Tuesday, August 19, 2008

உலகத்தரம், உலகநாயகன் - இதெல்லாம் ஓவர் பில்டப்!




தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?


எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.

"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.


கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!

ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.

ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!

190 comments:

முரளிகண்ணன் said...

கமல் தனது பேட்டியிலேயே சொல்லியிருக்கிறார். ஹாலிவுட் தரத்தை நோக்கிய பயணம் என்று (இரண்டு தப்படி). மர்மயோகி பிரஸ் ரிலீஸ்ல் கூட சிறந்த சினிமா எடுக்கும் முயற்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பில்டப் செய்வது மீடியாவே. அவர்களின் அசுர செய்திப்பசிக்கு ஊதி பெருதாக்குகிறார்கள்

Anonymous said...

போச்சுங்க! கமல்-தாசன்கள் வந்து கொத்தப்போறாங்க!

மங்களூர் சிவா said...

"ஸ்ரீதர் நாராயணன்" வந்து விளக்குங்க பிலிஸ்

(அவர்தான் எல்லா தசாவதார பதிவுலயும் வந்து கேயாஸ் தியரி எச்சட்ரா எல்லாம் விளக்கினார் )

மங்களூர் சிவா said...

படம் பார்த்த அன்று எனக்கு என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதியிருக்கீங்க எப்பிடி!?!?

எனக்கு முதல் 15 நிமிடம் ரொம்ப நல்லா பிரமிப்பா இருந்தது 70MM DTS அதால கூட இருக்கலாம்.

ஜோ/Joe said...

என்னது ? தசாவதாரம் படம் ரிலீஸ் ஆயிடுச்சா!

தோழி said...

அது பிபாஷா பாசு இல்லைங்க. மல்லிகா ஷெராவத். விடுங்க. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி உங்க நேரத்தை ஏன் வீணாக்கறீங்க.

Sundar சுந்தர் said...

எனக்கு கூட அளவுக்கு அதிகமான ரோல்ஸ் பண்ணி படத்தை கெடுத்துட்டார் ன்னு தான் தோணியது. அரசு அதிகாரி, சமூக சேவகர் ரெண்டும் எனக்கு பிடிச்சிருந்தது. அந்த ஏஜென்ட் ரோல் கூட நல்லா இருந்தது. ஆரம்ப காட்சி ரொம்ப அருமை. சில காட்சிகள் ரொம்ப violent. இந்த படத்தை வெறுக்கற அளவுக்கு மோசமா எனக்கு தோனல. இத ஒரு வெகுஜன சினிமால கொஞ்சம் வித்தியாசமான முயற்சியா மட்டும் பார்த்த ஏமாற்றம் குறைவா இருக்கும். சுனாமி லவ் சீன் நல்ல பாயிண்ட். கொஞ்சம் பக்குவமா கையாண்டிருக்கணும்.

என் 4 வயது மகனை முதல் முறையா தமிழ் படம் பார்க்க வச்சதுள்ள புது கண்ணோட்டமே கிடைச்சது. நிறைய சீன்ல ஏன் இப்படி excite ஆகறாங்க, ஏன் இப்படி hurt பண்றாங்க - வலிக்கும் இல்ல, அப்டின்னு கேள்வி மேல கேட்டுட்டு இருந்தான். அவனுக்கு புடிச்ச character அந்த குரங்கு தான் :) அதையேன் அடச்சு வச்சிருக்காங்க, அது ரொம்ப naughty ஆ ன்னு போல கேட்டு அப்பப்ப படத்தை நல்லா அனுபவிக்க வச்சான் :)

தமிழன் said...

உலகத்தரம் தரம் இல்லை என்று கூறிய வுடன் நான் கூட எதோ டெக்னிகலாக எதோ சொல்ல போகிறிர்கள் என்று நினைத்தேன் எதுக்கு இந்த தேவை இல்லாத விமர்சனம். அவர்கள் உலக தரம் என்று கூறியது படத்தில் பயன்படுத்தபட்ட கிராபிக்ஸ் மற்றும் கேமரா (ஒளிப்பதிவு கருவி) தான். தயவுச்செய்து தங்களுக்கு புரியாத விடயத்தில் இனியும் நீங்கள் விமர்சனம் எழுத வேண்டாம்.

இவன் said...

//ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.//

தலைவரைப்பற்றி இப்படிபோட்டிருப்பதற்காக மன்றம் சார்பின் என் கண்டனங்களைப்பதிவு செய்து கொள்கிறேன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

திருமதி கயல்விழி அவர்களே !,நான் படம் பார்த்து முடித்தவுடன் என்னன்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் .

Sundar சுந்தர் said...

//என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், காலை தொடர்ந்து வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! //
என்ன நீங்க, இவ்வளவு நாள் அமெரிக்கால இருக்கீங்க... கெடச்ச கேப்ல இந்தியா விசிட் அடிக்கற வயசான bachelor மனசு அப்டியென்ன புரியாத புதிர் ;)

பாபு said...

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.நம்ம ஊரில் பிரச்னையே இதுதான்.ஒருவர் ஒரு விஷயத்தை சரியாக செய்தால் ,அதன் பிறகு அவர் என்ன செய்தாலும் பராட்டிகொண்டே இருப்பார்கள்.பள்ளிகளில் கூட கவனித்திருக்கலாம்,ஒரு வருடம் கட்டுரை போட்டியிலோ அல்லது பேச்சு போட்டியிலோ முதல் பரிசு வாங்கிவிட்டால் போதும்.அதன் பிறகு எல்லா வருடங்களுக்கும் அவருக்கே பரிசு கொடுப்பார்கள்.கமல் பற்றிய பிம்பமும் ,ரஜினி பற்றிய பிம்பமும் அதுதான்.

Bleachingpowder said...

//அவர்கள் உலக தரம் என்று கூறியது படத்தில் பயன்படுத்தபட்ட கிராபிக்ஸ் மற்றும் கேமரா (ஒளிப்பதிவு கருவி) தான். தயவுச்செய்து தங்களுக்கு புரியாத விடயத்தில் இனியும் நீங்கள் விமர்சனம் எழுத வேண்டாம்.//

ஓஹோ..உலகத்தரமான கேமராவை பயன்படுத்தி எதை எடுத்தாலும் அதுதான் உலகத்தரமா. இந்த லாஜிக் நல்லாருக்கே

எல்லா விசயங்களையும் புரிந்துதான் எழுதனும்னு எந்த கட்டாயமில்லை. அவரவர் பார்வையில் எது சரினு பட்டதோ அதை யார் வேண்டுமானால் எழுதலாம்.

குரங்கு said...

@கயல்விழி,

எது உலகத்தரம்? உங்களின் பார்வையில் உலகத்தரம் என்றால் என்ன? அமெரிக்கனும், ஐரேப்பியனும் ஏதாவது படத்தை பாரட்டினால் உலகத்தரமா? இவர்கள் முயற்சி செய்துள்ளனர், அதை பாரட்டுங்கள். பத்து வேடங்களில் நடிப்பது மிகவும் கடினமானதுதானே? இரண்டு வேடத்தில் நடிக்கும் ஒருவர் எவ்வளவு கஷ்டபடுவார்? இதிலோ 10 வேடம், படத்தின் சிறப்பே 10 வேடம் தானே இதையே குறை சொன்னால் எப்படி?

புதுகை.அப்துல்லா said...

என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
//

எப்படியோ எங்க தல கமல விட அழகுன்னு ஓத்துக்கொண்ட உங்களுக்கு மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றீ.

:))

ச்சின்னப்பையன்-தலைவர்(பொறுப்பு)
அப்துல்லா - பொருளாளர்
பரிசல்காரன் - கொ.ப.சே(பொறுப்பு)

அகிலாண்ட நாயகன் அண்னன் ரித்தீஷ் மன்றம்.

Anonymous said...

அருமையான விமர்சனம்.
//எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா?//
நானும் அப்படி தான் நினைத்தேன்.

Anonymous said...

மட்டமான விமர்சனம்.
ஒரு தலைப்பட்சமான எழுத்து..

மாயவரத்தான் said...

ஓ.சி. வீ.சி.டி. கிடைச்சா கூட பார்க்க லாயக்கில்லாத படத்தையெல்லாம் போய் பாத்தீங்களே, இதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குறதுங்கிறது!

Anonymous said...

உலக மகா மேதாவி ஜோ, சோக்கடிக்கிறாரு. எல்லாரும் சிரிச்சு வெய்ங்கப்பா.

ஜியா said...

:))

//பிபாஷா பாசு//

athu Mallika Sherawath.. ;)))

BTW... Aaruna bajji nallaave irukaathu.. :))

வருண் said...

****Sundar said...என் 4 வயது மகனை முதல் முறையா தமிழ் படம் பார்க்க வச்சதுள்ள புது கண்ணோட்டமே கிடைச்சது. நிறைய சீன்ல ஏன் இப்படி excite ஆகறாங்க, ஏன் இப்படி hurt பண்றாங்க - வலிக்கும் இல்ல, அப்டின்னு கேள்வி மேல கேட்டுட்டு இருந்தான். அவனுக்கு புடிச்ச character அந்த குரங்கு தான் :) ****

LOL!!

வருண் said...

***ஜோ / Joe said...
என்னது ? தசாவதாரம் படம் ரிலீஸ் ஆயிடுச்சா!

20 August, 2008 1:42 AM***

Yes Joe, the DVD -Sruthilayam is just out!

For most people that is the "release date" of movie!

What to do, you are not a moderator in this blog to run as we wish! :-(

Everybody gets their turn!

Anonymous said...

//என்னது ? தசாவதாரம் படம் ரிலீஸ் ஆயிடுச்சா!

//

repeateyyy!!!!

Anonymous said...

One sumaal kostin(s).

Did you watch Dasavatharam in cinema or dvd?

Did they screened the movie recently in your area or running from it's release date?

I guess you are living in so-cal, so may be the first case?

வருண் said...

Kayal: Those two roles, Balaram Naidu and Vincent are the BEST!

Kamal has done an excellent job in those two characters! Bravo!

In some fight scenes between Kamals must have been pretty easy to shoot as substituting a "dupe" with a mask is pretty easy! The only difference he shows is his voice and pronunciation. They dont usually talk when they fight, right?

வருண் said...

Kayal: It certainly lacks "world quality" but we should appreciate time and the effort Kh has put for this movie!

Moreover, the movie has been appreciated by the mass but not the limited "educated audience and experts in virology" that much, and overall, it is commercially successful! That is more important for Kh to keep putting big efforts and achieve something better in the future!

வருண் said...

***தீலிபன் said...
உலகத்தரம் தரம் இல்லை என்று கூறிய வுடன் நான் கூட எதோ டெக்னிகலாக எதோ சொல்ல போகிறிர்கள் என்று நினைத்தேன் எதுக்கு இந்த தேவை இல்லாத விமர்சனம். அவர்கள் உலக தரம் என்று கூறியது படத்தில் பயன்படுத்தபட்ட கிராபிக்ஸ் மற்றும் கேமரா (ஒளிப்பதிவு கருவி) தான். தயவுச்செய்து தங்களுக்கு புரியாத விடயத்தில் இனியும் நீங்கள் விமர்சனம் எழுத வேண்டாம்.***

திரு, திலீபன்!!

பைநாகுலர்மூலம் வைரஸ் ரிப்ளிகேஷன் பார்ப்பதெல்லாம் உலகத்தரம் இல்லைங்க!

குடுகுடுப்பை said...

சினிமாவை விமரிசணம் செய்ய நாங்கள் இருக்கிறோம். உங்களிடம் பதிவுலகம் நிறைய எதிர்பார்க்கிறது. கமல்ஹாசனிடம் நாம் எதிர்பார்ப்பது போல.

வருண் said...

***குடுகுடுப்பை said...
சினிமாவை விமரிசணம் செய்ய நாங்கள் இருக்கிறோம். ***

நியாமான விமர்சனம் ப்ளாக்கில் வந்தால் நாங்க ஏன் மெனக்கட்டு விமர்சிக்கிறோம்!

மட்டமா இருக்கு பல 90%விமர்சனங்கள்! பெரிய பெரிய விமர்சக மேதாவிகளின் விமர்சனக்கள்!!;-(

அதான் நாங்களும் சில உண்மைகளை சொல்கிறோம். உண்மை கசந்தால் என்ன செய்வது??

ஜோசப் பால்ராஜ் said...

கயல்,
நீங்க இதையெல்லாம் எழுதி ஏன் நேரத்த வீணாக்குறீங்க? நீங்க‌ எழுத‌ வேண்டிய‌து இது இல்லீங்க‌.

ஒரு உண்மை தெரியுமா க‌ய‌ல் ? தசாவ‌தார‌ம் ப‌ட‌ம் பார்த்துட்டுத்தான் ப‌ல‌ பேரு ஜே.கே.ரித்தீஷ் ர‌சிக‌ர் ம‌ன்ற‌த்துல‌ சேர்ந்தாங்க‌. போதா குறைக்கு குருவி, குசேல‌ன் எல்லாம் வ‌ரிசையா வ‌ந்து ஜே.கே.ஆர் ம‌ன்ற‌த்துக்கு ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ர‌சிக‌ர்க‌ளை கொண்டுவ‌ந்துகிட்டு இருக்காம்.

வருண் said...

***Anonymous said...
One sumaal kostin(s).

Did you watch Dasavatharam in cinema or dvd?***


I think it has been watched in the lagal dvd.

Do you have problem with that?

It is a smart thing if you ask me.

One can write their review according to their convenience. Please learn to ignore if it is unimportant to you at this point.

Thank you!

Muthu said...

ஒரு விஷயம் ... பக்கா கமர்ஷியலான தனது சினிமாவில் கேயாஸ் சித்தாந்தம் போன்ற சில ஜிம்மிக்குகளை தடவி Intellect image கொண்டு வருவது கமலது சமீபத்திய பாணி. விருமாண்டி பார்த்தபோது இதேதான் தோன்றியது.

முன்முடிவு/முன்னூகம் என்ற எதுவுமில்லாமல் பார்த்தால் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட, கொஞ்சம் சம்பந்தமில்லாமல் அலையும், பக்கா கமர்ஷியல் த்ரில்லர். அவ்வளவே.

Though he has not justified the 10 characters, he has done justice to most of them.

புஷ்ஷின் உடல்மொழியில்தான் சொதப்பல் என்பது என் கணிப்பு. நான் டி.வி-க்களில் எங்குமே புஷ் கால்சட்டை பாக்கெட்டுகளில் கைவிட்டபடி பார்த்த நினைவே இல்லை.

வின்சென்ட் பூவராகனின் உச்சரிப்பு, உடல்மொழி இன்னபிறவற்றையெல்லாம் - நாகர்கோயில் அண்மையை சேர்ந்தவர் என்ற ஹோதாவில் சிறில் அலெக்ஸ் (தகவல் சரிதானே சிறில் ?) பாராட்டியுள்ளார்.

என் வருத்தமெல்லாம் ... இந்தியனில் அவ்வளவு துல்லியமாக ஒப்பனை செய்த வெஸ்ட்மோரா இப்படி என்பதுதான். கமல் வேறு மேக்கப்மேனை நாடவேண்டியதுதான்.

உலகத்தரம் என்பது கதை சொல்லலில், திரைக்கதை அமைப்பில், படத்தொகுப்பில், ஒளிப்பதிவில், பின்னணி இசையில் என பல்வேறு கோணங்களில் சொல்லலாம்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் திரைக்கதை அமைப்பில் இது நிச்சயமாக இது உலகத்தரம் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

அன்புடன்
முத்து

புருனோ Bruno said...

//ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! //

அது பூர்வ ஜென்ம பந்தம் மேடம் :) :)

வருண் said...

*** புருனோ Bruno said...
//ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! //

அது பூர்வ ஜென்ம பந்தம் மேடம் :) :) **

நிச்சயமாக இந்தப்படம் ஒரு ஃபிக்ஷந்தான். இதைவைத்து கமலஹாஷன் நம்பிக்கைகளை பேசுவது அபத்தம்!

ஆனால், கடவுள் இருக்கலாம் என்று சொல்பவர் நாத்தீகவாதி இல்லை. கடவுள் இல்லை என்று நம்புபவர்தான் நாத்தீகவாதி.

பூர்வஜென்ம பந்தத்தில் எல்லாம் நம்பிக்கை வைப்பவரும் நாத்தீகவாதி இல்லை.

My speculation!
Kamal's girl friend gauthami is a believer and cancer survivor. After she survived of Cancer, Kh started becoming a believer> That is what you see in this movie!

Sridhar V said...

//"ஸ்ரீதர் நாராயணன்" வந்து விளக்குங்க பிலிஸ்

(அவர்தான் எல்லா தசாவதார பதிவுலயும் வந்து கேயாஸ் தியரி எச்சட்ரா எல்லாம் விளக்கினார் )
//

இதுக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :-))

கயல்விழி said...

வருகைக்கு நன்றி முரளிக்கண்ணன். சரி, கமலுடைய Makeup horror fest-டைப்பத்தி என்ன நினைக்கறீங்க?

அனானி அண்ணா,

ஏற்கெனெவே வந்துட்டாங்கயா வந்துட்டாங்களே...

கயல்விழி said...

//படம் பார்த்த அன்று எனக்கு என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதியிருக்கீங்க எப்பிடி!?!?
//

மங்களூர் சிவா,

Great people think alike :) :) :)

கயல்விழி said...

//என்னது ? தசாவதாரம் படம் ரிலீஸ் ஆயிடுச்சா!//

இன்னும் பார்க்கலியா நீங்க? :)

வருகைக்கு மிக்க நன்றி

தோழி,

திருத்திவிட்டேன். ஏன் விமர்சனம் எழுதினேனா? "யான் பெற்ற துன்பம் பெருக இவ் வையகம்" என்ற நல்லெண்ணம் தான் காரணம்.

கயல்விழி said...

//என் 4 வயது மகனை முதல் முறையா தமிழ் படம் பார்க்க வச்சதுள்ள புது கண்ணோட்டமே கிடைச்சது. நிறைய சீன்ல ஏன் இப்படி excite ஆகறாங்க, ஏன் இப்படி hurt பண்றாங்க - வலிக்கும் இல்ல, அப்டின்னு கேள்வி மேல கேட்டுட்டு இருந்தான். அவனுக்கு புடிச்ச character அந்த குரங்கு தான் :) அதையேன் அடச்சு வச்சிருக்காங்க, அது ரொம்ப naughty ஆ ன்னு போல கேட்டு அப்பப்ப படத்தை நல்லா அனுபவிக்க வச்சான் :)//

So cute. :) 4 வயசு குழந்தைக்கு கொஞ்சம் வயலன்ஸ் அதிகமில்லையா?

வருகைக்கும், கருத்துக்களும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

கயல்விழி said...

//உலகத்தரம் தரம் இல்லை என்று கூறிய வுடன் நான் கூட எதோ டெக்னிகலாக எதோ சொல்ல போகிறிர்கள் என்று நினைத்தேன் எதுக்கு இந்த தேவை இல்லாத விமர்சனம். அவர்கள் உலக தரம் என்று கூறியது படத்தில் பயன்படுத்தபட்ட கிராபிக்ஸ் மற்றும் கேமரா (ஒளிப்பதிவு கருவி) தான். தயவுச்செய்து தங்களுக்கு புரியாத விடயத்தில் இனியும் நீங்கள் விமர்சனம் எழுத வேண்டாம்.
//

ஏன் இங்கு உலகத்தரத்தைப்பற்றி எழுதுபவர்கள் எல்லாம் டெக்னிகலாக தான் எழுதுகிறார்களா? கிராபிக்ஸா? என்ன அப்படி உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் என்று தயவு செய்து விளக்கவும்.

என்னை விமர்சனம் எழுதாதே என்று எழுத உங்களுக்கு எப்படி கருத்துரிமை இருக்கிறதோ, அதே போல விமர்சனம் எழுதவும் எனக்கு கருத்துரிமை இருக்கிறது, உங்களுக்கு பிடித்தமாதிரி எல்லாம் எழுத முடியாது :)

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திலீபன் அவர்களே :)

கயல்விழி said...

இவன், மன்னிக்கவும், ஜேகே ரித்தீஷை அழகு என்று எழுதியது தவறு தான் :) :)

அருவை பாஸ்கர்
திருமதி இல்லை செல்வி

அதெல்லாம் எதுக்கு, பேசாமல் கயல்விழினே எழுதலாம்.

வருகைக்கு நன்றி.

கயல்விழி said...

//என்ன நீங்க, இவ்வளவு நாள் அமெரிக்கால இருக்கீங்க... கெடச்ச கேப்ல இந்தியா விசிட் அடிக்கற வயசான bachelor மனசு அப்டியென்ன புரியாத புதிர் ;)//

எனக்கு நிஜமாவே புரியல, வயசான பேச்சிலர் மனசை நீங்க கொஞ்சம் விளக்க கூடாதா??

கயல்விழி said...

//கமல் பற்றிய பிம்பமும் ,ரஜினி பற்றிய பிம்பமும் அதுதான்.
//

நன்றி பாபு, சரியா சொல்லி இருக்கீங்க, இந்த ரசிகர்களின் டார்ச்சர் தாங்க முடியல. :(

வருகைக்கு நன்றி :)

ப்ளீச்சிங் பவுடர்,

உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. இது விமர்சனம் நீங்க எழுதி இருப்பது மாதிரி முழுக்க முழுக்க என் கருத்தே.

கயல்விழி said...

//எது உலகத்தரம்? உங்களின் பார்வையில் உலகத்தரம் என்றால் என்ன? //

சரி, உலகத்தரம் என்றால் என்ன என்பதை நீங்கள் தான் விளக்குங்களேன்? இப்போதெல்லாம் வாயில் வந்த பட்டதை எல்லாம் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் கொடுத்துவிடுகிறார்கள்.

"ரத்ததின் ரத்தமே", உயிரே, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் etc.

இதுக்கெல்லாம் ஏதாவது மீனிங் இருக்கா? அது போல தான் உலகத்தரம், உலகநாயகன் எல்லாம்.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

கயல்விழி said...

//எப்படியோ எங்க தல கமல விட அழகுன்னு ஓத்துக்கொண்ட உங்களுக்கு மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றீ.//

இல்லை அப்துல்லா, உங்க ரித்தீஷ் ஸாம்பிகளை விட அழகா இருக்கார் என்று தான் சொல்ல வந்தேன் ;) :)

கயல்விழி said...

ரெண்டு அனானி அண்ணன்களின் கருத்துக்களுக்கும் நன்றி :)

கயல்விழி said...

//ஓ.சி. வீ.சி.டி. கிடைச்சா கூட பார்க்க லாயக்கில்லாத படத்தையெல்லாம் போய் பாத்தீங்களே, இதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குறதுங்கிறது!

//

ரொம்ப சரி, இப்போதெல்லாம் பெரும்பாலான படங்கள் இப்படி தான் இருக்கு

முதன் முறையாக வருகை தந்ததுக்கு மிக்க நன்றி :)

கயல்விழி said...

//athu Mallika Sherawath.. ;)))

BTW... Aaruna bajji nallaave irukaathu.. ://

புரியுது ஜி உங்க கோபம் நியாயமானது, மல்லிகா உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ தமிழ்நாட்டு ஷாருக்கான்?

மாத்தியாச்சு

கயல்விழி said...

குடுகுடுப்பை மற்றும் ஜோசப் பால்ராஜ்

எல்லாம் ஒரு நல்லெண்ணம் தான். :) :)

இதென்ன கொடுமையா இருக்கு? நான் ஒரு சினிமா விமர்சனம் எழுதினால் என்னவாம்?

வருகைக்கு மிக்க நன்றி :)

கயல்விழி said...

முத்துக்குமார்,

விளக்கமான கருத்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி :)

டாக்டர் புரூனோ,

யாருக்கு, கமலுக்கும் அசினுக்குமா? சரியாப்போச்சு

வருகைக்கு நன்றி :)

கயல்விழி said...

//இதுக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :-))/

கேயாஸ் தியரிக்கும் படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று தீவிரமா திங்க் பண்ணி நொந்து போயிருப்பீங்க போல, வருகைக்கு மிக்க நன்றி :)

துளசி கோபால் said...

'அந்தக் குரங்கும் கமலஹாசனா?'ன்னு ஒரு குழந்தை கேட்டதா ஒரு பதிவுலக நண்பர் எழுதி இருந்தார் பாருங்க. அதுதான் இதுவரை நான் படிச்ச விமரிசனங்களில் பெஸ்ட்.


தேவையில்லாத 'பத்துப் பாத்திரம்' கமலுக்கு இந்தப் படத்தில்.

முதல் காட்சியைத்தவிர எதுவும் மனசில் ஒட்டலை. அதுலேயும் அந்த பிசினைப் பார்த்தா......

என்னவோ போங்க.

நம்மவீட்டில் எல்லோரும் கமல் ரசிகர்கள் என்றாலும் ...........

'உண்மை'ன்னு ஒன்னு இருக்கேங்க. அதை ஒதுக்க முடியுதா????

கயல்விழி said...

துளசி மேடம்,

சுந்தர் என்பவரின் குழந்தைக்கும் குரங்கு தான் பிடித்ததாம், பேசாமல் அந்த வேடத்தையும் கமலே போட்டிருக்கலாம்.

கமலை அன்பே சிவம் போன்ற படங்களுக்காக எனக்கும் பிடிக்கும் :)

Anonymous said...

பரவாயில்லை ரகமான வணிகப்படம், தொழில்நுட்ப உத்தியால். அதுக்குமேல் ஒன்றுமில்லை.

கமலின் கடினஉழைப்பு தெரிகிறது. ஆனால், விழலுக்கு நீர் இறைத்து என்ன பயன்?

இது கமல் தற்பெருமைக்காக எடுத்துக்கொண்ட படம் என்ற எண்ணமே மேலிடுகிறது ;(

தமிழன்-கறுப்பி... said...

இன்னொரு தசாவதாரம் பதிவாஆஆஆஆஆஆஆஆஆ :)

தமிழன்-கறுப்பி... said...

///இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!///


என்ன கொடுமை குசேலா இது...;)


(நன்றி நிஜமா நல்லவன்)

தமிழன்-கறுப்பி... said...

நானும் எத்தனையோ பதிவு பாத்துட்டேன் யாருமெ ஜெயப்பிரதாவ பத்தி ஒண்ணும் சொல்லலையே...:)

siva gnanamji(#18100882083107547329) said...

உங்களுடைய முந்தையப் பதிவுகளின்
தரம் வியக்கவைத்தது
இந்தப் படத்திற்குப் போய் விமர்சனம் எழுதி கெடுத்திட்டீங்களே

siva gnanamji(#18100882083107547329) said...

//....சுனாமியோடு சுனாமியாகக்
கடலில் தள்ளிவிட்டு வந்திருப்பேன்//

அய்யோ! ஏன் இந்தக்கொலைவெறி?

Anonymous said...

//What to do, you are not a moderator in this blog to run as we wish! :-(

Everybody gets their turn!//

Super adi!!!

Anonymous said...

Sivagnanm,

Indha padaththirkku 'poy' enru solli super adi adichitteenga ponga.

Anonymous said...

//***Anonymous said...
One sumaal kostin(s).

Did you watch Dasavatharam in cinema or dvd?***


I think it has been watched in the lagal dvd.

Do you have problem with that?

It is a smart thing if you ask me.

One can write their review according to their convenience. Please learn to ignore if it is unimportant to you at this point.

Thank you!

//

Dear Varun,

I absolutely have no problem whether Kayalvizhi watched it in cinema or in dvd. I was curious to know whether the movie was running for so long in your area. I guess my language was incorrect and has touched your/her raw nerve. Sorry about that.

Swami said...

எனக்கு 1 மட்டும் புரியவே இல்ல. இப்ப எல்லா வலை பதிவுகள்ளயும் தசாவதாரம் பத்தி எதாவது எழுதித்தான் காலம் தள்ள வேண்டி இருக்கு. உங்களையெல்லாம் நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு. மர்மயோகி relaseku இன்னும் 1 வருஷம் ஆகலாம். அது வரைக்கும் "What you are going to do????" . உங்களுக்கு என்ன அடுத்து ஒரு G.K.R படம் வராமலா போகும்?

வால்பையன் said...

//பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும்,//

எல்லோருடைய வாழ்க்கையும் மற்றவர்களுடைய வாழ்க்கையின் சாயல் தான்,
லெனின் மாதிரி வாழு என்று ஒருவனை சொல்லமுடியாது, அவனுக்கு லெனின் யாரென்று கூட தெரியாமல் இருக்கலாம், கீழ்தட்டு மக்கள் வரை சில விசயங்களை கொண்டு செல்ல இம்மாதிரியான சில முயற்சிகள் தேவைப்படுகின்றன

வால்பையன் said...

//வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது,//

நிறைய மனிதர்கள் நேரிலேயே இந்த மாதிரி தான் முகத்தை வைத்து கொண்டு திரிகிறார்கள், அவர்களை என்ன செய்வது

வால்பையன் said...

//ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.//

இந்த ஒரு விசயத்துக்காக உங்களுக்கு எங்கள் கும்மி குரூப்பிலிருந்து உங்களுக்கு ஆதரவு உண்டு

வால்பையன் said...

//இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது//

நிஜ வாழ்க்கையில் எல்லோருமே ஹீரோ தான்,
சினிமாவை பொறுத்தவரை கதையின் மையம் யாரோ அவர்களோ ஹீரோ.
கமல் தன்னால் அந்த கதாபாத்திரதொடு ஒன்ற முடியாதென்றால் மற்றவர்களை வைத்து அந்த கதையை படமாக எடுக்கும் பழக்கம் உள்ளவர்.
உதாரணம்
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
மகளிர் மட்டும்
நள தமயந்தி

வால்பையன் said...

//வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்//

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கமலாக பார்த்தால் டார்ச்சராக தான் இருக்கும்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பாருங்கள், பக்கத்தில் இருப்பவர்கள் உங்களை படம் பார்க்க விடாமல் டார்ச்சர் செய்வார்கள்

வால்பையன் said...

//தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது.//

இதில் காட்டப்பட்டுள்ள சிறுபான்மையினரின் அப்பட்டமான வாழ்க்கை முறை இன்றும் நடைமுறையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தேவையில்லாமல் அவர்கள் ஒடுக்க படுகிறார்கள் என்பதை வேறு எந்த ஊடகம் வாயில சொல்வது

வால்பையன் said...

//ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா?//

மாற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது, கமலுக்கு வயதை அப்பட்டமாக காட்டும் முக அமைப்பு இல்லை, அதற்கு காரணம் உணவு முறை, உடற்பயிற்சி.

வால்பையன் said...

//உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள். //

நாம் பேசுவது சினிமாவை பற்றி தானே

வால்பையன் said...

//கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை.//

சினிமாவை பொறுத்தவரை நாயகன் நாயகியிடம் தான் சேர வேண்டும்.
இந்த கதையை பொறுத்தவரை கோவிந்த் நல்லவன் என்ற ஒன்றே போதுமானதாக இருக்கிறது

வால்பையன் said...

//"பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்//

அதீத கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லாமே அறை லூசு தான் என்பது மனநல மருத்துவர்களின் கூற்று, அதன் படியே அந்த கதாபாத்திரம்

வால்பையன் said...

//"என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்!//

காதல் உடல் சம்பந்தப்பட்டது, கடவுள் மத சம்பந்தப்பட்டது.
மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்தவர்களை நீங்க பார்த்ததில்லையா

வால்பையன் said...

//அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன்.//

அப்ப கமல் மாதிரி பேசியிருந்தா என்ன பண்ணியிருப்பிங்க

வால்பையன் said...

//சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!//

வெளியே தாய் சாகக்கிடக்கும் போது மனைவியை உறவுக்கு அழைத்த மாகானை படித்ததில்லையா நீங்கள்

வால்பையன் said...

//ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும்.//

அது அவரவர் மனநிலையை பொறுத்தது,
ஹீரோவாக இருக்கவேண்டும்
அல்லது நல்லவனாக இருக்கவேண்டும் என்பது தானே அனைவரின் ஆசையும்

வால்பையன் said...

//தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை!//

மீறு தெளுகுவா

வசனமும் கமல் தான், தெரியுமா

வால்பையன் said...

//பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம். //

சொன்னேனே மனநிலை,
உண்மையில் தியாகமும் , கொள்கையும் தான் அந்த கதாப்பாத்திரம்,
நீங்கள் அதை மற்றொரு கமலாக பார்ப்பதால் அவலட்சணமாக தெரிகிறது

வால்பையன் said...

//இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை.//

இது ஒரு பாசிச சிந்தனை, பாராட்டுவதற்கும் விசயங்கள் இருக்கு போது ஒன்றுமில்லை என்றால் அது எதிர்மறை சிந்தனை தானே,
நான் சொல்ல என்ன இருக்குது, நீங்களாச்சு உங்க சிந்தனையாச்சு

வால்பையன் said...

//அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை! //

அதற்காக நான் கமல் ரசிகன் என்று எடுத்து கொள்ளவேண்டாம்.
நான் சினிமா ரசிகன், நடிகர்களுக்கு அல்ல.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி, ரஜினி படத்தை பார்க்காததால் ரஜினிக்கு ஒன்னும் நட்டமில்லை, ஆனால் மற்றவர்களின் போலுதுபோக்குக்ககாக தம்மை வருத்தி கொள்ளும் சினிமா உலகம் என்ன செய்தது, ரஜினி தயாரிக்கும் படங்களை தவிருங்கள், சினிமாவை தவிர்க்காதிர்கள்.

பிரமீட் சாய்மீரா கம்பெனி பாவம்!!

கயல்விழி said...

//நானும் எத்தனையோ பதிவு பாத்துட்டேன் யாருமெ ஜெயப்பிரதாவ பத்தி ஒண்ணும் சொல்லலையே...:)

//

வாங்க தமிழன்

சொன்னேனே, ஜெயப்ப்ரதா வேடத்தை அசினே போட்டிருக்கலாம் என்று.

கயல்விழி said...

வணக்கம் கோயிந்து

சிவ ஞானமணி,

சும்மா மொக்கையாக நான் ஒரு பதிவு கூட எழுதக்கூடாதா? என்ன கொடுமை இது?

கயல்விழி said...

நண்பர்களே/ தோழிகளே

விமர்சனம் எழுதுங்கள், நிச்சயம் ஏற்றுக்கொள்ளுகிறேன். தனி நபர் தாக்குதல்களை(நீ அவரா, இவரா) போன்ற சம்மந்தமில்லாத கமெண்டுகளை தவிர்க்கவும்.

கயல்விழி said...

அனானி அண்ணா

சாரி எல்லாம் தேவையே இல்லை, மற்றவர்களுடன் ஒப்பிட்டால் உங்களின் கமெண்ட் ரொம்ப மைல்ட் :)

கயல்விழி said...

சுவாமி

நான் சினிமா நடிகர்களைப்பற்றியும், சினிமாக்களை பற்றியும் மட்டுமே எழுதுவதில்லை, என் பதிவுகள் சிலதையாவது படித்த பிறகு கருத்து எழுதவும்.

உங்க வருகைக்கு நன்றி

கயல்விழி said...

//
காதல் உடல் சம்பந்தப்பட்டது, கடவுள் மத சம்பந்தப்பட்டது.
மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்தவர்களை நீங்க பார்த்ததில்லையா

//

வால்பையன்
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும்\, வருகைக்கும் நன்றி. :)

இந்த ஒரு கருத்தை மட்டும் ஒப்புக்கொள்ள முடியாது, ஏனென்றால், கடவுள் நம்பிக்கைக்கும், ஜாதி வெறிக்கும் சம்மந்தமில்லை. இங்கே அசின் "தொடாதே" என்பது அப்பட்டமான ஜாதி வெறியாகும்.

கயல்விழி said...

//
இது ஒரு பாசிச சிந்தனை, பாராட்டுவதற்கும் விசயங்கள் இருக்கு போது ஒன்றுமில்லை என்றால் அது எதிர்மறை சிந்தனை தானே,
நான் சொல்ல என்ன இருக்குது, நீங்களாச்சு உங்க சிந்தனையாச்சு//

வால் பையன்

மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் ஒரு தலைப்பட்சமானவர்கள் தான், அதாவது பாசிச சிந்தனையாளர்கள், நடுநிலைவாதிகள் என்று யாரும் கிடையாது.

மேலும், இது சும்மா என் கண்ணோட்டத்தில் ஒரு விமர்சனமே தவிர, அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அவசியமோ அல்லது கட்டாயமோ இல்லை.

கயல்விழி said...

இப்படி மொக்கை பதிவுக்கு எல்லாம் வரிக்கு வரி விமர்சனம் எழுதறீங்களே வலையுலக தெய்வங்களே, நான் அமரிக்க பொருளாதாரம், அரசியல், பாட்டிமாவுக்கு கடிதம் எல்லாம் கஷ்டப்பட்டு மூளையை உபயோகித்து எழுதினேன். அதை எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?

manikandan said...

******இப்படி மொக்கை பதிவுக்கு எல்லாம் வரிக்கு வரி விமர்சனம் எழுதறீங்களே வலையுலக தெய்வங்களே, நான் அமரிக்க பொருளாதாரம், அரசியல், பாட்டிமாவுக்கு கடிதம் எல்லாம் கஷ்டப்பட்டு மூளையை உபயோகித்து எழுதினேன். அதை எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?*******



பாட்டிமாவுக்கு கடிதம் - நிறைய மக்கள் படிச்சுட்டு அவங்க கருத்தையும் சொல்லி இருந்தாங்க.

அமரிக்க பொருளாதாரம் - நீங்க பிரபலம் ஆகறதுக்கு முன்னாடி எழுதி இருப்பீங்க. இன்னும் மக்களுக்கு பழைய பதிவு எல்லாம் தேடி கண்டுபிடிச்சி பின்னூட்டம் எழுதற அளவுக்கு -------------

அரசியல் - நீங்க எங்க அரசியல் பத்தி எழுதி இருக்கீங்க ? அதுலயும் சினிமா தாக்கம் தான் அதிகம்.

Anonymous said...

//ஏன் இங்கு உலகத்தரத்தைப்பற்றி எழுதுபவர்கள் எல்லாம் டெக்னிகலாக தான் எழுதுகிறார்களா? கிராபிக்ஸா? என்ன அப்படி உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் என்று தயவு செய்து விளக்கவும்.

உலகத்தரம் என்றால் என்னவென்றே தெரியாத உங்களைபோன்ற ஆட்கள் இதுபோன்ற விமரிசனத்தை எழுதுவது தான் உலக காமெடி. அமெரிக்காவில் வழ்வதலோ AMC\IMC திரையரங்குகளில் படம் பார்த்து விடுவதாலோ உங்களுக்கு தசாவதாரம் போன்ற படங்களை விமரிசிக்கும் தகுதி வந்துவிடபோவதில்லை

☀நான் ஆதவன்☀ said...

இதையும் படிக்கவும்

http://nanaadhavan.blogspot.com/2008/08/blog-post_20.html

Sundar சுந்தர் said...

//எனக்கு நிஜமாவே புரியல, வயசான பேச்சிலர் மனசை நீங்க கொஞ்சம் விளக்க கூடாதா??//
கொஞ்சம் நாள் பொறுத்துக்குங்க. chetan bhagat போல யாரவது புத்தகமே போடுவாங்க. இல்லையென்றால் நாகேஷ் குக்குனூர் தனி சினிமா எடுப்பார். அவ்ளோ மேட்டர் இருக்கு அதில. ஆனா அதெல்லாம் விமர்சனம் எழுத ஆள் இருக்குமான்னு தெரியாது ;)

Unknown said...

/கயல்விழி said...
இப்படி மொக்கை பதிவுக்கு எல்லாம் வரிக்கு வரி விமர்சனம் எழுதறீங்களே வலையுலக தெய்வங்களே, நான் அமரிக்க பொருளாதாரம், அரசியல், பாட்டிமாவுக்கு கடிதம் எல்லாம் கஷ்டப்பட்டு மூளையை உபயோகித்து எழுதினேன். அதை எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?

21 August, 2008 1:09 AM /

hahahaha....

very nice kayalvizhi.

this is power of cinema. :)

really our peopels are falling cinema issues only :(

anyhow nice analysis.

keep more mosting

Thanks
--Mastan

வருண் said...

^***ரசிகன் said...
//ஏன் இங்கு உலகத்தரத்தைப்பற்றி எழுதுபவர்கள் எல்லாம் டெக்னிகலாக தான் எழுதுகிறார்களா? கிராபிக்ஸா? என்ன அப்படி உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் என்று தயவு செய்து விளக்கவும்.

உலகத்தரம் என்றால் என்னவென்றே தெரியாத உங்களைபோன்ற ஆட்கள் இதுபோன்ற விமரிசனத்தை எழுதுவது தான் உலக காமெடி. அமெரிக்காவில் வழ்வதலோ AMC\IMC திரையரங்குகளில் படம் பார்த்து விடுவதாலோ உங்களுக்கு தசாவதாரம் போன்ற படங்களை விமரிசிக்கும் தகுதி வந்துவிடபோவதில்லை***

தோடா!!இவருக்குத்தான் யார் எதைப்பற்றி பேசனும்னு தெரியும் போல இருக்கு!

இதெல்லாம் கொஞ்சம் அதிகமா இல்லை ரசிகர் சார்??

Anonymous said...

athikam thaan வருன் சார்!! உலகத்தரத்திற்கு ஆனா முயற்சி தசாவில் நிச்சயம் உண்டு. எனவோ வழ்க்கமான ஒரு தமிழ் படத்தை பற்றி சொல்வது போல் இந்த பதிவர் மிவர்சிதிருப்பது பட்டும் ரொம்ப சரியா என்ன??

கமல் சுதந்திர தின பேட்டி பார்த்தீர்களா அவர் இந்த உலகத்தரத்தை பற்றி எவலு அடக்கமாக பேசி இருக்கிறார்?

வருண் said...

rasigan:

The movie had already had a great run and people have promoted this movie as musch as they can. 90% reviews in these blogs have praised the movie.

Kayal's reviews is not going to affect the BO at this point. Not only Kayal, there are so many Kh fans felt the same way as Kayal felt. They were not able to appreciate the "masks" he was wearing. They expected difference in his facial expression which one could hardly see in several avataars!

It is not "world class" according to her, and it is her opinion. And she has gone thru step by step criticizing what she liked and what she did not like! I think it is one's freedom of speech, rasigan. I know it will hurt the fans! What to do!

வருண் said...

****கமல் கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் போல் ஆகி விட்டார் என்று நினைக்கிறேன். blah blah blah

அதே போல் கமலை யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் அவர் கமலின் விரோதி ; கமலின் சினிமா ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத முட்டாள். மேலும் , அவரை உலக நாயகன் என்றே கருத வேண்டும். அப்படிக் கருதாதவருக்கு ஏதோ மோசமான உள்நோக்கம் இருக்கிறது. இதுதான் கமலின் இப்போதைய நிலை. ***

I did not like charu's outragous review as a whole but whatever he has said above is true! This is how Kamal wellwisshers' react if not Kh himself when it comes to any criticisms on him or on his movies! :-(

ஜியா said...

Kayal Said...
//மேலும், இது சும்மா என் கண்ணோட்டத்தில் ஒரு விமர்சனமே தவிர, அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அவசியமோ அல்லது கட்டாயமோ இல்லை.//

Varun said...
//நியாமான விமர்சனம் ப்ளாக்கில் வந்தால் நாங்க ஏன் மெனக்கட்டு விமர்சிக்கிறோம்!

மட்டமா இருக்கு பல 90%விமர்சனங்கள்! பெரிய பெரிய விமர்சக மேதாவிகளின் விமர்சனக்கள்!!;-(//

இந்த விமர்சனம் எப்படி உங்கள் பார்வையில் நியாயமானதோ, அதே போல் அவரவர் பார்வையில் அவை நியாயமானதாக இருக்கலாம். அதற்காக உங்கள் கருத்தை ஏற்கும்விதமான விமர்சனத்தை மட்டும் அந்த பத்து விழுக்காட்டிற்குள் அடைத்துவிட்டு, எதிர்கருத்து விமர்சனத்தை மட்டமான 90 சதவிகிதத்திற்குள் நிறுத்துவது நியாயமில்லை என்று கருதுகிறேன்.

ஜியா said...

//புரியுது ஜி உங்க கோபம் நியாயமானது, மல்லிகா உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ தமிழ்நாட்டு ஷாருக்கான்?//

avvvvv... etho oru thadava oru postla appadi potutten.. athukaaga.. eppaiyumaa?? Nalla varuveenga ammani... nalla varuveenga... :)))

வருண் said...

****இந்த விமர்சனம் எப்படி உங்கள் பார்வையில் நியாயமானதோ, அதே போல் அவரவர் பார்வையில் அவை நியாயமானதாக இருக்கலாம். அதற்காக உங்கள் கருத்தை ஏற்கும்விதமான விமர்சனத்தை மட்டும் அந்த பத்து விழுக்காட்டிற்குள் அடைத்துவிட்டு, எதிர்கருத்து விமர்சனத்தை மட்டமான 90 சதவிகிதத்திற்குள் நிறுத்துவது நியாயமில்லை என்று கருதுகிறேன்.***

It is hard judge what is right or wrong, ji. We are all biased in our opinons and statements. Neither of us can say "what statement is right or wrong". Those are our opinions, that is all!

ஜியா said...
This comment has been removed by the author.
ஜியா said...

அட.. நாந்தான் 100ஆ??

//Neither of us can say "what statement is right or wrong". Those are our opinions, that is all!//

:)) இதனை விமர்சனம் என்றே சொல்ல முடியாது. இது ஓர் ரசிகையின் கண்ணோட்டம். அவ்வளவே. விமர்சனம் இன்னும் ஆழமாக நுழைந்து கூறு போட வேண்டியது.

மேலும் தசா, உலகத்தரமென்ற சொல்லாடலில் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை சமண் செய்ய தவறியுள்ளது என்றாலும், இந்த விமர்சனமென்ற கண்ணோட்டத்தை மட்டமில்லாத தரமான விமர்சனம் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. And again.. this is my opinion :))

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

ஜி:

சில தரமான விமர்சனங்களை இங்கே தரவும்! நான் அவைகளை விமர்சிக்கிறேன்.

ஆனந்த விகடனில் கூட 40 மதிப்பெண்கள்தான் பெற்றது இந்த "உலகத்தரப்படம்" ஜீ!

Anonymous said...

வருண், அந்த விகடன் ஒரு குப்பை, அவர்கள் கமலை எவ்வளவு இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று ஒரு தனி பதிவே போடலாம்,

நான் கயல் அவர்கள் விமர்சனமே செயகொடது என்றோ அல்லது அவருக்கு மாற்றுகருதே இருக்ககுடது என்று சொல்லவில்லை. மாறாக அவை எத்துனை தவறானது என்று விளக்க முற்பட்டேன் , தற்போது ஆணி புடுங்கும் வேலை இருப்பதால், பிடுங்கிவிட்டு வந்து சொல்கிறேன் அது ஏன் அத்துணை தவறானு என்றும் என் நான் விகடனை மறுக்கிறேன் என்றும் !! :)

Thamira said...

ரொம்ப கூட்டமாக இருப்பதால் நான் ஒரு ஆஜர் மட்டும் போட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

கயல்விழி!
உங்கள் நேரத்தை இதுபோன்ற பதிவுகள் எழுதுவதில் வீணக்க வேண்டாம். அதைவிடப் பெண் என்ற ஒரே காரணத்துக்காகப் பின்னூட்டமிடும் பேர்வழிக்கெல்லாம் பதில் சொல்வது டோட்டல் வேஸ்ட்.
"புரிகிறதா"

சரண் said...

//அமெரிக்காவில் வழ்வதலோ AMC\IMC திரையரங்குகளில் படம் பார்த்து விடுவதாலோ உங்களுக்கு தசாவதாரம் போன்ற படங்களை விமரிசிக்கும் தகுதி வந்துவிடபோவதில்லை//

என்னைப் பொருத்தவரை, நான் அமெரிக்கா வந்த பிறகுதான் உலகத்தரமான படங்கள் என்றால் என்னவென்றே புரிந்தது. ஹாலிவுட் படங்கள் மட்டுமில்லாது, இரானியம், சீனம், இத்தாலி மொழி படங்களும், பல நல்ல மலையாளப் படங்களும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பெல்லாம் கண்டிப்பாக இந்தியாவில் இருந்திருந்தால் கிடைத்திருக்காது. அதனால் ஒரு வகையில், அமெரிக்காவில் இருப்பதாலேயே 'உலகத்தரமென்று' என்னவென்று எங்களுக்கெல்லாம் ஒரு படி அதிகம் தெரியுமென்பது உண்மை.

நல்லப் படங்களின் ரசிகன் என்பதைத் தவிர, ஒரு படத்தை விமர்சிக்க வேறு என்னத் தகுதி வேண்டும்?

Anonymous said...

நான் சடு காட்டமாக போஸ்ட் பண்ணிருக்கலாம் ஆனால் கண்டிப்பாக நான் அநாகரீகமாகவோ மரியாதையை குறைவாகவோ post பண்ணவில்லை . அதே சமயம், என் காடதிற்கான விளக்கத்தை, அதாவது, ஏன் கயல்விழியின் விமர்சனம் படு அபத்தமாக உள்ளதென்று விளக்க எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இன்னமும் officeil ஆணி புடிங்கி கொண்டிருக்கிறேன் :( கூடிய விரைவில் பதிலைக்கிறேன்

சூர்யா, நான் அனைவரையும் சொல்லவில்லை :) உங்கள் கருத்து விமர்சனத்தை படிகமலேயே எப்படி நான் பொதுவாக அப்படி சொல்லல முடியும் ??

கயல்விழி said...

//பாட்டிமாவுக்கு கடிதம் - நிறைய மக்கள் படிச்சுட்டு அவங்க கருத்தையும் சொல்லி இருந்தாங்க.

அமரிக்க பொருளாதாரம் - நீங்க பிரபலம் ஆகறதுக்கு முன்னாடி எழுதி இருப்பீங்க. இன்னும் மக்களுக்கு பழைய பதிவு எல்லாம் தேடி கண்டுபிடிச்சி பின்னூட்டம் எழுதற அளவுக்கு -------------

அரசியல் - நீங்க எங்க அரசியல் பத்தி எழுதி இருக்கீங்க ? அதுலயும் சினிமா தாக்கம் தான் அதிகம்.//

எழுதி இருக்கிறேன். அமரிக்க எதிர்ப்பு அரசியலைப்பற்றிய விளக்கமான பதிவு எழுதி இருக்கிறேன். சரி விடுங்க. நான் சொல்ல வந்த பாயிண்ட் என்னவென்றால், மற்ற பதிவுகளுக்கு கிடைக்காத அட்டென்ஷென் இந்த பதிவுக்கு ஏன்?, அதுவும் இது ரொம்ப காலம் கடந்த விமர்சனம்.

கயல்விழி said...

ரசிகன்,

தசாவதாரம் விமர்சனமோ, கருத்தோ எழுதுபவர்கள் எல்லாம் தகுதியோடு தான் எழுதினார்கள் என்ற 'அரிய' கருத்தை தெரிந்துக்கொண்டேன்.

உங்கள் வருகைக்கு நன்றி :)

கயல்விழி said...

//என்னைப் பொருத்தவரை, நான் அமெரிக்கா வந்த பிறகுதான் உலகத்தரமான படங்கள் என்றால் என்னவென்றே புரிந்தது. ஹாலிவுட் படங்கள் மட்டுமில்லாது, இரானியம், சீனம், இத்தாலி மொழி படங்களும், பல நல்ல மலையாளப் படங்களும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பெல்லாம் கண்டிப்பாக இந்தியாவில் இருந்திருந்தால் கிடைத்திருக்காது. அதனால் ஒரு வகையில், அமெரிக்காவில் இருப்பதாலேயே 'உலகத்தரமென்று' என்னவென்று எங்களுக்கெல்லாம் ஒரு படி அதிகம் தெரியுமென்பது உண்மை.

நல்லப் படங்களின் ரசிகன் என்பதைத் தவிர, ஒரு படத்தை விமர்சிக்க வேறு என்னத் தகுதி வேண்டும்?
//

சூர்யா,

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி :)

கயல்விழி said...

//ரொம்ப கூட்டமாக இருப்பதால் நான் ஒரு ஆஜர் மட்டும் போட்டுக்கொள்கிறேன்//

என்ன தாமிரா, கருத்து எழுத பயப்படுவதால் தப்பி ஓட்டமா? ;) :)

கயல்விழி said...

//:)) இதனை விமர்சனம் என்றே சொல்ல முடியாது. இது ஓர் ரசிகையின் கண்ணோட்டம். அவ்வளவே. விமர்சனம் இன்னும் ஆழமாக நுழைந்து கூறு போட வேண்டியது.

மேலும் தசா, உலகத்தரமென்ற சொல்லாடலில் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை சமண் செய்ய தவறியுள்ளது என்றாலும், இந்த விமர்சனமென்ற கண்ணோட்டத்தை மட்டமில்லாத தரமான விமர்சனம் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. And again.. this is my opinion :))//

தமிழக ஷாருக்கான்,

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. ரொம்ப கவனமாக விமர்சித்திருக்கிறீர்கள், அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.
:)
அதை விட நீங்கள் இப்படி சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்

"கயல்விழியின் விமர்சனம் மட்டமானது என்று நான் சொல்லவில்லை, மட்டமானதாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன்"

கயல்விழி said...

மஸ்தான், சுந்தர், ஆதவன்

வருகைக்கு மிக்க நன்றி

கயல்விழி said...

//கயல்விழி!
உங்கள் நேரத்தை இதுபோன்ற பதிவுகள் எழுதுவதில் வீணக்க வேண்டாம். அதைவிடப் பெண் என்ற ஒரே காரணத்துக்காகப் பின்னூட்டமிடும் பேர்வழிக்கெல்லாம் பதில் சொல்வது டோட்டல் வேஸ்ட்.
"புரிகிறதா"//

அனானிமஸ் மேடம்(என் கணிப்புபடி நீங்கள் பெண்ணாக இருக்க வேண்டும்)

இந்த திரியில் எனக்கு இது வரை வந்ததிலேயே ரொம்ப சென்சிபிளான கமெண்ட் உங்களுடையது
"புரிகிறது"

தற்போது குழப்பம் தீர்ந்துவிட்டது.

வருண் said...

****கயல்விழி said...

"கயல்விழியின் விமர்சனம் மட்டமானது என்று நான் சொல்லவில்லை, மட்டமானதாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன்"

21 August, 2008 11:32 AM ***

கயல்!!!!

எப்படி இதெல்லாம்!!! LOL!!

கயல்விழி said...

//கயல்!!!!

எப்படி இதெல்லாம்!!! LOL!!
//

அதெல்லாம் தானாவே வருது :) :)

வருண் said...

I am impressed, Kayal! Bravo!! :)

Anonymous said...

hello kurangu

10 character ellam nadikalam yarum nadika vendamnu sollale apadi nadika adhe nanga paka kadhe kadhe nu onu solluvanga cinemale adhu irukanum

Anonymous said...

//வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன்.
அப்பா நீனா தச பத்தி ஒரு நல்ல விமர்சனத்தையும் படிக்கலைன்னு தானே அர்த்தம். நீங்க ன்னு பொதுவாக யாரை சொல்றீங்க ???

"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா?
//நீங்க தச பக்க போநீங்கன்ன தசா வாய் விமர்சனம் பண்ணுங்க. ஏன் கமலை ?? உங்களுக்கு அவர் பத்து கதாபத்திரங்கள் பண்ணுவது முதலே தெரியாதா ??!! 9 வேதங்கள் சிவாஜி பண்ணினது தப்பிலை ஒரு வேடம் குடுதலக கமல் பண்ணுவது உங்களுக்கு உறுத்துகிறது இரட்டை வேடம் முன்று வேதங்கள் படங்களின் செய்வதில்லையா?? அது தப்பில்லை என்றாம் பத்து வேடம் மட்டும் ஏன் தவறு ?? உங்க லாஜிக் புரியவில்லை

கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
//அவ்வளவு மோசமாக நிச்சயம் இல்லை பூவராகன் குட ஒருவித அழஅகோடு தன் இருந்தார்

//கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல்.
இது தசாவதாரம் விமர்சனமா அல்லது அன்பே சிவம் விமர்சனமா, இதை பார்க்கும்போது எனக்கென்னமோ தங்களுக்கு கமல் மேல் எதோ கோபம் போல் தொன்ருகுறது

//காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்!
அந்த படத்தில் கமழும் தான் திக்குவார், படத்தை சரியாக பார்க்கவில்லை போலும்!!

//ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே.
சத்தியமாக நீங்கள் கமல் படத்துக்கு விமர்சனம் எழுதும் தகுதியை இழஅந்துவிடீர்கள்!!

//மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்
நவராத்ரி விட ஒரே ஒரு வேடம் குடுத்தால் அது உங்களுக்கு இவ்ளோ torture aa இருக்கிறதா ??!!

//ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா?
கமலின் govind பாத்திரம் எந்தவிதத்திலும் மாற்ற வழஅகமான ஹெரோக்கல் போல் இல்லை. டூயட், பஞ்ச் டயலாக், ஓவர் பில்டப் எல்லாம் இல்லை, climax இல் கூட இவரை கபதர்கக shingen narahasi வருகுறார் .

தவிர, கமல் kaarthik, pirabu, sunthar.c ai விட இளமையாக தெரிகிறார் . ஊரில் கேட்டு பாருங்கள் எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்து விடாதீர்கள் !!!

இன்னும் சிலர் மேக்கப் சரி இல்லை என்று சொல்கிறார்கள்
அவர்கள் எதை சொல்கிறார்கள். பிலேட்சேர் தலை பெருசு என்றால் அதி தப்பில்லையே, நிஜத்தில் இது போன்ற மனிதர்களை நாம பார்த்ததில்லையா என்ன?

மேக்கப் போட்டுக்கிட்டு கமல் எந்த எக்ஸ்ப்றேச்சின் உம் பண்ண மட்டேன்குரர் என்று சில புலம்புகிறார்கள்
கமல் தனால் முடிந்தளவு உடல்மொழியில் பத்து வேடங்களும் வேறுபடுத்தி இருக்கிறார் முகத்தில் உணர்ச்சி கட்டுவதற்கு மேக்கப் ஒரு தடையாக இல்லாத வேடங்களில் அவர் நிச்சயம் பல்வேரி பாவங்கள் கட்டதான் செய்யறார். டாலர் கொடுத்ததும் படம் சரியாக பர்கதவர்கள் மட்டுமே அதை மிஸ் பண்ணி இருக்கிறார்கள். பல்ராம், அவதார் பூவராகன் ஆகிய வேதங்கள் அருமையாக முக பாவங்கள் கட்டுகின்றனர்

புஷ் பிலேட்சேர் சற்று உம் என்று உள்ளனர் ஆனால் அவர்களின் கதபதிரமே எதற்கும் அளடதவர்கலக உள்ளதால் அதுவும் ஒரு குறையாக தெரியவில்லை

கமல் சொல்லி இருந்தார் color correction மட்டும் அவர்களால் சரியாக செய்ய நேரம் கிடைக்கவில்லை என்று. சிலர் இதையும் மேக்கப் ஐயும் போட்டு குழ்ப்பி கொள்கிறார்கள். மற்றபடி பத்தி பலப்பல விழயங்களை மறைமுகமாக அழஅகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கமல். இதெல்லாம் உலக தரம் இல்லை என்றால் வேறு எது உலகத்தரம்?

என்னை கேட்டால், கதையுள் திரைகதக்யில் வசனத்தில், நடிப்பில் கிராபிக்சில் கேமரா மற்றும் ஸ்டுண்ட்ஸ் இல் பாடல் வரிகளில் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. இவை உலகத்தரம் இல்லை என்றால் வேறு எது ?? இந்த படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த படமும் இல்லை. சுனாமியை குட ஒரு கதாபாத்திரமாக பயன் படுத்தியுள்ள கதாசிரியர் பாராட்டுக்குரியவர் பொழுதுபோக்கு படத்தில் இவ்ளோ விழயங்கள் சொல்லி இருப்பது குடுத்தால் உலகத்தரம்.

கயல்விழி said...

//சத்தியமாக நீங்கள் கமல் படத்துக்கு விமர்சனம் எழுதும் தகுதியை இழஅந்துவிடீர்கள்!! //

LOL

நீங்கள் தயவு செய்து எழுத்துப்பிழைகளை தவிர்க்கவும்.

கயல்விழி said...

//10 character ellam nadikalam yarum nadika vendamnu sollale apadi nadika adhe nanga paka kadhe kadhe nu onu solluvanga cinemale adhu irukanum//

வாங்க உத்ரா :)

வருண் said...

