Monday, April 13, 2009

தமிழின துரோகிகள் பலவகை!


நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.

தமிழன் தமிழன் என்று அடிச்சுக்கிறவன், ஒரு சீக்கியர் தமிழனை செருப்பை தூக்கி தாக்குவதை ரசிப்பானா?

நமக்குள் 1000 பிரச்சினை இருக்கலாம், என்ன இருந்தாலும் சிதம்பரம் ஒரு தமிழ்நாட்டில் பிறந்த தமிழன்.

அவரை செருப்பால் அடிக்க முயற்சித்ததை பார்த்து ரசிப்பவனை தமிழின துரோகி என்கலாமா?

கூடாதா? ஏன் கூடாது?

தமிழ், தமிழினப்பற்று, தமிழ் துரோகிகள் போன்றவைகள் எப்போதுமே விவாதத்திற்குரிய ஒரு சப்ஜெக்ட்தான்.

என்னைக்கேட்டால் தமிழன் ப. சிதம்பரத்தை செருப்பால் அடிப்பதை பார்த்து ரசிக்கும் ஒரு சில "தமிழ் பற்றாளர்களும்" தமிழின துரோகிகள் தான்!

29 comments:

-/சுடலை மாடன்/- said...

பிரச்னை சிதம்பரம் போன்ற எச்சிக்கலையும் வெள்ளை வேட்டிக் காங்கிரசு நாய்களை தமிழரென்ன, மனிதரென்றே கருதினால்தானே? அவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன? காங்கிரசிலிருந்து தமிழருவி மணியன் போன்ற ஒன்றிரண்டு சொரணையுள்ள தமிழரும் வெளியேறி விட்டார்கள். எஞ்சியிருக்கும் முண்டங்களைச் செருப்பாலடித்தாலென்ன? அல்லது வேறெதால் அடித்தாலென்ன?

கோவி.கண்ணன் said...

சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து...என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து எழுதினீர்களாக்கும் ?

தவறு செய்பவன் தமிழன் என்பதால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்கிறீர்களா ?

குண்டுமழைக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரசுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பார்த்து ஆறுதல் அடைவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

தமிழர்களை கொல்லுகிறார்கள் என்ன தான் காங்கிரசு அமைச்சராக இருந்தாலும் அதற்கு எதிர்ப்புக் காட்டாதவர்களை தன்மானமிக்க தமிழர்களில் ஒருவராக கருத மிகப் பெரிய..... மனது வேண்டும்.

எட்டப்பன் கூட தமிழன் தான் அதற்காக பெருமை பட முடியுமா ?

அருள் said...

த‌மிழ‌னை சீக்கிய‌ன் அடிக்க‌வில்லை.........
அதிக்கார‌ வெறிபிடித்த‌லைந்து அப்பாவி ம‌க்களை கொன்ற‌விட்டு இன்று ச‌ப்பைக் க‌ட்டும் ஒரு க‌ட்சியின் உறுப்பின‌ரை இன‌மான‌ம் உள்ள‌வ‌ன் அடித்திருக்கிறான்.

25 ஆண்டுக‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ கொலைக‌ளை இன்றும் சிறிதும் ம‌ற‌வாம‌ல் கொதிதெழும் இன‌மான‌ம் உள்ள‌ அந்த‌ ந‌ப‌ர் எங்கே!
தின‌ம் தின‌ம் 100 த‌மிழ‌ர்க‌ள் செத்துகொண்டிருக்க‌ ஒரு சிறு அனுதாப‌மும் கூட‌ காட்ட‌த‌ இந்த‌ சித‌ம்ப‌ர‌ம் எங்கே??? இன‌மான‌ம்ற்ற‌ இன‌த்துரோகி!! இந்த‌ இன‌த்துரோகி அடிவாங்கிய‌த‌ற்க்கு இங்குள்ள‌வ‌ர்க‌ள் அனுதாப‌ம் வேறு ப‌ட‌வேண்டுமா? இத‌ற்க்கு வ‌க்கால‌த்து வேறு???
இன் உண‌ர்வு என்ப‌தை செருப்பால் அடிப‌ட்டாவ‌து என்ன‌ என்று புரிந்துகொள்ள‌ட்டும்.....

