Tuesday, December 23, 2008

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்!

தமிழ்மணம் ஒரு நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ப்ளாக் அக்ரெகேட்டர்". இதில், கருத்துக்களை சொல்லி ஒரு சாதாரண பதிவர் தன் திறமையை வெளிக்கொண்டுவரலாம். அதனால் தமிழ்மணம் பல இளம் பதிவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இன்றைய பிரபலபதிவர்கள் தமிழ்மணத்தால் தன் வலைபூவை வளர்த்தவர்கள்.

வளர்த்தகடா மார்பில் பாய்வதுபோல் இவர்கள் (மூத்தபதிவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தாங்கள் இல்லை என்றால் தமிழ்மணம் இல்லை என்று மிரட்டுவதுபோல நடப்பதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

எனக்கு தெரிய நிறைய கருத்துக்களங்கள், ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அந்த களநிவாகத்தை அவமானப்படுத்த முயற்சித்தால் அவரை களநிர்வாகம் நீக்குவது வழக்கம். ஆனால் பல தமிழ் கருத்துக்களங்களில் அதுபோல் செய்வதில்லை. தமிழ்மணமும் அதுபோல்தான் இன்றுவரை இருப்பதுபோல் தோன்றுகிறது. அதே சமயத்தில், ஒரு நிர்வாகிக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கொஞ்சமாவது தெரியும் என்பதை மூத்த பதிவர்கள் உணரவேண்டும். நான் மூத்த பதிவர், நான் இல்லைனா நீ இல்லைனு மிரட்டும் வகையில் எழுதிவரும் பதிவர்களைப்பார்த்து தமிழ்மணம் கலங்கி, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் சரி சரி என்று போகவேண்டும் என்று சில "மூத்தபதிவர்கள்" எதிர்பார்ப்பதுபோல் இருக்கிறது.

"சூடான இடுகை" பற்றி உண்மை என்னவென்றால், உங்கள் பதிவு சூடான இடுகையில் வந்தால், சாதாரணமாக அந்த இடுகைக்கு வருகிற பார்வையாளர்கள் 3-10 மடங்கு அதிகமாவார்கள். உங்கள் இடுகை சூடாக்கப்பட்டால் நீங்கள் சாதாரண பதிவராக இருந்தாலும் ஒரு பிரபலபதிவரைக்கூட ஓரத்தில் தள்ளலாம். இந்த சூடான இடுகை இருப்பதால்தான் பலர் தன் "ப்ளாக் களை வளர்க்கமுடிகிறது. இன்று "பெரிய பதிவர்" என்று தன்னை நினைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் மற்ற தரமான பதிவுகள் வாசகர்களின் பார்வையிலிருந்து மறைக்கபடுகிறது. துரதிஷ்டவசமாக சில சமயங்களில் சில கேலிக்கூத்துகளும், உப்புபெறாத பதிவுகளும் சூடான இடுகையில் இடம்பிடித்து பல நல்ல தரமான இடுகைகளை மறைத்துவிடுகிறது. :-(

சூடான இடுகையில் தன் இடுகை வரவேண்டும் என்பது ஒவ்வொரு பதிவரின் அவா. இதை ஒரு சிலர் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று அகந்தையுடன் சொல்லிக்கொண்டு ஆனால் சூடான இடுகையில் தன் பதிவுகளை கொண்டுவர பலவழிகளில் போராடுகிறார்கள்.

பொதுவாக, காமம், ரஜினி, கமல், கற்பு, நாய், செக்ஸ் போன்ற சொற்கள் தலைப்பில் இடம் பிடித்தால், அல்லது இன்னொரு பதிவரை விமர்சிப்பது போன்ற தலைப்புகள் உள்ள பதிவுகளை எளிதாக சூடான இடுகையில் கொண்டு வந்துவிடலாம். இல்லைனா சாரு நிவேதிதா அல்லது ஜெயமோஹன் பற்றி தலைப்பில் எழுதினாலும் சூடான இடுகையில் வரும்.

பல பதிவர்கள் சூடான இடுகைக்கு தன் பதிவை கொண்டு வந்து வந்து பழக்கப்பட்டு சூடான இடுகைக்கு "அடிக்சன்" ஆகிவிட்டார்கள். பல நேரங்களில் இவர்கள் முயற்சி எப்படி சூடான இடுகையில் இதைக்கொண்டு வருவது என்பது மட்டுமே? என்ன விசயம் நாம் சொல்கிறோம் என்பதல்ல! இதில் அதிகமாக இந்த "சூடான இடுகை" மயக்கத்தில் இருப்பது சில மூத்தபதிவர்கள்தான்.

இப்போது, ஒரு புதிருக்கு விடை தெரியாமல் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் "பேக்-அப்" செய்துகொண்டு "ஜனநாயகம்" என்கிற வார்த்தையை "தவறாக" பயன்படுத்தி, தமிழ்மணத்தின் தரத்தையும் அதன் நிர்வாகத்தையும் கீழே கொண்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு விசயம்.

இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை (புதிருக்கு விடை காண்பதை விட்டு விட்டு) ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?

குறிப்பு: என்னுயை கருத்துக்களை ஓரளவுக்குத்தான் பின்னூட்டத்தில் சொல்ல முடிகிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

142 comments:

ரவி said...

நல்ல பதிவு !!!

Tech Shankar said...

உங்கள் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
எந்த மாற்றமும் இல்லை.

வருண் said...

**செந்தழல் ரவி said...
நல்ல பதிவு !!!**

நன்றி, திரு. ரவி! :)

வருண் said...

***தமிழ்நெஞ்சம் said...
உங்கள் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
எந்த மாற்றமும் இல்லை.

23 December, 2008 9:46 AM***

நன்றி, தமிழ்நெஞ்சம்! :)

King... said...

உறைக்கத்தான் செய்கிறது...

King... said...

செந்தழல் ரவி said...
\\
நல்ல பதிவு !!!
\\

நிறைய உள்குத்து இருக்கும் போல...

ILA (a) இளா said...

சூடாக்குறது மக்கள் தானுங்களே. அதை தடுக்கலாமா? அதுதான் சனநாயகமா? அட தூக்கிட்டு போவட்டும், சொல்ல வேணாமா?? இவுங்க எல்லாம் பதிவு எழுத வந்தப்போ சூடான இடுகையே இல்லே. அதனால இவுங்க எல்லாம் அதை நம்பி இல்லை. ஆனாலும் ஒரு இடத்துல பிடிக்கிறப்போ தள்ளிவிட்டா ஒரு வருத்தம் கூட வரக்கூடாதா?? உங்க பின்னூட்டத்தை தமிழ்மணம் திரட்டைலைன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?

வருண் said...

ILA:
சூடாக்கிறது மக்கள் (மற்றும் சக பதிவர்கள்தான்) நான் இல்லைனு சொல்லல.

நான் சொன்னதுபோல், ஒண்ணும் இல்லாத விசயத்தைக்கூட சூடாக்குவது "பதிவர்கள்" தான்.

நான் சொல்ல வருவது இதுதான். அவர்கள் பதிவு வராததற்கு காரணம் இதை நிர்வாகியிடம் தனிமடலில் கேட்டு தெரிந்துகொள்லலாம். ஆளாளுக்கு நிர்வாகத்தை "பப்ளிக்கா" குறை சொல்வது, மிரட்டுவதுபோல் எழுதுவது, இதெல்லாம் நல்லாயில்லைங்க!

ஏதாவது நல்ல தகுந்த காரணம் இருக்கலாம். ஏன் இந்த அவநம்பிக்கை? ஏன் இந்த குற்றச்சாட்டு?

மூத்த பதிவர்களே இப்படி நிர்வாக்த்தின்மேல் நம்பிக்கை இல்லாமல் பேசினால், புதிதாக வருபவர்கள் என்ன நினைப்பார்கள்?

ILA (a) இளா said...

//ஏதாவது நல்ல தகுந்த காரணம் இருக்கலாம். //
kandippa irukkum. illaatti seyya maattaanga. aana sollitu seyyalaame. atleast antha naalu perukkavathu. 4 per appadigirathula nambikkai illai. innum neriya per irukalam(yaarukku theriyum)

ILA (a) இளா said...

ரெண்டு மூனு நாளா நான் பதிவுகள் பக்கம் வரலை. அதனால ஏதாவது அநாகரிகமா நடந்திருந்தா சொல்லுங்களேன்.

வருண் said...

இளா:

நான் அந்த அளவுக்கு கவனிச்சு பார்க்கலை. நான் ஒரு சில பதிவில் இருந்து கற்றது ஓரளவுதான்.

இங்கே நடக்கிற "அரசியல்" மற்றும் "மூத்த பதிவர்கள்" பலர் பற்றியெல்லாம் எதுவும் எனக்கு ரொம்பத்தெரியாது. அதனால்தான் என் கருத்தை தைரியமாக சொல்ல முடியுது. :) :) இல்லைனா மாறி மாறி ஆயில் அடிப்பதிலேயே ஒரு மண்ணையும் சொல்ல முடியாது. :)

நான் எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஒரு சில ப்ளாக் குதான் போவேன். அதுவும் எனக்கு பிடித்த டாப்பிக்கா இருந்தால்.

அதனால் நான் ஒண்ணும் "பல விபரங்கள்" தெரிந்த ஆள் இல்லை :) :)

ஆனால், கடந்த 1 மாதமாகவே பதிவுகளில் ஒரு ப்ளாகரை இன்னொரு ப்ளாகர் விமர்சிப்பது போல் போய்க்கொண்டு இருந்தது.

இப்போது நிர்வாகியை தாக்குவதுபோல் இடுகைகள் போகிறது.

நான் இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பம் என்று நம்பி இருந்தேன் :)

இப்படி மாற்றி மாற்றி குறை/குற்றம் கூறுவது எதுக்குனு தோனுச்சு?

அதான் இந்தப்பதிவு! :)

ILA (a) இளா said...

//நான் இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பம் என்று நம்பி இருந்தேன் //
உண்மைதாங்க. இது குடும்ப பிரச்சினை மாதிரிதான். அதனால தான் இன்னும் அந்த 4 பேர் அமைதி காக்குறாங்கன்னு நினைக்கிறேன். கோவி ஒரு பதிவு போட்டதுல நாங்க எல்லாம் அடிச்ச கும்மியில முடிஞ்சி போயிருக்கும்னு நினைச்சேன்,. இன்னும் முடியல போல. லக்கியோட இன்னொரு பதிவு பார்த்தேன். அவ்ளோதான். இதுவும் கடந்து போவும்னு எனக்கும் தெரியும், தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் தெரியும்.. விருது அறிவிக்கட்டும் எல்லாம் அடங்கிரும்.

அது சரி(18185106603874041862) said...

எதை அநாகரீகம் என்று சொல்கிறீர்கள்?? மூத்த பதிவரோ புதிய பதிவரோ தாங்கள் நினைப்பதை சொல்லத் தான் பதிவு எழுதுகிறார்கள்...அதில் தணிக்கை செய்ய தமிழ்மணம் யார்?

சரி, அது ஒரு பிரைவேட் கம்பெனி என்றாலும், செய்வதை வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்ய வேண்டியது தானே?? சிலரை மட்டும் கட்டம் கட்டுவோம்....இவர்களையெல்லாம் சூடான இடுகையில் சேர்க்க மாட்டோம் என்பது மிக மோசமான விஷயம்...அப்படியானால் இவர்கள் சொல்வதை தான், இவர்களுக்கு பிடித்ததை தான் எழுத வேண்டுமா என்ன?

வருபவர்கள் படிப்பது தான் சூடான இடுகை ஆகிறது...இதில் ஏன் தமிழ்மணம் தலையிட வேண்டும்?? அப்படி தலையிட்டாலும் ஒரு அறிவிப்பு செய்து விட்டு செய்யலாமே?

காமம், கமல், ரஜினி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் இவர்களையெல்லாம் இழுத்தால் பதிவு சூடாகும் தான்...அதற்காக இவர்களை பற்றி எழுதக் கூடாது எப்படி சொல்ல முடியும்??

தமிழ்மணத்தால் பதிவர்கள் பிரபலமாயிருக்கலாம்...ஆனால் தமிழ்மணம் இருப்பதாலேயே அவர்கள் பதிவர்கள் ஆகவில்லை!

எதை செய்தாலும் அதை வெளிப்படையாக செய்யுங்கள் என்பது ஒரு குறைந்த பட்ச எதிர்பார்ப்பு....இதைக் கூட அநாகரீகம் என்றால் எப்படி??

தனியாக பேசி தீர்த்து கொள்ள இது என்ன குடும்ப பிரச்சினையா இல்லை கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா?? பதிவர்க்ளாவது இதை வெளிப்படையாக சொல்கிறார்கள்...இதை உண்மையில் பாராட்ட வேண்டும்!

