Tuesday, March 25, 2014

கம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இவ்ளோ பெரிய வாய்?!!

இந்த கம்யூனிட்டுகள் ஆதியிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு என்பதே இல்லைனு இவர்கள் நெஞ்சைதூக்கிக் கொண்டு பாராளுமன்றதேர்தலில் நின்று இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம். அந்தம்மாட்டப்போயி நின்னு அது  தூக்கி எறிந்த பிறகு வந்து பெருசா வீரம் பேசிக்கிட்டு திரிகிறார்கள்

ஜெயலலிதாவுக்கு நன்றி னு கீழே விழுந்து மூஞ்செல்லாம் மண்ணுடன் ஒரு தீராத பக்கங்கள் பதிவு! பயங்கரமான நகைச்சுவை பதிவு இது!!

அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.

அட அட அடா! எந்தவிதமான மான ஈனமில்லாமல் இஷ்டத்துக்கு அரசியல் பேசுவதற்கு பதிவுலகிலே மஹா மட்டமான அரசியல் வாதிகள் இருக்காங்கப்பா!

3 comments:

S.Raman, Vellore said...

என் வலைப்பக்கத்தில் அன்றாடம் வந்து போகும் அனானி நீங்கள்தானா?

உங்கள் பக்கத்து இணைப்பை நேரடியாகவே கொடுக்கலாமே?

ஜெயலலிதாவுடன் கூட்டணி இருந்த போதும் அவரது நடவடிக்கைகளை கண்டித்திருக்கிறேன். முழுமையாக படித்து விட்டு பிறகு பதிவு போடவும்.

வருண் said...

ஐயா ராமன் அவர்களே!

நான் அனானியாவெல்லாம் வர்ரது இல்லை வருணாத்தான் வர்ரது. சும்மா அரசியல்வாதிமாரி இப்படி பொய்க்குற்றம் சாட்டக்கூடாது. எவனாவது ஐ பி ஸ்பெஷலிஸ்டிடம் அந்த அனானி நாயி யாருனு கண்டுபிடிங்க. சும்மா கண்டவனையும் குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது ஆமா.

S.Raman, Vellore said...

உங்கள் நேர்மை எனக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கு. உங்களை அனானியாக கருதியதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

மீண்டும் சொல்கிறேன். சொல்லப் போனால் தேர்தல் கூட்டணி முறிந்த பின் நான் இன்னும் ஜெ வை விமர்சிக்கவே இல்லை. அதை விட முக்கியமான பணிகள் இருந்தது. இன்றுதான் ஜெ வ திட்டியே எழுதப் போகிறேன். என் வலைப்பக்கத்தை நிதானமாக படித்து முன்பு நான் ஜெ வை திட்டியதை அறிந்து கொள்ளவும்