரவர் கருத்து அவரவருக்கு இருந்துட்டுப் போகட்டும். எல்லோரையும் திருப்திப் படுத்தணும் என்பது நமக்கு அவசியம் இல்லாத ஒண்ணு.   உலகிலே உயர்வானவர் னு சொல்ற கற்பனைக் கடவுளயே நாம் விமர்சிக்கப் பயப்படுவதில்லையே? சாதாரண மனுஷந்தானே ஜானகிராமன்? இப்படி எல்லோரையும் மேலே தூக்கி வைத்தே நாசமாக போனவர்கள்தானே நாம்?

சரி, மரப்பசு பத்தி பார்ப்போம்..

அதாவது ஒருத்தி இளம் பெண் (அம்மணி)  ஆக இருக்கும்போது இளமை, அழகு, கரை புரண்டு ஓடும் காமம் இதெல்லாம் வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு இளமையில் பயமறியாது ஆடுகிறாள். இவள் உடலுறவு கொண்டவர்களில் சிலர்.. கோபாலி, ப்ரூஸ்னு ஒரு ப்ரிடிஷ் சோல்ஜர், பட்டாபி இப்படி பலர். நூற்றுக்கணக்கில். ஆனால் அவள் வேசியல்ல! காமம் பற்றி ப்ராக்டிக்லாக கற்றுக் கொள்கிறாள்.

 ஆனால் அவளுக்கு நடுவயதைத் தொட்டு நரை விழ ஆரபிக்கும்போது ஒரு சின்ன பயம் வருகிறது (அப்படினு ஜானகிராமன் சொல்றார்). முதுமை வந்த பிறகு எல்லாமே போய் விடுமே? அழகு இளமை  போன அந்நிலையில் தன்னைக் கரிசனமாக பார்த்துகொள்ள யாராவது ஒரு பெரியமனதுள்ள ஜீவன் தேவை . அப்படி இல்லை என்றால் வயதான உடன் தன்னை மதிக்க, கவனிக்க யாருமில்லாமல் வாழ்க்கையில் டிப்ரெஸன் மேலோங்கி நிற்கும்னு பயம் வந்து விடுகிறதுனு சொல்லுகிறார்.

அம்மணியை உருவாக்கி ஊர் மேயவிட்டது ஜானகிராமன்தான். வெள்ளைக்காரனிடம் படுக்க விட்டதும் ஜானகிராமந்தான். எல்லாம் செய்துவிட்டு திடீர்னு அம்மணிக்கு வயதானால் என்ன ஆகும்? னு யோசித்து அவளுக்கு ஞானோதயம் ஏற்பட வைக்கிறார்.

 பசு பால் கொடுக்கும் வரைதான் மரியாதை. கடைசிகாலத்தில் அதை தனக்கு பால் கொடுத்த நன்றிக்காக அதிடம் பால் பெற்றவன் கொஞ்சம் கவனிப்பான். அதே கோவில் மாடு அல்லது தெரு மாடாகத் திறிந்தால் அனாதைப் பிணம்தான். ஆனால் மாட்டை வளர்த்து கோமாதானு சொல்லிக் கொண்டு அதிடம் இருந்து பாலைத் திருடினவன் அது இறந்த பிறகு அனாதைப் பிணமாக விடாமல் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்வான். ஒரு வேளை மரப்பசுவாக இருந்து இருந்தால்? ஆடுறதெல்லாம் ஆடிட்டு வயதான காலத்தில் ஏதாவது தத்துவம் பேசுவாங்க இல்லையா? அதுபோல்தான். 

பசுவை விடுங்க, அம்மணியை விடுங்க. நம்ம நடிகைகள எடுத்துக் கோங்க. பத்மினி, கே ஆர் விஜயால இருந்து நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் வரைக்கும். யாருங்க பத்மினி. இந்தக் கிழவியா? இதே நிலைதான் இன்னும் 30 வருடத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றோர்க்கும்.

பசு, நடிகையை விடுங்க. பெற்ற அப்பா அம்மாவையே வயதான பிறகு பெற்ற பிள்ளைகள் சுமையாகத்தான் நினைக்கிறாங்க. நம்மைச் சுத்திப் பார்க்கிறோம் இல்லையா? அவர்களுக்கு சொத்து அல்லது பெரிய தொகையாக ஏதாவது பென்ஷன் வந்தால் ஓரளவுக்கு தப்பிப்பாங்க. உலகம் இவ்ளோதான். உங்களுக்கும் எனக்கும் நாளை இதே நிலைதான்.

இதயெல்லாம் வயதான பிறகு நம்ம வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் போல் புரிஞ்சுக்க வேண்டியதில்லை. இன்று நீ நாளை நான் என்று இன்றே உணர்ந்து வாழலாம்தான். கதை இவ்ளோதான். இதில் வழக்கம்போல் பல விசயங்கள புகுத்தி இருப்பார்.

கோபாலி,

இளம் பெண் அம்மணியை ஊர் உலகிற்கு வளர்ப்பு மகள்ணு சொல்லிக்கொண்டு அவள வைத்து இருப்பார். அம்மணியின் சம்மதத்துடந்தான்.

வயதான காலத்தில், மரகதம் என்னும் வேலைக்கார பெண்னிடமும் தன் காமத்தேவைக்காக தவறாக நடந்து கொள்ள முயல்வார்.

திறமைனு பார்த்தால் கோபாலி மிகவும் டாலெண்டட் ஆள்தான்.
சபலம், காமம் யாரை விட்டது?

ஆம்பளனா இப்படித்தான்.பர்வேட்ஸ்! ஆம்பளைங்களுக்கு என்ன வேணும்? அம்மணிக்கு 36 ஆச்சுனா , 20 வயது பெண், மரகதம் மேல் காதல் வந்து விட்டது நம்ம கோபாலிக்கு!

அம்மணி,

மேலே சொல்லியாச்சு இவள் பத்தி. இவதான் மரப்பசு. ஒருவனுக்கு ஒருத்தினு வாழும்போது, ஒரு பெண் ஒரு ஆணுடன்தான் உறவு கொள்ளுகிறாள்- காலம் முழுதும். ஆண்கள் பலவிதம். ஒரே ஆளுடன் காலங்காலமாக உறவு கொள்வதால் பொதுவாக காமம் பற்றி ஓரளவுக்கு இக்னொரண்ட் ஆகத்தான் வாழ்ந்து சாகிறாள். அதே நேரத்தில் ஒரு வேசி யை எடுத்துக் கொண்டால், காமம் சம்மந்தமான அனுபவம் அவளுக்கு அதிகம்தான். எஸ் டி டி அனுபவமும்தான். அதேபோல்தான் ஊர் மேயும் ஆண்களுக்கும். However you need to understand about sex. No matter how many people you sleep with you are never going to be satisfied when it comes to sex. There is going to be some nice pieces of asses BEYOND or out of  your reach always.

-தொடரும்



2 comments:

G.M Balasubramaniam said...

ஜானகி ராமனை இன்னும் விடவில்லையா

வருண் said...

வாங்க சார். இப்போத்தான் ஆரம்பிச்சு இருக்கேன் சார்! :)