Tuesday, June 26, 2012

அய்யோ பாவம் ஜெயமோஹன்!

ஜெயமோகனுக்கு நேரம் சரியில்லை போலயிருக்கு. என்னங்க இவரு நல்ல கதை எழுதலாம் இல்லைனா இலக்கிய விமர்சனம் எழுதலாம், இல்லைனா மதம், மொழி சம்மந்தப்பட்ட விவாதங்கள் செய்யலாம். அவைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆதாரமில்லாத அரைகுறையான  தகவல்களை வைத்து பணம் வாங்கியதா இல்லை கொடுத்ததாக எதை எதையோ  எழுதி இப்போ வம்பில் மாட்டிக்கொ ண்டு முழிக்கிறார் பாவம். 

காலச்சுவடு கண்ணன் , TATA க்குசெய்த அந்த குறும்படத்துக்கு லீனா மணிமேகலை எவ்வளவு பணம் வாங்கினார் என்ற கேள்வி/கேலியோட நிறுத்திக்கொண்டார்.

இதை விமர்சிக்க நுழைந்த ஜெயமோகன்,  தடம் புரண்டு பல பிரபலங்களை (தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழைய நண்பர்கள்) தேவையே இல்லாமல் இழுத்து, போதுமான ஆதாரமில்லாமல் இன்னாரு அந்நிய நிறுவனங்களிடம் பொருளுதவி/பணம் பெற்றார் அது இது எழுதிவிட்டார். இப்படி வரம்புமீறி  இவரு எழுதவும்  பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் செம கடுப்பாகிட்டாங்க.  அதோட இவரு  எதையோ எழுதிட்டுப் போறாருனு விடாமல், எரிச்சலும், கோபமுமாக பலவிதமான தொடர்ந்து மிகவும் சீரியஸான கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே இருக்காங்க.  

பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயமோகன் பதில்சொல்லியே  ஆகனும்னு ஒரு நிலைமை  உருவாகிவிட்டது. அதனால் ஜெயமோகன், ஒரு சில "பக்கவாத்தியங்களுடன்", தான் உளறியதெல்லாம் சரி என்பதுபோல் என்னதான்  ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து, சமாளிச்சாலும் இதெல்லாம் இவருக்குத் தேவையா எங்கிற கேள்வி எல்லார் மனதிலுமெழுகிறது.

ஜெயமோகன், தெரிந்து கொள்ள  வேண்டியதென்னனா இவருெழுதியது ஒருவரை கருத்துச்சண்டைகளால் கெட்டவார்த்தைகளால் திட்டுவதைவிட மோசமான  செயல்  என்பது. இன்னாருக்கு இந்த நிறுவனம் பணம் கொடுத்து இருக்கு, அதனால இவரு இப்படி இப்படி எழுதுகிறார்னு  தன் கற்பனைத் திறனைக் கலந்து போதுமான  ஆதாரங்கள் இல்லாமல் சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல் ஜெயமோகனுக்கு தெரியாமல்ப்போனது பரிதாபம்.

கேள்விக்கணைகளை சமாளிக்க இவரு சொன்னவைகளுக்கு ஆதாரமாக இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அங்கே சொன்னதை இங்கே சொன்னதை எடுத்துக்காட்டி, தன்பக்கம் நியாயம் இருப்பதாக என்னதான் ஆதாரம்னு எதையாவது கொடுத்தாலும், இவர் தரத்துக்கும், இவரு தளத்துக்கும் இவரே சூனியம் வச்சுக்கிட்டாரு னுதான் நான் சொல்லுவேன்.

பொதுவாக எனக்கு இவர் எழுத்தில் தெரியும் இவரின் அகங்காரம் எரிச்சலை உண்டாக்கும். ஆனால் இன்று இவர் தளத்தில் மற்றும் பல தளங்களில் தோன்றும் பலருடைய கடிதங்கள் இவர்மேல் பரிதாப்படவைத்துவிட்டது என்னையும்கூட.

27 comments:

Anonymous said...

ஆனால் லீனா பற்றி ஜெமோ எழுதியதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே வருண் ?