(எதிர்கருத்துக்கு மன்னிக்க....ஆனால் பதிவர்கள் செய்வது தவறு என்று எனக்கு தோன்றவில்லை!)

வருண் said...

***அது சரி said...
எதை அநாகரீகம் என்று சொல்கிறீர்கள்?? மூத்த பதிவரோ புதிய பதிவரோ தாங்கள் நினைப்பதை சொல்லத் தான் பதிவு எழுதுகிறார்கள்...அதில் தணிக்கை செய்ய தமிழ்மணம் யார்?***

தமிழ்மணம் யாரு என்றெல்லாம் கேட்கமுடியதுங்க.

நம்மதான் தமிழ்மணத்தை அக்ரெகேட் பண்ன சொல்லி கேட்கிறோம். அவர்கள் உங்களை இன்வைட் பண்ணி பதிவிட சொல்லலை.

அவர்கள் உங்க ப்ளாக்கு நிறைய விசிட்டர் வர உதவுகிறார்கள். உங்க ப்லாக்கை தமிழ்மணத்தில் இணைக்காமல் பாருங்க. உங்களுக்கு கிடைக்கும் விசிட்டரில் பல மடன்ந்கு குறையும்.

எந்த தளமும் அவர்கள் வசதிக்கேற்ப சட்ட திட்டங்கள் வைத்துக்கொள்ளலாம். அதை அவர்கள் தேவைக்கேற்ப மாற்றலாம்.

இ-மெயிலில் கேட்கவேண்டிய விசயத்தை ஒரு திரி ஆரம்பித்து ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது.

இதெல்லாம் என்னை பொறுத்தவரையில் சரியல்ல!

இதில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் தோல்விதான்!

யாரை வென்றீர்கள்?

Anonymous said...

//காமம், ரஜினி, கமல், கற்பு, நாய், செக்ஸ் இல்லை இன்னொரு பதிவரை விமர்சிப்பது போன்ற பதிவுகளை எளிதாக சூடான பதிவில் கொண்டுவந்துவிடலாம். இல்லைனா சாரு நிவேதிதா அல்லது ஜெயமோஹன் பற்றி எழுதினாலும் சூடான இடுகையில் வரும்.//
சூடான இடுக்கையில் கொண்டுவர இன்னொரு வழியும் உண்டு, அது ஏதாவது ஒரு குழுவில் உங்களை இணைத்துக்கொள்வது. அதாவது ஒரு குழுவில் உள்ள பதிவர்களுக்கு தொடர்ந்து நீங்கள் பின்னூட்டம் ( Ex: மீ த பஸ்டு, மீ த 50th) இட்டு வந்தால், பின்னர் அவர்கள் உங்களுக்கும் இடுவார்கள். இந்த வகையிலும் சூடான இடுக்கையில் இடம் பிடிக்கலாம். ஆகா ஒன்று புரிகிறது, சூடான இடுக்கையில் வருவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல...... இனிமேல் ஆவது சூடான இடுக்கையில் வருபவர்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட தமிழ்மண மகுடத்தில் வருபவர்களுக்கு முக்கியத்துவம் தரலாம் காரணம் அதைத்தான் தரத்தில் அடையாளமாக பார்க்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், தமிழ்மணம் செய்ததும் தவறு என்றே தோன்றுகிறது. தமிழ்மணம் ஏன் குறிப்பிட்ட நால்வருடைய பதிவை மட்டும் காட்டாமல் இருக்கவேண்டும்? என்னதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும், அனைவருக்கும் ஒரு நீதி என்று தானே அவர்கள் செயல்படவேண்டும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?//

இப்ப நீங்க மட்டும் என்ன செஞ்சி வச்சிருக்கிங்க... அவர்களுக்கு தனிமடலில் இதை சொல்ல வேண்டியதுதானே... இத்துக்கு ஒரு பதிவு போட்டு இதை சூடான இடுகைக்கு கொண்டு போகனும்ற நோக்கம் உங்களுக்கும் தான் இருக்கு... அண்ணாச்சி மத்தவங்க லட்சணத்தை பத்தி பேசுற முன்னாடி நாமும் நம்பள கொஞ்சம் பாத்துக்கனும்...

வருண் said...

**** VIKNESHWARAN said...
//இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?//

இப்ப நீங்க மட்டும் என்ன செஞ்சி வச்சிருக்கிங்க... அவர்களுக்கு தனிமடலில் இதை சொல்ல வேண்டியதுதானே... இத்துக்கு ஒரு பதிவு போட்டு இதை சூடான இடுகைக்கு கொண்டு போகனும்ற நோக்கம் உங்களுக்கும் தான் இருக்கு... அண்ணாச்சி மத்தவங்க லட்சணத்தை பத்தி பேசுற முன்னாடி நாமும் நம்பள கொஞ்சம் பாத்துக்கனும்...***

விக்னேஸ்வரன்:

* நான் எதுக்காக தனிமடலில் தமிழ்மணத்தை அனுகனும்? நான் என் பதிவு சூடான இடுகையில் வரலை என்றோ, நான் பழம்பெரும் பதிவரோ அல்ல.

* நான் எந்தப்பதிவர் பெயரையும் இங்கே குறிப்பிடவில்லை.

மாடெரேஷன் இல்லாத கோவி மற்றும் டி வி ஆர் பதிவுகளில் இதே கருத்தை நான் சொல்லி இருக்கேன். அதையே தான் இங்கேயும் சொல்லியிருக்கேன்.

தயவுசெய்து, இதுபோல் இஷ்டதுக்கு எதையாவது சொல்ல வேணாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் உங்களை தமிழ் மணத்தை அனுகச் சொல்லவில்லை, உங்கள் கருத்தை ஏன் அநாகரீகம் செய்யும் மூத்த பதிவர்களுக்கு தனிமடலில் அனுப்பவில்லை என்றே கேட்கிறேன்...

வருண் said...

***கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், தமிழ்மணம் செய்ததும் தவறு என்றே தோன்றுகிறது. தமிழ்மணம் ஏன் குறிப்பிட்ட நால்வருடைய பதிவை மட்டும் காட்டாமல் இருக்கவேண்டும்? என்னதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும், அனைவருக்கும் ஒரு நீதி என்று தானே அவர்கள் செயல்படவேண்டும்.***

திரு. அன்பரசன்: நிச்சயம் ஏதோ காரணம் இருக்கனும். என்னவென்று அவர்கள் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை முறைப்படி கேட்காததால், முறைப்படி பதில் வருமானு தெரியலை. ஆனால் ஏதாவது ஒரு விளக்கம் நிச்சயம் வரும்னு நம்புகிறேன்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

வருண் said...

***VIKNESHWARAN said...
நான் உங்களை தமிழ் மணத்தை அனுகச் சொல்லவில்லை, உங்கள் கருத்தை ஏன் அநாகரீகம் செய்யும் மூத்த பதிவர்களுக்கு தனிமடலில் அனுப்பவில்லை என்றே கேட்கிறேன்...**

முதலில் மூத்த பதிவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

அப்படியே என் மூக்கை நுழைத்து அவர்களிடம் கேட்டால், நீ யாரு இதையெல்லாம் என்னிடம்கேட்க? உன் வேலையைப்பாரு என்று சொன்னால்,
நான் விக்னேஷ்வரன் ஃப்ரெண்டுனு சொல்லவா?

காரூரன் said...

தமிழ் மணம் ஒரு திரட்டி, மூத்தவர், புதிய பதிவர் என்று வித்தியாசம் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. கருத்துக்களை விவாதிக்கும் தளமாகத்தான் இருக்க வேண்டும். மாறாக ஒருவரின் பேரை சொல்லி கருத்துக்கள் விமர்சிக்கப் படக் கூடாது. சில மூத்த பதிவர், "பொத்திட்டு உன் வேலையை பார்" என்று பின்னூட்டம் விடுவது அ நாகரீகமான நடைமுறைகள் அதை நான் பார்த்திருக்கின்றேன்.

கருத்துக்களின் ஆழத்தை தான் நான் நோக்குவேனே தவிர அவர் எவ்வளவு காலம் எழுதுகின்றார் என்பது அல்ல. ஆதங்கம் புரிகின்றது. புரியவேண்டியவர்கள் புரியாவிட்டால் எங்கள் கருத்துக்கள் தட்டப் படும் தூசு போன்றது.
நல்ல கருத்து!

Unknown said...

//தமிழ்மணத்தால் பதிவர்கள் பிரபலமாயிருக்கலாம்...ஆனால் தமிழ்மணம் இருப்பதாலேயே அவர்கள் பதிவர்கள் ஆகவில்லை!//

Mr athu sari!

முதலில் தமிழ் மணத்திலிருந்து விலகிவிட்டு இப்படி எழுதிக்கொள்ளலாம்.

புதிதாக எவரும் நும் பதிவில் நுழைய மாட்டார் நும் கருத்து அப்ப்டியிருந்தால்.

சேர்த்துவைத்த கூட்டம் மட்டும் பின்னூட்டம் போட்டுக்கொண்டடேயிருக்கும்.

நும் சல்யூட்டுக்காக அவர்களும் அவர்களுடையதுக்காக நீங்களும் மாறி மாறி...

நும்மை எவனாவது திட்டுவான். நீர் ஊரைக்கூட்டுவீர். (அதற்கு தமிழ் மணம் திரட்டி வேண்டும்!) அவர்கள் ஆறுதல் சொல்வார்கள்.

அவர்களுள் ஒருவனை எவனாவது திட்டுவான், நீர் அங்கு போய் ஆறுதல் சொல்வீர்.

இதற்கு தமிழ்மணம் தேவையா? என்பதுவே இங்கு கேள்வி!

Anonymous said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

Thamira said...

கருத்துகள் ஒப்பானவையே. எழுத்துப்பிழைக‌ளை த‌விர்த்த‌ல் ந‌ல‌ம்.

ரவி said...

///அப்படியே என் மூக்கை நுழைத்து அவர்களிடம் கேட்டால், நீ யாரு இதையெல்லாம் என்னிடம்கேட்க? உன் வேலையைப்பாரு என்று சொன்னால், ///

இப்பவும் உங்களிடம் கோவிகண்ணன் அதை தான் கேக்குறாரு என்று நினைக்கிறேன்

ரவி said...

///உன் வேலையைப்பாரு என்று சொன்னால்///

நானும் கூட கேட்கலாம் என்று நினைக்கிறேன்...

அதானே ? உமது வேலையை பார்க்கவேண்டியது தானே ??

ரவி said...
This comment has been removed by a blog administrator.
அர டிக்கெட்டு ! said...

//நம்மதான் தமிழ்மணத்தை அக்ரெகேட் பண்ன சொல்லி கேட்கிறோம். அவர்கள் உங்களை இன்வைட் பண்ணி பதிவிட சொல்லலை//

மொதலாளிங்கல்லாம இரக்கப்பட்டு தொழிலாளிங்களுக்கு வேல கொடுக்கறாங்க...கொடுத்த்த வாங்கிட்டு போறத விட்டுட்டு அங்க போய் உரிமை மன்னாங்கட்டி பேசுனா????????????????

வருண் said...

***செந்தழல் ரவி said...
///அப்படியே என் மூக்கை நுழைத்து அவர்களிடம் கேட்டால், நீ யாரு இதையெல்லாம் என்னிடம்கேட்க? உன் வேலையைப்பாரு என்று சொன்னால், ///

இப்பவும் உங்களிடம் கோவிகண்ணன் அதை தான் கேக்குறாரு என்று நினைக்கிறேன்

24 December, 2008 4:52 AM***

திரு. ரவி!

கோவி நாகரீகமாகத்தான் பதில் சொல்லி இருக்கிறார். இந்த நாரதர் வேலை எதற்கு, சார்? :(

வருண் said...

***செந்தழல் ரவி said...
///உன் வேலையைப்பாரு என்று சொன்னால்///

நானும் கூட கேட்கலாம் என்று நினைக்கிறேன்...

அதானே ? உமது வேலையை பார்க்கவேண்டியது தானே ??

24 December, 2008 4:52 AM***

-----------------

செந்தழல் ரவி said...
நல்ல பதிவு !!!

23 December, 2008 9:45 AM

----------------------

திரு ரவி: அப்படிகேட்கும் உங்கள் அநாகரீகம் இப்போ ஊருக்கே தெரிகிறது.

தனிமடலில் சொன்னால், நீங்க "மூத்த பதிவர்" அவர் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என்று ஊர் செல்லும்!

தமிழ்மணத்தின் பக்கம் இருந்து நியாத்தைக்காட்டுவது என் வேலை!

பி.கு: இதுபோல் பின்னூட்டம் வந்தால் இனிமேல் டெலீட் செய்யப்படும் :-)

வருண் said...

***அர டிக்கெட்டு ! said...
//நம்மதான் தமிழ்மணத்தை அக்ரெகேட் பண்ன சொல்லி கேட்கிறோம். அவர்கள் உங்களை இன்வைட் பண்ணி பதிவிட சொல்லலை//

மொதலாளிங்கல்லாம இரக்கப்பட்டு தொழிலாளிங்களுக்கு வேல கொடுக்கறாங்க...கொடுத்த்த வாங்கிட்டு போறத விட்டுட்டு அங்க போய் உரிமை மன்னாங்கட்டி பேசுனா????????????????

24 December, 2008 4:57 AM ***

உரிமை பறிபோனதாக சொன்னது ஒரு "குற்றச்சாட்டு"!

உங்களுக்கு மட்டும் உரிமை இல்லை. தமிழ் மணத்திற்கும் உரிமை இருக்கிறது, அவர்கள் தளத்தை காக்க, முன்னேற்ற. அதை புரிந்ட்துகொள்ளுங்க!

வருண் said...

***தாமிரா said...
கருத்துகள் ஒப்பானவையே.

24 December, 2008 4:37 AM **

நன்றி!

வருண் said...

***King... said...
செந்தழல் ரவி said...
\\
நல்ல பதிவு !!!
\\

நிறைய உள்குத்து இருக்கும் போல...

23 December, 2008 10:51 AM ***

அப்படித்தான் போலும்! :-).

வருண் said...

***காரூரன் said...
தமிழ் மணம் ஒரு திரட்டி, மூத்தவர், புதிய பதிவர் என்று வித்தியாசம் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. கருத்துக்களை விவாதிக்கும் தளமாகத்தான் இருக்க வேண்டும். மாறாக ஒருவரின் பேரை சொல்லி கருத்துக்கள் விமர்சிக்கப் படக் கூடாது. சில மூத்த பதிவர், "பொத்திட்டு உன் வேலையை பார்" என்று பின்னூட்டம் விடுவது அ நாகரீகமான நடைமுறைகள் அதை நான் பார்த்திருக்கின்றேன்.

கருத்துக்களின் ஆழத்தை தான் நான் நோக்குவேனே தவிர அவர் எவ்வளவு காலம் எழுதுகின்றார் என்பது அல்ல. ஆதங்கம் புரிகின்றது. புரியவேண்டியவர்கள் புரியாவிட்டால் எங்கள் கருத்துக்கள் தட்டப் படும் தூசு போன்றது.
நல்ல கருத்து!

23 December, 2008 8:47 PM***

உங்கள் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி திரு காரூரன் :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

பி.கு: இதுபோல் பின்னூட்டம் வந்தால் இனிமேல் டெலீட் செய்யப்படும் :-)

ஏங் கண்ணு இந்த கொலைவெறி....

வருண் said...

anony aka திருநாவுக்கரசு:

கோவியை பற்றி தனிநபர் தாக்குதல் செய்ய இது இடமல்ல. அவரிடம் போய் பேசி முடிவு செய்யவும். உங்கள் பின்னூட்டத்தை வருத்தத்துடன் டெலீட் செய்கிறேன் :-(

வருண் said...

***Anonymous said...
பி.கு: இதுபோல் பின்னூட்டம் வந்தால் இனிமேல் டெலீட் செய்யப்படும் :-)

ஏங் கண்ணு இந்த கொலைவெறி....

24 December, 2008 8:16 AM ***

திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நாகரீகமாக பின்னூட்டம் இடத் தெரியவில்லை. :-(.

முதலில் நல்ல பதிவென்பது பிறகு வந்து தேவையில்லாத தனிநபர் தாக்குதல் செய்வது, இதையெல்லாம் இங்கே அனுமதிக்க முடியாது!

ரவி said...

வருண்...

என்ன தனிமனித தாக்குதல் என்று பின்னூட்டத்தை விட்டு வெச்சாத்தானே தெரியும் ??

அதே சமயம் அனானியாக பின்னூட்டம் எதையும் போடவில்லை !!!

என்னுடைய பின்னூட்டத்தையும் டெலீட் செஞ்சிருக்கீங்க, அனானிகளின் பின்னூட்டத்தையும் டெலீட் செஞ்சிருக்கீங்க...

யார் என்ன போட்டாங்கன்னு தெரியாம வாசகர்கள் குழம்பும் வாய்ப்பு உண்டு...

அதுவும் இல்லாம பின்னூட்டத்தை என்னோட பேர்லயே போடும் அளவுக்கு எனக்கு கொஞ்சம் தில் உண்டு என்று எல்லாருக்கும் தெரியும்...

ரவி said...

///திரு ரவி: அப்படிகேட்கும் உங்கள் அநாகரீகம் இப்போ ஊருக்கே தெரிகிறது.

தனிமடலில் சொன்னால், நீங்க "மூத்த பதிவர்" அவர் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என்று ஊர் செல்லும்!///

அமெரிக்காவுல இருக்கீங்க, கற்பை பத்தி எல்லாம் புட்டு புட்டு வெக்குறீங்க...

எது நாகரீகம் எது அநாகரீகம் என்று பிரிச்சுகூட பார்க்க தெரியலியே ??

வருண் said...

திரு ரவி:

கயல்விழி ஐ டி யில் வருவதாக நீங்கள் எழுதிய பதிவு எந்த வகையச்சாரும்?

இதெல்லாம் என்ன பின்னூட்டம்? :-(

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
***அது சரி said...
எதை அநாகரீகம் என்று சொல்கிறீர்கள்?? மூத்த பதிவரோ புதிய பதிவரோ தாங்கள் நினைப்பதை சொல்லத் தான் பதிவு எழுதுகிறார்கள்...அதில் தணிக்கை செய்ய தமிழ்மணம் யார்?***

தமிழ்மணம் யாரு என்றெல்லாம் கேட்கமுடியதுங்க.

நம்மதான் தமிழ்மணத்தை அக்ரெகேட் பண்ன சொல்லி கேட்கிறோம். அவர்கள் உங்களை இன்வைட் பண்ணி பதிவிட சொல்லலை.

அவர்கள் உங்க ப்ளாக்கு நிறைய விசிட்டர் வர உதவுகிறார்கள். உங்க ப்லாக்கை தமிழ்மணத்தில் இணைக்காமல் பாருங்க. உங்களுக்கு கிடைக்கும் விசிட்டரில் பல மடன்ந்கு குறையும்.

எந்த தளமும் அவர்கள் வசதிக்கேற்ப சட்ட திட்டங்கள் வைத்துக்கொள்ளலாம். அதை அவர்கள் தேவைக்கேற்ப மாற்றலாம்.

இ-மெயிலில் கேட்கவேண்டிய விசயத்தை ஒரு திரி ஆரம்பித்து ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது.

இதெல்லாம் என்னை பொறுத்தவரையில் சரியல்ல!

இதில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் தோல்விதான்!

யாரை வென்றீர்கள்?

//

வருண்,

//
தமிழ்மணம் யாரு என்றெல்லாம் கேட்கமுடியதுங்க.

நம்மதான் தமிழ்மணத்தை அக்ரெகேட் பண்ன சொல்லி கேட்கிறோம். அவர்கள் உங்களை இன்வைட் பண்ணி பதிவிட சொல்லலை.
//

இது மிகச்சிறந்த வாதம்...எனக்கு இங்கே ஒரு பேங்கில் அக்கவுண்ட் இருக்கிறது..அவர்கள் என்னை ஆரம்பிக்கவே சொல்லவில்லை....நானாகத் தான் ஆரம்பித்தேன்....என்னை டெபாசிட் செய்யும்படி அவர்கள் சொல்லவில்லை..நானாகத் தான் டெபாசிட் செய்கிறேன்...

உங்கள் வாதத்தின் படி......

//
இ-மெயிலில் கேட்கவேண்டிய விசயத்தை ஒரு திரி ஆரம்பித்து ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது.
//

நீங்க‌ள் கேட்கும் ஆதார‌த்தை இப்பொழுது த‌மிழ்ம‌ண‌மே த‌ந்திருக்கிற‌து...

//
இதில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் தோல்விதான்!
//

இது வெற்றி தோல்வி அல்ல‌ வ‌ருண்...யாரும் யாரையும் வெல்ல‌ முய‌ற்சிக்க‌வில்லை...யாருக்கும் யாரையும் மிர‌ட்டும் எண்ண‌மும் இல்லை...என்ன‌ங்க‌ இப்ப‌டி ப‌ண்றாங்க‌ன்னு கேட்டால் அது யாருட‌னும் போர் செய்யும் அறிவிப்பு அல்ல‌...

வருண் said...

அது சரி,

தமிழ்மண நிர்வாகம் தெளிவாக, சில மாற்றங்கள் செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர். அது பல கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது :)

தயவு செய்து இந்த லின்க் பார்க்கவும் :-)

http://blog.thamizmanam.com/archives/158

வருண் said...

திரு. அரை டிக்கட்!

மேலே சொல்லப்பட்டிருக்கும் தமிழ்மண இடுகையில் போய் உங்கள் கதையை சொல்லுங்க.

என்கிட்ட அதையெல்லாம் சொல்லி ஒண்ணும் ஆகப்போவதில்லை பாருங்க!

வருண் said...

****//
இ-மெயிலில் கேட்கவேண்டிய விசயத்தை ஒரு திரி ஆரம்பித்து ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது.
//

நீங்க‌ள் கேட்கும் ஆதார‌த்தை இப்பொழுது த‌மிழ்ம‌ண‌மே த‌ந்திருக்கிற‌து...***

அது சரி!

உங்கள் புதிருக்கு விடை கிடைத்து விட்டது அல்லவா?

சந்தோசம்தானே?! :-)

SurveySan said...

ஒரு பத்திரிகைக்கு எப்படி, நடு பக்கமும், காஸிப் காலமும் அவசியமோ, அப்படியே, தமிழ்மணத்துக்கு, சூடான இடுகை கண்டிப்பா அவசியம் தான்.

என்னை பொறுத்தவரை, சுவாரஸ்யமான பகுதி அது. சாயங்காலம் முகப்பை எட்டிப் பாத்தா, அன்னிக்கு எது பலரை 'ஈர்த்திருக்குன்னு' தெரிஞ்சுக்கரது நல்ல டைம்-பாஸ்.

வெறும் க்ளிக்கை மட்டுமே நம்பி கட்டம் கட்டப்படும் பகுதி அது. தொழில்நுட்ப ரீதீயா, ஒண்ணும் பெரிய அளவில் அதை சீர் செய்ய முடியாது.

கொஞ்சம் டச் அப் பண்ணலாம். மக்களே, சூட்டை குறைக்க ஒரு பொத்தான் வழங்கலாம், etc..

வருண் said...

சர்வேசன்:

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் தலைப்பு மட்டும் "கவர்ச்சியாக" தந்து உள்ளே ஒண்ணுமில்லாத இடுகைகள் சூடான இடுகையாவதை தடுக்கனும் :)

வருண் said...

****தாமிரா said...
எழுத்துப்பிழைக‌ளை த‌விர்த்த‌ல் ந‌ல‌ம்.***

இப்போ ஓரளவிற்கு எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.

உங்கள் "க்ரிடிஸிஷத்திற்கு" நன்றி :-)

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
****//
இ-மெயிலில் கேட்கவேண்டிய விசயத்தை ஒரு திரி ஆரம்பித்து ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது.
//

நீங்க‌ள் கேட்கும் ஆதார‌த்தை இப்பொழுது த‌மிழ்ம‌ண‌மே த‌ந்திருக்கிற‌து...***

அது சரி!

உங்கள் புதிருக்கு விடை கிடைத்து விட்டது அல்லவா?

சந்தோசம்தானே?! :-)

//

புதிர் போட்டது நான் அல்ல...நீங்கள் தான்...மூத்த பதிவர்கள் அநாகரீகமாக, ஆதாரமில்லாமல் திரி கொழுத்தியதாக சொன்னது நீங்கள் தான்...நான் சொல்லவில்லை.

இப்பொழுது பதிவர்கள் சொன்னது உண்மையே என்று, கால தாமதமாக தமிழ்மணம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது...

வெளிப்படையாக அவர்கள் ஒப்புக் கொண்டதில் எனக்கு உண்மையில் சந்தோஷமே....ஆனால், மூத்த பதிவர்கள் ஆதாரம் இன்றி திரி கொழுத்தியதாக சொன்ன நீங்கள் இப்பொழுது என்ன சொல்வீர்கள்?
மூத்த‌ ப‌திவ‌ர்க‌ள் செய்த‌து நாக‌ரீக‌ம் என்று சொல்வீர்க‌ளா இல்லை இன்ன‌மும் அநாக‌ரீக‌ம் என்று தான் சொல்வீர்க‌ளா??


======

வருண் said...

****ஆனால், மூத்த பதிவர்கள் ஆதாரம் இன்றி திரி கொழுத்தியதாக சொன்ன நீங்கள் இப்பொழுது என்ன சொல்வீர்கள்?
மூத்த‌ ப‌திவ‌ர்க‌ள் செய்த‌து நாக‌ரீக‌ம் என்று சொல்வீர்க‌ளா இல்லை இன்ன‌மும் அநாக‌ரீக‌ம் என்று தான் சொல்வீர்க‌ளா??****

அவரவர் செய்த தவறு அவர் அவர்களுக்கு தான் தெரியும்.

தமிழ்மணம் கூறி இருப்பதுபோல் அவர்கள் ("மூத்த பதிவர்கள்")சிறு தவறுகள் செய்து இருக்கிறார்கள் போலும். அது என்னைவிட அவர்களுக்கு மற்றும் தமிழ்மணத்திற்குத்தான் தெரியும்.

மூத்த பதிவர்கள் என்பதால், தமிழ்மணம் அவர்கள் தவறுக்காக அவர்களை "எம்பாரஸ்" பண்ணாமல் நாகரீகமான முறையில் "ஆக்ஷன்" எடுத்து உள்ளார்கள்.

இது தவறு செய்தவர்களுக்கும், ஆக்சன் அடுத்தவர்களுக்கும்தான் என்னைவிட தெரிய வாய்ப்பு உள்ளது.

இதை புரிந்துகொண்டு தனிமடலில் பேசிமுடிக்காமல், இதற்காக பல திரிகள் ஆரம்பித்து ஏதோ சும்மா இவர்கள் எந்தத்தப்பும் பண்ணாமல் இருக்கும்போது தமிழ்மணம் ஏதோ ஆக்ஷன் எடுத்து தமிழ்மணம் தவறு செய்ததுபோல பிரமையை உண்டாக்க முயற்சிகள் நடந்தது.

அது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது?

அர டிக்கெட்டு ! said...

//என்கிட்ட அதையெல்லாம் சொல்லி ஒண்ணும் ஆகப்போவதில்லை பாருங்க//

அப்ப நீங்க தமிழ்மணம் வக்கீல் இல்லையா?

வருண் said...

***அர டிக்கெட்டு ! said...
//என்கிட்ட அதையெல்லாம் சொல்லி ஒண்ணும் ஆகப்போவதில்லை பாருங்க//

அப்ப நீங்க தமிழ்மணம் வக்கீல் இல்லையா?

24 December, 2008 8**

நீங்க வேற! :) :) :)

இரண்டு பக்கம் உள்ள நியாத்தையும் பார்க்கனும்ங்க :) யாராவது எடுத்துச் சொல்லனும் இல்லையா?

எல்லோருமே "மூத்த பதிவர்கள்" "கெட்ட புத்தகத்தில்" போக பயந்து நடுங்கினால்???

Anonymous said...

ப‌யந்து ந‌டுங்க‌ கூடாதுன்றீங்க‌ ! மூத்த பதிவர்களை கேள்வி கேட்கிற பதிவை எழுதுறீர் ஆனா அவங்க ரசனையுடன் எழுதலை , க‌ருத்து மோச‌மா இருக்குன்னா அதைப் போய் த‌னிம‌னித தாக்குத‌ல் அவ‌ரு ப‌திவுல‌ போய் அதை எழுதுன்றீர். அப்புற‌ம் நீங்க‌ ம‌ட்டும் இன்னாத்துக்கு இங்க‌ எழுத‌னும், நீங்க‌ளும் அவுங்க‌ ப‌திவுக்குப் போக‌லாம் தானே ! ப‌ய‌ந்து ந‌டுங்கினா ப‌ந்திக்கு வ‌ர‌க்கூடாது, ரொம்ப‌ ந‌டுங்கினா பாயாச‌ம் சாப்பிட‌ முய‌ற்சி செய்யாம‌லாவுது இருக்க‌னும்.எது எது‌ த‌னிம‌னித‌ தாக்குத‌ல்ல‌ வ‌ரும்ன்னு த‌னிப் ப‌திவு இட்டீங்க‌ன்னா ந‌ல்லா இருக்கும். மூத்த‌ ப‌திவ‌ரெல்லாம் பீத்தலா எழுத‌றாங்க‌ன்கிற‌து எப்ப‌டி த‌னிம‌னித‌ தாக்குத‌லாகும் எல்லாம் அந்த‌ ம‌க‌ரநெடுங்குழைக்காத‌னுக்கே வெளிச்ச‌ம். (நான் ர‌வி அல்ல‌)

வருண் said...

***Anonymous said...
ப‌யந்து ந‌டுங்க‌ கூடாதுன்றீங்க‌ ! மூத்த பதிவர்களை கேள்வி கேட்கிற பதிவை எழுதுறீர்***

ஆமாங்க ஒரு பதிவு போட்டேன். என் பதிவில் நான் யார் பேரையும் சொல்லவில்லை.

***ஆனா அவங்க ரசனையுடன் எழுதலை , க‌ருத்து மோச‌மா இருக்குன்னா அதைப் போய் த‌னிம‌னித தாக்குத‌ல் அவ‌ரு ப‌திவுல‌ போய் அதை எழுதுன்றீர்.****

ஆமாங்க, எனக்கு தோன்றியதை சொன்னேங்க :)

***அப்புற‌ம் நீங்க‌ ம‌ட்டும் இன்னாத்துக்கு இங்க‌ எழுத‌னும், நீங்க‌ளும் அவுங்க‌ ப‌திவுக்குப் போக‌லாம் தானே !***

நான் தைரியமாக அவர்கள் குறையை பின்னூட்டங்களில் எடுத்துச்சொன்னேன். அவர்களும் அதை கேட்டுக்கொண்டு அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என விளக்கம் தந்தார்கள்>

என்பதிவின் இந்த குறிப்பை பாருங்க!

///குறிப்பு: என்னுயை கருத்துக்களை ஓரளவுக்குத்தான் பின்னூட்டத்தில் சொல்ல முடிகிறது. அதனால்தான் இந்தப்பதிவு.///

**ப‌ய‌ந்து ந‌டுங்கினா ப‌ந்திக்கு வ‌ர‌க்கூடாது, ரொம்ப‌ ந‌டுங்கினா பாயாச‌ம் சாப்பிட‌ முய‌ற்சி செய்யாம‌லாவுது இருக்க‌னும்.***

அதான் நீங்க தைரியமா அனானியா வர்றீங்களா?!!!

சும்மா ஜோக்கு!

கோவிச்சுக்காதீங்க!

***எது எது‌ த‌னிம‌னித‌ தாக்குத‌ல்ல‌ வ‌ரும்ன்னு த‌னிப் ப‌திவு இட்டீங்க‌ன்னா ந‌ல்லா இருக்கும். மூத்த‌ ப‌திவ‌ரெல்லாம் பீத்தலா எழுத‌றாங்க‌ன்கிற‌து எப்ப‌டி த‌னிம‌னித‌ தாக்குத‌லாகும் எல்லாம் அந்த‌ ம‌க‌ரநெடுங்குழைக்காத‌னுக்கே வெளிச்ச‌ம். (நான் ர‌வி அல்ல‌)

26 December, 2008 12:56 AM****

இதெல்லாம் தேவையில்லாத வம்புங்க. நீங்க ஒரு அனானி அவ்வளவுதான்.

இந்த முறை உங்க பதிவை டெலீட் பண்ணல.முடிந்தவரை பதில்சொல்லி இருக்கேன் :)

Anonymous said...

தாங்ஸ் வருண், எனக்கு பிளாக் ஏதும் கிடையாது அதனால தான் அனானி. விரைவில் பதிவு வெளிவரும். பெயர் களம் கண்ட வேங்கை. அதில் பீத்தல் என்கிற வெகுஜனக் குறீயிட்டில் வருபவர்களை( பதிவர்களை) க்ட் மூத்தவர் இளையவர் என்று எல்லாம் பாகுபடுத்தாமல், , நக்கல் , நைய்யான்டி , கின்டல் கேலி, பகடி, செய்ய உத்தேசம். வாசகர்களால் வாசகர்களுக்கு அமைக்கப்படும் பதிவு.கெட்ட வார்த்ட்தைகளுக்கு அனுமதி இல்லை.

வருண் said...

அனானி!

நீங்களும் "பிரபலமாக" வாழ்த்துக்கள்! :-)

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
அவரவர் செய்த தவறு அவர் அவர்களுக்கு தான் தெரியும்.

தமிழ்மணம் கூறி இருப்பதுபோல் அவர்கள் ("மூத்த பதிவர்கள்")சிறு தவறுகள் செய்து இருக்கிறார்கள் போலும். அது என்னைவிட அவர்களுக்கு மற்றும் தமிழ்மணத்திற்குத்தான் தெரியும்.
//

போலும்??? அப்ப உங்களுக்கு தெரியாதா?

//
மூத்த பதிவர்கள் என்பதால், தமிழ்மணம் அவர்கள் தவறுக்காக அவர்களை "எம்பாரஸ்" பண்ணாமல் நாகரீகமான முறையில் "ஆக்ஷன்" எடுத்து உள்ளார்கள்.
//

ஒரு பழைய பாட்டு ஞாபகம் வருகிறது... கருணை உள்ளமே...கடவுள் இல்லமே.... என்ன ஒரு கருணை!

//
இது தவறு செய்தவர்களுக்கும், ஆக்சன் அடுத்தவர்களுக்கும்தான் என்னைவிட தெரிய வாய்ப்பு உள்ளது.
//

அப்ப உங்களுக்கு நிச்சயமா தெரியாது?

//
இதை புரிந்துகொண்டு தனிமடலில் பேசிமுடிக்காமல், இதற்காக பல திரிகள் ஆரம்பித்து ஏதோ சும்மா இவர்கள் எந்தத்தப்பும் பண்ணாமல் இருக்கும்போது தமிழ்மணம் ஏதோ ஆக்ஷன் எடுத்து தமிழ்மணம் தவறு செய்ததுபோல பிரமையை உண்டாக்க முயற்சிகள் நடந்தது.
//
இப்ப நீங்க தான திரி கொளுத்தறீங்க?? அவங்க தப்பு பண்ணாங்களான்னு உங்களுக்கு முழுசா தெரியாது...ஆனா, அநாகரீகம்னு பதிவு போடுறீங்க...அப்புறம் தமிழ்மணமே வந்து நாங்க இப்படி பண்ணிருக்கோம்னு பதிவர்கள் சொன்னது உண்மைன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க...நீங்க அதை கருணைன்னு சொல்றீங்க...

ஐயா, அவர்கள் செய்தது சரியே என்றாலும், அதைக் கொஞ்சம் சொல்லிவிட்டு செய்தால் என்ன? இப்படி சொல்லாமல் செய்ததால் தான் பதிவர்கள் இதைக் குறித்து சந்தேகக் கேள்விகள் எழுப்ப வேண்டியதாயிற்று....எனக்கு புரிந்தது இது தான்!

//
அது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது?
//

என்னங்க பண்றது...ஆண்டவன் நமக்கு கொடுத்த மூளை அவ்வளவு தான்...ஏதோ உங்கள மாதிரி பெரியவங்களுக்கு வெளங்கிருக்கே...அது போதும்!

வருண் said...

வாங்க அது சரி!

எல்லோருக்கும் ஒரே அளவுதான் மூளைங்க! ஒரு சில பிரபலங்கள் தான் அவர்களுக்கு அதிகம்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எனக்கும் ஒரே அளவு மூளைதான். உங்க மூளையை நீங்க "பிரபலங்கள்" க்கு வக்காலத்து வாங்க பயன்படுத்துவதால், தமிழ்மணத்தின் பார்வை/கண்ணோட்டம் உங்களுக்கு விளங்க மாட்டேங்கிறது.

நான் தமிழ்மணத்தை சிரத்தையுடன் கவனிப்பதால் "தவறே செய்யாத" "பிரபலங்கள்" பெருமைகளையும் கவனிக்க முடியவில்லை.

எனக்கு தெரிந்த கருணை பாட்டு!

கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகிறார்!

எனக்கு மூளை கடவுள் கொடுக்கவில்லை. எங்க அப்பா-அம்மா கொடுத்தார்கள்.

மனிதர்கள் கொடுத்த மூளை என்பதால் உங்க மூளை அளவுக்கு மகத்துவம் கிடையாது! :)

வருண் said...

****OSAI Chella said...
Dear Varun, I am not a mootha pathivar, but a moothu sethuppona oru pathivar! Your arguements are childlike in many ways. Let me give a sample.

1. I know the founder of Tamilmanam very well and he can say how much publicity we blogger generated in the mass media viz Hindu, Dhinamalar, makkal TV, Indian Express, Kumutham Reporter etc by the way of blogger meets and Workshops! You must know who is BalabHarathy, Lucky look, Ma Sivakumar, Vinaiyooki, Senthazhal Ravi etc before giving your half baked kiddish Prescription. So we have done more to the Great MNC called Tamilmanam Inc than what it has given to us.

2. It is easy to replicate this popular aggregation by another techie coder. But creativity is not. You can not be a Sujatha in two months or two years! So an aggregator is a soul less skeleton or a robo which is a mechanical automated entity where as writers are like poets, painters etc. So you must have the respect for the creative freedom. IF you dont know what I am saying then period. I have my works!

3. I was more popular in my English Blogs when I came here. Still hundreds follow my RSS through my Orkut networking. There also I was having a nice following. So we know how to survive in the ocean called World Wide Web! with or without this authoritative crazy Tamil Manam inc... one idiotic selvaraj, an admin.. came and told me how I was out in a simple manner! So this type of Master Slave relationship wont work for a long in a loose medium called World Wide Web.

4. The last but not the least a few words to you.. Ofcourse after reading the comments above me ... your own arguement skills are very childish and many got you in your throats! So learn to put up your case i a strong manner next time.

Cheers and all the best my fellow blogger!

With love and regards
Osai Chella

29 December, 2008 8:22 AM ****
Osai Chella!

It is all individual's perspective, I think. While I try to respect your views of defining what my views are from your half-baked knowledge about me, you seem to "label" people "just like that".

How do you know that I dont know these soc-called self-proclaimed popular bloggers fairly well???

I would be careful when I call someone is childish esp when I hardly know that person.

Sure you can certify me whatever you like. Thanks for your comments thoguh I disagree with your views COMPLETELY and I think your comments are worthless in my childish view. I dont want to go on defend every claim you make bcos It is worthless as you decided that I am childish!

Take care of yourself! Thnkas for stopping by anyway!

வருண் said...

Osai chella!

Unintentionally I deleted your post :)

I will reproduce it here, sorry :(

****OSAI Chella said...
Dear Varun, I am not a mootha pathivar, but a moothu sethuppona oru pathivar! Your arguements are childlike in many ways. Let me give a sample.

1. I know the founder of Tamilmanam very well and he can say how much publicity we blogger generated in the mass media viz Hindu, Dhinamalar, makkal TV, Indian Express, Kumutham Reporter etc by the way of blogger meets and Workshops! You must know who is BalabHarathy, Lucky look, Ma Sivakumar, Vinaiyooki, Senthazhal Ravi etc before giving your half baked kiddish Prescription. So we have done more to the Great MNC called Tamilmanam Inc than what it has given to us.

2. It is easy to replicate this popular aggregation by another techie coder. But creativity is not. You can not be a Sujatha in two months or two years! So an aggregator is a soul less skeleton or a robo which is a mechanical automated entity where as writers are like poets, painters etc. So you must have the respect for the creative freedom. IF you dont know what I am saying then period. I have my works!

3. I was more popular in my English Blogs when I came here. Still hundreds follow my RSS through my Orkut networking. There also I was having a nice following. So we know how to survive in the ocean called World Wide Web! with or without this authoritative crazy Tamil Manam inc... one idiotic selvaraj, an admin.. came and told me how I was out in a simple manner! So this type of Master Slave relationship wont work for a long in a loose medium called World Wide Web.

4. The last but not the least a few words to you.. Ofcourse after reading the comments above me ... your own arguement skills are very childish and many got you in your throats! So learn to put up your case i a strong manner next time.

Cheers and all the best my fellow blogger!

With love and regards
Osai Chella

Anonymous said...

அப்போ ரெண்டு பேரும் ஒரே ஆள் இல்லையா?

Kasi Arumugam said...

If you consider me the founder of thamizmanam, and if the words you displayed are really purported to have been written by my friend and brother Chella, I can only pity for him, as I never shared any of the opinions he claims to have attributed to me.

Sorry Chella, I still remember all the time we spent together on kodaikkanal road at Palani, but never a lie like this, please.

Anonymous said...

டேமில்ல எழுதுங்கப்பு. ஒண்ணும் பிரீல

வருண் said...

**Kasilingam said...
If you consider me the founder of thamizmanam, and if the words you displayed are really purported to have been written by my friend and brother Chella, I can only pity for him, as I never shared any of the opinions he claims to have attributed to me.

Sorry Chella, I still remember all the time we spent together on kodaikkanal road at Palani, but never a lie like this, please.***

LOL!

yeah it was posted by the same "old" osai chella! :)

வருண் said...

***Anonymous said...
அப்போ ரெண்டு பேரும் ஒரே ஆள் இல்லையா?

29 December, 2008 9:40 AM ***

ரெண்டு பேரும் ???

யார் ரெண்டு பேரும்?

வருண் said...

***Anonymous said...
டேமில்ல எழுதுங்கப்பு. ஒண்ணும் பிரீல

29 December, 2008 9:45 AM***

e-kalappai illai! :(

கயல்விழி said...

//ரெண்டு பேரும் ???

யார் ரெண்டு பேரும்?//

இனிமேலாவது இந்த ப்ளாக் எழுதுவது 'ஓசை செல்லா' என்று அவருடைய நண்பர்கள் சந்தேகப்படாமல் இருக்கட்டும்.

திரு. செல்லா, முடிந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லவும்.

வருண் said...

***கயல்விழி said...
//ரெண்டு பேரும் ???

யார் ரெண்டு பேரும்?//

இனிமேலாவது இந்த ப்ளாக் எழுதுவது 'ஓசை செல்லா' என்று அவருடைய நண்பர்கள் சந்தேகப்படாமல் இருக்கட்டும்.

திரு. செல்லா, முடிந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லவும்.***

kayal: Seems like 'osai chella" is like "God". He gets all the credit for others' work! LOL

கயல்விழி said...

//kayal: Seems like 'osai chella" is like "God". He gets all the credit for others' work! LOL
//

:) :)

I couldn't agree more.

கயல்விழி said...

இதற்கு தான் இந்த பாலிடிக்ஸில் நான் இன்வால்வ் ஆவது இல்லை, இதற்கு ஒரு முடிவே கிடையாது என்று நினைக்கிறேன்.

வருண் said...

I have some time to look at your half-baked crap now!


*** osai chella wrote!

1. I know the founder of Tamilmanam very well and he can say how much publicity we blogger generated in the mass media viz Hindu, Dhinamalar, makkal TV, Indian Express, Kumutham Reporter etc by the way of blogger meets and Workshops! You must know who is BalabHarathy, Lucky look, Ma Sivakumar, Vinaiyooki, Senthazhal Ravi etc before giving your half baked kiddish Prescription. So we have done more to the Great MNC called Tamilmanam Inc than what it has given to us. ***


So, you all have done a favor to TM and so, they should violate the democracy and FAVOR YOU or what?

That is not how things work. You helped them they appreciated it and they appreciate it even now.

That does not mean they have to KISS YOUR BOTTOM all their or your life!

They need to run business and they cant have special rules for friends. Better you understand!

வருண் said...

***3. I was more popular in my English Blogs when I came here. Still hundreds follow my RSS through my Orkut networking. ***

Really?!

You are bragging and so it si BORING to me. Sorry :(


***There also I was having a nice following. So we know how to survive in the ocean called World Wide Web! with or without this authoritative crazy Tamil Manam inc... ***

We all know that just like you are. That does not mean an organization can have some rules of their own! You are living in your own dream world or what!



***one idiotic selvaraj, an admin.. came and told me how I was out in a simple manner! ***

You are an idiot to come and CRY about your personal problems here!

Osai Chella said...

அன்புள்ள காசி அண்ணனுக்கு, நான் அவற்றையெல்லாம் நீங்கள் சொன்னதாக சொல்லவில்லை.அக்கால கோவை மற்றும் சென்னை நிகழ்வுகள் பட்டறைகள் பற்றி தெரிந்தவர் கலந்துகொண்டவர் (இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் அயலக உறைவினர்கள்) என்பதால் தங்களிடம் கேட்டால் அவர் சொல்வார் என்ற வகையில்தான் "ஹி கேன் சே" என்று எழுதினேன். மற்றபடி நீங்கள் சொன்னதாக எதையும் பொதுவில் வைப்பவன் நான் அல்ல என்பதை தாங்கள் அறியாதவரா? ஏதேனும் வார்த்தை குளறுபடி இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

வருண் மிக்க நன்று. இனிமேல் தங்களுடன் பேசமாட்டேன். நன்றி! I will do it in my blog hereafter. Thanks.

Osai Chella said...

காசி அண்ணன் அவர்களுக்கு,
உண்மையைச் சொன்னால் அன்றைய பதிவர்கள் பலரும் ஊடகப்பேட்டிகளில் தமிழ்மணத்தின் பெயரை இருட்டடிப்பு செய்தே வந்திருந்தனர் என்பது எனக்கும் அங்கலாய்ப்பான ஒரு விசயம். ஆனால் பாலபாரதி மற்றும் நண்பர்கள் தான் முதன்முதலாக திரட்டிகளை பற்றி ஊடகங்களில் பெரிய அளவிற்கு வருவதற்கு உதவினார்கள் என்பதை நீங்கள் மறுக்கவோ மறக்கவோ மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதாவது கோவை பட்டறைக்குப்பின் இந்து பத்திரிகையில் தான் விரிவாக முதன்முதலில் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்றவைகளின் யூ.ஆர். எல் வெளிவந்து பலரையும் சென்றடைந்தது. சென்னை நிகழ்வும் பாண்டி நிகழ்வும் எத்தனை பத்திரிகைகளில் வந்தது என்று தெரியவில்லை. அனேகமாக அனைத்து பத்திரிகைகளுமே அமோகமாக எழுதின என்றால் ஊடகத்துறையுடன் நட்புடன் இருந்த பாலபாரதி, எழுத்தாளர் பாமரன் மற்றும் சுகுமாறன் ஆகியோரையே சாரும். எனவே தமிழ்மணம்தான் பதிவர்களை பாப்புலர் ஆக்கியது என்பது ஒரு பக்க வாதம். பதிவர்களால் பலருக்கும் பாப்புலர் ஆக்கப்பட்டது தமிழ்மணம் என்பது ஏன் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது என்பது எனக்கும் புரியவில்லை. மற்றபடி பொய் பேசுதல் என் வழக்கமோ பழக்கமோ அல்ல என்பதை என்னோடு பழகிய நூற்றுக்கணக்கான பதிவர்கள் அறிவார்கள்.

Kasi Arumugam said...

//என்பதை நீங்கள் மறுக்கவோ மறக்கவோ மாட்டீர்கள் //

மறுக்கிறேன். வன்மையாக.

பாலபாரதி என் வீட்டுக்குப் படியளந்தார் என்றுகூட நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு என் பெயரை சாட்சிக்கு இழுக்காதீர்கள்.

வருண் said...

****பதிவர்களால் பலருக்கும் பாப்புலர் ஆக்கப்பட்டது தமிழ்மணம் என்பது ஏன் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது என்பது எனக்கும் புரியவில்லை.****

நான் சொல்லும் கருத்துக்கள் தமிழ்மணத்தின் கருத்துக்கள் அல்ல!

தமிழ்மணம் நிர்வாகம் இதுவரை பொறுப்புடன் தான் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

அவர்கள் நன்றி மறந்ததாகவோ, பதிவர்களாலும் தமிழ்மணம் வளர்ந்து உள்ளது என்பதை மறுத்ததாக என் பதிவை வைத்து முடிவுக்கு வர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)

Kasi Arumugam said...

My dear brother Chella,

See how things fall in place so nicely:

Your thala Bala Sir's words. see full article here

// தமிழ்மண நிவாகத்திடம் ஸ்பான்சர் கேட்டோம். டீ-சர்ட் வாங்கச்சொல்லி பணம் அனுப்பி வைத்தார்கள். அதை திருப்பூரில் இருக்கும் ஒரு தோழரிடம் விபரமும், லோகோ மாதிரியையும் கொடுத்து பணத்தை அவருக்கு அனுப்பினோம். வெள்ளைக்கலர் டீ-சர்ட்ல் வெள்ளைக் கலரியே தமிழ்மண லோகோவை பிரிண்ட் செய்து, கொடுத்து அனுப்பி விட்டார்கள். அதனால் அதை விநியோகிக்க முடியாமல் போனது. அதனை மாற்றவும் முடியாது என்று சொல்லிவிட்டதால்.. பிரிண்ட் செய்தவரிடமே திருப்பக் கொடுத்துவிடும் படி சொல்லி விட்டேன்.
(அடுத்த பட்டறைக்கு கை காசு போட்டு இதனை சரி பண்ணனும்.)//


The two articles by THE HINDU which you claimed as அதாவது கோவை பட்டறைக்குப்பின் இந்து பத்திரிகையில் தான் விரிவாக முதன்முதலில் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்றவைகளின் யூ.ஆர். எல் வெளிவந்து பலரையும் சென்றடைந்தது.

here are the links:
Meeting offline
Blogging in Tamizh Log on to

One can read these posts and see how 'திரட்டிகளை பற்றி ஊடகங்களில் பெரிய அளவிற்கு வருவதற்கு உதவினார்கள் '

BULLSHIT!

Kasi Arumugam said...

You and your friends wanted to promote tamilveli against thamizmanam and you used this meeting. An aggregator that was not known outside a few, was listed second to thamizmaNam, sidelining thenkoodu, an otherwise respectable work and Tamilblogs, an open-source effort.

By my citing this now, don't try to drive a wedge between Kuzhali and me, you cannot succeed.

You cannot bluff all the people all the time, someone said wisely:-)

Kasi Arumugam said...

//விரிவாகமுதன்முதலில் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்றவைகளின் யூ.ஆர். எல் வெளிவந்து //

I wonder how can one write a URL 'virivaaka'? :P

Osai Chella said...

அண்ணா, எருதுச்சாணிக்காகத்தான் இந்த பதிவர்கள் இரவுபகலாக உழைத்தார்கள். நீங்கள் அலட்சியப்படுத்துவது பற்றி கவலையில்லை. இனியாவது பதிவர்களுக்கும், படிப்பவர்களுக்கு புரிந்தால் சரி! இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை. பிரயோசனமுமில்லை.

// அவர்கள் நன்றி மறந்ததாகவோ, பதிவர்களாலும் தமிழ்மணம் வளர்ந்து உள்ளது என்பதை மறுத்ததாக என் பதிவை வைத்து முடிவுக்கு வர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)//

வருண் தங்கள் கருத்திற்கும் புரிதலுக்கும் நன்றி! ;-)

Osai Chella said...

//I wonder how can one write a URL 'virivaaka'? :P //
One must have a layout sense to understand that. I can not teach here! try to have a look at the Hardcopy of Hindu and how these URL is written there in a prominent way. In a seperate box!

Osai Chella said...

காசி அண்ணா, நாங்கள் தமிழ்மணத் துதி மட்டும் பாடமுடியாது இது போன்ற நிகழ்வுகளில்! அன்று உங்களையும் அழைத்திருந்தேன். நீங்கள் வியாபர நிமித்தமாக வரமுடியவில்லை என்று சொன்னீர்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்! வந்திருந்தால் உங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லியிருப்போம்! ;-)!

Osai Chella said...

// You and your friends wanted to promote tamilveli against thamizmanam and you used this meeting. An aggregator that was not known outside a few, was listed second to thamizmaNam, sidelining thenkoodu, an otherwise respectable work and Tamilblogs, an open-source effort.//

அதாவது நாங்கள் நினைத்திருந்தால் தேன்கூடை மட்டுமல்ல தமிழ்மணத்தையும் இருட்டடிப்பு செய்திருக்கமுடியும் என்று யாரவது நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் எங்கள் வல்லமையை பார்த்து!

மற்றபடி மற்ற திரட்டிகளை நாங்கள் சொன்னால் அது ஏதோ தெய்வகுத்தம் போல உங்களுக்கு படுவதுதான் ஏன் என்று புரியவில்லை! அவ்வளவு மோனோபாலிஸ்டிக் மனபான்மையோடு நீங்கள் மட்டுமல்ல யாரும் இருக்ககூடாது! அதுவும் இணையம் போன்ற ஒரு ஊடகத்தில்!

Kasi Arumugam said...

தம்பீ,

//நீங்கள் அலட்சியப்படுத்துவது பற்றி கவலையில்லை.// யாரை யார் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். சும்மா போட்டுப் பாக்க இது இடமில்லை:-)

//One must have a layout sense to understand that.//
I laughed out loud, thanks.

//காசி அண்ணா, நாங்கள் தமிழ்மணத் துதி மட்டும் பாடமுடியாது //

அட இப்பத்தான் துதிபாடி 'வளர்த்த கடா'ன்னு சொன்னீங்க, அதுக்குள்ள அப்வுட் டர்னா?

//அன்று உங்களையும் அழைத்திருந்தேன். நீங்கள் வியாபர நிமித்தமாக வரமுடியவில்லை என்று சொன்னீர்கள்..//
அந்தக் கதையெல்லாம் பேசினா இன்னும் நாத்தமடிக்குமே தம்பீ. பரவாயில்லைன்னா பேசுவோம்.


//வந்திருந்தால் உங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லியிருப்போம்!//

அடாடா... உங்கிட்ட எல்லாம் சான்ஸ் வாங்கிக்கற நிலைமை எனக்கு இன்னும் வரலை. தகுதியுள்ள நாலுபேருக்கு சான்ஸ் தர்ற நிலைமையிலதான் அப்பன் முருகன் அல்லது மகர நெடுங்குழைக்காதன் வெச்சிருக்கறான்.

Osai Chella said...

//காசி அண்ணா, நாங்கள் தமிழ்மணத் துதி மட்டும் பாடமுடியாது //

அட இப்பத்தான் துதிபாடி 'வளர்த்த கடா'ன்னு சொன்னீங்க, அதுக்குள்ள அப்வுட் டர்னா?//

அட நீங்க வேற! எனக்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லிக்கிட்டு! அப்புறம் என்னையும் பெரிய மனுசனா நாளுபேர் நெனச்சிறப்போறாங்க! மற்றபடி நான் தமிழ்மணத்தை பற்றி எழுதும்பொழுது உங்கள் கருத்துக்களை/ பெயரைக்கூட தவிர்த்துவிட முயற்சிக்கிறேன்! தற்போதைய (டி)எம்.என்.சி டைரக்டர்களோ அல்லது ஸ்க்ரிப்ட் ரைட்டர்களோ பதில் சொல்லட்டும்! நமக்குள் வாதமோ விவாதமோ வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடந்த ஒரு வருடமாக சூப்பராகவே நக்கலடித்து எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்பது மட்டும் நல்லாவே தெரிகிறது! வாழ்த்துக்கள்!

Osai Chella said...

.. காரணம் இன்றுள்ள தமிழ்மணத்திற்கும் எனக்கும் தான் பிரச்சினை. உங்களுக்கும் எனக்கும் அல்ல! நமது நட்பு நீங்கள் சொன்னதுபோல் கொடைக்கானல் ரோட்டில் அமர்ந்து சாவகாசமாகப் பேசியது போலத்தான் இன்றும் உள்ளது. தம்பியாக நான் கொஞ்சம் அப்படி இப்படி உங்க வாயைக்கிளறியிருந்தால் மன்னிச்சு விட்டுடுங்க! அப்புறம் அந்த கொடை ரோடு வீடியோவை எங்கோ தொலைத்துவிட்டேன்! ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!

அன்புத்தம்பி
ஓசை செல்லா

Kasi Arumugam said...

//காரணம் இன்றுள்ள தமிழ்மணத்திற்கும் எனக்கும் தான் பிரச்சினை.//

See, you yourself have spilt the beans:-)

Don't try to confuse bloggers in your attempt to settle scores with someone. That is my simple request.

Osai Chella said...

மேலும் சொல்ல ஒன்றும் இல்லை! புத்தாண்டு வாழ்த்தை தவிர! மகிழ்வான 2009 அனைவருக்கும்.

நன்றி வருண்! ரிலாக்ஸ் ப்ளீஸ்! !

வருண் said...

osai chella!

I am not coming in between, aNNA and thambi! :-) :-)

Anonymous said...

முடிஞ்சு போச்சா?

சுந்தரவடிவேல் said...

வலைப்பதிவுகளை ஒவ்வொரு இணைப்பாகத் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காசி வடிவமைத்த தமிழ்மணம் என்ற ஒரு புதுமையான வஸ்து, தொடங்கப்பட்ட நாளிலிருந்தே பலவிதமான இருட்டடிப்புக்களையும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. பெரும் ஊடகங்கள், அவற்றின் ஜால்ராக்கள், பெரியசாதிக் கணவான்கள், பண்டிட்டுகள், திடீர்ப் புரட்சிக்காரர்கள், தேசபக்திப் போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் மனசாட்சியற்றவர்கள் எல்லோருமே ஓரணியில் திரண்டுதான் இரவு பகலாக இருட்டடிப்பைச் செய்தார்கள். அவற்றையெல்லாம் தாண்டி வளர்வதற்கு அதனிடம் இருப்பதெல்லாம் உண்மையும், தெளிந்த நோக்கும், பதிவர்களின் அன்பும் மட்டுமே. தமிழ்மணம் என்ற ஆற்றில் வந்து கலந்த வாய்க்கால்களும் (அல்லது ஆறுகளும்), பிரிந்தோடிய வாய்க்கால்களும் (அல்லது ஆறுகளும்) தத்தம் கொடுக்கல் வாங்கல்களைத் தமிழ்மணத்தோடு வைத்திருந்தன. இருவரும் பெற்றனர், இருவரும் கொடுத்தனர். அப்போது அவர்கள் மகிழ்வாயிருந்தார்கள். ஆனால் உரசல்கள் நேரும்போது தமிழ்மணமே உதைவாங்கியாக இருந்து வருகிறது.

ஒடுக்கப்பட்டிருந்த குரல்கள் வெளியில் ஓங்கி ஒலிக்கும் ஒரு கருவியாக வலைப்பதிவுகளும், அவற்றை ஒருங்கிணைக்க தமிழ்மணமும் விளங்குவதைப் பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது தொடர்ந்தும் கண்கூடு.

தமிழ்மணம் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம், முதலாளித்துவக் கம்பெனி என்ற மாயத்தில் உழல்பவர்களையும், விடக் கருத்தைப் பரப்புபவர்களையும் நினைத்துச் சிரிக்க மட்டுமே தற்போது முடியும். (எல்லாம் தெரிந்த செல்லாவிடமிருந்து எம்.என்.சி என்றால் என்னவென்றும் தமிழ்மணம் எம்.என்.சி என்ற வரையறையில் எப்படி வருகிறது என்றும் தெரிந்துகொள்ள மிகுந்த ஆவல்).

வருண் said...

***Anonymous said...
முடிஞ்சு போச்சா?

30 December, 2008 9:46 AM ***

விவாதம் ரொம்ப நல்லவிதமாகத்தானே இப்போ போகுது?

ஏன் முடிஞ்சா உங்களுக்கு பொழுது போகாதா? LOL

Anonymous said...

//ஏன் முடிஞ்சா உங்களுக்கு பொழுது போகாதா? LOL//

வேறென்ன? இத்த வெச்சு சோறா துன்ன முடியும்?

வருண் said...

வேறென்ன? இத்த வெச்சு சோறா துன்ன முடியும்?

30 December, 2008 11:37 AM***

தெரியலையே. பிரியாணி கூட சாப்பிடலாம்- எல்லாம் நம்ம மனசப்பொறுத்துத்தான்.

நீங்க இப்போ அனானியா வந்தே இவ்வளவு "அர்த்தமா" "விபரமா" பேசலியா?

-------------

ஒரு வகையில் நேற்று மற்றும் இன்று விவாதத்தில் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்- தமிழ்மணம் அதன் நலம் விரும்பிகள் மற்றும் பலர் பற்றி.

Anonymous said...

MNC = Multi-Head Notorious Company ?:-) endra arthaththil Chella sonnathaaka thakaval. Avre pothum endru poivittar.Pin en sundaravadivel avarai ilukkirar. Let us say Cheers to the new year. This thread is to simply explore that "Burried Otherside" , the movement/momentum called Tamil Bloggers and their innumerable efforts to popularise the Blogging Cult among Tamils and Mass Media. No more personal squables here. As varun rightly said ... after reading this thread readers may have got a chance to know the "Both Side Story" and they can judge their future course of action as a defenders of Tamil Creative Expressionism.

Cheers to all of you!

Anonymous said...

(a SMALL CHANGE .. TO ENSURE ANOTHER MIS-CONCEPTION DONT TAKE PLACE HERE)
As varun rightly said
//
ஒரு வகையில் நேற்று மற்றும் இன்று விவாதத்தில் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்- தமிழ்மணம் அதன் நலம் விரும்பிகள் மற்றும் பலர் பற்றி.//
... MANY MAY KNOW MORE ON THIS ISSUE.

After reading this thread readers may have got a chance to know the "Both Side Story" and they can judge their OWN future course of action as a defenders of Tamil Creative Expressionism. HAPPY 2008!

Kasi Arumugam said...

D(G)host,

//MNC = Multi-Head Notorious Company ?:-) //

I understand your frustration that it was easy to target and strike when it was single-headed. What to do, life throws such challenges, you got to take it!

Enjoyed your style :P.

Happy 2008.

வருண் said...

Mr.Ghost!

Sundaravadivel's post is NOT for YOU! It is for folks like me. Despite the sarcastic remark on "mnc" it is very educational and informative!

I dont beleive in ghosts! Bext time visit as a human being! Thanks!

Happy 2009 thambi OC,OC's ghost and aNNA Mrkasilingam! :)

வருண் said...

You both meant Happy 2009 I suppose!:)

VIKNESHWARAN ADAKKALAM said...

100 :))

வருண் said...

Yes!

Happy New Year vicky!

-/சுடலை மாடன்/- said...

//with or without this authoritative crazy Tamil Manam inc... //

//தற்போதைய (டி)எம்.என்.சி டைரக்டர்களோ அல்லது ஸ்க்ரிப்ட் ரைட்டர்களோ பதில் சொல்லட்டும்!//

//.. காரணம் இன்றுள்ள தமிழ்மணத்திற்கும் எனக்கும் தான் பிரச்சினை. உங்களுக்கும் எனக்கும் அல்ல! //

மேலே தரப்பட்டவை திரு. ஓசை செல்லா இங்கு சொல்லிய கருத்துத் துளிகள். நான் இன்றையத் தமிழ்மணத்தில் இருக்கிறேன். தமிழ்மணத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சிலர் வதந்திகளைச் சொல்லித் திரியட்டும். பதிவு-பதிவர்களின் ஆரோக்கிய வளர்ச்சியை நோக்கிய தமிழ்மணத்தின் நேர்மையான செயல்பாடுகள்தான் அவற்றிற்கான பதிலாக இருக்க முடியும். இருப்பினும் இங்கு பின்னூட்டங்களில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்காக இரண்டு குறிப்புகள் மட்டும் தருகிறேன்.

1. திரு. ஓசை செல்லா மற்றும் நண்பர்கள் சிலரின் ஜனநாயகப் பாதுகாப்புக் குரல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. என்றாலும், திரு. டோண்டு அவர்களின் பதிவைத் தமிழ் மணத்திலிருந்து விலக்கக் கோரி 2007 செப்டம்பர் 3 ஆம் நாள் திரு. ஓசை செல்லா ஏன் தமிழ்மணத்திடம் வேண்டுகோள் வைத்தார் என்று புரியவில்லை. ஒருவேளை அவருக்கு அன்று ஜனநாயகம் மறந்து விட்டதோ எனத்தெரியவில்லை.

அதற்குத் தமிழ்மணம் அளித்த பதில் - "தமிழ் மணத்திலிருந்து ஒரு பதிவை விலக்கி வைப்பதற்கென்று நாங்கள் ஏற்கனவே வகுத்துள்ள சில அடிப்படை வரைமுறைகளின் படி உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் புரிந்து கொண்டு தமிழ் மணத்துடன் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் ஒத்துழைப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றி"

2. தமிழ்மணம் (TMI Inc) அமெரிக்கச் சட்டதிட்டங்களின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இங்கு சிலர் சித்தரிப்பது போல் இலாப நோக்குள்ள வணிக நிறுவனமல்ல. தமிழ்மணம் நடத்துவதற்கான அனைத்துச் செலவுகளும், தமிழ்மணத்தின் தொழில்நுட்பவியலாளர் மற்றும் நிர்வாகிகளின் உழைப்பும் முழுமையானத் தொண்டு நோக்கில் அளிக்கப் படுபவையே.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Anonymous said...

ஓ இன்னும் ஓடுதா?

Osai Chella said...

சொ.சங்கரபாண்டி அவர்களுக்கு வணக்கம்! அன்று நான் கேட்டதற்கான சூழலையும் அதன் தாக்கங்களையும் சொல்லி மீண்டும் ஒரு பிரச்சினையை கிளப்பவில்லை. அதே சமயம் அது தவறென்றே பிற்காலத்தில் உணர்ந்தேன் என்பதையும் மறுக்கவில்லை. வேண்டுமென்றால் இன்று பகிரங்கமாகவே டோண்டு சாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! என் சருக்கல்களை சப்பைக்கட்டுகளால் மறைக்கும் எண்ணமோ அவசியமோ இருந்ததேயில்லை! நான் எந்த புண்ணியவான் அவதாரமும் எடுத்ததில்லை! இந்த விவாதமே ஏதோ திரட்டி அதுவும் தி கிரேட் தமிழ்மணம் போட்ட பிச்சையால் பதிவர்கள் பிரபலம் அடைந்தார்கள் என்ற டுபாக்கூர் ஒன்சைட் வாதத்தை உடைத்து பதில்வாதம் வைக்கவே யாம் இங்கு எழுந்தருளினோம்!

அடுத்து கூகிள் சி.இ.ஓ வந்து " நாங்கள் பதிவுகளை குடுத்ததால் தான் பதிவர்களே தோன்றினார்கள் அதற்கப்புறம் தான் நியூக்ளியஸ் வந்தது {அந்த ஓபன் சோர்சை மாற்றி உருவாக்கி ஓபனாக வைக்காமல்.. விதிமீறி!?.. ன்னு ஒரு சிலர் என்னிடம் சொன்னதும் உண்டு - அதற்கு நான் அப்படியெல்லாம் தேவை இல்லை என்று மறுத்ததும் உண்டு .. ஆனாலும் பாருங்க இந்த நியூக்ளியஸ் சி.எம்.எஸ். உருவாக்கதிலேயே ஒரு ஆனந்த் என்ற தமிழன் இருந்திருக்கார்.. அவருடைய தளம் http://www.tamizhan.com/ என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. ) தமிழ்மணம் வந்தது" என்றெல்லாம் பேட்டிகுடுத்தாலும் குடுப்பார்கள்! என்ன செய்ய, கணினியை, இணையத்தை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி சொல்லி மாளாது! எண்ணற்றவர்களின் உழைப்பு!

பதிவர்களால் தமிழ்மணம் மட்டுமல்ல தமிழ்வெளி தேன்கூடு போன்ற திரட்டிகளும் பொதுமீடியா வெளிச்சத்துக்கு வந்தன என்பதை சொல்வதேயாகும்! மற்றபடி விவாதத்தை விவகாரமாக்க எனக்கு விருப்பமில்லாததாலும் எனது ஆவி மேற்கொண்டு பதிலளிக்க இருப்பதாலும் நன்றி கூறி விடை பெறுகிறேன்!

அன்புடன்
ஓசை செல்லா

வருண் said...

அனானியா வந்து உயிரை எடுக்காதீங்கப்பா!

இது கொஞ்சம் சீரியஸ் டாப்பிக், இதில் கண்ட அனானி பதிவையும் அனுமதிக்க முடியாத நிலையாகிவிட்டது.

VIKNESHWARAN ADAKKALAM said...

//Yes!

Happy New Year vicky!//

உங்களுக்கும் வாழ்த்துகள்...

வருண் said...

நன்றி, விக்னேஷ்வரன்! :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

மலேசியாவில் மணி 12 ஆச்சு, ஆகையால் 2009-ஆம் ஆண்டு உங்க பதிவில் முதல் பின்னூட்டம் எனது :)

வருண் said...

***VIKNESHWARAN said...
2009-ஆம் ஆண்டு உங்க பதிவில் முதல் பின்னூட்டம் எனது :)***


அப்படியா!


இந்த "வலைபூ" பெருமையடைகிறது விக்கி! :-) ரொம்ப நன்றி!

என்ன பார்ட்டி எதுவும் இல்லையா? இப்படி கணிணி முன்னால இருக்கீங்க?

எனக்கு இன்னும் ஒரு 14 மணி நேரம் போல இருக்கு 2009 ஆரம்பிக்க!

Anonymous said...

இப்பதான் பாலபாரதி, ஓசை செல்லா தமிழ்மணத்தோட growthக்கு என்ன செஞ்சாங்கனு தெரிஞ்சுட்டேன். ஒண்ணையும் காணமே!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வருண் said...

பின்னூட்டமிடும் அனானி தோழ தோழியருக்கு!

அநாகரீகமான வார்த்தைகளை அடைமொழிவைத்து தமிழ்மணத்தை யோ,பதிவர்களையோ இழிவுபடுத்தும் பின்னூட்டங்கள் இங்கிருந்து மறைந்துவிடும்!

You are welcome to debate with proper language and not getting personal on others!

நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

நன்றி வருண் அவ்ர்களே, நீங்கள் சொன்னபடியே சில வார்த்தைகளை நீக்கிவிட்டு போட்டிருக்கிறோம். இதையும் நீங்கள் நீக்கினால் நாங்கள் பின்னூட்ட முயற்சிக்கமாட்டோம். உங்களுக்கும் எங்கள் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//இப்பதான் பாலபாரதி, ஓசை செல்லா தமிழ்மணத்தோட growthக்கு என்ன செஞ்சாங்கனு தெரிஞ்சுட்டேன். ஒண்ணையும் காணமே!//

அவங்க தமிழ்பதிவுலகுக்கு செய்தது ஏராளம், தாராளம். மத்தவங்க மாதிரி ஏசி ரூமில் கோடிங் எழுதாம பொட்ட வெயிலில் அலைஞ்சு திரிஞ்சு இடம் புடிச்சு, போஸ்டர் ஒட்டி, கூட்டம் போட்டு பதிவர்களை திரட்டி, பதிவெழுத சொல்லிக்கொடுத்து, இணைய இணைப்பகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி என்று நிறைய நீழும். இந்த தமிழ்மண துதிபாடுபவர்களுக்கு ஒரு அளவும் புரியப்போறது இல்ல. இன்னுமா உலகம் இவனுகளை நம்புது?!

Anonymous said...

ஆவிகள் கொஞ்சம் பல்துலக்கிட்டு நாத்தத்தைக் கொறச்சிட்டு வந்துதுடுத்துபோல இருக்கே. பேஷ்!

கூகிளும், ஆர்குட்டும் இன்னும் பலதும் வளந்ததுக்கு அவாளோட டெக்னாலஜியும், புதுமையும் அரசியல் கலக்காத நேர்மையும்னா காரணம். இல்லே அங்கேயும் யாராச்சும் போஸ்டர் ஒட்டித்தான் வளத்தாளா?
இவாள் போஸ்டர் ஒட்டினதால தான் எல்லாம் நடந்துடுத்துன்னு சொன்னா சிரிக்க மாட்டாளோ? ரொம்ப சிம்பிளாவே பேசுவோம்னா. எத்தனை படம் போஸ்டர் ஒட்டினதால தமிழ்நாட்டில ஓடியிருக்கு? ஆவிகள்ள சிலதுகள் படக்கம்பெனியில வேற இருக்குல்ல, சொல்லட்டுமேன்னா?

Anonymous said...

//மத்தவங்க மாதிரி ஏசி ரூமில் கோடிங் எழுதாம பொட்ட வெயிலில் அலைஞ்சு திரிஞ்சு இடம் புடிச்சு,//

இதுதெரியாம கோடம்பாக்கத்துல பலபேரு ஸ்டூடியோவெல்லாம் கட்டிக் காமிராவெல்லாம் வெச்சுப் படமெடுக்குறாங்களேன்னா, இனிமே, மணிரத்தினத்துலேர்ந்து எல்லாரும் ஸ்டூடியோவை மூடிட்டு, போஸ்டரும் கையுமாப் பொறப்பட்டுரப்போறாங்க :)))

அம்பிகளா, வளருங்கோப்பா, வயசாச்சுல்லே..

Anonymous said...

கோடிங் எழுதுபவர்கள் கோடிங் எழுதவேண்டும். போஸ்டர் ஒட்டுபவர்கள் போஸ்டர் ஒட்டவேண்டும். நல்ல பொருளாக இல்லாமல் என்ன கத்தினாலும் தொடர்ந்து விற்கமுடியாது. என்னதான் நல்ல பொருளானாலும், மார்க்கெட்டிங் இல்லாமல் விற்பனையாகாது. எதற்கு இப்படி அடிப்படைகூடத் தெரியாமல் அடித்துக்கொள்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது.

Anonymous said...

