Friday, May 21, 2010

ஆமா, பச்சைத் தமிழ்! - கடலை கார்னர் (54)

"என்ன ஆண்ட்டி, வாங்கினதை எல்லாம் கொண்டுபோய் ட்ரன்க்ல வச்சிட்டு வருவோமா? அப்புறம் புடவை எடுக்க அந்த்க்கடைக்குப் போகனும்னு சொன்னீங்களே?!"

"பிருந்த்! நம்ம கைலயே வச்சிருப்போம். நம்ம கார்ல வைக்கிறத எவனாவது பார்த்தால் என் ட்ரங்க்க ஒடச்சு அள்ளிட்டுப் போயிடுவான்."

"ஆமா, ஆண்ட்டி, இவர் காரு ஒரு ஓட்டைக்காரு, ஈஸியா ஒடச்சிடலாம்! பேசாமல் கையிலேயே வச்சிருப்போம்!"

"என்னடி கொழுப்பா!"

"உங்க கார் பழைய கார்தானே?"

"இந்தப் பாருடி, பிருந்தி! என்னைப்பத்தி என்ன வேணா சொல்லு! என் காரைப்பத்தி பேசின ..!"

"என்ன மிரட்டுறீங்க? என்ன பண்ணுவீங்களாம்?"

"பப்ளிக்ல வச்சே உன் பட் ல வலிக்கிறாப்பிலே கிள்ளுவேன்!'

"எங்கே கிள்ளுங்க பார்க்கலாம்?"

"என்ன தைரியம் உனக்கு!"

"கிள்ளுங்க! எல்லாருக்கும் உங்களப் பத்தி தெரியட்டும்!"

"ஹா ஹா ஹா! பிருந்தா நிக்கிற போஸ் நல்லாயிருக்கு! எல்லாரும் உங்களை வேடிக்கை பார்க்கிறாங்க!"


"எதுக்குடி என் காரைப் பத்தி கொறை சொல்ற?"

"எங்கே என் பட்ல கிள்ளுடா பார்க்கலாம் பொறுக்கி!"

"டெம்ப்ட் பண்ணாதேடி!"

"எங்க ஊர்ல பக்கத்து தெருல போடுற சண்டை பார்க்கிற மாதிரி இருக்கு! நல்லா சண்டை போடுங்க! இது மாதிரி சண்டை போடுறத வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாச்சு!"


"ஆனாலும் நம்ம மக்களுக்கு இந்த குழாயடி சண்டைய வேடிக்கை பார்க்கிறதுல உள்ள கிக் சினிமா பார்க்கிறதுலகூட வராது!"

"ஏன் ஆண்ட்டி, உங்க ஊர்ல குழாயடி சண்டையெப்போ "பட்"ல எல்லாம் கிள்ளுவாங்களா?"

"ஹா ஹா ஹா! என்னால சிரிப்பு அடக்க முடியலை!" ஆண்ட்டி விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

"ஹா ஹா ஹா! இவகிட்டப்போயி சொல்றீங்களே!"

"இப்போ என்னத்துக்கு ரெண்டுபேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க?"

"இப்படி வெகுளியா இருக்கியே பிருந்த்!"

"நான் வெகுளியெல்லாம் இல்லை. அது மாதிரி சண்டை பார்த்ததில்லை!"

"எங்க ஊருக்கு வா உனக்கு ஒரு சண்டை காட்டுறேன்"

"இந்த சம்மர்க்கு போவோமா?"

"சரி, லீவ் கெடச்சா போகலாம்."

"எப்படி சண்டை போடுவாங்க?"

"உன் முன்னாலே யாரும் சண்டை போட மாட்டாங்க! எல்லாரும் உன்னை வேடிக்கை பார்ப்பாங்க!"

"ஏன்?"

"இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இவனுக்கு எப்படி கெடச்சதுனுதான்!'

"சாண்ஸ் கெடச்சா ஐசா!"

"கண்ணன் ரொம்பத்தான் பிருந்தாவ அப்பப்போ குளீர வைக்கிறீங்க!"

"சரி, குழாயடி இல்லைனா தெருவிலே பொம்பளைங்களுக்கு இடையிலே நடக்கிற சண்டையிலே பொதுவா கைகலப்பெல்லாம் இருக்காது பிருந்த்!"