அந்த பதிவை அவர் சரியாக தான் எழுதியிருந்தார் என்று கருதுகிறேன். அதில் அவர் கூறும் முக்கியமான விசயம் எந்த கொள்கையையும் பின்பற்றுபவர்கள் அந்த கொள்கைக்கு நேர்மையோடும் நாணயத்தோடும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது தான். அது மிகச் சரியான விசயம் இல்லையா ? அதை அடிநாதமாக கொண்டு தான் அந்த பதிவை எழுதியுள்ளார். எனவே அவர் கூறுவது முற்றிலும் உண்மை. அந்த நேர்மையும் நாணயமும் லீனாவிடம் துளியும் இல்லை. எனவே இதை எழுதியதற்கு பதிலாக இந்த சரியான விசயத்தை கூறும் ஜெமோ விடம் அது இருக்கிறதா இல்லையா என்கிற கோணத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கலாம்.

வருண் said...

லீ ம வெவகாரம் கொள்கை சம்மந்தப்பட்டதுங்க. இவரு அதோட நிறுத்தியிருக்கலாம். இவரால் மனஉளைச்சலுக்கு ஆளான ஒரு பெரியவர், இவரு என் பிணத்தைக்கூட பார்க்கக்கூடாதுனு சொல்ற அளவுக்கு இவரு எழுதி இருக்காரு. இதெல்லாம் தேவையே இல்லாதது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்ென்று நம்பி பணசம்மந்தமான விமர்சனமெல்லாம்ிவர் செய்யவே கூடாது!

Anonymous said...

இது நாள் வரை பிரபலங்கள் தூரத்தில் அமைதியாய் தம் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்ததால் ஏதோ தேவ தூதர்கள் போல போற்றப்பட்டு வந்தனர்...

இடையில் கிடைத்த மைக்கும் ...இப்போது வந்துள்ள இணையமும்...அவர்களும் மனிதர்கள் தான்...அவர்களும் அடிக்கடி சறுக்குவார்கள்... அவர்களும் நம்மைப்போல் நிறைய visayangalil
அரைவேக்காடு தான்...

என்பதை அடிக்கடி உலகுக்கு உடனே வெளிச்சம்போட்டு காட்டதொடங்கியத்தின் ஒரு காட்சி தான் இது...

Noone beats a dead dog...at the same time, people like Jayamohan are under the compulsion to be in the news..under the radar...just to be relevant in the modern world...

BTW,வந்து உரிமையோடு சண்டை போட்டதற்கு நன்றி...

Boston Bala said...

திரு.ராஜதுரையால், "நான் எந்த அமைப்பில் இருந்தும் காசு வாங்கியதில்லை, அவர்களுக்காக என் கருத்தை உருவாக்கிக்கொண்டு எழுதவும், செயல்படவும் இல்லை" என்று ஒரு பிரகடனத்தை ஒருபோதும் செய்யமுடியாது. ஜெயமோகனால் முடியும்.

WACC பற்றி SVR சொன்ன அவரது பதிலிலேயே கூட, உன்னால் நிருபிக்க முடியுமா என்ற தொனிதான் இருந்ததே தவிர, ஜெமோ முன்வைத்த குற்றசட்டுகளுக்கும், அந்த குற்றசாட்டுக்கான பின்புலத்திற்கும் மறுத்து பதிலை காணோம்

வருண் said...

****ரெவெரி said...
இது நாள் வரை பிரபலங்கள் தூரத்தில் அமைதியாய் தம் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்ததால் ஏதோ தேவ தூதர்கள் போல போற்றப்பட்டு வந்தனர்...

இடையில் கிடைத்த மைக்கும் ...இப்போது வந்துள்ள இணையமும்...அவர்களும் மனிதர்கள் தான்...அவர்களும் அடிக்கடி சறுக்குவார்கள்... அவர்களும் நம்மைப்போல் நிறைய visayangalil
அரைவேக்காடு தான்...

என்பதை அடிக்கடி உலகுக்கு உடனே வெளிச்சம்போட்டு காட்டதொடங்கியத்தின் ஒரு காட்சி தான் இது...

Noone beats a dead dog...at the same time, people like Jayamohan are under the compulsion to be in the news..under the radar...just to be relevant in the modern world...

27 June 2012 6:38 AM****

Good to see you ரெவெரி. :)


***BTW,வந்து உரிமையோடு சண்டை போட்டதற்கு நன்றி...

27 June 2012 6:38 AM**

Glad you could take it in the "right sense". Thanks.