அனானி அம்பி, தத்துவமெல்லாம் சரியாத்தான் பேசறேள். மார்க்கெட்டிங்ல சிலபேர் பொருள்விக்கப்போன இடத்துல தன் ரெசுமை கொடுக்கிற மாதிரி, போஸ்டர் மூலமா தங்களைத்தானே வித்தா? வி.ஆர்.எஸ்.லெ போனவாளுக்கு ஒண்ணாந்தேதி ஏ.டி.எம் வரிசையில என்ன வேலைங்கிறேன். என்ன நாஞ்சொல்றது?

Anonymous said...

எல்லாம் ஆவணம் ஆகுதுங்கோ! கோமணத்தை துவைக்க கூவம் வேண்டாங்கோண்ணேன். கூவம் மேலும் நாறிடப்போகுதுண்ணேன்

Anonymous said...

//கூகிளும், ஆர்குட்டும் இன்னும் பலதும் வளந்ததுக்கு அவாளோட டெக்னாலஜியும், புதுமையும் அரசியல் கலக்காத நேர்மையும்னா காரணம். //

தமிழ்மணத்தோட அவாளை ஏன் இழுக்கிறேள். அவா ரேஞ்சே வேற. ஆர்குட்லயே ஆர்குட் ஒழிகன்னு கோஷம் போட அவா எடம் தறா இல்லையா? அந்த பெரியவாளோட போய் கட்டம் கட்டுற இவாளைப் போய் ஒப்பிடலாமோ ஓய்!

Anonymous said...

//கூகிளும், ஆர்குட்டும் இன்னும் பலதும் வளந்ததுக்கு அவாளோட டெக்னாலஜியும், புதுமையும் அரசியல் கலக்காத நேர்மையும்னா காரணம். //

தமிழ்மணத்தோட அவாளை ஏன் இழுக்கிறேள். அவா ரேஞ்சே வேற. ஆர்குட்லயே ஆர்குட் ஒழிகன்னு கோஷம் போட அவா எடம் தறா இல்லையா? அந்த பெரியவாளோட போய் கட்டம் கட்டுற இவாளைப் போய் ஒப்பிடலாமோ ஓய்!//

இது நெசமாலுமே 'நச்' ங்கோய்! தமிழ்மணம் நடத்துற அந்த பத்து தலைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிச்சா கூட தூக்கிடுவா இவா ங்கிற வரலாறு தெரிங்சவா நெறையா இருக்கா! அப்புறம் கூகிளும் ஆர்குத்தும் "பெயரிலிக்கு ஒரு விதி தமிழச்சி செல்லா" வுக்கு ஒரு விதின்னு எல்லாம் ஓரவஞ்சனை செய்ய மாட்டா' ங்கறது பல அம்பிகளௌக்கு தெரிஞ்ச விசயம் தானே!

Anonymous said...

அண்ணாச்சி, கூகூள் அளவுகு இவெங்களுகு வ்யாபாரம் இல்லையேங்கேன்.
(வ்யாஅபரம் ஆகுற தொழிலா இர்ந்தா கெழக்கும் மேற்கும் இநேரம் போட்டி போட்ருக்காதாங்கேன்) அதுவுஞ் சர்த்தேன். பைசா பெறாத சங்கதிக்கெல்லாம் இப்டி ஏன் கடுப்ப்படிக்கிறாய்ங்க. போக்கத்த பயலுவ. தமிழாம் மணமாம். ஒரு சொதந்திரமுமில்லையே அண்ணாச்சி.
(எலே, வன்டியிலே இருக்கிற சரக்கெல்லாம் எறக்கி கடையைப்பாருலே, பந்தியில மோள்ற பயலுவளுக்கெல்லாம் வக்காலத்தாலே)
இந்தா ஆச்சு அண்ணாச்சி.

Anonymous said...

போஸ்டர், சினிமா சமாசாரம் சூபரோ இல்லையோ!
தாமஸ் ஆல்வா எடிசன் சினிமா வைக்கண்டுபிடிச்சார். அதுக்காக ஒவ்வொரு படத்துலயும் அவா பேரைபோட்டு சாமிகும்பிடறாளா? இல்லையே? ஆனா இவா எனக்கு தனி மரியாதை தறனும் னு ஒவ்வொரு நிகழ்வு நடத்துறங்க கிட்டயும் அழுது பொழம்பினாலா இல்லையா. மரியாதையெல்லாம் கேட்டு வாங்கறது பப்பிசேம் அப்படீன்னு ராசி ஏழுமலைக்கு யாராச்சும் சொல்லுங்கோண்ணா"

Anonymous said...

//தமிழச்சி செல்லா//

இதென்னது சசிகலா நடராஜன் மாதிரி, கமா, புல்ஸ்டாப் இல்லாம.... என்னமோ சரியாப்படலடா அம்பி. சொல்லிப்புட்டேன்.

Anonymous said...

காசி செல்லா பிரச்சினைன்னு நீங்க எப்படி எடுத்துக்கிவீங்களோ அப்படியே ஓரினமா கூட எடுத்துக்கலாம் பூஜை.

Anonymous said...

மணிஆட்டுனமா இல்லை பொழப்பை ஓட்டுனமான்னு இல்லாம இப்படி வந்து அடிபடறது தேவையா ஓய். அவா அடிச்சா மலேசியாவுக்கு கூட வலிக்கும்னு ஊரே தெரியும் ஓய். சும்மா கிச்சு கிச்சு மூட்டாமா கயிலே இருக்கறை ஆட்டும் ஓய். பூசை நேரம் முடியபோகுது.

Anonymous said...

விளம்பரம் தெரிஞ்சவனே, வாப்பா.
அதானே. எங்களவான்னா நம்ஸ்காரம் பண்ணிக் கும்ப்பிட்டுக்குவீங்க. நாங்களும் பதிலுக்கு கைச்செலவுக்கு அஞ்சோ பத்தோ அன்பாக் குடுத்துட்டு இருக்கோம். இந்தாளு யாரு ராசி எட்டுமலை, அப்படியெல்லாம் நீங்க மரியாதை கொடுக்கர்றதுக்கு? சரியாச் சொன்னேடா அம்பி. ஆத்துக்குபோகும்பொது கொஞ்சம் வந்துட்டுபோ என்ன, மாமி மீஞ்சதெல்லாம் எடுத்துவெச்சிருக்கா.

Anonymous said...

//அண்ணாச்சி, கூகூள் அளவுகு இவெங்களுகு வ்யாபாரம் இல்லையேங்கேன்.
(வ்யாஅபரம் ஆகுற தொழிலா இர்ந்தா கெழக்கும் மேற்கும் இநேரம் போட்டி போட்ருக்காதாங்கேன்) அதுவுஞ் சர்த்தேன். பைசா பெறாத சங்கதிக்கெல்லாம் இப்டி ஏன் கடுப்ப்படிக்கிறாய்ங்க. போக்கத்த பயலுவ. தமிழாம் மணமாம். ஒரு சொதந்திரமுமில்லையே அண்ணாச்சி.
(எலே, வன்டியிலே இருக்கிற சரக்கெல்லாம் எறக்கி கடையைப்பாருலே, பந்தியில மோள்ற பயலுவளுக்கெல்லாம் வக்காலத்தாலே)
இந்தா ஆச்சு அண்ணாச்சி.//

வயிறு வலிக்குதுண்ணே இந்த பின்னூட்டத்தை பார்த்து சிரிச்சு சிரிச்சு.

Anonymous said...

// மாமி மீஞ்சதெல்லாம் எடுத்துவெச்சிருக்கா.//
ஆஹா, பேஷ் பேஷ், வர்ரேன். மாமியைப் பாக்கவாவது வருவான் இந்த அம்பின்னேன்.

Anonymous said...

அய்யோ அய்யோ,

வந்து வந்து அடிவாங்குறாங்களே இந்த பய புள்ளைக! மணமோ, கோமணமோ நடத்துனமா நடையக்கட்டுனமான்னு இல்லாம. "பாடையிலே போற நேறம் பாவக்கா கொழம்பு கேட்டாளாம்" கற மாதிரியில்ல இருக்கு இவங்க கதை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

//அய்யோ அய்யோ,வந்து வந்து அடிவாங்குறாங்களே இந்த பய புள்ளைக! மணமோ, கோமணமோ நடத்துனமா நடையக்கட்டுனமான்னு இல்லாம. "பாடையிலே போற நேறம் பாவக்கா கொழம்பு கேட்டாளாம்" கற மாதிரியில்ல இருக்கு இவங்க கதை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வைகைப்புயலோன்//

அடிவாங்கிட்டே அடிகொடுத்தமாரி பாவ்லா காட்டுறவன்னு தான் உன்னியப்பத்தி ஊருக்கே தெரியுமே. பிறகென்ன வைகைப்புயலோன்னு சொல்லிக்காட்டினாத்தான் தெரியுமா? என்னமோ போ

Anonymous said...

//அடிவாங்கிட்டே அடிகொடுத்தமாரி பாவ்லா காட்டுறவன்னு தான் உன்னியப்பத்தி ஊருக்கே தெரியுமே. பிறகென்ன வைகைப்புயலோன்னு சொல்லிக்காட்டினாத்தான் தெரியுமா? என்னமோ போ//

சிரி ப் பே வ ல் லி யே.. அவ்வ்வ்வ்

Anonymous said...

பால் அமுலுக்கும் விளம்பரம் தேவை, சாராய ராயல் சேலஞ்சுக்கும் விளம்பரம் தேவை ஓய். நல்ல சரக்கு தொங்குதுவோய் அப்பப்ப விண்டோஸ் மாதிரி. அதைவிட நல்ல சரக்கெல்லாம் லினக்ஸ் மாதிரி சுதந்திர வேட்கையோட ஆரம்பிச்சாங்களா இல்லையா ஓய். போய் நல்லா தூங்கும் ஓய். நான் மாமியை பாத்துக்கறேன் ஓய்.

Anonymous said...

இந்த மானம்கெட்ட, நன்றி கெட்ட தமிழ் பதிவனுகளுக்கெல்லாம் நல்லது செய்யறதுக்கு பதில் நாண்டுக்கிட்டு சாகலாம் ஓய்

Anonymous said...

//இந்த மானம்கெட்ட, நன்றி கெட்ட தமிழ் பதிவனுகளுக்கெல்லாம் நல்லது செய்யறதுக்கு பதில்//
ங்கொய்யலே டவிசர அவித்தாத்தான் அடங்குவீங்களா?

Anonymous said...

//ங்கொய்யலே டவிசர அவித்தாத்தான் அடங்குவீங்களா?//

விரைந்து செயல்படுங்கப்பா.

வருண் said...

ஒரு அனானிக்கு இன்னொரு அனானி பேசுவது புரியும்னு நம்புறேன்.

எதையாவது (பின்னூட்டங்களை) "க்ளீன் பண்ணனும் னா" ஒரு பின்னூட்டத்தில் சொல்லுங்க.

இல்லைனா எனக்கு ஒன்னும் இல்லை. ஒன்னும் புரியவும் இல்லை :)

ஹாப்பி நியு இயர், மக்களே!

Anonymous said...

வருண் நைனா இன்னாத்துக்கு க்ளீனு பண்ணனும். சோக்கா பொழுது போவுது பாரு. இவங்க அட்சுக்கரது பாக்க குஜாலா கீதுல்ல?

Anonymous said...

// ஒரு அனானிக்கு இன்னொரு அனானி பேசுவது புரியும்னு நம்புறேன்.//

:-)

க்ளீனெல்லாம் பண்ணவேண்டாமேவருண். எங்களட பதிவுகளைவிட இந்த அனானி ஆட்டம் அர்த்தமுள்ளதாகவே இருக்கு ;-)

Anonymous said...

அண்ணனின் ஓசை:
//2. It is easy to replicate this popular aggregation
by another techie coder.//

கொக்கோ-கோலா (கோக்)ஃபார்முலாவை எந்த கெமிஸ்ட்டும் replicate பண்ணலாம். ஆனால் அது கோக் ஆவாதே.

வருண் said...

****ராமஸ்வாமி, திருக்குடந்தை said...
அண்ணனின் ஓசை:
//2. It is easy to replicate this popular aggregation
by another techie coder.//

கொக்கோ-கோலா (கோக்)ஃபார்முலாவை எந்த கெமிஸ்ட்டும் replicate பண்ணலாம். ஆனால் அது கோக் ஆவாதே.

2 January, 2009 6:35 AM***


RTFL!

Happy New Year, Mr. Ramaswamy! :)

Anonymous said...

Varun this thread is dead it seems. Try your tricks somehow yaar. very boring.

வருண் said...

****Anonymous said...
Varun this thread is dead it seems. Try your tricks somehow yaar. very boring.

3 January, 2009 1:08 AM***

What trick?

I guess you are tricking me now! LOL!

You know, that fact is this thread will live longer than you and me!

Happy New Year, anony! :)

Anonymous said...

Ha Ha. Arun beware of the tricksters ;-)