Tuesday, March 2, 2010

சாருவுக்கு ரொம்ப கெட்ட நேரமா?

தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுடன் கருத்து வேற்றுமை வருவது, அவர் எழுத்தில் உள்ள குறைகள் விமர்சனத்துக்குள்ளாவது எல்லாம் பதிவுலகில் ரொம்ப சாதாரண விசயம். பலரையும் விமர்சனம் செய்யும் எழுத்தாளர் யாரும் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாது. இது போல் விமர்சனங்களால் மேலும் மேலும் "நொட்டோரியஸாக" பிரபலமானவர் சாருனு கூட சிலர் இவர் புகழ் பாடுவதைப் பார்க்கலாம். இவரைப் புகழ்ந்து, இவரை ஆதரித்து தன் பிழைப்பை ஓட்டுபவர்களும், இவரை விமர்சனம் செய்து தன் பதிவுகளை வாசிக்க வைப்பவர்களும் கணக்கிலடங்காது.

ஆனால், சமீபத்தில் இவருக்கு வேறு விதமான பிரச்சினைகள் ஆரம்பமாகி யுள்ளது. பிரபல பதிவர் ஒருவர் இவர் எழுதியதாக வந்த ஒரு சில சிறு கதைகள் இவருடையதல்ல! அந்த கரு மற்றும் கதைக்கு சொந்தக்காரர் இன்னொருவர் என்கிற குற்ற்ச்சாட்டை வைத்தபோது அதைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆடிப் போயிட்டேன்.

சாரு நிவேதிதாவா இப்படி எல்லாம் செய்வார்? இவர் அந்த அளவுக்கு கீழே இறங்கிப்போகும் அளவுக்கு என்ன அவசியம்? என்கிற குழப்பத்தின் மேலே குழப்பம். ஆனால் இந்த "கதை திருட்டு" விசயத்தை பொய் என்று யாரும் அடித்து சொல்ல முன்வரவில்லை! இவருக்கு தினம் ஜால்ரா அடிப்பவர்களும் இது பொய் குற்றச்சாட்டு என்று சொல்ல முன்வரவில்லை! இது பலரையும் தைரியமாக விமர்சிக்கும் ஒரு போஸ்ட்-மாடர்ன் எடுத்தாளருக்கு மிகப்பெரிய அடி, சறுக்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அது போதாதென்று இன்று இன்னொரு பெரிய சறுக்கல்! இவர் கடவுளைக் கண்டேன் என்று யாரை ஒரு நல்ல சாமியார், கடவுள் என்று கட்டுரை மேல் கட்டுரை எழுதி சொல்லிக்கொண்டு இருந்தாரோ அந்த, சுவாமி நிதயானந்தாவுடைய வீடியோ பிரபல தொலைக்காட்சியில் வெளி வந்துள்ளது. எப்படி? இன்னொரு நடிகையுடன் படுக்கையில் இவர் இருப்பதுபோல. யாரு? நம்ம கடவுள் நித்யானந்தா!! நம்ம ஊர் "கடவுளுக்கு" இது சாதாரணம்தான்னு நீங்க சொல்லலாம். ஆனால் நித்யானந்தா, தான் பெண்களுடன் உறவுகள் வைத்துள்ளதாக இதுவரை வெளியே சொன்னதில்லை.

சாமியாரெல்லாம் இப்படித்தான். இதென்ன பெரிய விசயம் னு சொல்லலாம். ஆனால் நித்தியானந்தாவை விட்டுவிட்டு நித்தியின் இந்த முகத்தை மறைத்து இவரை கடவுளாக்க முயற்சி செய்த சாரு நிவேதிதா மேல்தான் எல்லோரும் எரிச்சலும் கோபமுமாக இருக்கிறார்கள். சாருவுடைய கடவுளை கண்டேனில் நித்யானந்தா- ரஞ்சிதா எப்பிசோட் ஒண்ணையும் இவர் எழுதியிருந்தால் இவரை யாரும் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதா இந்த சாமியாரின் பலமுகங்களை மறைத்தது பெரிய குற்றம் என்பதுபோல் பலர் உணர்கிறார்கள். நித்யானந்தாவை திட்டுவதற்கு பதிலாக சாருவைத்தான் அதிகம் திட்டுகிறார்கள்.

பாவம் சாரு! இவருக்கு ரொம்ப கெட்ட நேரம் போல இருக்கு! :( எல்லோரையும் போல் நித்தியானந்தாவை நம்பி மோசம்போனவர்களில் முதல் ஆள் இவர்தானோ என்னவோ!

12 comments:

Venkatesh S said...

Charu has almost disabled all of his site content. Only post dating back to Feb 21, 2010 are available. Smart move. But shows how crooked one can get :)

ரவி said...

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாகம் மூன்றில் நைட்டு ஒன்பது மணிக்கு ஆசிரமம் போனது யார் என்ற கேள்விக்கு என்ன விடை ?

வருண் said...

***Venkatesh S said...
Charu has almost disabled all of his site content. Only post dating back to Feb 21, 2010 are available. Smart move. But shows how crooked one can get :)

2 March 2010 11:14 AM***

I think, there was some other problem in his site, venkatesh. It was few days before Feb 21, in google charuonline was labelled as "harful" site. May be because of some spyware he got in his site. Then in order to fix the problem, he went on and did this change so that his site's updates will be readable. Let us wait and see, :)

வருண் said...

***செந்தழல் ரவி said...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாகம் மூன்றில் நைட்டு ஒன்பது மணிக்கு ஆசிரமம் போனது யார் என்ற கேள்விக்கு என்ன விடை ?

2 March 2010 11:36 AM**

நீங்க என்ன ஒரு புதிரோட வர்றீங்க, ரவி? :)

நான் அந்தப் பதிவு வாசிக்கலை. வாசிச்சுட்டு வந்து ஏதாவது புரிந்தா சொல்றேன் :)

Unknown said...

சாருவோட சேர்ந்த பின்னாடி தான் அந்த பையன் இந்த அளவுக்கு கெட்டு போயிருக்கனும்... இன்னும் கொஞ்சம் தோண்டுனா சாருவும் நித்தியும் -Gay Romance கிளிப்பிங் எதுவும் கிடைக்கலாம்... :)

வருண் said...

***செந்தழல் ரவி said...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாகம் மூன்றில் நைட்டு ஒன்பது மணிக்கு ஆசிரமம் போனது யார் என்ற கேள்விக்கு என்ன விடை ?**

Anyway I had a look at that article. Charu is clever and he knows how to make his writing "spicy". That is why he included that line.

It could be his "old maid" who does cooking and cleaning for him!
LOL!

But he makes it looks like it is his attractive sexy girl friend! LOL

Venkatesh S said...

***Venkatesh S said...
Charu has almost disabled all of his site content. Only post dating back to Feb 21, 2010 are available. Smart move. But shows how crooked one can get :)

2 March 2010 11:14 AM***

I think, there was some other problem in his site, venkatesh. It was few days before Feb 21, in google charuonline was labelled as "harful" site. May be because of some spyware he got in his site. Then in order to fix the problem, he went on and did this change so that his site's updates will be readable. Let us wait and see, :)

*********
My bad

மரா said...

Boss, if possible or when you find time,can u please educate us on "post modernism" thru a post?

Unknown said...

இவருக்கு சூரியன் கீழ் இருக்கும் எல்லாம் தெரியுமாம். ஆனால் நித்தியா,ரஞ்சிதா பற்றி தெரியாதாக்கும்.
ஒரு வேளை சூரியனுக்கு மேல் நித்தியாவும்,ரஞ்சிதாவும் படுக்கை போட்டார்கள் போல்

வருண் said...

***மயில்ராவணன் said...
Boss, if possible or when you find time,can u please educate us on "post modernism" thru a post?***

That is one of the terms we use often without knowing the correct meaning of it! LOL!

வருண் said...

*** தமிழ் மைந்தன் said...
இவருக்கு சூரியன் கீழ் இருக்கும் எல்லாம் தெரியுமாம். ஆனால் நித்தியா,ரஞ்சிதா பற்றி தெரியாதாக்கும்.
ஒரு வேளை சூரியனுக்கு மேல் நித்தியாவும்,ரஞ்சிதாவும் படுக்கை போட்டார்கள் போல்

8 March 2010 9:33 PM***

I heard that Charu is going to write a thodar about nidhyanadha in kumudham reporter! LOL!

He might give the title "kadavuLai kaNdEn"! LOL

வருண் said...

***செந்தழல் ரவி said...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாகம் மூன்றில் நைட்டு ஒன்பது மணிக்கு ஆசிரமம் போனது யார் என்ற கேள்விக்கு என்ன விடை ?

2 March 2010 11:36 AM***

Well, he says it is his betterhalf!!! I dont know much about his personal life. So, I could not guess that!