வருண் said...

***Bala Subra said...
திரு.ராஜதுரையால், "நான் எந்த அமைப்பில் இருந்தும் காசு வாங்கியதில்லை, அவர்களுக்காக என் கருத்தை உருவாக்கிக்கொண்டு எழுதவும், செயல்படவும் இல்லை" என்று ஒரு பிரகடனத்தை ஒருபோதும் செய்யமுடியாது. ஜெயமோகனால் முடியும்.

WACC பற்றி SVR சொன்ன அவரது பதிலிலேயே கூட, உன்னால் நிருபிக்க முடியுமா என்ற தொனிதான் இருந்ததே தவிர, ஜெமோ முன்வைத்த குற்றசட்டுகளுக்கும், அந்த குற்றசாட்டுக்கான பின்புலத்திற்கும் மறுத்து பதிலை காணோம்

27 June 2012 9:55 AM***

You could imagine as you wish.

***ஜெமோ முன்வைத்த குற்றசட்டுகளுக்கும், அந்த குற்றசாட்டுக்கான பின்புலத்திற்கும் மறுத்து பதிலை காணோம்***

Even if he answers with relevant documents, you and JM will come up with another bullshit or not?

I bet you million dollar JM is not going to apologize even if made a false accusation.

How does all these help JM or you becoming a "great intellectual", HUH?

The point is THIS is UNNECESSARY. JM can do some better things to get to a higher level.

Boston Bala said...

என் மீது இவ்வகை குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதை பொய்யாக்கும் வண்ணம் தகவல்களை வெளியிட்டு, அவை தவறு என்பேன். அதே போல் எஸ் வி ஆரும் "நான் எந்த அமைப்பில் இருந்தும் காசு வாங்கியதில்லை, அவர்களுக்காக என் கருத்தை உருவாக்கிக்கொண்டு எழுதவும், செயல்படவும் இல்லை" என்று ஒரு பிரகடனத்தை செய்யலாம்.

செய்ய இயலாது என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.

Boston Bala said...

எங்கிருந்து பணம் வருகிறது, யார் கொடுக்கிறார்கள், அதன் தொடர்ச்சியாக என்ன எழுதவைக்கப் படுகிறது என்று அம்பலப் படுத்தினால், எவருக்கும் கோபம் எழும். உங்கள் சீற்றம் புரிகிறது.

இனிமேலாவது பாதுகாப்பாக தடயங்களை அழிக்கவும். ஏமாற்றுவதற்கு வாழ்த்துகள்!

வருண் said...

***Bala Subra said...
என் மீது இவ்வகை குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதை பொய்யாக்கும் வண்ணம் தகவல்களை வெளியிட்டு, அவை தவறு என்பேன். அதே போல் எஸ் வி ஆரும் "நான் எந்த அமைப்பில் இருந்தும் காசு வாங்கியதில்லை, அவர்களுக்காக என் கருத்தை உருவாக்கிக்கொண்டு எழுதவும், செயல்படவும் இல்லை" என்று ஒரு பிரகடனத்தை செய்யலாம்.

செய்ய இயலாது என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.

27 June 2012 1:59 PM***

யெஸ் வி ஆர் செய்ய இயலாதுனு நான் எப்படி சொல்ல முடியும்???

Let me tell you this, people still say and believe that I am writing in two names. I tried to tell them that I am not. I dont think I could disprove that. I really dont care if they dont believe me.

Every individual is different. Of course you will go to any level to prove yourself innocent but I wont.
Just because you spend all your time to prove you innocent does not make you innocent either. On the other hand just because I stop providing evidences after a while does not make me guilty either. :)

வருண் said...

****Bala Subra said...
எங்கிருந்து பணம் வருகிறது, யார் கொடுக்கிறார்கள், அதன் தொடர்ச்சியாக என்ன எழுதவைக்கப் படுகிறது என்று அம்பலப் படுத்தினால், எவருக்கும் கோபம் எழும். உங்கள் சீற்றம் புரிகிறது.

இனிமேலாவது பாதுகாப்பாக தடயங்களை அழிக்கவும். ஏமாற்றுவதற்கு வாழ்த்துகள்!