Anonymous said...

I am also a tamil born in TN. I am so happy to see this. Yes he is deserve for this. As a Tamil born he must have talk for tamil race in Eelam.

Kaunaanithi a telugu race. He will not do any thing for our race. But this guy should have done something.

But this guy also main reason for killing our tamil race in Eelam.

I am happy for that incident. Atleat like muthu kumar, some Tamil born shoul have done this.

Very soon this will happen to Karunaathi too

Wait and see

ராஜ நடராஜன் said...

//நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.//

வருண்!அடைப்பானின் நொள்ளை,நொட்டைகளைக் கடந்து விட்டவன் என்ற நினைப்பில் இந்தப் பின்னூட்டம்.

முன்பெல்லாம் சிதம்பரத்தைப் பார்க்கும் போது தமிழகமும் ஒரு எதிர்கால பிரதமரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் வரும்.செருப்பு வீச்சு எனக்கு சந்தோசத்தையும் அளிக்கவில்லை,அதே சமயத்தில் துக்கத்தையும் தரவில்லை.மனம் மறத்துப் போன உணர்வு.

பதி said...

வருண்,

//இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.//சிதம்பரம் போன்ற இழிபிறவிகள் செட்டியாரா, பார்ப்பானா என்பதை விட மனிதனா என்று முதலில் ஆராயவும்.. பிறகு, இந்த சேலைகட்டிய முசோலினிக்கு சொம்பு தூக்குபவர்கள் தமிழர்களா எனா ஆராயலாம்...

//தமிழன் தமிழன் என்று அடிச்சுக்கிறவன், ஒரு சீக்கியர் தமிழனை செருப்பை தூக்கி தாக்குவதை ரசிப்பானா? //இதற்கு இங்குள்ள ஒரு பின்னூட்டத்திலிருப்பதே போதும்..
இது போன்ற கழிசடைகள், இன உண‌ர்வு என்ப‌தை செருப்பால் அடிப‌ட்டாவ‌து என்ன‌ என்று புரிந்துகொள்ள‌ட்டும்.....மேலும், இந்த சம்பவத்தை தமிழன், சீக்கியன் என்று பார்ப்பதைவிட,

//அதிக்கார‌ வெறிபிடித்த‌லைந்து அப்பாவி ம‌க்களை கொன்ற‌விட்டு இன்று ச‌ப்பைக் க‌ட்டும் ஒரு க‌ட்சியின் உறுப்பின‌ரை இன‌மான‌ம் உள்ள‌வ‌ன் அடித்திருக்கிறான்.//அவ்வளவே...

//என்னைக்கேட்டால் தமிழன் ப. சிதம்பரத்தை செருப்பால் அடிப்பதை பார்த்து ரசிக்கும் ஒரு சில "தமிழ் பற்றாளர்களும்" தமிழின துரோகிகள் தான்!//ஆராய்ச்சி முடிவுகளுக்கு நன்றி... இந்த தமிழின துரோகிப் பட்டத்தினை பெருமையுடன் சுமக்கத் தயார்.. :)

உங்களுக்கு இந்த பின்னூட்டத்தில் வந்துள்ள கேள்விகளைப் போன்றே அல்லது அத்துடன் சேர்த்து வேறு சில கேள்விகளும்,

1) தவறு செய்பவன்/செய்து கொண்டிருப்பவன் தமிழன் என்பதால் பொது மன்னிப்பு வழங்கலாமா ?

2) எட்டப்பன், கருணா போன்ற தமிழர்களுக்காக பெருமைப் பட வேண்டுமா ?

3) செருப்பாய் இருப்பதற்கும் செருப்பை எறிவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

4) இது போன்ற கேவலங்களின் மேல் வீசப்பட்டதால் அந்த செருப்புக்கு அவமானமா இல்லையா?

Unknown said...

/// நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.
////

that is what happening for Cho, Malan, Subramaniamsamy, Jayalalitha, etc.

Nobody will explain this injected hatred

PARAMS

வில்லங்கம் விக்னேஷ் said...

/that is what happening for Cho, Malan, Subramaniamsamy, Jayalalitha, etc./

On the contrary, these people yet to be beaten up even after their hatred towards Tamilians.

வருண் said...

-/சுடலை மாடன்/- said...
பிரச்னை சிதம்பரம் போன்ற எச்சிக்கலையும் வெள்ளை வேட்டிக் காங்கிரசு நாய்களை தமிழரென்ன, மனிதரென்றே கருதினால்தானே? அவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன? காங்கிரசிலிருந்து தமிழருவி மணியன் போன்ற ஒன்றிரண்டு சொரணையுள்ள தமிழரும் வெளியேறி விட்டார்கள். எஞ்சியிருக்கும் முண்டங்களைச் செருப்பாலடித்தாலென்ன? அல்லது வேறெதால் அடித்தாலென்ன?

13 April, 2009 3:47 PM ***

பி ஜெ பி யும், லாலுவும் தமிழ் ஈழப்பிரச்சினையை தமிழர் நல்வாழ்வுக்காக போராடி வெற்றி பெறுவார்களா?

வருண் said...

***கோவி.கண்ணன் said...
சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து...என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து எழுதினீர்களாக்கும் ?

தவறு செய்பவன் தமிழன் என்பதால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்கிறீர்களா ?

குண்டுமழைக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரசுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பார்த்து ஆறுதல் அடைவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

தமிழர்களை கொல்லுகிறார்கள் என்ன தான் காங்கிரசு அமைச்சராக இருந்தாலும் அதற்கு எதிர்ப்புக் காட்டாதவர்களை தன்மானமிக்க தமிழர்களில் ஒருவராக கருத மிகப் பெரிய..... மனது வேண்டும்.

எட்டப்பன் கூட தமிழன் தான் அதற்காக பெருமை பட முடியுமா ?

13 April, 2009 5:44 PM***

வாங்க கோவி! :-)

சினிமா விமர்சனம் எழுதுவதில் பிஸியா இருந்தேன். அதான் இந்த டிலே :-)

புஷை தாக்கியதையும் ரசிக்கவில்லை. இன்று சிதம்பரத்தை தாக்கியதையும் ரசிக்க முடியவில்லை.

சீக்கியர்கல்தாம் இந்திரா காந்தியை கொன்னது. டெரரிஷத்தை கண்ட்ரோல் பன்னவில்லை என்றால், நாமும் பாக்கிஸ்தான் மாதிரி ஆக வேண்டியதுதான்.

யட்சன்... said...

தமிழனின் சகிப்புத்தன்மை எந்தளவிற்கு மட்டமாய் போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பின்னூட்டங்கள் உதாரணம்.

வருண் said...

***அருள் said...
த‌மிழ‌னை சீக்கிய‌ன் அடிக்க‌வில்லை.........
அதிக்கார‌ வெறிபிடித்த‌லைந்து அப்பாவி ம‌க்களை கொன்ற‌விட்டு இன்று ச‌ப்பைக் க‌ட்டும் ஒரு க‌ட்சியின் உறுப்பின‌ரை இன‌மான‌ம் உள்ள‌வ‌ன் அடித்திருக்கிறான்.

