Thursday, February 10, 2011

14 வயது சிறுவன் 31 ராணுவர வீரர்களை கொன்றான்!

இது மாதிரி அதிசயம் எல்லாம் எங்கே நடக்கும்? தாலிபன்களின் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் பாக்கிஸ்தானில்தான். இப்போ எல்லாம் சிறுவர்களை மற்றும் பெண்களை பலிகொடுத்துத்தான் தீவிரவாதம்/பயங்கரவாதம் எல்லாம் செய்றாங்க.

14 வயது சிறுவனுக்கு ஸ்கூல் யுனிஃபார்ம் அணியவைத்து,
வெடிமருந்துகளை அவன் உடம்பில் கட்டி பாக்கிஸ்தான் ராணுவவீர்கள் ட்ரயினிங் செய்கிற இடத்திற்கு அனுப்பி 31 பாகிஸ்தான் ராணுவவீரர்களை கொன்று, சுமார் 40 ராணுவ வீரர்களை காயப்படுத்தி சாதனை படைத்து இருக்காங்க, இந்த தாலிபன் வீராதி வீரர்கள்!

A teenage suicide bomber dressed in school uniform has blown himself up at an army compound in Pakistan, killing at least 31 people, officials say.

எதுக்காக? னா அமெரிக்கா - பாகிஸ்தான் எந்த உறவும் இருக்கக்கூடாதாம். அதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு மெசேஜ் கொடுத்து மிரட்டுறாங்களாம்!

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவில் வந்து பயங்கரவாதம் செஞ்சவங்களுக்கும் இதுபோல் ஆட்கள்தான் காரணம்னு தோன்றுகிறது.

14 வயது சிறுவனுக்கு என்னப்பா தெரியும்? சரி எது தப்பு எதுனு தெரியுமா? பள்ளிக்குப் போயி, விளையாட்டு மைதானத்தில் வெளையாண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டிய சிறுவனை பலிகொடுக்கிறாங்க! :(

தற்கொலை செய்த சிறுவனும், அவனை பலியாடாக்கிய தீவிரவாதிகளும், இறந்த 31 இராணுவவீரகளும் ஒரே ரத்தம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே கடவுளை வழிபடுபவர்கள்!

பயங்கரவாதிகளின் வீரசாகசங்கள் தொடரும்! :(

3 comments:

Chitra said...

மனதை பதற வைத்த செய்தி, அது!

Ram said...

சே.!!!

குடுகுடுப்பை said...

பாகிஸ்தான் ஆப்கனைவிட மோசாமாகும் நிலையில் இருக்கிறது. மாற்றங்கள் உள்ளிருந்துதான் வரவேண்டும். அதுவரை இவைகள் தொடரும்