Monday, August 12, 2013

ஈரோட்டில் ஜெயமோகனுக்கு அவமானம்?!

அவமானம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒண்ணு. எதிரிகள் மட்டுமல்லாமல், கள உறவுகள், பதிவர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மை அவமானப் படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. நம்ம வேணா யாரையும் அவமானப்படுத்தாமல் பக்குவமாக வாழலாம். ஆனால் உலகமே அப்படி இருக்கணும்னு எதிர்பார்த்தால் அது அபத்தமான ஒரு சிந்தனை. இதற்கு ஜெயமோகன் மட்டும் விதிவிலக்கு அல்ல!

எழுத்தாளர்னா கொஞ்சம் பரந்த எண்ணங்கள் இருக்கும். அவர்களுக்கு  மனோதத்துவம் தெரியும். வாழ்க்கையின் தத்துவங்கள் தெரியும். பலருடைய பார்வைகளை புரிந்து கொள்வார்கள். பலரின் பலவிதமான கண்ணோட்டங்கள்  எல்லாம் புரிந்துகொள்ளும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்த என் எண்ணத்தில், நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுபவர்களில் முதன்மையானவர் நம்ம ஜெயமோஹன் தான். என்னதான் குடித்தாளும், குட்டிகளுடன் அலைந்தாலும், நட்பு பாராட்டத் தெரியாதவராக இருந்தாலும், அப்பப்போ பிச்சை எடுத்தாலுமகூட சாரு நிவேதிதா, ஜெயமோகனை விட பலமடங்கு உயர்ந்தவர்னு சொல்லுவேன். சாருக்கு கொஞ்சமாவது பொதுஜனத்தின் சைக்காலஜி, மேலும் மற்றவர்கள் மனநிலை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டு. தான் பட்ட அவமானத்திக்கூட பிறர் ரசிக்கத்தக்க நகைச்சுவை கலந்து விமர்சிக்கவும் தெரியும். அதுபோல் ஒரு திறமையோ,  சகிப்புத்தன்மையோ நிச்சயம் ஜெயமோகனுக்கு இல்லவே இல்லை.

இலக்கிய வட்டத்தில் ஜால்ராப் பசங்களோடயே குப்பை கொட்டும் ஜெயமோகனுக்கு இவர்மேல் பலவிதமான மனிதர்கள் இடும் கண்ணோட்டங்களோ, இலக்கியவட்டமல்லாத சாதாரண மனிதன் தன்னை எப்படி எடை போடுவான்? என்பது  பற்றி எந்தவிதமான புரிதலோ, அளவுகோலோ இல்லாமல் அடிமுட்டாளாவே வாழ்கிறார் மனுஷன்.

ஈரோட்டில் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே போய் பேசி இருக்கிறார். என்ன காரணத்தாலோ இவர் பேசும்போது நெறையப்பேர் எழுந்து போய்விட்டார்கள் போலும்.  சரி போறான், அவன் கொடுத்து வைத்தது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போகாமல்..நம்ம சிக்கல் சண்முக சுந்தரம் நாதஸ்வர்த்தை கேட்காமல் வான வேடிக்கையைப் பார்க்கப்போன மக்களை திட்டுறதுபோல் இதை விமர்சிச்சு தன் சிறுபுத்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இவரு, தியானம் பண்ணுறது, யோகா பண்ணுறது, பகவத் கீதை படிக்கிறது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்றது இல்லைபோல இருக்கு! யாராவது அவரோட ஜால்ராப் பசங்க, அவருக்கு உதவுங்கப்பா!

11 comments:

indrayavanam.blogspot.com said...

ஜெயமோகனை பற்றி நல்ல புரிதல் உங்களுக்கு...

sunaa said...

அவரு கீதை படிக்கிறது இருக்கட்டும்...ஒன்னைய நல்ல டாக்டர பாக்க சொன்னேனே? பாத்தியா? மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா?

suvanappiriyan said...

தகுதிக்கு மீறி தன்னைப் பற்றிய ஒரு மாய பிம்பத்தை தனக்குள் ஜெமோ உருவாக்கிக் கொண்டதால்தான் இது போன்ற பிரச்னைகள் எல்லாம்.

வால்பையன் said...

அதிமேதாவிதனம் ஜெயமோகனுக்கு ரொம்பவே அதிகம்....

'பரிவை' சே.குமார் said...

ஜெயமோகன் எதாவது செய்வதையே வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார்.

வருண் said...

*** indrayavanam.blogspot.com said...

ஜெயமோகனை பற்றி நல்ல புரிதல் உங்களுக்கு...***

வாங்க இன்றைய வானம்! :)

வருண் said...

***sunaa said...

அவரு கீதை படிக்கிறது இருக்கட்டும்...ஒன்னைய நல்ல டாக்டர பாக்க சொன்னேனே? பாத்தியா? மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா?***

உன்னைமாரி ஜாலராப் பசங்களாலேதான் அந்தாளு இப்படி ஆயிட்டாரு..

இவர் பேசுறதை கேக்கிறது கேக்காததும் அவன் அவன் இஷ்டம்..

இதுக்கெல்லாம் எதுக்கு ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கணும்?

வருண் said...

***சுவனப் பிரியன் said...

தகுதிக்கு மீறி தன்னைப் பற்றிய ஒரு மாய பிம்பத்தை தனக்குள் ஜெமோ உருவாக்கிக் கொண்டதால்தான் இது போன்ற பிரச்னைகள் எல்லாம்.***

நீங்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இவரால் மற்றவர்கள் நிலையில் இருந்து சிந்திக்கத் தெரியவில்லை பாவம்! :(

வருண் said...

***வால்பையன் said...

அதிமேதாவிதனம் ஜெயமோகனுக்கு ரொம்பவே அதிகம்....***

வாங்க வால்! :) நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து நெறையா பதிவு எழுதுங்க!

வருண் said...

***சே. குமார் said...

ஜெயமோகன் எதாவது செய்வதையே வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார்.***

இவரைப் பிடிக்காமலோ அல்லது இவரைக் கவிழ்த்தணும்னோ எவனும் எழுந்து போகவில்லை.

இப்போ இவர் தளத்தில் வைத்த ஒப்பாரியால்தான் இவருடைய சிறுபிள்ளைத்தனத்தை உலகம் அறிகிறது!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எப்போது ஒருவர் தன்னை பிறர் மதிக்கவில்லை என்று நினைத்து பேச ஆரம்பித்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம்