Wednesday, April 6, 2011

விஜய்காந்த் என்கிற கேவலமான அரசியல்வாதி! அம்மாவின் பெருந்தவறு!

அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் தோத்தால், பலிபோடப்படும் முதல் ஆள் இந்த அரைகுறை அரசியல்வாதி, கோமாளி விஜய்காந்த் தான்! இவர் செய்த அரசியல்கூத்தால் ஏற்பட்ட வெற்றிக்கு திமுக அணி இவருக்கு பாராட்டுக்கூட்டம் போட்டாலும் அதிசயப்பட ஒண்ணுமில்லை!

* இந்த கோமாளி, தனக்குக் கிடைத்த , அந்த குடிகாரன் பட்டத்தை தூக்கி எறிவதுபோல பொதுவில் நாகரிகமாக நடந்துகொள்ளத்தவறியது மட்டுமல்லாமல் பொது இடத்தில் யாரையோ அடிப்பதுபோல நடந்து அசிங்கமாக நடந்துகொண்டார்!

* சரி, எங்கேயோ மேலே இருந்து காருக்குள் நடப்பதை சாமர்த்தியமாக எடுத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்ததும், அதை சமாளிக்கத் தெரியவில்லை என்றால், அதைப்பற்றிப் பேசாமலாவது இருக்கனும், "நான் என் கட்சிக்காரனைத்தான் அடித்தேன் உன் கட்சிக்காரனையா அடிச்சேன்"னு இந்தாளு பேசிய வசனம் படுகேவலமா இருந்தது. ஜெயா, தலையில் அடித்துக்கொண்டு இருப்பார்!

* சரி, நடந்தது நடந்துவிட்டது, கோவையில் சேர்ந்து பிரச்சாரம் பண்ணுவோம் என்று என்ன எழவுக்கு சொல்றாங்க?! ரெண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதென்பது முடியாது என்றால் பேசாமல் மூடிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே? சேர்ந்து வருவோம் என்று பல பத்திரிக்கையில் எழுதிவிட்டபிறகு, எதிர்கட்சிக்கு அவல் போடுவதுபோல மேடையில் சேர்ந்து வரவில்லை! இதுவும் இந்தாளு படுமட்டமான அரசியல்வாதி என்பதற்கு இன்னொரு அத்தாச்சி!

விஜய்காந்தை பிடித்தவர்களும் சரி, பிடிக்காதவர்களும் சரி, இந்த மகா மட்டமான அரசியல்வாதி விஜய்காந்தை நினைத்து "என்ன ஒரு மட்டமான ஆள் இவன்!" என்றுதான் இன்று நினைத்துக்கொளவார்கள்!

ஆக மொத்தத்தில் விஜய்காந்துவை கூட்டணியில் சேர்த்ததால் 10% ஓட்டுக்கள் வரும் என்றாலும், இவர் பண்ணுகிற கூத்தால் இழக்கும் பொதுமக்கள் ஓட்டு 20% ஆவது இருக்கும். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் நஷ்டம்தான் அம்மாவுக்கு!

இந்தாளை கூட்டணியில் சேர்க்காமல் வைக்கோவுக்கு 20 சீட் கொடுத்திருந்தால், இதுபோல் ஒரு நிலை உருவாகி இருக்காது! "அம்மாவுக்கும்" அடி சறுக்கும்! இந்த முறை அம்மாவின் கணக்கு தப்புக் கணக்க்காகி விட்டது என்னவோ உண்மைதான்! பாவம்!


9 comments:

Unknown said...

ஆமாம், இப்போது வரை விஜயகாந்த் கோவை பொதுக்கூட்டத்திற்கு வந்து சேரவில்லை.

பொ.முருகன் said...

ஏறு முகத்தில் இருந்த விஜயகாந்த்தின் அரசியல் கிராப்,இறங்கத்தொடங்கியிருக்கிறது.இதற்கு,அவர்மட்டுமேக்காரணம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

appadi podu aruvaala vijayakanth'kku

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விஜயகாந்த் பிரச்சாரத்தை நிறுத்தினால் அதிமுக கூட்டணி அதிக வாக்குகள் வரும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்..நானும் வந்துட்டேன்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அம்மாவைக் கப்டனுடன் சேர்த்துவிட்ட சோ வுக்குக் கூறுங்கள்.

Unknown said...

//அம்மாவைக் கப்டனுடன் சேர்த்துவிட்ட சோ வுக்குக் கூறுங்கள்.//

correct...

zing513320 said...

2011 l muthalvar ! 2014 -l prime minister amma thaan!! prime minister ana udane bramanargalukku 50% ida othukeedu!! success success !!!

ராவணன் said...

கருணாநிதியை விட கேவலமான ஒரு அரசியல்வாதியா? இன்னும் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் அந்த கேவலமான இடத்தை யாரும் பிடிக்கமுடியாது.