ரசிகன்:

நீங்க ஒரு டிப்பிகல் "கமல் ஃபெனாடிக்" போல தெரியுது. உங்களை மாதிரி நிறையப்பேர் இருக்காங்க!

ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறீங்க?!

ஒரு சிலர் கமல்ஹாஷனை இப்படி விமர்சனம் பண்ணட்டுமே?

கயல்விழி said...

ரசிகன்,

நீங்க நிறைய எழுத்து பிழையோட எழுதி இருக்கீங்க, அதனால் என்னை விமர்சனம் பண்ணும் தகுதியை இழந்துவிட்டீர்கள்! :) :)

வருண் said...

****என்னை கேட்டால், கதையுள் திரைகதக்யில் வசனத்தில், நடிப்பில் கிராபிக்சில் கேமரா மற்றும் ஸ்டுண்ட்ஸ் இல் பாடல் வரிகளில் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. இவை உலகத்தரம் இல்லை என்றால் வேறு எது ?? இந்த படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த படமும் இல்லை. சுனாமியை குட ஒரு கதாபாத்திரமாக பயன் படுத்தியுள்ள கதாசிரியர் பாராட்டுக்குரியவர் பொழுதுபோக்கு படத்தில் இவ்ளோ விழயங்கள் சொல்லி இருப்பது குடுத்தால் உலகத்தரம்.****

இதுபோல் நீங்கள் இந்தப்படத்தைப்பார்த்து ரசிப்பதிலோ அல்லது பாராட்டுவதிலோ எந்தத்தவறும் இல்லை. ஆனால் ஒருவருமே குறை சொல்லக்கூடாது. சொன்னால் அவர்களுக்கு உலகத்தரம் தெரியாது என்றெல்லாம் நீங்க சொல்லக்கூடாது!

ஒவ்வொருவர் எதிர்ப்பார்ப்பும் வேறு வேறு!

வருண் said...

***9 வேதங்கள் சிவாஜி பண்ணினது தப்பிலை ஒரு வேடம் குடுதலக கமல் பண்ணுவது உங்களுக்கு உறுத்துகிறது இரட்டை வேடம் முன்று வேதங்கள் படங்களின் செய்வதில்லையா?? அது தப்பில்லை என்றாம் பத்து வேடம் மட்டும் ஏன் தவறு ?? உங்க லாஜிக் புரியவில்லை ***

நவராத்திரியில் சிவாஜி எல்லா அவதாரங்களிலும் முக எக்ஸ்ப்ரெஷன் மற்றும் நடிப்பில் மாறுதல் காட்டினார்.

நிச்சயம் நவராத்திரி "உலகத்தரத்தில்" இதைவிட உயர்ந்தது.

என்ன? எனக்கும் உலகத்தரம் பற்றி பேச தகுதி இல்லைனு சொல்றீங்களா? LOL!!

Anonymous said...

unga elarkum en fletcher make up m antha uyarntha manithar make up m en apadi pochunu theriyatha koncham maida mava kooda api(thadavitaram) make up man koothuku neram ahidichungra tension le adhuvum ilama mavu jasthi apitara ila correcta irukanu paka avangalukuuuuuuuu time illaaayaaaaaammmmmmm adhuvum illama intha kodumaya paka porathu nama ilichavayanga thane nu seri panama vitutangalam ithe than kamal(sorry sorry ulaganayahan) interviewle sonaram :(((

சரண் said...

// கயல்விழி said...
ரசிகன்,

நீங்க நிறைய எழுத்து பிழையோட எழுதி இருக்கீங்க, அதனால் என்னை விமர்சனம் பண்ணும் தகுதியை இழந்துவிட்டீர்கள்! :) :)

//

LOL!!!!


//****என்னை கேட்டால், கதையுள் திரைகதக்யில் வசனத்தில், நடிப்பில் கிராபிக்சில் கேமரா மற்றும் ஸ்டுண்ட்ஸ் இல் பாடல் வரிகளில் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. இவை உலகத்தரம் இல்லை என்றால் வேறு எது ?? ****
//


ஒரு படத்தில் கதை, திரைக்கதை, வசனம் இதெல்லாம் புதிதாக இருந்தால் அதற்குப் 'புதிய படம்' என்றுதான் சொல்லுவார்களே தவிர 'உலகத்தரமானப் படம்' என்று சொல்லமாட்டார்கள்.

நான் இதுவரைப் பார்த்த உலகத்தரமான படங்களில்,ஒன்றில் கூட கதைக்குத் தேவையில்லாத மேக்கபிற்காக இவ்வளவு மெனக்கெட்டதில்லை.. 'ஒலஹ நாயகனே....' என்ற சுயதம்பட்ட பாடல்கள் இருந்ததில்லை.. வலுவானக் காரணம் இல்லாமல் ஒருவரே இத்தனை பாத்திரங்களில் நடித்ததில்லை..
எல்லாப் படங்களும் அந்தந்த நாடுகளின் பழக்க வழக்கங்களயும், பிரச்சினைகளயும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளையும், படம் முடிந்து ஒரு 3 நாட்களாவது நம் மனதை விட்டு அகலாத ஒரு அரிய உணர்வையும் விதைத்திருக்கின்றன... எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம். உஙகளுக்குப் புரிய வேண்டும்மென்றால், கமலின் 'மகா நதி' என்னைப் பொருத்தவரை உலகத்தரத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு படம்.


( நான் ஏதோ வருணுக்கும், கயல்விழிக்கும் வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். பல தசாவதார விமர்சனப் பதிவுகளிலும், என்னுடைய ரஜினி பற்றிய பதிவிலும் இதேக் கருத்தைதான் சொல்லியிருக்கிறேன்)

கயல்விழி said...

//கமலின் 'மகா நதி' என்னைப் பொருத்தவரை உலகத்தரத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு படம்.
//

கமலின் அன்பே சிவம் படத்தை கூட உலகத்தரமான படமாக கருதுகிறேன். கமலின் மேக்கப், பாடி லாங்வேஜ் எல்லாம் பெர்பெக்டா இருக்கும். நாயகனும் உலகத்தரமான படமே(என்னைப்பொருத்தவரையில்)

கயல்விழி said...

//( நான் ஏதோ வருணுக்கும், கயல்விழிக்கும் வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். பல தசாவதார விமர்சனப் பதிவுகளிலும், என்னுடைய ரஜினி பற்றிய பதிவிலும் இதேக் கருத்தைதான் சொல்லியிருக்கிறேன்)//

நன்றி சூர்யா :)

நான் சீரியசா என்ன நினைக்கிறேன் தெரியுமா? என்னுடைய கண்ணோட்டத்தை கமல் படிக்க நேர்தால் கூட இவ்வளவு கோபப்படுவாரா என்பது சந்தேகமே. சாரு எழுதி இருப்பது போல, "கமல் தான் தற்போதைய ஜெயலலிதாவோ" என்ற சந்தேகம் எனக்கு வலுவாகவே இருக்கிறது.

சரண் said...

நம்மூர்ல கமலை மட்டும் இல்லை... ரஜினி, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று இப்படி யாரையும் விமர்சிக்க முடியாது. ஒருத்தற ரொம்ப சீக்கிரமாக தலைவனாக்கி விடுகிறர்கள்.. ஏன் எதுக்குனு கேக்காமலேயே..துதி பாடறதும், காவடி தூக்கறதும் ஏனோ நம்ம ரத்தத்திலேயே கலந்திருச்சு.. இங்க ரொம்ப சுலபமா ஜனாதிபதியைக் கூடக் கேள்வி கேக்கலாம், கிண்டல் செய்யலாம்.. ஆனா நம்மூர்ல அதெல்லாம் முடியவே முடியாது.

கயல்விழி said...

சூர்யா,

நீங்கள் குறிப்பிட்ட உடன் ஒன்று நினைவுக்கு வருகிறது. தசாவதாரத்தில் புஷ்ஷை கிண்டல் அடித்த மாதிரி கலைஞரையோ, புரட்சித்தலைவியையோ அல்லது மற்ற அரசியல் தலைவர்களையோ, இத்தனை அப்பட்டமாக கிண்டல் அடிக்க முடியுமா? கமல் கூட இப்போதெல்லாம் அப்படித்தான் போல.

Anonymous said...

எழுத்துப்பிழை இருப்பது நிஜம் ஆனால் அதை சொற்பிழையாக புரிந்து கொள்ளும் அளவு இங்கு யாரும் இல்லை, அனைவரும் புத்திசாலிகளே என்று நம்புகிறேன்

Anonymous said...

சூர்யா
//நான் இதுவரைப் பார்த்த உலகத்தரமான படங்களில்,ஒன்றில் கூட கதைக்குத் தேவையில்லாத மேக்கபிற்காக இவ்வளவு மெனக்கெட்டதில்லை.. '

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அன்பே சிவம் படத்தில் ஒரு ஐது நிமிட காட்சிக்காக பெரும் பொருட்செலவில் ஒரு ரயில் விபத்து காட்சி இருக்கும்

------------------------------
மேக்கப் இலையே நின்றால் எப்படி, சரி, வெவேறு பத்து முகம் காட்ட மேக்கப் போட்டு த்தான் ஆகவேண்டும் இதில் என்ன தப்பு

bullet cancer ai அழிப்பது, உள்பட படத்தில் நிறைய சின்னதும் பெரிதுமான லாஜிக் தவறுகள் உள்ளன, அது போன்ற ந்யயமான தவறுகளை சொன்னால் ஏற்ககூடியதே ஆனால் ஏன் மேக்கப், என்றோ, கதை இல்லை, என்றோ ,கமல் படங்களில் அவர் தான் dominate செய்வார், heroine kku முக்கியத்துவம் தரமாட்டார் போன்ற அடிப்படையே இல்லாத விமர்சனகள் வைத்தால் ?? அதற்குள் என்னை எதோ jayalaitha polavo என்று comparison வேறு சிரிப்புதான் வருகிறது

கூடுதுறை said...

நம் ஊரில் ஓவர் பில்டப் கொடுத்தால் தான் பெரிய விளம்பரம் கிடைக்கும்...

என்ன சில சிமயம் எதிர்மறையாகவும் கிடைத்துவிடும்...

உதா: ரஜினி குசேலனில் 14 வேடத்தில் நடிக்கிறார் மற்றும் ஜேகே.ரித்தீஸ் போல...

வருண் said...

ரசிகன்:

இப்படியே சும்மா ஏதாவது அர்த்தமில்லாமல் வம்பு பேசினால் உங்க அர்த்தமில்லாத பதில்கள் காணாமல் போய்விடும்!

Swami said...

கயல்
உங்களது பதிவுகளை படித்து இருக்கிறேன். என்னுடைய வாதம் எல்லாம் "நீங்களுமா?" என்பதுதான்.

தசாவதாரத்தையும் குசேலனையும் வம்புக்கு இழுத்தால் நிறிய பின்னூட்டம் வரும் என்று நிறைய நண்பர்கள் இருக்கும் போது நீங்களும் இந்த குட்டையை குழப்ப வேண்டுமா?

Anyway... Wish you all the best for your successful blogs..

சரண் said...

//ரசிகன்:
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அன்பே சிவம் படத்தில் ஒரு ஐது நிமிட காட்சிக்காக பெரும் பொருட்செலவில் ஒரு ரயில் விபத்து காட்சி இருக்கும்//

அது தவறு என்று யாரும் சொல்லவில்லை.

------------------------------
மேக்கப் இலையே நின்றால் எப்படி, சரி, வெவேறு பத்து முகம் காட்ட மேக்கப் போட்டு த்தான் ஆகவேண்டும் இதில் என்ன தப்பு
//

பத்து வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாதபோது, மேக்கப் தப்புதான். அதையும் உருப்படியாகப் போடாதது அதைவிடத் தப்பு.

//
bullet cancer ai அழிப்பது, உள்பட படத்தில் நிறைய சின்னதும் பெரிதுமான லாஜிக் தவறுகள் உள்ளன,
//

இத்தனை குறைகளை வைத்துக்கொண்டு உலகத்தரம் என்று சொல்லி படம் பார்க்கும் மக்களை ஏமாற்றக்கூடாது. அப்படித் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களிடமும் கோபத்தையும் காட்டக்கூடாது.

கயல்விழி said...

வாங்க கூடுதுறை

சூர்யா,
உங்கள்தெ ளிவான கருத்துக்களுக்கு நன்றி :)

வாங்க சுவாமி

நீங்கள் + மற்றும் சிலருடைய எதிர்பார்பை நிறைவேற்ற் முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் மொக்கை விமர்சனங்களை முடிந்த வரை இனிமேல் தவிர்க்கிறேன். எனக்கும் கமல் மாதியே ஓவர் பில்ட்டப் கொடுப்பது போல தோன்றுகிறது :)

Syam said...

I too didn't like the movie,it was really tough to kill 3 hours, luckily we went to a drive in theater,so my kid and I had enough room to play around while my wife was watching the movie for the sake of money we paid :-)

SK said...

கயல்,

இந்த பதிவு மற்றும் அதற்கு வரும் பதிலை பார்க்கும் போது எனக்கு சில விடயங்கள் புரிய வருது.

1. கட்டம் கட்டுறது :

நம்ம மக்கள் கட்டம் கற்றதுலே கை தேர்ந்தவர்கள். இப்போ பாருங்க கயல்னா இப்படி தான் பதிவு எழுதணும்/ எழுதுவாங்கன்னு ஒரு கட்டம் கட்டியாச்சு. இங்கே வந்த நிறைய பேரு 'நீங்களா இதை எல்லாம் எழுதறீங்கன்னு' கேட்டவங்க தான் அதிகம். இதே தான் எல்லா துறையிலும் நடக்குது, பொதுவா சினிமா துறைல.

2. சினிமா/ தனிப்பட்ட விமர்சனம்

அதாவது நம்ம மக்கள் சினிமாவ சினிமாவா பாக்காம ரொம்ப அதோட ஒன்றி போயிடறாங்க. அதற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துடறாங்க. நீ எழுதறதுலே எழுத்து பிழை இருக்குன்னு சொன்ன ஒத்துக்கறவங்க அவுங்க விரும்பற நடிகர் மேல சின்ன குறை சொன்னா ஒத்துக்க மாடேங்குறாங்க.

இது மாதிரி ஒன்ன இன்னொன்னா புரிஞ்சுகரதுனாலையே தான் பெரிய பெரிய பிரச்சனை வருது. நீங்க உங்களுக்கு என்ன புடிச்சு இருக்கோ அதை எழுதுங்க. என்ன சரின்னு தோணுதோ அதை எழுதுங்க.

'Blog is an place to relax a bit and express your feelings thro writing. If someone wants to say/share some message its upto the person.'

சரி இவளோ பேசிட்டு தலைப்ப பத்தி பேசலைன்னா தப்பா போய்டும். ஆனா யாரோ சொன்னா போல அதுக்கு எல்லாம் தனி தகுதி வேணும்னு நெனைக்குறேன். அந்த தகுதி எனக்கு இல்லை. நான் அந்த விடையத்துலே பின் வாங்கிக்கறேன்.

Anonymous said...

உலகத்தையே அழிக்கக்கூடிய வைரஸை ஒரு அரைலூசிடமிருந்து வாங்குவதற்கு அபத்தமாக இரண்டு மணிநேரம் படத்தில் செலவிட்டால் அது உலத்தரப்படமாக்கும் ;)

கயல்விழி said...

