Friday, February 26, 2010

ஜப்பானிய ஆண்களும் கேவலமானவர்கள்தான்!

பஸ்ல கூட்டமாக இருந்தால் பெண்கள் மேலே கை வைக்கும் கேவலமான ஆண்கள் நிறைந்தது நம் தமிழ்நாடு. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. பொதுவாக கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் நடக்கும். இந்த உலகத்தில் எந்த ஆம்பளையைத்தான் நம்புறதுனு தெரியலைனு பெண்கள் குழம்பி ஆண் இனத்தையே வெறுப்பதும் உண்டு.

ஜப்பான் என்றால் கார் தயாரிப்பு, சுறுசுறுப்பு போன்ற நல்ல விசயங்களுக்குத்தான் பேர் போனது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் ஜப்பானிய ஆண்கள் நம்ம மக்களைவிட கேவலமானவர்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜப்பானில் அதுவும் டோக்கியோவில் படுவேகமாகப் போகும் ரயிலில் பயங்கர கூட்டம் இருப்பதுண்டு. அதனால் இளம்பெண்கள், டீனேஜர்களை ஜப்பானிய ஆண்கள் “க்ரோபிங்” மற்றும் “மொலெஸ்ட்டிங்” செய்வது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோல் நடக்கும் குற்றங்களை ஜப்பானிய காவல்துறையினரால் இன்றுவரை முழுமையாக நிறுத்த முடியவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், ஒரு பெண் இதுபோல் கற்பழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் போகும் ஆண்கள் ஜப்பானில் மிகமிக அதிகமாம்!

இதில் பலியாவது, கொஞ்ச வயது டீனேஜர்கள், ஹை ஸ்கூலில் படிக்கும் மாணவிகள். 2006ல் எடுத்த ஒரு சர்வேயின் படி ரயிலில் பயண்ம செய்யும் 70% மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். 17% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

இதனால் சமீபத்தில் “பெண்கள் மட்டும்” பெட்டிகள் விடப்பட்டது! இதில் பயணம் செய்யும்போது இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இந்த பெண்கள் பெட்டி விட்டபிறகு இன்னொரு பிரச்சினை என்னவென்றால் பெண்கள் மட்டும் பெட்டியில் போகாமல் வேறு பெட்டியில் ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஏறிவிட்டால், அந்தப்பெண்ணை “க்ரோப்பிங்” “மொலெஸ்டிங்” “ரேப்பிங்” பண்ணுவது சர்வசாதாரணம்.

இது சம்மந்தமான ஒரு ஆர்ட்டிக்கிள் இந்த டைம் ல வந்துள்ளதையும் பார்க்கவும்!

2 comments:

nila said...

ஆண்கள் வர்கத்தில் யோகியமானவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.... நம்ம ஊர் பஸ்களிலும் சீட்டுக்கு சைடுல கையவிடுற நாய்களும், சீட்டுக்கு அடில இருந்து கைய பேய்களும் இருக்குறத நம்மால மறுக்க முடியாது... உண்மைய சொல்ல போனா... இப்போவும் பஸ்ல போகும் பொது என்னை அறியாமையே நூறு தடவ திரும்பித்திரும்பிப் பாக்குற பழக்கம் வந்துடுச்சு... காரணம் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்க ஏதோ ஒரு பயம்தான்.... இதெல்லாம் என்னிக்கு மாறும்னுதெரியலை

வருண் said...

***nila said...
ஆண்கள் வர்கத்தில் யோகியமானவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.... நம்ம ஊர் பஸ்களிலும் சீட்டுக்கு சைடுல கையவிடுற நாய்களும், சீட்டுக்கு அடில இருந்து கைய பேய்களும் இருக்குறத நம்மால மறுக்க முடியாது... உண்மைய சொல்ல போனா... இப்போவும் பஸ்ல போகும் பொது என்னை அறியாமையே நூறு தடவ திரும்பித்திரும்பிப் பாக்குற பழக்கம் வந்துடுச்சு... காரணம் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்க ஏதோ ஒரு பயம்தான்.... இதெல்லாம் என்னிக்கு மாறும்னுதெரியலை***

I am sure at least millions of women feel just like you are but they hesitate to speak about this openly. It is a nightmare for women to travel in the buses as men are behaving like sex-starved ANIMALS. Men are TOO STUPID to realize somthing so simple.

If there were undercover police who can catch these bastards with evidence (a cell phone camera can be used for these purposes by cops instead of abusing them) and punish them, then it will stop.

We really have to execute our law and order pretty seriously to achieve this.

Thanks for sharing your thoughts, nila.