Tuesday, March 31, 2009

"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

தந்தை பெரியார், கெளதம புத்தர், மஹாவீரர் போன்றவர்கள் பிறப்பால் இந்துக்கள்தான். இந்து மதத்தில், அவர்கள் வழிபடும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வேறு பாதையில் சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமியராக பிறந்திருந்தால் "பகுத்தறிவு பாதையில்" போய் இருப்பார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஏன் இந்த சந்தேகம்? அதுபோல் உருவான யாரையும் நான் பார்க்கவில்லை.

இந்து மதத்தில் குறைபாடுகள் அதிகம். ஜாதியை உருவாக்கியது இந்து மதம். மனிதக்கடவுள்கள் இந்து மதத்தில்தான் உண்டு. பாபாஜி, சாய்பாபாஜி அந்த ஜி இந்த ஜினு போய்க்கிட்டே இருக்கும். ஏகப்பட்ட கடவுள்கள். ஆண் பெண், அலி என்று பலவகை கடவுள்கள்.

பொதுவாக இந்து மதக்கடவுள்கள் மனிதர் மாதிரியே உருவமுடைவராக கற்பனை செய்யப்பட்டவர்கள்.

கடவுளுக்கு மனிதனுக்கு உள்ள உடல் உறுப்புகள், மூளையெல்லாம் இருக்கனுமா என்ன?

ஏன் இருக்கக்கூடாது? என்பார்கள், கடவுளை படைத்தவர்கள்!

கடவுளுக்கு மனித உருவம் கொடுத்து, அவருக்கு நகை போட்டுவிட்டு, கை வச்சு, கால் வச்சு, சேலை அணிவித்து, நகைகள் போட்டு அலங்காரம் செய்து வேடிக்கை பார்ப்பவர்கள் இந்துக்கள்தான்.

கடவுளுக்குப் பாட்டுப்பாடி அவரை தூங்க வைப்பவர்கள், மகிழவைப்பர்களும் இந்துக்கள்தான்.

இவ்வளவு "குறைபாடுகள்" இருந்தாலும் ஒரு வகையில் பிறப்பால் இந்துக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்குகிறது. சிந்தனையாளர்களாகவும் ஆக்குகிறது.

இந்தியாவில் இந்துக்களுடையை மக்கள் தொகை 70 விழுக்காடுகளுக்கு மேல் இருந்தாலும், இதில் மத வெறியர்கள் எத்தனை விழுக்காடுகள் என்று பார்த்தால், அதிகம் இல்லை என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்து மத வெறியர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இந்துவாகப் பிறந்து இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் வருகிறது.

உருவ வழிபாடு இல்லாத, இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாகிற கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது. அது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா?

49 comments:

வால்பையன் said...

யாராவது விளக்குறாங்களான்னு நானும் பார்க்கிறேன்!

வருண் said...

***வால்பையன் said...
யாராவது விளக்குறாங்களான்னு நானும் பார்க்கிறேன்!

31 March, 2009 10:25 AM***

என்ன வால்பையன் இப்படி செஞ்சிட்டீங்களே?

நீங்க ஒரு விள்க்கத்தோட வருவீங்கனு நான் எதிர்பார்த்தேன் :-)))

வால்பையன் said...

இல்ல
இங்க நாம வேடிக்கை பார்த்து களத்தில் இறங்குவதே சிறந்தது!

வருண் said...

***வால்பையன் said...
இல்ல
இங்க நாம வேடிக்கை பார்த்து களத்தில் இறங்குவதே சிறந்தது!

31 March, 2009 10:43 AM ***


உங்களைப்போல் சிந்திப்பவர்கள்தான் பெரும்பான்மையான நம்ம மக்கள்! :-)

தமிழ்ப்பதிவன் said...

ருஷ்டி, தஸ்லீமான்னு நெறய பேர் இந்த கேட்டகிரில இர்க்காங்க. உங்களுக்குத் தெரியல. அவ்வளவு தான். ஆனா, அடிப்படையிலேயே வித்யாசம் இருக்கு.

கடவுள நம்பாட்டியும் நீ எங்க மதம்தான்னு இஸ்லாம் சொல்றதில்ல.
அதுலயும் தெளிவா, மாபெரும் அந்த ஒரே கடவுள்ங்கறதுல அங்க சமரசமேயில்ல.
அப்புறம், கடவுள நம்பாதவன் தான் பகுத்தறிவுவாதி, சிந்தனையாளன் னு நெனச்சீங்கன்னா அதுவும் ஒரு மூடநம்பிக்கையே.

கடவுள் நம்பிக்கை இல்லாத முஸ்லிம் என்பதை எப்படிச் சொல்லலாம் என்றால் ஆணுக்குரிய தன்மை இருந்தால்தானே அவன் ஆண். (ஒரு உதாரணத்துக்குச் சொன்னது தான், ஆண் என்ற இடத்தில் பெண் என்றும் போட்டு படிக்கலாம்). அதாவது, கடவுள் நம்பிக்கை தான் அதன் மூளை.

Tech Shankar said...

கண்டிப்பா.

//"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

வருண் said...

***தமிழ்ப்பதிவன் said...
ருஷ்டி, தஸ்லீமான்னு நெறய பேர் இந்த கேட்டகிரில இர்க்காங்க. உங்களுக்குத் தெரியல. அவ்வளவு தான். ஆனா, அடிப்படையிலேயே வித்யாசம் இருக்கு. ***

எனக்கு தெரியாததாலதான் இந்த திரி ங்க!

தெரியாதத தெரியாதுனு சொல்றவந்தான் பகுத்தறிவுவாதி!

என்ன வித்தியாசம்???

***கடவுள நம்பாட்டியும் நீ எங்க மதம்தான்னு இஸ்லாம் சொல்றதில்ல.***

இஸ்லாம் பேசாது! இஸ்லாமியர்கள்னு சொல்லுங்க. இல்லை குரான்ல சொல்லி இருக்குனு சொல்லுங்க!

***அதுலயும் தெளிவா, மாபெரும் அந்த ஒரே கடவுள்ங்கறதுல அங்க சமரசமேயில்ல.***

???? புரியலை

***அப்புறம், கடவுள நம்பாதவன் தான் பகுத்தறிவுவாதி, சிந்தனையாளன் னு நெனச்சீங்கன்னா அதுவும் ஒரு மூடநம்பிக்கையே. ****

கடவுளை பகுத்தறிய பயப்படுபவர்கள் பகுத்தறிவுவாதிகளா?!!!

சரிங்க, தெரிந்துகொண்டேன்!

***கடவுள் நம்பிக்கை இல்லாத முஸ்லிம் என்பதை எப்படிச் சொல்லலாம் என்றால் ஆணுக்குரிய தன்மை இருந்தால்தானே அவன் ஆண். (ஒரு உதாரணத்துக்குச் சொன்னது தான், ஆண் என்ற இடத்தில் பெண் என்றும் போட்டு படிக்கலாம்). அதாவது, கடவுள் நம்பிக்கை தான் அதன் மூளை.***

இங்கே ரொம்ப ரொம்ப குழப்புறீங்க!!

என்ன சொல்ல வர்றீங்க? :-??

31 March, 2009 11:13 AM

வருண் said...

**தமிழ்நெஞ்சம் said...
கண்டிப்பா.

//"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

31 March, 2009 11:26 AM


உங்கள் கருத்துக்கு நன்றி, தமிழ்நெஞ்சம்! :-)))

mayavi said...

Hi Varun,

There are more non practicising muslims in wester countires, such as in UK, where i live. Salman rushdie is a non practicing muslim, but taslima is not a non practicisng muslim, she does not accept or contradicts with some issues in islam, but she believes in one god that is allah.

The first principle of Islam is "There is only one God , that is allah". Muslims believe this not just for words, but they truly strongly beleive in it.

To your question, when people dont believe in the first/basic principle they are not considered as muslims.

தமிழ்ப்பதிவன் said...

///***கடவுள் நம்பிக்கை இல்லாத முஸ்லிம் என்பதை எப்படிச் சொல்லலாம் என்றால் ஆணுக்குரிய தன்மை இருந்தால்தானே அவன் ஆண். (ஒரு உதாரணத்துக்குச் சொன்னது தான், ஆண் என்ற இடத்தில் பெண் என்றும் போட்டு படிக்கலாம்). அதாவது, கடவுள் நம்பிக்கை தான் அதன் மூளை.***

இங்கே ரொம்ப ரொம்ப குழப்புறீங்க!!///

இல்லைங்க, இப்ப ஒருத்தர ஆண்மகன் அப்டின்னு சொன்னா அதுக்கேத்த தன்மையும் தகுதியும் அவர்ட்ட இருக்கணும் இல்லீங்களா?, அதே மாதிரி, பெண்மகள்ன்னு ஒருத்தரச் சொன்னாலும் அதுக்கான தகுதிகள் இருக்கோணும். அப்படித்தானே.

அதே மாதிரி முஸ்லிம்ங்கறதுக்கான அடிப்படை குவாலிடீ என்னன்னா ஒரேகடவுள் நம்பிக்கை. இதுலருந்து விலகிட்டா முஸ்லிம் இல்லேன்னு ஆயிரும்.