ஷ்யாம்

வருகைக்கு நன்றி :)

குழந்தைகள் 3 மணி நேரம் எல்லாம் உட்கார்ந்து படம் பார்ப்பது கடினம்.

கயல்விழி said...

எஸ்கே

விரிவான பின்னூட்டத்துக்கும், வருகைக்கும் நன்றி

1. "'நீங்களா இதை எல்லாம் எழுதறீங்கன்னு"

மேற்கண்ட வரிகள் என்னை ரொம்ப வியப்படையவைத்தது. எழுத வந்த 3 மாதத்தில் என்ன ரெப்யுடேஷன் பில்டப் பண்ணி இருக்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை. நான் மொக்கை படம் பார்க்கக்கூடாதா என்ன? :)

2. தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா/சினிமா நடிகர்கள் மோகத்தை விமர்சித்து ஒரு பதிவு எழுதினேனே, இதனால் தான்.

கயல்விழி said...

//உலகத்தையே அழிக்கக்கூடிய வைரஸை ஒரு அரைலூசிடமிருந்து வாங்குவதற்கு அபத்தமாக இரண்டு மணிநேரம் படத்தில் செலவிட்டால் அது உலத்தரப்படமாக்கும் ;)
//

நன்றி அனானி(பெயர் போட்டு எழுத பயமா? :) :))

வருண் said...

*** கயல்விழி said...
எஸ்கே

விரிவான பின்னூட்டத்துக்கும், வருகைக்கும் நன்றி

1. "'நீங்களா இதை எல்லாம் எழுதறீங்கன்னு"

மேற்கண்ட வரிகள் என்னை ரொம்ப வியப்படையவைத்தது. எழுத வந்த 3 மாதத்தில் என்ன ரெப்யுடேஷன் பில்டப் பண்ணி இருக்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை. நான் மொக்கை படம் பார்க்கக்கூடாதா என்ன? :)***

இதிலிருந்து எனக்கு என்ன தெரியுதுனா, கமலஹாஷன் அபிமானிகள் நீ இந்த அளவுக்கு -ve criticism எழுதுவாய் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் நீங்க ஏன் சினிமா விமர்சனம்லாம் எழுதி, எங்க அபிமான நடிகரை மிகவும் தாழ்த்தி எங்களை கஷ்டப்படுத்துறீங்கனு சொல்லாமல், இப்படி சொல்கிறார்கள்!

உனக்கு கமலைப்பிடிக்கும் என்றும் ஆனால் இந்தப்படத்தையும், இதில் வரும் கமலையும், அவர் கஷ்டப்பட்டு எதையோ சாதிக்க நினைப்பதையும், அதில் தோல்வி அடைவதையும், தான் பிடிக்கவில்லை என்று அவர்களுக்கு தெரியாது! ;-o

அது சரி said...

அய்ய, இன்னாங்க நீங்க, எப்டி படம் எடுத்தாலும் திட்றீங்க. ஒரு வேள, நீங்க ஒரு கலைப்பட ரசிகையோ?


//

இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?
//

ராங் சைட் டிரைவ் பண்ணா அப்டி தாங்க. இதுக்குத்தான் என்க ஊர்ல செலவு பண்ணி கீப் லெஃப்ட் அப்டின்னு போர்ட் வச்சிருக்கோம். உங்க ஊர்காராய்ங்க அத படிக்கிறதெ இல்ல போல. (அது சரி, அவய்ங்களையும் கொற சொல்ல முடியாது. படிக்க தெரிஞ்சா தான பாவம்!)

//
எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா?
//

அது அப்டி இல்லைய்ங்க. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளில் கோபால் பல்பொடின்னு நீங்க வெளம்பரம் கேட்டதேயில்லயா?? அது மாறி, இது ஒலகம் எல்லாம் ஓடறதுக்கு எடுத்த படம்ங்க!

எங்க தலய்க்கு "ஒலக நாயகன்"ன்னு சும்மாவா குடுத்தாய்ங்க?? ஆஸ்டின்ல இருந்து ஆண்டிப்பட்டி வரைக்கும், கான்பெராவுலருந்து கண்ணம்மா பேட்ட வரைக்கும் எங்க தலயோட தல எல்லாருக்கும் தெரியும்ல?

//
விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல!
//

இத நான் ரொம்ப வன்மையா கண்டிக்கிறேய்ங்க. நீங்க சொல்றத பாத்தா, அசின்னா நடிச்சது கமல் இல்லன்ற மாறி ஒரு அர்த்தம் வருது. மார்லன் பிராண்டோவை மார்ல பெறாண்ட விட்ட எங்க தலவர பத்தி நீங்க தப்பா எழுதிரீங்க!

//
கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு.
//

அய்ய. அந்த வெள்ளக்கார மேக்கப்பு பாத்து உங்களுக்கு Michael Douglas நெனப்பு வர்ல? இதுக்குத்தாங்க, அப்பப்ப, என்ன மாறி கொஞ்சம் இங்கிலிபீசு ப்டமும் பாக்கனுங்கறது. ( என்ன படம்னு கேக்காதீங்க. அப்புறம், தூள் படத்துல விவேக்கும், விக்ரமும் இங்கிலிபீசு படம் பாத்த மாறி நான் ஒரு கத சொல்ல வேண்டி வரும், ஆமா!)

//
ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
//

இது ம‌ட்டும் ரித்தீசுக்கு தெரிஞ்சிது, எம்புட்டு செல‌வானாலும் ப‌ர்வாலன்னுட்டு, நைட்டோட‌ நைட்டா, நீங்க‌ இருக்க‌ ஊர்ல‌ அவ‌ர் க‌ட் அவுட்டோட‌ வ‌ன்து எற‌ங்கிடுவார். அமெரிக்காவுல‌ருன்து இப்டி ஒரு ர‌சிகையா? அவ‌ரே எதிர்பார்க்க‌லைங்கோ!

//
ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா?
//

இன்னாது அசினா? அலோ, அசின் ந‌டிச்ச‌து ஒரே ஒரு சீன் தான். ம‌த்த‌தெல்லாம், எங்க‌ த‌லீவ‌ர் ப‌ண்ண‌து. நாகேஷின் ம‌னைவியா ந‌டிச்ச‌து கே.ஆர். விஜியா. (எங்க‌ ப‌ழிய‌ த‌லீவ‌ரு எம்சியார் கூட‌ ரொம்ப‌ ப‌ட‌ம் ந‌டிச்சிருக்காங்கோ. உங்க‌ளுக்கு இதுவும் தெர்ல‌, Micheal Douglas ம் தெர்ல‌. இன்னாங்க‌ நீங்க‌!) எங்க‌ த‌லீவ‌ரு ஏன் கே.ஆர். விஜியா மாறி ந‌டிக்கில‌ன்னா, அவ‌ரு நாகேஷா ந‌டிச்சிருக்காரே? அது போதும்னு ஒரு பெர்ய‌ ம‌ன்சு தான்.

//
தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? //

இன்னாங்க‌ நீங்க‌. வின்சென்ட் த‌லீத்னு எங்கனா வ‌ருதா?? அவ்ரு ஒரு நாடாரோ இல்ல வன்னியராவோ இல்ல மொல்லியாரவோ இருக்கக்கூடாதா? அவ்ரு ஒரு கிறிஸ்டிய‌ன் அம்புட்டு தான். அதுவும் கூட பேர வச்சி என்ன மாறி மொத ரோ கோஸ்டிங்க கெஸ் பண்றது. ஒங்கள‌ மாறி பால்கனி பெரிய மன்சங்க இப்பிடி சொல்லலாமா??

அன்த‌ பாட்டி எப்ப‌டி ஒருவித‌மான‌ காமெடி பாத்திர‌மோ அப்ப‌டி பாத்திர‌ம் தான் அன்த‌ நெட்டை க‌ம‌ல். இத‌ நீங்க‌ ம‌த‌த்தோடு முடிச்சி போட்ட‌ நாங்க‌ இன்னா ப‌ண்ற‌து??

//
அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை.
//

ரொம்ப‌ அக்கிர‌ம‌மா இருக்குங்க‌. கெமிஸ்ட்ரின்ன‌ இன்னா? (கெமிஸ்ட்ரின்னாலே, இஸ்கூல்ல‌ மொத‌ நாளு ஆசிட்ட‌ குடிச்ச‌து தான் நெனிவுக்கு வ‌ருது!). கெமிஸ்ட்ரின்னா டூய‌ட் பாட்றதா? ஏங்க‌, ம‌ர்த்த‌ சுத்தி டூய‌ட் பாட்ற‌ கோஸ்டின்னு திட்ரீங்க‌. டூய‌ட் வெக்காட்டியும் திட்ரீங்க‌. என்ன‌ தாங்க‌ ப‌ண்ற‌து? நாங்க‌ளும் ப‌ட‌ம் எடுக்க‌னுமுல்ல‌??

//
"என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்!
//

இது ஆலிவுட்டு ஸ்டைலுங்கோ! இன்த‌ மேறி ராங் காட்ற பொண்ணுங்க‌ள‌ தான் எங்க‌ள‌ மேறி மொத‌ ரோ கோஸ்டிக்கு ரொம்ப‌ புடிக்கும். இது தெரியாத‌ உங்க‌ளுக்கு? போங்க‌, இதுக்குத்தான் எப்ப‌வும் பால்க‌னில‌ உக்கான்து ப‌ட‌ம் பாக்க‌ கூடாதுங்க‌ற‌து!

//
ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்,
//

ரொம்ப‌ அனியாய‌மா பேசுறிய‌. ஆனா, எங்க‌ த‌ல‌ அடுத்து எடுக்குற‌ ம‌ரும‌ யோகி (எ) ம‌ருத‌ நாய‌க‌ம் (எ) கான் சாகிப் கான் ப‌த்தி ஒழுங்கா விம‌ர்ச‌ன‌ம் எளுதுங்க‌. ம‌ரும‌ யோகி, ச‌ரும‌ வியாதின்னு ல‌க்கி லுக் ஸ்டைல‌ எளுதினீங்க‌, நான் எம்புட்டு செல‌வானாலும் ப‌ர்வால‌ன்னுட்டு அமெரிக்க‌ வ‌ன்து உங்க‌ளுக்கு "வீடு" ப‌ட‌த்தை அம்ப‌து த‌ட‌வ‌ போட்டு காட்டுவேன். அப்புற‌ம் நீங்க‌ வீட்ட‌ காலி ப‌ண்ணிட்டு ஓட‌ வேண்டிய‌து தான். இது என்னோட‌ எச்ச‌ரிக்க‌ இல்ல‌ய்ங்க‌, வேண்டுகோள். (இது ஒண்ணு சொல்ல‌னும்னு ச‌ங்க‌த்தில‌ இருன்து ச‌மீப‌த்திய‌ உத்த‌ர‌வு).

//
ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!
//

இதில் த‌வ‌று ர‌ஜினி மீது இல்லை. ர‌ஜினி ஒரு ந‌டிக‌ர். ம‌க்க‌ள் த‌லைவ‌ரோ, முத‌ல்வ‌ரோ இல்லை. உண்மையில், அன்த‌ மீட்டிங்கில் ர‌ஜினி சொன்ன‌து என்ன?
"அவ‌ங்க‌ள‌ ஒதைக்க‌ வேணாமா??"

இது என்த‌ அர்த்த‌த்தில், என்த‌ வார்த்தைக‌ளின் தொட‌ர்ச்சியாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து?? I am sorry Kayal, but if you take words out of its context, then you are going to get unintended meanings!

Rajini never meant to say "Attack All the Kanadigas". Anybody who listened to his speech knew this.

ர‌ஜினி மீது க‌ல்லெறிவ‌து த‌மிழ்னாட்டில் ப‌ல‌ருக்கு ச‌ன்தோஷ‌ம். ர‌ஜினி த‌மிழ‌ன் இல்லை, த‌மிழ‌ன் இல்லை, என்று திருப்பி திருப்பி சொல்லி த‌ங்க‌ள் புண்ணை சொறின்து கொள்வ‌து இவ‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம். என‌வே, ர‌ஜினி மீது சாணி பூச‌ கிடைக்கும் என்த‌ ச‌ன்த‌ர்ப்ப‌த்தையும் த‌வ‌ற‌ விடுவ‌தில்லை.

ர‌ஜினி ப‌ட‌ம் என்ப‌து ர‌ஜினிக்கு ம‌ட்டுமான‌ விஷ‌ய‌மில்லை. ஒரு ர‌ஜினி ப‌ட‌ம் வெற்றி அடைன்தால், ப‌ல‌ர் வாழ்கிறார்க‌ள். நீங்க‌ள் ம‌றுத்தாலும், இது தான் உண்மை. ர‌ஜினி ப‌ட‌ம் தோல்வி அடைன்தால் ர‌ஜினிக்கு ம‌ட்டும‌ல்ல‌, வினியோக‌ஸ்த‌ர்க‌ள், தியேட்ட‌ர் கார‌ர்க‌ள், திரைப்ப‌ட‌ தொழிலாளிக‌ள் என்று ப‌ல‌ருக்கும் நேர‌டியாக‌வும், ம‌றைமுக‌மாக‌வும் க‌டும் பிர‌ச்சினைக‌ள்.

Whether you agree or not, Rajini is an one man industry. As an investment banker, I hate to see any industry in trouble!

கர்னாட‌க‌ விஷ்ய‌த்தில், க‌ருணானிதி ர‌ஜினியின் காலை வாரி விட்ட‌தே உண்மை. நீங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை க‌வ‌னிக்கிறீர்க‌ளா என்று என‌க்கு தெரியாது. ஆனால், க‌வ‌னித்தால் ஒன்று புரியும். திரையுல‌கின் அன்த‌ உண்ணாவிர‌தத்திற்கு முன்பே, ஒகென‌க்க‌ல் பிர‌ச்சினையை ஒத்தி வைக்க‌ க‌ருணானிதி முடிவெடுத்து விட்டார். (If you doubt me, check the dates of that huger strike, and when Karunanidhi announced that the water problem is suspended until the end of Karnataka election).
க‌ருணானிதி போன்ற‌ 80 வ‌ருட‌ அர‌சிய‌ல்வாதிக்கு தெளிவாக‌ தெரின்த‌ விஷ‌ய‌ம், ம‌க்க‌ளுக்கு இது பிடிக்காது என்ப‌து. என‌வே, விச‌ய‌த்தை திசை திருப்ப‌ அவ‌ர் செய்த‌ நாட‌க‌மே, ர‌ஜினி இன்த‌ பிர‌ச்சினையில் என்ன‌ சொல்கிறார் என்ப‌து.

அவ‌ர் நினைத்த‌வாறே, இப்பொழுது முழு க‌வ‌ன‌மும், ர‌ஜினி மீது திரும்பி விட்ட‌து. என்த‌ பொறுப்பிலும் இல்லாத‌ அவ‌ர் க‌ல்ல‌டிக‌ளை பெற்று கொள்ள‌, குடும்ப‌த்துட‌ன் முத‌ல்வ‌ர் ப‌த‌வியை அனுப‌விக்கும் க‌ருணானிதி, "உளியின் ஓசை" போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை வெளியிட்டு ம‌க்க‌ளின் காதுக‌ளிலும், க‌ண்க‌ளிலும் உளியை பாய்ச்சுகிறார்.

