Friday, April 16, 2010

சுழியம் என்கிற மதவெறியனின் பிதற்றல்கள்!

கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! ஆனால் மதவெறி பிடித்தவர்களுக்கு விளங்காது! மதவெறி தலைக்கேறிவிட்டால், யாரையும் , யாருடைய செயலையும் பகுத்தறிய முடியாது! ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.

அது பழைய விசயம் என்றெல்லாம் விட்டுவிடமுடியாது! இதுபோல் மதவெறியர்கள் இன்னைக்கும் இருக்கார்கள் என்பதை இந்த "சுழியம்" என்கிற ஒரு மதவெறியரின் தொடர் பின்னூட்டங்களில் இருந்து அறியலாம்!

ஆன்மீகம் பற்றி திருமதி உஷா அவர்கள் ஒரு பதிவு எழுதியுள்ளார்கள். எங்கே இவர் சிந்தனையத்தான் பார்ப்போமேனு போய் பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டமிட்டேன்.

சரி வேற என்ன பின்னூட்டங்கள் இருக்குனு பார்ப்போம்னு பார்த்தால்...

தன்னால் முடிந்த அளவுக்கு திறந்தமனதுடன் எழுதிய திருமதி உஷாவின் பதிவில் இந்த மத வெறியர் (சுழியம்)போட்ட பின்னூட்டங்களில் ஒரு சின்னப் பகுதி இது! இந்தக்குப்பையை வாசிக்காமல் விட்டுட்டு மேலேயும் போகலாம்!

---------------------------------

****சுழியம் சொல்வது...

அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிற, பிறசாதியினருக்கும் மரியாதை தருகின்ற, தலித்துகளின் குடிசைகளுக்குச் செல்லுகின்ற இந்த சங்கராச்சாரியாரைக் கேவலப்படுத்துவதில் பல சடங்காச்சார பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுகூட நியாயம்தான்.

ஆனால், இப்படி தலித்துகள் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு உதவி செய்ய அமைப்புகளையும் ஏற்படுத்திய ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மேல் கிறுத்துவ அமைப்புகள் பொய்யான புகார்களைப் போட்டு அழிக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.

அவரின்மேல் உள்ள ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் போய்விட்டன. இருந்தாலும், அவர் குற்றமற்றவர் என்ற உண்மையைச் சொல்லாமல் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. கேஸ் இழுத்தடிக்கப்படுகிறது.

எல்லாம் பகவான் பார்த்துக்கொடுதான் இருக்கார்! சங்கர் ராமன், அனுராதா ரமணன், நம்ம செயேந்திரர் எல்லாரையும் ஒண்ணாக்கூட்டிப் பேசி, ஒரு முடிவுக்கு வருவார்!

அவர் மேல் உள்ள கேஸ் வாபஸ் செய்ய வேண்டும் என்றால், அவர் மடத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேரம் பேசிய இந்து பத்திரிகை அதிபர் பற்றி யாரும் பேசப் போவதில்லை. ஜனகல்யாண் அமைப்பின் சாதனைகளைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை.

அவருடைய நிலைக்கு இணையான ஒரு போப்பை விடுங்கள், தமிழ் நாட்டில் சிறுவர்களைப் புணரும் கிறுத்துவப் பாதிரியார்கள் மேல் இத்தகைய பிரச்சாரங்கள் தொடருகின்றனவா? வாரம் இரண்டு கொலைகளைச் செய்யும் இசுலாமிய சகோதரர்களைப் பற்றி...?

அத்னால இவரையும் விட்டுடுடனுமா?

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை. ஆதரவற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைப்பது முற்போக்கு என்று போதிக்கப்பட்டால் அதையும் செய்பவர்கள்தான், காஞ்சி மடாதிபதியையும் கேவலப் படுத்திப் பேசி, எழுதி கைதட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்.

தீப்பொறி ஆறுமுகம் பேச்சிற்குக் கைதட்டும் மக்கள்தான் இதற்கும் கைதட்டுகிறார்கள்.

அடுத்ததாக, மகாப் பெரியவரின்மேல் மரியாதை எனக்கு இருக்கிறது, மகாப் பெரியவரும், பெரியாரும் என்றெல்லாம் கட்டுரை எழுதி இருக்கிறேன் என்று சொல்லி உங்களது நடுநிலைமையைப் பறை சாற்றியது குறித்து.

மகாப் பெரியவரின் வாரிசு தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். பள்ளிகளும், மருத்துவமனைகளும், சமூக சேவை அமைப்புகளும் ஏற்படுத்தினார். கலைஞர்களையும், அறிஞர்களையும் கௌரவித்தார்.

அவரைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்களை அதிகம் செய்கின்றனர். தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களில் உள்ள வன்கொடுமைப் புகார்கள் எதுவும் இந்தப் பார்ப்பனர்கள் மேல் இல்லை.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதற்குத் தீர்வாக ஒரு நேர்மறையான மாற்றுப் போக்கை முன்வைத்தார்கள். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். எதையும் அழிக்கவோ உடைக்கவோ சொல்லவில்லை.