ஆனா இந்து மதத்துல என்னா சொல்றாய்ங்கன்னா, கடவுள நம்பாதவனும் இந்து, நம்புறவனும் இந்து அப்படின்னு.

வருண் said...

mayavi said...
***Hi Varun,

There are more non practicising muslims in wester countires, such as in UK, where i live. Salman rushdie is a non practicing muslim, but taslima is not a non practicisng muslim, she does not accept or contradicts with some issues in islam, but she believes in one god that is allah.

The first principle of Islam is "There is only one God , that is allah". Muslims believe this not just for words, but they truly strongly beleive in it.

To your question, when people dont believe in the first/basic principle they are not considered as muslims.

31 March, 2009 12:00 PM***

Thanks mayavi! :-)

I just read about Salman Rushdie!

http://en.wikipedia.org/wiki/Salman_Rushdie

He seems like an interesting personality. As you can see he has been threatened for being what he is and what he believes in . That is one of the reasons not many muslims by birth express their thoughts I suppose! :(

வருண் said...

***தமிழ்ப்பதிவன் said...
///***கடவுள் நம்பிக்கை இல்லாத முஸ்லிம் என்பதை எப்படிச் சொல்லலாம் என்றால் ஆணுக்குரிய தன்மை இருந்தால்தானே அவன் ஆண். (ஒரு உதாரணத்துக்குச் சொன்னது தான், ஆண் என்ற இடத்தில் பெண் என்றும் போட்டு படிக்கலாம்). அதாவது, கடவுள் நம்பிக்கை தான் அதன் மூளை.***

இங்கே ரொம்ப ரொம்ப குழப்புறீங்க!!///

இல்லைங்க, இப்ப ஒருத்தர ஆண்மகன் அப்டின்னு சொன்னா அதுக்கேத்த தன்மையும் தகுதியும் அவர்ட்ட இருக்கணும் இல்லீங்களா?, அதே மாதிரி, பெண்மகள்ன்னு ஒருத்தரச் சொன்னாலும் அதுக்கான தகுதிகள் இருக்கோணும். அப்படித்தானே.

அதே மாதிரி முஸ்லிம்ங்கறதுக்கான அடிப்படை குவாலிடீ என்னன்னா ஒரேகடவுள் நம்பிக்கை. இதுலருந்து விலகிட்டா முஸ்லிம் இல்லேன்னு ஆயிரும்.

ஆனா இந்து மதத்துல என்னா சொல்றாய்ங்கன்னா, கடவுள நம்பாதவனும் இந்து, நம்புறவனும் இந்து அப்படின்னு.

31 March, 2009 12:37 PM***

உண்மையை சொல்லப்போனால், ஒரு மதத்தின் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்றால், அந்த மதத்தை ஒழுங்கா ஃபாலோ பண்ணலைனா ஒருவர் தன்னை "இந்து" "முஸ்லிம்" என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமில்லை.

அதனால்தான். "பிறப்பால் இந்து" 'பிறப்பால் இஸ்லாம்" என்பதுபோல் அவர்களை சொல்ல வந்தேன்.

உங்கள் விளக்கத்திற்கு நன்றி :-)

Adriean said...

நீங்கள் சொன்னது மிக சரியே.இசுலாம் மதத்தில் பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது.ஒரே ஒரு பாக்கித்தான் நண்பரை மட்டும் வெளிநாட்டில் சந்தித்துள்ளேன்.

வருண் said...

***Chandran said...
நீங்கள் சொன்னது மிக சரியே.இசுலாம் மதத்தில் பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது.ஒரே ஒரு பாக்கித்தான் நண்பரை மட்டும் வெளிநாட்டில் சந்தித்துள்ளேன்.

31 March, 2009 2:18 PM ***

உங்க வருகைக்கும், உங்க அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி, திரு. சந்திரன் :-)

ஜியா said...

:))

As everybody said, muslims believe in ONE single GOD strongly.. and he's NOT comparable to anyone/anything. Jesus/Isha, who's believed to be God in Christianity is believed as just a messenger to God in Islam... Even, Prophet Mohammed (pbuh) who is the originator of Islam (Muslims believe Islam started from Day 1 :)), strongly condemns if anyone consider him even close to God...

Why does one start a religion by proposing someone as God? This question motivates Muslims to completely trust the religion...

Also, Islam mandates ppl to spend quality time interacting with God, which catalyzes the belief :))

வருண் said...

Thanks, ஜி, for your thoughts! :-)

வால்பையன் said...

//இப்ப ஒருத்தர ஆண்மகன் அப்டின்னு சொன்னா அதுக்கேத்த தன்மையும் தகுதியும் அவர்ட்ட இருக்கணும் இல்லீங்களா?, அதே மாதிரி, பெண்மகள்ன்னு ஒருத்தரச் சொன்னாலும் அதுக்கான தகுதிகள் இருக்கோணும். அப்படித்தானே.//

அதாவது ஆணாக பிறந்தவன்! தனக்கு மனை கிடைக்காவிட்டாலும் எவளையாவது பிடித்து கற்பழிக்க வேண்டும் இல்லையா! அப்போது தான் அவன் ஆண்மகன்!

ஒருவேளை தனது தனிப்பட்ட உரிமைக்காக அவன் பிரம்மச்சாரியாக இருந்தால் ஆணாக ஏற்றுகொள்ளமாட்டீர்கள் அப்படி தானே!

வால்பையன் said...

//இந்து மதத்துல என்னா சொல்றாய்ங்கன்னா, கடவுள நம்பாதவனும் இந்து, நம்புறவனும் இந்து அப்படின்னு.//

அப்படின்னு நாங்க சொல்லிகிட்டோமா!
நான் பிறப்பால் இந்து என்று கூட சொல்வதில்லை! அதுக்கு உங்களுக்கு தெரிஞ்சது தான் உண்மை என்பது போல் பேசுகிறீர்கள்!

நிறைய நாத்தீகவாதிகள்
கடவுளோடு, மதம் மற்றும் சாதியையும் சேர்த்து எதிர்க்கிறார்கள்

தமிழ்ப்பதிவன் said...

/// //இப்ப ஒருத்தர ஆண்மகன் அப்டின்னு சொன்னா அதுக்கேத்த தன்மையும் தகுதியும் அவர்ட்ட இருக்கணும் இல்லீங்களா?, அதே மாதிரி, பெண்மகள்ன்னு ஒருத்தரச் சொன்னாலும் அதுக்கான தகுதிகள் இருக்கோணும். அப்படித்தானே.//

அதாவது ஆணாக பிறந்தவன்! தனக்கு மனை கிடைக்காவிட்டாலும் எவளையாவது பிடித்து கற்பழிக்க வேண்டும் இல்லையா! அப்போது தான் அவன் ஆண்மகன்!

ஒருவேளை தனது தனிப்பட்ட உரிமைக்காக அவன் பிரம்மச்சாரியாக இருந்தால் ஆணாக ஏற்றுகொள்ளமாட்டீர்கள் அப்படி தானே!///

வால் பையன் அண்ணே,
நீங்க தப்பா புரிஞ்சுக்கற அளவுக்கு நாந்தேன் தப்பா சொல்லிட்டேன் போல.
ஆண்மகன் உதாரணத்த விட்டுட்டு, பெண்மகள் உதாரணத்த எடுத்துக்குங்கண்ணே, ப்ளீஸ்



/// //இந்து மதத்துல என்னா சொல்றாய்ங்கன்னா, கடவுள நம்பாதவனும் இந்து, நம்புறவனும் இந்து அப்படின்னு.//

அப்படின்னு நாங்க சொல்லிகிட்டோமா!
நான் பிறப்பால் இந்து என்று கூட சொல்வதில்லை! அதுக்கு உங்களுக்கு தெரிஞ்சது தான் உண்மை என்பது போல் பேசுகிறீர்கள்! ///

இல்லண்ணே, நீங்கள்ளாம் சொல்லிக்கல தான். இந்து மதத்துக்காரவய்ங்க தான் அப்படி சொல்லிக்கறாய்ங்க. சார்வாகமும் இந்து தத்துவம்தான்னு. சார்வாகன்னா கடவுள் மறுப்பாளன்.

வால்பையன் said...

//சார்வாகமும் இந்து தத்துவம்தான்னு. சார்வாகன்னா கடவுள் மறுப்பாளன். //

இந்து மதம் ஆரம்பித்த புதிதிலேயே இரண்டாக பிரிந்து விட்டது!

த்வைதம், அத்வைதம் என்று!
ஒன்று உருவ வழிபாடு, மற்றொன்று உருவ வழிபாட்டை எதிர்ப்பது!

என்னது வழிப்பாட்டையே எதிப்பது
அத்ற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை!

தமிழ்ப்பதிவன் said...

ஜி,
உங்க கமெண்ட் சரியாகவும், தெளிவாகவும் இருக்கிறது

ராஜ நடராஜன் said...

ஆட்டத்துல கலந்துக்கலாமா?

முதலில் நீங்கள் இஸ்லாமியர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்பவர்களே இஸ்லாமியர் என்ற குழுவில் வருகிறார்கள்.இந்திய,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இந்தோநேசியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களை அரபியர்கள் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.இவர்கள் மட்டுமே தங்களை இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.பதிலாக மதம் தழுவியவர்கள் என்ற நிலைக்கு மட்டுமே சொந்தக்காரர்கள் எனக் காணப்படுகிறார்கள்.

இனி உங்கள் தலைப்பு தவறாக இருக்கலாம் என நினைக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் Druz (துருஷ்)என்ற இனம் உண்டு.இவர்கள் அமெரிக்கா,ஐரோப்பா,இஸ்ரேல்,சிரியா,பாலஸ்தீனம்,ஜோர்டான்,வளைகுடா முக்கியமாக லெபனான் நாட்டில் எண்ணிக்கை குறைந்தபடியால் பெரும்பான்மையானவர்களுக்கு தெரிவதில்லை.இவர்கள் அடிப்படையில் இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் எந்தக் கடவுளையும் மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை.உதாரணத்துக்கு இவர்கள் 5 முறை தொழுகை,ரமதான் உபவாசம்,பக்ரீத்,வாழ்வில் ஒரு முறை சவுதி பயணம் போன்றவைகளைக் கொண்டாடுவதில்லை.

சல்மான் ருஸ்டி,தஸ்லிமா போல தனி மனிதர்களாய்ப் பிரித்துப் பார்க்காமல் இவர்கள் ஒரு இனமே நாத்திக மனப்பான்மை கொண்டவர்கள் எனலாம்.

மதம்,நம்ம ஊரு நாத்திகம் போன்ற நிலைகளையும் கடந்து விட்டேன் என உணர்வதால் எனது பின்னூட்டம் நடுநிலைக் கண்ணோட்டத்தில் காணவேண்டுகிறேன்.

Dr.Rudhran said...

மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.

ராஜ நடராஜன் said...

//மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.//

டாக்டர் ருத்ரனின் பின்னூட்டம் யோசிக்க வைக்கவும் அதே சமயத்தில் என்னைக் குழப்பவும் செய்வதால் நான் யோசித்து விட்டே வருகிறேன்.

KANTHANAAR said...

மதம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டு விட்டாலே அவன் நாத்திகன் இல்லை இது ஒரு சாதாரண வாய்பாடு போல...2+2=4 என்பதைப் போல... முதலில் இதில் குழப்பம் வேண்டாம்.. பிறப்பால் இசுலாமியராகப் பிறந்து கம்யூனிஸ்டாக, நாத்திகனாக இருப்பவர்கள் உண்டு.. இந்து மதத்தைக் காட்டிலும் இசுலாம் சமீப கால மதமாக (latest) இருப்பதால் சற்று பிரபலம்.. என்ன ஒரு விசயம் என்றால் ஒருவர் இந்து மதத்திலிருந்து நாத்திகனாக மாறுவது வெகு சுலபம்.. காரணம்.. இங்கு சாதிக் கொடுமைகள் அதிகம்.. மற்ற மதத்தில் இந்த சமாச்சாரங்கள் குறைவு..
கந்தசாமி

மணிகண்டன் said...

ருத்ரன் சார்,
*****
மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.
******

தலைப்பு sensationalaa வச்சா தான் மக்கள் வருவாங்க. வருன் கேக்க நினைத்த கேள்வி, இஸ்லாமியராக பிறந்து நாத்திகராக மாறியவர்கள் இருக்கிறார்களான்னு ?

offcourse, நிறைய பேரு இருக்காங்க.

தமிழ்ப்பதிவன் said...

//இந்திய,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இந்தோநேசியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களை அரபியர்கள் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.//

பதிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாததும், அப்பட்டமாக உண்மைக்கு மாறுபட்டதும்.

பல இந்திய முஸ்லிம்களுக்குப் பின்னால் அணிவகுத்து அராபியர்கள் தொழுவதைக் கண்டிருக்கிறேன்.

அரைகுறையாகத் தெரிந்திருப்பதால் தான் அதிகப் பிரசினைகள்

வால்பையன் said...

//பல இந்திய முஸ்லிம்களுக்குப் பின்னால் அணிவகுத்து அராபியர்கள் தொழுவதைக் கண்டிருக்கிறேன்.//

தொழுகையின் போது இருந்தாலும், பெரும்பாலும் இந்திய முஸ்லீம்கள் மதம் மாறி வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பதாக அம்மிரகத்தில் வேலை செய்யும் இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்களே!

Unknown said...