க‌ருணானிதி த‌ன்னை ராஜ‌ த‌ன்திரி என்று அக‌ ம‌கிழ‌லாம். ஆனால், வ‌ல்லானுக்கு வ‌ல்லான் வ‌ருவான். எம்.ஜி.யார் 14 வ‌ருட‌ம் ஆப்பு வைத்த‌து போல் மீண்டும் ஒருவ‌ன் தி.மு.க‌.வுக்கு வைப்பான். அது ர‌ஜினியாக‌ கூட‌ இருக்க‌லாம். இல்லை, வேறு யாரேனும் இருக்கலாம்.

மிருக‌ங்க‌ளில் கொடிய‌ மிருக‌ம் எது தெரியுமா?? சிங்க‌ம‌ல்ல‌, அது சோம்பேறி மிருக‌ம். உண்மையில், எத‌ற்கும் அச‌ராத‌, அதே ச‌ம‌ய்ம் நிதான‌மான‌ மிருக‌ம் புலி. அதை விட‌ கொடுமையான‌ மிருக‌ம் ப‌சித்த‌ புலி. அன்த‌ புலியே அஞ்சி ஒதுங்கும் ஒரு மிருக‌ம் உண்டென்றால், அது ப‌சித்து, காய‌ம்ப‌ட்ட‌ ஒரு புலி!

If you corner a wounded, hungry tiger, then be prepared to payback!

ர‌ஜினி த‌ன‌து அப்பாவி த‌ன‌த்தாலும், க‌ருணானிதி மீது வைத்திருக்கும் ம‌ரியாதையாலும் இன்த‌ பிர‌ச்சினையில் மாட்டிக்கொண்டார். அவ‌ர் புரின்து கொள்ளும் நாள் வ‌ரும். அப்பொழுது க‌ருணானிதிக்கும், அமைச்ச‌ர் என்ற‌ போர்வையில் உல‌வும் ராஜா, வீர‌பாண்டி ஆறுமுக‌ம் போன்ற‌ ர‌வுடிக‌ளுக்கும் ஒரு பெரிய‌ ஆப்பு நிச்ச‌ய‌ம்.

அன்த‌ ஆப்பை ர‌ஜினி வைக்க‌விட்டாலும், க‌ருணானிதியின் குடும்ப‌ பிர‌ச்சினையில் அவ‌ர்க‌ளே ஆப்பை ரெடி செய்து கொள்வார்க‌ள்!

கயல்விழி said...

அது சரி

ROFTL.

உங்கள் கமெண்ட் ஒவ்வொன்றும் அருமை. கடைசியில் உங்களுடைய அரசியல் கணிப்பு எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை, அதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது. இதை தனிப்பதிவாகவே போடலாம் என்று பார்க்கிறேன். btw, நீங்கள் ரஜினி ரசிகரா?

உங்களுக்கு தனிப்பதிவில் ஆட்சேபம் இருக்காது என்று நினைக்கிறேன், இருந்தால் தெரிவிக்கவும் :)

டிஸ்கி: உங்கள் ப்ளாக்குக்கு கமல் ரசிகர்கள் ஓடி வந்து கொத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல

வருண் said...

ஆனாலும் நம்ம கமலு, தன்னை உலகநாயகன் னு விளம்பரப்படுத்திக்கொள்(ல்)வதில், ரசினிக்கு ஒரு படி மேலே போய்விட்டார் :(

ஏன் இதெல்லாம், கமலஹாஷரே?

வருண் said...

அது சரி, பெரிய ரசினி விசிறிபோல இருக்கு!

இவரின் கடைசிப்பதிவு, கயலின் ஒரிஜினல் பதிவைவிட ரொம்ப நீளமா இருக்கு! LOL!

அது சரி said...

//ROFTL //

:0) I am glad.

என்னடா, நம்ம பதிவுல வந்து இவன் அடிக்கடி கும்மி அடிச்சிட்டு போறானேன்னு நீங்க எங்க என் பதிவு பக்கம் வரமாட்டீங்களோன்னு நெனைச்சேன். ஜாலியா எடுத்துகிட்டதுக்கு நன்றி.


//btw, நீங்கள் ரஜினி ரசிகரா?//


என்ன‌து, நான் ர‌ஜினி ர‌சிகனா?? யார் அது என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பும் அயோக்கிய‌ர்(க‌ள்) யார்?

"DIE HARD" ரஜினி ர‌சிக‌ர் என்று சொல்லுங்க‌ள். நான் கூட‌ குசேல‌ன் ப‌ற்றி ஒரு ப‌திவு எழுதினேன். ஆனால், ஒரு வார்த்தை கூட‌ ர‌ஜினியை ப‌ற்றி த‌வ‌றாக் சொல்ல‌வில்லை. என‌து க‌டுப்பு எல்லாம், ர‌ஜினியை வீண‌டித்து, எங்க‌ள் த‌லைவ‌ர் பெய‌ரை த‌வ‌றாக‌ உப‌யோகித்த‌ பீ.வாசு மீது தான்!

//
உங்களுக்கு தனிப்பதிவில் ஆட்சேபம் இருக்காது என்று நினைக்கிறேன், இருந்தால் தெரிவிக்கவும் :)
//

இன்னாங்க‌ நீங்க‌. இதுக்கெல்லாம் போய் யார்னா ஆட்சேப‌ம் சொல்வாங்க‌ளா? த‌விர‌, உங்க‌ள‌ மாதிரி பெரிய‌வ‌ங்க‌ ஒரு மேட்ட‌ர‌ ப‌த்தி ப‌திவு போடுற‌தே பெரிய‌ விஷ‌ய‌ம் தான‌? ஆனா, நீங்க‌ ர‌ஜினி ப‌த்தி ப‌திவு போடுற‌தா இருன்தா, க‌ன்ன‌ட‌ த‌ண்ணி பிர‌ச்சினைல‌ அவ‌ரு சைட் ப‌த்தியும் எழுதுங்க‌. அவ்ருக்குன்னு ஒரு நியாய‌ம் இருக்கும்ல‌? இது நிஜ‌மாக‌வே, என்னோட‌ வேண்டுகோள். உங்க‌ ப‌திவ‌ நெறைய‌ பேர் ப‌டிக்கிறாங்க‌. அத‌னால‌, ர‌ஜினி க‌ர்னாட‌க‌ வாட்ட‌ர் மேட்ட‌ர் ப‌த்தி நீங்க‌ கொஞ்ச‌ம் வெள‌க்க‌மா எழுதினா, என்ன‌ மாறி, மொத‌ பென்ச் கோஸ்டில்லாம் உங்க‌ளுக்கு விசில‌டிப்போம்!


//
டிஸ்கி: உங்கள் ப்ளாக்குக்கு கமல் ரசிகர்கள் ஓடி வந்து கொத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல
//

ஹா ஹா. You got me laughing now!
இன்த‌ இருப‌த்தொன்ப‌து வ‌ய‌து வாழ்க்கையில், எம்.ஜி.யார் ர‌சிக‌னான‌ என‌து அப்பாவுக்கோ, சிவாஜி ர‌சிகையான‌ என‌து அம்மாவுக்கோ, ஐன்து வ‌ய‌திலிருன்து என்னை காம்ப‌ஸ்சால் குத்த‌ துடிக்கும் என்த‌ க‌ம‌ல் ர‌சிக‌னுக்கோ ப‌ய‌ன்த‌வ‌ன் இல்லை இன்த‌ ர‌ஜினி ர‌சிகன்.
்.
நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம்!

அது சரி said...

//
வருண் said...
அது சரி, பெரிய ரசினி விசிறிபோல இருக்கு!

இவரின் கடைசிப்பதிவு, கயலின் ஒரிஜினல் பதிவைவிட ரொம்ப நீளமா இருக்கு! LOL!

//

இன்னா பண்ண தல, நாம எய்த ஆரம்பிச்சாலே, சுந்தர ராமசாமி "ஜே.ஜே. சில குறிப்புகள்" எய்துன மாறி, பல பக்கத்துக்கு போயிருது.

நானும் நம்ப முக்குத்தெரு கோவாலு டாக்டராண்ட காட்டிப் பாத்தேன். அவரு, இது "ஜெயமோகன் சிண்ட்ரோம்"னு சொல்றாரு. அது யாருங்க செயமோகன்? அவருக்கும் சிம்ரனுக்கும் என்ன சம்பந்தம்?? சிண்ட்ரம்னா, சிம்ரனோட ஃபுல் பேரு தானுங்க‌?

வருண் said...

ஜெயமோஹன், இப்படித்தான் ஆரம்பித்தால் முடிக்க மாட்டாரா!!
நான் அவர் பதிவுகள் அதிகம் படித்ததில்லை.

ஆனால் உங்க "கலோக்கியல்" நடை தனிச்சிறப்புவாய்ந்ததுதான் (யுனீக்) அது சரி!

வாழ்த்துக்கள்!

அது சரி said...

//
ஜெயமோஹன், இப்படித்தான் ஆரம்பித்தால் முடிக்க மாட்டாரா!!
நான் அவர் பதிவுகள் அதிகம் படித்ததில்லை.
//

ச்சேசே, அப்பிடியெல்லாம் சொல்லப்படாது. முடிச்சிடுவார். ஆனா, நீங்க அத முடிக்கிறதுக்கு தான் சில நாள் ஆயிடும்.

இந்தா, இப்ப ஒண்ணு எய்திருக்காரு. "காம ரூபிணி" அப்பிடினுட்டு. ரூபிணி அப்பிடினி ஒரு பழிய நடிக உண்டு. நம்ம ராமராசன் கூட ரொம்ப படம் நடிச்சிருக்கு. அது ப‌த்தி நெறைய‌ அஜால் குஜால் க‌தையெல்லாம் கூட‌ உண்டு.

நான் கூட‌, ச‌ரி, ந‌ம்ம‌ ரூபிணி ப‌த்தி, அண்ண‌ன் ஏதோ "அப்பிடி"யாப்ப‌ட்ட‌ க‌தை எளுதிட்டாரு போல‌ அப்பிடின்னு ப‌டிச்சேன். ங்கொப்புரான‌, க‌ழி நெடில‌டி ஆசிரிய‌ப்பாவுக்கும், விருத்த‌ப்பாவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்னு க‌ண்டு பிடிக்க‌ பெருங்க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ பின்னாடி, இன்த‌ க‌தைக்குத் தான் நான் ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டேன்.

இன்தா, நீங்க‌ளே ப‌டிச்சி பாருங்க‌.

http://jeyamohan.in/?p=595

அண்ணாச்சி எதைப்ப‌த்தி எளுதிருக்காருன்னு நீங்க‌ ம‌ட்டும் க‌ரெக்டா க‌ண்டுபிடிச்சி சொல்லீட்டீங்க‌, இன்த‌ வ‌ருச‌த்து "இல‌க்கிய‌ நோப‌ல் ப‌ரிசு" உங்க‌ளுத்தேன்!

அத‌னால‌, சீக்கிர‌ம் க‌ண்டுபிடிங்க‌. இப்ப‌ ஆர‌ம்பிச்சாதான், அடுத்த‌ டிச‌ம்ப‌ர்க்குள்ள‌ முடிப்பீங்க‌!

வருண் said...

***இன்தா, நீங்க‌ளே ப‌டிச்சி பாருங்க‌.

http://jeyamohan.in/?p=595***

அது சரி!

நன்றி!

ஆனால்,நான் அந்த மாதிரி ரிஸ்க்லாம் எடுக்கிறதில்லைங்க. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். சாரி.

ரூபினி எச் ஐ வி பாஸிடிவ் அல்லது எயிட்ஸ் நோயால் அவதிப்படுவதாக ரொம்ப நாள் முன்னால் படிச்சேன்!

Anonymous said...

///ரசிகன்:

இப்படியே சும்மா ஏதாவது அர்த்தமில்லாமல் வம்பு பேசினால் உங்க அர்த்தமில்லாத பதில்கள் காணாமல் போய்விடும்! ///

இது மிரட்டல் தொனியா இல்லே இருக்கு !!! சரி, எத வம்புன்னு சொல்றீங்க??

Anonymous said...

//உலகத்தையே அழிக்கக்கூடிய வைரஸை ஒரு அரைலூசிடமிருந்து வாங்குவதற்கு அபத்தமாக இரண்டு மணிநேரம் படத்தில் செலவிட்டால் அது உலத்தரப்படமாக்கும் ;) //

படம் பார்க்காதவர்கள், அல்லது பார்க்கும்போது தூங்கினவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதினால் இப்படித்தான் இருக்கும்!!

அசினை அவர் சந்திப்பது படத்தின் இடைவேளை பொது தான் அது எப்படி இரண்டு மணி நேரமாகும்??

கோவிந்து படடம் முழுக்க தான் இந்த வைரசுடன் சென்று போலீஸ் ஐ சந்திக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் அதற்கு பலப்பல இடையூறுகள் வந்தவண்ணம் உள்ளன. அதையும் மீறி அவர் போலீஸ் ஸ்டேஷன் செல்லும்போது வில்லன் அசினை வைத்து மிரட்டி அழைப்பதனால் வேறு வஜியுன்ரி திரும்பி விடுகிறார்

Anonymous said...

//உனக்கு கமலைப்பிடிக்கும் என்றும் ஆனால் இந்தப்படத்தையும், இதில் வரும் கமலையும், அவர் கஷ்டப்பட்டு எதையோ சாதிக்க நினைப்பதையும், அதில் தோல்வி அடைவதையும், தான் பிடிக்கவில்லை என்று அவர்களுக்கு தெரியாது! ;-)

மேக்கப் சரி இல்லை என்றவர்கள் கூட படத்தை ரொம்பவும் ரசித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் அளவுக்கு எதிர்பார்த்தவர்கள் தான் சற்றே ஏமாந்திருக்கிறார்கள், மற்றபடி இந்த படம், தரை அரங்குக்கு வரும் பழ்க்கம் அதிகம் இல்லாதவர்களை கூட ஈர்த்திருக்கிறது என்பதே உண்மை ஒரு படத்தை ரசிகர்கள் வெட்ரி படமாக்கலாம் ஆனால் இது போன்று ஒரு சரித்திர வெற்றி ஆக்க general audience எனப்படும் பொது மக்களுக்கும் படடம் பிடித்தால் தன் சத்தியம். படத்தில் குறைகள் இல்லை என்று யாரும சொல்லவில்லை. ஆனால் அது எந்தவிதத்திலும் படத்தை ரசிக்க இடயுரக இருந்ததில்லை

உண்மையில், பல இடங்களில் அழகாக தெரியும் fletcher பாத்திரத்தை விட ஜே கே ரித்தீஷ் அழகாக இருக்கிறார் என்பது அழகு பற்றிய உங்கள் ரசனையை(!?!) தான் காட்டுகிறது கூடவே கமல் மேல் நீங்கள் கொண்ட இனம்புரியாத வெறுப்பையும் !

கமல் கஷ்டப்பட்டு எதயோ சாதிக்க நினைத்தார் என்பது உங்கள் mis-understanding அயே காட்டுகிறது. கமல் இந்த படத்தை மக்களின் சந்தோசத்திற்காக எடுத்தார். அது 200% நிறைவேறி விட்டது . அதை தான் அவர் சாதிக்க நினைத்தார், அதை அடைந்தும் விட்டார் அவருக்கு அதில் எந்த குழ்ப்பமும் இருந்ததில்லை!

