Monday, January 7, 2013

கறுப்புப்பணமும் ரசினியின் TEA பார்ட்டியும்!

 Actor Rajinikanth addresses the members of the Tamil film fraternity, who were on hunger strike, demanding the repeal of service tax, in Chennai on Monday. Photo: S.S. Kumar


ரஜினிகாந்த் போல பெரிய பணக்காரர்கள், கோடி கோடியாக சம்பாரிக்கிறவங்க, அதிகமான வருமான வரி கட்ட ஏன் அழுகிறாங்கனு தெரியவில்லை. இவர்கள் சம்பாரிக்கும் வருமானத்திற்குத்தான் வரி இங்கே என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவும். அமெரிக்காவில் TEA (tax enough already) நு சொல்றவங்க பில்லியனர்களும், மில்லினர்களும்தான். அதே போல் இப்போ இந்தியாவிலும் கோடி கோடியாக சம்பாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்க்கொண்டு நடிகர்கள் விஜய், சூர்யா, சத்யராஜ்னு ஆளாளுக்கு ஒரு 13% வரி அதிகமாக கட்ட அழுகிறார்கள்.

அதாவது பரவாயில்லை, அப்படி அதிகமாக்கினால் கறுப்புபணம் அதிகமாயிடும்னு கேணத்தனமான ஒரு சமாளிப்பு. இது போல் ரஜினி பேசுவது எப்படி இருக்குனா, அதிகமாக எங்களுக்கு வரி போட்டால் நாங்க கறுப்பில் வாங்குவோம்னு சொல்வதாகத்தான் தோணுது.


ஹிந்துவிலிருந்து ஒரு காமெண்ட்!
Film industry people are good in giving lip service only it seems for
the country. Almost all the sectors are paying service tax now. Even for
life saving medicines, we pay tax. Reality being so, entertainment
industry people, not want to be taxed is amusing. True in every walk of
life, all are financially not sound - but they all pay tax. If film
industry people are concerned about disparities in their field, they
should correct themselves like reducing their fees in terms of crores
and so on.
from:  Gopalan
Posted on: Jan 7, 2013 at 17:04 IST

இவர்களுக்கு  வரும் வருமானத்தில் ஒரு 13% அதிகமாக வருமான வரி கட்டினால் என்னாகும்? இவங்க எல்லாம் தெருவுக்கு வந்திருவாங்களா என்ன? நடிகர் ரஜினிகாந்த் பேசாமல் இதுபோல் போராட்டத்தில் கலக்காமல் ரெஸ்ட் எடுக்கலாம். ஏன் இப்படி?

நம்ம கமலு மட்டும் கலந்துக்கல போல இருக்கு. அவருக்கு விஸ்வரூபப் பிரச்சினையை சரிக்கட்டவே நேரத்தைக் காணோம், இதில் வேற கலந்துக்க எங்கே நேரம் இருக்கப்போது!

ஒருவேளை கமல் மட்டும் இதை வரவேற்கிறாரா? விபரம் சொல்லவும்!

16 comments:

radhu said...
This comment has been removed by the author.
நன்னயம் said...

ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
ஆனால் தமிழ் நாட்டில் அதிக வரி ஒழுங்காக கட்டும் பிரபலம் கமல். அதற்காக வருவாய் துறையினர் பரிசும் கொடுத்தார்கள். ( எதுக்கெல்லாம் பரிசு கொடுக்க வேண்டியுள்ளது)
"'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு செல்லும் பணம்.மற்றவை எல்லாம் கருப்பில்தான்.
அப்படி இருக்கையில் வரியை நீக்கக் கூறுவதுஎன்பது சரி அல்ல.,கருப்பு பணத்தை ஒழிக்க வே ண்டும்என்று கருப்பு பணத்தில் குளித்து வரும் திரை உலகத்தினர் சொல்வது கேலிக்குரியதாக்கி விடும் "என்பதும் தான் கமல்ஹாசனின் கருத்தாம்.அதனால்தான் தன்னிடம் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கே ட்டுக்கொண்டவர்களிடம் அவர்இந்தகருத்தைக்கூறி உண்ணாவிரதத்தை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது."

"நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்?"
(http://www.haaram.com)

Jayadev Das said...

\\சத்யராஜ்னு \\ சொல்றதுக்கு உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலியா, மார்க்கெட் பூராவும் தேடி மார்க்கெட் போன ஆளை புடிச்சிகிட்டு வந்திருக்கீங்க, ஐயோ........... ஐயோ.............

Anonymous said...

கனடாவில் அன்றாடங்காட்சிகளாகிய நாமே, 13% வரிக் கட்டுகின்றோம், நாடு நல்லாருக்கும் என சிந்திப்பவர்கள் வரிக் கட்டாமல் டபாய்க்க மாட்டார்கள், சினிமாக் காரங்க தேச பக்தி எல்லாம் திரையில் மட்டுமே என்பதே உண்மை.

புரட்சி தமிழன் said...

தன் சம்பலத்தை தானே முடிவு செய்யும் இவர்களே சேவை வரி செலுத்த மறுத்தால் மற்றவர்கள் எல்லாம் ஏன் வரி செலுத்தவேண்டும் அணைவரும் வரி செலுத்த எதிர்ப்பு தெறிவிப்போம்.

வருண் said...

*** Ethicalist E said...

ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
ஆனால் தமிழ் நாட்டில் அதிக வரி ஒழுங்காக கட்டும் பிரபலம் கமல். அதற்காக வருவாய் துறையினர் பரிசும் கொடுத்தார்கள். ( எதுக்கெல்லாம் பரிசு கொடுக்க வேண்டியுள்ளது)
"'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு செல்லும் பணம்.மற்றவை எல்லாம் கருப்பில்தான்.
அப்படி இருக்கையில் வரியை நீக்கக் கூறுவதுஎன்பது சரி அல்ல.,கருப்பு பணத்தை ஒழிக்க வே ண்டும்என்று கருப்பு பணத்தில் குளித்து வரும் திரை உலகத்தினர் சொல்வது கேலிக்குரியதாக்கி விடும் "என்பதும் தான் கமல்ஹாசனின் கருத்தாம்.அதனால்தான் தன்னிடம் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கே ட்டுக்கொண்டவர்களிடம் அவர்இந்தகருத்தைக்கூறி உண்ணாவிரதத்தை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது."***

நீங்க சொல்வது உண்மையாக இருக்கட்டும்!


**** "நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்?"****

ரஜினிக்குத் தேவையே இல்லாதது இது. பேசாமல் வீட்டிலே இருக்கிரதை விட்டுட்டு..

-----

ஜாயலுக்காஸ், ஜாஸ் அலுக்காஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகைனு வந்து மக்களை ஏமாத்தி பொழப்பு நடத்துதுறவனுக 13% வரி செலுத்தினால் என்ன? மூளையே கெடையாது இவனுகளுக்கு!

வருண் said...

****Jayadev Das said...

\\சத்யராஜ்னு \\ சொல்றதுக்கு உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலியா, மார்க்கெட் பூராவும் தேடி மார்க்கெட் போன ஆளை புடிச்சிகிட்டு வந்திருக்கீங்க, ஐயோ........... ஐயோ.............***

என்ன இப்படி சொல்லீட்டீங்க? அவருதாம் புரச்சி தமிழனாச்சே!!!
இவனுக வரி கட்டலைனா அப்போ இவனுக படத்தைப் பார்த்து நாசமாப்போறவனுகதான் வரி கட்டி அழணுமா?

வருண் said...

****இக்பால் செல்வன் said...

கனடாவில் அன்றாடங்காட்சிகளாகிய நாமே, 13% வரிக் கட்டுகின்றோம், நாடு நல்லாருக்கும் என சிந்திப்பவர்கள் வரிக் கட்டாமல் டபாய்க்க மாட்டார்கள், சினிமாக் காரங்க தேச பக்தி எல்லாம் திரையில் மட்டுமே என்பதே உண்மை.***

ரஜினி படத்துக்கு, 25 ரூபாய் டிக்கட்டை ஏழைகளுக்கு 200 ரூபாய்க்கு விக்கிறானுக! இந்தமாரி சமாரிக்கிற பாவப்பணத்துக்கு வரியாவது கட்டணும்னு தெரியாத இந்தாளெல்லாம் என்ன பெரிய மனுஷன்?

வருண் said...

***Blogger புரட்சி தமிழன் said...

தன் சம்பலத்தை தானே முடிவு செய்யும் இவர்களே சேவை வரி செலுத்த மறுத்தால் மற்றவர்கள் எல்லாம் ஏன் வரி செலுத்தவேண்டும் அணைவரும் வரி செலுத்த எதிர்ப்பு தெறிவிப்போம்.****

வரி கட்ட மாட்டேன்னு இவனுக வைக்கிர ஒப்பாரி படு கேவலமாயிருக்கு!

வருண் said...

Let me ask this question for Rajinikanth!

If a guy pays Rs. 200 for a Rs30 ticket in C centers of Tamilnadu, How many % tax he pays?

Sit down with that idiot cho Ramasamay and do the math and get back to me! Let us see what you got!

'பரிவை' சே.குமார் said...

பாவப்பட்டவங்க...

வருண் said...

வாங்க குமார்!

வரியை ஒழுங்கா கட்டுவதுதான் கொஞ்சமாவது இவங்க செய்ற பாவத்தை கழுவ வழி!

அதையும் செய்ய மாட்டேன்கிறாங்கனா, இவ்னக என்னதான் நெனச்சிருக்காங்க?

Unknown said...

கருப்பு பணம் அதிகமாக புரளுவதே சினிமா தொழிலில் தான் . எப்படி உண்மையான் கணக்கு காட்டி வரி செலுத்துவார்கள்.

SathyaPriyan said...

வருண்,

தயவு செய்து ஏழை நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்.

முடிந்தால் ஒரு NGO தொடங்கி பொது மக்களிடம் பணம் வசூல் செய்து அவர்கள் கட்ட வேண்டிய வரியை கட்ட உதவுங்கள். :-)

வருண் said...

***Gnanam Sekar said...

கருப்பு பணம் அதிகமாக புரளுவதே சினிமா தொழிலில் தான் . எப்படி உண்மையான் கணக்கு காட்டி வரி செலுத்துவார்கள்.

8 January 2013 4:44 PM***

இவரு ரஜினி சொல்றதப் பார்த்தா சினிமா நடிகர்கள் எல்லாம் மஹா யோக்கியங்கள். ஒவொரு பைசா சம்பாரிக்கிறதுக்கும் வரி கட்டிடுறமாரி இருக்கு! பேசாமல் ரெஸ்ட் எடுக்கிறத விட்டுட்டு, ரொம்ப அவசியம் இவருக்கு!

வருண் said...

*** SathyaPriyan said...

வருண்,

தயவு செய்து ஏழை நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்.

முடிந்தால் ஒரு NGO தொடங்கி பொது மக்களிடம் பணம் வசூல் செய்து அவர்கள் கட்ட வேண்டிய வரியை கட்ட உதவுங்கள். :-)***

என்னவோ போங்க! சினிமா நடிகர்களால் நாட்டு ஒரே நன்மைனா இவர்கள் கோடிகோடியாக சம்பாரிக்கும் பணத்திற்கு வரி கட்டுவதுதான். அதையும் நான் கட்டமாட்டேன்னு அடம் பிடித்தால் இவர்களுக்கு அழிவுகாலம்தான்!