Tuesday, December 21, 2010

காதலிப்பது எளிது- நெஜம்மாவே ஒரு உண்மைக்கதை!

அடுத்தவாரம் கணேஷுக்கும் ராஜிக்கும் திருமணம்!

"வனிதா! கல்யாணத்திற்கு உனக்கு மட்டும்தான் அழைப்பு! காமேஷ்க்கு இல்லை!" என்று தெளிவாக சொல்லிவிட்டாள் ராஜி. அவளால் தன் கல்யாணத்தில் காமேஷை பார்க்கும் தைரியம் இல்லை.

--------------

ராஜியின் தோழி வனிதா, இப்போது காமேஷுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால் இரண்டு வருடம் முன்புவரை, இதே காமேசும் ராஜியும் காதலர்கள்.

அடுத்த வாரம் ராஜி மணக்கப்போகும் கணேஷை, டேட் செய்யும் முன்னால் காமேஷும், ராஜியும் லிவிங் டுகெதரில் ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் . சும்மா சொல்லக்கூடாது ராஜிக்கு காமேஷின் காதலும் காமமும் இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் காமேஷ் அன்றுவரை அவளை மணந்துகொள்ள தயாராயில்லை. மேலும் காமேஷ்க்கு இன்னும் ஒரு நிரந்தர வேலை இல்லை. வேலையில்லை என்பதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலையும்யில்லை. ஆனால் நாளாக ஆக ராஜிக்கு காமேஷ் வாழ்நாள்பூராம் இப்படியே லிவிங் டுகெதரிலேயே வாழ்ந்துவிடுவான் போல என்கிற பயம் வர ஆரம்பித்தது.

ராஜி அப்பொழுதுதான் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்து இருந்தாள். ஹெல்த் இண்சூரன்ஸ் மற்றும் எல்லாவிதமான பெனிஃபிட்ஸும் கவர் ஆனது. ராஜிக்கு கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் காமேஷ், கல்யாணம் என்கிற விசயத்துக்கு ரெடி இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தாள். அதாவது காமேஷ் ஒரு "டிப்பெண்டபில்" பார்ட்னெர் இல்லைனு சந்தேகமே இல்லாமல் விளங்கியது. மற்றபடி காமேஷிடம் எந்தக்குறையும் இல்லை. உண்மையிலேயே இப்போது ராஜி மணக்கப்போகும் கணேஷுக்கும் ராஜிக்கும் நெறையவே டேஸ்ட் வித்தியாசம் உண்டு. ஆனால் கணேஷ் இஸ் ரெடி ஃபார் பிக் கம்மிட்மெண்ட்ஸ். அவனை நிச்சயம் நம்பலாம், ராஜியைவிட ரொம்ப மெச்சூராக நடந்துகொளவான்.

-----------

இரண்டு வருடம் முன்னால், காமேஷிடம் கடைசியாக ராஜி, "நம்ம திருமணம் எப்போது?" என்று கேட்டாள்.

"எனக்கு இன்னும் ஒரு நிலையான வேலை இல்லை ராஜி. ஹவ் கேன் ஐ?" என்றான் காமேஷ்.

"அப்போ நீங்க வெளியேறுறீங்களா இல்லை நான் வெளியேறவா? ஐ டோண்ட் வாண்ட் டு லிவ் வித் யு ஃபார் எவெர்! ஐ வாண்ட் டு கெட் மேரிட் அண்ட் ஹாவ் கிட்ஸ். ஐ லவ் யு பட் ஐ வாண்ட் யு டு மேரி மி! நீங்க அதுக்கு தயாரா இருப்பதுபோல தெரியலை" என்றாள் ராஜி முடிவாக.

"ஐ ஹாவ் டு கோ நவ்" என்று வேலைக்கு கிளம்பினான் காமேஷ். அவனுக்குக் கோபமே வராது.

அதன்பிறகு காமேஷ், இன்னொரு அப்பார்ட்மெண்ட் பார்த்து வெளியேறினான். ராஜிக்கு முதலில் பயங்கர கஷ்டமாக இருந்தது. பிரிந்தபிறகு ஏதாவது பில் பேமெண்ட் சம்மந்தமாக காமேஷ் கால் பண்ணினால் அவளுக்கு அழுகையே வந்துவிடும். ஷி ரியல்லி லவ்ட் ஹிம்! ஈவென் ஆஃப்டெர் "ப்ரேக் அப்" ஷி லவ்ட் ஹிம். ஈவன் டுடே ராஜி லவ்ஸ் ஹிம்!

---------------------------

காமேஷுடன் "ப்ரேக் அப்" க்கு பிறகுதான் கணேஷை சந்தித்தாள், ராஜி. கணேஷ் அப்போதுதான் அவன் முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தான். ராஜியும், கணேஷும் ஒரு வருடம் டேட் பண்ணினார்கள். பிறகு ராஜி, கணேஷ் வீட்டிற்கு ஷிப்ட் ஆனாள், தே லிவ்ட் டுகெதெர் ஃபார் ஒன் யியர். அடுத்த ஆறுமாதத்தில் கணேஷிடம் கல்யாணப்பேச்சை எடுத்தாள், ராஜி. கணேஷ், உடனே "சரி" என்றான்.