கயல்விழி said...

சில பின்னூட்டங்கள் நீக்கப்படுகிறது.

தேவை இல்லாத, அநாகரீகமான பின்னூட்டங்கள் நீக்கப்படும். நேரத்தை தயவு செய்து வீணாக்கவேண்டாம் என்று அனைத்து பதிவர்களையும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் :)

Anonymous said...

//கயல்விழி!
.....அதைவிடப் பெண் என்ற ஒரே காரணத்துக்காகப் பின்னூட்டமிடும் பேர்வழிக்கெல்லாம் பதில் சொல்வது டோட்டல் வேஸ்ட். "புரிகிறதா"//

என்னை பொறுத்த வரை இந்த பதிவில் வந்த மகா மட்டமான பின்னூட்டம் இது தான். இதை நீங்க இன்னும் நீக்க வில்லை! மாறாக அதற்கு பதில் அளித்துள்ளீர்கள்!

வருண் said...

ரசிகண்:

The virus can be destroyed easily and keeping that "alive" is what the moron Govind has been doing all the way. That is difficult to do instead of dumping that in paciffic or atlatic!

No virology lab allows chocolate inside. You will be fired at once i fyou take food inside an allow the monkey to play with teddy bear!

Dr. G is insane to take that virus all the way to Chennai beach to destroy it. Most ridiculousthing that movie!

Dr. is the villain in the movie. He must have signed a confdentiality agreement with the organization (any reseach he carries out belongs to the company and NOT his dad's). he can not just put that vial in his pocket and run away like he does no matter what it is!

Is that enough for you?

Dont come and explain me the logical crap in that movie, please!

Anonymous said...

Varun,

I have read\discussed much more bigger logical mistakes in the movie, at Orkut kamal fan club! Even here i was pointing to that bullet removing cancer thingi...

THe point is, NO MOVIE CAN BE 100% or LOGICAL in their story arrangement. not even mouna ragam! its just that dasa has more mistakes but its just a compromise to have a fun of screenplay and a good entertainer. otherwise too, are you new to movies??? logical errors are common rite?!

i have seen similar mistakes in both holywood blockbusters and in also so-called wordl class movies

வருண் said...

IMHO, when you claim that as a "world class" movie, there should be at least some quality. Not like this with full of crap!

You can never defend this movie in scientific or religuous sense. Only way to defend atha movie is that admit everything is nonsense including claiming that as a world class!

Anonymous said...

varun, neenga iruppathai vittuttu illaathayee solreenga!

1st let me clarify one thing, kamal called as ulaganaayagan, does thin mean that he is universal than WORLD ACTORS??? no the catch is, he is surely a miles ahead, top actor AMONG INDIAN ACTORS. on that regard, dasa is surely a world class film WHICH no other indian film maker has done so far, also not so soon in near future..

padathil kuraigal irukku engiren naan.
avai migapperiya kuraigal enru solgireergal.

thatswhy i say u are not seeing what IS there, rather seeing only the mistakes...then its going to be tuf to decide. i compared this with indian films and not with hollywood films. also please note that its not easy to make this kind of movie in india EVEN if u hav money! so with the lots of limited resources, kamal has done a marvellous job, both in technical and content side

வருண் said...

rasigan:

I dont have problem when you are claiming that as world class in your point of view. You can certainly claim loudly. But when you expect everyone to admit that claim, there is a serious problem.

First of all, I am not sure both "rasigans" are same.

The "thamizh rasigan" is attacking Kayal just bcos she does not feel that is world class!

Otherswise you can have your opinion as world class! Not a problem ;-)

மாயவரத்தான் said...

Rasikan madhiri aalungalukku gundu satti thaan ulagam. Ada vittu thallungappa

வெள்ளந்தி said...

கயல்!
விமர்சனங்கள பத்தி நான் எழுதுன . . பதிவ
என் வலைப்பூல படிச்சுப் பாருங்க !
( நேரம் இருந்தா )

Anonymous said...

reg ur point of view, please remeber cinema is an art and entertainment medium and not your virology lab where process need to be followed 100%. even u do

that, for instance how many will come to know what its 100% perfect?? the nambi fight is done perfect to the core to resemble a 12th century fight tricks.

none of those chinese malyutham type of kicks are used then.
http://ennam.blogspot.com/2008/07/blog-post_12.html

"சண்டை நிகழும் காலகட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டென்பதால் சீன ஜப்பானிய சண்டைக் கலைகளில் காணப்படும் வீச்சுகளின் சாயலோ, நமது பாரம்பரியக் குத்துச் சண்டைகளில் வீசப்படும் வரிசைகளோ இல்லாமல் மற்போரின் பாணியில்

சண்டையை அமைத்திருப்பது வியக்கவைக்கிறது."


and how many did care for that? its funny to see ppl pointing logical errors to discard a movie like dasa!
they really miss the fun. they miss the real fun!
and by having these kind of logical mistakes, are not gonna disqualify kamal as an ulaga naayagan. he was, is and will be! he is miles ahead than others in

this art called cinema. do you need someone to explin how and why??!! i guess this is acceptable even by a very neutral, educated fan. he will not discard kamal for some silly logical mistakes(like the one you say)

someone said kamal is becoming the next jayalaitha ect...but i feel its not kamal or his hardcore fans but some fellow bloggers who think they know much than kamal. there is one blogger who trashed kamal with title "பார்ப்பனீய மலம் " he tried to project as if kamal is indirectly supporting vaishnavite. another blogger was complaining that kamal insulted dalits by showing poovaraghan as black complexion. they said that there were nice white skinned dalits like one mr.ambekkhar who even earned a doctorate during those days. ok. now, if kamal shows the povaraghan character as a white skinned, do you think still ppl will keep quiet? they will comeback with some trash for that also. thatswhy i say most bloggers write crap and expect the commenters to support it! now who is arrogant??

//The "thamizh rasigan" is attacking Kayal just bcos she does not feel that is world class!
i never attacked kayal but that blogger's lame statements like - kamal's heroines are mostly dummy & he always belittles his co-stars like madhavan. here i

asked her if its really a dasa review or review on kamal the person? no answer. also i dont know waht is the point in posting\asking there things which are

irrelevant to dasa.

i was actually worried when an anony requested kayal not to reply - now thats disgusting, and kayal went to put that comment also posted an encouraging

reply! at that time, i was the only male person("rasikan" tells the gender rite!) posting against kayal. i felt bit insulted1 i dont need to find girls\women

and go beind them,in blogs! i came here for dasa!

and the reason why my 1st post itself was aginst the blogger, is the same reason. simple kamal bashing with no logic! varun, logic needs to be seen outside

virology labs too.

Anonymous said...

forgot to say, both the thamizh and english rasigan are same! as u started in english, i joined :)

வருண் said...

ரசிகன்:

நானும் உங்களை விடுவதாக இல்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள்.ஹெல்த்தியாவே விவாதிப்போம்.பிறகு பார்க்கலாம் :)

Anonymous said...

varun :)

Anonymous said...

தசாவதாரம் விமர்சனங்கள் - செம காண்டு மச்சி!
http://madippakkam.blogspot.com/2008/06/blog-post_20.html

தசாவதாரம்
http://nanaadhavan.blogspot.com/2008/08/blog-post_20.html

வருண் said...

^***ரசிகன் said...

உலகத்தரம் என்றால் என்னவென்றே தெரியாத உங்களைபோன்ற ஆட்கள் இதுபோன்ற விமரிசனத்தை எழுதுவது தான் உலக காமெடி. அமெரிக்காவில் வழ்வதலோ AMC\IMC திரையரங்குகளில் படம் பார்த்து விடுவதாலோ உங்களுக்கு தசாவதாரம் போன்ற படங்களை விமரிசிக்கும் தகுதி வந்துவிடபோவதில்லை***

I made sure both rasigans are same or not bcos of the above statement from you.

Your sweeping statements are outrageous!

Some illiterates are wrting reivews in the blogs!

Some cheap critics like "chAru" are wrting reviews!

have not you seen them or read them?

-----------------

When an illiterate is trying to teach virology with an half-baked knowledge, we all should listen and tolerate.

Why is that?

Is that bcos he is taking a world-calss movie with tons tons of bs and masks?

வருண் said...

////ரசிகன் said...
reg ur point of view, please remeber cinema is an art and entertainment medium and not your virology lab where process need to be followed 100%. even u do

that, for instance how many will come to know what its 100% perfect??////

Well you started explaining LOGIC to me regarding how many hours after or how many minutes asin shows up.

When you strted talking about LOGICS,
I thought we can talk some logical bs in the movie!

I dont think it is hard to take the virology lab scene with proper sense if he had discussed with some people who have the expertise.

By taking scenes like that you are misquiding the people with half-baked knowledge and the LOGIC sucks everywhere in the movie. Not just in a single place or sequence!

வருண் said...

*** and the reason why my 1st post itself was aginst the blogger, is the same reason. simple kamal bashing with no logic! varun, logic needs to be seen outside ***

What you DONT know is it is not a Rajnikanth fan who criticized or bashed this movie. It is one who loved kamalhasan movies such as anbE shivam!

As much as anybody else, the author has all right to critiicize when the movie is packed with full of logical bs, and religious crap and what not?" and claimed as a "world class" movie by bunch of Kh worshippers!

குடுகுடுப்பை said...

ரொம்ப அடிச்சுங்காதீங்க , குடுகுடுப்பையார் உங்களை அழைக்கிறார், நீங்க வாங்க விமர்சணம் பண்ணுங்க , நானும் உலகத்தரத்தில் (?)பதிவெல்லாம் போட்டிருக்கேன்.

Anonymous said...

குடுகுடு, தற்போது ஆணி புடுங்கும் வேலை அதிகம் உள்ளது நேரம் கிடைக்கும்போது உங்கள் பதிவுக்கு நிச்சயம் வருகிறேன்!! தங்கள் குசேலன் பதிவு நன்றாக உள்ளது!

Anonymous said...

எனது பதிவை படிக்க இங்கே கூடி இருக்கும் கோடிக்கணக்கான வலை ரசிகர்களுக்கும் நன்றி! :))) நான் தூங்கப்போகிறேன், ஜனனாயகமும் கருத்து சுதந்திரமும் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இங்கு சந்திப்போம்

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***If you’re reviewing in common persons view, then common person has already given a verdict…it’s a huge success. **

we are not talking about the BO success of this movie.

Even sakalakalaavallavan is a blockbuster. Is that a world class movie too?

Why the heck your bring up BO success here?!

Yeah common man understands. Does not complain.

So what?!!

kk said...

As long as there is no filthy language, you’ve to publish all the comments without any deletion. That s the good mature head of a critic.

First ofall, What do you think of yourself? Are u common man or a film critic?

If this is common mans review, I can understand. For ex, A common man’s review like this. Out of 10 roles, I don’t like 4 roles. Because the makeup is not good….blah blah…story is not good….like that…

As I told, a critic is one who has to tell both pluses and minuses. For me, dasavatharam is a very good experimentation. Even before the release of appu raja, people told. Why unnecessary efforts..like that…If you’re telling only minuses, just pin point it. But you should not drag asins name for all other roles. This is what called feminine thoughts.

Last but not least, I don’t believe in arguments (esp. with a person who has like movies like ‘sex and the city’). It never ends.

note: i just created a a/c for this only since i occassionly browse.

வருண் said...

kk: Start your own blog and run as you wish. You are not supposed to tell us how to run the blog!

You dont seem to have any basic decency and you dont know how to respond to criticisms on a movie or an actor.

you are coming up with some worthless sweeping statements with a filthy attitude!

It does not matter how many ids you come up with, it is our blog and we decide what posts should stay.

Go, start a blog and brag about dasavatharam or any bs you want to!

கயல்விழி said...

KK,

இந்த திரியில் தாக்குதல் பதிவுகளாக வந்ததால் அனானி ஆப்ஷன் நீக்கினேன், அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி கமெண்ட் எழுதும் அளவுக்கு இரிடேட் ஆகி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அதற்காக மன்னிக்கவும்.

உங்கள் கருத்துக்கு நன்றி :)

kk said...

To kayal:
“இந்த திரியில் தாக்குதல் பதிவுகளாக வந்ததால் அனானி ஆப்ஷன் நீக்கினேன், அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி கமெண்ட் எழுதும் அளவுக்கு இரிடேட் ஆகி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அதற்காக மன்னிக்கவும்.”
No need for that. Anyway appreciate your courtesy. I just shared my thoughts.

Just ask your contributor to cool down. For 2 comments, if people got disturbed like this means, just think about others with reputation …..

note: all this(starting a blog+so may ids+attitude blah blah)seems to be NO SENSE. this is like this. since you've criticized the movie, kamal is telling that dont see my movie. produce a movie as you like...like that...

If a film/or a blog is viewable to public, we’ve to accept the public comments even if its criticisms(not filthy languauge).

alright.

வருண் said...

-------------------
kk aka rasigan said..

* 1) As long as there is no filthy language, you’ve to publish all the comments without any deletion.

* 2) உலகத்தரம் என்றால் என்னவென்றே தெரியாத உங்களைபோன்ற ஆட்கள் இதுபோன்ற விமரிசனத்தை எழுதுவது தான் உலக காமெடி.

* 3)அமெரிக்காவில் வழ்வதலோ AMC\IMC திரையரங்குகளில் படம் பார்த்து விடுவதாலோ உங்களுக்கு தசாவதாரம் போன்ற படங்களை விமரிசிக்கும் தகுதி வந்துவிடபோவதில்லை

------------------------

Read those statements!

This is what I call as filthy attitude of a person who does not realize his limits and limitations!

1) You are NOT in a position to tell us how or when or which response we should delete.

Well, if you badly want to do that job of deciding which response shoulld/should not be deleted, you should start your own blog and award an "oscar" or "aascar" for the "best picture' in that blog of yours!

It certainly deserves an "aascar"!

Unknown said...

yaaryppaa athu KK! sathiyamaa avan yaarunnu enakku theriyaathu!!! and varun how and why do u conclude my name with him??

when the discussion was going in tamil, i posted in tamil. suddenly varun started to post in english and i switched over to enfligh but maintained the name rasigan. when varun asked if both are same, i promptly answerd both are same. avlo nyaayamaa irukkiren. but neenga????

you deleted a post of mine yesterday. ok but why u didnt publish that removing those words you consider bad?? infact i neer used any such words and all i asked is "are you an illiterate?"

i asked so becos u are bringing in new terms and irritating me but not at all answering my basic question. instead u keep on quoting my 1st post!

i really dunno if u have the guts to answer my kostin!

and now u hav turned of anony, iam rasigan. but for god sake i am not KK or anyone!

வருண் said...

////Vijay said...
yaaryppaa athu KK! sathiyamaa avan yaarunnu enakku theriyaathu!!! ///

You could have posted as "vijay" instead of anony rasigan at first place!

Relax.please! LOL!

Unknown said...

varun, yaaru tension aanaa?!!?!! actualla naan ungala relax panna sonna post ellaam vasathiyaa delete panniteenga. actually the platform is not comfortable for me to discuss. you see...in the name of moderation you delete my important posts, and u never answer my kostins...instead bringing new new issues...

whats the problem with rasigan??? i never use login id to post in blogger, but i never run away!

anyways, leaving out all the useless digressions, the basic kostin i asked you is verymuch alive!

rasigan aka vijay