Saturday, February 21, 2009

ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைக்கலைனா?

ஏ ஆர் ரகுமானுக்கு கோல்டன் க்ளோப் கிடைக்கும்னு எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. திடீர்னு ஸ்லம்டாக் மில்லியனருக்கும், ஏ ஆர் ரகுமானுக்கும் கோல்டன் க்ளோப் கொடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் நம்ம எல்லோருமே ஒரு தமிழர் கோல்டன் க்ளோப் வாங்கினார் என்று ரொம்ப சந்தோஷப்பட்டோம் பெருமிதம் அடைந்தோம்.

நாளைக்கு ஆஸ்கர் வின்னர்களை அறிவிக்கப்போறாங்க. கோல்டன் க்ளோப் கொடுத்ததால் ஆஸ்கர் கெடைக்கும்னு ஒன்றும் உத்திரவாதம் இல்லை. ஓப்ரா வின்ஃப்ரீ ஷோவில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று சொல்கிறார். சும்மா எல்லாம் இவர் சொல்லமாட்டார். இது ஒரு புது மாதிரியான வித்தியாசமான படம். ஹாலிவுட்க்கு இது ஒரு புது ப்ளாட். அதனால் இதுக்கு ஆஸ்கர் கெடைக்க நெறையவே வாய்ப்பிருக்கு. பெஸ்ட் பிக்ச்சர் ஆஸ்கர் ஸ்லம்டாக் மில்லியனருக்கு கெடச்சா நிச்சயம் ஏ ஆர் ரகுமானுக்கும் கெடைக்க வாய்ப்பு இருக்கு.

நெறைய நல்ல படங்கள் கம்பீட் பண்ணுவதால் கெடைக்காமாகப் போகவும் வாய்ப்பிருக்கு. கோல்டன்க்ளோப் கிடைச்சா ஆஸ்கர் கெடைக்கனும்னு இல்லை. அப்படி ஏ ஆர் ரகுமானுக்கு கெடைக்க வில்லைனாலும் மனம் தளராமல் இருங்கப்பா! ஆஸ்கர் கம்மிட்டியை ஆளாளாக்கு திட்ட ஆரம்பிச்சுறாதீங்க. அதானே நம்ம எப்போதும் செய்வோம்?

8 comments:

ஊர்சுற்றி said...

நீங்க தாராளமா நம்பி வாழ்த்துக்களை சொல்லலாம். நம்ம ரஹ்மானுக்கு நிச்சயம் விருது இருக்கு!

வருண் said...

***ஊர் சுற்றி said...
நீங்க தாராளமா நம்பி வாழ்த்துக்களை சொல்லலாம். நம்ம ரஹ்மானுக்கு நிச்சயம் விருது இருக்கு!

21 February, 2009 3:04 PM***

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத் திற்கும் நன்றி ஊர் சுற்றி!

Let us keep our fingers crossed!

புருனோ Bruno said...

எல்லாம் இறைவன் செயல்

வருண் said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நnறி, டாக்டர் ப்ருனோ! :-)

புருனோ Bruno said...

//எல்லாம் இறைவன் செயல்//

சாரி, சிறிது மாறிவிட்டது

ரஹ்மான் சொன்னது “எல்லாப்புகழும் இறைவனுக்கே”

:) :)

வருண் said...

ரொம்ப க்ளோஸ், டாக்டர் ப்ரூனோ. நான் உங்க காமெண்ட்டைத்தான் நினைத்தேன், ஆஸ்கர் பரிசை அலிஷா கீஸிடம் பெற்றவுடன் அவர் தமிழில் அந்த வரியை சொன்னதும் :-)

ராஜ நடராஜன் said...

இது என்னக்கி போட்ட பதிவு?ஏ.ஆர். ரெண்டு ஆஸ்கார் மாங்கா தட்டிகிட்டு வந்துட்டாரு!

வருண் said...

இது அனவ்ண்ஸ் பண்றதுக்கு முன்னாலே டென்ஷன்ல இருக்கிற போது போட்டது, திரு. நடராஜன்!

இன்னொரு பதிவு வந்துக்கிட்டே இருக்கு! :) :)