Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்னையர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! வாலியின் பாடல்வரிகள் இங்கே!

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் -பெற்ற
தாயன்றி வேறொன்று ஏது?
அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா.
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா,
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே.
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.
அதை நீயே தருவாயே
பசுந்தங்கம் ,புதுவெள்ளி, மாணிக்கம் மணிவைரம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலைவைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா,
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு -அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? உன்னாலே பிறந்தேனே.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே வீடியோ பாட்டு!


2 comments:

ADMIN said...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

வருண் said...

வாங்க தங்கம்பழனி!

தங்கள் வருகைக்கு நன்றிங்க! :)