Tuesday, July 19, 2011

ஜெயா ஆட்சியில் மதுரையில் ரெளடியிஸம் ஒழிக்கப்படுகிறதா?

அம்மா களை எடுக்க ஆரம்பிச்சுட்ட மாதிரி தெரியுது. மதுரையில் அழகிரி கூட்டாளிகள் சிலரும் மற்றும் நொட்டோரியஸ் ஃபைனான்ஸியர் அன்பு போன்றவர்களை போலிஸ் அரஸ்ட் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன! சும்மா பிடிச்சு உள்ள வச்சுட்டு அவிழ்த்து விடாமல், செஞ்ச அயோக்கியத்தனத்துக்கெல்லாம் மிகையான சரியான தண்டனை வாங்கி கொடுத்தால்தான் கொஞ்சமாவது அர்த்தமா இருக்கும்!
--------------------------

பொட்டு சுரேஷ் - தளபதி கைது

மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும், திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்களம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய்முகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று (19.7.2011) இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள், ஜே.எம் -1 நீதிபதி முத்துக்குமரன் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை எஸ். பி. அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில், தங்களது 5 ஏக்கர் நிலத்தை இந்த 4 பேரும்
மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.

<இந்தப்புகாரின் அடிப்படையில் நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பியிருந்தார் எஸ்.பி.

இன்று காலை நான்கு பேரும் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜார் ஆனார்கள். இவர்களிடம் தொடர்ந்து 10மணி நேரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

எஸ்.பி.ஐ பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை

நடைபெற்றுக்கொண்டிந்த நிலையில் இவர்கள் மீது மேலும் பல புகார்கள் குவிந்த வணணம் இருந்தது.

இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பதட்டம் நிலவுவதால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-----------------

மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர் அன்பு கைது

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான, விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.


‘’கோபுரம் பிலிம்ஸ்’’ சார்பில் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார். பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சை எழுந்தது. பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலை விவகாரத்திலும் இவர் மீது சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர் இன்று இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

திமுகவின் மதுரை முக்கிய பிரமுகர்கள் பொட்டு சுரேஷ், தளபதி இன்று இரவு கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து அன்பு கைது செய்யப்பட்டிருப்பதால் மதுரையில் மிகவும் பதட்டம் நிலவுகிறது.

------------------------

சமச்சீர் கல்வியை விட்டுத்தொலைச்சுட்டு இது மாதிரி பொறம்போக்குகளையும், மொள்ளமாரிகளையும் பிடிச்சு உள்ள போட்டு தண்டனை வாங்கி கொடு ஆத்தா! ஏன் ஆத்தா இப்படி "சமச்சீர்" கலவியப் புடிச்சுக்கிட்டு எழவைக்கூட்டுற?!

1 comment:

மதுரை சரவணன் said...

madurai paraparappaa thaan irukku.. vaalththukkal