Thursday, June 11, 2009

கண்ணதாசனும் உயிரும்!

காதல் பாடல்களில் கண்ணதாசன் காதலியை பார்த்து "உயிரே!" என்று உருகுவது ஒரு தனி அழகுதான்! கண்ணதாசனுக்கே உரித்தான ஒன்று என்றுகூட சொல்லலாம். ஒருவன், அவன் காதலியை உயிரே! என்றழைத்தால் அவள் எப்படி அவனிடம் மயங்காமல் இருப்பாள்? அவள் மனம் அவனுக்காக இரங்காமல் இருக்காது! அவர் எழுதிய சில பாடல்களில் உள்ள "உயிரை"ப் பார்ப்போம்!

* ஏன் அழுதாய்? ஏன் அழுதாய்? என்னுயிரே ஏன் அழுதாய்? (இருவர் உள்ளம்)

* சொன்னது நீ தானா? சொல் சொல் சொல் என்னுயிரே! சம்மதம்தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே? (நெஞ்சில் ஓர் ஆலயம்)

* நான் உன்னை அழைக்கவில்லை! என் உயிரை அழைக்கிறேன்! கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை! (எங்கிருந்தோ வந்தாள்)

* பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே! புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே! (ஆலயமணி)

* உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி! (பாரதியின் வரிகள்)
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ? (வியட்நாம் வீடு)


உண்மையான காதலில், என்றுமே காதலன் காதலியிடம் தன் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஆசைப்படுவதில்லை! மற்றும், தான் என்கிற அகங்காரத்தையும் என்றும் காட்டுவதில்லை! இதில் கண்ணதாசன் சொல்லும் "உயிர்" காதலன் இதயத்திலிருந்து வருவது! வாயளவில் அல்ல!

10 comments:

பழமைபேசி said...

தத்துவம்? இஃகிஃகி!

வருண் said...

***பழமைபேசி said...
தத்துவம்? இஃகிஃகி!

11 June, 2009 9:54 AM***

ஆமாங்க பழமைபேசி, சந்தர்ப்ப சூழ்நிலையால்,

நம்ம வைச்சிருக்கிற கொள்கைகளை கடைபிடிப்பதில்லை!

நம்ம பண்ணிய சத்தியத்தையும் காப்பற்றுவதில்லை!

கடைசியில் இந்த தத்துவம்தான் நம்மல காப்பாற்றுவது :)

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உயிரே.., உயிரே பாட்டுல கூட மனிஷா இதயம் உடைவது போல ஓடிவருவார்..

கண்ணதாசன் இல்லவிட்டாலும் அவர் பணி தொடர்கிறதே..,

நா. கணேசன் said...

கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தது
“தென்றல்”. பொதிகையையும், தென்றலையும் அவர் சொல்லும் இடங்களை யாராவது குறிப்பிட்டுள்ளனரா?

‘சுபாவம்’ என்னும் சொல்லைப் பேச்சில் அடிக்கடி பயன்படுத்தினார்.

நா. கணேசன்

வருண் said...

***தமிழர்ஸ் - Tamilers said...
www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...***

Thanks :)

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
உயிரே.., உயிரே பாட்டுல கூட மனிஷா இதயம் உடைவது போல ஓடிவருவார்..

கண்ணதாசன் இல்லவிட்டாலும் அவர் பணி தொடர்கிறதே..,

11 June, 2009 11:26 AM****

உண்மைதான் சுரேஷ் :)

வருண் said...

***நா. கணேசன் said...
கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தது
“தென்றல்”. பொதிகையையும், தென்றலையும் அவர் சொல்லும் இடங்களை யாராவது குறிப்பிட்டுள்ளனரா?***

தெரிலைங்க, திரு. கணேசன்!

"உயிரை"க்கூட ஏற்கனவே பலர் சொல்லி இருக்கலாம். "தென்றல்" பற்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதுங்க! :-)

***‘சுபாவம்’ என்னும் சொல்லைப் பேச்சில் அடிக்கடி பயன்படுத்தினார்.

நா. கணேசன்

11 June, 2009 11:37 AM***

அப்படியா? உங்களிடமிருந்துதான் இதை அறிகிறேன் :)

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

ராமலக்ஷ்மி said...

நல்ல விளக்கம். உதாரணம் காட்டியிருக்கும் பாடல்கள் யாவும் மிக அருமையாக இருக்கும். காலத்தால் அழியாப் பாடல்களைத் தந்தவர் கவியரசர்.

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
நல்ல விளக்கம். உதாரணம் காட்டியிருக்கும் பாடல்கள் யாவும் மிக அருமையாக இருக்கும். ***

நன்றிங்க, ராமலக்ஷ்மி :)

***காலத்தால் அழியாப் பாடல்களைத் தந்தவர் கவியரசர்.***

ஆமாங்க :)