Thursday, August 23, 2012

பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!

# முகம் தெரியாத "மனிதாபிமானி" வரப்போகும் பதிவர் கூட்டத்தில்  மது நுழைந்துவிடுமோ? என்கிற கேள்விக்குறியை பெரிதாக்கி, சில பதிவர்கள் "பொதுவில் உலகறிய" செய்த "தனிப்பட்ட"  உரையாடலை "படமெடுத்து"ப் போட்டு ஒரு கலகத்தை ஆரம்பித்துள்ளார். ஏன் இந்த தேவையில்லாத பயம்? என்ற கேள்வி கேட்கலாம் என்று போனால், ஈரோட்டில் நடந்த சந்திப்பில் பதிவர்கள் குடித்துவிட்டு கூட்டத்துக்கு வந்ததாக ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார்.

உடனே, இஸ்லாமிய மதத்தவரை மிகவும் ம(மி)திக்கும்  ஒரு பொதுநலவாதிப் பதிவர்,   பதிவர் ஒருவர் அடிக்கடி மகுடப்பதிவர் ஆவதால் ஏற்பட்ட  பொறாமையில் அவரை கவிழ்த்தவே மனிதாபிமானி  இந்தப் பதிவு எழுதியதாக சொல்லிப் பதிவு போடுகிறார் .

அடுத்து ஹலால் பீர் பற்றி ஒரு விவாதம். இப்படி தொடர்ந்து போயிக்கிட்டே இருக்கு!

சரி, # இந்த மனிதாபிமானி யாராக இருக்கட்டும், அவர் மதவாதியோ இல்லைனா நாத்திகரோ, அவருக்கு ஒரு முகமோ, இல்லை பல முகங்களோ, எப்படிவேணா இருக்கட்டும். அவர் பதிவில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது..

* பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?

* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?

* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது  யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமாமே? :)

 ---------------
# "மனிதாபிமானி" முகம் தெரியாதவர் என்று சொன்னது என் தவறு..

 பின்னூட்டம் 2

Aashiq Ahamed said...
உங்கள் மீது அமைதி நிலவுவதாக,

வருண்,

மனிதாபிமானி தளம் பலரால் எழுதப்படும் தளம். நான் அந்த பதிவை எழுதியதால் நன்றி என்று என் பெயர் பதிவின் இறுதியில் போடப்பட்டுள்ளது. ஆக, பதிவை எழுதியது முகம் தெரியா ஆள் என்பது சரியல்ல.

மற்றப்படி உங்கள் பதிவோடு ஒத்துப்போகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

118 comments:

suvanappiriyan said...

//பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?

* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?

* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமாமே? :) //

அருமையான ஆலோசனை. போதை இல்லாமல், மதம் இல்லாமல் பல ஆக்கபூர்வ திட்டங்களை செயல்படுத்தும் இடமாக பதிவர் சந்திப்புகள் அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா.

Aashiq Ahamed said...

உங்கள் மீது அமைதி நிலவுவதாக,

வருண்,

மனிதாபிமானி தளம் பலரால் எழுதப்படும் தளம். நான் அந்த பதிவை எழுதியதால் நன்றி என்று என் பெயர் பதிவின் இறுதியில் போடப்பட்டுள்ளது. ஆக, பதிவை எழுதியது முகம் தெரியா ஆள் என்பது சரியல்ல.

மற்றப்படி உங்கள் பதிவோடு ஒத்துப்போகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

வருண் said...

***Aashiq Ahamed said...

உங்கள் மீது அமைதி நிலவுவதாக,

வருண்,

மனிதாபிமானி தளம் பலரால் எழுதப்படும் தளம். நான் அந்த பதிவை எழுதியதால் நன்றி என்று என் பெயர் பதிவின் இறுதியில் போடப்பட்டுள்ளது. ஆக, பதிவை எழுதியது முகம் தெரியா ஆள் என்பது சரியல்ல.

மற்றப்படி உங்கள் பதிவோடு ஒத்துப்போகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ***

சகோதரர் ஆஷிக் அஹமத்!

உங்களை "முகம் தெரியாதவராக" வர்ணித்தது என் பெரிய தவறு! தவறுக்கு மன்னித்துவிடுங்கள், சகோ! :)

வருண் said...

***சுவனப் பிரியன் said...

//பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?

* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?

* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமாமே? :) //

அருமையான ஆலோசனை. போதை இல்லாமல், மதம் இல்லாமல் பல ஆக்கபூர்வ திட்டங்களை செயல்படுத்தும் இடமாக பதிவர் சந்திப்புகள் அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா.

23 August 2012 11:14 AM***

வாங்க, சுவனப் பிரியன்! உங்க கருத்துக்கு நன்றிங்க :)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வருண்,
மிக்க நன்றி சகோ.
தெளிவான பதிவு..!
இதான் மேட்டர்..!
அவ்ளோதான் விவகாரம்..!
புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் ஜெயம்..!
ஓவர்..!

Jayadev Das said...

http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

ஹாய் வருண், கடை திறந்திருக்கேன், நீங்க வந்தா பெருமையா இருக்கும்.... பிளீஸ்........

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வருண்,
மிக்க நன்றி சகோ.
தெளிவான பதிவு..!
இதான் மேட்டர்..!
அவ்ளோதான் விவகாரம்..!
புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் ஜெயம்..!
ஓவர்..!***

வாங்க, சகோதரர் முகமது ஆஷிக்! நன்றி :)

வருண் said...

***Jayadev Das said...

http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

ஹாய் வருண், கடை திறந்திருக்கேன், நீங்க வந்தா பெருமையா இருக்கும்.... பிளீஸ்........

23 August 2012 11:50 AM***

நான் அல்ரெடி போயி சும்மா ரெண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன் :)))

பதிவை நல்லாப் படிச்சுட்டு வந்து "சண்டைய" வச்சுக்கிறேன் :)))

Anonymous said...

@ வருண் - // * பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே? //

நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் சொல்வதைப் பார்த்தால் பதிவர் சந்திப்பின் அரங்கில் வைத்தே அனைவரும் குடிக்கப் போகின்றனர் என்பது போல் அல்லவா இருக்கின்றது. அப்படி எதுவும் நடைப்பெறப் போவதில்லை. பதிவர் சந்திப்பில் பெண்களும், குடும்பத்தாரும் கூட கலந்துக் கொள்கின்றனர் என்பதால் அந்தளவுக்கு தரங்கெட்டுப் போய் எந்த பதிவரும் இல்லை சகோ.... !!!

//* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?//

இதையே தான் நாமும் சொல்கின்றோம். குடிக்க விரும்புவோர் பாருக்கு போகட்டும், சாப்பிட விரும்புவோர் ஹோட்டலுக்கு போகட்டும், தொழுகை / கும்பிட விரும்புவோர் கோவிலுக்குப் போகட்டும் .. அதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்.

//* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.//

மதம் குறித்து எவரும் பேசப்போவதில்லை. இது ஒன்றும் மத மாற்று வைபவம் இல்லையே !!! ஆனால் வெளியில் மதவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தாலே போதுமானது .. !!!

வருண் said...

***அந்தளவுக்கு தரங்கெட்டுப் போய் எந்த பதிவரும் இல்லை சகோ***

அதெல்லாம் நீங்க சொல்ல முடியாது. நீங்க பதிவர்கள் பத்தி சரியா தெரியாமல் இருக்கீங்க.

இதை தெரிஞ்சுக்கோங்க,

சுந்தர்னு ஒரு பதிவரை டாஸ்மாக் கூட்டிச் சென்று அவரோட உக்காந்து தண்ணியடிச்சுட்டு அவரை அடிச்ச (ரத்தம் வரும் அளவுக்கு) பதிவரும் சென்னைலதான் இருக்காரு.

நீங்க சும்மா வார்த்தைய விட்டுறாதீங்க. அள்ள முடியாது, இ செ.

எல்லாரையும் உங்கள மாரி நெனைக்கதீங்க, சகோ! :)

வருண் said...

இ செ:

இது நான் சகோ, சார்வாகன் பதிவில் இட்ட பின்னூட்டம்..

///வருண்August 23, 2012 10:21 PM

இப்போ என்ன பிரச்சினை இங்கே? முகம் தெரியாத மனிதாபிமானி, பதிவர் சந்திப்பில் அல்கஹாலை முழுவதும் பதிவர்கள் தவிர்க்கனும் என்பதுபோல ஒரு பதிவைப் போட்டது தப்பா???

You know there are academic conferences where they dont serve alcohol during lectures, and they serve tea, coffee only. But later, after the seminars, in dinner they do serve. The bloggers can go drink after the "blogger meeting".///

Anonymous said...

@ வருண் - // சுந்தர்னு ஒரு பதிவரை டாஸ்மாக் கூட்டிச் சென்று அவரோட உக்காந்து தண்ணியடிச்சுட்டு அவரை அடிச்ச (ரத்தம் வரும் அளவுக்கு) பதிவரும் சென்னைலதான் இருக்காரு. //

நீங்க என்ன சொல்ல வறீங்க ... பதிவர் சந்திப்பில் குடித்துவிட்டு கலகம் செய்யப் போகின்றார்கள் என்கின்றீர்களா ??? !!!

இந்த பதிவை ஒழுங்கு செய்பவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு !!! மண்டபத்தில் குடித்துவிட்டு கலகம் செய்யும் அளவுக்கு யாருமில்லை சகோ...

அப்படியே எவரேனும் நடந்துக் கொண்டால் அவர்களை முறையே வெளியேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது ... !!!

மனிதாபிமானி போன்றோர் ஒட்டுமொத்த பதிவர்களும் வயது வித்தியாசமில்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கவே பதிவர் சந்திப்பு நடத்துவதாக தொனியில் எழுதியுள்ளார்.. இதனைத் தான் நாமும் கண்டிக்கின்றோம் ... !!!

குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டியதில்லையே. அங்கே வருபவர்களில் ஒரு 10 % பேர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பார்களா ? மனிதாபிமானியின் பதிவு ஒட்டு மொத்த பதிவர்களையும் அவமானப்படுத்துவது போல் இருக்கின்றது..

அதனை சரி என்பது போலவே நீங்களும் // சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே? //

சந்திப்பின் போது பாட்டிலும் கையோடும் வருவார்கள் என்ற ஒரு கருத்தை இங்கு விதைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது ... சந்திப்பின் போது பாட்டிலும் கையுமாக வருமளவுக்கு அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் தரம் கெட்டுவிடவில்லை என்று தான் நான் சொல்லுகின்றேன் ...

டாஸ்மாக்கில் குடித்து அடித்துக் கொள்வதுப் பற்றி எமக்கு கவலை இல்லை... !!!

குறும்பன் said...

வருண் அந்த குடி தமிழகத்தின் நிதி ஆதாரமான TASMACக்கில் நடைபெறவில்லை. அவங்க பதிவர் சந்திப்புக்கு போய் குடிச்சிட்டு அடிதடியில் ஈடுபட்டார்களா? இரண்டு பேருக்கு நடுவில் நடந்த பிரச்சனை அது. இருவரும் பதிவர்கள் அவ்வளவுதான். நல்லா குடிச்சுட்டு குடி குடியை கெடுக்குமுன்னுகூட இடுகை போடலாம். குடி தான் கேடு தம் அடிக்கறது தப்பில்லையா? சிகரெட், பீடி, புகையிலையால் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம் என்று சொல்றாங்க. நீங்க சொல்றத பார்த்தா பதிவர்கள் எல்லோரும் குடிக்காம இருக்கனுமுன்னு சொல்ற மாதிரி இருக்கு. பதிவர் சந்திப்பில் குடிக்கு பதில் புகை விடலாமா? தம் அடிச்சா போதை வராதா?

வருண் said...

***இக்பால் செல்வன் said...

@ வருண் - // சுந்தர்னு ஒரு பதிவரை டாஸ்மாக் கூட்டிச் சென்று அவரோட உக்காந்து தண்ணியடிச்சுட்டு அவரை அடிச்ச (ரத்தம் வரும் அளவுக்கு) பதிவரும் சென்னைலதான் இருக்காரு. //

நீங்க என்ன சொல்ல வறீங்க ... பதிவர் சந்திப்பில் குடித்துவிட்டு கலகம் செய்யப் போகின்றார்கள் என்கின்றீர்களா ??? !!!

இந்த பதிவை ஒழுங்கு செய்பவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு !!! மண்டபத்தில் குடித்துவிட்டு கலகம் செய்யும் அளவுக்கு யாருமில்லை சகோ... ***

சுந்தரும் உங்ளை மாதிரி நம்பித்தான், நண்பன்னு கூடப் போயி குடிச்சாரு.

Seriously, you dont understand bloggers. They ALL are NOT mature! உங்க அறியாமையை நெனச்சு நான் வருந்துறேன். :(



வருண் said...

