Monday, April 11, 2011

விஜய் ரசிகர்மன்றம் கலைப்பு! விஜய் பேனர்கள் எரிப்பு!

இன்னைக்கு உள்ள அரசியல் சூழலில் கடவுளே நமக்கெதுக்குப்பா வம்பு னு ஒதுங்கிப் போயிடுவாரு. ஆனால் இந்த விஜயோட அப்பா எஸ் எ சந்திரசேகரா மட்டும் நான் என் மகனை அரசியலில் இறக்கி ஒரு கை பார்க்காமல் விடமட்டேன் னு நொழஞ்சி, விஜய்க்கு ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் மார்க்கட்டை இன்னும் கொஞ்சம் சரிச்சு இருக்காரு!

இவரு பிரச்சாரத்தால் அ தி மு க கூட்டணிக்கு ஒரு நாலு ஆயிரம் ஓட்டு கொறைந்து விழுந்திருக்குமே ஒழிய கூட விழுந்திருக்காது னு எல்லாரும் நம்புறாங்க!

ஆமா நம்ம விஜய் ஏன் இந்தமுறை இப்படி களத்தில் எறங்கலை?

வேலாயுதம் தயாரிப்பாள ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் இவரை வச்சு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க. ஆஸ்கர் ரவிச்சந்திரன், "உங்கள நம்பி நெறையா பணம் போட்டு வேலாயுதம் எடுத்து இருக்கேன். நீங்க ஏதாவது அரசியலில் எறங்கினால் எனக்கு பலகோடிகள் நஷ்டமாகிவிடும், யோசிச்சுக்கோங்க" னு தெளிவாகச் சொல்லி நிறுத்திவிட்டாராம்.

விஜய் மக்கள் இயக்கத்தலைவர் விலக்கப்பட்டது, திமுக ஆதரவுனு சொன்னது எல்லாம் பழைய கதை.

இப்போ புதுக்கதை என்னனா...

கோவையில் விஜய் ரசிகர் மன்றம் ஒன்று கலைக்கப்பட்டு, கலைத்த அதன் உறுப்பினர்கள், திமுகவில் இணைந்துள்ளராம்.

கோவை தொண்டாம் புதூரில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சுமார் இருநூறு பேர், விஜய் மன்றத்தை கலைத்து விட்டு, அவர்கள் அனைவரும் திமுகவில் இணைந்துவிட்டார்களாம்.

தன் இதய தெய்வமாக இருந்த விஜய் உருவம் பதித்த பேனர்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாங்களாம்.

எனக்கு என்ன புரியலைனா, சரி, காசு கொடுத்து இவங்களை (இந்த ரசிகர் பெருமக்களை) விலைக்கு வாங்கியதாகவே வச்சுக்குவோம். காசுக்காக தன் தலைவனை தூக்கி எறியும் ரசிகனை நம்ம பாராட்டலாமா? இல்லை கேவலமா நெனைக்கனுமா? அது பெரிய விவாதத்துக்குரியதுதான்! :)

1 comment:

Chitra said...

ஆஸ்கர் ரவிச்சந்திரன், "உங்கள நம்பி நெறையா பணம் போட்டு வேலாயுதம் எடுத்து இருக்கேன். நீங்க ஏதாவது அரசியலில் எறங்கினால் எனக்கு பலகோடிகள் நஷ்டமாகிவிடும், யோசிச்சுக்கோங்க" னு தெளிவாகச் சொல்லி நிறுத்திவிட்டாராம்.


...... "Life" threatening decision..... ha,ha,ha,ha,ha...