Friday, April 30, 2010

சுறா விஜய்யும், அவருடைய அரசியல் கனவும்!


இளயதள விசய் இன்னொரு மசாலா கலந்த படத்தோட வ்ந்திருக்காராம்! அதான் சுறா. என்ன ஒரு பேரு செலெக்சன்!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய எல்லாருமே ஒண்ணுமட்டும் சொல்றாங்க. நம்ம விசய் அரசியல்ல இறங்குவதுபோல மெசேஜ் கொடுக்குதாம்! 35 வயசுலயே இவருக்கு அரசியல் ஆசை என்பது எரிச்சலைக்கிளப்புதுனு நெறைய தடவை சொல்லியாச்சு.

இவரோட அப்பா எஸ் ஏ சந்திரசேகரா மகனை முதல்வராக்கிப்புடனும்னு பைத்தியம் பிடிச்சித் திரியிற மாதிரி இருக்கு! படத்துக்குப் படம் ஒரே மசாலா, அரைச்சமாவையே அரைக்கிறார் வருங்கால முதல்வராக ந்நெனைக்கும் விசய். ரஜினி எல்லாம் முள்ளும் மலரும், புவனா ஒரு ? 16 வயதினிலே போன்ற ஒரு சில படங்கள் பண்ணி தனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டிவிட்டுத்தான் மசாலால இறங்கினார்.

ஆனா நம்ம விசய் அப்பாவை வச்சு சினிமால நொழஞ்சாரு. இப்போ நான் முதல்வராகியே ஆகனும்னு நிக்கிறார். இதெல்லாம் இப்போ தேவையா?


ஒருவேளை இந்த அரசியலில் இறங்கி கிழிக்கப்போவதுபோல பட்ம் காட்டுறதையே தன் ஃபார்முளாவா ஆக்கிக்கிட்டாரோ என்ன எழவோ!

Rediff: Give your brains a rest, and enjoy this mass masala entertainer. That much is guaranteed.

Rediff Rating: **

ரொம்ப சுமாரான விமர்சனம்தான்! மூளையில்லாதவனுக்குத்தான் இந்த சுறாங்கிறமாதிரி இருக்கு.

Indiaglitz: Strictly for Vijay fans. மத்தவங்க எல்லாம் ஒதுங்கிக்கனுமா? சுமாரான விமர்சனம்தான்!

Sify:
இது கொஞ்சம் பாஸிட்டிவ் விமர்சனம்! ஒரு கமர்ஷியல்லா வெற்றிப்படம் என்பது போல நல்லாவே எழுதி இருக்காங்க!


விஜய்படமெல்லாம் தீயேட்டரில் போய்ப் பார்க்கிறத சுத்தமா நிறுத்தியாச்சு! அதனால் விஜய்க்கு ரசிகர்/ரசிக்கைகள் கொறஞ்சிடுவாங்களா என்ன? நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கிட்டுத்தான் இருக்காங்க! விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் எனக்கு என்றுமே கொஞ்சம்கூட சந்தேகமில்லை!

விமர்சகர்களும், இவரோட அப்பாவும் அடிக்கடி இவரோட இந்த அரசியல் பிரவேஷம்பத்தி பேசாமல் இருந்தா விஜயை கொஞ்சமேனும் மதிக்கத் தோனும்.

4 comments:

Chitra said...

:-) Present, Sir!

வருண் said...

வாங்க, சித்ரா! :)

மதுரை சரவணன் said...

சுறா -அரசியல் ஓடம். உண்மை.

வருண் said...

****மதுரை சரவணன் said...
சுறா -அரசியல் ஓடம். உண்மை.

1 May 2010 10:05 PM***

அவசரமா அரசியலுக்கு வந்து இவரும் இவர் அப்பாவும், தங்கள் "வெள்ளித்திரை" திறமைய வச்சு டாண்ஸ் சண்டை எல்லாம் போட்டு தமிழ்நாட்டையும் இந்தியாவையும் முன்னேற்றப் போறாங்களாம்! :)))