***குறும்பன் said...

வருண் அந்த குடி தமிழகத்தின் நிதி ஆதாரமான TASMACக்கில் நடைபெறவில்லை. அவங்க பதிவர் சந்திப்புக்கு போய் குடிச்சிட்டு அடிதடியில் ஈடுபட்டார்களா? இரண்டு பேருக்கு நடுவில் நடந்த பிரச்சனை அது.***

திருத்தம் இரண்டு சென்னை பதிவருகளுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டால் வந்த அடிதடி அது!


***இருவரும் பதிவர்கள் அவ்வளவுதான்.***

Is that SO???!!

வருண் said...

***நல்லா குடிச்சுட்டு குடி குடியை கெடுக்குமுன்னுகூட இடுகை போடலாம். குடி தான் கேடு தம் அடிக்கறது தப்பில்லையா? சிகரெட், பீடி, புகையிலையால் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம் என்று சொல்றாங்க. நீங்க சொல்றத பார்த்தா பதிவர்கள் எல்லோரும் குடிக்காம இருக்கனுமுன்னு சொல்ற மாதிரி இருக்கு. பதிவர் சந்திப்பில் குடிக்கு பதில் புகை விடலாமா? தம் அடிச்சா போதை வராதா? ***

இப்போ என்ன சொல்ல வர்ரீங்க??

* நாங்க குடிச்சுட்டுத்தான் பதிவ்ர் கூட்டத்துக்கு வருவோம்னா??

* இல்லை, சந்திப்பின்போது அங்கேயும் குடிப்போம்னா??

தெளிவாகச் சொல்லவும்!!

Anonymous said...

@ வருண் - // Seriously, you dont understand bloggers. They ALL are NOT mature! உங்க அறியாமையை நெனச்சு நான் வருந்துறேன். :( //

இந்த Stereotyping-ஐத் தான் நான் கண்டிக்கின்றேன். சில பதிவர்கள் செய்வதை வைத்துக் கொண்டு அனைவரும் அப்படித் தான் என்பதை தயவு செய்து எடைப் போடாதீர்கள் .... !!!

பதிவர்கள் அனைவரும் மகாத்மாக்கள் இல்லை. நல்லதும் இருக்கும், கெட்டதுக்கும் இருக்கும் ... அனைவரும் முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்க வேண்டியதில்லை.

மனிதாபிமானியின் பதிவைப் படித்துப் பார்த்தால் உள்குத்து நன்கு விளங்கும் .. அவரின் பார்வையில் அனைத்துப் பதிவர்கள் ( அல்லது பெரும்பான்மையான பதிவர்கள் ) குடிகாரர்கள் என்ற தொனியில் எழுதி இருந்தார். அது தான் தவறு என்கின்றோம்.

மண்டப்பத்தில் வைத்து யாரும் குடிக்க மாட்டார்கள் என்பதை புலவர் இராமுநுசம் ஐயா, மதுமிதா உட்பட ஏற்பாட்டாளர்கள் உத்தரவாதம் தருகின்றார்கள். அப்படி நம்பிக்கை இல்லை என்றால் வரத் தேவை இல்லை. அதைவிட்டுவிட்டு குடிப்பார்கள் குடிப்பார்கள் அனைவரும் குடிப்பார்கள் எனக் கூப்பாடு போடுவது சரியல்ல !!!

வருண் said...

***இந்த Stereotyping-ஐத் தான் நான் கண்டிக்கின்றேன். சில பதிவர்கள் செய்வதை வைத்துக் கொண்டு அனைவரும் அப்படித் தான் என்பதை தயவு செய்து எடைப் போடாதீர்கள் .... !!!***

I said, "They ALL are NOT mature!"


And you are saying, I am stereotyping???

Who is stereotyping here?? You only say every blogger is well-mannered!! LOL

மணிகண்டன் said...

//"They ALL are NOT mature!"//

இந்த ஆங்கில phrase வித்தியாசமா இருக்கு இல்ல !

வருண் said...

***மணிகண்டன் said...

//"They ALL are NOT mature!"//

இந்த ஆங்கில phrase வித்தியாசமா இருக்கு இல்ல !

23 August 2012 1:16 PM***

சரி,

"They are ALL NOT mature!"

இது எப்படி இருக்குங்க! :))))

வருண் said...

***மண்டப்பத்தில் வைத்து யாரும் குடிக்க மாட்டார்கள் என்பதை புலவர் இராமுநுசம் ஐயா, மதுமிதா உட்பட ஏற்பாட்டாளர்கள் உத்தரவாதம் தருகின்றார்கள். ***

அட அட அட..பெரிய தியாகம்தான் போங்கோ!

நீங்க குடிச்சுட்டு ட்ரைவ் பண்ணுவதுண்டா, இ செ???

ஏன் குடிச்சுட்டு ட்ரைவ் பண்ணக்கூடாதுனு செல்றானுக முட்டாப் பசங்க???

குறும்பன் said...

//தெளிவாகச் சொல்லவும்!!// சொன்னது புரியலையா? உங்களுக்கு நான் என்ன சொல்லனுமுன்னு எதிர்பார்க்கறிங்க? தெளிவா கேள்வியை வைக்கவும் தெரிந்தால் சொல்றேன் இல்லைன்னா தெரியாதுன்னு சொல்றேன்.

//Is that SO???!! // yes sir. If you think differently if you wish you can spell it out.

Anonymous said...

@ வருண் - I am not saying every blogger is well mannered, but at the same time I am denying some of the Islamic Bloggers trying to portray all bloggers as Drunkards !!! Okay !!!

Even you are saying that // They ALL are NOT mature // that means in your view every bloggers are not mature ... !!! that is the not the right way of condemning a few bloggers .... !!!

Even you are saying in your post don't drink while attending the Conference ... I don't think so the organizers ever allow some one to drink while Conference going on ... !!!

It doesn't matter if some one gonna drink after the Conference or before the Conference !!! That is no of (y)our business to dictate them drink or not .. only good way to advise the organisers is to don't allow alcohol party inside the hall thats it ..

but the so called Manithapimani trying to portray that bloggers gonna give a big business to TASMAC and every one gonna drink and party around the conference hall ..

Who the hell are he to dictate if some bloggers go to TASMAC or not .. that is none of his business ... !!!

I don't believe Ramanujam sir or other organisers going to allow anyone boozing inside the Conference hall, if Manithapimani has a doubt in it. He should have contacted the organizers to make sure everything going fine, before he blabbaer something in his blog.

Without knowing anything how can we judge something is happening faraway or something gonna happen in future ?

Anonymous said...

I am totally disagree with your views ( manithapimani & some other Islamic bloggers ) that some one gonna drink awhile Conference !!!

The Conference going to be happen as a Conference not a Alcoholic Party ..

If someone goes away from the Campus and gonna drink or fight. It doesn't matter !!! That is none of our business too !!!

வருண் said...

I.S:

* Just tell me why are you not allowed to drive when you are DRUNK?

* Tell me why are you not allowed to get drunk and WORK?

Because YOUR BRAIN gets screwed up because of alcohol! That is why!

Unknown said...

//சுந்தர்னு ஒரு பதிவரை டாஸ்மாக் கூட்டிச் சென்று அவரோட உக்காந்து தண்ணியடிச்சுட்டு அவரை அடிச்ச (ரத்தம் வரும் அளவுக்கு) பதிவரும் சென்னைலதான் இருக்காரு.
வருண் நீங்கள் சொல்வது தனிப்பட்ட விரோதம். அது பதிவர் சந்திப்பு நடக்கும் பொது நடை பெறவில்லையே. நீங்கள் சொல்ற மாதிரி பதிவர் சந்திப்பிற்கு பின்னால் தனியாக சென்ற போதுதானே நடந்தது. ஆனால் இவர்கள் எழுதவது ஏதோ தண்ணி அடிப்பதற்கு கூடுவது போல அல்லவா உள்ளது. மேலும் இரண்டு பேரை மட்டும் கட்டம் கட்டி பதிவு போடுவது தனி மனித தாக்குதல்தானே. மது அருந்துவது பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி மட்டும் எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்களே. மதுவுக்கு பொது எதிரி என்றால் அதனால் உடலுக்கு வரும் தீமைகளையும் சில புள்ளி விவரத்தையும் கொடுக்கலாமே. மது பற்ற பதிவில் உதாரணதிற்கு எதற்கு இருவர் பெயர் மட்டும்?

//அவர் பதிவில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
கற்று கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர் வழிகாட்டி பதிவு எழுதவில்லை என்பதே என் கருத்து. அவர் செய்தது இருவர் மேல் பதிவின் மூலமாக தாக்குதல்.

ராஜ நடராஜன் said...

வருண்!பின்னூட்டங்கள் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு பின்னூட்டம் போடலாமென்றிருந்தேன்.

நீங்க மது வேண்டாம் என்று சொல்வதற்கும் மத அடிப்படைவாதத்தில் மது வேண்டாம் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.உங்க பதிவின் தலைப்பின் படி மது வேண்டாம்,மதம் வேண்டும் என்கிற மனநிலையில் இருந்து கொண்டு பதிவு கருத்து சொல்வதால் பிரச்சினைகள் உருவாகின்றன.

நீங்க சொல்லும் All are not matured என்பது மதம் சார்ந்தும்,மதம் சாராமல் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

Anonymous said...

@ வருண் - // * நீங்க குடிச்சுட்டு ட்ரை பண்ணுவதுண்டா?? எங்க நாட்டில் கூடாதுனு சொல்றாக. நிதானம் இழந்துவிடுவார்களாம். //

குடித்துவிட்டு ட்ரவை பண்ணலாம் !!! எந்தளவு ஆல்கஹால் இருக்கு என்பது தான் பிரச்சனை !!!

ஹலால் பியர் குடித்துவிட்டு ட்ரவை பண்ணலாம் ! தாரளமாக !!! :)

//* நீங்க குடிச்சுட்டு வேலைக்குப் போவதுண்டா? நாளையிலே இருந்து செய்ங்க. நல்லா வேலை செய்யலாம்- புத்து கூர்மையுடன்! :)))//

நான் குடித்துவிட்டு வேலைக்கு போவதும் போகாததும் குறித்து நுமக்கு கவலை வேண்டாம். அதுக் குறித்து கவலைப்பட வேண்டியது !!!

ஒன்று நான் - மற்றொன்று எனது மேலதிகாரிகள் !!!

இதனைத் தான் நாமும் சொல்கின்றோம் .... !!!

இங்கு கவலைப்பட வேண்டியது பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வோரும் - நடத்துவோரும் தான் !!!

அறிவுரைகள் வேண்டுமானால் நட்பு ரீதியாக சொல்லலாம் --- கட்டளைகள் இடுவதோ !!! அல்லது ஒன்று நடக்காத நிலையிலும் நடந்துவிடும் / நடந்துவிட்டது எனக் கதைக் கட்டுவதும் மகாத் தவறான ஒன்றாகும் !!!

Anonymous said...

@ வருண் --- // Because YOUR BRAIN gets screwed up because of alcohol! That is why! //

I accept Brain may screwed up because of intake of too much alcohol !!!

First of all these Fundamentalist accepting that alcohol is not bad if it is halal ( that means uptill certain percentage ) --- The problem is fixing up which percentage is good and bad !!!

Second the Fundamentalist portraying drunkards as ill to the society, but we are saying not only drunkards the Fundamentalist is also same ill as drunkards to the society.

Thirdly the Fundamentalist trying to link the missing links with their imagination --- There are some drunkards in the Erode Conference --- There are two bloggers saying they will come to the Conference after boozing up that means every one gonna drink and party in the Conference --- Does it make sense ?

Lastly you are trying to boost up their claims by using words such as don't drink while Conference goes on ! All are not matured ... !!!

Do you think any person with common sense drink in the Conference hall with hundreds of people especially women are presented. Eventhouh some did like that, Do the organizers encourage them to drink amidst the conference ? I don't think so .... !!!

Also ! it is the issues between the organizers and the participants --- who the hell are other non-participants commenting on issues that never happened yet !!!

It is like one way thinking !!!

வருண் said...

***yadhumure yavarumkelir said...
//சுந்தர்னு ஒரு பதிவரை டாஸ்மாக் கூட்டிச் சென்று அவரோட உக்காந்து தண்ணியடிச்சுட்டு அவரை அடிச்ச (ரத்தம் வரும் அளவுக்கு) பதிவரும் சென்னைலதான் இருக்காரு.
வருண் நீங்கள் சொல்வது தனிப்பட்ட விரோதம். அது பதிவர் சந்திப்பு நடக்கும் பொது நடை பெறவில்லையே. ***

சப்போஸ், அந்த பதிவர்களுக்கு இடையே அடிதடி சண்டை பதிவர் சந்திப்பின்போது, அவர்கள் குடித்திருக்கும்போது நடந்து இருந்தால் என்ன சொல்லுவீங்கனு யோசிக்கிறேன். :)))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்.

///இங்கு கவலைப்பட வேண்டியது பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வோரும் - நடத்துவோரும் தான் !!! ///

-----அப்படியானால்.... 'மனிதாபிமானி' தளத்தில் எழுதிய எதிர்க்குரல்-ஆஷிக் அஹமத்... சென்னை பதிவர் மாநாட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவரா..? அண்ட் பதிவுக்கு முன்னரே இப்படி ஏதும் உத்திரவு இருந்ததா...? ஆதாரம் அறிய ஆவல்..!

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!பின்னூட்டங்கள் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு பின்னூட்டம் போடலாமென்றிருந்தேன்.

நீங்க மது வேண்டாம் என்று சொல்வதற்கும் மத அடிப்படைவாதத்தில் மது வேண்டாம் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.***

மதம் மனிதனை செப்பனிட உருவாக்கியதுதாங்க. மதுவை மதம் கெட்டதுனு போதிப்பது, மது உட்ல நலத்துக்கு தீங்கனானது என்பதுதான். மதம் மட்டுமல்ல விஞ்ஞானமும் அதைத்தான் சொல்லுது!

யாரு சொன்னாலும் மது என்பது நம்மை நிதனமிழக்கச் செய்யும். பதிவுலக சந்திப்பில் யாரும் நிதானம் இழக்கக்கூடாது அதை பாஸிடிவா எடுத்துக்கவும் செய்யலாம். :


***உங்க பதிவின் தலைப்பின் படி மது வேண்டாம்,மதம் வேண்டும் என்கிற மனநிலையில் இருந்து கொண்டு பதிவு கருத்து சொல்வதால் பிரச்சினைகள் உருவாகின்றன.***

அந்தப் பதிவில் மதமே இல்லைங்க! நீங்க வாசிச்சீங்களா???

அந்தப்பதிவில் மதமே எந்த இடத்திலும் கொண்டுவரப்படவில்லை!!!

/// பதிவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் முதல் சாமான்யன் வரை வாழ்க்கையில் தொலைந்து போனதற்கு குடி ஒரு நிச்சய காரணமாக இருக்கும். அதனை ஆதரிக்கவோ அல்லது எடுத்துக்காட்டாக நடந்து காட்டும் யாரும் மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கின்றனர்.

எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும். அதற்கு இந்த சென்னை பதிவர் சந்திப்பு துணை நிற்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.

இது போன்ற கீழ்த்தரமான முன்னுதாரணங்களில் இருந்து பதிவுலகம் மீண்டு ஆரோக்கியமான வழியில் செல்ல சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க முடியும்.
///

இதிலே எங்கே இருக்கு மதம்????

Unknown said...

//சப்போஸ், அந்த பதிவர்களுக்கு இடையே அடிதடி சண்டை பதிவர் சந்திப்பின்போது, அவர்கள் குடித்திருக்கும்போது நடந்து இருந்தால் என்ன சொல்லுவீங்கனு யோசிக்கிறேன். :)))
அதுதான் நடக்கவில்லையே! யூகமாக எதை வேண்டும் என்றாலும் கூறலாம்.
இந்த பிரச்சனையின் மையம் குறிப்பிட்டவர்களை சுட்டி காட்டி எழுதியது. அது தவறு இல்லையா? அதற்கு உங்கள் பதில் என்ன?

வருண் said...

***yadhumure yavarumkelir said...

//சப்போஸ், அந்த பதிவர்களுக்கு இடையே அடிதடி சண்டை பதிவர் சந்திப்பின்போது, அவர்கள் குடித்திருக்கும்போது நடந்து இருந்தால் என்ன சொல்லுவீங்கனு யோசிக்கிறேன். :)))
அதுதான் நடக்கவில்லையே! யூகமாக எதை வேண்டும் என்றாலும் கூறலாம்.***

அது நடந்தாலும், நீங்க அலகஹாலுக்கும் இதுக்கும் சம்மந்தம் இலலைனு சொல்லலாம். :))

***இந்த பிரச்சனையின் மையம் குறிப்பிட்டவர்களை சுட்டி காட்டி எழுதியது. அது தவறு இல்லையா? அதற்கு உங்கள் பதில் என்ன?
23 August 2012 2:42 PM ***

பின்னூட்டதிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் செய்ததுக்கு மேலெ 100 மடங்கு தனிநபர் தாக்குதல் செஞ்சுட்டாங்க!! அவர்களுக்கு அந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பறிக்கப் படவில்லை :)))

Anonymous said...

@ முஹம்மத் ஆஷிக் - // 'மனிதாபிமானி' தளத்தில் எழுதிய எதிர்க்குரல்-ஆஷிக் அஹமத்... சென்னை பதிவர் மாநாட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவரா..? அண்ட் பதிவுக்கு முன்னரே இப்படி ஏதும் உத்திரவு இருந்ததா...? ஆதாரம் அறிய ஆவல்..! //

பதிவர் மாநாட்டு வரக்கூடாது என யார் சொன்னது ? ஆனால் கலந்துக் கொள்ளப் போகின்றேன் என அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லையே !!!

முதலில் அவரை பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்கின்றேன் எனப் பெயரைப் பதியச் சொல்லுங்கள் --- அடுத்து பதிவர் சந்திப்பு Alcoholic or Non-Alcoholic என்பதை ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டு உறுதிச் செய்துக் கொள்ளச் சொல்லுங்கள் ..

அதை விட்டுவிட்டு ஈரோட்டில் குடித்தாக ! திருச்சியில் குடித்தாக ! சென்னையிலும் குடிப்பாக எனக் முழம் நீட்டுவதையும், புறணி அளப்பதையும் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க ... !!!

கலந்துக் கொள்ள மாட்டேன் --- இருந்தாலும் என்றால் ! அப்படி ரொம்ப சமூக அக்கறை இருக்குமானால் ! பாண்டிச்சேரியில் முதலில் மது ஒழிப்பை நடத்தச் செய்யுங்கள் ! அப்புறம் தமிழ்நாட்டுக்கு வரலாம் !!!

Unknown said...

//அது நடந்தாலும், நீங்க அலகஹாலுக்கும் இதுக்கும் சம்மந்தம் இலலைனு சொல்லலாம். :))
நானும் அது நடக்காவிட்டால்... என்று யூகமாக எதாவது சொல்லலாம். ஆனால் நடக்காத ஒன்றை பற்றி அப்படி சொல்வதினால் அர்த்தம் ஒன்றும் இல்லை.

//பின்னூட்டதிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் செய்ததுக்கு மேலெ 100 மடங்கு தனிநபர் தாக்குதல் செஞ்சுட்டாங்க!! அவர்களுக்கு அந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பறிக்கப் படவில்லை :)))
பல முறை அவர்கள் எழுதியதையும் screenshot யும் எடுக்க சொல்லி முடியாமல் போன பிறகே பதில் தாக்குதல் செய்தார்கள். குடியை பற்றி பொதுவாக எழுதட்டுமே? யார் வேண்டாம் என்று சொன்னது. யாரென்றே தெரியாதவர்கள் உங்களை பற்றி தவறாக எழுதினால் உங்களுக்கு கோபம் வராதா? குடிக்கு உதாரணமாக எங்களை நீங்கள் எழுதியது பிடிக்கவில்லை என்று அகற்ற கோரி முதலில் நாகரிகமாக வேண்டுகோள் விடுத்தார்களா இல்லையா? அதை ஏன் செய்ய முடியவில்லை உடனடியாக? இதற்கு மேல் உங்களுடன் இந்த விஷயத்தில் விவாதம் செய்வது வீணே. சென்று வருகிறேன்.

வருண் said...

***Also ! it is the issues between the organizers and the participants --- who the hell are other non-participants commenting on issues that never happened yet !!! ***

அப்படிப் பார்த்தால் நானும் நீங்களும் வட அமெரிக்காவிலே இருக்கோம். நம்ம எதுக்கு சென்னை பதிவர் சந்திப்படி வச்சு பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம்?

"பதிவர் சந்திப்பில் மது இருக்கக்கூடாது. அது நல்லதில்லை" னு யாரு வேணா சொல்லலாம்ங்க :)

வருண் said...

***yadhumure yavarumkelir said...

---
அதை ஏன் செய்ய முடியவில்லை உடனடியாக? இதற்கு மேல் உங்களுடன் இந்த விஷயத்தில் விவாதம் செய்வது வீணே. சென்று வருகிறேன்.**

இதெற்கெல்லாம் நான் எப்படிங்க பதில் சொல்றது??

சரி, போயிட்டு வாங்க! :)

நம்பள்கி said...

How about மாது?
இது சும்மானாசிக்கும். சண்டைக்கு வந்துடாதீங்க!

வருண் said...

இந்தியா போற போக்கிலே, எதுவும் பாஸ்பிள்ங்க. நம்மதான் ரொம்ப கன்செர்வேட்டிவா இருக்கோம்!!!

People shamelessly talking about going to bar and getting drunk. This was not the case in the India I knew! :)))

sathishsangkavi.blogspot.com said...

//ஈரோட்டில் நடந்த சந்திப்பில் பதிவர்கள் குடித்துவிட்டு கூட்டத்துக்கு வந்ததாக ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார்.///

எவன் சொன்னான் ஆதாரத்தோடு...

மீண்டும் சொல்கிறேன்... விருந்துக்கு அவர்கள் விருப்பம் போல் தண்ணி அடிச்சிடு தான் வந்தார்கள் ஏனெனில் அது விருந்து...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்....

////கலந்துக் கொள்ள மாட்டேன் --- இருந்தாலும் என்றால் !////

------------வழக்கம்போல சொல்லாததை சொன்னதாக பொய் கூறி குட்டையை குழப்பி குழப்பம் நிகழ்த்த ஆரம்பித்து விட்டீர்கள். இதே கருத்தை உங்கள் ஆதரவாளர்கள் ஐம்பது பின்னூட்டம் போட்டு கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்க முற்படலாம்..!

என்னைப்போல,
உங்களைப்போல... பலர் விடுமுறை-தூரம்-டிக்கட்-சூழல்-வேறு சொந்த பொறுப்பு போன்ற பல காரணங்களால் ஆர்வம் இருந்தும் வர இயலாமல் தான் இருக்கிறார்கள்..! அவரால் முடிந்தால் நிச்சயம் கலந்து கொள்வார் என்றே நான் நம்புகிறேன்..!

இதுவரை யாரும்... "வரமாட்டேன்" என்று சொன்னதாக எனக்கு தெரிந்து இல்லை..!

///அப்படி ரொம்ப சமூக அக்கறை இருக்குமானால் ! பாண்டிச்சேரியில் முதலில் மது ஒழிப்பை நடத்தச் செய்யுங்கள் ! அப்புறம் தமிழ்நாட்டுக்கு வரலாம் !!! ////----அவர் பதிவராக இருப்பதால்... பதிவர் மாநாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார்..! இதில் என்ன குற்றம்..?

ஆஷிக் அஹமத் பதிவில் வைத்த கோரிக்கைக்கு.. "நீ சந்திப்பில் கலந்து கொள்வாயா... மாட்டாயா..." என்ற எந்த கேள்வியும் கேட்காமல்... அங்கேயே தெளிவாக பதிவர் மாநாடு சார்பில் பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள்..! ஆதாரம் இதோ..!

மனிதாபிமானியில் இரண்டாம் & மூன்றாம் பின்னூட்டங்கள்..!

//பட்டிகாட்டான் Jey said...
அண்ணே நீங்க இங்க பகிர்ந்துகிட்ட கருத்து முற்றிலும் நியாயமானதே. தண்ணி அடித்துவிட்டு சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்று தீர்மானம் போட்டிருக்காங்க.

இந்த சந்திப்புல நீங்க சொல்ர எந்த தவறும் நடக்காமல் இருக்க எல்லாரும் சம்மதிச்சிருக்காங்க.

இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Tuesday, August 21, 2012 2:50:00 PM

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மதுமதி said...
நிச்சயம் தோழரே..நீங்கள் குறிப்பிட்ட எதுவும் நடைபெறாமல் பார்த்துக்க வேண்டியது அவசியம்.சென்னை சந்திப்பில் இதுபோல நடக்காது என்று நம்புவோம் என்பதை விட நடக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை சொல்லிக்கொள்கிறோம்..நன்றி..

“பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானத்தை நிறைவேற்ற முயல்வோம்..

Tuesday, August 21, 2012 2:52:00 PM//////


-----பின்னர் இதில் உங்களுக்கு என்ன வேலை வெட்டி வேண்டி கிடக்குங்கிறேன்..?

இதுக்கு அப்புறமும் குட்டையை குழப்பி 'தனி நபர் தாக்குதல்' என்ற மீன் பிடித்து கருவாட்டை சுட்டது... ஆனா மூனா... வீணா சூனா... நாவன்னா நக்கன்னா.... போன்றவர்கள்...!

இப்போது அவர்கள் தூக்கி போட்ட அந்த கருவாட்டு முள்ளை மீண்டும் நீங்க சுட்டு கடிச்சி சாப்பிட நீங்கள் தயார் என்றால்.... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை..! ஆளை விடுங்க...!

மனிதாபிமானியில் அப்படி கத்தியவர்கள்... ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்ட தங்கள் தளத்தில் பப்ளிக்காக இருக்கும் அந்த சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்
ஐ தூக்கவே இல்லை..! செமை காமடி..! :-)))))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@yadhumure yavarumkelir said...