"ஆண்ட்டிதானே சொன்னாங்க!"

"அவங்க சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாங்க! பொதுவா பொம்பளைங்களுக்குள்ளதான் இந்தச்சண்டை நடக்கும். ஆனா ரொம்ப அசிங்க அசிங்கமா பேசி சண்டை போடுவாங்க! அவங்க ஃப்ரெஸ்ட்ரேஷனை எல்லாம் இப்படிதான் "கெட் ரிட் ஆஃப்" பண்ணுவாங்க!"

"ஆமா பிருந்தா! பொம்பளைங்களா அவளுக! காது கொடுத்து கேக்க முடியாது! ஆனால் கேக்காமலும் இருக்க முடியாது!"


"அப்படினா?"

"ஆண்ட்டிக்கு அது மாதிரி பச்சை பச்சையா பேசி சண்டை போடுறத வேடிக்கை பார்க்கப் பிடிக்குமாம்!"

"கண்ணன்! என்னை இப்படி வாரிவிடுறீங்களே!"

"எனக்கு அதைப்பத்தி சொல்லுங்க!"

"அவங்க பேசுற அந்தக் கெட்ட வார்த்தையெல்லாம் உனக்குப் புரியாது. நீ சிட்டில வளர்ந்தவ இல்லையா?"

"தமிழ்தானே?"

"ஆமா தமிழ்தான். எங்க ஊர்ல உன் சென்னைத் தமிழ் இல்லை!"

"தமிழ் எனக்குப் புரியாதா?"

"கலோக்கியல் தமிழ் எல்லாம்லாம் உனக்குப் புரியாது!"

"கெட்ட புத்தகத்துல கூட போட்டிருக்க மாட்டாங்களா?"

"அப்படினா?"

"அதான் ஒரு மாதிரியான கதை புத்தகம்!"

"அதெல்லாம் படிச்சிருக்கியா?"

"நான் படிச்சதில்லை. சும்மாதான் கேட்டேன்.."

"சரி நான் உன் காதுல ஒரு கெட்ட வார்த்த சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்லு! உனக்கு எவ்ளோ தெரியுதுனு பார்ப்போம்"

"சொல்லுங்க!"

"ஆண்ட்டி தள்ளி நில்லுங்க! ஒட்டுக்கேக்காதீங்க!"

"நானா ஒட்டுக் கேக்கப்போறேன்? எல்லாம் என் நேரம்தான்'


"இந்த விசயத்தில் யாரையும் நம்ப முடியாது!"

"இதெல்லாம் அநியாயம் கண்ணன்! எங்க ஊர்ல நான் பார்க்காத சண்டையா!"

"அப்படிச் சொல்லுங்க, ஆண்ட்டி!"

"ஹா ஹா ஹா! இதென்னவோ அவங்களுக்குப் பெரிய க்ரிடிட் மாதிரி சொல்ற!"

"எல்லாம் ஒரு நாலெட்ஜ்தானே?"

"கெட்டவார்த்தை பத்தி தெரிஞ்சுக்கிறதா? நாலெட்ஜா? நாசமாப் போச்சு போ!"

"சரி சொல்லுங்க, இந்தக் கடைக்குப் போகனும்!"

"இந்தக்கடைக்கா! இந்தக் கடைக்கு நான் வரலைப்பா!"

"ஏன், கண்ணன்?"

"ஐயோ! ஒரு முறை ஸ்டெய்ஸியோட போயி மாட்டிக்கிட்டேன். ஏதாவது ஒரு புடவையை உங்க இடுப்பிலே கட்டி அனுப்பிடும் அங்கே உள்ள அம்மா! மோஸ்ட் அன்னாயிங் கேரக்டர்! குஜராத்ல இருந்து இறக்குமதி பண்ணி இருக்கானுக நம்மள கொல்றதுக்குனே"

"ஸ்டெய்ஸிக்கு கண்ணன் புடவை வாங்கி கொடுத்தாரா, பிருந்தா?"

"நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா? அவளுக்கு எல்லாம் தெரியும்ங்க காயத்ரி!"

"ஆமா புடவை வாங்கி அவளுக்கு கட்டி விட்டாரு! வேற என்னென்ன பண்ணினாருனு எனக்குத் தெரியாது"

"நெஜம்மாவா!"