//தொழுகையின் போது இருந்தாலும், பெரும்பாலும் இந்திய முஸ்லீம்கள் மதம் மாறி வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பதாக அம்மிரகத்தில் வேலை செய்யும் இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்களே!//

அப்படி சொல்றவங்க இஸ்லாத்தின் அடிப்படை தெரியாமல் சொல்றவங்களா தான் இருக்கணும். ஏன்னா இஸ்லாம்ல convertedன்னு சொல்ல மாட்டாங்க, revertedன்னு தான் சொல்வாங்க. நான் சொல்றது சரியா தமிழ்பதிவன்?

Unknown said...

//இந்திய,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இந்தோநேசியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களை அரபியர்கள் இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.//

இதென்னங்க புதுக்கதையா இருக்கு? நான் சவுதி அரேபியாவில் 9 வருஷமா இருக்கேன், நான் பார்த்தவரையில் அரபியர்கள் நீங்கள் குறிப்பிடும் நாட்டவர்களை அப்படி நடத்துவது இல்லை. அது தொழுகையாக இருந்தாலும் பிற வழக்கங்களாக இருந்தாலும்.

Unknown said...

//மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.//

டாக்டர் ருத்ரனின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். நாத்திகம்ன்னு வந்துட்டா பிறகு அங்கே இந்துவா, கிருஸ்துவனா, இஸ்லாமியனா என்ற பேச்சிற்கே இடமில்லை. வேணும்ன்னா நாத்திக மதத்தைச் சேர்ந்தவன்னு சொல்லிக்கலாம் :-).

வருண் said...

***Dr.Rudhran said...
மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.***

Dear Dr. Rudhran,

Well, it seems you have understood the intention of the question. Why did not you keep quiet then? You wnat to show how intelligent you are I suppose? What is the need for it?

Why do you have to answer and speculate "what you think as the intention?" instead of addressing the question oR IGNORING IT like a gentleman?

You should learn to ignore instead of instigating with false claims if you think you are a "gentleman" who is genuine as you pretending to be!

Take care!

வருண் said...

*** வால்பையன் said...
//பல இந்திய முஸ்லிம்களுக்குப் பின்னால் அணிவகுத்து அராபியர்கள் தொழுவதைக் கண்டிருக்கிறேன்.//

தொழுகையின் போது இருந்தாலும், பெரும்பாலும் இந்திய முஸ்லீம்கள் மதம் மாறி வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பதாக அம்மிரகத்தில் வேலை செய்யும் இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்களே!***

உண்மைதான். இந்தியாவில் உள்ளவர்கள் இஸ்லாமானவர்கள்!

பீர் | Peer said...

The first common term is between Muslims and Others, “that we worship none but Allah”. So if anyone neither believe nor worship Allah will be consider as Non Muslim. Hence who believe and worship Allah only to be in Islam and called as Muslim.

பீர் | Peer said...

You can have a pdf copy of “Concept of God in Major Religion” a speech by Dr. Zakir Naik, from the below link.

http://www.mediafire.com/?jmjrwzdi2rj

வருண் said...

***kantha said...
மதம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டு விட்டாலே அவன் நாத்திகன் இல்லை இது ஒரு சாதாரண வாய்பாடு ***

As far as I know, In TN, I dont think any atheist is 100% unless you are "doctor rudhran" himself.

If you dig deep into it their thoughts will be revealed properly!

They will come and make some sweeping statements and run away!

Ask Dr. Rudhran, whether he ever used minority quota and what he claimed as he is in papers if he remembers!

வருண் said...

***Peer said...
The first common term is between Muslims and Others, “that we worship none but Allah”. So if anyone neither believe nor worship Allah will be consider as Non Muslim. Hence who believe and worship Allah only to be in Islam and called as Muslim.

1 April, 2009 7:23 AM ***

I mean "born to parents who beleive in muslim religion". I am sure such peole have been taught religion when they were young because of their parents' influence.

e.g. People like "Salman Rushdie"!

Thanks Peer for stopping by :-)

Unknown said...

வருண்ணு பேருவச்சாலே பிரச்சனைதான் போலிருக்கு :)

ஒருத்தன் நாத்திகனா இருந்தா, எந்த மதத்தையும் பின்பற்றலைனுதானே அர்த்தம். இஸ்லாமியர் என்றாலே, ஓரிறை (கடவுள் ஒன்றே) கொள்கையை பின்பற்றுகிற‌வர் என்றுதான் அர்த்தம். சில பேர் கூறியது போல ருஷ்டி, தஸ்லீமா என்பவர்கள் அவர்களது சொந்த கொள்கையை வைய்த்துள்ளனர், தஸ்லீமாவிற்கு கர்ப்பபை சுதந்திரம் வேண்டுமாம்.

