Tuesday, February 21, 2012

சாரு நிவேதிதா என்னும் போதைப் பொருள்!

சாரு நிவேதிதா பற்றி பதிவுகள் எழுதுவது எப்படினா..என்ன சொல்றது? சாருவைப் பத்தி க்ரிடிசைஸ் பண்ணுறது இல்லைனாஅவர வச்சு "காமெடி" பண்ணுறதெல்லாம் யாரு வேணா ரொம்ப எளிதாச்செய்யலாம். சமீபத்துல அது ஒரு மாதிரியான "போரான" "சப்ஜெக்ட்டா" ஆயிப்போச்சுனுகூடச் சொல்லலாம்.

உண்மையைச் சொல்லப்போனா சாரு, ஒரு போதைப் பொருள் மாதிரி. இவரைப் பத்தி எழுத வேணாம்னு விட்டுத் தொலைச்சாலும் மறுபடியும் ஒரு நாள் எதையாவது எழுத வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுவார். பொதுவாக இவரைப் பத்தி திட்ட ஆரம்பிச்சா "இவரைப் பத்தி தெரியாதாக்கும்?" "புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா!" னு ஆளாளுக்கு அலுத்துக்கிறதைத்தான் பார்க்கலாம்

என்னதான் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும் சாருவைப் பாராட்ட வேண்டிய சில விசயங்கள் உண்டு. அதைப் பார்க்கலாம் இங்கே!

நான் பார்த்தவரைக்கும் ஒரு எழுத்தாளனா இருந்துக்கிட்டு சாரு என்னைக்குமே தன் அகந்தையை அநாகரிகமாக வெளியே காட்டுவதில்லை. மற்றவனை கடுமையாக விமர்சிப்பது வேற, தாந்தான் பெரிய இவன்னு எழுதுவது வேற. இது ரெண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்க ஒழுங்காப் புரிஞ்சுக்கனும்!

அப்புறம் தன்னைவிட வயதில் சின்னப் பசங்களோட கூடிக் கும்மாளம் போடுறது, தண்ணியடிக்கிறது, வெட்டிப் பேச்சு பேசுறது இதெல்லாம் நிச்சயம் இவருக்கு ப்ள்ஸ் பாயிண்ட்ஸா ஆகிறது இன்றைய சமுதாயத்தில்.

தன் வலைதளத்தில் "அடியேன்" என்று இவரு தன்னைப் பத்தி சொல்வது ரொம்ப "எளிமையாக" தன்னைப்பத்தி சொல்வதுபோல இருக்கு. வர வர "அடியேன்" என்கிற வார்த்தை "சாரு"க்கு மறுபெயர்னு சொல்ற அளவுக்கு ஆகிப்போயிடும் போலயிருக்கு. :-)

அப்புறம் எப்பப்பார்த்தாலும் எதையாவது தன் பிரச்சினையை எழுதி (எவனுக்குப் பிரச்சினை இல்லை?) இவன் என்னை இப்படி செஞ்சுபுட்டான், இவன் எனக்கு துரோகம் பண்ணிப்புட்டான், அப்படி இப்படினு எதையாவது புலம்புவது, தமிழன் எழுத்தாளனை மதிக்கிறதே இல்லைனு ஒரு ஒப்பாரி வைப்பது. இதுபோல் தன்னை வெளிவுலகுக்கு ஒரு "பரிதாபப்பட்ட ஜென்மம்" போல் இவரு காட்டிக்கொள்வதால் இவரை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு நியாயமாகத் திட்டும் போதுகூட இவர் மேலே ஒரு பரிதாபம் உருவாகுது னுகூட சொல்லலாம்.

போதாக்குறைக்கு இவர் மேலேதான் ஏகப்பட்ட ("பொய்")குற்றச்சாட்டுகள்..

* கதைத் திருட்டு குற்றச்சாட்டு.

* நித்தியானந்தா சம்மந்தப்பட்ட "கமர்சியல்" கட்டுரைகள் எழுதியது. அப்புறம் அதை வைரஸ் வந்து தின்னுட்டதால அதெல்லாம் காணாமல்ப் போனது.

* யாரோ ஒரு கொஞ்ச வயதுப் பொண்ணோட அநாகரிகமாக "சாட்" (அந்தப் பெண் விரும்பாத வகையில்) செய்ததாகக் குற்றச்சாட்டு.

இப்படி ஏகப்பட்டது..

ஆனால், சாரு இன்னும் கற்றுக்க வேண்டியதுனு சொன்னா, நிச்சயம் இதைச் சொல்லியே ஆகனும்! "இவருக்கு எப்படி நட்பு பாராட்டுறதுனு சுத்தமாத் தெரியலை"னு சொல்லலாம். கூடத் திரிய நாலு ஜால்ராப் பசங்க எப்போவுமே இருக்கத்தான் செய்வானுக, அதெல்லாம் உறுப்படியான நட்பாகுமா? நான் சொல்ல வர்றது "உண்மையான நண்பர்கள்"! பாராட்டும்போது பாராட்டி, தப்பு செய்யும்போது, "ஏன்யா உன் பேரைக் கெடுக்கிற, லூசு?" னு உரிமையுடன் கண்டித்து சொல்றவர்கள்.

நான் பார்த்தவரைக்கும் சாரு நல்ல நண்பர்களை இழந்துகொண்டே வருகிறதுபோல தோனுது. இப்படியே போச்சுனா.. நெனைக்கவே சங்கடமாயிருக்கு.

2 comments:

ராஜ நடராஜன் said...

வருண்!சாருவுக்கு நல்லது சொல்றேன் பேர்வழின்னு சொல்லி காலை வாரி விடுறீங்களே!அதுக்கு மத்தவங்க நெத்தியடியே பரவாயில்லை:)

வருண் said...

நடராஜன்!

நெசம்மா சொல்றேங்க, நான் இங்கே சாரு காலை வாரிவிடுறேனா இல்லைனா அவர் மேலே உள்ள நல்லெண்ணத்தில் இப்படி அவரை "கடிந்து" எழுதுறேனானு எனக்கே தெரியலை! :(