Tuesday, June 4, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-2

நளபாகம்!  தஞ்சாவூர் பிராமண வாழக்கை பற்றி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் ரெண்டாவதுதான். ஜானகிராமன் எந்தளவுக்கு தான் ஒரு கீழ்த்தரமான ஒரு ஆம்பளை என்பதை இக்கதையில் காட்டிவிடுவார்.

இது ஒரு  இளம் பெண், அதாவது ஒருவனின் மனைவி, இன்னொரு ஆண் நினைவில் "ஃபேண்ட்சசைஸ்" செய்கிற மாதிரி கதை எழுதி இருக்கிறார் என்பதே உண்மை.

அப்பட்டமான போர்னோக்ராஃபி கதையை ஆச்சாரமாக பூஜை, கடவுள் எல்லாவற்றயும் கலந்து எழுதி இருப்பார். ஆனால் ஜானகிராமன் பர்வேர்சனை தெளிவாகக் காணலாம்.

கதை?

நாயகி ரங்கமணிக்கு குழந்தைப் பைத்தியம்.

வீட்டில் ஒரு குழந்தை வேணும்! இப்போது விதவை. மாமியார் ஸ்தானத்தில் ரங்கமணி. இருந்தாலும் நடுவயதுப் பெண்தான். இவளுக்கு குழந்தை இல்லைனு தத்தடுத்து துரைனு ஒரு வளர்ப்பு மகன் இருப்பான். அவனுக்கு மனைவி, பங்கஜம், ரங்கமணியின் ஆசை மருமகள். மாட்டுப்பெண்., பங்கஜதத்துக்கும் குழந்தை இல்லை. இதனால் ஒரு மாதிரி மனநோயாளி ஆகி விடுவாள், ரங்கமணி. எப்படியோ அந்த வீட்டில் ஒரு குழந்தை வேணும்.

வர வர வளர்ப்புமகன் ஆண்மை வீரியத்தில் ரங்கமணிக்கு சந்தேகம் வந்துவிடும். அவன் பங்கஜத்துடன் நல்லா உறவு கொண்டு அவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லை அவனுக்கும் ஆண்மை குறைவு இருக்கிறதா? ஒரு வேளை அவன் நல்ல ஆண்மகனா இல்லைனா? வீட்டில் குழந்தை சத்தம் கேட்காதே? என்கிற பயம் வந்துவிடும் ரங்கமணிக்கு.

எப்படியோ தன் மாட்டுப்பெண் பங்கஜத்திற்கு ஒரு குழந்தை பிறக்கனும். அது மகன் துரையால் பிறக்குதோ அல்லது இன்னொரு ஆணூடன் பங்கஜம் உறவு கொண்டு பிறக்கிறதோ. அதைப் பத்தி எல்லாம் ரங்கமணிக்கு கவலை இல்லை. வீட்டில் ஒரு குழந்தை தவழனும். இந்த அளவுக்கு மனநோய் வந்துவிடும்.

வீட்டிற்கு சமையல், பூஜை எல்லாம் செய்ய "காமேஸ்வரன்"ணு ஒரு பிரம்மச்சாரியை அழைத்து வருவாள். சமையல் பூஜை எல்லாம் ஒரு காரணம். ஊருக்காக. அவளுக்கு இன்னொரு எண்ணம் உண்டு. அது என்னவென்றால் பங்கஜமும், காமேசுவரனும் உறவு கொண்டு பங்கஜம் ஒரு குழந்தையை பெற வாய்ப்பு உண்டு என்கிற எண்ணம். ரங்கமணி, காமேசுவரனை தேர்ந்தெடுக்கக் காரணம்? அவளுக்கே அவன் மேல் ஓர் ஈர்ப்பு உண்டாகும். பங்கஜத்திற்கு அதே ஈர்ப்பு வரத்தான் செய்யும் என்றெல்லாம் ஒரு கால்க்குலேசன்.

பங்கஜமும், காமேஸ்வரனும் ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு இருந்தாலும். அதுபோல் தவறான உறவு கொள்ள மாட்டார்கள். ரங்கமணி தன்னால் முடிந்த அளவு பங்கஜத்தை அவனிடம் தள்ளிப் பார்ப்பாள். ஒருமுறை பங்கஜத்திடம் ரங்கமணி சொல்லுவாள்.  நீ இப்படி ஏனோ தானோனு பட்டும் படாமலும் இருந்தால், எனக்கு இன்னும் வயசாகவில்லை, நானே காமேஸ்வரனிடம்  உறவு கொண்டு குழந்தை பெறத் தயங்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டிப் பார்ப்பாள். பங்கஜம் ஃபிசிக்கல்லாக காமேஸ்வரனுடன் உறவு கொள்ள மாட்டாள். ஆனால் ரங்கமணியின் ஐடியா ஒர்க் அவ்ட் ஆகிவிடும். அவள் காமேஸ்வரனைப் பார்த்து ஃபேண்டசைஸ் செய்வாள். அது ஒரு "கேட்டலிஸ்ட்" போல அவள் கர்ப்பம் தரிக்க உதவும்.

ஒரு நாள் அப்படி காமம் தலைக்கேறி இருக்கும்போது, காமேஸ்வரன் சட்டையில்லாமல் பூஜை செய்வதைப் பார்த்து, அவனை நினைத்து உணர்வுகள் காம மேலோங்கி நிற்கும் பங்கஜத்திற்கு. அன்றிரவு கணவன் துரையுடன் உறவு கொள்ளுவாள். ஒரு நாளுமில்லாத திருநாளாக எட்டு (not sure about the # but it is multiple.. unusual orgasms she will have) முறை ஆர்கசம் அடைவாள், பங்கஜம். அதனால்தானோ என்னவோ கர்ப்பம் தரித்து விடுவாள், பங்கஜம்.

ரங்கமணிக்கு வெற்றி.

இதுதான் கதை. இந்தக் கதையை சும்மா பூசி மொழுகி விமர்சனம் எழுதுவதெல்லாம் வேடம்.

ஜானகிராமன் யார் என்று நான் உணர்ந்தது இந்த கதையின் வாயிலாகத்தான்.

மனநோயாளி ரங்கமணி இல்லை. சாட்சாத் ஜானகிராமன்தான் னு கூட சொல்லல்லாம். தப்பே இல்லை.

தொடரும்

No comments: