Friday, October 12, 2012

கொடூரவாதிக்கு மறுபெயர் வாஸ்கோட காமா!

இந்தியாவை "கண்டு பிடிச்சது" யார்?னு வரலாற்றில் சொல்லப் படுவது வாஸ்கோட காமா! அதாவது ஐரோப்பாவில் போர்ச்சுக்கீஸிலிருந்து  இந்தியாவை குறுக்குவழியில் அடைய கடல் மார்க்கமாக  வந்தவர் இவர்!

இவர் எப்படிப்பட்டவர்? எப்படி இந்தியாவுக்கு வந்து இந்தியாவை கொள்ளையடிச்சு, இந்தியாவிலேயே வாழ்ந்து உயிர்விட்டார்? என்பது வேடிக்கை! சமீபத்தில் இவரைப்பத்தி படிக்க நேர்ந்தது.

இதுதான் இவர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்த பாதை!

 


இவரு ஒரு போர்ச்சுகீஸை சேர்ந்த கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த கொடூரமான கொலைகளைப் படிக்கும்போது எவ்ளோ ஒரு கொடூரவாதி இவன்னு தோனும்!

Pilgrim ship incident

On his second voyage, Vasco da Gama inflicted acts of cruelty upon competing traders and local inhabitants, which sealed his notoriety in India.[26][27] During his second voyage to Calicut, da Gama intercepted a ship of Muslim pilgrims at Madayi travelling from Calicut to Mecca. Described in detail by eyewitness Thomé Lopes and chronicler Gaspar Correia as one that is unequalled in cold-blooded cruelty, da Gama looted the ship with over 400 pilgrims on board including 50 women, locked in the passengers, the owner and an ambassador from Egypt and burnt them to death. They offered their wealth which 'could ransom all the Christian slaves in the Kingdom of Fez and much more' but were not spared. Da Gama looked on through the porthole and saw the women bringing up their gold and jewels and holding up their babies to beg for mercy.'[28]

இது வரலாறு! இதில் உண்மை எம்புட்டுனு எவனுக்குத் தெரியும்? என்றெல்லாம் வாதம் செய்யலாம். 

ஆனால் வழியில் சென்ற ஒரு கப்பலை பிடிச்சு அதில் இருந்த சாதாரண மக்கள் இஸ்லாமியர்கள் (இஸ்லாமானவர்கள்?) 500 பேரை (50 பெண்களையும் சேர்த்து) எரிச்சு கொன்று இருக்கான் இந்த கொடூரமானவன்!

ரத்தம் கொதிக்கிதா? இல்லையா? செத்தவன் நம்மள ஆள வந்த முஸ்லிம்தானே? நமக்கென்ன? :-)) இப்படித்தான் நம்ம எல்லாரையுமே ஆள விட்டு இருக்கோம்! :)

இதுபோக மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள பலர் (இந்துக்கள்தான்) பலியானதாகவும், இவனால் இரக்கமே இல்லாமல் அவர்கள்  கொல்லப்பட்டதாகவும்  படிச்சு இருக்கேன்!

அடுத்துப் பார்ப்போம்...

After demanding the expulsion of Muslims from Calicut to the Hindu Zamorin, the latter sent the high priest Talappana Namboothiri (the very same person who conducted da Gama to the Zamorin's chamber during his much celebrated first visit to Calicut in May 1498) for talks. Da Gama called him a spy, ordered the priests' lips and ears to be cut off and after sewing a pair of dog's ears to his head, sent him away.[26]

இந்தியாவுக்கு இரண்டாவது முறை வந்தபோது ஒரு நம்பூதிரி ஏதோ பேச்சு வார்த்தைக்கு அனுப்பப் பட்டு இருக்காரு.  

அவரை "ஒற்றர்" என்று சொன்னதுடன் (ஒற்றரா இருந்து இருக்கலாம்), அவருடைய உதடுகளையும், காதையும் வெட்டி எறிந்துவிட்டு, அவரு காதுகளுக்கு பதிலாக நாயின் காதை தைத்து அவனை அனுப்பி இருக்காரு! என்ன ஒரு கொடூரம்! 

 நம்ம மக்கள் எல்லாம் பாவம் இதுபோல் கொடூரவாதிகளைப் பார்த்து பயந்து அவன் சொல்றதை எல்லாம் கேட்டு, இங்கேயிருந்து என்னவெல்லாம் கொள்ளையடிக்கனுமோ அடிக்க விட்டுக்கொண்டு இருந்து இருக்காங்க.

 







ஆனால் இன்றும் கொலைகாரரான இவருக்கு நாம்  தகுந்த மரியாதை கொடுத்துக்கொண்டுதான் இருக்கோம்! நமக்குத்தான் ரொம்ப பெரிய மனசாச்சே!

 The port city of Vasco da Gama in Goa is named after him, as is the crater Vasco da Gama on the Moon. There are three football clubs in Brazil (including Club de Regatas Vasco da Gama) and Vasco Sports Club in Goa that were also named after him. There exists a church in Kochi, Kerala called Vasco da Gama Church, and a private residence on the island of Saint Helena. The suburb of Vasco in Cape Town also honours him.
இவர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க என்பதுதான் இதில் மிகவும் வேடிக்கையான விசயம்!

பயங்கரவாதம் பத்தி எல்லாம் பேசுறோம். கடவுள் நம்பிக்கை உள்ள இவரும் இந்தியர்களை "terrorize" பண்ணிதான் தான் சாதிக்க வேண்டியதை சாதிச்சு இருக்காரு!

இவரு நாத்திகர் என்றால் அதன் விபரம் இங்கே பின்னூட்டத்தில் தரவும்! நன்றி

அனேகமாக இவரு இப்போ சொர்க்கத்தில் இருப்பாரு!

தந்தை பெரியார் நரகத்தில் இருப்பாரு! :)

24 comments:

suvanappiriyan said...

//மாமா.உன்னிடம் கமெண்ட் என்னும் இன்ப வெள்ளத்தில்
நீந்த ஓடோடி வந்திருக்கேன்.மாமா.
என்னை ஏமாற்றாதே மாமா. //

அடடா...இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல்லயே நாராயணா....:-))))))))))))))

வருண் said...

வாங்க சுவனப் பிரியன்!

இதுல என்ன கொடுமைனா, சின்னவன் இங்கே எடுக்கிற வாந்திய இங்கே க்ளீன் பண்ணினாலும், "இக்பால் செல்வன்" னு அந்த "கோடங்கி" ஆள் இவன் இங்கே எடுத்த வாந்தியையும் போட (பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல்) அவன் தளத்தில் அனுமதிக்கிறான்.

ஆனால் இதைப்பத்தி சொன்னால் ஏதோ ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாரியும், யோக்கியன் மாரியும் நடிக்கிறான், அந்த ஆளூ!

Jayadev Das said...

வருண் நீங்க கருத்துகளை வைக்கும் பொது ஒரு நாத்தீகவாதியா, பகுத்தறிவு வாதியாத்தான் வைக்கணும். அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்னு கலந்துகட்டி அடிக்கக் கூடாது. நீங்க ஆடு கோழிங்களை போட்டுத் தள்ளுவதை ஒரு போதும் தப்புன்னு சொல்ல மாட்டீங்க, ஆடுங்க காதுகளை எல்லா கசாப்பு காரனும் தான் வேட்டுறான். தலைகளை வரிசையா வச்சி விற்கிறான். உங்க அறிவியல் படி அதெல்லாம் தப்பே இல்லை. . வாஸ்கோடகாமா அதையே மனுஷங்களுக்கு செய்யுறான் என்ன தப்பு? தப்புன்னு உங்களுக்குப் படுவது அவனுக்கு ரைட்டுன்னு படுது. எந்த செயலையும் யாரவது ஒரு உயர் அதிகாரத்தில் இருக்கிறவங்க பார்த்து தீர்ப்பு சொன்னாத்தானே தப்பாகும்? அந்தாள் போன இடத்துல யாரும் பார்க்கவில்லை, தன்கிட்ட ஆள்பலம் இருந்துச்சு, அட்டூழியம் [உங்க பாஷையில] பண்ணிட்டான். கடவுளும் கிடையாது மண்ணும் கிடையாது. நான் சரின்னு நினைச்சது, எனக்குப் பிடிச்சத நான் செஞ்சேன். அதுல என்ன தப்புன்னு கேட்பான். அப்படியே நீங்க தப்புன்னு சொன்னாலும் அவனுக்கு கவலை இல்ல. என்ன பண்ணுவீங்க? ஆடு காதை அருக்காதீங்கன்னு சொன்னா யாரும் கேட்பதில்லை, அவன் மனுஷன் காதை அறுத்தான். யார் சொன்னாலும் அவனும் கேட்டிருக்க மாட்டான். பாவ புண்ணியம் என்ற ஒன்றும் இல்லை. என்னை தண்டிக்க எந்த அரசும் இல்லை. நான் வச்சதே சட்டம் என் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வேன். உங்களால் என்ன செய்ய முடியும்?

வருண் said...

***நீங்க ஆடு கோழிங்களை போட்டுத் தள்ளுவதை ஒரு போதும் தப்புன்னு சொல்ல மாட்டீங்க, ஆடுங்க காதுகளை எல்லா கசாப்பு காரனும் தான் வேட்டுறான். தலைகளை வரிசையா வச்சி விற்கிறான். உங்க அறிவியல் படி அதெல்லாம் தப்பே இல்லை. . வாஸ்கோடகாமா அதையே மனுஷங்களுக்கு செய்யுறான் என்ன தப்பு? ***

இது ரெண்டும் வேற வேறங்க! வாஸ்கோட காமா, "மிரட்டி" "ப்யமுறுத்தி" "டெரர்" செய்து சித்ரவதை செய்து.. த தேவையை பூர்த்தி செய்றான்.

பசிக்கு ரெண்டு பேரை கொன்னு சாப்பிட்டால்கூட தப்புனு சொல்ல முடியாதுனு நெனைக்கிறேன். நெனைக்கிறேன்னு தான் சொல்றேன். :)

ஃபேமஸ் பாவா said...

அரபிக் கடலில் கொள்ளையடிச்சு அட்டூழியம் பண்ண முஸ்லிம் கடல்கொள்ளைக் காரங்களைப் பத்தியும் கொஞ்சம் எழுதுறது, அதுலாம் உன் கண்ணுக்கு தெரியாதே ..

வருண் said...

பாவா: நீங்க பதிவுலகில் எவ்ளோ நாள் இருக்கீங்க? எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நேரத்துல எழுத முடியாது! புரிஞ்சுக்கோங்க! :)

வருண் said...

***Jayadev Das said...

வருண் நீங்க கருத்துகளை வைக்கும் பொது ஒரு நாத்தீகவாதியா, பகுத்தறிவு வாதியாத்தான் வைக்கணும். அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்னு கலந்துகட்டி அடிக்கக் கூடாது. ***

ஜெயவேல்: ஒரு பிரச்சினையை சாதாரண மனசாட்சியுள்ள மனுஷனாவும் அணுகலாம், சார்!:)

வருண் said...

***தப்புன்னு உங்களுக்குப் படுவது அவனுக்கு ரைட்டுன்னு படுது.***

ஆமாங்க!

** எந்த செயலையும் யாரவது ஒரு உயர் அதிகாரத்தில் இருக்கிறவங்க பார்த்து தீர்ப்பு சொன்னாத்தானே தப்பாகும்? அந்தாள் போன இடத்துல யாரும் பார்க்கவில்லை, தன்கிட்ட ஆள்பலம் இருந்துச்சு, அட்டூழியம் [உங்க பாஷையில] பண்ணிட்டான். கடவுளும் கிடையாது மண்ணும் கிடையாது. ***

இல்லங்க அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்னால. கடவுள்ட்ட பாவ மன்னிப்பு எதுவும் கேட்டுக்குவாரு போல! :)

***நான் சரின்னு நினைச்சது, எனக்குப் பிடிச்சத நான் செஞ்சேன். அதுல என்ன தப்புன்னு கேட்பான். அப்படியே நீங்க தப்புன்னு சொன்னாலும் அவனுக்கு கவலை இல்ல. என்ன பண்ணுவீங்க? ஆடு காதை அருக்காதீங்கன்னு சொன்னா யாரும் கேட்பதில்லை, அவன் மனுஷன் காதை அறுத்தான். யார் சொன்னாலும் அவனும் கேட்டிருக்க மாட்டான். பாவ புண்ணியம் என்ற ஒன்றும் இல்லை. என்னை தண்டிக்க எந்த அரசும் இல்லை. நான் வச்சதே சட்டம் என் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வேன். உங்களால் என்ன செய்ய முடியும்? ***

500 பேருதான் எங்கேயிருந்தோ ஒரு கப்பல்ல வந்து இருக்காங்க. நம்மாளுக ஒற்றுமையா, பயப்படாமல் இருந்து இருந்தால் நிச்சய்ம் அடிச்சுத் துரத்தி இருக்கலாம்னு நெனைக்கிறேன்! ஒருத்தனை ஒருத்தன் கவுத்துறதுலயே இருந்ததால ஒண்ணும் செய்யமுடியலை.

கடவுள், வாஸ் கோ போல கொடூரமானவனாக இருந்தாலும் பர்வாயில்லை வலியவனுக்குத்தான் உறுதுணையா இருப்பாரு போல!

Jayadev Das said...

நீங்க கடவுள் இல்லைன்னு சொல்லிட்டீங்க, அப்படின்னா மனசாட்சிக்கும் கூட பயப்படாம எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஏனெனில் கேள்வி கேட்கத்தான் ஆளே இல்லியே. அடுத்து கேள்வி கேட்கனும்னா ஏதாவது ஒரு அரசு இருக்க வேண்டும். வாஸ்கோடகாமா விஷயத்தில் அதுவும் இல்லை. அந்தாள் இருந்த இடத்தை எந்த அரசும் கவனிக்கவில்லை, அல்லது கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டான். இப்போ அவன் இஷ்டத்துக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேள்வி கேட்பது? நீங்க தப்பு அது இதுன்னு சொல்லலாம், நீங்க எந்த அடிப்படையில் அந்தாள் செய்தததை தப்பு என்கிறீர்களோ, அதையே அவன் மறுக்கிறான். என்ன செய்வீர்கள்? உங்கள் மனதுக்கு என்ன படுகிறதென்பதைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லையே?

Jayadev Das said...

\\கடவுள், வாஸ் கோ போல கொடூரமானவனாக இருந்தாலும் பர்வாயில்லை வலியவனுக்குத்தான் உறுதுணையா இருப்பாரு போல!\\ உங்க கணக்குப் படிதான் கடவுள் அப்படின்னு ஒருத்தர் இல்லவே இல்லையே? அதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்கிறீர்கள்?? ஒரு வேலை இன்னொரு ஆத்தீகன் அயோக்கியன் என்ற கருத்தை நிறுவ நீங்கள் இதைப் பயன்படுத்தலாம், மற்றபடி உங்கள் தியரிப் படிப் பார்த்தால் அவன் செய்ததில் எந்த தப்புமே இல்லை.

வருண் said...

***Jayadev Das said...

நீங்க கடவுள் இல்லைன்னு சொல்லிட்டீங்க, அப்படின்னா மனசாட்சிக்கும் கூட பயப்படாம எதை வேண்டுமானாலும் செய்யலாம், ***

ஜெயவேல்: கடவுள் இல்லைனு சொல்றவனுக்கு மனசாட்சி இல்லைனு நீங்க எப்படி சொல்லமுடியும்னு எனக்கு விளங்கலை!

கொஞ்சம் விளக்குங்களேன், தல! :)

Jayadev Das said...

மனசாட்சிக்கும் கூட பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொன்னேன், மனசாட்சியே இல்லை என்று சொல்லவில்லை.

வருண் said...

***Jayadev Das said...

\\கடவுள், வாஸ் கோ போல கொடூரமானவனாக இருந்தாலும் பர்வாயில்லை வலியவனுக்குத்தான் உறுதுணையா இருப்பாரு போல!\\ உங்க கணக்குப் படிதான் கடவுள் அப்படின்னு ஒருத்தர் இல்லவே இல்லையே? அதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்கிறீர்கள்??***

ஆமங்க. ஆனால் நான் இதை உங்க "கோணத்தில்" இருந்து பார்க்கிறேன். :)

வருண் said...

*** Jayadev Das said...

மனசாட்சிக்கும் கூட பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொன்னேன், மனசாட்சியே இல்லை என்று சொல்லவில்லை.***

அவசியம் என்பதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. சிலரால மனசாட்சிக்கு எதிரா போகமுடியாது! இது ஒரு இயலாமை! :) You dont have choice! மனசாட்சிக்கு எதிரா செய்ய முடியாது!

Jayadev Das said...

Viewing the issue from my point of view will not help you in anyway!! There is no God [as per your conviction], there is none to control me, I am absolutely free to do anything for my pleasure. Of course, the people who are injured may feel the pain, but after all the goats, chickens which are cut by human beings too fee the same pain, therefore if somebody else is going to feel pain when they cross the way to my pleasure they have to undergo pain, and that is absolutely acceptable. Varun, this is where your philosophy will lead to. Try to defeat this, you will fail....!!

Jayadev Das said...

\\
அவசியம் என்பதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. சிலரால மனசாட்சிக்கு எதிரா போகமுடியாது! இது ஒரு இயலாமை! :) You dont have choice! மனசாட்சிக்கு எதிரா செய்ய முடியாது!\\ வாஸ்கோடகாமா மனசாட்சியைத் தூக்கி குப்பையில போட்டுட்டான், அது என்ன சொன்னாலும் கவலையே இல்லை. [உங்க சயின்ஸ் படி அதுகூட தப்பில்லை!!] எதை வச்சு அவன் பண்ணியது தப்புன்னு சொல்லுவீங்க?

வருண் said...

***Jayadev Das said...

Viewing the issue from my point of view will not help you in anyway!! There is no God [as per your conviction], there is none to control me, I am absolutely free to do anything for my pleasure. Of course, the people who are injured may feel the pain, but after all the goats, chickens which are cut by human beings too fee the same pain, therefore if somebody else is going to feel pain when they cross the way to my pleasure they have to undergo pain, and that is absolutely acceptable. Varun, this is where your philosophy will lead to. Try to defeat this, you will fail....!!***

இந்த பாருங்க. இந்தக் கொலைகளை நான் செய்யவில்லை! ஒரு கடவுள் நம்பிக்கையுள்ள வாஸ்கோட காமா செய்றாரு. இதை நான் ஏன் செய்ய மாட்டேன்னா என் மனசாட்சி இடம் கொடுக்காது.

அவரு ஏன் செய்றார்? அவரால் எப்படி செய்ய முடியுது?

செஞ்சுட்டு எப்படி அவர் மனசாட்சியை "கடவுளை" பயன்படுத்தி சமாதானப் படுத்துவாரு? என்பதை ஒரு ஆத்திகர்தான் சொல்லனும்! சொல்லமுடியும் என்பது என் வாதம்! :)

Jayadev Das said...

\\
செஞ்சுட்டு எப்படி அவர் மனசாட்சியை "கடவுளை" பயன்படுத்தி சமாதானப் படுத்துவாரு? என்பதை ஒரு ஆத்திகர்தான் சொல்லனும்! சொல்லமுடியும் என்பது என் வாதம்! :)\\ இதில என்ன தப்புன்னு ஒரு நாத்தீகர், தனது நாத்தீகக் கொள்கையின் அடிப்படையில் விளக்க வேண்டும், அதற்க்கப்புறம் அதுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்!!

வருண் said...

*** Jayadev Das said...

\\
அவசியம் என்பதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. சிலரால மனசாட்சிக்கு எதிரா போகமுடியாது! இது ஒரு இயலாமை! :) You dont have choice! மனசாட்சிக்கு எதிரா செய்ய முடியாது!\\ வாஸ்கோடகாமா மனசாட்சியைத் தூக்கி குப்பையில போட்டுட்டான், அது என்ன சொன்னாலும் கவலையே இல்லை.***

சரி, அவரால மனசாட்சியை குப்பையில் போட முடியுது! ஒரு ஒரு "டாலெண்ட்"னு வச்சுக்குவோம்!

*** [உங்க சயின்ஸ் படி அதுகூட தப்பில்லை!!] எதை வச்சு அவன் பண்ணியது தப்புன்னு சொல்லுவீங்க?***

சயண்ஸ் எதையுமே தப்பு, சரினு சொல்லாதுங்க! அது அதுபாட்டுக்கு அது வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கும்! :)

வருண் said...

***Jayadev Das said...

\\
செஞ்சுட்டு எப்படி அவர் மனசாட்சியை "கடவுளை" பயன்படுத்தி சமாதானப் படுத்துவாரு? என்பதை ஒரு ஆத்திகர்தான் சொல்லனும்! சொல்லமுடியும் என்பது என் வாதம்! :)\\ இதில என்ன தப்புன்னு ஒரு நாத்தீகர், தனது நாத்தீகக் கொள்கையின் அடிப்படையில் விளக்க வேண்டும், அதற்க்கப்புறம் அதுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்!!***

இதுபோல் "இண்ணொசண்ட்" மக்களை கொல்வதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்காது. இதுதான் என் பதில்! :)

Jayadev Das said...

\\இதுபோல் "இண்ணொசண்ட்" மக்களை கொல்வதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்காது. இதுதான் என் பதில்! :) \\ அவன் மனசாட்சி அதுக்கு இடம் கொடுத்திடுச்சி செஞ்சிட்டான். இதுதான் என் பதில்.

ஒரு ஆட்டோட அப்பாவியான முகத்தைப் பார்க்கும்போது அதைக் கொல்ல எனக்கு மனம் வராது. சிலருக்கு மனம் வருகிறது. வெட்டும்போது ஆடு வழியால் துடிக்கும், வெட்டுபவருக்கு அது பொருட்டேயில்லை. ஏனெனில் அவருக்கு அதை விற்று பணமாக்க வேண்டும். அதே மாதிரி, வாஸ்கோடகாமாவுக்கு சிலரைப் பார்த்தால் பிடிக்காது போட்டுத் தள்ளினான். அப்போ அவங்களுக்கு வலிச்சிருக்கும், ஆனால் அதை அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்து அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. செத்த பின்னரும் அவர்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அழியாமல் அப்படியேதான் இருக்கும், எந்த நஷ்டமும் இல்லை. ஒரு பெரிய பாறாங்கல்லு இரண்டா உடைஞ்சு போச்சுன்னா யாராச்சும் கவலைப் பாடுவாங்களா? ஆட்டை வெட்டினா அதுக்கு வலிக்குமேன்னு யாராச்சும் அழுவாங்களா? அல்லது ஐயோ பாவம் அது மூஞ்சு அப்பாவியா இருக்கு விட்டுடலாம்னு நினைப்பாங்களா? இல்லை, பாவம் அந்த ஆடு helpless ஆக நம்மை நம்பித்தானே இருக்கு, அதனால அதை விட்டு விடுவோம்னு நினைப்பாங்களா? யாரும் இதையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி மனுஷனையும் போட்டுத் தள்ளும்போது எதையும் அந்தாளு கணக்கில எடுத்துக்க வில்லை. தனியா கிடைச்சாங்க அவங்களை எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை, என்னை தண்டிக்க எந்த அரசாங்கமும் இங்கே இல்லை. போட்டுத் தள்ளிவிட்டான். உங்களுக்கு நீங்க நினைச்சதெல்லாம் சரின்னு தோணுது அவனுக்கு அவன் நினைச்சதெல்லாம் சரின்னு தோணியிருக்கு. செஞ்சிட்டான், என்ன பண்ணுவீங்க?

T.Thenmathuran said...

என்ன வருண்... ரிலாக்ஸ் பிளீஸ் ன்னு தலைப்பு வச்சிக்கிட்டு இப்பெல்லாம் செம டென்சனாவே திரியிரீங்க போல...உறுமி படத்தில் இதெல்லாம் தெளிவாகக் காட்டினார்களே....நீங்க படம் பார்க்கலையா..?

சிரிப்புசிங்காரம் said...

பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனா கமெண்ட்ஸ்தான் செமபோர்

Jayadev Das said...

\\என்ன வருண்... ரிலாக்ஸ் பிளீஸ் ன்னு தலைப்பு வச்சிக்கிட்டு இப்பெல்லாம் செம டென்சனாவே திரியிரீங்க போல...\\ ஹா.....ஹா.....ஹா.....ஹா.....