Monday, April 5, 2010

என்ட்ட சொல்ல என்ன வெக்கம்? கடலை கார்னர் (47)

"பிருந்த்! அப்பா! கடைசில ஃபோனை பிக் அப் பண்ணிட்டயா!"

"ஹாய் கண்ணன்!

” என்ன பண்ணிட்டு இருந்த, பிருந்த்?"

"என்ன திடீர்னு இந்நேரம் ஈவெனிங் கூப்பிடுறீங்க?"

"சும்மாதான். என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல.."

"உங்களைபத்தித்தான் யோசிச்சிண்டுருந்தேன்"

"என்னை நெனச்சுட்டே எதுவும் கெட்டபழக்கம் செஞ்சிண்டு இருந்தியா?"

"அப்படியெல்லாம் இல்லையே!"

"அப்படியெல்லாம் இல்லையா? இல்லை இல்லையா?"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"ரொம்ப வித்தியாசம் இருக்கு. இல்லைனு சொன்னா இல்லைனு அர்த்தம். அப்படியெல்லாம் இல்லைனு இழுத்தா .. அதுக்கு வேற அர்த்தம்!"

"என்னவோ என்னை கையும் களவுமா பிடிச்ச மாதிரிதான் பேசுறீங்க?"

"இல்லையா? என்ட்ட சொல்ல என்ன வெக்கம், பிருந்த்?"

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் தெரியுமா, கண்ணன்?"

"இப்போ என்னடி மோசமாப் பண்ணீட்டேன்?"

"பதில் சொன்னால் அதை கேட்டுக்காமல், எனக்கே சந்தேகம் வர வைக்கிறீங்களே.. நீங்க மோசம் இல்லையா?"

"நீ பதில் ஒழுங்கா சொன்னால் நான் ஏன் இப்படி சொல்றேன்?"

"நான் ஒழுங்கா சொல்லலயா?"

"கொஞ்சம் இழுத்த!"

"நான் பாவம் கண்ணன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்?"

"ஒரு முத்தம் கொடு. விட்டுடுறேன்."

“ஃபோன்லயா?”

“ஆமா! கொடுடீ!”

"ச்சு ச்சு, ரெண்டு கொடுத்தாச்சு போதுமா?"

"தேங்க்ஸ்! ஏய் நேத்து நீ என் கனவிலே வந்து என்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுன பிருந்த்!"

"கெட்ட வார்த்தை சொல்லியா? நெஜம்மாவா?"

"ஆமா!"

"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?"

"கனவைக் கேளு! கனவுல நீ என்னுடைய அடிமையா இருக்க, பிருந்த்!"

"அடிமைனா?"

"அதான் ஸ்லேவா?'

"ஓ! அப்புறம்?"

"நான் டி வி பார்த்துக்கிட்டே எனக்கு “டீ போட்டு எடுத்து வா”னு சொன்னேன்"

"சரி.."

"நீ சரினு கிச்சனுக்கு போற! நீ நடந்துபோறபோது உன் செக்ஸியான பின்னழகைப் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஐடியா வருது. உன்னைத் தொடர்ந்து கிச்சனுக்கு வந்து டீ எடுத்து வரும்போது நேக்கடா வானு ஆர்டர் போடுறேன்"

"நேக்கடாவா? கேக்கவே நல்லாயிருக்கே! அதுக்கு நான் என்ன சொன்னேன்?"

"பயங்கரமா கோபம் வந்து கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டிட்டு ஓடியே போயி பெட்ரூம்ல படுத்துக்கிட்ட!"

"அப்புறம்?"

"நான் டீ போட்டு கொண்டு வந்து, உன்னை கொஞ்சி, கெஞ்சி, சரிப்படுத்தினேன்"

"நான் திட்டியெல்லாம் இருக்க மாட்டேன்."

"ஏய் இது என் கனவு இல்லையா? அதான் கெட்டவார்த்தை சொல்லி திட்டின.."

"என்ன கெட்டவார்த்தை சொன்னேன்?"

"You dirty bastard! What do you think of yourself son of a bitch? huh!" னு சொல்லி நல்லா கோபமா திட்டின.. உடனே நான் உன் கோபத்தைப் பார்த்து பயந்துட்டேன். திட்டிட்டு அழுதுக்கிட்டே பெட்ரூக்கு ஓடிப்போயிட்ட"

"கனவிலேதான் நான் அப்படி.."

"நெஜத்திலேனா எப்படி?"

”உங்களுக்கு கனவுல எதைக்கேக்கனும், உண்மையில் எது கேக்கனும்னு தெரியாது! சரியான மக்கு நீங்க, கண்ணன்"

"என்னடி சொல்ற?"

"நீங்க என் ஸ்வீட் ஹார்ட் இல்லையா?. எனக்கு கோபம் வர்ற அளவுக்கு அப்படி என்ன பெருசா தப்பா கேட்டுட்டீங்க?"

'அது சரி!"

"அப்புறம் எப்படி என்னை சமாதானம் பண்ணினீங்க?"

"பெட்ல குப்புறப்படுத்து இருந்த உன் பக்கத்தில் வந்து உக்காந்து “சாரி டா” னு சொன்னேன். அப்புறம் உனக்கு நானே டீ போட்டு வந்து “இந்தா டீ” னு கொடுத்தேன். உடனே தேங்க்ஸ்னு வாங்கி வச்சுட்டு அதைக்குடிக்காமல் மறுபடியும் குப்புறப் படுத்துக்கிட்ட. அப்புறம் “இன்னும் கோபமா இருக்கியா பிருந்த்?”னு உன் காதிலே கேட்டுட்டு கழுத்திலே லேசா கிஸ் பண்ணீனேன்."

"அதுக்கு திட்டலையா?"

"இல்லை. நீ ஒண்ணுமே சொல்லல. மறுபடியும் உன் காதுல கிஸ் பண்ணினேன். நீ திரும்பி மெதுவா திருப்பி மல்லாக்கப் படுத்த. அப்புறம் உன் கன்னத்தில் கிஸ் பண்ணீனேன்., அதுக்கும் ஒண்ணும் சொல்லல. மெல்ல சிரிச்ச.."

"அப்புறம்?"

“உன் உதட்டில் கிஸ் பண்ணினேன். ”

“உதட்டிலேயா..?'

“ஆமா அப்படியே என்னை கட்டி பிடிச்சுக்கிட்ட நீ. ஏய் நீ பொய்தானே சொன்ன?

“அப்போ இல்லை, ஆனா இப்போ அது பொய்யாயிடுச்சு, கண்ணன்”

“யூ ஆர் சோ ஹானஸ்ட் டார்லிங். தட் இஸ் வாட் ஐ லவ் எபவ்ட் யூ!”

“தேங்க்ஸ் ஃபார் ஷேரிங் த லவ்லி ட்ரீம்”

“நாளைக்கு பார்க்கலாமா?”

“குட் நைட்!”

-தொடரும்

No comments: