Wednesday, November 11, 2009

ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?


அந்தக்காலத்தில் இசையோ, சினிமா கதையோ காப்பியடித்தால் பலருக்கு தெரியாமலே போயிடும். ஆனால் இப்போ இணையதளம் வந்ததிலிருந்து காப்பியடிப்பவர்களுக்கு கெட்ட நேரம்தான். காப்பியடிப்பவர்களை கண்ணா பின்னானு விமர்சனம் பண்ணுறாங்க. காப்பியடிக்காதவர்களையும் அடித்ததா சொல்லிக்கொண்டும் திரிகிதுகள் பல அரைவேக்காடுகள்!

இசையில், காப்பி என்பது சர்வ சாதாரணம்

* ஹரிஸ் ஜெயராஜ் நெறைய வெஸ்டெர்ன் ட்யூன்களை திருடுகிறார்னு பலருக்குத் தெரியும்.

* ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில ட்யூன்ஸ் வெஸ்ட் மற்றும் பழைய பாடல்களையும் நினைவு படுத்துகிறது.

* தேவாட்ட ஒரு நல்ல பழக்கம் என்னனா, தன்னை பெரிய க்ரியேட்டரா ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை.

* ஏன் இசைஞானி இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கெல்லாம் இல்லை. இவருடைய ஒரு சில பாடல்கள் வெஸ்ட்ல இருந்து அடிச்சது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ப்ரியா படத்தில் வரும் டார்லிங் டார்லிங் டார்லிங் ட்யூன் எங்கே இருந்தோ சுருட்டியது.

இப்போ படங்களைப்பார்ப்போம்

* கமலஹாசன் நடித்த ஒளவை ஷண்முகி, தெனாலி, மற்றும் அவர் தயாரித்த மகளிர்மட்டும் போன்றவைகளின் கதைகள் ஹாலிவுட் படங்களின் இருந்து திருடியவைதான். இதில் கதைக்கு க்ரிடிட் போவது பொதுவாக க்ரேசி மோஹன் அவர்களுக்கு. அவர் ஒர் பலிகடாவா என்னனு தெரியலை! பலர் இதைப்பத்தி விமர்சித்ததால் இப்போ இவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பதுபோல் இருக்கு.

* தெனாலி கதைக்கு க்ரிடிட் பெற்றவர் க்ரேஷி மோஹன் அவர்கள். இந்த லின்க்ல இதை காப்பினு பச்சையாவே சொல்லீட்டாங்க! http://en.wikipedia.org/wiki/Thenali

* ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தின் கதையும் ஹாலிவுட் படத்தில் இருந்து திருடியதுதான். இதுக்கும் க்ரிடிட் போவது க்ரேஷி மோஹனுக்கு.

அடுத்தவர் க்ரியேஷனை திருடுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தையும் தண்டனையையும் விட்டுவிடுவோம்.

இதுபோல் காப்பியடிப்பவர் பலரை நம்ம ஜீனியஸ்னு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுதான் பிரச்சினினை எனக்கு.

என்னுள் தோன்றும் சில கேள்விகள்...

* க்ரியேட்டிவிட்டி என்பது ஓரளவுக்கு ஒரிஜினலா இருக்க வேண்டாமா?

* இதுபோல் காப்பியடிச்சு பெரிய ஆளாகனுமா என்ன?

* காப்பியடிக்காமல் க்ரியேட்டிவா இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமா?

* ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?

* ஜீனியஸ்னாலே சுயமாக சிந்தனை செய்பவன் என்றுதானே அர்த்தம்?

எந்த க்ரியேட்டருக்கும் ஓரளவுக்கு இன்ஸ்பிரேஷன் இருக்கத்தான் செய்யும். அதை யாருமே தவிர்க்க முடியாது. நான் சொல்வது அப்பட்டமான காப்பியை! நான் மேற்கூறியபடங்கள் அப்பட்டமான காப்பிகள்!

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தேவாட்ட ஒரு நல்ல பழக்கம்//

அவர் பேர் கூட வேதாவோட இம்ப்ரசன் தானாம்..,

Unknown said...

ஒலகப் படங்கள்ல இருந்து காப்பியடிச்சி நடிக்கிறதால தான் அவரு பேரு ஒலக நாயகனோ?

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

//தேவாட்ட ஒரு நல்ல பழக்கம்//

அவர் பேர் கூட வேதாவோட இம்ப்ரசன் தானாம்..,

11 November, 2009 8:11 AM***

அப்படியா, சுரேஷ் :)

ரொம்ப அலட்டிக்காத டைப் இவர் :)

வருண் said...

***முகிலன் said...

ஒலகப் படங்கள்ல இருந்து காப்பியடிச்சி நடிக்கிறதால தான் அவரு பேரு ஒலக நாயகனோ?

11 November, 2009 10:29 AM***

அதுமட்டும் பண்ணாமல் இருந்திருந்தால் உலகமே புகழ்ற நாயகனா இருந்து இருப்பாரு! :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla pakirvu

வருண் said...

வாங்க டி வி ஆர் சார்! :)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)