"அவ வெளையாட்டுக்கு சொல்றா ஆண்ட்டி! இவதான் கட்டிவிட்டாள்"

"சரி எனக்கு அதை சொல்லுங்க!"

"என்ன சொல்ல?"

"அந்த உங்க ஊரு கெட்ட வார்த்தைதான்"

"பக்கத்தில் வா!"

"வந்தாச்சு. சொல்லுங்க!"

" "

"இது என்ன தமிழா?"

"ஆமா பச்சைத் தமிழ்! வெளியிலே சொல்லிடாதே!"

"இதுக்கு என்ன அர்த்தம்?"

"ரொம்ப மோசமான கெட்ட வார்த்தை. ஆண்ட்டிதான் இதில் எக்ஸ்பர்ட் போல இருக்கு! அவங்க கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ!"

"எனக்கு உங்க ஊர் கெட்ட வார்த்தை எல்லாம் தெரியாது! நான் திருச்சி பக்கம், கண்ணன்!"


"நீங்க கெட்ட வார்த்தையில் எக்ஸ்பர்ட்னு நெனச்சேன்!"

"என்னிடம் உதை வாங்கப் போறீங்க கண்ணன்!"


"நீங்க அடிச்சா நான் தாங்க மாட்டேன்.. சரி சரி போய் ஷாப் பண்ணிட்டு வாங்க!"

"நீங்க எங்கே போறீங்க?"

"எங்கேயும் போகல! இப்படியே வெளியிலே நிக்கிறேன்! அதான் செல் ஃபோன் இருக்கே! ஆண் பண்ணிதான் வச்சிருக்கேன்."

"கண்ணன்! திருட்டு தம் அடிக்கப் போயிடாதீங்க!"

"நான் ஸ்மோக் பண்றது இல்லங்க, காயத்ரி!"

"சும்மாதான் சொன்னேன்! நாங்க வர கொஞ்ச நேரம் ஆகலாம்! திட்டாமல் இருங்க!"


"டேக் யுவர் டைம், ஆண்ட்டி! யு டூ பிருந்த்!"

-தொடரும்

5 comments:

வருண் said...

வாங்க சித்ரா!

உண்மையிலேயே உங்ககிட்டு கத்துக்க வேண்டியது இந்த தாராள மனசு (பின்னூட்டம், தமிழ்மணம் தமிழிஷ் மார்க் கொடுத்தல்).

காசோ பணமோ இல்லைனா தங்க நாணயமோ செலவு செய்ய வேண்டியதில்லை இதை செய்வதற்கு என்றாலும் அந்தமனசு எல்லாருக்கும் வருவதில்லை பாருங்க. மனதளவில எல்லோரும் கஞ்சம்தான் (என்னையும் சேர்த்துத்தான்). ஆனா நீங்க மட்டும்தான் தாராளம் இதில்.

இந்த பெரிய மனதிற்கும், உங்க சின்ஸியாரிட்டிக்கும், வலையுலகில் நீங்கள் 100 ஆண்டுகாலம் எல்லார் மனதிலும் வாழ்வீர்கள்னு நம்புறேன்!

இது உங்களிடமிருந்து தொடர்ந்து இவைகளை எதிர்பார்த்து சொல்லவில்லை. இதுவரை நீங்கள் நடந்ததற்கு! I just feltlike saying this! :)

nila said...

indha vaaram kannan varathukku romba late ahiduchu pola... eppodhum monday illa tuesday irukkum.. ippo friday varaikkum kakka vachutinga..

வருண் said...

Hi nila!

Very nice to see you after a while!:-))))

How have you been? I hope you are doing great academically and getting settled to a "new setting" and everything is going good for you!

Glad to know that you could find some time to read this "kadalai corner" episodes! :)

Thanks for your comment. As I mentioned earlier I write these when I am in a "good mood". It's getting delayed if there is too much work pressure! Sorry if I made you wait longer!

Take care!

nila said...

hi varun...
am doing good.. settled well in the new country.. going fine wit academics n also life... well.. i read ur blog daily.. my coffee time is for ur blog n few more.. i dont get time to comment on ur posts.. somehow i manage to read them daily without fail.. good going.. keep rocking...

வருண் said...

Nila: Glad to know you are doing good! :-)