Tuesday, March 17, 2009

காதலுடன் -12

"ஏன் கல்யாணம்னா இப்படி பயப்படுறீங்க, ரமேஷ்?"

"தெரியலை, சந்தியா, கல்யாணம்னா உண்மையிலேயே பயம்மாதான் இருக்கு. அதான் ஜோக் மாதிரி சொல்லி சமாளிக்கிறேன்"

"நானே தைரியமா இருக்கேன். உங்களுக்கென்ன பயம், ரமேஷ்?"

"நீ தான் கல்யாணத்தில் என்னைவிட ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆச்சே"

"கொழுப்புத்தானே?"

"உண்மைதானே?"

"சரி அப்போ உங்களுக்கு நான் சொல்லித்தரேன்"

"ஏய்! நீ ஏற்கனவே கல்யாணம் வரை போனவள்னு சொல்ல வந்தேன்"

"இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு நீங்க சொல்றீங்க?"

"ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்குனு அவளுக்கே தெரியாதாம். இதை நீ நம்புறியா?"

"யாரு சொன்னது? எவனாவது ஒரு அரைவேக்காட்டு ஆண் எழுதி இருப்பான்!"

"அதெப்படி கரெக்ட்டா சொல்ற?"

" உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு உடலுறவின்போது ஆர்கஸம் தேவையில்லைனு ஆண்கள் ஏமாற்றியது?"

"அதெல்லாம் அநியாயம், சந்தியா”

“இப்படித்தான் எங்களை காலங்காலமா ஏமாற்றி வர்ரீங்க”

”ஏய் நான் ரொம்ப அப்பாவி தெரியுமா?'

"ச்சு ச்சு ச்சு "

"ஆமாம், உன் உதட்டை என் அருகில் கொண்டுவா! எனக்கு கிஸ் பண்ணக்கூடத்தெரியாது! வாய், உதடெல்லாம் வந்து சும்மா பேச, சாப்பிட மட்டும்தான்னு நெனைச்சுண்டு இருக்கேன்"

"ஐயோ என்ன செய்வீங்க பாவம்!"

"ஏய் பொதுவாக ஆண்கள்தான் ரொம்ப வீக்-மைண்டெட் தெரியுமா சந்தியா?"

"நீங்க வீக்-மைண்டெட் ஆ? கிடையவே கிடையாது! இந்த மாதிரி எதாவது சும்மா தியரி விடாதீங்க"

"எனக்கென்னவோ அப்படித்தான் தோனுது. பேசாமல் ஃப்ரெண்டாவே இருந்துடுவோமே, சந்தியா?"

" Let me be very frank here, I want more than friendship from you!"

"என்ன வேணும் உனக்கு?" அவன் அவளை ஒரு மாதிரியா சிரித்துக்கொண்டேஎ பார்த்தான்.

"பச்சையா சொல்லனுமா? நீங்க வேணும் என்னை இன்பப்படுத்த! புரியுதா?"

"உன்னோட ரொம்ப உறவுகொண்டு கலந்துட்டேன்னா, அப்புறம் என்னால நீ இல்லாமல் வாழ முடியாது. அதுவும்.. அப்புறம் எனக்குத்தான் கஷ்டம்"

"நான் இல்லாம வாழமுடியாது கேக்க நல்லாயிருக்கு! ஆனா பொய்! அதென்ன அதுவும்?"

"நீ ரொம்ப அழகா மட்டும் இல்லை, ரொம்ப கவர்ச்சியா இருக்க சந்தியா. நீ எப்படியெல்லாம் என் புத்தியை அலையவைக்கிற தெரியுமா? ஒரு ஆணா இருந்தால்தான் இதெல்லாம் உனக்கு புரியும்"

"எதுக்கு இந்த ஐஸ்? புது மாதிரியா காம்ப்ளிமெண்ட் பண்னுறீங்களாக்கும்?"

"ஐஸ்லாம் இல்லை! I get sexually attracted to you. உன்னை சாதாரணமா பார்க்கமுடியலை தெரியுமா?"

"அதுதான் தெரியுமே?"

"என்ன தெரியும்?"

"எனக்கு உங்க பார்வையெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தெரியும் சார். அது நல்லதுதானே? என்னை பார்தால் வணங்கனும் போல இருந்தால்தான் எனக்கு பிரச்சினை. இது பிரச்சினை இல்லை"

"உனக்கு நல்லதுதான். என்னைப்பத்தி யோசிச்சியா? It is very likely that I might get addicted to have sex with you after being with you for a while. If I reach that point, it is dangerous. You can do anything with me and get anything done by me as I am addicted to you, you see. I would be like your slave or something. அப்புறம் உனக்கு என்னை பிடிக்காம போயிருச்சுனா? "போடா பொறுக்கி" னு விரட்டி விட்டுட்டேனா? நான் நீயில்லாமல் என்ன பண்ணுவேன்?"

"என்னதான் நீங்க சொல்ல வரீங்க?" அவள் சிரித்தாள்.

"கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது.
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது"


"இப்போ எதுக்கு இந்த அந்தக்காலத்து சோகப்பாட்டு? இதுவும் ஒரு ஆண் எழுதியதுதானே?"

"ஆமா, நாங்க உங்களை கவிதை எழுத வேணாம்னா சொன்னோம்? தத்துவம் எல்லாம் ஆண்களுக்குத்தான் வருமாக்கும்.உங்களுக்கு வராது"

"எங்களுக்கு உங்களை மாதிரி பொய் சொல்லத்தெரியாதுதான்"

"I have a bad feeling about the marriage thing"

"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்"

"இப்போ யார் இல்லேனு சொன்னா?'

"நான் சொல்றதை கேளுங்க! உங்ககிட்ட எனக்கு பேச பழக, comfortable ஆக இருக்கு. I am not afraid of you. I can give you myself completely with pleasure. I feel very secured being with you. I trust you. That is why I shamelessly asked you to marry me. இது சும்மா இண்பாச்சுவேஷன் இல்ல"

"நான் வேணாம் வேணாம்னு சொல்றேன் இல்ல? இப்போ நீயும் வேணாம்னு சொன்னனு வச்சுக்கோவேன். அப்புறம் எனக்கு வேணும்னு தோனும்"

"இல்லை எனக்கு வேணும்"

"சரி, இதைப்பத்தி இன்னொரு நாள் பேசி முடிவெடுப்போமே?"

"ரொம்ப அறுத்துட்டேனா?'

"சே சே"

"சரி நான் புறப்படவா?'

"இப்போத்தான் வந்த மாதிரி இருக்கு?"

"கல்யாணம் செய்துகொண்டால் உன்னிடம் இருந்து இப்படியெல்லாம் தப்பிச்சு ஓட முடியாது பாரு!"

"யார் சொன்னா?"

"இல்லையா பின்னே?"

"உங்க ஃப்ரீடத்திற்கு இடையில் நான் வந்து நிக்கமாட்டேன். சரியா?"

"சரி, நான் இப்போ புறப்படுறேன்"

-தொடரும்

2 comments:

மணிகண்டன் said...

***
"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்"
***

ஆமாம். ஆமாம். ஆமாம்.

வருண் said...

***மணிகண்டன் said...
***
"நீங்க ஒரு சரியான லூசு, ரமேஷ்"
***

ஆமாம். ஆமாம். ஆமாம்.***

LOL!