கணேஷுக்கு அவன் முதல் மனைவி வித்யாவுடன் குழந்தைகள் எதுவும் இல்லை. அவங்க டிவோர்ஸும் பிரச்சினை இல்லாமல் முடிந்தது. ஆனால் கணேஷுக்கு ஒரு மகள் இருந்தாள். கணேஷுடன் அவன் மகள் வாழவில்லை. யாருக்குப் பிறந்த மகள் அவள்?

கணேஷ் ஹை ஸ்கூலில் ஜூனியர் (11ம் வகுப்பு) படிக்கும்போது அவனுக்கு வத்சலா என்கிற செக்ஸியான ஒரு கேர்ல் ஃப்ரெண்டு இருந்தாள். வத்சலாவுடன் மிகவும் நெருங்கிப் பழகினான், கணேஷ். இருவரும் அடிக்கடி வரம்பு மீறியாதால் வத்சலா "ப்ரக்ணெண்ட்" ஆகிவிட்டாள். அப்போது அவளுக்கு வயது 16. கணேஷுக்கும் வயது 16 தான். இந்த விசயம் வெளியே வந்தது, கணேஷ் அம்மா கணேஷை தண்டிக்கும் வகையில் அவனிடம் 5 வருடம் பேசவே இல்லை. வத்சலா, கணேஷ் இருவரும் பள்ளி கவுண்சலரிடம் பேசினார்கள். அந்த குழந்தையை வத்சலாவும்க்கு "அபார்ஷன்" செய்ய இஷ்டமில்லை! அதே சமயத்தில் அந்த குழந்தையை "அடாப்ட்" செய்ய வெகு நாட்கள் குழந்தையில்லாத ஒரு தம்பதிகள் ரெடியாக இருந்ததால், குழந்தை பிறந்த உடனேயே "அடாப்ஷனுக்கு" வத்சலா-கணேஷ் குழந்தையைக் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு கணேஷுக்கு எதுவுமே தெரியாது. வத்சலாவை மறந்தே போய்விட்டான். கணேஷும் வத்சலாவும், அவர்கள் குழந்தையும் வேறு வேறு பாதையில் போய்விட்டார்கள். ஒருவருக்கொருவர் எந்தவிதமான சம்மந்தம்மோ தொடர்போ அதன் பிறகு இல்லை!

கணேஷ்க்கு ஒரு 3 மாதங்கள் முன்னால் ஒரு தெரியாத நபரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது . அடுத்த முனையில் ஒரு 17 வயது பெண் பேசினாள். அவள், தன் பெயர் அகதா என்றும், கணேஷ்தான் அவளுடைய பயாலஜிக்கல் அப்பா என்றும் சொன்னாள். "ஜஸ்ட் ஐ வாண்ட்டெட் டு ஸே ஹாய் டு யு அஸ் யு ஆர் மை பயாலஜிக்கல் ஃபாதர்" என்று முடித்துவிட்டாள் அந்தப் பெண். அவளிடம் பேசிமுடித்த கணேஷ் ஐந்து நிமிடங்கள் ஷாக் ஆகி இருந்தான். பிறகு அருகில் இருந்த ராஜிடம் எல்லாவற்றையும் சொன்னான். "கண்க்ராஜுலேஷன்ஸ்! யு ஆர் எ டாட் நவ்" என்றாள் ராஜி கிண்டலாக. அவளுக்கு கணேஷ் மூஞ்சியை பார்த்தால் சிரிப்பா வந்தது.

குறிப்பு: இது நெஜம்மாவே அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக்கதைதான். பேரையெல்லாம் தமிழ்ப் பெயராக மாற்றியுள்ளேன்.

5 comments:

pichaikaaran said...

வித்தியாசமாக இருந்தது

வருண் said...

கலாச்சார முன்னேற்றம்னா இதுதாங்க! இதையெல்லாம் சாதாரணமாக் ஏற்றுக்கொள்ள்ளும் மனப்பக்கும்வம் நம் மக்களிடம் உண்டா? இல்லை "என்னால முடியும்"னு வாயளவில் சொல்றாங்களானு தெரியலை.

தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க பார்வையாளன். :)

Madurai pandi said...
This comment has been removed by the author.
Madurai pandi said...

marupadiuma?? but indha story namma ooruku othu varadhu...

வருண் said...

**மதுரை பாண்டி said...

marupadiuma?? but indha story namma ooruku othu varadhu...
22 December 2010 1:02 AM ****

:-))))

இடை சாதாரண கதையாப் பாருங்க. ஒரு 50 வருடம் சென்று இதை வாசிப்பவர்கள், என்னுடைய "விஷனை" பாராட்டலாம்! யார் கண்டது?