ஆனால், ஈவேரா என்ற அந்தப் பிறவி இதுவரை பேசியதில் வளர்ச்சிப் பணிகள் பற்றி ஏதேனும் பேசியிருக்கிறதா ?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறியது என்று பேசி இருக்கிறது. அதனது சாதிக்காரர்கள் தலித்துகளை ஒட்டுமொத்தமாக எரித்தபோது கண்டுகொள்ளாமல் போனது. சாதிப் புத்தி உண்டு அது மாறாது என்று வலியுறுத்தி இருக்கிறது. காசு கொடுக்காதவரைத் திட்டிப் பேசுவது, கேவலப்படுத்துவது என்ற கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது அது. பாதிரியார்கள் இந்து மதத்தைப் பற்றி தெருக்களில் செய்த வசவை, காசு வாங்கிக்கொண்டு மேடையில் செய்து பெரும்பணம் ஈட்டியது அது. கிறுத்துவப் பாதிரிகள் பேசியதைத்தான் நானும் பேசுகிறேன் என்று சொல்லாமல், இதெல்லாம் நானே சொந்தமாக யோசித்துக் கண்டுபிடித்தக் கேள்விகள் என்று வெட்கம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் பொய் சொன்னது. அதன் வாரிசுகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். உன் புத்தியில் தோன்றியதைச் செய் என்று மேடையில் பேசிவிட்டு, நான் சொல்லுவதைக் கேட்கும் முட்டாள்தான் எனக்கு வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் பேசியது இந்த ஈவேரா. நாடகமாட மேடை, மேடையில் சொன்னதை செயல்படுத்தாத நடைமுறை இதுதான் ஈவேரா. அதன் மேடைப் பேச்சைப் படித்துப் பாராட்டவும் பத்து இளிச்சவாயர்கள்.

அதனது வாரிசுகள்தான் திண்ணியத்தில் மலத்தை மனிதர் வாயில் திணிக்கிறார்கள். சாதிப் பெயரில் ஓட்டு வாங்குகிறார்கள். அவர்களிடையே கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு. வன்கொடுமை சட்டத்தின் மேல் அவர்கள்மேல்தான் புகார்கள் இருக்கின்றன.

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுவும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின்புதான் இந்தக் கொடுமைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஈவேரா என்பது சாதி வெறியின் கௌரவத் தோற்றம். அந்த மலத்தோடு, மகாப் பெரியவர் என்னும் மலரை ஒப்பிடாதீர்கள். நுனிப்புல் மேயாமல் சற்று விஷயங்களைத் தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

சுழியம் சொல்வது...
தவறான வாக்கிய அமைப்பு:

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை.

சரியான வாக்கியம்:

அரசியல் செல்வாக்கு இல்லாத, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது சாதி வெறி பிடித்தவர்களுக்கு எளிமையான வேலை.****
-----------------------------

Now, let us analyze the responses of this hindu fanatic!

This fanatic's responses are 10 times bigger than ORIGINAL POST, in which no sane person would find any fault!!! Believe it are NOT, this guy(cuziyam) is really SCARY! He filled that responses column of that blog with all his fanatic garbage and irrational thoughts!

Look at the words he uses to compare a rationalist EVR with a guy who has been accused of murdering late Sankar Raman and accused of misbehaving with a writer, anuradha ramanan!

Trust me, these religious fanatics are several folds worse than any rationalist!

They will try cover an elephant's huge butt with their tiny hand and think that they can fool the world by lying!

சரி, ஈ வெ ரா வை என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும். இந்த மதவெறியனுக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை மதிப்போம்!

* சங்கர் ராமனை யார் கொன்னது? கிறுத்தவ பாதிரியார்களா இல்லை இஸ்லாமியர் களா?

இந்துக்கள்!

* தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக சொன்ன அனுராதா ரமணன் ஒரு கிறுத்தவரா இல்லை இஸ்லாமியர்ரா?

இந்து!

மதவெறி தலைக்கேறினால் யோசிக்க முடியாது. சுழியம் இன்னொரு தளத்தில் போய் இதுபோல் பின்னூட்டங்களால், யானையை பூனையாக்க முயன்று இதுபோல் பிதற்ற மட்டும்தான் முடியும்!

13 comments:

smart said...

//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! //
ஏன் சிலர் சேர்ந்துயிருக்க கூடாது? நிர்வாகக் குழு போல?

//ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.//
உங்கள் விளக்கமே முரணாக இருக்கு, ஹிந்து வெறி என்றப்பின் ஏன் ஹிந்துவைக் கொன்றார்?. அப்போ மதத்தைவிட வேற ஏதோவொன்றில் தானே அந்த வெறியிருக்கிறது.

...
பழைய பதிவில்
// This blog is not just for criticizing one group of people like you do! //
இப்படி யோக்கியரைப்போல சொன்னேங்களே நீங்களும் அதைத்தே செய்கிறேர்கள். ஊருக்குத்தான் உபதேசமா? ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் தேவை.