////குடிக்கு உதாரணமாக எங்களை நீங்கள் எழுதியது பிடிக்கவில்லை என்று அகற்ற கோரி முதலில் நாகரிகமாக வேண்டுகோள் விடுத்தார்களா இல்லையா?////

-----அடா...அடா....அடா... என்னே... ஒரு நாகரிகமான கோரிக்கை அது..! என்னே ஒரு மர்ரியாதை...! என்னே ஒரு அருமையான எழுது நடை..! அந்த "நாகரிகமான முதல் 'கோரிக்கை'யை " (?!) இங்கே காபி பேஸ்ட் பண்ண முடியுமா உங்களால்...? 'இந்த வசைகளை எதற்கு இங்கே வந்து கொட்டனும்' என்று சகோ.வருண் உங்களை கோபித்துக்கொள்ள நேரிடலாம்..! அந்த அளவில்தான் உள்ளது அது...! ஹா...ஹா...ஹா...!

Anonymous said...

@ முஹம்மத் ஆஷிக் - // பதிவர் மாநாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார் //

ரொம்ப நல்ல விசயம் ... இப்போ யார் சொன்ன பதிவர் மாநாட்டில் மதுப் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ? அவராகவே கற்பனை செய்துக் கொண்டு ஒழிக்க முற்பட்டது நகைப்புக்குரியது.... !!!

அவர் பதிவை எழுத முன் மதுமதி, ராமாநுசம ஐயாவிடம் அணுகி மது அனுமதி உண்டா இல்லையா என ஒரு வார்த்தையைக் கேட்டு இருக்கலாமா இல்லையா !!!

கலியாண வீட்டில் விருந்து சாப்பிட வந்தவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு கலியாணத்தையே நிறுத்துங்க என்பது போல கூப்பாடு போட்டது யாருங்க ?!!!

//அங்கேயே தெளிவாக பதிவர் மாநாடு சார்பில் பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள்..!//

பதில் சொல்லிட்டாங்க இல்லையா ? இந்த ஆதாரத்தைக் கொஞ்சம் வருண் அவர்களுக்கும் சொல்லுங்கள் .... ஏனெனில் ஆஷிக் அஹ்மத் குழப்பிவிட்ட குட்டையில் அனைத்து மீன்களும் அவரது வலையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கின்றன !!!

//பின்னர் இதில் உங்களுக்கு என்ன வேலை வெட்டி வேண்டி கிடக்குங்கிறேன்..?//

வெட்டி வேலை இல்லைல அப்புறம் எதுக்கு இங்க வந்து வெட்டிக் கிழிக்கிறீங்க சகோ.... !!!

//அவர்கள் தூக்கி போட்ட அந்த கருவாட்டு முள்ளை மீண்டும் நீங்க சுட்டு கடிச்சி சாப்பிட நீங்கள் தயார் என்றால்.... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை..! ஆளை விடுங்க...!//

என்னைக்கோ எவனோ கடிச்சி போட்ட மீன் முள்ளையே மீன் என நம்பி கடித்துக் குதறிக் கொண்டிருக்கும் உங்களிடம் பேசுவதே வீண் வேலை !!!

//ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்ட தங்கள் தளத்தில் பப்ளிக்காக இருக்கும் அந்த சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்
ஐ தூக்கவே இல்லை//

அந்த சாதரண கமெண்ட்சை சர்ச்சையாக்கியது யாருங்கோ ??? அப்புறம் என்ன மண்ணுக்கு அவர்கள் தூக்க வேண்டும் ... நண்டுப் பிடிக்க கிளம்பியது அவர்களா நீங்களா ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ Iqbal Selvan....

// பதிவர் மாநாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார் //

அதாவது... 'யாரும் பதிவர் மாநாட்டில் குடி போதையில் இருக்க வேண்டாம்' என்கிறார் என்று சொல்ல வந்தேன்..! அதை நீங்கள் வழக்கம்போலவே திரிக்க முயற்சி செய்கிறீர்கள்..! பலே..!

//அவராகவே கற்பனை செய்துக் கொண்டு//---இப்படி நீங்கள் பொய் பேசிவிட கூடாது என்பதால் தான் சாம்பிளுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட் போட்டு இருந்தார்.

நான் இன்னுல் சில தளங்களில் இருந்து சென்னை பதிவில் தண்ணி அடிப்பது தொடர்பான மேலும் சிலரின் கமெண்ட்ஸ் மற்றும் பதிவு வரிகள் ஆகியவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட சொன்னேன்..! (பின்னூட்டத்தில்)

அப்படி செய்து இருந்தால் 'தனி (2) நபர் தாக்குதல்' என்றும் வந்து இருக்காது..! இன்னும் ஸ்ட்ராங்காகவும் இருந்திருக்கும்..!

உங்களை போல சிலர் இங்கே உட்காந்து மீன் முள்ளை போஸ்ட் மார்ட்டம் பண்ணிக்கொண்டும் இருந்திருக்க மாட்டார்கள்..!

:-)))

வருண் said...

இக்பால் செல்வன்: நீங்க சென்னையிலா இருக்கீங்க? நீங்க கனடால இருப்பதா நான் எப்படி நெனச்சேன்???

ஒண்ணுமே புரியமாட்டேங்கிதுப்பா!!!

வருண் said...

///எனது பெயர் இக்பால் செல்வன். வங்கக் கடலோரம், வெயில் நிழல் தேடும், மக்கள் அலை மோதும், சென்னை மாநகரோடு இரண்டறக் கலந்த நான். இன்று கடல் தாண்டி வாழ்கின்றேன்.///

இதை வச்சுத்தான் நெனச்சேனா? இல்லையே, கனடால இருக்கதா நீங்க சொன்னீங்களே??

பதிவர் சந்திப்புக்காக சென்னை போயிருக்கீங்களா??!!

Unknown said...

// அடா...அடா....அடா... என்னே... ஒரு நாகரிகமான கோரிக்கை அது..!
நக்கீரன் பல முறை அந்த screenshot ஐயும் அவர்களை பற்றி எழுதியதையும் எடுத்து விட்டால் கை குலுக்க தயாராக உள்ளதாக எழுதியதை நீங்கள் பார்க்கவில்லையா?

அந்த பதிவினால் உங்கள் குழுவிற்கும் அவர்கள் குழுவிற்கும் வெறுப்பு ஏற்பட்டதை தவிர வேறு எதை சாதிக்க முடிந்தது? இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் பொதுவாக மது பற்றி எழுதி இருந்தால் பலரிடம் இருந்து ஆதரவு கண்டிப்பாக கிடைத்து இருக்கும்.


//நான் இன்னுல் சில தளங்களில் இருந்து சென்னை பதிவில் தண்ணி அடிப்பது தொடர்பான மேலும் சிலரின் கமெண்ட்ஸ் மற்றும் பதிவு வரிகள் ஆகியவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட சொன்னேன்..! (பின்னூட்டத்தில்)
இது நடந்து இருந்தால் இன்னும் பலரின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு இருப்பீர்கள். அவ்வளவே.


நான் இவ்வாறு தான் எழுதுவேன், உன் வேலையை பார்த்து கொண்டு போ என்று நீங்கள் எண்ணினால் இதற்க்கு மேல் சொல்ல ஒன்றுமே இல்லை.

Anonymous said...


@ சங்கவி

ஹைதர் அலி பதிவில் ஒரு கருத்து. இங்கு ஒரு கருத்து. சங்கவி...ஒரு நிலைப்பாட்டில் தள்ளாடாமல் இருக்கவும்.தண்ணி அடிக்கலாம் வாங்க என்று நீங்கள் அப்போது எவரையும் அழைக்கவே இல்லையா?

Anonymous said...


வருண்..தங்கள் பதிவை முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

ப.கந்தசாமி said...

//* பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?//

ஒரு கேள்வி = அப்புறம் என்ன பதிவர் சந்திப்பு?

வருண் said...

**நீங்கள் பொதுவாக மது பற்றி எழுதி இருந்தால் பலரிடம் இருந்து ஆதரவு கண்டிப்பாக கிடைத்து இருக்கும்.***

யாரு சொன்னா???

எனக்கென்னவோ, மது சம்மந்தமாக "அருந்தலாமா? வேண்டாமா?" னு ஓட்டெடுத்தால் குடிகாரர்கள்தான் வெற்றியடைவார்கள்னு தோனுது.

பதிவர் சந்திப்பில் "மது வேணாம்" "மது எதுக்கு?"னு சொன்னாலே ஆளாளுக்கு திங்கிற சோத்துல மண் அள்ளிப் போட்டதுபோல குதிக்கிறாங்க.

வருண் said...

***! சிவகுமார் ! said...


@ சங்கவி

ஹைதர் அலி பதிவில் ஒரு கருத்து. இங்கு ஒரு கருத்து. சங்கவி...ஒரு நிலைப்பாட்டில் தள்ளாடாமல் இருக்கவும். தண்ணி அடிக்கலாம் வாங்க என்று நீங்கள் அப்போது எவரையும் அழைக்கவே இல்லையா?

23 August 2012 6:56 PM***

நானும் அவர் தடுமாறும் நிலைப்பாட்டை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ yadhumure yavarumkelir said...

அந்த ஸ்கிரீன் ஷாட் தான் அந்த பதிவுக்கே ஆதாரம்...!
அதை நீக்கி விட்டால் அந்த பதிவுக்கு அஸ்திவாரமே இருக்காது..!
அப்புறம் வந்து(ஆதாரம் இருக்கும்போதே இக்பால் செல்வன் தவறாக கேட்டது போல...)
"இதுக்கு எங்கே ஆதாரம்" என்று நீங்க சரியாக கேட்பீர்கள்..!
உங்களுக்கு அந்த லிங்க் அவர் கொடுத்தால்... அங்கே ஏற்கனவே முன்யோசனையாக அந்த கமெண்ட்ஸ் தூக்கி இருப்பீர்கள்..!
இப்போது வேறு வழி இல்லை..! ஏற்கனவே போட்டு வைத்து இருந்த ஸ்க்ரீன் ஷாட்டை அப்டேட் செய்யணும்.
புது பிரச்சினை ஸ்டார்ட் ஆகும். அல்லது...
அப்படி ஒன்று முன்னரே எடுத்து வைக்கவில்லை எனில்.... எல்லாரிடமும் பொய்யன் பட்டம் வாங்கிக்கொண்டு மனிதாபிமானி தன பதிவை நீக்கி மண்ணை கவ்வி இருப்பார்..!
ஹய்..ஹய்.... இது தான் நடக்கலை..!
அவர் ஸ்க்ரீன் ஷாட்டில் பெயரை அழித்தது மிகச்சிறந்த சாமர்த்தியம்...! (நல்லதொரு முன்மாதிரி) ஆனால்... இந்த யோசனை அவருக்கு வந்தது ரொம்ப லேட்..!
இதற்கிடையில், பின்னூட்டங்களில் வார்த்தை விட்ட பலர் அசிங்கப்பட்டு விட்டனர்..!
அந்த கமெண்ட்ஸ் எல்லாத்துக்கும் எனது வன்மையான கண்டனங்கள்..!

வருண் said...

****பழனி.கந்தசாமி said...

//* பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?//

ஒரு கேள்வி = அப்புறம் என்ன பதிவர் சந்திப்பு?

23 August 2012 7:01 PM***

நீங்க ஜோக்கா சீரியஸா சொல்றீங்கனு நம்புறேன்.

அது ஏன் சார், பதிவர்கள் கூட்டத்துலதான் போயி ஒருவர் தான் எவ்ளோ பெரிய "குடிமகன்"னு காட்டனும்??


~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///நீங்கள் பொதுவாக மது பற்றி எழுதி இருந்தால் பலரிடம் இருந்து ஆதரவு கண்டிப்பாக கிடைத்து இருக்கும்.///

----அபப்டியும் சொல்லி விடுவதற்கில்லை சகோ.

நேற்று பொதுவாக மது பற்றி ஒரு பதிவு போட்டேன்..! பொதுவாகவே தான் எழுதி இருந்தேன். அப்படியும் நாலு பேரு வந்து சம்பந்தமே இல்லாமல் மதக்கோணத்தில் தான் படிக்கின்றனர். வவ்வால் ன்னு வந்து ஒருத்தர் எனது குடும்ப வாழ்க்கையை எல்லாம் இழித்து கமென்ட் போடுறார்..!

இவ்வளவுக்கும் பக்கத்தில் பாடிகார்ட் திருவள்ளுவரை நிறுத்தி வைத்து இருந்தும்.. அவருக்கும் ஒன்றும் மதிப்பு இல்லை..! என்ன செய்ய சொல்லுங்க..?

:-(

Unknown said...

//People shamelessly talking about going to bar and getting drunk. This was not the case in the India I knew! :)))
//பதிவர் சந்திப்பில் "மது வேணாம்" "மது எதுக்கு?"னு சொன்னாலே ஆளாளுக்கு திங்கிற சோத்துல மண் அள்ளிப் போட்டதுபோல குதிக்கிறாங்க.
இந்த இரு கருத்துகளுடன் 100% ஒத்து போகிறேன் :)

அவ்வாறு குதிப்பவர்களை பார்த்தால் பரிதாப பட மட்டுமே முடிகிறது. குடியின் பிடியில் இருந்து தப்புவது கடினமே! அதை அவர்களும் உணர்ந்து இருப்பார்கள், ஆனால் விடுபட ஏதும் செய்யாவிட்டால் பின் விளைவு மிகவும் மோசமாக இருக்க வாய்பு அதிகம்.

Unknown said...

//நீங்க ஜோக்கா சீரியஸா சொல்றீங்கனு நம்புறேன்
Exactly what I thought

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

/// நான் இவ்வாறு தான் எழுதுவேன், உன் வேலையை பார்த்து கொண்டு போ என்று நீங்கள் எண்ணினால் ///
---அப்படி எண்ணவும் இல்லை..! சொல்லவும் இல்லை..!

பலமுறை தனது நிலைப்பட்டை தெளிவாக அவர் விளக்கியும், திசைதிருப்பல் ஜரூராக நடந்தது..!

மதவாதி பட்டம் கட்டி குழுவாக ஒட்டுமொத்த எல்லாரையும் ஒடுக்க பார்த்தார்கள்..!

சிபிஐ சுதந்திர / குடியரசு தினத்துக்கு முன்னர் சீர்குலைக்க குண்டு வெடிப்பு சதி என்று செய்தி வெளியிடுமே... அதுபோல... அடுத்த நாள்... "சென்னை சந்திப்பை சீர்குலைக்க சதி..." குண்டு... அது.. இது...ன்னு அப்பட்டமான அவதூறு பதிவு ஒன்று போட்டு இன்னும் செமையாக களை கட்டியது..!

நியாயமான முறையில்- அழகிய முறையில்- நாகரிகமாக நா அங்கே கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை..!

இவ்வளவும் நடந்து முடிந்து.... இன்னும் ஒற்றுமையாக அன்போடு நாம் உரையாடிக்கொண்டு இருக்கோம் என்றால்...

இந்த சகோ.வருண் பதிவு...

'மெட்ராஸ் பவன்' சகோ.சிவா பதிவு...

போன்றவைகளால்தான்...! இவர்களுக்கு மிக்க நன்றிகள்..!

Unknown said...

// என்ன செய்ய சொல்லுங்க..?
நிஜமாக இதற்கு முடிவு தெரியவில்லை. கட்டி புரண்டு சண்டை போட்டால் கூட பின்னால் சமாதானம் அடைந்து விடலாம். ஆனால் ஒரு வார்த்தை தவறாக தவறாக பேசினாலும் இரு புறமும் மீண்டும் சமாதானம் அடைவது கடினமே :(

வருண் said...

***வவ்வால் ன்னு வந்து ஒருத்தர் எனது குடும்ப வாழ்க்கையை எல்லாம் இழித்து கமென்ட் போடுறார்..!***

நீங்க நம்ம ஊர் சண்டியர்கள பார்த்து இருப்பீங்க இல்ல?

தண்ணியப் போட்டுட்டு, வாதம் முத்தும்போது அப்பா, அம்மா வை இழுப்பானுக,

அப்புறம் உங்க சாதி கீழ்சாதியா இருந்தா அதை இழுப்பானுக..

அது மாதிரித்தான் இங்கேயும்.. மதுவை வேணாம்னா உங்க மதத்தை இழுப்பானுக..

எனிவே, "மேற்படியார்" இந்தத் தளத்தை பொறுத்தவரையில் "தீண்டத்தகாதவர்". உள்ளவே நொழைய அனுமதி கெடையாது!

sathishsangkavi.blogspot.com said...

//நானும் அவர் தடுமாறும் நிலைப்பாட்டை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். //


நான் எப்போதும் தடுமாறவில்லை வருண்... எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்...

உங்கள் இந்த பதிவை படிச்சு எத்தனை பேர் திருந்தி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க??

இந்த பதிவால் ஹிட் எண்ணிக்கை கூடுமே தவிர வேறு பிரயோசனம் இல்லை...

இந்த பதிவிற்கு நேரத்தை செலவிடுவதை விட்டுட்டு களத்தில் இறங்கி வேலை செய்யுங்க ஒருத்தரையாவது குடியை மறக்க வைக்கலாம்....

வருண் said...

***சங்கவி said...

//நானும் அவர் தடுமாறும் நிலைப்பாட்டை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். //


நான் எப்போதும் தடுமாறவில்லை வருண்... எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்...

உங்கள் இந்த பதிவை படிச்சு எத்தனை பேர் திருந்தி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க??

இந்த பதிவால் ஹிட் எண்ணிக்கை கூடுமே தவிர வேறு பிரயோசனம் இல்லை...

இந்த பதிவிற்கு நேரத்தை செலவிடுவதை விட்டுட்டு களத்தில் இறங்கி வேலை செய்யுங்க ஒருத்தரையாவது குடியை மறக்க வைக்கலாம்....

23 August 2012 9:26 PM***

நான் யாரையும் திருத்த முயலவில்லைங்க. பதிவர் சந்திப்பிலே, பதிவர் ச்ந்திப்பு நடக்கும் இடத்தில் நடக்கும் பார்ட்டியிலோ குடியை தவிர்க்கனும் என்கிறேன், அவ்வளவுதான்.

மற்றபடி அது ஒருவருடைய தனிப்பட்ட பிரச்சினை.

சிராஜ் said...

சங்கவி சார்,

//
உங்கள் இந்த பதிவை படிச்சு எத்தனை பேர் திருந்தி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க??//

திருந்துறது திருந்தாதது நம்ம கைல இல்ல... பட் சொல்றது நம்ம கடமை இல்லையா??? மது ஒரு சமூக அவலம்.. ஒவ்வொரு நாடும் அத ஒழிக்கணும்னு போராடிகிட்டு இருக்கு...

இந்த நிலையில் பதிவர்களில் சிலர்(பலர் இல்ல) குடியை ஆதரித்து பேசுவது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வதற்க்கு சமம்...

சிராஜ் said...

என்னங்க எல்லாரும் சர்வ சாதாரணமா அங்க குடிக்கலாம், இங்க குடிக்கலாம்னு பேசிக்கிறிங்க????? குடிக்க கூடாதுங்க...

உலகத்தில் நடக்கும் பாதி சாலை விபத்துக்கள் மதுவினால் ஏற்படுகிறது...குடிச்சிட்டு சாலை ஓரத்தில் படுத்து கிடந்த எத்தனை பேர காலி பண்ணி இருக்கானுக..என்னமோ பெரிசா எல்லாரும் மதுவுக்கு வக்காலத்து வாங்குறீங்க???

நீ மது குடிச்சிட்டு நீ போய் சாகு.. ஏன் அடுத்தவன சாகடிக்கணும்???

டாஸ்மாக்ல மது குடிக்கிறீங்க.. எப்படி வீட்டுக்கு போவீங்க.. குடிச்வந்தானே வாகனம் ஓட்டனும்?? அது தப்பில்லையா?? சமூகத்துக்கு பண்ற தீங்கு இல்லையா????

மது குடிப்பது தனி மனித உரிமைனு சொன்னா.. நீங்க வீட்ல வாங்கி வச்சுதான் குடிக்கணும்.. பப்ளிகல குடிச்சிட்டு அடுத்தவனுக்கு நியூசன்ஸ் கொடுத்து, வாகனம் ஓட்டைல அது பொதுவில் வந்திடுது.. அப்புறம் என்ன மண்ணாங்கட்டி தனி மனித உரிமை???

சிராஜ் said...

மனசாட்சி இருந்தா, நேரமையாளர்களாக இருந்தால்..

நான் குடிச்சிட்டு வாகனம் ஓட்டியதில்லைனு சொல்ற ஆளூங்க மட்டும் இங்க பேசுங்க..

நீங்க சொல்றத நம்பி நான் விவாதம் பண்றேன்... உங்க மேல நம்பிக்கை இருக்கு...

நீங்க குடிக்கிறது நால குடிக்கு வக்காலத்து வாங்கினா... லஞ்சம், கொலை, ஊழல் மற்றும் அனைத்து தீமைகள எதிர்த்து எந்த மூஞ்சிய வச்சிகிட்டு நம்ம நால பதிவு போட முடியும்??? போட்றீங்க????

இது எல்லாத்தையும் செய்றவனும் உங்கல மாதிரி உப்பு சப்பு இல்லாத ஒரு ஓட்ட லாஜிக் வச்சி இருப்பானுங்க சகோஸ்....

மது தீமைகளின் ஆணி வேர்... இக்பால் செல்வன் சொல்றதால மாறிடாது... பல குடும்பங்கள் இது நால சீரழிஞ்சு சின்ன பின்னமானது தெரிஞ்சும் இப்படி பேச எப்படி தான் மனசு வருதோ??? என்ன சமூக அக்கறையோ?????

மதுவ ஆதரிக்கும் யாருக்கும் வேறு எத பற்றியும் பேச தகுதி இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து..இதை நான் தொடர்ந்து வழியுறுத்தப்போகிறேன் பின்னூட்டங்கள் வாயிலாக...

நேர்மையாம்... பொடலங்கா....

சிராஜ் said...

// உங்கள் இந்த பதிவை படிச்சு எத்தனை பேர் திருந்தி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?? ///

நம்ம ஊழல பத்தி பேசி எத்தன அரசியல் வாதி திருந்தி இருக்காங்க?? ஏழ்மைய பத்தி பேசி ஏழ்மை ஒழிஞ்சிடுச்சா??? லஞ்சம் பத்தி பதிவு போட்டு லஞ்சம் ஒழிஞ்சிடுச்சா???

எல்லாத்தையும் நிறுத்திடுவமா??? ஒரு ஆள் ஒரு பதிவு கூட முடியாது....

கோவி.கண்ணன் said...

அவதூறு பதிவு மூனா செந்திலு பெயரைக் குறிப்பிட்டு ஸ்க்ரீன் ஷாட்டுடன் எழுதி இருந்ததால் அவரும் அதைப் பற்றிப் பேசவில்லை, நாங்க தண்ணீ அடிச்சுட்டு போகமாட்டோம் என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் நல்லதுக்கு தான் சொன்னோம் என்று திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி திருக்குறள் விளக்கமெல்லாம் எழுதி வருகிறார்கள்.
:)

நடக்காத ஒன்றை நடக்கலாம் என்று ஊகம் கிளப்பி அதை தற்காத்து வாதிடுவது பிரச்சனையைக் கிளப்பி குளிர் காய்வதைத் தவிர வேறு என்ன ?

கோவையில் சந்திப்பு நடந்தால் குண்டுவெடிக்கலாம், உயிர் முக்கியம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொன்னால் அது எச்சரிக்கை இல்லை, அபத்தம். அவதூறு. அது போல் இவர்கள் செய்தவை அபத்தமே.

இதுக்கு நீங்களும் சப்பைக்கட்டுகிறீர்கள்.

இவர்களெல்லாம் திடிரென்று திருக்குறள் பாடம் எடுப்பது கூட வேடிக்கையாகத்தான் இருக்கிறது, திருக்குறளில் கள்ளுண்ணாமைத் தவிர்த்து புலால் பற்றிய கடுமையான எச்சரிக்கைக்கள் கூட உள்ளது, அதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கேட்க இவர்களால் முடியுமா ?


பி.ஏ.ஷேக் தாவூத் said...

கோவியார் வழக்கம் போல திரித்து விட ஆரம்பித்து விட்டார். ஆஷிக் அஹமத் எழுதியது அவதூறு பதிவாம். அதை நிருபிக்க முடியுமா இவரால்? ஆனால் வழக்கம் போல தன்னோட தமிழ்மணம் குட்டி நாட்டாமை இடம் பறிபோனதை வைத்து மகுடம் மகுடம் என்று புலம்பி தள்ளி ஒரு பதிவு வேறு போட்ருக்கார்.(இந்த மாதிரி நெறைய பதிவு போட்டு போட்டு அவர் சூசகமா தமிழ்மணத்திற்கு கோரிக்கை தான் வச்சு பார்க்கிறார். ஆனால் இவரை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள் பதிவுலகுத்துல. ஆனால் பாருங்க நான் மதிச்சு இவருக்கு பதில் கொடுத்திருக்கேன். பதிவுலகுத்துல தமிழ்மணம் மகுடம் பற்றி அதிகம் பேசி பேசி ஓய்ஞ்சு போனது நம்ம கோவியார் மட்டும் தான். அதனால் தான் இதையும் மகுடம் விசயத்தோட பொருத்தி பார்க்கிறார்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சிராஜ் அண்ணே நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்ருக்கிங்க. தண்ணி அடிப்பது தனி மனித உரிமையாம். மண்ணாங்கட்டி உரிமை. தண்ணி அடிச்சுட்டு டிரைவ் பண்ணாதவர்கள் வந்து பேசணும்னு ஒரு கண்டிசன் வச்சீங்க பாருங்க. யார் வந்து பேசறாங்கன்னு பார்ப்போம். என்னோட அக்கா கணவன் தண்ணி அடிக்க ஆரம்பிச்சான். சொல்லி பார்த்தோம் திருந்தலை. போடா சனியனே என்று டைவர்சுக்கு அக்கா அப்ளை பண்ணிட்டாங்க.

சோத்துல மண்ணை அள்ளிப் போட்ட மாதிரியே தண்ணி அடிக்காதேனே சொன்னா குதிக்கிறதை பார்த்தா அருவருப்பா இருக்கு.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வேற ஒருத்தான் பொண்டாட்டியை சைட் அடிப்பது கூட (அவளை வன்புணர்ச்சி செய்யாதவரை ) இவங்களை பொருத்தவரைக்கும் தப்பில்லை போல. ஏன்னா அது தனிமனித உரிமை இல்லையா பாருங்க. ஆனால் பிறர் மனை நோக்காமை பேராண்மை என்று வள்ளுவர் (கோவியார் கவனிக்க) சொல்லியிருக்காராம். போய் திருக்குறளை மாற்ற சொல்லி எல்லா பள்ளிக்கூடத்து வாசல்லயும் ஒப்பாரி வைக்க சொல்லுங்க இவங்களை.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சாக்கடையில் விழுந்து புரண்டு எழுந்து வரும் பன்னியை பார்த்து அது வரும் திசையில் செல்லாமல் ஓரமாக செல்வது அந்த பன்னியை கண்டு பயந்தல்ல. மாறாக அந்த கழிவுகள் நம் மீது பட்டு விடுமே என்ற முன்னெச்சரிக்கை தான். இதையே தம் வெற்றியாக இந்த சாக்கடை பன்னிகள் (அசிங்கமாக பின்னூட்டமிட்ட ஒரு சிலரை தான் சொல்கிறேன். எல்லோரையும் இல்லை. நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தை இழிவாக பேசி கருத்திட்ட வவ்வால் என்ற பண்ணியும் இதில் அடக்கம்) கருதினால் அந்த பண்ணிகளை சாக்கடையில் இறங்கி அடிக்க வேண்டிய நிலை தான் வரும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அப்போது சும்மா கருத்து போடுற (அவன் என் குடும்பத்தை திட்டறதும் பதிலுக்கு நான் அவன் குடுமபத்தை திட்டற காமெடியெல்லாம் நடக்காது.) விளையாட்டெல்லாம் இருக்காது. வீடு புகுந்து அந்த பன்னியை அடிச்சா தான் திருந்தும் என்றால் அதற்கும் தயார் தான்.

sathishsangkavi.blogspot.com said...

//நான் குடிச்சிட்டு வாகனம் ஓட்டியதில்லைனு சொல்ற ஆளூங்க மட்டும் இங்க பேசுங்க.. //

வாழ்வில் இதுவரை தண்ணி அடிச்சிட்டு வாகனம் ஓட்டியது இல்லீங்க...

எப்ப தண்ணி அடிச்சாலும் வாடகை ஆட்டோ அல்லது டிரைவர் வைத்து தான் செல்வோம்....

பதிவர் சந்திப்பில் சந்திப்பு நடக்கும் இடத்தில் நடக்கும் போது குடிப்போம் என்று யார் சொன்னாங்கன்னு சொல்ல முடியுமா???

ஒரு பதிவ போட்டு அதபிரச்சனை ஆக்கி நல்ல குடிநாச்சி போல பின்னூட்டமிடுகின்றீர்கள்...

sathishsangkavi.blogspot.com said...

..நான் யாரையும் திருத்த முயலவில்லைங்க. பதிவர் சந்திப்பிலே, பதிவர் ச்ந்திப்பு நடக்கும் இடத்தில் நடக்கும் பார்ட்டியிலோ குடியை தவிர்க்கனும் என்கிறேன், அவ்வளவுதான்....

பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்தில் குடிப்பேன் என்று யாருங்க சொன்னா...

sathishsangkavi.blogspot.com said...

...சிராஜ் said...

// உங்கள் இந்த பதிவை படிச்சு எத்தனை பேர் திருந்தி இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?? ///

நம்ம ஊழல பத்தி பேசி எத்தன அரசியல் வாதி திருந்தி இருக்காங்க?? ஏழ்மைய பத்தி பேசி ஏழ்மை ஒழிஞ்சிடுச்சா??? லஞ்சம் பத்தி பதிவு போட்டு லஞ்சம் ஒழிஞ்சிடுச்சா???

எல்லாத்தையும் நிறுத்திடுவமா??? ஒரு ஆள் ஒரு பதிவு கூட முடியாது.......

தண்ணி அடிப்படிப்பதை பற்றி நீங்க பதிவிட்டால் இனி யாரும் பதிவிடக்கூடாதா?? இல்ல தண்ணி அடிக்ககூடாதா??

இந்த பதிவுலகில் அனைவரும் படித்தவர்கள் சிராஜ் அவர்களுக்கு தெரியும் தண்ணி எவ்வளவு அடிக்க வேண்டும், அதன் விளைவுகள் எல்லாம் தெரியும் ஆனாலும் தண்ணி அடிக்காமல் இருக்கமாட்டார்கள்.. அதனால் தண்ணி அடிப்பது தவறு என்று பதிவ போடுங்க யாரும் உங்களை குத்தம் சொல்லப்போவதில்லை...

நல்ல பதிவு என்று தான் பாராட்டுவோம்... உங்களால் உங்க நண்பரை கூட தண்ணி அடிக்க வேண்டாம் என்று திருத்த முடியாது... ஆனால் என் 6 நண்பர்களை நான் திருத்தி இருக்கிறேன்... ஈரோடு வந்தால் சொல்லுங்க அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுடத்துகிறேன்...

sathishsangkavi.blogspot.com said...

மது, மாது, சூது இது இருப்பவனின் குடும்பம் விளங்காது என்று எங்க கிராமத்தில் சொலவடை கூட நிறைய உண்டு...

ஆனால் இன்று அரசாங்கம் தான் மதுவை விற்கிறது பொது நலன் கருதி தானே பதிவு போடுறீங்க... அரசாங்கத்தை எதிர்த்து உங்களால் போரட முடியுமா?? பதிவு மட்டும் தான் எழுத முடியும்...

sathishsangkavi.blogspot.com said...

குடியைப்பற்றி பதிவு எழுதுவதற்கு பதில் டாக்குமென்ட்ரி படம் எடுங்கள் அதை வெளியீடுங்கள்...

எல்லா திரை அரங்குகளிலும் படத்திற்கு முன் ஓட விடலாம்...

பதிவு எழுதி நீங்களும் நானும் கருத்து பறிமாற்றம் தான் செய்துக்கனும்...

நீங்க குடிக்க கூடாதும்பீங்க... இங்க அப்படித்தான் குடிப்போம் என்பார்கள் ... பேச்சு போய்கிட்டு தான் இருக்கும்... முடிவுக்கு வராது...

ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்று யோசிச்சு பதிவில் அறிவுரை கூறுங்க...

sathishsangkavi.blogspot.com said...

குடியைப்பற்றி பதிவு எழுதுவதற்கு பதில் டாக்குமென்ட்ரி படம் எடுங்கள் அதை வெளியீடுங்கள்...

எல்லா திரை அரங்குகளிலும் படத்திற்கு முன் ஓட விடலாம்...

பதிவு எழுதி நீங்களும் நானும் கருத்து பறிமாற்றம் தான் செய்துக்கனும்...

நீங்க குடிக்க கூடாதும்பீங்க... இங்க அப்படித்தான் குடிப்போம் என்பார்கள் ... பேச்சு போய்கிட்டு தான் இருக்கும்... முடிவுக்கு வராது...

ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்று யோசிச்சு பதிவில் அறிவுரை கூறுங்க...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி ஓட விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சேர்ந்தவன் நான். எனவே எனக்கு குடியை எதிர்க்க உரிமை இருக்கிறதல்லவா சங்கவி? சென்னையில் கூட சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வச்சிருக்கோம். இது போராட்டம் நடந்த சில இடங்களின் தகவல்கள்
http://www.tntj.net/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D

NKS.ஹாஜா மைதீன் said...

நீங்கள் சொல்ல வந்ததை அருமையாய் பதிவின் தலைப்பிலே சொல்லிவிட்டீர்கள்....நன்றி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

////நடக்காத ஒன்றை நடக்கலாம் என்று ஊகம் கிளப்பி அதை தற்காத்து வாதிடுவது பிரச்சனையைக் கிளப்பி குளிர் காய்வதைத் தவிர வேறு என்ன ?////


----இதை கோவி கண்ணன் என்பவர் சொல்வது வேடிக்கை..! பெருநாள் அன்று குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்றே முஸ்லிம் விரோதிகளால் உருவாக்கப்பட்டது அப்பட்டமான மருதாணி வதந்தி. இதற்கு முன்னணி டிவி ஊடகங்கள் கூட உடந்தை.

இதை முறியடிக்க எங்கே - எப்படி என்ன எல்லாம் முடியுமோ.... அங்கே அப்படி அவ்வாறெல்லாம் இஸ்லாமிய அமைப்புகள் நொடி அசராமல் உழைத்தார்கள்..!

உண்மை இப்படி இருக்க... இந்த வதந்தியை கிளப்பியது முஸ்லிம்கள் என்று அப்பட்டமாக பொய் சொன்ன அதே வாயால்... இங்கே இதை பேச இவருக்கு தார்மீக உரிமை இல்லை..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சிராஜ்....

//மது குடிப்பது தனி மனித உரிமைனு சொன்னா.. நீங்க வீட்ல வாங்கி வச்சுதான் குடிக்கணும்..//

---இதுவும் மற்ற குடும்ப உறுப்பினர்களது தனி மனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல ஆபத்தானது எனபதையும் நேற்றைய எனது பதிவில் சொல்லி இருக்கிறேன் சகோ..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///இவர்களெல்லாம் திடிரென்று திருக்குறள் பாடம் எடுப்பது கூட வேடிக்கையாகத்தான் இருக்கிறது, திருக்குறளில் கள்ளுண்ணாமைத் தவிர்த்து புலால் பற்றிய கடுமையான எச்சரிக்கைக்கள் கூட உள்ளது///-----திடீரென்று எல்லாம் இல்லை..! இதற்கு முன்னரும் சொல்லி இருக்கிறேன்..!

பதிவுலகில் எந்த ஒரு முஸ்லிம் பதிவரும் குடிக்கு வக்காலத்து வாங்கி எழுதவில்லை..!

உண்மை இப்படி இருக்க... குர்ஆன்-நபி மொழி எல்லாம் பதிவுக்கு தேவைப்படவில்லை. குடி ஆதரவாளர்கள் தங்கள் பள்ளியில் அவர்கள் படித்த அறநூலின் கருத்துக்களே போதுமானதாக முடிவு செய்து அதை பதிவில் வைத்தேன்.

அதே கருத்துக்களை திருக்குறள் மேற்கோள் இலலாமல் நான் சொந்தமாக சொல்லி இருந்தால் என்னை சும்மா விட்டு இருக்க மாட்டீர்கள்..! ஏகப்பட்ட எதிர்பதிவு போட்டுத்தொலைத்து இருப்பீர்கள்..!

குர்ஆன் சொன்னதை போட்டு இருந்தால்.. மீண்டும் மதவாதி முத்திரை குத்தி இருப்பீர்கள்..!

அப்பப்பா... எழுத்துரிமைக்கு எவ்வளவு தடைகள்..!

நாய் நக்ஸ் said...

ஹா...ஹா...ஹா...
சும்மா சிரித்து பார்த்தேன்...
மற்றபடி வருண்...
அவசியமான பதிவு...

தலைப்பில் கடைசி இரண்டு வார்த்தைகள் கண்டனத்துக்குரியது....

நம்ம சகோக்கள்...அப்படி எல்லாமா நடக்கிறார்கள்...???

என்ன வருண்...இது...???
தலைப்பை உடனடியாக மாற்றவும்...

இது உண்மையான மனப்பூர்வமான கருத்து...
:))))))))))

வருண் said...

***கோவி.கண்ணன் said...

அவதூறு பதிவு மூனா செந்திலு பெயரைக் குறிப்பிட்டு ஸ்க்ரீன் ஷாட்டுடன் எழுதி இருந்ததால் அவரும் அதைப் பற்றிப் பேசவில்லை, நாங்க தண்ணீ அடிச்சுட்டு போகமாட்டோம் என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் நல்லதுக்கு தான் சொன்னோம் என்று திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி திருக்குறள் விளக்கமெல்லாம் எழுதி வருகிறார்கள்.
:)

நடக்காத ஒன்றை நடக்கலாம் என்று ஊகம் கிளப்பி அதை தற்காத்து வாதிடுவது பிரச்சனையைக் கிளப்பி குளிர் காய்வதைத் தவிர வேறு என்ன ?

கோவையில் சந்திப்பு நடந்தால் குண்டுவெடிக்கலாம், உயிர் முக்கியம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொன்னால் அது எச்சரிக்கை இல்லை, அபத்தம். அவதூறு. அது போல் இவர்கள் செய்தவை அபத்தமே.

இதுக்கு நீங்களும் சப்பைக்கட்டுகிறீர்கள்.

இவர்களெல்லாம் திடிரென்று திருக்குறள் பாடம் எடுப்பது கூட வேடிக்கையாகத்தான் இருக்கிறது, திருக்குறளில் கள்ளுண்ணாமைத் தவிர்த்து புலால் பற்றிய கடுமையான எச்சரிக்கைக்கள் கூட உள்ளது, அதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கேட்க இவர்களால் முடியுமா ?


23 August 2012 10:57 PM ***

நீங்க சொல்ற "அவதூறு" இருவர் உலகறிய பதிவுலகில் பேசியது. அவங்களுடைய ப்ரைவேட் இ-மெயில் அல்லது சாட் கெடையாது. முதலில் அதை தெரிந்து கொள்ளவும்.

அப்படி குடிப்பதெல்லாம் அசிங்கம்னு நெனச்சா அவன்க அதை ப்ரைவேட்டாக பேசி இருக்கனும்.

அந்தப்பதிவில் மதம் பற்றி எதுவுமே போதிக்கப்படவில்லை. மது கூட்டத்தில் வரக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கைப் பதிவு.

"வருமுன் காவாதான் வாழக்கை எரிமுன் வைத்தூறு போலக் கெடும்."

எனக்கு திருக்குறள் சொல்ல தகுதி இல்லைனு சொன்னாலும் சொல்லுவீங்க. அதுக்கெல்லாம் தகுதி, நாத்திகம் பேசும் ஆண்மீகவாதியாக இருக்கனும் இல்லையா??

மது பற்றி எழுதியிருக்கிற பதிவில் மதச்சாயம் பூசும், நீங்களும், நடராஜனும்தான் (அவர் பின்னூட்டத்தைப் பார்க்கவும்) உயர்ந்தமனிதர்கள்னு நீங்க ரெண்டுபேரும் ஒருவருக்கொருவர் சான்றிதழ் வழங்கிக்க வேண்டியதுதான்.

நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம். அதற்கு "நாத்திகவாதி வேசம்போடும் ஆண்மீகவாதிகள்" மட்டும்தான் கேட்க தகுதியுள்ளவர்கள்னு இருக்கனும்னு அவசியமில்ல!

Unknown said...

இது முதல்முறை அல்ல...!ஆருர்மூனா மகுடம் வரும் போதெல்லாம் திடீரென்று மழையில் முளைத்த காளான் போல ஒரு பிளாக் ஓப்பன் ஆகும் ஓட்டுப்போட்டவர்களின் பெயரைப் போட்டு இந்த பதிவெல்லாம் மகுடம் வர தகுதியானதா..?இதற்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் என்னென்னு சொல்வது என்பது மாதிரியான பதிவு வரும். அப்போதெல்லாம் ஆ.மூ. மற்ற நண்பர்கள் அமைதி காத்தோம்.

மகுடம் வரும் மதப்பிரசங்களை எத்தனை பேர் படிக்கின்றார்கள்..? கள்ள ஓட்டு மூலமே மகுடம் வருவது எல்லாருக்கும் தெரியும் ஆனால் இந்த மகுடத்தில் வந்து ஒன்னும் சாதிக்க போவதில்லை என்றே விட்டு விடுகிறார்கள்.

மனிதாபிமானியின் பதிவும் முற்றிலும் ஆருர் மூனாவின் பதிவு மகுடத்திற்கு வருவதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலே..!என்பதை இங்கு ஆனித்தரமாக கூற முடியும்!இனி விட்டு வைக்க முடியாது என்று ஆருர் மூனா பொங்கி விட்டார். ஆ.மூனாவின் முதல் கமெண்டிலேயே சரி நண்பா உங்களைப் பற்றிய ஸ்கிரீன் ஷாட்டை நீக்கி விடுகிறேன் என்று நீக்கிவிட்டுருந்தால் இந்த பிரச்சனையே முடிந்திருக்கும்.

மகுடத்தில் அடிக்கடி வரும் ஆ.மூ.வின் பெயரை கெடுக்க வேண்டும் என்கிற காழ்ப்புணர்ச்சியே அந்த பதிவு எப்பொழுதம் மூடிக்கிடக்கும் கருத்துப்பெட்டி இந்த பதிவுக்கு அனானிக்கெல்லாம் திறந்து விட்டதின் மர்மம் புரியாத முட்டாள் இல்லை அனைத்து பதிவர்களும்.

இதற்கு மது ஒழிப்பு என்கின்ற போர்வையை போர்த்திக் கொண்டீர்கள் ஸ்கிரீன்ஷாட் என்கின்ற ஓட்டையை மறந்து விட்டீர்கள்.வீம்புக்கென்றே இருந்தீர்கள் சேற்றை வாரி இறைத்ததை ஏற்றுக்கொண்டீர்கள்.
தீதும் நன்றும் பிறர்தரவாரா...

Unknown said...

வருன் நல்ல பதிவு! பதிவர் சந்திப்புக்கு மட்டுமல்ல...பதிவுலகிற்கே சாபமான மதம், மது, பெண்ணாசை,பொறாமை இவையனைத்தும் நீக்கப்படவேண்டும்.

சில நடுநிலைகள் பதிவுலகில் நடப்பது புரியாமல் சொம்பை ஒன் சைடாவே அடிக்கிறாங்க...!காது கிழியுது...!இதுக்கு மேலையும் ஒன்சைடுக்கு புரியலைன்னா...!ஒன்னும் பண்ணமுடியாது சிவ..சிவ....!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வீடு சுரேஸ்குமார் said...

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது உங்களுக்கெல்லாம் இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.
:-(((

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///ஆருர்மூனா மகுடம் வரும் போதெல்லாம் திடீரென்று மழையில் முளைத்த காளான் போல ஒரு பிளாக் ஓப்பன் ஆகும் ஓட்டுப்போட்டவர்களின் பெயரைப் போட்டு இந்த பதிவெல்லாம் மகுடம் வர தகுதியானதா..?இதற்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் என்னென்னு சொல்வது என்பது மாதிரியான பதிவு வரும். ///----ஆதாரமாக் ஒரு ரெண்டு மூணு லிங்க் தந்தா யாரேனும் நீங்கள் சொல்வதை உண்மையோ என்று நம்பக்கூடும்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///மகுடம் வரும் மதப்பிரசங்களை எத்தனை பேர் படிக்கின்றார்கள்..? கள்ள ஓட்டு மூலமே மகுடம் வருவது எல்லாருக்கும் தெரியும் ///----பொய்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///மனிதாபிமானியின் பதிவும் முற்றிலும் ஆருர் மூனாவின் பதிவு மகுடத்திற்கு வருவதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலே..!என்பதை இங்கு ஆனித்தரமாக கூற முடியும்!////---ஆணியும் தரமாக இல்லை..! எனவே... தரமற்ற பொய்..!

Unknown said...

பொய் சொல்லனும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது அதனால எனக்கு கிடைக்க போவது எதுவும் கிடையாது..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//மகுடத்தில் அடிக்கடி வரும் ஆ.மூ.வின் பெயரை கெடுக்க வேண்டும் என்கிற காழ்ப்புணர்ச்சியே அந்த பதிவு எப்பொழுதம் மூடிக்கிடக்கும் கருத்துப்பெட்டி இந்த பதிவுக்கு அனானிக்கெல்லாம் திறந்து விட்டதின் மர்மம் புரியாத முட்டாள் இல்லை அனைத்து பதிவர்களும்.
//------பொய்..! இப்போதுதான் முதன்முறை மூடப்பட்டுள்ளது...!

Unknown said...

மழையில் முளைத்த காளான்கள் ஒரிரண்டு நாட்களில் காணமல் போய்விடுகின்றது...!இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கின்றேன்........

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///இதற்கு மது ஒழிப்பு என்கின்ற போர்வையை போர்த்திக் கொண்டீர்கள் ஸ்கிரீன்ஷாட் என்கின்ற ஓட்டையை மறந்து விட்டீர்கள்.வீம்புக்கென்றே இருந்தீர்கள் சேற்றை வாரி இறைத்ததை ஏற்றுக்கொண்டீர்கள்.///------படு கேவலமான் பொய்..!

உங்கள் பின்னூட்டங்களுக்காக... மற்றும் 'மாநாட்டை குலைக்க கருங்காலிகள் சதி' என்ற அவதூறு பதிவுக்காக... உங்களிடம் இருந்து மன்னிப்பை கூட எதிர்பார்க்காமல் இருப்பதுதான் இப்போது பெரிய தவறு..!

அடுத்து, சென்னை பதிவர் மாநாடு நடத்துவோர்... "குடிகாரர்களுக்கு இவர்களுக்கு சார்பாக கொஞ்சமேனும் பேசவில்லை என்றால்.... மாநாட்டுக்கு குடிகாரர்களால் ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாதே" என்று மிகவும் பயந்து.... அவர்கள் வலியுறுத்தியதால் அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் மாற்றம் செய்யப்பட்டது..!

அவர்கள் இதில் தலையிட்டு இருக்காவிட்டால்... இப்போதும் அது இருந்திருக்கும்..!

சகோ. கவிஞர் மதுமதியின் இரண்டாவது பின்னூட்டமும், மனிதாபிமானி அடிக்குறிப்பும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது...!

Unknown said...

அப்படியே என் முதல் பின்னூட்டத்தையும் படிக்கவும்..! ஆ.மூ.னாவை நிதானித்து பதில் போட கூறியிருந்தேன்..!ஆசிக் அகமது அவர்களை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்,சிராஜ் அவர்களிடம் கேட்டேன் வீன் சண்டை வேண்டாம் என்பதுதான் என் எண்ணம்..!அப்புறம் மிஞ்சிக் கேட்டும் செவி சாய்க்க வில்லை..!ஈரோட்டில் என்ன நடந்தது என்று பார்க்காமலே செவி வழிச் செய்தியில் கேட்டு திரித்து பதிவு போடுவீர்கள்!நாங்க உங்களுக்கு பொய் சொல்லுகின்றோமா..!நண்பரே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

(பிழை திருத்தி இருக்கிறேன்)

சென்னை பதிவர் மாநாடு நடத்துவோர்... "குடிகாரர்களுக்கு சார்பாக கொஞ்சமேனும் சப்போர்ட் பண்ணி பேசவில்லை என்றால்.... மாநாட்டுக்கு குடிகாரர்களால் ஏதும் போதையில் பிரச்சினை வந்து விடக்கூடாதே" என்று மிகவும் பயந்து.... அவர்கள் வலியுறுத்தியதால்தான் அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் மாற்றம் செய்யப்பட்டது..!

மாநாட்டு பொறுப்பாளர்கள் இதில் தலையிட்டு இருக்காவிட்டால்... இப்போதும் அந்த ஸ்கிரீன் ஷாட் மாற்றம் ஏதும் இன்றி அப்படியே இருந்திருக்கும்..!

----சகோ. கவிஞர் மதுமதியின் இரண்டாவது பின்னூட்டமும், மனிதாபிமானி பதிவின் அடிக்குறிப்பும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது...!

Unknown said...

சங்கவியைப் பற்றி அவதூறு பதிவு போட்டால்...!எங்கள் இஸ்லாமிய பதிவர்கள் சிராஜ் போன்று வக்காலத்து வாங்க மாட்டார்கள்,நியாயம் எதுவோ அதைப் பேசுவார்கள்!நீங்க ஸ்கிரின்ஷாட் வைத்து இவர்களை கேவலப்படுத்தியதால்தானே வாங்கிக் கட்டிக் கொண்டீர்கள்.இதனால் நீங்கள் சாதித்தது என்ன? அவர்கள் இருவரையும் பதிவுலகமே புறங்கணித்து விட்டதா...?நண்பரே!

வருண் said...

***வீடு சுரேஸ்குமார் said...

இது முதல்முறை அல்ல...!ஆருர்மூனா மகுடம் வரும் போதெல்லாம் திடீரென்று மழையில் முளைத்த காளான் போல ஒரு பிளாக் ஓப்பன் ஆகும் ஓட்டுப்போட்டவர்களின் பெயரைப் போட்டு இந்த பதிவெல்லாம் மகுடம் வர தகுதியானதா..?இதற்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் என்னென்னு சொல்வது என்பது மாதிரியான பதிவு வரும். அப்போதெல்லாம் ஆ.மூ. மற்ற நண்பர்கள் அமைதி காத்தோம். ***

இதேபோல் மதப்பதிவுகள் மகுடம் ஏறும்போது பலர் "புகைவதை" நான் கோடிட்டுக்காட்டலாம்.

நீங்க செஞ்சா அது பொதுநலத்தொண்டு! அடுத்தவன் செய்தால் அது தப்பு!

பதிவுலகில் நியாயஸ்தகள் லட்சணம் எங்களுக்கும் தெரியும்!

மது, பதிவர் சந்திப்பில் வேணாம்னு சொல்ற கருத்தை மட்டும் பார்க்கவும். இந்த வயித்தெரிச்சல் குற்றச்சாட்டு யாரை நோக்கிவேணா காட்டலாம்!

வருண் said...

***வீடு சுரேஸ்குமார் said...

மழையில் முளைத்த காளான்கள் ஒரிரண்டு நாட்களில் காணமல் போய்விடுகின்றது...!இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கின்றேன்........

24 August 2012 5:47 AM***

ஆமா, நானும் ஒரு காலத்தில் காளாந்தான். உங்களமாரி பெரிய புளியமரமாவே ஒரு நாளில் எல்லாரும் வளரமுடியுமா???

எனக்குத்தெரிய என்னை காளான்னு சொன்ன புளிமரங்கள் நெறியா பட்டுப்போயிருச்சு! உலக நடப்பைச் சொன்னேன்!

Unknown said...

வருன் சார்..!நண்பர்கள் பதிவில் அனைவரும் ஓட்டு குத்துவது பதிவுலக யதார்த்தம் இதை நான் மறுப்பதில்லை...!என் நண்பர்களில் 80% பேருக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லை!
ஆனால் நான் போடும் ஒன்றிரண்டு சுமார் பதிவுக்கு ஓட்டு போடுறாங்க!நானே அவங்களுக்கு கைமாறா என்ன செய்வதுன்னு கடுப்புல இருக்கின்றேன்..!நீங்க வேற ஒரே நாளில் புளியமரம் அது இதுங்கிறீங்க...!

ஆனால் நான் என் நண்பர்களில் நான் ஓட்டுப் போடும் பலரின் குலம், கோத்திரம், ஜாதி, மதம், பார்ப்பதில்லை....!அப்படிப் பார்க்கப்படும் இடங்களில்தான் எரிச்சலை சிலர் சந்திக்க நேரிடுகின்றது!

Unknown said...

உங்களுக்கும் ஒரு ஓட்டைப் போடலாம்ன்னுதான் இருக்கின்றேன்..!எப்படி போடுவது என்று தெரியவில்லை!

வருண் said...

திரு சுரேஸ்குமார்:

நானும் கத்துக்குட்டிதாங்க. இன்று மட்டுமல்ல, என்றுமே!

எனக்குலாம் எப்போவும் மைனஸ் ஓட்டுதான் அதிகமாக விழும். நான் ஓட்டைபத்தி எல்லாம் கவலைப் படுறதில்லைங்க.

உங்க பின்னூட்டத்த்தை காட்டி பதில் சொன்னது பொதுவாக- உங்களை நோக்கி எய்த அம்பு அல்ல! தவறாக எடுத்துக்காதீங்க!

உங்க புரிதலுக்கு நன்றிங்க. :)

ராஜ நடராஜன் said...

வருண்!ஆட்டம் நல்லா போற மாதிரி இருக்குதே!வவ்வாலின் எதிர் விமர்சகன் எனது நண்பன்னு நீங்க கை குலுக்குற மாதிரி தெரியுதே.வவ்வாலைப் பொறுத்த வரை நீங்களும் தீண்டத்தகாதவரே.அவர் நாலடி பாய்ந்தால் நீங்கள் எட்டடி பாய்கிற உங்கள் கொச்சைத்தனத்தில் நித்யானந்தாவே உங்கள் உருவாக வந்து போகிறார்:)

நான் சாராத பதிவுகளில் முந்தைய உங்கள் சண்டையின் உங்கள் சொற்பிரயோகங்களுக்கு எனது கண்டனைங்கள்.

சில வெள்ளை ஆடுகளுடன் பல கறுப்பு ஆடுகளும் சேர்ந்து இங்கே உங்களுக்கு அரோகரா போடுகின்றன

நான் உங்கள் பதிவின் தலைப்பைப் பற்றிச் சொன்னால் நீங்கள் இன்னொரு பதிவிற்கு தாவி பதில் சொல்கிறீர்கள்.

தூரத்தில் நின்று கொண்டு விவாதப் பொருள் உருவாக்கிய பதிவின் காரணகர்த்தா,நீங்கள்,நான் போன்றவர்களை விட நேர் கலந்துரையாடல் செய்வோரின் வலிமை பெரிதாகவே இருக்கின்றது.அவர்களின் முயற்சியை வாழ்த்துவோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பைப் போல் நடந்தால் சரி...

ராவணன் said...

"பதிவர் சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்"

அவ்வளவுதானா..?

கோவணமும் வேணாம், அனைத்தையும் அவுத்துப்போட்டு அம்மணமாக வரவும்....என்று கூட எழுதலாம்.

சியர்ஸ் வருண்....மதுவில்லாமல் உலகமே இல்லை.

மது அனைத்து இடங்களிலும் இருக்கும், பதிவர் சந்திப்பிலும் இருக்கும்.

மது எதற்கு இருக்கக்கூடாது?

இவர் எழுதுவது பிடிக்கவில்லை, இவரைப் போன்றவர்கள் வருவது பிடிக்கவில்லை என்று யாராவது சொம்பைத் தூக்கினால்......?

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!ஆட்டம் நல்லா போற மாதிரி இருக்குதே!வவ்வாலின் எதிர் விமர்சகன் எனது நண்பன்னு நீங்க கை குலுக்குற மாதிரி தெரியுதே***

அவரு அவர் தளத்தில், தன் குடும்பம் தாக்கப் "பட்ட" அனுபவத்தை சொன்னாரு. நான் என் அனுபவத்தை வச்சி அவர் "பட்டதை" "அனுபவிச்சதை" புரிஞ்சுக்கிட்டேன்.

ஆறுதலா ரெண்டு வார்த்தை. அவ்ளோதான், நடராஜன். :)

வருண் said...

***வவ்வாலைப் பொறுத்த வரை நீங்களும் தீண்டத்தகாதவரே.அவர் நாலடி பாய்ந்தால் நீங்கள் எட்டடி பாய்கிற உங்கள் கொச்சைத்தனத்தில் நித்யானந்தாவே உங்கள் உருவாக வந்து போகிறார்:)***

நீங்க என்ன சார், "மேற்படியாரோட" டிஃபெண்ஸ் வக்கீலாவே ஆயிட்டேள் போல இருக்கு. :))))

வருண் said...

***சில வெள்ளை ஆடுகளுடன் பல கறுப்பு ஆடுகளும் சேர்ந்து இங்கே உங்களுக்கு அரோகரா போடுகின்றன.***

நியாயத்தை யாரு வேணாக் கேக்கலாம், எடுத்து வைக்கலாம், இதிலே நிறம் என்ன பெரிய நிறம்? உங்களுக்கு "கறுப்பு நரி" னா ம்ட்டும் தப்பாத் தெரியாது.:)))

வருண் said...

***நான் உங்கள் பதிவின் தலைப்பைப் பற்றிச் சொன்னால் நீங்கள் இன்னொரு பதிவிற்கு தாவி பதில் சொல்கிறீர்கள்.***

நீங்க மனிதாபிமானி பதிவிலேயே எழுதிய பின்னூட்டத்தில் தேவையில்லாத, மதுவை விட்டுப்புட்டு உங்க வசதிக்காக மதச்சாயம் பூசிட்டீங்க.

இது ஒரு தொடர்தான், சார்!

உங்க பின்னூட்டத்தில் என்ன செஞ்சிருக்கீங்க, மதச்சாயம் எப்படி பூசி வச்சு இருக்கீங்கனு போயிப் பாருங்க!

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பைப் போல் நடந்தால் சரி...

24 August 2012 8:30 AM**

கவலைப்படாதீங்க, எல்லாம் இனிதே நடக்கும்! :)

Nasar said...

டியர் வருண் ,
மேற்கத்திய நாட்டில், மதுவுடன் ஒன்றிய கலாசாரத்தில் வாழும் நீங்கள்,மதுவை எதிர்க்கும் உங்கள் தீவிரத்தை மெச்சுகிறேன் ....
நாலு நல்லவர்களுடன் ஒருவன் சேர்ந்தால், அவனும் நல்லவனாகத்தான் இருப்பான் இதில் ஆச்சிரியபடுவதட்கு ஒன்றும் இல்லை ...ஆனால்..
அதே நாலு கெட்டவர்களுடன் ஒருவன் சேர்ந்து, கெடாமல் இருக்கிறானே அதுதான் ஆச்சிரியம்+நல்ல மனிதன் ...அந்த வகையில்
REALLY I APPRECIATE YOU

வருண் said...

***Nasar said...

டியர் வருண் ,
மேற்கத்திய நாட்டில், மதுவுடன் ஒன்றிய கலாசாரத்தில் வாழும் நீங்கள்,மதுவை எதிர்க்கும் உங்கள் தீவிரத்தை மெச்சுகிறேன் ....
நாலு நல்லவர்களுடன் ஒருவன் சேர்ந்தால், அவனும் நல்லவனாகத்தான் இருப்பான் இதில் ஆச்சிரியபடுவதட்கு ஒன்றும் இல்லை ...ஆனால்..
அதே நாலு கெட்டவர்களுடன் ஒருவன் சேர்ந்து, கெடாமல் இருக்கிறானே அதுதான் ஆச்சிரியம்+நல்ல மனிதன் ...அந்த வகையில்
REALLY I APPRECIATE YOU

24 August 2012 11:03 AM***

வாங்க, நாசர்! :) நன்றிங்க!

நீங்க கவனிச்சுப் பார்த்தால், "குடிச்சுட்டு வந்து நிதானமாக வந்தால், கன்னியமாக நடந்துக்கிட்டால் என்ன தப்பு?" என்கிறார்போல் வாதாடுகிறார்கள் "இக்பால் செல்வன்" போன்றோர்!!!

Anonymous said...

@ வருண் - // நீங்க சென்னையிலா இருக்கீங்க? நீங்க கனடால இருப்பதா நான் எப்படி நெனச்சேன்??? //

சென்னை தான் எனது சொந்த ஊர் சகோ. ஆனால் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வருகின்றேன் ...

ஒருக் குழப்பமும் இல்லை என்று நினைக்கின்றேன்.

:)

வருண் said...

இ. செ: இல்லங்க நீங்க பதிவர் சந்திப்பில் கலந்துக்கிறதா கெளசல்யா அவர்கள் உங்க பேரை கொடுத்து இருக்காங்க. அதனால நீங்க தற்போது, சென்னையில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. அவ்ளோதான்!

முட்டாப்பையன் said...

@ வௌவால்
இப்பதான் அந்த லூஸ் கமெண்ட்ஸ் பார்த்தோம்.விடுங்க மீண்டும் நம்மகிட்ட மாட்டாமயா போய்டும் மெண்டல்.
என்ன ஒண்ணு மிக்ஸ்டு கலாச்சாரம் என்பதால் நம்ம பின்னாடி
இரும்பு தடுப்பு வச்சிக்கிட்டு போகணும்.
அதுதான் அவங்க பழக்கம்.
டோன்ட் வோரி.பி ஹாப்பி.

வேணும்னா நாங்க எதுவுமே போடாம உங்க ரெண்டு பேர் பேரை மட்டும் போட்டு பதிவு போடுறோம்.அவனை வர சொல்லுங்க.நீங்களும் வாங்க.
கமெண்ட்ஸ் மாடுரேசன் இருக்காது.முடிஞ்ச அளவுக்கு ரத்தம் குடிச்சிக்க.
நன்றி.மீண்டும் அடுத்த அடில சந்திப்போம்.

வருண் said...

***@ வௌவால்
இப்பதான் அந்த லூஸ் கமெண்ட்ஸ் பார்த்தோம்.விடுங்க மீண்டும் நம்மகிட்ட மாட்டாமயா போய்டும் மெண்டல்.
என்ன ஒண்ணு மிக்ஸ்டு கலாச்சாரம் என்பதால் நம்ம பின்னாடி
இரும்பு தடுப்பு வச்சிக்கிட்டு போகணும்.
அதுதான் அவங்க பழக்கம்.
டோன்ட் வோரி.பி ஹாப்பி.

வேணும்னா நாங்க எதுவுமே போடாம உங்க ரெண்டு பேர் பேரை மட்டும் போட்டு பதிவு போடுறோம்.அவனை வர சொல்லுங்க.நீங்களும் வாங்க.
கமெண்ட்ஸ் மாடுரேசன் இருக்காது.முடிஞ்ச அளவுக்கு ரத்தம் குடிச்சிக்க.
நன்றி.மீண்டும் அடுத்த அடில சந்திப்போம்.

3 September 2012 10:03 AM***

ஏன்ப்பா நீ என்ன ஹை ஸ்கூலா இல்லை எலிமெண்டரி ஸ்கூலா இல்லை கிண்டர் கார்ட்டனா? :)))

அவருதேன் "வின்னரு"னு "அன் அப்போஸ்டா" அறிவிச்சிரு! :)))

புரியுதா, சின்னவனே? :))))

Dont spam every post, please!