ஒரு முஸ்லீம் நம்ப வேண்டிய, சில முக்கியமனது...

1. கடவுள் ஒன்றே
2. கடவுளுக்கு இணை துனை எதுவும் கிடையாது
3. கடவுள் யாராலும் பெறவும் இல்லை, யாரையும் பெறப்படவும் இல்லை
4. கடவுளுக்கு நிகராக எதுவும் இல்லை
5. இவ்வுலகம் ஒன்றும் இல்லாது இருந்தது, எந்த முன்மாதிரி இல்லாமல் இறைவனால் படைக்கப்பட்டது.
6. நாம் வாழும் வாழ்கை நிர‌ந்த‌ர‌மான‌து இல்லை
7. இவ்வுலகம் ஒருநாள் அழிக்க‌ ப‌டும், இற‌ந்த‌வ‌ற்க‌ள் மீண்டும் எழுப்ப‌ப‌ட்டு, அவ‌ர்க‌ள் செய்த‌ ந‌ன்மை, தீமைக்கு த‌குந்த‌வாறு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப‌டும்.
8. கடவுளால் ப‌ல‌ தூதுவ‌ர்க‌ள் ம‌க்க‌ளுக்கு ந‌ல்வ‌ழிப‌டுத்துவ‌த‌ற்கு அனுப்ப‌ப‌ட்ட‌ன‌ர் (ஏசு கிறிஷ்து, முஹ‌ம்ம‌து)

இஸ்லாத்தை அப்ப‌டியே ஏற்றுக்க‌ இறைவ‌ன் கூற‌வில்லை... ந‌ன்கு குரானை ஆராய்து பார்த்து ஏற்க‌ கூறிகிறான்.


வ‌ருண், குரானில் உள்ள் ஒரு வ‌ச‌ன‌ம்.
இஸ்லாத்தில் எந்த‌ நிர்ப‌ந்த‌மும் இல்லை...

நட்புடன்.
மஸ்தான்

வருண் said...

மஸ்தான்:

நீங்க பேரை வச்சு ஆளை எடைபோட்டால் கஷ்டம்தான் ;-)

நான் சொல்ல வர்றது என்னவென்றால்..

இன்று இஸ்லாமை ஃபாலோ பண்ணுபவர் ஒருவர் நாளை மாறலாம். அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம்.

அப்படிப்பட்டவர்களை "நாத்தீக இஸ்லாமியர்" என்கிறேன்.

அவர்கள் எண்ணங்கள் பற்றி பேச ஆசை. மேலும் அவர்கள் எண்ணிக்கையை கணக்கிடுகிறேன் :-)

பீர் | Peer said...

\\இன்று இஸ்லாமை ஃபாலோ பண்ணுபவர் ஒருவர் நாளை மாறலாம். அவருக்கு நம்பிக்கி இல்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர்களை "நாத்தீக இஸ்லாமியர்" என்கிறேன்.\\

அவர் "நாத்தீக இஸ்லாமியர்" அல்லர். நாத்தீகர் என வேண்டுமானால் சொல்லலாம்.

வருண், பிறப்பால் ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது, நான் மற்றும் சகோதரர் மஸ்தான் சொன்னதுபோல நம்பிக்கை கொண்டு அதை தனது வாழ்க்கை நெறியாக்கி கொண்டவர் மட்டுமே முஸ்லீம் ஆவார்,
மற்றுமோர் தகவல்; அவ்வாறு நம்பி வாழ்பவர் நிச்சயமாக பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடமாட்டார்.
நன்றி...

வருண் said...

***அவர் "நாத்தீக இஸ்லாமியர்" அல்லர். நாத்தீகர் என வேண்டுமானால் சொல்லலாம்.***

I agree, they are atheist today but the way they had been taught religion is different from what a "former hindu" or "former christian" had been taught.

I hope you get my point!

So, they may be an atheist but their past experience is different. I just want to keep that "past religion label" on purpose to see how they went on become an atheist and how they came out of their past experience and former religion.

பீர் | Peer said...

Yes Varun, I got your point. Again…
நான் சொல்ல வருவதும்,
உங்கள் தலைப்பை சார்ந்தே.. ஏன் இஸ்லாமியர் நாத்தீகர் ஆவது அரிதிலும் அரிது?
"யார் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் (மேல் சொன்னவாறு) கடைபிடிகின்றர்களோ அவர்கள் அதை விட்டு விட்டு நாத்தீகராவது அரிது"

வருண் said...