27 June 2012 2:00 PM***

Sounds like I did get a tidy sum from WACC for covering SVR! LOL

I dont think I can prove that I am innocent! LOL

I am not going to spend all my time proving you that I have nothing to do with SVR or WACC! LOL

வருண் said...

***June 26, 2012SV Rajadurai doesn't deny he gets Support from WACC but asks for proof to Jeyamohan via aadhavan Dheetchanya
தந்துகி: அவதூறுகளின் கிடங்கு ஜெயமோகனுக்கு எஸ்.வி.ராஜதுரை எழுப்பும் கேள்விகள்
Posted by Bala Subra at 8:44 ***

Is that YOU???!!!

So, Jeyamohan has seen the cheque and WROTE this accusation??

Have you seen the Cheque he received from WACC?

How much was that a million dollar or few hundred bucks???

Boston Bala said...

The issue here is SVR tries to distract the core issue by intelligent sounding lengthy and empty rhetoric.

The question is simple;

How are SVR's writings dependent on the money he gets from his sources?

வருண் said...

Bala: You are saying that JM's accusation is valid. And that
SVR is dodging.

Fine, how did JM learn about the money SVR received from WACC?

Did he know HOW MUCH?

Or JM is just SPECULATING from the rumors he heard?

ANSWER ME, please! Thanks

Boston Bala said...

உங்களுக்கு பூணூல் இருப்பதை கண்டுபிடிக்கறதா வச்சுக்குவோம்...

எப்படி எனக்கு பூணூல் இருக்குனு கண்டுபிடிச்சேனு கேப்பீங்களா?

சட்டைய அவுத்து பூணூல் கிடையாதுடா $%#@னு சொல்வீங்களா?

எஸ் வி ராஜதுரை துண்டை உதறிக் காட்டுவதை வுட்டுட்டு, சவுண்டு மட்டும் நல்லா வுடுறாரு

வருண் said...

I am sorry, I dont think SVR needs to do what you expect or JM to do. First of all you can not accuse someone like that without showing proper evidence. Show me the evidence. Then we can go to the next step.

You poonul logic is funny. LOL

I am not going to remove my shirt either LOL

BTW, How did you know I wear poonal? LOL

Boston Bala said...

அதாவது, எஸ் வி ஆர் பணம் வாங்கிக் கொண்டு கருத்துகளை எழுதுகிறார் என்னும் கருத்தை மறுக்க மாட்டார்.

கறபனையும் இல்லாமல் கருத்தும் இல்லாமல் காசுக்காக குத்தகை விடுவோர் சங்க உறுப்பினராக இருப்பவர்களை அடையாளம் காட்டவாவது நேர்மையாளர்களுக்கு நேரமும் எனக்கு சுயபுத்தியும் கிடைப்பதாக.

வருண் said...

SVR says: I did not receive any check.

JM says: Yes, you did.

Now, who needs to show a copy of the check?

SVR can not and will not as he claims he did not receive one.

BUt, JM should show the copy of the check from WACC as he claimed that SVR received a check.

You need to think logically and realize that the ball is on JM's court. He should show the evidence now!

Boston Bala said...

எஸ் வி ஆர் தன் நிதி வருவாய் குறித்த ஆதாரங்களை சொல்லி விட்டால் பிரச்சினை முடிந்தது.

மடியில் கனம் --> வழியில் பயம்

வருண் said...

***இன்னொரு விமர்சனம், நான் சிந்துசமவெளி படத்துக்கு எழுதினேன் என்பது. அந்தப்படம் நான் எழுதியதல்ல என்பதும், அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை என்பதும், நான் அந்தப்படத்தின் முன்னர் உத்தேசிக்கப்பட்ட ஒரு வடிவையே எழுதினேன் என்பதும் அனைவருக்குமே தெரியும். [சிந்துசமவெளியின் மூலக்கதை மலையாளத்தில் வெளிவரவுள்ளது]***

பாலா: உங்க ஜெயமோஹன் புலம்புகிறார்.

நீங்க மடியில் கனம்னு சொல்றதுபோல, நெருப்பில்லாமல் புகையாதுனு நான் சொல்லலாம்!

Just like you do, I can keep saying that JM only wrote dialogues for sindthusamaveli. YOu or him can never prove that I am wrong. YOu get it???

நீங்க ஜெயமோஹர் சொல்றதை எல்லாமே நம்புவீங்களே? இல்லையா? :)))

வருண் said...

பாலா: என்ன ஆளையே காணோம். எஸ் வி ஆர் இவனிடம் காசு வாங்கினார் அது இதுனு சொல்வதெல்லாம் "உண்மை உண்மை" என்கிறீர்கள்.

சிந்துசமவெளி பற்றி ///நான் அந்தப்படத்தின் முன்னர் உத்தேசிக்கப்பட்ட ஒரு வடிவையே எழுதினேன் என்பதும் அனைவருக்குமே தெரியும். ///

இவரு ஒரு வேர்ஷனுக்கு வசனம் எழுதினேன்னு இவரே சொல்றாரு. பின்னால ஒதுங்கிக்கிட்டாராம். இதமட்டும் எல்லாரும் ஒழுங்காப் புரிந்துகொள்ளனுமாம். ஆனால் இவரு ஆதாரமில்லாமல் இவர் இந்த நிறுவனத்திடம் பணம் வாங்கினார்னு சொல்லுவாராம். எல்லாரும் இவரு சொறத "ஆமா ஆமா" னு ஒத்துக்கனுமாம்?

நீங்களும், ஜெயமோஹனும் உங்க நியாயங்களும்!!!

வருண் said...

ஷோபா சக்தி, தமிழச்சியிடம் தவறா நடந்துகொண்டதாக சொல்றாங்களே, நீர் ஷோபா சக்தி ஷோபா சக்தினு ஏதோ உலகமஹா யோக்கியன் அந்தாளு மாரி பீத்துறியேனு ஒரு ஆளு கேட்டால், இவரு இன்னொருவருடைய தனிமனித ஒழுக்கத்தைப் பத்திப் பேசமாட்டாராம்! அது ஏன்??? காஞ்சிக்கபோதில இருந்து நித்யானந்தாவரை சாமியார்களெல்லாம் பெண் பொறுக்கிகள் என்பதால்தானே?

Boston Bala said...

The core issue at stake here is either some people are selling their thoughts for money.

If those who are alleged are not importing dollars for their thoughts, they could say so explicitly with valid proof.

வருண் said...

***If those who are alleged are not importing dollars for their thoughts, they could say so explicitly with valid proof.***

I am asking HOW ARE YOU ALLEGING?

What kind of proof you have to allege someone that they received such and such amount?

Why don't you show me proof for your allegation?

Boston Bala said...

I do not have access to his accounts. Probably SVR shd hv details who credited the money to his bank.

Let us follow the money and find the source.

வருண் said...

பாலா: நீங்களும் தேவையில்லாமல் வாயைக்கொடுத்துவிட்டு மாட்டிக்காதீங்க.

ஏன்னா ஜெயமோஹன் இதுபோல் வாயைக்கொடுத்து பிறகு அதற்கு சப்பைக்கட்டுறது உங்க பார்வைக்கு

சப்பைக்கட்டு 1:

***“நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?”***

சப்பைக்கட்டு 2

****கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.***

சப்பைகட்டு ரெண்டுல என்ன சொல்றார்னா, if he acknowledges WACC in the book, then his book would reach foreign libraries and more audience.

Why is he jumping to some other issue which has nothing to do with money. HUH? Is that bcos he is not sure about the money now???

Boston Bala said...

it is as simple as releasing his tax filing. If he cannot tell his mysterious income sources, then the best bet is to resort to offense. I am pretty sure, we all can do that.

வருண் said...

***Bala Subra said...

it is as simple as releasing his tax filing. If he cannot tell his mysterious income sources, then the best bet is to resort to offense. I am pretty sure, we all can do that.

29 June 2012 10:56 AM***

I would say, it is all just allegations and speculations. One can try, destroy anybody's reputation by doing this. Your justification would fit for anybody but it can prove nothing.

My point is, if SVR is guilty, he would have kept quiet and let it go, for the first two posts of JM. That is what anybody who is guilty would do. May be he did not receive any financial benefit. May be he acknowledged for other "political reasons". That is why he could challenge JM and give him a week time to prove what JM claimed! :)