25 ஆண்டுக‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ கொலைக‌ளை இன்றும் சிறிதும் ம‌ற‌வாம‌ல் கொதிதெழும் இன‌மான‌ம் உள்ள‌ அந்த‌ ந‌ப‌ர் எங்கே!
தின‌ம் தின‌ம் 100 த‌மிழ‌ர்க‌ள் செத்துகொண்டிருக்க‌ ஒரு சிறு அனுதாப‌மும் கூட‌ காட்ட‌த‌ இந்த‌ சித‌ம்ப‌ர‌ம் எங்கே??? இன‌மான‌ம்ற்ற‌ இன‌த்துரோகி!! இந்த‌ இன‌த்துரோகி அடிவாங்கிய‌த‌ற்க்கு இங்குள்ள‌வ‌ர்க‌ள் அனுதாப‌ம் வேறு ப‌ட‌வேண்டுமா? இத‌ற்க்கு வ‌க்கால‌த்து வேறு???
இன் உண‌ர்வு என்ப‌தை செருப்பால் அடிப‌ட்டாவ‌து என்ன‌ என்று புரிந்துகொள்ள‌ட்டும்.....

13 April, 2009 5:52 PM***

இன வெறி சிதம்பரத்துக்கும் இல்லை. உங்களுக்கும் இல்லை அருள் :-)))

வருண் said...

***thamizharinam said...
I am also a tamil born in TN. I am so happy to see this. Yes he is deserve for this. As a Tamil born he must have talk for tamil race in Eelam.

Kaunaanithi a telugu race. He will not do any thing for our race. But this guy should have done something.

But this guy also main reason for killing our tamil race in Eelam.

I am happy for that incident. Atleat like muthu kumar, some Tamil born shoul have done this.

Very soon this will happen to Karunaathi too

Wait and see

13 April, 2009 5:55 PM***

I am waiting :-)))

வருண் said...

*** ராஜ நடராஜன் said...
//நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.//

வருண்!அடைப்பானின் நொள்ளை,நொட்டைகளைக் கடந்து விட்டவன் என்ற நினைப்பில் இந்தப் பின்னூட்டம்.

முன்பெல்லாம் சிதம்பரத்தைப் பார்க்கும் போது தமிழகமும் ஒரு எதிர்கால பிரதமரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் வரும்.செருப்பு வீச்சு எனக்கு சந்தோசத்தையும் அளிக்கவில்லை,அதே சமயத்தில் துக்கத்தையும் தரவில்லை.மனம் மறத்துப் போன உணர்வு.

14 April, 2009 1:02 AM***

திரு நடராஜன்,

நாம் சிதம்பரத்தை தண்டிக்கனும்னா, அவரை வருகின்ற தேர்தலில் படுதோல்வி அடைய செய்யனும். அதுதான் தமிழின துரோகியை தண்டிக்கும் விதம் னு நான் நினக்கிறேன் :-)

Adriean said...

வருண்,
Terrorist ரை ஆதரிக்கவில்லை என்றால் தமிழின துரோகியா?

வருண் said...

***Chandran said...
வருண்,
Terrorist ரை ஆதரிக்கவில்லை என்றால் தமிழின துரோகியா?

14 April, 2009 12:20 PM***

சந்திரன்,

சிதம்பரத்தை தமிழின துரோகினு நெறையப்பேர் சொல்றாங்க. அதற்கு காரணம் அவர் ஈழத்தமிழர்கள் கண்ணிரை துடைக்க எதுவும் செய்யவில்லை என்பதால். :-)

வருண் said...

***பதி said...
வருண்,

///என்னைக்கேட்டால் தமிழன் ப. சிதம்பரத்தை செருப்பால் அடிப்பதை பார்த்து ரசிக்கும் ஒரு சில "தமிழ் பற்றாளர்களும்" தமிழின துரோகிகள் தான்!//ஆராய்ச்சி முடிவுகளுக்கு நன்றி... இந்த தமிழின துரோகிப் பட்டத்தினை பெருமையுடன் சுமக்கத் தயார்.. :)***

:-))))

வருண் said...

***உங்களுக்கு இந்த பின்னூட்டத்தில் வந்துள்ள கேள்விகளைப் போன்றே அல்லது அத்துடன் சேர்த்து வேறு சில கேள்விகளும்,

1) தவறு செய்பவன்/செய்து கொண்டிருப்பவன் தமிழன் என்பதால் பொது மன்னிப்பு வழங்கலாமா ?***

ஒரு சிலர் இதையும் இன உணர்வுனு நம்புறாங்க, பதி! அதாவது தவறு செய்தாலும் ஒரு தமிழனை ஒரு சீக்கியன் அடிப்பதை ரசிக்கக்கூடாது என்கிற உணர்வு!

***2) எட்டப்பன், கருணா போன்ற தமிழர்களுக்காக பெருமைப் பட வேண்டுமா ?***

எட்டப்பனும், ப சிதம்பரமும் எப்படி ஒரே வகையில் சேருவார்கள்?

சிதம்பரம் செய்வது ஊரறிய. Not behind our back. இல்லையா?

***3) செருப்பாய் இருப்பதற்கும் செருப்பை எறிவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?***

அவரை தேர்தலில் தோல்வியடைய செய்வதே நல்வழினு எனக்கு தோனுது. செருப்பு எறிவதையெல்லாம் கண்டனத்திற்கு உரியது என்பது என் கருத்து.

***4) இது போன்ற கேவலங்களின் மேல் வீசப்பட்டதால் அந்த செருப்புக்கு அவமானமா இல்லையா?

14 April, 2009 5:05 AM***

என்னவோ போங்க! :-)

வருண் said...

***params said...
/// நல்லவேளை ப சிதம்பரம் ஒரு பார்ப்பனரல்ல! நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர். இவர் பார்ப்பனராக இருந்து இருந்தால், இதைவிட 10 மடங்கு இவர்மேல் இழிமொழிகள் வரும்.
////

that is what happening for Cho, Malan, Subramaniamsamy, Jayalalitha, etc.

Nobody will explain this injected hatred

PARAMS****

Thanks, PARMS, for your response!


***வில்லங்கம் விக்னேஷ் said...
/that is what happening for Cho, Malan, Subramaniamsamy, Jayalalitha, etc./

On the contrary, these people yet to be beaten up even after their hatred towards Tamilians.

14 April, 2009 8:19 AM***

Thanks Viknesh for your opinion on this issue! :-)

வருண் said...

***யட்சன்... said...
தமிழனின் சகிப்புத்தன்மை எந்தளவிற்கு மட்டமாய் போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பின்னூட்டங்கள் உதாரணம்.

14 April, 2009 9:35 AM**

யட்சன்,

எது மட்டம்? சகிப்புத்தன்மை அதிகமா இருப்பதா இல்லை கொஞ்சமா இருப்பதா????

உண்மையிலேயே புரியலை :-)

மணிகண்டன் said...

மாலன் அந்தளவுக்கு மோசமா ?

வருண் said...

வாங்க மணிகண்டன்!

எந்த பின்னூட்டம் சம்மந்தப்பட்டது உங்க கேள்வி! :-)))

குழப்புறீங்களே! :-)

மணிகண்டன் said...

***
/that is what happening for Cho, Malan, Subramaniamsamy, Jayalalitha, etc./

On the contrary, these people yet to be beaten up even after their hatred towards Tamilians.
***

பின்னூட்டம் முழுசா படிக்காம பதில் போடறீங்களே !

வருண் said...

மணிகண்டன்:

நீங்க ஒழுங்கா "கோட்" பண்ணாம எழுதிட்டு என்னை வம்புல மாட்டி விடுறீங்களே?

மாலன் மோசமா என்னனு அவங்க ரெண்டு பேரும்தான் பேசி முடிவச் சொல்லனும் :-)))

பதி said...

//சிதம்பரத்தை தமிழின துரோகினு நெறையப்பேர் சொல்றாங்க. அதற்கு காரணம் அவர் ஈழத்தமிழர்கள் கண்ணிரை துடைக்க எதுவும் செய்யவில்லை என்பதால்.//ஓ.. அப்படினா, சிங்கள இனவெறி இராணுவத்தால சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ஏராளமா செய்ஞ்சுட்டாரு??
மும்பைத் தாக்குதலுக்கு பிறகு உள்துறை மந்திரியானதுக்கு பிறகு மட்டும் 10 நாளைக்கு 12 முறை தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால தாக்கப்படுறாங்க.. சுடப்படுறாங்க.. அவங்களுக்கு என்ன ஆணிபுடுங்கிட்டாரு? குறைஞ்சபட்சம் ஒரு கண்டனமாவது தெரிவிச்சாரா? (கண்டனம் மட்டும் தான் தெரிவிக்கமுடியும்னா என்ன கருமாந்திரத்துக்கு பதவியோ)..

இந்த விசயத்துல எல்லாரையும் விட காங்கிரஸ் யோக்கியனுங்களுக்கு அதிக பொறுப்பு இருக்குது. ஏன்னா, இந்திரா மகாராணியின் பதவிக்காலத்தில் தான் இவர்கள் கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தாங்க.. இன்னைக்கு வரைக்கும் சிங்கள இராணுவத்துக்கு ஆயுத/பயிற்சி/உளவுத் தகவல்கள்னு எல்லாம் கொடுத்து பேருதவி பண்ணுறதும் இவனுங்க தான்...

பதி said...

//Terrorist ரை ஆதரிக்கவில்லை என்றால் தமிழின துரோகியா?//யார் Terrorist???

குழந்தைகள், பெண்கள் என்று அனைவரையும் குண்டு வீசியும் பாலியல் பலாத்காரம் செய்தும் கொல்லும் சிங்கள இராணுவமா, இல்லை அவர்களுக்கு கழுவி விட்டு மாமா வேலை செய்யும் 'இந்தி'ய இராணுவமா?

ஆயுதம் தரிக்காதா அப்பாவி மீனவர்களை தாக்கியும் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி இராணுவமா இல்லை அவர்களுக்கு பயிற்சியும் ஆயுத உதவியும் செய்யும் 'இந்தி'ய இராணுவமா?

தனிப்பட்ட விரோதங்களுக்கு ஒரு நாட்டின் இராணுவத்தையே மறைமுக போரில் ஈடுபடுத்தியிருக்கும் இன்றைய ஆளும்/அதிகார வர்க்கங்களா?

இல்லை இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்ட, இந்திரா மறைவிற்கு பின் சீக்கியர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையைப் பற்றி பிறகு 'பழுத்த மரம் சாய்ந்தால் அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்" என்று திருவாய் மலர்ந்த யோக்கியஸ்தனா?

தெளிவாய் கேட்கவும் திரு சந்திரன் !!!! :)

பதி said...
This comment has been removed by the author.
பதி said...

//எட்டப்பனும், ப சிதம்பரமும் எப்படி ஒரே வகையில் சேருவார்கள்?

சிதம்பரம் செய்வது ஊரறிய. Not behind our back. இல்லையா?//
oh.. அதனால் தான் ஊர் பார்க்க, press meet'ல் வைத்து மரியாதை... -:)

//அவரை தேர்தலில் தோல்வியடைய செய்வதே நல்வழினு எனக்கு தோனுது.//அது நடக்கும் என்று தோன்றுகின்றது.. பார்ப்போம்..

//செருப்பு எறிவதையெல்லாம் கண்டனத்திற்கு உரியது என்பது என் கருத்து.//உங்கள் கருத்தை மதிக்கின்றேன்...
ஆனால், என் கருத்து இதுவல்ல... :)

ஏனெனில், சிதம்பரம் என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் தாக்குதல் நடந்திருந்தால் நிச்சயம் நானும் கண்டித்திருப்பேன்..

ஆனால், காங்கிரஸ் என்னும் கொலைகார கும்பலின் சுயத்தை மறைக்க பயன்படும் முகமூடிகளில் சிதம்பரம் ஒரு தமிழ் தெரிந்த முகமூடி... அவ்வளவே..

மணிகண்டன் said...

***
ஏனெனில், சிதம்பரம் என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் தாக்குதல் நடந்திருந்தால் நிச்சயம் நானும் கண்டித்திருப்பேன்..
****

ஓஹோ !