குடுகுடுப்பை said...

இந்த சங்கராச்சியார்களை இல்லாமல் இருந்தால் இந்து மதம் ஜனநாயகம் உள்ள நல்ல பாகனிசமாக வளர வழியுள்ளது, ஊரறிய தப்பு செய்தவர்களை எப்படித்தான் இப்படி தாங்கிப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

வருண் said...

***smart said...
//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! //
ஏன் சிலர் சேர்ந்துயிருக்க கூடாது? நிர்வாகக் குழு போல?***

தலைவர், செயலாளர், பொருளாளர், கொள்கைப் பரப்புச் செயலாளர்னா ? நல்ல கற்பனை!:))))

வருண் said...

***//ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.//
உங்கள் விளக்கமே முரணாக இருக்கு, ஹிந்து வெறி என்றப்பின் ஏன் ஹிந்துவைக் கொன்றார்?. அப்போ மதத்தைவிட வேற ஏதோவொன்றில் தானே அந்த வெறியிருக்கிறது.***

அதென்னவோ?

வருண் said...

**பழைய பதிவில்
// This blog is not just for criticizing one group of people like you do! //
இப்படி யோக்கியரைப்போல சொன்னேங்களே நீங்களும் அதைத்தே செய்கிறேர்கள். ஊருக்குத்தான் உபதேசமா? ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் தேவை.

16 April 2010 4:53 PM***

எனக்கு கருத்து வேற்றுமை, சாரு, ஜெயமோ, ராகவன்,ஸ்மார்ட்,பைத்தியக்காரன், செந்தழல் ரவி, ஸ்மார்ட், சுழியன் எல்லாரோடையும் வரும்.

தங்களைப்போல் ஒரு க்ரூப்க்கு மட்டும் சொம்படிப்பதில்லை!

வருண் said...

***குடுகுடுப்பை said...
இந்த சங்கராச்சியார்களை இல்லாமல் இருந்தால் இந்து மதம் ஜனநாயகம் உள்ள நல்ல பாகனிசமாக வளர வழியுள்ளது,***

இந்து மதத்தின் தரத்தை குறைப்பதே இதுபோல் மதவெறி பிடிச்ச சுழியன் போன்றவர்கள்தான்.

*** ஊரறிய தப்பு செய்தவர்களை எப்படித்தான் இப்படி தாங்கிப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

16 April 2010 6:25 PM***

இவர்களுக்கு மூளை வேறமாதிரி வேலை செய்யும்ங்க! நம்மளால புரிஞ்சுக்க முடியாது.

வருண் said...

****தமிழினி said...
உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

16 April 2010 12:01 PM ***

நன்றி, தமிழினி. என்னனு பார்க்கிறேன்ங்க :)

பனித்துளி சங்கர் said...

எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறதோ இந்த ஜாதி , மதம் என்ற சாக்கடைகளில் இருந்து இந்த பாவப்பட்ட சமுதாயம் . மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை . சந்தோசமா வாழ்தற்கு ஜாதிகள் தேவை இல்லை .

Dr.Rudhran said...

interesting!
if you publish this comment there will be an avalanche of abuses!! so, you need not!

வருண் said...

****♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறதோ இந்த ஜாதி , மதம் என்ற சாக்கடைகளில் இருந்து இந்த பாவப்பட்ட சமுதாயம் . மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை . சந்தோசமா வாழ்தற்கு ஜாதிகள் தேவை இல்லை .

17 April 2010 2:04 AM***

ஒழுங்கா சிந்தனை செய்யும் ஒரு சிலரையும் சிந்திக்க விடுமாட்டார்கள் இந்த சுழியன் போன்ற மதவெறியர்கள்.

மதம், சுழியன் மூளையைச் சாப்பிட்டுவிட்டது. எதையும் பகுத்தறிய இனிமேல் இவனுகளால் முடியாது!

இவன் என்னனு போறான் விடுங்க!, யோசிக்கிறவர்களையும், யோசிக்கவிடாமல் இதுபோல் குப்பையைக் கொட்டி குழப்பப் பார்ப்பதுதான் எரிச்சலை கிளப்புது!

எல்லரையும் மதவெறி பிடிச்சு அலைய வைப்பதுதான் இவனுக சாதிக்க விரும்புவது!

வருண் said...

***Dr.Rudhran said...
interesting!
if you publish this comment there will be an avalanche of abuses!! so, you need not!

17 April 2010 9:40 AM***

Well, Dr. Rudhran, I did not want to mess up someone else blog. At the same time we cant let these "fanatic animals" to spoil the community. It is our responsibility to take care of these fanatics and suggest to ignore their lies!

Thanks for stopping by Dr. Rudhran :)

smart said...

//தங்களைப்போல் ஒரு க்ரூப்க்கு மட்டும் சொம்படிப்பதில்லை//
Wait and see every one will be hunted

smart said...
This comment has been removed by the author.