***ராஜ நடராஜன் said...
ஆட்டத்துல கலந்துக்கலாமா?

முதலில் நீங்கள் இஸ்லாமியர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்பவர்களே இஸ்லாமியர் என்ற குழுவில் வருகிறார்கள்.***

நடராஜன்:

ஒருவர் இஸ்லாமிராக பிறந்து, இஸ்லாமை ஃபாலோ செய்து பிறகு மத/கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகலாம்.

அதுபோல் ஆகிறவர்களை "நாத்தீக இஸ்லாமியர்" என்று சொல்லி இருக்கேன்.

இஸ்லாமில் உள்ள பிரிவுகளை விட்டு விடலாமே, ப்ளீஸ்

வருண் said...

***ராஜ நடராஜன் said...
//மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.//

டாக்டர் ருத்ரனின் பின்னூட்டம் யோசிக்க வைக்கவும் அதே சமயத்தில் என்னைக் குழப்பவும் செய்வதால் நான் யோசித்து விட்டே வருகிறேன்.***

Well, Dr.Rudhran should spend his time to treat his patients instead of talking some nonsense like this here!

I want to differentiate atheists based on their former religion.

A "former hindu" and "former muslim" did not believe the same before they become a non-believer. They had not been taught same things. So, there is a difference between these people. I want to keep their former religion intact for this analysis.

வருண் said...

***ராஜா said...
//மதம் என்று ஏற்றுக்கொன்டாலே அங்கே நாத்திகம் இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் கேள்வி.//

டாக்டர் ருத்ரனின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். நாத்திகம்ன்னு வந்துட்டா பிறகு அங்கே இந்துவா, கிருஸ்துவனா, இஸ்லாமியனா என்ற பேச்சிற்கே இடமில்லை. வேணும்ன்னா நாத்திக மதத்தைச் சேர்ந்தவன்னு சொல்லிக்கலாம் :-).

1 April, 2009 6:43 AM ***

ராஜா, இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவங்களுடைய முந்தய மதம், நம்பிக்கை ஒன்று அல்ல.

அவர்கள் தூக்கி எறிந்தவைகள் ஒன்று அல்ல.

அதனால், என்னைப்பொறுத்தவரையில் இவர்கள் வேறுபட்டவர்கள்.

நீங்களும், "டாக்டர் சோ அண்ட் சோ" வும் ஒதுங்கி வேற திரியில் உங்க பொன்னான நேரத்தை செலவு செய்யவும். நன்றி.

Unknown said...

//நீங்களும், "டாக்டர் சோ அண்ட் சோ" வும் ஒதுங்கி வேற திரியில் உங்க பொன்னான நேரத்தை செலவு செய்யவும். நன்றி.
//

"என் வழியிலே பேசறதுன்னா பேசு, இல்லைன்னா அது நான்சென்சு" - நல்லா இருக்குங்க உங்க ஜனநாயகம் :-). அரைவேக்காடுகளோடு என் பொன்னான நேரத்தைச் செலவு செய்ய நானும் விரும்பவில்லை.

வஜ்ரா said...

இஸ்லாமிய மார்கத்தின் படி கடவுளை மறுப்பவன் இஸ்லாமியன்அல்ல.

www.faithfreedom.org பார்த்தால் உங்களுக்கு கடவுள் மற்றும் இஸ்லாத்தையே மறுத்த இஸ்லாமியர்கள் கிடைப்பார்கள்.

வருண் said...

****ராஜா | KVR said...
//நீங்களும், "டாக்டர் சோ அண்ட் சோ" வும் ஒதுங்கி வேற திரியில் உங்க பொன்னான நேரத்தை செலவு செய்யவும். நன்றி.
//

"என் வழியிலே பேசறதுன்னா பேசு, இல்லைன்னா அது நான்சென்சு" - நல்லா இருக்குங்க உங்க ஜனநாயகம் :-). அரைவேக்காடுகளோடு என் பொன்னான நேரத்தைச் செலவு செய்ய நானும் விரும்பவில்லை.******

திரு. ராஜா!

உங்கள் புரிதலுக்கு நன்றி! நான் அரைவேக்காடுதான் மதம் என்ற ஒரு சப்ஜக்ட் வரும்போது.

I am proud of being an ignorant moron when it comes to RELIGION!
:-))))

Take care! :))))

வருண் said...

****Vajra said...
இஸ்லாமிய மார்கத்தின் படி கடவுளை மறுப்பவன் இஸ்லாமியன்அல்ல.

www.faithfreedom.org பார்த்தால் உங்களுக்கு கடவுள் மற்றும் இஸ்லாத்தையே மறுத்த """இஸ்லாமியர்கள் """கிடைப்பார்கள்.,****

Read your own sentence and tell me why you still call them """IlamiyarkaL!""" when they no longer follow Islam ?

That is what I have done too!