Tuesday, February 2, 2010

என் ஒண்ணுவிட்ட அத்தைனு சொல்லவா? கடலை கார்னர் (42)

"ஹாய் கண்ணன்! பேசமுடியுமா?"

"என்ன பிருந்த்? சொல்லுடா."

"என்ன உங்க கெஸ்ட் எல்லாம் போயிட்டாங்களா?"

"இல்லைடா, இன்னும் ரெண்டு மணி நேரம் சென்றுதான் போவாங்க! மை ஃப்ரெண்ட் இஸ் ஆண் ஹிஸ் வே."

"உங்க ஃப்ரெண்டோட பேரண்ட்ஸ் மட்டும்தானா?"

"ஆமா! அது பத்தாதா உனக்கு?"

"அவங்க எப்படி டைப், கண்ணன்?"

"ரொம்ப ஆச்சாரமான குடும்பம் போல இருக்கு! வீட்டிலே பூஜை அறை எங்கேனு கேக்கிறாங்க?"

"அச்சசோ!"

"சாமி கும்பிடனும்னா நான் கோயிலுக்குத்தான் போவேன்னு சொன்னேன்!"

"எந்தக் கோயிலுக்குனு கேக்கலையா?"

"கேக்கலை. நான் போறது பிருந்தா தேவி கோயிலுக்கு!"

"அது யாரு பிருந்தா தேவி?"

"நீ தான்டி! வேற யாரு?"

"நான் என்ன தெய்வமா?"

"உன்னை வணங்கினாலாவது என் மனசு புரிஞ்சி நீ ஏதாவது அருள் புரியுவ. சும்மா கல்லை கும்பிட்டா அதுக்கு என்ன புரியும்?'

"ஏன் நம்ம ஊர்லதான் நெறையா சாமியார் இருக்காங்களே! விழுந்து கும்பிட வேண்டியதுதானே?"

"நான் அவங்க செத்ததும்தான் அவங்களை கும்பிடுவது வழக்கம்!"

"ஏன் அப்படி?"

"செத்ததும் எல்லோரும் தெய்வமாகிடுவாங்க இல்லயா?"

"அது ஏன் அப்படியாம்?'

"ஏன்னா அன்றிலிருந்து எந்தவிதமான அயோக்கியத்தனமும் செய்ய முடியாது பாரு? அதான் அவர்கள் தெய்வம் லெவெலுக்கு போயிடுறாங்க!"

"சரி, உங்க ஃப்ரெண்டோட பேரண்ட்ஸ் வெஜிட்டேரியனா?"

"ஆமா! உன்னோட சொந்தக்காரங்கதான்."

"பாவம் நீங்க! நான் வந்து ஏதாவது ஹெல்ப் பண்ணவா?"

"உன்னை யாருனு கேட்டா, நீ யாருனு சொல்ல? என் ஒண்ணுவிட்ட அத்தைனா?"

"கொழுப்பா? சொல்ல வேண்டியதுதானே என்னோட ஆத்துக்காரியா வரப்போறவனு!"

"சொல்லலாம்தான்.. இப்போலாம் அமெரிக்கால நம்மதான் ரொம்ப ஸ்லோவாப் போறோம். நம்ம ஊர்ல எல்லாம் ஃபாஸ்ட் பேஸ்லதான் போகுது!"

"வேற என்ன பேசினாங்க?"

"சும்மா இருப்பாங்களா? ஒரு நூறு நன்றி சொன்னாங்க இந்த ஹெல்ப்க்கு. அப்புறம் என்னுடைய ஜாதகம் இருக்கா? நீங்க என்ன குலம்,கோத்ரம்னு ஒரு மாதிரியா கேட்டாங்க!"

"எதுக்கு அதெல்லாம்? உங்களுக்கு பொண்ணு பார்க்கவா?"

"வேற எதுக்கு? நான் ஜாதகம் எல்லாம் பேங்க் லாக்கர்ல இருக்கு னு சும்மா விட்டேன்."

"பொய்யா?"

"வேற என்ன சொல்லச் சொல்ற? எனக்கு ஜாதகம்லாம் எழுதலைனா? அப்புறம் என் ஜாதி , கோத்ரம் எல்லாம் சொல்லி பொண்ணு பார்க்கச் சொல்லவா?"

"அதுக்காகவா கேட்டாங்க?"

"ஆமா அவங்க சொந்தத்திலே மூக்கும் முழியுமா ஒரு அழகி இருக்காலாம், அவளை கட்டிக்கிறயானு அடுத்து கேக்கத்தான் இதெல்லாம்.."

"என்ன தரகர் தொழிலா அவங்களுக்கு?"

"தெரியலையே. நம்ம ஊர் பெரியவங்க எல்லாம் இப்படித்தானே? ஏதாவது உதவி செய்வதாக நெனச்சுக்கிட்டு நம்மலப் போட்டு கொல்லுவாங்க!"

"எனக்கு கல்யாண்ம் ஆயிடுச்சு, செப்பரேட்டெட்டா இருக்கோம்னு சொல்ல வேண்டியதுதானே?"

"அப்படினா?"

"அப்படித்தான். தேவைனா மூடு வந்தா ஒண்ணா சேர்ந்துக்குவோம். மற்றபடி தனித்தனி வீட்டிலேதான் இருப்போம்னு அர்த்தம்."

"ஒண்ணாச்சேர்ந்து என்ன பண்ணுவோம்?"

"பச்சையா சொல்லனுமா?"

"வேணாம் வேணாம்!"

"ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷப்படுத்துவோம்னு சொல்லுங்க! எங்கே இருந்து பேசுறீங்க?"

" சும்மா சின்ன ஷாப்பிங். மில்க்கும் ப்ரெடும் வாங்கி வர்ரேன்னு சொல்லிட்டு க்ராஸரி ஷாப் வந்தேன். இப்போ பார்க்கிங் லாட்ல கார்ல தனியா இருக்கேன்."

"அதானே பார்த்தேன்?"

"என்ன ட்ரெஸ் போட்டு இருக்க?'

"ட்ரெஸ்லாம் ஒண்ணும் போடல!"

"ஏய் என்ன சொல்ற! பாத்ரூம்ல இருக்கியா?"

"ஆமா!'

"பாத்ரூம்ல இருக்கயிலேதா என் ஞாபகம் வருமா உனக்கு? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"

"இப்போத்தான் குளிக்க ரெடியானேன்.."

"நேக்கடாவா இருக்க?"

"ஆமா! அண்டர் கார்மெண்ட்ஸ் கழட்டினதும் உங்க ஞாபகம் வந்துடுச்சு!"

"நெஜம்மா?!"

"நெஜம்மாத்தான்!"

"ஏன் என் ஞாபகம் வந்தது?"

"நீங்கதானே அன்னைக்கு அது ரெண்டையும் எடுத்து பாஸ்கட்ல போடுனு சொன்னீங்க? அது ஞாபகம் வந்துச்சு. சரினு உங்களை கூப்பிட்டேன்."

"ஏய் என் ஃப்ரெண்டு கூப்பிடுறான். ஐ ஹாவ் டு டேக் ஹிஸ் கால்"!

"ஓ கே டார்லிங். லவ் யு!"

"லவ் யு டூ, பிருந்த்!"

-தொடரும்

No comments: